Wednesday, May 27, 2026

கருமை நிறப் பொட்டு வைத்தால் கண்ணூறு தாக்காதாம்! 😏


தேர்தலுக்கு முன்னால், கருங்காலி கட்டையை கையில் வைத்திருந்தால் அரசப்பதவி கிடைக்குமென்று கொம்பு சீவினர். இப்போது கருமை நிறப் பொட்டு வைத்தால் கண்ணூறு தாக்காதென்று கொம்பு சீவத் தொடங்கியுள்ளனர். 😏...

🌷 நெற்றியில் வெண்மையான திருநீறு இட்டால்: மாறாத உள்ளபொருளே மேலானது [என்பது வைப்பவரின் கண்ணோட்டமாகும்].
🌷 கருமை நிறப்பொருள்: மாற்றத்தை ஏற்படுத்தும் அன்னையே / பெருமாளே மேலானவர் [என்பது வைப்பவரின் கண்ணோட்டமாகும்].

🌷 நீறு: பற்றுகளை விட்டவர் / விட முயற்சிப்பவர்.
🌷 மை: பற்றுகளை விரும்புபவர்.

🌷 நீறு: எண்ணங்களற்று இருப்பவர் / இருக்க முயற்சிப்பவர்.
🌷 மை: எண்ணங்களின் ஊற்றுக் கண்ணாக இருப்பவர்.

🌷 நீறில்லா நெற்றி பாழ் - மெய்யறிவு பெறாதவரின் பிறப்பு வீணாகும்.
🌷 மை வைத்த நெற்றி பாழ் - பற்றுகளில் உழல்பவரின் பிறப்பு வீணாகும்.

அரகஜா என்ற அசுரப்பெயர் ஒரு கருமை நிறப்பொருளை குறிக்கிறது. எனவே, மேலே கருமைக்கு கண்ட யாவும் பொருந்தும். அவற்றை ஒதுக்கிவிட்டு, அதன் பெயரை மட்டும் ஆராய்ந்தால் கிடைப்பது: நல்லெண்ணங்களால் ஆனவர் / பிறந்தவர்!

ஆனால், 1.5ல தமிழரை கொன்று குவித்த சிங்களக் காட்டேறிகளுக்கு எதிராக கையெழுத்திட மறுத்தவருக்கு இது பொருந்துமா? 😡

oOo

இன்றைய நிலையில், நெற்றியில் கருமைப் பொருளை இடுவதற்கு, அதாவது, எண்ணங்களின் ஊற்றுக்கண்ணாக இருப்பதற்கு மிகவும் தகுதியானவர்: நம்ம ஜி! 😁

தோல்வியடைந்தாலும் புகழ் தேடுவார். வெற்றி பெற்றாலும் புகழ் தேடுவார். விலையேற்றத்திலும் புகழ் தேடுவார். விலை குறைப்பிலும் புகழ் தேடுவார். மொத்தத்தில், தற்புகழ்ச்சி எனும் எண்ணத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறார். 😜

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, May 23, 2026

ஒற்றைக்காலில் வடக்கிருத்தல் & நெருப்புக்கிடையே வடக்கிருத்தல் - உட்பொருள்


அன்னபூரணி என்ற பெயர் கொண்ட உருசியப்பெண், தனது ஆயருடன், அஜ்மீர் (இராஜஸ்தான்) நகரில், தங்களை சுற்றி 9 நெருப்பு மூட்டி, அதற்கிடையே அமர்ந்து, ஞாலம் அமைதியடைவதற்காக கடுமையாக வடக்கிருக்கிறாராம். இதற்கு முன்னர், இதே குறிக்கோளுக்காக, சில வாரங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று வடக்கிருந்தாராம்.

இவை போன்ற கடுமையான செயல்களால், அவருக்கு புகழ் கிட்டலாம். வசதி, வாய்ப்புகள் & தொல்லைகள் பெருகலாம். வேறெதுவும் நடக்காது!

🌷 ஒற்றைக்காலில் வடக்கிருத்தல்:

அகமென்பது ஒரு கால். புறமென்பது இன்னொரு கால். ஆனாலும், ஒற்றைக்கால் என்பது அகத்தை மட்டுமே குறிக்கும். ஒற்றைக்காலில் நிற்பது, அதாவது, அகத்தில் நிற்பதென்பது தன்மையுணர்வாக மட்டும் இருப்பதாகும்.

🌷 9 நெருப்புகளுக்கிடையே வடக்கிருத்தல்:

9 நெருப்பு = 9 துளைகள் = நமதுடல்!

நம் உடலிலுள்ள துளைகள் வழியாக உள்ளே வரும் ஒவ்வொரு தரவும், நம்மை எப்படியெல்லாம் படுத்துகிறது என்பது எல்லோருக்கும் கண்கூடாகும். எனவே ஒவ்வொரு துளையும் ஒரு நெருப்பாகிறது.

9 நெருப்புக்கு பதிலாக, நண்பகல் வெயிலில், 4 பக்கமும் நெருப்பு மூட்டி, நடுவே அமர்ந்து வடக்கிருந்தால்:

4 நெருப்பு + பகலவன் எனும் நெருப்பு = 5 நெருப்பு = 5 புலன்கள் = நமதுடல்!

இங்கு, துளைகளுக்கு பதிலாக புலன்கள். மற்றபடி, துளைகளுக்கு பார்த்த அதே விளக்கம் புலன்களுக்கும் பொருந்தும்.

5 / 9 நெருப்புக்கிடையே அமர்ந்து வடக்கிருத்தல் = உடலிலிருந்து கொண்டு வடக்கிருத்தல்.

எனில், அன்றாட வாழ்வை வடக்கிருத்தல் போல அணுகுதல். அதாவது, வருவதை வரவிட்டு, போவது போக விட்டு, தன்மையுணர்வை விட்டு விலகாதிருத்தல்.

இவ்வாறிருப்பதாலோ, அல்லது, மேற்கண்டவாறு ஒற்றைக்காலில் நிற்பதாலோ என்ன கிட்டும்? நம்மை பற்றிய அறிவு (மெய்யறிவு) கிட்டும். அதை இறுகப் பற்றினால் வீடுபேறு கிட்டும். அதாவது, நமக்கு அமைதி கிட்டும். ஆனால், ஞாலத்திற்கு அமைதி கிட்டுமா?

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, May 20, 2026

நீரில் மிதத்தல் (அசுரத்தில், ஜலப்பிரதட்சணம்) - உட்பொருள்


தீச்சட்டி ஏந்துதல், பால்குடம் சுமத்தல், தீ மிதித்தல் வரிசையில் நீரில் மிதத்தலும் சேரும். இதனடிப்படை மெய்யியலாகும்.

🌷 கிணறு என்பது நமது மனமாகும்.

🌷 "கிணற்று நீரில் மிதந்து கொண்டிரு" என்பதை "கிணற்றின் ஆழத்திற்கு செல்லாதே" என்றும் கூறலாம்.

🌷 கிணற்றின் ஆழம் = மனதின் ஆழம் = எண்ணப்பதிவுகள் இருக்குமிடம்!

🌷 ஆழத்திற்கு செல்லாதே = எதையும் பதிவு செய்யாதே!

🌷 அன்றாட வாழ்வில், நமக்கு கிடைக்கும் பல நுகர்வுகள் பதிவுகளாக நம் ஆழ்மனதில் பதியும். அப்படி பதியவிடாமல், வருவதை வரவிட்டு, போவதை போகவிடுவதே, கிணற்று நீரில் மிதப்பதின் உட்பொருளாகும்!

சரி. யார் அவ்வாறு வாழ்வர்? மெய்யறிவாளர்!! வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருப்பர்.

oOo

சோழவந்தான் சட்டக்கூட உறுப்பினரின் வேண்டுதல்: அம்மா தாயே! யோசேப்பு விசயை மட்டும் முதலமைச்சராக்கிடு. இந்த கிணத்து தண்ணில மிதக்கிறேன்.

அவரது உண்மையான வேண்டுதல்: அம்மா தாயே! யோசேப்பு விசயை மட்டும் முதலமைச்சராக்கி விடு. அப்புறம் நான் ஒரு பார்வையாளான, நீ காட்டுற காட்சிய பாத்துகிட்டு மட்டுமிருக்கேன்!!

இதுதான் தனது உண்மையான வேண்டுதலென்பது அவருக்கு தெரிந்திருந்தால்... 😂😂🤣!!

oOo

இன்றைய சூழலில் அரசியலிலிருப்போர் மெய்யறிவுத் தேடலில் ஈடுபடமுடியுமா? ஆனால், மெய்யறிவாளரே ஆட்சியாளராக திகழ்ந்த பெருமை, அண்டையிலிருந்தும், வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும், சாக்கடைகளும் நஞ்சுகளும் வந்து கலப்பதற்கு முன்னரிருந்த தமிழ்த் திருநாட்டிற்கு உண்டு!! 😍

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, May 16, 2026

குறையற்றவரின் குறையை போக்கினாராம் குறையே வடிவானவர்! 😏


😆 இராமசாமி சாதியை ஒழித்தான்! 
😝 இராமசாமி பெண்ணுரிமையை காத்தான்!
😂 ஈழத்தமிழரை காக்க கடற்கரையில் கருணாநிதி உண்ணா நோன்பிருந்தான்! 
...
என்ற வகை உருட்டில் சேர்ந்ததுதான் சிவபெருமானின் தோஷத்தை பெருமாள் போக்கினார் என்பதாகும்!!

(அரவங்களுடன் வந்த அரவமதத்திடம் உருட்டைத்தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? 😏)

ஓர் எடுத்துக்காட்டு:

திரு அருட்கடல் பெருமானிடம் (அசுரத்தில், பகவான் இரமணர்) சென்று, திராவிசமாக பேசி (அதாவது, நயமாக பேசி 😁), அவரை வீடுபேறு நிலையிலிருந்து  பாற்கடல் நிலைக்கு கொண்டுவருவதே, சிவபெருமானின் (மெய்யறிவாளரின்) தோஷத்தை போக்குவதாகும்!! 🤭

அரவமதத்தை பொறுத்தவரையில்,

வீடுபேறு = சாபம்!
மெய்யறிவு = தோஷம்!!

சரி. அரவமதத்தில், சிவபெருமான், சாபம் & தோஷம் ஆகிய சொற்கள், உண்மையில், எவற்றை குறிப்பிடுகின்றன என்று பார்த்தோம். பெருமாள் என்ற சொல் எதை / யாரை குறிப்பிடுகிறது? 😉

oOOo

👊🏽 திராவிசத்தை கற்பித்தவன் அயோக்கியன்!
👊🏽 திராவிசத்தை பரப்பியவன் காட்டுமிராண்டி!
👊🏽 திராவிசத்தை நம்புபவன் முட்டாள்! 

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻