Showing posts with label சபை. Show all posts
Showing posts with label சபை. Show all posts

Friday, December 1, 2023

கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி - சிறு விளக்கம்


🌺🙏🏽🙇🏽‍♂️
திரு இரத்தினக்கூடம் (ஆரியத்தில், சபை), திருவாலங்காடு

🌷 இம்மதில் சுவருக்குப் பின்னால், திரு காரைக்கால் அம்மையாரும், மற்றுமொரு பெருமானும் திருநீற்று நிலையிலுள்ளனர்.

🌷 அவர்களது நிலையை குறிக்கும் இறையுருவம்தான் படத்தில் காணப்படும் திரு ஆடலரசன் ஆவார்.

🌷 அவர்களது நிலையென்ன? 

இதற்கு பதில்: அவ்விடத்தின் பெயரன்ன?

கூடம் (சபை)!!

கூடம் எப்படியிருக்கும்? பார்வையாளர்கள் ஒரு புறம் அமர்ந்திருக்க, காட்சிகள் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டிருக்கும். இதையொத்த நிலையில் அப்பெருமான்கள் இருக்கிறார்கள் என்பது பொருளாகும். அதாவது, அவர்களுக்கு இன்னமும் காட்சிகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

🌷 இதனால் அவர்களுக்கென்ன பயன்?

அவர்களுக்கு ஒரு பயனுமில்லை. நமக்குத்தான் கொள்ளைப் பயன்கள்!

கருவறை அமைப்பிலிருக்கும் திரு ஆலங்காட்டு அப்பர் தெருமுனையிலிருக்கும் நண்பரெனில், கூடத்திலிருக்கும் திரு காரைக்கால் அம்மையார் பக்கத்து வீட்டிலிருக்கும் நண்பராவார்!!

🌷 கூடத்தின் உள்ளிருக்கும் பெருமான்களின் நிலையை குறிப்பது மட்டுமில்லாது, எந்த நுட்பத்தை (Technique) கடைபிடித்தால் அவர்களது நிலையை நாமும் அடையலாமென்பதையும் ஆடலரசன் திருவுருவம் குறிப்பிடுகிறது!

🌷 அதென்ன நுட்பம்?

அம்மையுடன் நடக்கும் ஆடல் போட்டியில், பல வகையான நுட்பங்களை பயன்படுத்திய பின்னர், இறுதியில், பெருமான் தனது இடதுகாலைத் தூக்கி, தனது இடது காதில் மாட்டப்பட்டிருக்கும் அணிகலனை கழட்டுவார். இதை செய்யமுடியாமல் அன்னை தோற்றுப்போவார். 

அம்மை - மனம், உடல் & வையகக் காட்சிகள்.

பெருமான் - நாமே.

தூக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் நமது கண்ணோக்கத்தை (ஆரியத்தில், கவனத்தை) நம் மீது - நமது தன்மையுணர்வின் மீது - திருப்புதல்.

காதணி - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இதிலிருந்தே அனைத்து பற்றுகளும் தோன்றுகின்றன.

இந்நுட்பத்திற்கு பகவான் திரு இரமண மாமுனிவரிட்ட பெயர்: தன்னாட்டம்!!

oOo

இரத்தினம், பொன், வெள்ளி, தாமிரம் & சித்திரம் ஆகிய கூடங்களிலுள்ள பெருமான்கள் எந்நிலையில் உள்ளனரோ, அதே நிலையில்தான் பின்வரும் பெருமான்களும் உள்ளனர்:

🌷 சென்னை திருவொற்றியூரிலுள்ள திரு படம்பக்கப் பெருமான் என்ற உடையவரின் கீழுள்ள பெருமான்

🌷 மதுரையிலுள்ள, பெரும் புகழ்பெற்ற, திரு சொக்கநாதர் என்ற உடையவரின் கீழுள்ள திரு சுந்தரானந்த சித்தர்

🌷 அகத்தியர் திருமணக்காட்சி கண்ட திருவிடமென்று சொல்லப்படும் அனைத்து திருக்கோயில்களிலுள்ள உடையவர்களின் கீழுள்ள பெருமான்கள்

🌷 திருக்கயிலாயக் காட்சி கண்ட திரு அப்பர் பெருமான்

🌷 சூழ்ச்சியில்லாக் காட்சி கண்ட திரு மணிவாசகப் பெருமான்

🌷 நடக்கும் சில நிகழ்வுகளைக் கண்டால் பகவானும் இந்நிலையில் இருக்கலாமென்று தோன்றுகிறது.

ஆக, கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி என அழைக்கப்படும் யாவும் ஒரே காட்சிதான்: அம்மையப்பர் காட்சி!!

காண்பவர் - அப்பன்
காட்சி - அம்மை

oOo

இவ்வாறு, இறையுருவின் பெயர், திருக்கோயிலின் பெயர், ஊரின் பெயர், இறையுருவம், கோயிலின் அமைப்பு, புனைவுக்கதைகள் என வாய்ப்பு கிடைத்த அனைத்திலும் பேருண்மைகளை பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால், கேடுகெட்ட, நன்றிகெட்ட, தன்னலமே வடிவான, பித்தலாட்ட, நயவஞ்சக, நச்சு அசுர இனம் உள்நுழைந்ததால், அனைத்தும் வீணாகிவிட்டன. குருடர்களாக, செவிடர்களாக, "மம" சொல்லும் மரமண்டைகளாக ஆக்கப்பட்டுவிட்டோம்!! 🤬😡

இதுவும் அம்மையின் கூத்துத்தான். இதையும் தென்னாடுடைய தமிழீசன் வெற்றிக்கொள்வான்.

oOOo

செயற்கரிய செயல் செய்த பேயார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻