Tuesday, November 21, 2023

மடியிலே கனம் வழியிலே பயம்


(இதற்கு முந்தைய இடுகையில், ஒரு சிறு பகுதியாக எழுதியிருந்ததை, சற்று விரித்து, தனி இடுகையாக மாற்றியிருக்கிறேன். 🙏🏽)

இப்பழமொழியின் புறப்பொருள் அனைவரும் அறிந்ததே. இதன் உட்பொருளை பார்ப்போம்.

🔸 மடியில் - மடி+இல் - மடித்து வைக்கக்கூடிய வீடு - கூடாரம் - நமது தலைக்கு சமம்

🔸 கனம் - சுமை - செருக்கு - நான் இவ்வுடலென்ற தவறான எண்ணம். இவ்வெண்ணமே எல்லாவகையான பற்றுகளுக்கும் (சுமைகளுக்கும்) ஆணிவேராகும்.

🔸 வழியில் - வழி+இல்

   - இல் - வீடு - இருப்பிடம் - தற்போதைய நமது வாழ்க்கை
     - எனில், முற்பிறவியின் போது?
       அப்போதும், வழி+இல்-தான்.
     - அடுத்த பிறவியின் போது?
       அப்போதும், வழி+இல்-தான்.
     - இல் என்பது கிடைக்கும் பிறவியை குறித்தால், வழி என்பது... பிறவிகள் மாறினாலும் மாறாமலிருக்கும் நம்மை குறிக்கும்!!
     - இதனால்தான், நம்மில் நாமாக இருக்கும் முயற்சியை வழி+பாடு என்கிறோம். பாடு என்பது ஆரியத்தில் அனுபவமாகும். வழியாகிய அனுபவம்!

🔸 மீண்டும், தற்போதைய வழி+இல்-லுக்கு திரும்புவோம்:

நம்மை நாம் உடலாக காணும்வரை, வாழ்க்கையை கண்டு அச்சமடைந்து கொண்டுதானிருப்போம்:

- இன்று தொழில் நன்றாக நடக்குமா?
- நமது வேலை நிலைக்குமா?
- கடன் கிடைக்குமா?
- கொடுத்த கடன் திரும்பவருமா?
- பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை அமையுமா?
...

அச்சம் நீங்கவேண்டுமெனில், சுமை நீங்கவேண்டும். சுமை நீங்கவேண்டுமெனில் நமதுண்மையை நாம் உணரவேண்டும். அதாவது, வழி+பாடாக (வழி என்ற அனுபவமாக) மட்டும் இருக்கவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment