Friday, December 22, 2023
வைகுண்ட ஏகாதசி
அனல் வாதம் புனல் வாதம்
Monday, December 18, 2023
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது!!
Sunday, December 17, 2023
தல புருடா, அல் புருடா, ஹோலி புருடா & உளுத்தறிவு புருடா!! 😄
Monday, December 11, 2023
வருணாசிரமம் - இன்றைய இட ஒதுக்கீட்டிற்கு சமமான சொல்!!
Friday, December 8, 2023
பசு மாட்டின் பின்புறத்தில் மலர்மகள் குடியிருக்கிறாராம்!!
Thursday, December 7, 2023
பேமானியாகலாம்! ஞானியாக முடியாது. 😏
இயேசுவே மெய்யானத் தேவன். ஞானியாக முயற்சிக்காதீர்கள். அது சாத்தானின் வேலையாகும்.
😆😆😂🤣🤣
(மேற்கண்ட வரிகளை, சில நாட்களுக்கு முன்னர், ஒரு ஆட்டோவின் பின்புறம் பார்த்தேன். மழை பெய்துகொண்டிருந்ததால் படமெடுக்க இயலவில்லை.)
அவனவன், இயேசு அடைந்த நிலையை அடைந்துவிட்டால், பாவமன்னிப்புத் தொழில் எப்படி நடக்கும்? ஒப்பாரி நிலையங்களை எப்படி தொடர்ந்து நடத்துவது?
குறி மதத்தை பொருத்தவரை, இந்த வம்பே வேண்டாமென்று தொடக்கத்திலிருந்தே கட்டுப்படுத்தியுள்ளனர். இறுதிவரை பஸ்கி, தண்டால்தான்! இம்மதத்தின் நிறுவனர் இறந்தபிறகு, அவனவன் தன்னை இறைத்தூதனாக அறிவித்துக்கொண்டு, தொழில் தொடங்கியுள்ளான். எல்லோரையும் அடக்கி, கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பெரும் பாடுபட்டுள்ளனர். எனவே, ஒருவரும் விழித்துக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்கின்றனர்.
(இங்கு சில கேள்விகள் எழவேண்டும்:
- திருஞானசம்பந்தருக்கு பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த திருஞானசம்பந்தராக அறிவித்துக்கொண்டனர்?
- அப்பர் பெருமானுக்கு பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த அப்பர் பெருமானாக அறிவித்துக்கொண்டனர்?
- பகவான் திரு இரமண மாமுனிவருக்குப் பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த பகவானாக அறிவித்துக்கொண்டனர்?
எனில், ஏன் மெக்காவில் மட்டும் அவனவன் தன்னை இறைத்தூதனாக அறிவித்துக்கொண்டான்? 😉)
அடுத்து, நம் சமயத்திற்கு வருவோம்.
இங்கும் மற்ற மதங்களின் நிலைதான். ஒரு பயலும் விழித்துக்கொள்ளக்கூடாது என்பதில் அசுரக்கூட்டம் தெளிவாக & உறுதியாக இருக்கிறது.
கேட்டதும் சிந்தனையை தூண்டவேண்டுமென்ற கண்ணோக்கத்தில், நம் முன்னோர்கள் வைத்த இறைவனின் திருப்பெயர்களாகட்டும், பார்த்ததும் சிந்தனையை தூண்டவேண்டுமென்ற கண்ணோக்கத்தில், அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இறைதிருவுருவங்களாகட்டும், திருக்கோயில்களின் வடிவமைப்புகளாகட்டும், எதுவும் எவ்வகையிலும் நம் சிந்தனையை தூண்டாதவாறு பார்த்துக்கொண்டுள்ளனர்!
நமது வேலையென்ன? கோயிலுக்கு செல்லவேண்டும். வரிசையில் நிற்கவேண்டும். ஓட்டைப் பானைக்குள் ஈ நுழைந்தது போன்று, அசுரர்கள் ஒப்பிக்கும் கா(ஆ)ரியச் செய்யுள்களை கேட்டுவிட்டு, அவர்கள் தட்டுவிளக்கை சுழற்றும் போது, ஏதோ கிடைத்தது / புரிந்தது போன்று கன்னங்களில் போட்டுக்கொண்டு, தட்டு அருகில் வரும்போது காசை போட்டுவிட்டு, விளக்கொளியை தொட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு, திருநீறு பெற்றுக்கொண்டு, நமக்கு நாமே திருநீறு அடித்துக்கொண்டு வெளியே வந்துவிடவேண்டும். சுபமஸ்து! 🤣
இந்த மாயவலைகளையெல்லாம் தாண்டி, யாராவது விழித்துக்கொண்டால், அவருக்கு கட்டம் கட்டிவிடுவார்கள். (இதுவே 1,000 ஆண்டுகளுக்கு முன்னரெனில், எல்லோருக்கும் ஒரே நீதியென்ற நிலைப்பாட்டை கொண்டிருந்ததற்காக, மன்னர் ஆதித்த கரிகாலச் சோழரை போட்டுத்தள்ளியது போல போட்டுத்தள்ளுவார்கள். இன்று, இம்மியளவு பண்பட்டு, கட்டம் கட்டுகிறார்கள்). ஆனால், அப்படி விழித்துக்கொண்டவர் உடல் உகுத்த பின்னர், அவரது திருவிடம் (கா(ஆ)ரியத்தில், சமாதி) புகழ்பெறத்தொடங்கினால், உரிமையுடன் உள்ளே நுழைந்து, கல்லா கட்டத்தொடங்கிவிடுவார்கள்.
அண்மை காலத்தில், இவர்களது அசுரக் கண்காணிப்பையும் தாண்டி, பெரும் புகழ்பெற்று, பலரது உள்ள விளக்கைத் தூண்டிவிட்ட ஒரே பெருமான் பகவான் திரு இரமண மாமுனிவராவார்! உள்ளபொருளை தெளிவாக காட்டியதற்காக, இன்றும், சில அசுரர்கள் அவரை வெறுத்து ஒதுக்குவதை நானறிவேன்.
எப்படியோ பகவானிடம் கோட்டைவிட்டாலும், இந்நேரம், "இன்னொரு பகவான் உருவானால், எப்படி கட்டம் கட்டுவது?" என்று ஆய்வு செய்து, அவர்களது "எப்படி மக்களை முட்டாளாக்கி, Safe-அ, Comfort-அ, Secured-அ, நன்னா & வாழையடி வாழையாக வாழ்வது?" என்ற கையேட்டுப் புத்தகத்தில் சேர்த்திருப்பார்கள். 👊🏽👊🏽
குறிமதமும், ஒப்பாரி மதமும் வையகத்தை பிடித்த பீடைகளெனில், இவ்வசுரக் கூட்டம் நம்மை பிடித்த பீடையாகும்! 😞
பொழுது இப்படியே போய்விடாது. அல்லவை இல்லாமல் போகும் சமயம் வரும். நல்லது வெளிப்படும். "ஓர்ந்து கண்ணோடாது இறை புரியும்" ஆட்சியாளர்கள் மீண்டும் தோன்றுவார்கள். எல்லாம் நலமாகும்.
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
Friday, December 1, 2023
கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி - சிறு விளக்கம்
Thursday, November 30, 2023
அடிமுடி காணா அண்ணாமலையார் - உட்பொருள்
Tuesday, November 28, 2023
மாதம் மும்மாரி பொழியட்டும்!!
ஆரியப் படங்காட்டிகளின் கைங்கரியங்களில் சில...
Monday, November 27, 2023
விளக்கீடு!! 🪔🪔🪔
Tuesday, November 21, 2023
மடியிலே கனம் வழியிலே பயம்
Friday, November 17, 2023
இரும்பை மாகாளம் & மடியிலே கனம் வழியிலே பயம்
Monday, November 13, 2023
தீபாவளி எனும் உருவகத்தின் வெவ்வேறு வடிவங்கள்!!
Saturday, November 11, 2023
அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!!!
Thursday, November 9, 2023
கேதார கௌரி விரதம் & கேதார்நாத் - சிறு விளக்கம்
Monday, November 6, 2023
திரு மாகறல் பெருமான் - பெயர் விளக்கம்
Sunday, November 5, 2023
ஒரு சொலவடைக்குள் நம் சமயம் மொத்தமும் அடக்கம்!! 😍
Tuesday, October 31, 2023
பரிகாரம் - சிறு விளக்கம்
Tuesday, October 24, 2023
ஆக்கம் பெருக்கும் மடந்தையின் (ஆரியத்தில், சரசுவதி) திருநாள்!
Sunday, October 22, 2023
தட்சிண கயிலாயமா? உத்திர திருவண்ணாமலையா?
Friday, October 13, 2023
ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரியம் கலக்காதபோது, தமிழில் மட்டும் ஏன் ஆரியம் கலந்திருக்கவேண்டும்?
Wednesday, October 4, 2023
நாகபஞ்சமி - புனைவுக்கதையும் உட்பொருளும்
Tuesday, September 26, 2023
அட்டமங்கலம் = 8 உகந்த பொருட்கள் = எண்பொருட்கள்: உட்பொருள்
அட்டமங்கலம் என்பது பின்வரும் 8 உகந்த பொருட்களை குறிக்கும்:
கண்ணாடி
நிறைகுடம்
கொடி
விசிறி
தோட்டி
முரசு
விளக்கு
இரு மீன்கள் - இணைக்கயல்
இவற்றை தனித்தனி பொருட்களாகவோ, அல்லது, அனைத்தையும் ஒன்றாக ஒரு தாமிரத்தகட்டில் அச்சடித்தோ, சிலர் தங்களது வழிபாட்டு அறையில் வைத்திருப்பதை காணலாம்.
oOo
முதற்கண் தெரிந்துகொள்ளவேண்டியது மங்களம் & மங்கலம் ஆகிய இரு ஆரியச் சொற்களுக்கு இடையேயுள்ள வேறுபாடு:
மங்களம் - நிறைவு
மங்கலம் - உகந்தது / நற்குறி
அட்டமங்கலம் = 8 உகந்த பொருட்கள் = எண்பொருட்கள்.
1. கண்ணாடி
இது எதற்கு உதவுகிறது? முகம் பார்க்க. முகம் பார்த்து என்ன செய்யப்போகிறோம்? நம்மை சீர் செய்து கொள்ளப்போகிறோம். இவ்வாறே நமக்கு அமைந்திருக்கும் உடல், நம் கண் முன்னே விரியும் வையகம், நமக்கு தோன்றும் எண்ணங்கள் என யாவும் நமக்கு கண்ணாடி போன்றவையாகும். இவற்றினால் நாம் சீராகவேண்டும் / மேம்படவேண்டும் என்பது உட்பொருளாகும்.
2. நிறைகுடம்
முழுமையான அறிவு - எதையறிந்தால் நமது மனம் நிறைவடையுமோ அதைப் பற்றிய அறிவு. அதாவது, மெய்யறிவு.
3. கொடி
தரையில் படராமல், மேலெழும்பும் கொடிவகைகளைக் குறிக்கும். அவற்றை போன்று, மேலான குறிக்கோளை நோக்கி செல்லவேண்டும். எது மேலான குறிக்கோள்? உள்ளபொருள் / பரம்பொருள்!
4. விசிறி
அ. இளைப்பாறுதல். மொத்தப் பிறவியே இளைப்பு-ஆறுவதற்காகத்தானே! எனவே, எதையும் பொறுமையாக அணுகவேண்டும்.
ஆ. விசிறியை வீசிக்கொண்டிருந்தால் ஈ, கொசு முதலான பூச்சிகள் நம்மை அண்டாது. இதுபோன்று, "தீய எண்ணங்களை / தீய நபர்களை அண்டவிடாதே" என்றும் பொருள் கொள்ளலாம்.
5. தோட்டி
தோட்டி எனில் அங்குசமாகும். வெறி பிடிக்காமல் இருப்பதற்காக. யானைக்கு மதம் பிடித்தால், பாகன் தோட்டியை பயன்படுத்துவதை பார்த்திருக்கலாம். அதுபோன்று, ஒரு வேளை, நமக்கு வெறி பிடித்தால் நமது தோட்டியை பயன்படுத்தி வெறியை அடக்கவேண்டும். யானைக்கு தோட்டியென்பது ஒரு பொருளாகும். நமக்கு தோட்டியென்பது நமது மெய்யாசிரியர், நமது அறநூல்கள், நமது நலம்-விரும்பிகள், நம் வாழ்வில் என்றோ நடந்த நிகழ்வுகள் என யார் / எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
தோட்டிக்கு பதிலாக மழு இருக்கலாம். அப்படி மழுவை வைத்தால் நமக்கு கிடைக்கும் பொருள்: பற்றுகளை அறுத்தெறி. அல்லது, பற்றுகளை சேர்த்துக்கொள்ளாமல் இரு.
6. முரசு
போர்முரசு. ஒலித்தவுடன், எல்லாவற்றையும் விட்டுவிட்டு போருக்கு புறப்படுதல். இவ்வாறே, செயல் / கடமை என்று வந்தவுடன், உடனடியாக, முனைப்புடன் ஈடுபடவேண்டும்.
7. விளக்கு
விளக்கு எரிவதால் மற்றவர்களுக்கே பயன் கிட்டும். விளக்கிற்கு பயனில்லை. இது போன்று, தந்நலம் கருதாது மற்றவர்களுக்கு உதவிடவேண்டும்.
8. இணைக்கயல்
அன்னை அங்கையர்கண்ணியின் இரு விழிகளைக் குறிக்கும்: விழித்திரு!
வள்ளற்பெருமான் அறிவுருத்திய 3 சொற்களில் ஒன்றாகும். நமது தன்மையுணர்விலிருந்து ஒரு நொடி தவறினாலும், மாயையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வோம். எனவே, எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
(ஒரு சாரர், இக்குறியீடு பிறவிகளின் தொடர்ச்சியை, அதாவது, மறுபிறவியை விரும்புதலைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்கின்றனர். இது தவறாகும். இப்படி பொருள் கொண்டால், நம் முன்னோர்கள் வகுத்த அறம், பொருள், இன்பம் & வீடு என்ற 4 வழிகளில், வீடு என்ற மேலான வழி தவறானது / தேவையற்றது என்றாகிவிடும். மனிதப்பிறவியின் குறிக்கோள் பிறப்பறுப்பதாகும்.)
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻