Thursday, March 30, 2023

நரித்துவத்தின் புதிய ஊழியம்!!


😆😝😂😂🤣

என்னடா, வாழ்க்க சீரியஸாவே போயிட்டிருக்கேன்னு நெனச்சேன். நல்ல வேள, புண்ணியவானுங்க வயிறு வலிக்க சிரிக்க வச்சுட்டானுங்க. புண்ணியவானுங்களுக்கு நிறைய பொர கெடைக்கனும்.

oOo

வெகுவேகமாக அந்த வீட்டிற்குள் வந்த சூசை, வாயில் & சாளரக் கதவுகளை மூடினான். அதை பார்த்துக்கொண்டிருந்த ஏரியா ஐட்டமான ஃபிலோமினா, "ஏன்யா, இன்னாத்துக்கு மூடுறே? இன்னொரு தபாவுக்கு ஒடம்பு தாங்காதுய்யா!" என்றாள். "அட, அதுக்கில்லடி" என்றவாறு அருகில் வந்தான்.

"நம்ப ஜெபராஜ் ஐயா வூட்டுக்கு போயிருந்தேனா, அங்க அவர மாதிரி சில பெரியவங்களும், 2 வெள்ளக்காரங்களும் இருந்தாங்க. நம்ம மதத்திலிருந்துதான் சிவன் சாமிய கும்பிடறது உருவாச்சுன்னு ஜோடிக்கணும்னு பேசிகிட்டிருந்தாங்க. ஜோடிச்சா பெரிய துட்டு கெடைக்குமாண்டி. நம்ப பெரியவங்க லெட்சுமணசாமி, தம்பிதுரை, கனல்நிதி எல்லாரும் இப்புடி ஜோடிச்சுத்தான் பெரியாளுங்களா ஆனாங்களாம். நாமளும் கொஞ்சம் ஜோடிச்சுத்தான் பாப்போம்ன்டி."

ஃபிலோமினா: நம்ப இயேசப்பாத்தான் சிவனாருன்னு ஆரம்பிப்போம்யா?

சூசை: சரியா வருமா? இயேசப்பா வெள்ளையா இருக்காரு. சிவனாரு சிவப்பாவும் இருக்காரு; நீலமாவும் இருக்காரு.

ஃபிலோ: அட, இயேசப்பா இங்க வரும்போது, நம்ப சித்திர மாச வெயில்ல சிவப்பாயி, பொறவு, நம்பள மாதிரி கருப்பாயிட்டாருன்னு சொல்லுவோம்யா.

சூ: நீ சொல்றது சரியா வரும்னு தோணுது. பச்சையம்மாவ எப்புடி கொண்டாற்ரது?

ஃபிலோ: மேரிதான் பச்சையம்மான்னு சொல்லுவோம்யா.

சூ: (திடுக்கிட்டவனாய்) இன்னாடி சொல்ற? அம்மாகாரிய போயி பொஞ்சாதிங்குற!

ஃபிலோ: அடச்சே, தூ! அது மேரியம்மாயா. இது மேரி மேக்தலின்னு வேற ஒருத்தருய்யா. மெய்யாலுமே இயேசப்பாவோட சம்சாரம்யா.

சூ: மெய்யாலுமாடி? அவுரு கண்ணாலமே கட்டிக்கிலன்னுதானே நெனச்சேன். அப்ப, மேரியம்மாவ இன்னா பண்ணுவடி?

ஃபிலோ: அவுங்க ஆதி பராசக்தியா ஆயிட்டாங்கன்னு சொல்லுவோம்யா.

சூ: (சற்று குழம்பியவாறே) அப்ப, அவுங்க பச்சையம்மாவோட அவதாரமில்லயா?

ஃபிலோ: (எரிச்சலுடன்) எடத்துக்கு ஏத்த மாதிரி போட்டுக்கலாம்யா. விடுய்யா.

சூ: கொழந்தைங்கடி?

ஃபிலோ: இயேசப்பாவோட ஊருல்ல வெயில் அதிகமாம். அவரால முடியல. இங்க வந்து, நம்ம ஊரு சோறுதண்ணி சாப்ட்ட பின்னாடி, ரெண்டு கொழந்தைங்கள பெத்துக்கினார்னு சொல்லுவோம்யா.

சூ: லாஜிக்கா இருக்குடி. ஆனா, அவுரு ஆட்டுக்குட்டியில்ல வெச்சிருந்தாரு. இங்க சிவனாரு முன்னாடி காளமாடில்ல குந்திகினு இருக்கு.

ஃபிலோ: அவுரு ஊர்ல தண்ணி பஞ்சம். புல்லு கெடைக்கில. அதனால சின்ன உசிர வளத்தாரு. இங்க வந்த பின்னாடி, காளைக்கு மாறிகினார்னு சொல்லுவோம்யா. ஆட்ட வெச்சுகிட்டு யாருய்யா லோல் படறது? அது வேற வதவதன்னு குட்டிங்கள போட்டு வெக்கும்.

சூ: சிவனாரு, பச்சையம்மா, புள்ளையாரு, முருகேன், காளைமாடு... எல்லாம் ஆச்சுடி. நா போயி ஜெபராஜ் ஐயாவ பாத்துட்டு வர்றேன். ஐயாவுக்கு இது புடிக்கணும். பெரிய துட்டு கிடைக்கணும். இயேசப்பா கருண காட்டப்பா. வர்ற அம்மாச ராவு ஜெபத்துக்கு 100 பேர கூட்டியாரேன், இயேசப்பா.

😆😝😝😂😂😂🤣🤣

இவர்களுக்கு பரலோக சாம்ராஜ்ஜியம் சமீபத்தில் உள்ளதென்று நினைக்கிறேன்! 😜

#நரித்துவம்
#பாவாடை_மதம்
#ஒப்பாரி_மதம்
#எம்எல்எம்_மதம்

Wednesday, March 29, 2023

வைணவ கைங்கரியத்திற்கு எதிர் கைங்கரியம்!! 👊🏽👊🏽



இணைப்புப்படம், ராமகிருஷ்ண விஜயத்தின் சித்திரை 2023 இதழின் பின்னட்டைப்படமாக வந்துள்ளது.

திரு கண்ணபிரானுக்கும் 🌺🙏🏽🙇🏽‍♂️, அர்ஜுனனுக்கும் நாமத்தை போட்டிருக்கிறார்கள். துரியோதனனுக்கு பட்டையை போட்டிருக்கிறார்கள். அதாவது, சைவர்களை கொடூரர்களாகவும், நாமப் பேர்வழிகளை நல்லவர்களாகவும் காட்டியிருக்கிறார்கள்!

> நாமச் சின்னத்தை இராமானுஜர் வரைந்தது ஏறக்குறைய 850 ஆண்டுகளுக்கு முன்னர்.

> வைணவம் என்றொரு மதம் தோன்றத் தொடங்கியது திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ மறைவுக்குப் பின்னர். அது முழுவடிவம் பெற்றது இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர். 

> கண்ணபிரான் வாழ்ந்ததும், மகாபாரதம் நிகழ்ந்ததும் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்.

> எனில், பிரானுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி நாமத்தை போட்டுவிடலாம்?

நாமம் ஒன்றும் இராமானுஜரின் தனிப்பட்ட படைப்பல்ல! அதற்கு முன்னரே பாலைவன மதங்களில் வெகுவாக பயன்படுத்தப்பட்ட பெண்குறி திறப்பு எனும் குறியீட்டை, தலைகீழாக்கி, நடுவில் சிவப்பு கோட்டைச் சேர்த்து வெளியிட்டார். பாலைவன மதங்களில், பெண்குறி, 'n' என்ற வடிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவர், அதை 'U' என்றாக்கி, நடுவில் கோடு சேர்த்து, அச்சு அசல் பெண்குறியாக்கிவிட்டார். |/

> நாமம் போட்டுட்டாங்களா? = உன்னை ஏமாற்றிவிட்டார்களா?

> நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?

>> நாமம் = வைணவம் = ஏமாற்றுவேலை!!

அடிப்படையில், இவர்கள் வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களாவர். அப்போது இவர்களது தொழில் மொட்டைப் போடுதலாகும். 

> மொட்டப் போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?

> மொட்டப் போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

>> மொட்டை = பௌத்தம் = திருட்டு வேலை!!

ஆக மொத்தம், இவர்களது தொழில் ஊரையேமாற்றிப் பிழைப்பதாகும்!!

இவ்வாறு, இவர்களது திருட்டுத்தனங்களை பக்கம் பக்கமாக தோலுரித்துக் கொண்டே போகலாம். இப்போதைக்கு இது போதும். 👊🏽👊🏽

என்றும் வாய்மையே வெல்லும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, March 22, 2023

திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் - சில குறிப்புகள்


திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் திருக்கோயில் - தொன்ம கதைகளில் வரும் திரு அகத்திய மாமுனிவரின் திருவிடமாகும்!

🌷 அகத்தியர் = குள்ள மாமுனிவர்.

பல திருக்கோயில்களில், "அகத்தியருக்கு இறைவன் தனது திருமணக்காட்சியை காட்டியருளிய இடம்" என்று பதிவு செய்திருப்பார்கள். இது குள்ள மாமுனிவரை குறிக்காது!! அந்தந்த திருக்கோயில்களில் திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான்களைக் குறிக்கும். உண்மையான அகத்தியர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார்.

🌷 தொடக்கத்தில் நம்மிடமிருந்த இக்கோயில், 1700-1800 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களிடம் சென்றது. தற்போது, பெளத்தத்திலிருந்து தோன்றிய வைணவர்களிடமுள்ளது. அப்போது, படுத்திருக்கும் கெளதம் புத்தர் சிலையிருந்திருக்கும். தற்போது, படுத்திருக்கும் பெருமாள் சிலையுள்ளது.

🌷 ஒரு சமயத்தில், இக்கோயில் வைணவத்தின் தலைமையகமாக விளங்கியது.

🌷 இங்கு சென்று திரும்பும்போதுதான், வேதாந்த தேசிகருக்கு "குதிரைத்தலை பெருமாள்" எனும் வடிவத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.

🌷 இங்குள்ள பெருமாளின் உருவம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டது. இதற்கு முன்பிருந்த சிலை தீக்கிரையாகிப் போனது.

🌷 தற்போதுள்ள உருவம் ஒரு சிவலிங்கத்தை தொட்டபடியிருக்கும். சைவத்தை / சிவப்பரம்பொருளை மட்டம் தட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இவ்வமைப்பையும், உடனிருக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளையும் நீக்கிவிட்டு சிந்தித்தால், பெருமாளின் உருவம் ஒரு சிவலிங்கமே என்பது விளங்கும்!!

> சிவலிங்க ஆவுடை = பாம்பணை = ஐம்பொருட்களால் ஆன உடல் உலகம். அதாவது, காணப்படுவது / அறியப்படுவது.

> சிவலிங்கம் = பெருமாள் = செயலற்ற உள்ளபொருள். அதாவது, காண்பான் / அறிபவன்.

> சிவலிங்கம் = அருவுருவம் = உருவமாகவும் கொள்ளலாம். அருவமாகவும் கொள்ளலாம்.

> பெருமாள் = உருவமாக மட்டுமே கொள்ளமுடியும். 

முழு அருவ வழிபாட்டின் விளைவு பாலைவன மதங்களெனில் (காட்டுமிராண்டித்தனம் & பைத்தியக்காரத்தனம்), முழு உருவ வழிபாட்டின் விளைவு... 

பெருமாளுக்கு வெந்நீர் குளியல் & கம்பளி உடை, மடக் மடக் என்று குடிப்பதற்கு நரசிம்மருக்கு பானகம், அம்மனுக்கு மாதவிடாய்... 

பூஜா, அபிஷேகா, அலங்காரா, அர்ச்சனா, ஆராதனா, ஹோமா, தர்ப்பணா...

நாசமா போச்சு!! 🤬😡

எல்லாம் சில காலம். 
இதுவும் கடந்துபோகும். 
இறுதியில் வாய்மையே வெல்லும்.

oOOo

திரு அகத்திய மாமுனிவர் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, March 6, 2023

திருக்குறள் #28 (நீத்தார் பெருமை): நிறைமொழி மாந்தர் பெருமை...



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

-- திருக்குறள் #28 (நீத்தார் பெருமை)

🔸 நிறைமொழி மாந்தர் - மனமழிந்தவர் / தன்னையுணர்ந்தவர். இவர்களால் மட்டுமே உள்ளபொருளை பற்றி சரியாக எடுத்துக்கூறமுடியும்.

உள்ளபொருள் - முழுபொருள் - நிறைபொருள். இது பற்றிய மொழி நிறைமொழி.

சில நிறைமொழி மாந்தர்:

🙏🏽 பகவான் இரமண மாமுனிவர்
🙏🏽 திருவள்ளுவர்
🙏🏽 ஒளவையார்
🙏🏽 கபிலதேவர்
🙏🏽 நம்பியாண்டார் நம்பி

🔸 மறைமொழி - நீரிலிருந்தும் நீரையுணராத மீனுக்கு நீரைப் பற்றி எப்படி நேரடியாக எடுத்துக்கூறமுடியும்? மறைமுகமாக குறிப்பால்தான் உணர்த்தமுடியும்.

மறைமொழி - உள்ளபொருளை மறைமுகமாக குறிப்பால் உணர்த்தும் மொழி.

மேற்கண்ட நிறைமொழி மாந்தரிடமிருந்து வெளிப்பட்ட சில மறைமொழிகள்:

🌷 தன்மையின் உண்மையை தான் ஆய, தன்மை அறும்
🌷 தூஉய்மை என்பது அவாவின்மை
🌷 [சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாத] ... என்னை யறிவித்து எனக்கருள் செய்து
🌷 [விநாயகனே வெவ்வினையை வேரறுக்க] ... தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து
🌷 [என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்து] ... தன்னை நினையத் தருகின்றான்

இம்மறைமொழிகளைக் கொண்டு மேற்கண்ட மெய்யறிவாளர்களின் பெருமையை உணரலாம்.

மக்களிடம் (நிலத்தில்) பயன்பாட்டிலிருக்கும் மறைமொழிகளைக் கொண்டு, அவற்றை வெளியிட்ட நிறைமொழி மாந்தரின் பெருமைகளை உணரலாம். 🙏🏽

oOo

மறைமொழி என்றதும் ஆரியம் நினைவுக்கு வருமாறு கைங்கரியம் செய்துள்ளனர். இந்த சீர்கேடெல்லாம் கடந்த சில நூற்றாண்டுகளில் அரங்கேறியுள்ளது. குறிப்பாக, தமிழ் மன்னர்களின் ஆட்சி முடிவடைந்த பின்னர் நடந்துள்ளது. அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல; உண்மையான மறைமொழியுமாகும். 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, March 1, 2023

நியூட்டனுக்கு முன்னாடியே நமக்கு ஈர்ப்பு விசைய பத்தி தெரியறதுக்கு வாய்ப்பே இல்லீங்க!



காட்டுமிராண்டி குறிமதத்தான்களின் வருகையைத்தான் "1197ல் எல்லாம் முடிஞ்சு போச்சு"-ன்னு சொல்றாருங்க.

அப்புறம், இவரு சொல்றது சரியாப்படலீங்க!

17ம் நூற்றாண்டுலதான் நியூட்டன் ஐயா பொறக்குறாருங்க. மெக்காலே தொர 19ம் நூற்றாண்டுல பொறக்குறாருங்க. அப்புறம், காந்தி தாத்தாவும், நேரு மாமாவும் நமக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது 20ம் நூற்றாண்டுலைங்க. நியூட்டன் ஐயா கண்டுபுடிச்சி, மெக்காலே தொர கல்வித்திட்டம் போட்டு, மக்களாட்சி வந்து, உத்தமருங்க ஆட்சில உக்காந்து, சாதிய வெச்சு மேல வந்தவங்க புத்தகம் எழுதி, அத நாம தொறந்து, சாதிகள் இல்லையடி பாப்பான்னு படிச்சு, பொறவுதானுங்க ஈர்ப்பு விசைய பத்தி தெரிஞ்சுகிட்டோம். எப்புடி 12ம் நூற்றாண்டுலேயே நம்மாளுங்க ஈர்ப்பு விசைய பத்தி சண்ட போட்டிருக்க முடியும்?

எல்லாத்தும் மேல, நேர்மையா போர் செஞ்ச வாஸ்கோட காமா நம்மள கண்டுபுடிச்சதே 16ம் நூற்றாண்டோட தொடக்கத்துலைங்க. அதுவரைக்கும் நம்மள பத்தி நமக்கே தெரியாதுங்க. அப்புறம் எப்புடி ஈர்ப்பு விசைய பத்தி நாம தெரிஞ்சுகிட்டிருக்கமுடியுங்க?

இவரு சொல்றது தப்புங்க. பகுத்தறிவோட சிந்திக்கணுமுங்க!!

😂😂✊🏽👊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽😌