Tuesday, November 3, 2020

ஐப்பசி நிறைமதி நாள் & சோறு கண்ட இடம் சொர்க்கம்

(தஞ்சை பெருவுடையார் 🌺🙏🏽)

ஐப்பசி நிறைமதி நாள் - சிவத்திருத்தலங்கள் அன்னாபிஷேகம் காணும் நாள்! "நாம் காணும் இவ்வுலகம் உணவுமயம்" என்ற பேருண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்த நாள்!!

சிவ அடையாளத்தின் மீது கொட்டப்படும் (*) சோற்றிலிருக்கும் ஒவ்வொரு பருக்கையும் ஒர் உயிரை/உயிரினத்தைக் குறிக்கும். நுண்ணோக்கி வழியாக காண்பது போன்ற திறனைப் பெற்றிருந்தோமானால் நம் முன்னே கோடான கோடி உயிரிகள் ஒன்றையொன்று அண்டியும், சார்ந்தும், கொன்றும், தின்றும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஒர் உயிரியின் உடலோ கழிவோ இன்னோர் உயிரியின் உணவாக மாறுவதைக் காணலாம். நம் உடலுக்குள்ளும் இதே நிகழ்வு தான். மொத்தத்தில் எங்கும் உணவுமயம் தான்!

இந்த உண்மையை நமது முன்னோர்கள் ஒர் ஐப்பசி நிறைமதி நாளன்று உணர்ந்திருக்கிறார்கள். இவ்வுண்மையை உணர்வதால் அகந்தை அடங்குவதையும் / அழிவதையும் கண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் உணர்ந்ததை அன்னாபிஷேகம் என்ற திருவிழாவின் மூலம் பதிவு செய்து, வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். இத்திருவிழா தமிழகத்திற்கே உரியதாவதால், ஒரு தமிழ் பெரியோனே மேற்கண்ட உண்மையை முதன்முதலில் உணர்ந்திருக்கிறார் என்று உறுதியாக கருதலாம்.

(* - ஒரு 25+ ஆண்டுகளாகத்தான் உணவுப்பண்டங்களைக் கொண்டு உடையவருக்கு ஒப்பனை செய்கிறார்கள். அதற்கு முன்னர், உடையவர் மேல் சோற்றைக் கொட்டிவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். திருவிழாவின் பெயர் அன்னாபிஷேகம். அன்ன அலங்காரமன்று.)

oOOo

எல்லாம் சரி. 1600களில் தான் உலகக் கொல்லிகளான பரங்கியர்களால் நுண்ணோக்கி "கண்டுபிடிக்கப்பட்டது". எனில், எவ்வாறு "உலகம் உணவுமயம்" என்ற உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்களால் உணரமுடிந்தது? ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போன்று, 1600களில் வாழ்ந்த பரங்கியர்கள் நேரப்பயணத்தின் மூலம் முற்காலத்திற்கு சென்று காட்டுமிராண்டிகளாக இருந்த நமது முன்னோர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும். வேறு வழியே இல்லையல்லவா? 😁

oOOo

(கங்கை கொண்ட சோழபுர பெருவுடையார் 🌺🙏🏽)

சோறு எனில் வெந்த அரிசி என்பது இன்றைய பொதுவான பொருள். ஆனால், கம்பஞ்சோறு, பனஞ்சோறு (நுங்கு), கற்றாழைச் சோறு போன்ற பயன்பாடுகளும் உண்டு. இவற்றிலிருந்து சோறு எனில் "உள்ளிருப்பது. பக்குவமடைந்தது. நன்மை தரக்கூடியது." என்று பொருள் கொள்ளலாம்.

இந்த கணக்கில், மேற்கண்ட நெல்லின் உமி, பனங்காயின் ஓடு, கற்றாழையின் தோலுக்கு நம் உடல் சமமானால், உடலின் உள்ளிருக்கும் ஆன்மா (தன்மையுணர்வு) சோறுக்கு சமமாகிறது. எப்போது? பக்குவமடைந்த பிறகு!

பக்குவமடைதல் என்றால் என்ன? நாம் இவ்வுடலல்ல என்பதை உணர்ந்து, நாம் யாரென்று தெளிந்து, நாம் நாமாக நிலை பெறுவதே பக்குவமடைதல். இவ்வாறு பக்குவமடைந்த பிறகு கவலை, துன்பம், தொல்லை என எதுவும் நம்மை அண்டாது. எப்போதும் பேரமைதியில் திளைப்போம். இந்நிலையை சொர்க்கம் என்று வைத்துக்கொண்டால், பக்குவமடைந்த நம்மை சோறு என்று வைத்துக்கொண்டால், நம்மை நாம் உணர்ந்த இடம் - நம்மை நாம் கண்ட இடம் - சோறு கண்ட இடம் சொர்க்கமாகிவிடுகிறது!! ☺️

தீதீல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

-- திருத்தோணோக்கம், திருவாசகம்

மேலுள்ள பாடலில் வரும் "சோறு பற்றினவா" என்ற சொற்களை மணிவாசகப் பெருமான் 🌺🙏🏽 பயன்படுத்திய விதத்தை வைத்து, இவ்விடுகையின் "சோறு" பகுதியை எழுதியுள்ளேன்.

(சோறு என்ற சொல்லுக்கு வீடு பேறு, நிலைபேறு, விடுதலை (ஆரியத்தில், முக்தி/மோட்சம்) என்ற பொருள்களும் உண்டு)

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Saturday, October 17, 2020

திரு சதாசிவ பிரமேந்திரருக்கு வந்த "ரோசம்"!!

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திரு சதாசிவ பிரமேந்திரர் 🌺🙏🏽 என்ற பெருமானின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு.

பிறந்தமேனியாக திரிந்த இவர், ஒரு முறை, அறுவடை முடிந்த ஒரு வயலில், வரப்பில் தலை வைத்துப் படுத்திருந்தார். அப்போது அவ்வழியே வந்த சில குடியானவப் பெண்கள் இவரைப் பார்த்து, "சாமிக்கு சொகுசு தேவைப்படுது, பாரேன்!" என்று பேசிக்கொண்டு சென்றனர். இதை கேட்ட பிரமேந்திரர் வரப்பிலிருந்து தலையை இறக்கிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து திரும்ப வந்த அப்பெண்கள், இப்போது பிரமேந்திரர் இருந்த நிலையைப் பார்த்து, "இந்த சாமிக்கு இருக்கிற ரோசத்தப் பாரேன்!!" என்று சற்று வியந்தபடி சென்றனர்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்தால் எல்லாவற்றையும் துறந்து, மெய்யறிவில் நிலைபெற்ற ஒரு துறவியின் உள்ள நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற அறிவு அன்றைய சமூகத்தின் அடிமட்டம் வரை இருந்துள்ளது என்ற வியப்பூட்டும் உண்மை புரியும்!!

நாம் காண்பவை யாவும் திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவை. நாமே அந்த திரை. எனில், தன்னில் தோன்றும் காட்சிகளின் கருத்துகளால் திரை பாதிக்கப்படுமா? பாதிப்படையலாமா? இந்த உண்மையை உணர்ந்திருந்ததால் தான் "ரோசத்தப் பாரேன்" என்று அப்பெண்கள் குத்திக்காட்டியுள்ளனர்!! 👏🏽👍🏽

நாம் காணும் யாவும் ஒரு சமயத்தில் நம்மிடம் எண்ணங்களாக இருந்தன என்கிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽. அதாவது, உலகம் என்பது வெறும் எண்ணங்களின் உரு. மேலும் பகவான் கேட்கிறார், "இதை உணர்ந்து கொண்டால் அவற்றை விரும்புவோமா? அல்லது, வெறுப்போமா?" அதாவது, விரும்பவும் மாட்டோம். வெறுக்கவும் மாட்டோம். அப்படியே இருப்போம். "எல்லாம் வெறும் காட்சிகள் மட்டும் தான் என்றால் ஏன் எங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்ட ஒரு அன்பருக்கு பகவான் அளித்த பதில்: உங்கள் மீது இருக்கும் இரக்கத்தால்!!

oOOo

பிரமேந்திரர் வாழ்வில் வரும் இந்த நிகழ்வு ஒளவைப்பாட்டியின் 🌺🙏🏽 வாழ்வில் வரும் "சுட்ட பழமா? சுடாத பழமா?" என்ற நிகழ்வுக்கும், ஆதிசங்கரர் 🌺🙏🏽 வாழ்வில் வரும் இழிந்தவனின் (சண்டாளன்) சந்திப்பு நிகழ்வுக்கும் சமமாகும். எவ்வளவு மேம்பட்டவராயினும் எச்சரிக்கையாக இல்லாவிடில் மாயையால் வீழ்ந்துவிடுவர் என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இந்நிகழ்வுகளால் அப்பெருமான்கள் தாழ்ந்துவிட்டதாக பொருளன்று. மாறாக, இந்நிகழ்வுகள், இறுதி இலக்கான நிலைபேற்றை அடையும் முன்னர் ஒர் ஆன்மபயிற்சியாளன் சந்திக்கக்கூடிய ஆபத்துகளைப் பற்றி எச்சரித்து, அப்பெருமான்களும் போராடித்தான் இறுதி இலக்கை அடைந்தனர் என்பதை உணர்த்தி, பயிற்சியாளனை ஊக்குவிக்கும் வழிகாட்டிகள்!

மேலும், இந்நிகழ்வுகள் நம் சமூகத்திலிருந்த கருத்துரிமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மற்ற மதங்களில் யாரேனும் இவ்வாறு பதிவு செய்ய முற்பட்டிருந்தால்... உடலுறுப்புகளையோ, உயிரையோ இழந்திருப்பர்! 😏

"நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!!" என்று முழங்கிய ஒரே இனம் உலகில் நம் தமிழினமாகத் தானிருக்கும்!! 💪🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, October 13, 2020

கடவுளைக் காண்பதென்பது சங்கு, சக்கிரம், கதை போன்ற ஆயதங்களைத் தாங்கிய உருவத்தைக் காண்பதா? -- பகவான் திரு ரமணர்

பின்வரும் கேள்விகளும் கருத்துகளும் பகவான் திரு ரமணரிடமிருந்து 🌺🙏🏽 10/03/1968 அன்று வெளிப்பட்டவை:

💥 மெய்யறிவு பெறுதல் (ஞானமடைதல்) என்றால் என்ன?

💥 சங்கு, சக்கிரம், கதை போன்ற ஆயுதங்களைத் தாங்கிய 4 கைகளுடன் கூடிய உருவமாக கடவுளைக் காண்பதா?

💥 அப்படியே கடவுள் அவ்வடிவில் தோன்றினாலும் காண்பவனின் அறியாமை எவ்வாறு அழியும்?

💥 ஒரு கோடி பகலவன்களின் ஒளிப் பொருந்தி (கோடி சூரியப் பிரகாசம்) கடவுள் தோன்றினாலும் அது அவரை நேரடியாக காண்பதாகுமா (பிரத்யட்சம்)?

💥 எதையும் காண்பதற்கு கண்களும் மனமும் வேண்டும். புலன்களின் மூலம் பெறப்படும் யாவையும் மறைமுக அறிவாகும். இதை பெறுபவனே (காண்பவனே) என்றுமிருக்கும் உள்ளபொருளாகும். அவனே பிரத்யட்சமாகும்.

oOOo

உண்மை இவ்வளவு எளிதானதாக இருக்க, பிரத்யட்சம் என்ற சொல்லை வைத்து எவ்வளவு தூரம் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்! ("கடவுள் பிரத்யட்சமாகக் காட்சி கொடுத்தார்") திருவுருவங்கள் உணர்த்தும் பேருண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் செக்கு மாடுகள் போல் அவ்வுருவங்களை சுற்றி வருமாறு ஆக்கப்பட்டிருக்கிறோம்!!

இங்கு பகவான் குறிப்பிடும் சங்கு, சக்கிரம், கதை முதலானவற்றை தாங்கிய திருவுருவம் பெருமாளினுடையது. இந்த உருவம் உணர்த்துவது என்ன?

🌷 பெருமாளின் மேல் கைகளிலுள்ள சக்கிரம் & சங்கு ஒளி & ஒலியைக் குறிக்கும். இவ்வுலகம் என்பது வெறும் ஒலிஒளி மட்டுமே. காணப்படும் உலகம் தான் அசைகின்றது (சக்கிரம் சுழல்கிறது). காண்பவன் (பெருமாள்) அசைவதில்லை. கூத்தப்பெருமானின் மேல்கைகளிலுள்ள உடுக்கை & நெருப்பு (ஒலி & ஒளி) ஆகியவற்றின் கண்ணாடி பிரதிபலிப்பாக சக்கிரமும் & சங்கும் அமையும்.

🌷 சிவபெருமானின் கையிலுள்ள முத்தலைச்சூலம் பெருமாளின் கையில் கதையாக மாறியிருக்கிறது. பல காலம் வடக்கிருந்து, சரியான சமயம் வரும் போது நம்முள்ளிருந்து ஒரு தெளிவு / ஆற்றல் வெளிப்படும். இது வெளிப்படும் போதே "நாமே உள்ளபொருள்" என்று உணர்ந்து கொள்வோம். இது வெளிப்பட்டவுடன் கனவு, நனவு & தூக்கம் ஆகிய மூன்று நிலைகளும் முடிவுக்கு வந்துவிடும். இதை உணர்த்தவே சூலத்திற்கு 3 தலைகளைக் கொடுத்தனர் நம் முன்னோர்கள். இதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக "தெளிவு வெளிப்பட்டவுடன் அறியாமை இருள் ஒரேடியாக விலகுகிறது" என்ற பொருளை உணர்த்தும் கதையை எடுத்துக்கொண்டனர் வைணவர்கள்.

🌷 கூத்தப்பெருமானின் திருவுருவத்தில் உள்ள திருவாசி (உயிரற்றவை), பெருமாளின் பின்புறம் குடை போன்ற அமைப்பில் படமெடுத்து நிற்கும் 5 தலை பாம்பாகியிருக்கிறது. உலகில் காணும் உயிரற்றவை யாவும் ஐம்பூதங்களால் ஆனவை என்பதால் 5 தலைகளும், இந்த ஐம்பூதங்களால் ஆனவை தான் (மண், பெண், பொன் போன்று) எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம் என்பதால் நச்சு உயிரியான பாம்பையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

(ஓவியத்தில் பாற்கடல் இருப்பின் பாற்கடல் உடலையும், பாம்புக்குடை ஐம்புலன்களையும் குறிக்கும். பாற்கடல் இல்லையெனில் பாம்புக்குடை மேற்சொன்னவாறு ஐம்பூதக் கலவையான உடலைக் குறிக்கும்.)

🌷 பெருமாளுக்கு கொடுக்கப்படும் பாம்பணையும், பாம்பு குடையும் வைணவர்களின் தாய்மதமான பௌத்தத்திலிருந்து வருகின்றன. பௌத்தத்தில் கெளதம புத்தரை 🌺🙏🏽 பாம்பணையில் அமர்ந்திருப்பது போன்றும், பாம்புக் குடையின் கீழ் நிற்பது போன்றும் சித்தரித்திருப்பார்கள்.

🌷 மொத்தத்தில் பெருமாளின் திருவுருவம் மெய்யறிவு பெற்று பரம்பொருளாய் சமைந்த ஒரு மெய்யறிவாளரைக் குறிக்கும்.

ஆனால், இப்படி புரிந்துகொள்ளாமல், இப்படியொருவர் வைகுண்டம் எனுமிடத்தில் இருப்பதாகவும், அவரை வேண்டி வடக்கிருப்போருக்கு காட்சித் தருவார் என்றும், "புண்ணியங்கள்" சேர்த்துக்கொண்டால், "கைங்கர்யங்கள்" செய்தால் இப்பிறவிக்குப் பின்னர் அங்கு போய் சேரலாம் என்றும் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்!!

(வைணவத்தை வைத்து இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இருப்பற்ற படைப்பு உயர்ந்தது என்றும் (பெருமாள் உருவத்தின் மேல்பாதி, நாமச்சின்னத்தின் வெளிகோடுகள்), என்றும் மாறாத அழியாத பரம்பொருள் தாழ்ந்தது என்றும் (பெருமாள் உருவத்தின் கீழ்பாதி, நாமச்சின்னத்தின் நடுகோடு) புரிந்துகொண்டு நமக்கு நாமே நாமம் போட்டுக்கொள்ளவேண்டும். 😁)

oOOo

பகவான் பேசியதின் ஆங்கில மூலம் (Talk #469 from Talks with Maharishi):

What is Realisation? Is it to see God with four hands, bearing conch, wheel, club, etc.? Even if God should appear in that form, how is the disciple's ignorance wiped out? The truth must be eternal realisation. The direct perception is ever-present Experience. God Himself is known as directly perceived. It does not mean that He appears before the devotee as said above. Unless the Realisation be eternal it cannot serve any useful purpose. Can the appearance with four hands be eternal realisation? It is phenomenal and illusory. There must be a seer. The seer alone is real and eternal.

Let God appear as the light of a million suns: Is it pratyaksha?

To see it, the eyes, the mind, etc. are necessary. It is indirect knowledge, whereas the seer is direct experience. The seer alone is pratyaksha. All other perceptions are only secondary knowledge. The present super-imposition of the body as I' is so deep-rooted, that the vision before the eyes is considered pratyaksha but not the seer himself. No one wants realisation because there is no one who is not realised. Can anyone say that he is not already realised or that he is apart from the Self? No. Evidently all are realised. What makes him unhappy is the desire to exercise extraordinary powers. He knows that he cannot do so. Therefore he wants God to appear before him, confer all His powers on the devotee, and keep Himself in the background. In short, God should abdicate His powers in favour of the man.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 26, 2020

மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம்!! 😠😡🤬

மெய்கண்ட சிவம் 🌺🙏🏽

சிவஞானபோதம் எனும் ஒப்பற்ற சாத்திர நூலைப் படைத்தவர். நம் சமயத்தின் புற சந்தான குரவர்களில் முதன்மையானவர். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திரு சுந்தரமூர்த்தி நாயனார் 🌺🙏🏽 தடுத்தாட்கொள்ளப்பட்ட திருத்தலமான திருவெண்ணெய்நல்லூரில் (திருஅருட்துறை) சமாதியடைந்தார் (மேலுள்ள படம் பெருமானின் சமாதியாகும்).

இப்பெருமான் பிறந்த காலத்தில் வேற்று இனத்தவர் நம் தமிழகத்தில் கோலோச்சத் தொடங்கிவிட்டனர். "அதெப்படி மிகச்சிறந்த சாத்திர நூலைப் படைத்த பெருமை ஒரு தமிழனுக்கு கிடைக்கலாம்?" என்று உயரிய எண்ணம் கொண்டு, அந்நூல் ஒரு ஆரிய நூலைத் தழுவி எழுதப்பட்டது என்று கதை கட்டிவிட்டு மெய்கண்ட பெருமானின் புகழுக்கு களங்கம் விளைவித்தனர். 😠😡🤬 அதன் பின், நம்மவர்கள் ஆராய்வுகள் வழியாக "சிவஞானபோதம் தான் மூல நூல்" என்ற உண்மையை நிலைநிறுத்த வேண்டியதாயிற்று.

நல்லவேளை, 63 நாயன்மார்களும் 🌺🙏🏽 அவ்வினம் வந்து சேரும் முன்னரே சிவபதம் அடைந்துவிட்டனர். வந்த இனம் நிலைபெற்று கோலோச்சும் முன்னரே சேக்கிழார் பெருமானும் 🌺🙏🏽 பெரியபுராணம் பாடிவிட்டார். இல்லையெனில், நாயன்மார்களுக்கும், பெரியபுராணத்திற்கும் கைங்கர்யம் நடந்திருக்கும்!

ஆனாலும், கைங்கர்யம் வேறு விதத்தில் நடந்தது. நாயன்மார்களின் வரலாற்றை அவர்களது மொழியில் எழுதும் போது புகழ் பெற்ற சில நாயன்மார்கள் அவர்களது முற்பிறவியில் அவ்வினத்தவராக அல்லது அவ்வினத் தொடர்பில் பிறந்தவர்களாக புனைந்துள்ளனர். அந்த கைங்கர்யங்கள் சொற்பொழிவுகள், கட்டுரைகள் என பல வழிகளில் தமிழகத்திற்குள் நுழைந்துவிட்டன. நாயன்மார்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புவோர் பெரியபுராணத்தை மட்டுமே படிக்கவேண்டும்.

பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽 நம்மவராகப் பிறந்து, அவரது புகழும் வெள்ளையர்களால் உலகெங்கும் பரவாமல் போயிருந்தால் அவருக்கும் மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம் நடந்திருக்கும்! 😏

இன்றும் பகவானை ஒதுக்கும் "பாரம்பரிய" சிந்தனை கொண்டோர் அவ்வினத்தில் உள்ளனர். காரணம் உள்ளபொருள் (பரம்பொருள்), மெய்யறிவு (ஞானம்), விடுதலை (முக்தி / மோட்சம்) என எல்லாவற்றைப் பற்றிய உண்மைகளையும் பகவான் வெளிவிட்டுவிட்டார். பகவானே இதைப் பற்றி பாடியிருக்கிறார்:

வெளிவிட்டேன் உன் செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா!!

இதற்கும், சமயவியலில் உள்ள பொருள்கள் முழுவதும் நம்முடையதே. இவர்கள் எதையும் அவர்களது பிறப்பிடத்திலிருந்து கொண்டுவரவில்லை. இங்கு வந்துதான் நம்மிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்; பண்பட்டார்கள். கற்றதை அவர்களது பூமிக்கும் எடுத்துச் சென்றார்கள்.

🔸 நாம் எவ்வளவு தூரம் பண்பட்டிருந்தோம் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு:

மேல்தட்டு முதல் அடித்தட்டு வரை நம் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் அனைவரும் அறிந்திருந்த ஒரு சொல் தான் சிவம். "சிவம் என்றால் என்ன?", "சிவமாயிருத்தல் எவ்வாறு?" ஆகிய கேள்விகளுக்கு பதில்கள் அறிந்திருந்ததால் தான், "சித்த நேரம் சிவனேன்னு கிடக்க வேண்டியதுதானே" என்று நம் பெரியவர்களால் திட்டமுடிந்தது! திட்டுவதில் கூட சமயவியலை நுழைத்த இனம் உலகில் நம்முடைய இனமாகத்தான் இருக்கும்!! 😊

🔸 நமது மொழி எவ்வளவு தூரம் சமயவியலை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு:

திட்டு என்ற சொல்லை சற்று பார்ப்போம்.

பொதுவாக, திட்டு எனில் சமதளத்திலிருந்து சற்று உயர்ந்த சிறு பகுதி. திட்டுத்திட்டாக எனில் ஆங்காங்கே உயர்ந்து கிடக்கும் பகுதிகள்.

சமதளத்தை திட்டுகள் இல்லாத பகுதி, ஏற்றஇறக்கங்கள் இல்லாத பகுதி, வேறுபாடுகள் இல்லாத பகுதி, சீரான பகுதி என்றும் விளக்கலாம்.

சமதளம் - சீரான பகுதி
திட்டு - சீரற்ற பகுதி

நமது உள்ளநிலை சீராக இருப்பின் சிவநிலை. திட்டும்போது சீரற்று போவதால் சிவநிலையின் எதிர் நிலையான சீவநிலை.

"என்னை திட்ட வைக்காதே" எனில் "என்னை சிவநிலையில் இருந்து இறங்க/மாற வைக்காதே" என்று பொருள்!! 💪🏽😍😎

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, September 25, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #71 - ஐயர், அந்தணன், பிராமணன், சதுர்வேதியன் & வேள்வி - சிறு விளக்கம்

மால்ஊன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
கால்ஊன்றி ஆளக் கருணையாய்க் - கோல்ஊன்றித்
தந்த விருத்த சதுர்வே தியன்ஆக
வந்தமலை அண்ணா மலை

-- அண்ணாமலை வெண்பா - #71

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

திருவெண்ணெய்நல்லூரில் நடக்கவிருந்த திரு சுந்தரமூர்த்தி நாயனாரின் 🌺🙏🏽 முதல் திருமணத்தை தடுத்தி நிறுத்தி அவரை எம்பெருமான் ஆட்கொண்ட வரலாற்றைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர்.

🔸 திருவெண்ணெய்நல்லூர் (திருஅருட்துறை) - மூலவர் ஆட்கொண்டநாதர் 🌺🙏🏽. இதன் கீழ் சமாதியாகியிருக்கும் பெருமான் தான் நாயனாரைத் தடுத்தாட்கொண்டதாக தொன்நம்பிக்கை.

இவ்வூரில் தான் சிவஞானபோதம் எனும் ஒப்பற்ற சாத்திர நூலைப் படைத்த மெய்கண்ட சிவம் 🌺🙏🏽 சமாதி அடைந்துள்ளார்.

🔸 சதுர்வேதியன் - நான்கு மறைநூல்களையும் கற்றவர். எனில், நான்கு உயர்ந்த சொற்றொடர்களின் உட்பொருளை அறிந்தவர் (1. உணர்வே உள்ளபொருள், 2. அது நீயே, 3, நானே உள்ளபொருள், 4. இந்த உயிரே உள்ளபொருள்)

இதை வாய்ப்பாகக் கருதி பெரும்பாலும் தவறாகவே பொருள் கொள்ளப்படும் மேலும் சில சொற்களையும் பார்ப்போம்:

🔹 ஐயர் - கற்றறிந்தவர், பெரியவர்.

🔹 அந்தணன் - எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காதவர் / இழைக்காதவர்

🔹 பிராமணன் - பிரம்மம் எனில் பரம்பொருள் / உள்ளபொருள். பிராமணன் எனில் உள்ளபொருளாய் உள்ளவர். உள்ளபொருளை அறிந்தவர்.

🔹 வேள்வி - உடல் என்னும் குண்டத்தில் எரியும் நெருப்பான தன்மையுணர்வில், மனதில் தோன்றும் எண்ணங்கள் என்னும் குச்சிகளை (சுல்லிகளை) போட்டுக்கொண்டிருப்பதே வேள்வி. வேள்வியின் விளைவால் தோன்றும் புகையென்பது மெய்யறிவாளரிடமிருந்து வெளிப்படும் நல்லுரைகள் (பகவான் திரு ரமணரிடமிருந்து 🌺🙏🏽 வெளிப்பட்ட "நான் யார்?" போன்று). வேள்விப்புகை காற்றை சுத்தப்படுத்துவது போல் மெய்யறிவாளரின் நல்லுரைகள் கேட்போரின் மனதை சுத்தப்படுத்தும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, September 22, 2020

காரைக்கால் அம்மையார் எனும் இரத்தினம்!! 🌺🙏🏽

சிவபெருமான் உணர்ச்சிவசப்பட்டாராம்!!!

"மாமனார், மாமியார் இல்லாமல் வாழ்க்கை நிறைவு பெறாது" என்றாராம் உமையன்னை!! (ஏன் நாத்தனார், ஓரகத்திப் பற்றியெல்லாம் கேட்கவில்லையா? வாழ்க்கை இன்னும் சுவையாக இருக்குமே!)

"மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" என்று மது புட்டிகளில் அச்சிட்டிருப்பது போல், "புகையிலை புற்றுநோயை உருவாக்கும்" என்று வெண்சுருட்டு பெட்டிகளில் அச்சிட்டிருப்பது போல், "புருடாக்கள், படிப்பவரின் மூளைக்கும், நம் சமயத்திற்கும் கேடு" என்று புருடாக்களின் கீழ் அச்சிடவேண்டும் என்று சட்டம் வரவேண்டும்!

மனதை கொள்ளை கொள்ளும் ம.செ.வின் ஓவியத்தை ஒரு பக்கம் கொடுத்து விட்டு, இன்னொரு பக்கம் இரண்டாம்தர இதழ்களுக்கும், மட்டமான மெகாத் தொடர்களுக்கும் உரையாடல் எழுதிக் கொண்டிருப்பவரை வைத்து தயாரித்த புருடாவைக் கொடுத்திருக்கிறார்கள்!

oOOo

நம் திருத்தலங்களில் உள்ள நாயன்மார்கள் கூடத்தில் பேயாரை (காரைக்கால் அம்மையாரை) 🌺🙏🏽 மட்டும் அமரவைத்துப் போற்றியிருப்பார்கள் நம் முன்னோர்கள். இதற்கான காரணங்கள்:

🌷 63 நாயன்மார்களில் மூத்தவர்
🌷 செயற்கரிய செயல்களைச் செய்தவர்
🌷 "தமிழ் இசையின் தாய்" என்று போற்றப்படுபவர். நட்டபாடை, இந்தளம் ஆகிய பண்களை தமிழுக்கு தந்தவர்.
🌷 வெகு பின்னாளில் தோன்றிய கீர்த்தனை அமைப்புகளுக்கு முன்னோடி
🌷 வெண்பா, அந்தாதி, இரட்டைமணிமாலை, கட்டளைக் கலித்துறை ஆகிய பாடல் அமைப்புகளை பத்திம இலக்கியத்தில் முதன்முதலில் பயன்படுத்தியவர். கட்டளைக் கலித்துறைப் பற்றி தொல்காப்பியத்தில் செய்தியில்லை. சங்க இலக்கியங்களிலும் பாடல்கள் இல்லை. ஆகையால், இவரே இவ்வமைப்பை முதன்முதலில் பயன்படுத்தியவராகிறார்.
🌷 பதிக முறையில் முதன் முதலில் பாடியவரும் இவரே. பதிகத்தின் இறுதியில் முத்திரை பதிக்கும் முறையையும் அறிமுகப்படுத்தியவர் இவரே. இவரது திருவாலங்காட்டுத் திருப்பதிகமே மூத்த பதிகமாகிறது.

(மூலம்: காரைக்கால் அம்மையார் பாடல்கள் ஓர் ஆய்வு - முனைவர் செ சுப்புலட்சுமி மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)

oOOo

திருக்கயிலாயம் - சைவர்களும், சமணர்களும், திபெத்திய பௌத்தர்களும் மிகப்புனிதமாக கருதும் திருத்தலங்களில் ஒன்று. எண்ணற்றோர் வடக்கிருந்த தலம். பலர் வீடுபேறு அடைந்த தலம். இருப்பினும், திருக்கயிலாயம் என்பது பொதுவாக ரிஷபதேவர் 🌺🙏🏽 என்ற மாமுனிவரின் சமாதியைக் குறிக்கும்.

பேயார் சந்தித்தது ரிஷபதேவரையா அல்லது வேறு மாமுனிவரையா என்பது தெரியாது. யாராக இருந்தாலும் அப்பெருமான் "திருக்கயிலாயக் காட்சி" நிலையிலேயே இருந்துள்ளார். எனவே தான் அவரை உமையன்னையுடன் வீற்றிருந்ததாகவே குறிப்பிடுகின்றனர்.

🌷 உலகினுள் நாமிருப்பதாக பொதுவாக அனைவரும் காணும் காட்சி - உலகக்காட்சி.

🌷 நம்முள் உலகமியங்கும் காட்சி - திருக்கயிலாயக் காட்சி. காண்பவரும் உண்டு (சிவம்). காணப்படுவதும் உண்டு (உமை). பேயார் சந்தித்த பெருமான் இந்நிலையிலேயே இருந்துள்ளார்.

இப்படிப்பட்ட மாமுனிவர்கள் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற மலைத்தொடரை தன் கால்களால் கடப்பது தவறு என்றெண்ணிய பேயார் தன் தலையாலும், கைகளாலும் கடந்துள்ளார்!! இன்றுவரை மலைப்பையும் வியப்பையும் தரும் அவரது செயற்கரிய இச்செயல் கண்டு பெருமகிழ்ச்சியடைந்த பெருமான், அவரை "அம்மையே" என்றழைத்து மரியாதை செய்துள்ளார். அவரது நோக்கத்தை உணர்ந்த அப்பெருமான், அவருக்கான மெய்யாசிரியன் தானல்ல என்பதை உணர்த்தி, அவருக்கு வழிகாட்டும் நல்லாசிரியர் திருவாலங்காட்டில் இருப்பதாகக் கூறியருளி, அங்கு அனுப்பி வைத்துள்ளார்.

பேயாரும் திருவாலங்காடு வந்து சேர்ந்து, தனது மெய்யாசிரியரைக் கண்டு வணங்கி, அவர் அறிவுறுத்திய உத்தியைக் கடைபிடித்து வீடுபேறு அடைந்துள்ளார். பேயாரின் சமாதியையும், அருகிலிருந்த இன்னொரு பெருமானின் சமாதியையும் சேர்த்து இரத்தின சபையை உருவாக்கியுள்ளார் அப்போது அப்பகுதியை ஆண்ட மன்னர்.

(பேயார் சந்தித்தது திருவாலங்காட்டு மூலவரின் கீழ் சமாதியாகி இருக்கும் ஆலங்காட்டு அப்பர் 🌺🙏🏽 பெருமானையா அல்லது வேறு பெருமானையா என்று தெரியவில்லை.)

வீடுபேறு அடைய பேயார் என்ன உத்தியைக் கையாண்டார் என்பதை இரத்தின சபாபதி என்னும் திருவுருவமாக வடித்து வைத்திருக்கின்றனர் நமது பெரியோர்கள். காளியன்னைக்கு எதிராக நடனமாடிக் கொண்டே, தனது இடதுகாலைத் தூக்கி, தனது இடது காதிலிருக்கும் காதணியைக் கழட்டுவது போல் அமைந்திருக்கும் பெருமானின் திருவடிவம்.

காளியன்னை என்பது நம் உடல், உலகம் என நம்மைத் தவிர மீதமனைத்துமாகும். பெருமான் தனது காலைத் தூக்கி தனது காதணியைக் கழட்டுவது என்பது நமது கவன ஆற்றலை நம் மீதே திருப்பி, "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னாரை நீக்குவதாகும். நடனமாடிக்கொண்டே கழட்டுவது என்பது நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே நமது பொய்யறிவை (இன்னார்) விட முயற்சிப்பதாகும்.

oOOo

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றிலை உந்தீபற
மார்க்கம் நேர் ஆர்க்கும் இது உந்தீபற

தன்னை உபாதி விட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்
தான் இரண்டற்றதால் உந்தீபற
தன்மய நிட்டை ஈது உந்தீபற

-- பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 (உபதேச உந்தியார்)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, September 19, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #70 - ஆத்தி, கடுக்கை, கொன்றை - சிறு விளக்கம்

ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்துஎழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்குஅவரைப் பொற்கொடியோடு எய்தி
மகிழுமலை அண்ணா மலை

-- அண்ணாமலை வெண்பா - #70

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 பொதுவான பொருள்:

ஆத்தி, கொன்றை போன்ற மலர்களாலும், நமசிவாய என்ற திருவைந்தெழுத்தாலும் அடியவர்களும், தகுதியுடைய ஏனையோரும் சிவப்பரம்பொருளை போற்றி வணங்குவர். அவ்வாறு போற்றி வணங்குவோரை, அவர் தம் இடத்திற்கே உமையன்னையுடன் சென்று காட்சியருளி மகிழ்வார் எம்பெருமான்.

🔸 உட்பொருள்:

🔹 ஆத்தி - இங்கு மலரைக் குறிக்கவில்லை. தொடர்பு (சம்பந்தம்) என்ற பொருளைக் குறிக்கிறது. "நான் இன்னார்" என்று நம்மை நம் உடம்புடன் தொடர்பு படுத்திக் கொள்வது.

🔹 கடுக்கை - கொன்றை மலரல்ல. சேட்டை. நமது செயல்கள். "நான் செய்கிறேன்" என்ற எண்ணம்.

🔹 ஐந்தெழுத்து - நமசிவாய.

உணர்த்தும் பொருள்: எதுவும் நானில்லை. எல்லாம் நீயே. எல்லாம் உன்னிடமிருந்து வெளிப்படுபவையே. எல்லாம் உனது வெளிப்பாடே.

இந்த வகையில் தொடர்ந்து சிந்திக்க, நமது ஆணவம் ஒழியும்.

🔹 பொற்கொடி - உமையன்னையைக் குறிக்கும். உமையன்னை என்பது நம்மைத் தவிர (நான் என்னும் தன்மையுணர்வைத் தவிர) மீதமனைத்தும் அடங்கும். ஏற்கனவே உமையன்னையோடு தான் இருக்கிறோம். இனி புதிதாக எப்படி "ஆங்கு பொற்கொடியோடு எய்த" முடியும்?

இப்போது, உலகினுள் நாமிருப்பதாக உணர்கிறோம். இது உலகக்காட்சி - பொய் காட்சி. திருக்கயிலாயக் காட்சியின் போது அனைத்தும் நம்முள்ளிருப்பதை உணர்வோம். நாமும் இருப்போம் (சிவம்). காட்சிகளும் தோன்றும் (உமை). இச்சமயத்தில் மகிழ்ச்சியும் தோன்றும் (மகிழும் மலை). யாருக்கு இந்த காட்சி கிடைக்கும்?

"நான் இன்னார்" (ஆத்தி), "நான் செய்கிறேன்" (கடுக்கை) போன்ற தவறான கண்ணோட்டங்களை விடுத்து, "எதுவும் நானில்லை. எல்லாம் நீயே." (திருவைந்தெழுத்து) என்று சிந்தித்து ஆணவத்தை ஒழிக்கும் மெய்யன்பர்களுக்கு!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, September 15, 2020

நிர்விகற்ப சமாதி - சிறு விளக்கம்

அண்ணாமலை வெண்பா பாடல் #68ல் வரும் திருக்கடவூர் தலவரலாறு உணர்த்தும் #நிர்விகற்ப #சமாதி (*) நிலையைப் பற்றி சிறிது எழுதியுள்ளேன். ஒரு ரமண அன்பருக்காக எழுதியது. சற்று மேம்படுத்தி இந்த இடுகையாக்கியுள்ளேன். சமயவியலில் ஈடுபாடு உள்ளவர்கள் எளிதில் பரிந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு விட்டலாச்சாரியா படம் போல் தோன்றும்! 😛

oOOo

நாமே உள்ளபொருள்!

ஆனால், பகவான் திரு ரமணர் போன்ற ஒப்பற்ற மெய்யறிவாளர்கள் 🌺🙏🏽 எத்தனை முறை விளக்கினாலும், எவ்வளவு எளிதாக விளக்கினாலும் பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை. நுண்ணறிவும், நல்ல முதிர்ச்சியும் கொண்ட ஒரு சில அன்பர்கள் மட்டுமே உடனே புரிந்துகொள்வர். மற்றவர்களுக்கு திருவருள் துணைபுரிகிறது.

தகுந்த சமயம் வரும் போது நம்முள் ஒர் ஆற்றல் திரண்டு வெளிப்படுகிறது (முதலில் திரண்டு, பின்னர் வெளிப்படும்). இந்த ஆற்றல் திரண்டு வெளிவருவதற்குள் நாம் நம்மை உணர்ந்துவிடுவோம். அது வெளிவந்தவுடன் நாம் காணும் யாவும் விலகிவிடும். காட்சிகள் விலகுவது, நாம் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழட்டப்படுவது போலிருக்கும். இப்போது எங்கும் இருள் மற்றும் பேரமைதி நிலவும். உலகக் காட்சிகளைக் காணும் போது "இருளைக் காண்கிறோம்", "அமைதியாக உணர்கிறோம்" என்ற உணர்வுகள் இருக்கும். ஆனால், இப்போது, எல்லாம் நமக்குள் இருப்பதை உணர்வோம். "காண்கிறோம்", "உணர்கிறோம்" என்பது போய் "இருக்கிறோம்" என்ற உணர்வுமாத்திரமாக இருப்போம் ("இருளாய் இருக்கிறோம்", "அமைதியாய் இருக்கிறோம்").

இத்தனையும் ஓரிரு நொடிகளில் நடந்துவிடும். இவை நடந்து கொண்டிருக்கையில் நம்முள் பின்வரும் வரிசையில் உணர்வுகள் தோன்றும்:

- முதலில், சிறு வியப்பு
- பின்னர், பெரும் மகிழ்ச்சி
- இறுதியில், பேரமைதி!!

நாம் இது நாள் வரை தேடிய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். பகவான் அருளிய பல அறிவுரைகளின் உட்பொருள் புரிந்துவிடும். இந்நிலையைத்தான் "நிர்விகற்ப சமாதி" என்று எனது இடுகைகளில் குறிப்பிடுகிறேன்.

நமது வினைத்தொகுதி தீர்ந்து போயிருந்தால் இப்படியே இருந்துவிடுவோம். இல்லையெனில், அன்னை மாயை மீண்டும் தனது வேலையைத் தொடங்குவார். இன்னதென்று புரியாத கொடுமையான உருவங்கள் தோன்றும். அச்சப்படாமல் இருந்தோமானால், அடுத்து காமத்தைப் பயன்படுத்துவார்.

எடுத்துக்காட்டு: தாங்கள் பகவானது தீவிர அன்பர் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், வேறொரு பெருமானது அறிவுரையைப் படித்துக்கொண்டிருக்கும் போது மேற்கண்ட நிலையை அடைந்துவிடுகிறீர். தங்களை வெளிக்கொணர அன்னை இப்படியொரு எண்ணத்தை தோற்றுவிப்பார்: இந்நிலையை பகவானது அறிவுரையால் அல்லவா அடைந்திருக்க வேண்டும்? வேறொருவரால் அல்லவா அடைந்திருக்கிறோம்! இது பகவானது புகழுக்கு இழுக்கல்லவா?

இப்போது, தாங்களும் சிரித்துக்கொண்டே (சிரிப்பதற்கு உடல் இல்லை. சிரிப்பு என்ற உணர்வுடன்.) அன்னையுடன் உடன்பட்டு வெளிவருவீர். (சிரிப்பதற்கு காரணம் - சிறு பிள்ளைத்தனமான அன்னையின் நோக்கத்தை (லீலையை) தாங்கள் புரிந்துகொண்டதால்)

வெளிவந்த பின்.... உலகத்திற்குள் நாமிருப்போம்!! பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்.

இந்த துய்ப்பின் மூலம்:

- நாம் யாரென்று உணர்ந்து கொண்டோம்
- மனம், மாயை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டோம்
- இதுவரை புரியாமலிருந்த எத்தனையோ செய்திகள் புரிந்துவிடும். இனி எழும் கேள்விகளுக்கும் விடை காணமுடியும்.

மேற்கொண்டு பயணிக்க, சகஜ நிலையை அடைய, இவை பெரும் உதவியாக இருக்கும். திருவருளும் பகவானது அறிவுரைகள் வழியாக துணைபுரியும்.

oOOo

இனி, புகழ்பெற்ற சில உருவகங்களையும், உருவகக்கதைகளையும் மேற்கண்ட துய்ப்பை வைத்துப் பார்ப்போம்.

🌷 திருக்கடவூர் தலவரலாறு - நம்முள்ளிருந்து ஆற்றல் வெளிப்பட்டதை சிவஅடையாளத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டதாகவும், இதன் விளைவாக மரணபயம் (எமபயம்) நீங்குவதை எமனை உதைத்ததாகவும் உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

🌷 சிங்கப்பெருமாள் திருவிறக்கம் - திருக்கடவூர் தலவரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டக் கதை. சிவஅடையாளத்தை தூணாகவும், சிவபெருமானை சிங்கப்பெருமாளாகவும் மாற்றியிருப்பர். அங்கு "மரணபயம் நீங்கியது" என்பதை இங்கு "ஆணவம் நீங்கியது" (இரண்யகசிபுவின் இறப்பு) என்று மாற்றியிருப்பர்.

🌷 முருகப்பெருமான் பிறப்பு - நம்முள் திரண்ட ஆற்றலே கந்தன் (திரண்டவன்) எனப்படும். இந்த ஆற்றல் திரளும்போதுதான் நம்மை நாம் உணர்கிறோம். எனவேதான் இவர் சுவாமிநாதன், சிவகுருநாதன், தந்தைக்கு மந்திரம் சொன்னவர் என்று போற்றப்படுகிறார். இவர் முழுவதும் வெளிவருவதற்குள்ளேயே இவரது பணி முடிந்துவிடுவதால் இவர் சிவக்குமாரன் - அன்னையின் தொடர்பில்லாமல் பிறந்தவர் - என்றழைக்கப்படுகிறார்.

🌷 ஆற்றல் வெளிப்பட்டு உலகக்காட்சி நீங்குவது என்பது ஆபரணங்கள் கழட்டப்படுவது போலிருக்கும். இதை வைத்தே "பெருமாள் அலங்காரப்பிரியர்" என்று அருளியிருக்கிறார் திரு சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽 (திருவரங்கப் பெருமாள்).

🌷 சமாதியை விட்டு நம்மை வெளிக்கொணர இன்னதென்று சொல்லமுடியாத கொடுமையான உருவங்களைத் தோற்றுவித்த மாயை தான் காளியன்னை, கொற்றவை (துர்கை - கோட்டையைக் காப்பவர்) எனப்படுகிறார். (அழிக்கவே முடியாத பரம்பொருளையும் எதிர்ப்பவர் என்பதால் தான் சோழர்கள் இவரை தமது காவல் தெய்வமாக, போர் தெய்வமாகக் கொண்டிருந்தனர்)

🌷 காளியன்னையிடம் தப்பித்த பின், காமத்தைக் கொடுத்து நம்மை கவிழ்த்த மாயையே சிவகாமி எனப்படுகிறார். வைணவத்தில் இவர் வெண்ணெய் திருடிய கண்ணனாகிறார்.

oOOo

உலகக் காட்சிகளைத் தோற்றுவிக்கும் அன்னைக்கு உலகையும் நடத்த முடியாதா? ஏன் சிவபரம்பொருளை வெளிக்கொணர முயற்சிக்கிறார்? இதனால் தான் சிவமே உயர்ந்தது எனப்படுகிறது. பெண்தெய்வ வழிபாடும், அதிலிருந்து தோன்றிய வைணவமும் அடிப்பட்டுப் போவது இங்கு தான்.

oOOo

இணைப்புப்படம்: பாதாள லிங்கம், அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை. இந்த சிவஅடையாளத்தின் பின்னே பகவான் சில காலம் அசைவற்று அமர்ந்திருந்தார். இதை திரு சேஷாத்திரி சுவாமிகள் 🌺🙏🏽 உணர்ந்து வெளியே சொன்னதால் பகவான் நமக்கு கிடைத்தார். இல்லையெனில், பகவானது உடல் பூச்சிகளுக்கு இரையாகியிருக்கும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

* - மோட்சம், சமாதி போன்ற ஆரியச் சொற்களுக்கு தமிழில் வீடுபேறு, நிலைபேறு என்ற அருமையான சொற்கள் உள்ளன. ஆனால், நிர்விகற்ப, சவிகற்ப, சகஜ சமாதிகளை நம் நிறைமொழியில் எவ்வாறு வழங்குவது என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து இவ்விடுகையின் கருத்துப்பகுதியில் பதிவிடவேண்டுகிறேன்.

உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் தாயாகிய சைவத்தை சமயமாகவும், உலகிலுள்ள மொழிகளின் தந்தையாகிய தமிழை மொழியாகவும் (வள்ளற்பெருமானின் 🌺🙏🏽 வாக்கு) கொண்ட நமக்கு நமது சொற்கள் தெரியவில்லை!! 😔 நம் இனத்தை நம் இனமே இன்று வரை ஆண்டிருந்தால், பராமரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

Saturday, September 12, 2020

உலகெங்கும் காணப்படும் நமது அடையாளங்கள்!!

"தமிழர் நாட்டுப்புற இயல் களஞ்சியம்" என்ற நூலில் பேரா. இ பாலசுந்தரம் அவர்கள் எழுதுகிறார்:



ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளின் வழிபடப்பட்ட பெண் தெய்வங்கள் தமிழர் வழிபட்ட பெண் தெய்வ உருவங்களையும் பண்புகளையும் கொண்டிருந்தமையையும் மானிடவியலாளர் விளக்கியுள்ளனர். மத்தியத்தரைக் கடற்பிரதேசங்களிற், குறிப்பாக ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில், வழிபடப்பட்ட பெண் தெய்வங்கள் தமிழரது நாக கன்னியர் வழிபாட்டை ஒத்துள்ளன எனக் கூறப்படுகின்றது. ரூசிய நாட்டில் உக்கிரேயின் பகுதியில் கி.மு. 4000-2000 இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த பல்வேறு பெண் தெய்வ உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியாவில் வீயன்னா நகரில் புதைபொருளாய்விற் கண்டெடுக்கப்பட்ட பெண் தெய்வ உருவங்கள் காளியம்மன், இலட்சுமி ஆகிய தெய்வங்களின் உருவங்களை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.

oOOo

உலகெங்கும் சென்று வந்தவர் நாம். உலகெங்கும் அறியப்பட்டிருந்த மொழி நம் நிறைமொழி. உலகெங்கும் கடைபிடிக்கப்பட்ட சமயநெறி நமது சமயநெறி. கடந்த 800 ஆண்டுகளாக வலுவான நிலையான தமிழரசுகள் தோன்றாமல் போனதால் எவ்வளவோ இழந்துவிட்டோம். இன்றும் சரியான தலைமை இல்லாததால், தேசிய ஒற்றுமை என்ற போர்வையில் மீதமிருப்பதையும் அழிக்கத்துடிக்கிறது ஒரு கூட்டம்! புளுத்தறிவு, சமூக அநீதி, மதச்சார்பின்மை போன்ற பட்டைநாமம், காதுகுத்துகள் மூலம் சமூக கட்டமைப்பை சீரழித்துவிட்டது இன்னொரு கூட்டம்!!

காலம் இப்படியே போய்விடாது. நல்லது நடக்கும். என்றும் வாய்மையே வெல்லும்.

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #69 - திருக்கயிலாயக் காட்சி - சிறு விளக்கம்

இமையவரும் பத்தரும்மா கேசுரரும் காணச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்குஅரிய
வானமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #69

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 இமையவரும் ... ஆனமலை

வானவரும், அன்பர்களும், மாமுனிவர்களும் காண, (சைவ) சமயத்தின் முதல் மெய்யாசிரியரான நந்தியம்பெருமான் (விடை) தாங்க, உமையன்னையோடு காட்சித் தருகிறாராம் சிவபெருமான். அதாவது, உலகக் காட்சியைப் புனைகிறார் ஆசிரியர்.

🔹 சிவம், அன்னை & விடை - உலகக்காட்சி

🔹 சிவம் & அன்னை - திருக்கயிலாயக் காட்சி. சில திருத்தலங்களில். "இன்னாருக்கு இறைவன் திருக்கயிலாயக் காட்சி கொடுத்த இடம்" என்று எழுதி, அம்மையப்பரை வரைந்திருப்பார்கள் / செதுக்கியிருப்பார்கள். அவ்விடங்களில், அந்த அருளாளர்கள் தாமே தாமாயிருக்க, படைப்பனைத்தும் தம்முள்ளிருக்க "இரு"ந்திருப்பார்கள்.

🔹 சிவம் - நிர்விகற்பசமாதி நிலை

வேடிக்கையாக 😊,

🔹 நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - உலகக் காட்சி

🔹 கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - சமாதி

🔹 இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் - திருக்கயிலாயக் காட்சி. அடிப்பவன் - விடை/மனம்.

🔸 வாக்குமனம் காயம் தமக்குஅரிய வானமலை

உள்ளபொருளுக்கு வாக்கு, மனம் & காயம் ஆகியவை கிடையாது என்று பாடுகிறார் ஆசிரியர்.

வானமலை - உயிர் மலை. வானம் (விசும்பு) என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தாலும் உயிர் என்ற பொருளிலேயே இங்கு பயன்படுத்தியுள்ளார். விசும்பிற்கு எல்லை கிடையாது. ஒரு பொருளைத் தொடுவதுபோல் விசும்பைத் தொடமுடியாது. அதை ஒளிச்சிதறல் கொண்டே காண/உணரமுடியும். இவ்வாறே உள்ளபொருளும். படைப்பை வைத்தே படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று உணரமுடியும்.

அந்த படைப்பும் எதைக் கொண்டு படைக்கப்பட்டது? (இந்த கேள்விக்கு பாலைவன மதங்கள் 'ஙே' என்று முழிக்கும்! 😁) விடை கூறுகிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽:

... நாமஉரு
சித்திரமும் பார்ப்பானும் சேர்படமும் ஆர்ஒளியும்
அத்தனையும் தானாம் அவன்!!

(ஆர்ஒளி - அறிவு ஒளி)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, September 10, 2020

தமிழரின் உறவுமுறை இரோகுவோயிஸ் முறையைச் சார்ந்ததாம்!! 😛

ஐசக் நியூட்டன் என்ற பரங்கி 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவரே புவியீர்ப்பு விசையைக் "கண்டுபிடித்தவர்" (!?). நாம் வாழும் புவியும், ஏனைய கோள்களும் பகலவனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதும், நம் புவி தன் மீதுள்ள பொருட்களை தன்னிடமே வைத்திருப்பதும் ஒரு ஈர்ப்பு விசையால் தான். இந்த ஈர்ப்பு விசை நியூட்டன் "கண்டுபிடித்த" ஈர்ப்பு விசையைச் சார்ந்ததே!! 😁 விண்ணிலுள்ள ஏனைய கோள்களும், விண்மீன் குடும்பங்களும் "இவரது" ஈர்ப்புவிசையைக் கொண்டே சுற்றி வருகின்றன!!! 😜

😂😂😂😂🤣

நம் இனம் உலகின் மூத்த இனமாகும். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும், மேற்கே தென் அமெரிக்கா வரையிலும் என்றோ ஆமைவழிப்பாதையில் திரைகடலோடிய இனம் நம் இனம். நிறைமொழியில் பேசும் இனம். உலக மதங்களின் தாயாகிய சைவத்தை சமயமாகக் கொண்ட இனம். அன்னை என்ற உறவு முறைக்கு நாம் வைத்த "அம்மா" என்ற சொல் தான் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மருவி வழங்கப்படுகின்றது. இவ்வளவு பெருமைகளைக் கொண்ட நம் இனத்தின் உறவுமுறை, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரோகுவோயிஸ் என்ற பரங்கி "ஆராய்ந்தறிந்த" உறவுமுறையைச் சார்ந்ததாம்!!

எப்படியிருக்கிறது விக்கிப்பீடியா-வில் கிடைக்கும் இந்த பிட் / ஊழியம்? யாருடையது யாரைச் சார்ந்தது?

ஒரு தலைமுறைக்கு முன்னாள் வரை இத்தகைய பிட்டுகளைத் தயாரிக்கும் ஊழியத்தைச் செய்தது பான்பராக் சட்டைகள். இன்று, மக்கள்தொகை பெருக்கத்தாலும், மெக்காலே கல்வியின் வளர்ச்சியாலும் பிட் தயாரிப்பு ஊழியத்தை பான்பராக் சட்டைகள் மட்டுமல்லாது பாவாடைகளும், கூவஞ்சட்டைகளும் செய்கின்றன.

ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை இந்த பிட் தயாரிப்பு ஊழியத்திற்கு பொரை வீசுவது தசமபாகம் பெறும் பாவாடை தொழிற்கூடங்களும், உலகக்கொல்லிகளான வெள்ளையர்களும் தான்.

பாரம்பரிய ஊடங்களை தன் கையில் வைத்திருக்கும் இந்த கூட்டம் இப்போது விக்கிப்பீடியா போன்ற இணைய நிறுவனங்களையும் முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன.

oOOo

கெப்ளர், நியூட்டன், எடிசன் என பெரும்பாலான பரங்கிகளும் திருட்டுப்பயல்கள் தாம். மற்றவருடைய, குறிப்பாக நம் முன்னோர்களின், கண்டுபிடிப்பை தமதாக்கிக் கொண்டவர்கள்.

வெள்ளையன் = உலகக் கொள்ளையன், நயவஞ்சகன், நச்சு உயிரி, திமிர் பிடித்தவன், ஆணவம் கொண்டவன். ஐம்பூதங்களையும் மாசுபடுத்தியவன். இவன் நுழைந்த துறை உருப்படாது. இவனது மொழி, மதம், கலாச்சாரம் என அனைத்தும் தூக்கி எறியப்பட வேண்டியவை. இவனது அறிவியல் அழிவியல் என்றழைக்கப்பட வேண்டும்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Wednesday, September 9, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #68 - திருக்கடவூர் தல வரலாறு - சிறு விளக்கம்

கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #68

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கதித்தமுனி ... வீரமலை

சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான திருக்கடவூர் தலவரலாற்றைப் பாடுகிறார் ஆசிரியர். அதாவது, திரு மார்க்கண்டேய மாமுனிவரைக் 🌺🙏🏽 கவர வந்த காலனை, இறைவன் தனது காலால் உதைத்த வரலாறு.

வீரட்டத்தலங்கள் - இத்தலங்களில் சமாதியடைந்திருக்கும் பெருமான்கள் கண்டுணர்ந்து தெரிவித்த பேருண்மைகள் / உத்திகள், ஆன்மிக உலகில் பெரும் தாக்கத்தை / மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவேதான் "வீரட்டானம்" என்ற சிறப்பு பெயரால் அழைக்கின்றனர்.

திருக்கடவூர் - மார்க்கண்டேய மாமுனிவரின் சமாதி திருத்தலம். இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளம்தான் மூலவர் அமுதுடல் கொண்ட அண்ணல் (அமிர்தகடேசுவரர்). இவர் மெய்யறிவு பெறும் போது இவருக்குள் நடந்தவைதான் திருக்கடவூர் தலவரலாறாகியிருக்கிறது. இவர் கண்டுணர்ந்து தெரிவித்தவை தான் திரு சிங்கப்பெருமாள் திருவிறக்கம் மற்றும் திரு முருகப்பெருமான் பிறப்புக் கதைகளுக்கு அடிப்படையாகும்.

நாம் காணும் யாவையும் நம்முள்ளிருந்து உதிப்பவை. வெறும் தோற்றமாத்திரம் தான். நாமே உள்ளபொருள். இதை நாம் உணரமுடிவதில்லை. பல காலம் வடக்கிருந்து பக்குவமடைந்த பின், ஒரு சமயம், நம்முள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நாம் காணும் காட்சிகளை நீக்கிவிடும். அது வெளிப்படும் போதே நாம் யாரென்று உணரத் தொடங்கிவிடுவோம். காட்சிகள் நீங்கிய பிறகு இன்னமும் தெளிவாக உணர்ந்துவிடுவோம். இந்நிகழ்வே மெய்யறிவு பெறுதல் எனப்படும். இதனால் ஏற்படும் உடனடி விளைவு: சாவைப் பற்றிய அச்சம் நீங்குதல்!

பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 தனது 16 வயதில், மதுரையிலுள்ள தனது சித்தப்பபாவின் வீட்டில் மெய்யறிவு பெற்றார். "இதன் பின்னர் என்ன நடந்தது?" என்று ஒரு அன்பர் பின்னொரு நாள் கேட்டபோது பகவான் கொடுத்த பதில்: அத்தோடு மரணபயம் என்னைவிட்டு விலகிற்று!!

நம்முள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு, காட்சிகளை நீக்கி, நாம் யாரென்று நமக்கு உணர்த்தி, சாவைப் பற்றிய அச்சத்தை போக்குவதைத்தான் "சிவலிங்கத்திலிருந்து பெருமான் வெளிப்பட்டு காலனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருளினார்" என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

காலனை உதைத்தல் = சாவைப் பற்றிய அச்சம் நீங்குதல் = மெய்யறிவு பெறுதல்!!

மரணபயம் மிக்கு உள அம் மக்கள் அரணாக
மரண பவம் இல்லா மகேசன் -- சரணமே
சார்வர்; தம் சார்வொடு தாம் சாவு உற்றார்; சாவெண்ணம்
சார்வரோ சாவாதவர் நித்தர்

-- உள்ளது நாற்பது

🔸சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச வாரமலை

இறைவன், தனது மெய்யாசிரியர் குகைநமச்சிவாயர் 🌺🙏🏽 வடிவில் வந்து, தன்னை அன்பாக ஆட்கொண்டதைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர்.

(பட்சம் - அன்பு. "ஒரு பக்கமாக" என்றும் பொருளுண்டு. எனில், "இறைவன் தன் மீது மட்டும் அதிக கருணைக் கொண்டதாகப்" பாடுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.)

வாரமலை - சரிவான மலை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, September 6, 2020

ஆடி மாதம் அம்மனுக்கான மாதமாகியதற்கான காரணங்கள்

ஆடி மாதத்தில், சிவபெருமானின் ஆற்றலைவிட, உமையன்னையின் ஆற்றல் சிறந்திருக்குமாம்!! 😂

மேலும், இம்மாதத்தில், பெருமான் அன்னைக்குள் அடங்கிவிடுவதாக தொன்நம்பிக்கையாம்!!! 🤣

மெக்காலே/பகுத்தறிவுக் கல்வி படுத்தும் பாடு இருக்கிறதே...

எல்லாத்துறைகளிலும் பணியாளர்களின் தரம் குறைந்து கொண்டே போகும் போது இத்துறை மட்டும் விதிவிலக்காகுமா?

oOOo

ஆடி மாதத்தில் பெண்தெய்வங்களைப் போற்றுவதற்கான காரணங்கள்:

🌷 மாதங்களின் வரிசையில் ஆடி மாதம் நான்காவதாகும். சோதிடத்தில் நான்காமிடம் அன்னை மற்றும் நிலம் & வீடு போன்ற அசையா சொத்துக்களைக் குறிக்கும் (இன்னும் பலவற்றையும் குறிக்கும்). நிலத்தைப் பெண்ணாக, பெண்தெய்வமாக கருதுவது மரபு. எனவே, இம்மாதத்தில் பெண்தெய்வங்களைப் போற்றியுள்ளனர்.

🌷 "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற பழமொழி இம்மாதத்திற்கும் உழவுக்கும் இருக்கும் தொடர்பைக் காட்டும். அக்காலத்தில், உழவுப் பணிகளைத் தொடங்கும் முன் ஊர் காவல்தெய்வங்களுக்கு, குறிப்பாக மாரியம்மன் போன்ற பெண்தெய்வங்களுக்கு, விழா எடுத்துவிட்டுப் பணிகளைத் தொடங்கியிருக்கலாம். (மாரியம்மன் - மாரி + அம்மன். மாரி = மழை. மாரியம்மன் = மழையம்மன்.)

🌷 தை மாதம் அறுவடை காலம். சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பணப்புழக்கம் இருக்கும் காலம். ஆடி மாதம் வறட்சிக்குப் பின் வரும். கையிருப்பு தீர்ந்து/குறைந்து போயிருக்கும் காலம். இதனால், மக்கள் மனதில் பயம், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். இந்த விளைவுகளைத் தடுக்கவும், இருக்கும் கையிருப்பைச் சுற்றி வர வைக்கவும் இம்மாதத்தை திருவிழா மாதமாக மாற்றியுள்ளனர்.

வயிறு பசித்துக்கொண்டிருக்கும் போது மெய்யறிவைப் பற்றி எடுத்துக்கூறமுடியாது. எனவேதான் அன்னையைப் போற்ற வைத்துள்ளனர் (சிவம் - உயிர், அன்னை - உடல்/பொருள்).

🌷 இம்மாதத்தில் கணவனும் மனைவியும் இணைந்தால் அடுத்து வரும் கோடை காலத்தில் மகப்பேறு அமைய வாய்ப்புள்ளது. இது எல்லோருக்கும் தொல்லையாக அமையும். அவர்களை இணையவிடாமல் தடுத்து, மனதை இறைவழிபாட்டின் பக்கம் திருப்பிவிடவும் இந்த திருவிழாக்களைப் பயன்படுத்துகின்றனர்.

oOOo

உள்ளபொருள் (பரம்பொருள் / மெய்பொருள்) என்பது ஒன்று தான். இதுவே அனைத்துமாகியிருக்கிறது. இறைநம்பிக்கை இவ்வாறு இருந்த வரை எந்த சச்சரவும் இருந்திருக்காது. பின்னர், பல படையெடுப்புகளால் நம்மவர்களின் தரம் குறையத் தொடங்கியது. பிரிவுகளின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது.

🌷 சிவம் என்பது திரைக்கு சமம். அன்னை என்பது அத்திரையில் தோன்றும் காட்சிகளுக்கு சமம்.

🌷 சிவம் என்பது நீருக்கு சமம். அன்னை என்பது அந்நீரில் தோன்றும் காட்சிகளுக்கு சமம்.

🌷 சிவம் - அசைவற்றது. அன்னை - அசைவது.

சிவத்தின் ஆற்றலாக அன்னையைக் காணவேண்டுமே தவிர "சிவத்தின் ஆற்றலைவிட அன்னையின் ஆற்றல் சிறந்திருக்கும்" என்பதெல்லாம் பொருந்தாது. இது போன்றே, சிவத்திற்குள் தான் அன்னையே அன்றி அன்னைக்குள் சிவம் என்பதும் பொருந்தாது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 5, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #67 - வினைப்பிறவி - சிறு விளக்கம்

அஞ்சு புலனும் அடக்கி அறிவுடையோர்
வஞ்ச வினைப்பிறவி மாயவே - நெஞ்சில்
அழுத்துமலை அன்பர் அனவரதம் போற்றி
வழுத்துமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #67

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸வினைப்பிறவி - நாம் செய்யும் வினைகளின் விளைவுகளைத் துய்க்கவே உடல்கள் நமக்கு அமைகின்றன.

நாமே உள்ளபொருள். நம்மைத் தவிர மற்றவை பிறபொருள். உடல் மாட்டப்பட்டவுடன் நமது உண்மையை மறந்துவிடுகிறோம். பிறபொருள் ஆகிறோம். பிறவாகிறோம். பிறவி எடுக்கிறோம்.

உடல் மாட்டப்பட்டாலும், மறைந்துபோனாலும் நாம் நாமாகத்தான் இருக்கிறோம். துய்க்க வேண்டியதையெல்லாம் துய்த்து முடித்தபிறகு, நமக்கேற்ற மெய்யாசிரியர் வந்து, மேற்சொன்ன நமதுண்மையை சுட்டிக்காட்டிய பின் உணர்கிறோம். பின்னர், நிலை பெறுகிறோம்.

(வேடிக்கையாக: பிற-ஆக இருந்த நாம் மீண்டும் நாம்-ஆக ஆகிறோம்! 😊)

நிலைபேற்றினை அடைந்த பின், உடலோ, அதன் மூலம் கிடைக்கும் துய்ப்புகளோ நம்மை பாதிக்காது. பகவான் திரு ரமணர் 🙏🏽🌺 இறுதியாக அருளிய அறிவுரைகளில் ஒன்று: பிறவிகள் வரும்; போகும். அதனாலென்ன?

🔸அனவரதம் - எப்பொழுதும் / எக்கணமும்
🔸வழுத்தும் - வாழ்த்தும்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, September 4, 2020

மேல்மலையனூர் திரு அங்காளம்மன் வரலாறு

சிறு வயதில், எனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனில், அருகிலுள்ள ஐயர் உணவகத்தில் இட்லி வாங்கி வரச் சொல்வார் எனது தந்தையார். அனுப்பும் போது, "சட்னியை தனியாகக் கட்டச் சொல். இல்லையெனில், தனி இலை வைத்து கட்டச் சொல்." என்று இரு முறையாவது சொல்லியனுப்புவார். உணவகத்தில், பொட்டலம் கட்டுபவர் எதையும் காது கொடுத்துக் கேட்கமாட்டார். 3 வகை சட்னியையும் ஒரே இலையில் வைத்துக் கட்டி விடுவார். வீடு திரும்புவதற்குள் சட்னிகள் சங்கமமாகியிருக்கும். பொட்டலத்தைப் பிரித்து கூடுதுறை வெளிப்பட்டதும் எனக்கு திட்டு விழும்! 😁

கீழே இணைக்கப்பட்டுள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் "தலவரலாற்றைப்" படித்ததும் மேற்சொன்ன "சட்னி கூடுதுறை" நினைவுக்கு வந்துவிட்டது. காரணம், இங்கும் குறைந்தபட்சம் 3 சட்னிகள் சங்கமமாகி இருக்கின்றன!! 😛

oOOo

"இது ஒரு மெய்யறிவாளரின் சமாதி" என்ற ஒரு தகவல் போதும் இத்திருத்தலத்தின் பெருமையைக் கூற. இந்த தகவலை மட்டுமே மதிக்கக்கூடிய சமூதாயத்தை உருவாக்கியிருக்க வேண்டும். மக்களை மாக்கள் ஆக்கியதால் உண்மைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. புருடா விட வேண்டியுள்ளது. புருடாவின் மேல் புருடா விட்டு தலவரலாறு என்பதே தலபுருடா என்றாகிவிட்டது!!

oOOo

🔸மேல்மலையனூரைச் சேர்ந்த ஆன்மதாகம் கொண்ட ஒருவர், திருவருணையில் வடக்கிருந்து மெய்யறிவு பெற்ற பின், வயதான காலத்தில் மீண்டும் மேல்மலையனூர் திரும்பி, சமாதியடைந்துள்ளார். அவரது சமாதியை அங்கிருந்த மீனவ சமூகத்தினர் பராமரித்து வணங்கி வந்துள்ளனர். பின்னாளில், அந்த சமாதித்தலம் பெரும் திருத்தலமாக உருவெடுத்துள்ளது.

🔸அம்முனிவர் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். ஒரு பெண்தெய்வச்சிலையை அடையாளமாக வைத்துள்ளனர் என்பதற்காக சமாதியில் இருப்பவர் பெண் என்று முடிவு செய்துவிடமுடியாது.

🔸கருவறையில் இருக்கும் புற்று, முனிவர் வடக்கிருக்கும் போதே அவரைச் சுற்றி வளர்ந்ததா அல்லது அவரை சமாதி வைத்த பின் வளர்ந்ததா என்று தெரியவில்லை.

🔸சமாதியைப் பராமரித்தவர்கள் மீனவர்கள். இவர்கள் "காண்பவனை விட காணப்படுவதே மேலானது" என்ற கொள்கை உடையவர்கள். எனவே தான், சமாதி அடையாளமாக திரு அங்காளம்மனை வைத்து பெண்தெய்வ வழிபாட்டுத் தலமாக்கியுள்ளனர். (அங்காளம்மன், பத்ரகாளியம்மன் மற்றும் ஆலிலைக் கண்ணன் எல்லோரும் ஒன்றுதான் - உயிரற்றதைக் குறிப்பவர்கள்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, September 3, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #66 - நீதி, தந்திரம், யந்திரம், மந்திரம் - சிறு விளக்கம்

ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணா மலை

-- அண்ணாமலை வெண்பா - #66

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸ஆதிமலை - திருவண்ணாமலையின் பழமையைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். புவிப்பந்தின் வயதில் மூன்றில் ஒரு பங்கு வயதுடையது. இம்மலையோடு ஒப்பிடுகையில் இமயமலை கை குழந்தையாகும்!!

🔸ஆதி அநாதிமலை - உள்ளபொருளைப் பற்றி பாடுகிறார். எல்லாம் தோன்றுவதற்கு முன்னும், எல்லாம் அழிந்த பின்னும் இருப்பது உள்ளபொருளாகிய இறைவன் மட்டுமே.

🔸அம்மை ஒரு பாதிமலை - அசைவற்றது இறைவன். அசைவது அன்னை. இரண்டும் சேர்ந்ததே உலகம். இது பற்றிய ஆராய்வுகள் காஞ்சியில் தொடங்கி, திருவருணையில் நிறைவு பெற்றிருக்கிறது. அசைவற்றதிற்கு வலது, அசைவதற்கு இடது என்று முடிவும் இங்கு எய்தப்பட்டிருக்கிறது. எனவே தான் "அன்னை இடப்பாகம் பெற்ற திருத்தலம்" என்று போற்றுகின்றனர்.

🔸ஓதிமறை பாடுமலை - எனில், இறைவன் ஆரிய நூல்களை ஓதிக் கொண்டிருக்கிறார் என்று பொருளல்ல!

"தன்மையின் உண்மையை தான் ஆய தன்மை அறும்" என்பது பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கண்டுணர்ந்து உலகுக்கு தெரிவித்த ஒரு தலைசிறந்த மெய்யறிவியல் உத்தி. இது போன்று பல மெய்யறிவாளர்கள் கண்டுணர்ந்து தெரிவித்த பேருண்மைகள் மற்றும் உத்திகளின் தொகுப்பே திருமறைகள். தோன்றும் ஒவ்வொரு மெய்யறிவாளரும் புதிதாக ஒன்றை உணர்ந்து சொல்வார். அல்லது, ஏற்கனவே இருப்பனவற்றிற்கு உரம் சேர்ப்பார். எனவே தான் "பாடும் மலை" என்று நிகழ்காலத்தில் பாடியுள்ளார் ஆசிரியர்.

🔸நீதிமலை - நீதி என்ற சொல்லுக்கு நெறி, முறை, மெய், நியதி என பல பொருள்கள் இருந்தாலும் இதன் அடிப்படை பொருள் கட்டுபடுத்துவதாகும். நிதி எனில் பொங்குவது, பெருகுவது, வெளிவருவது. குறிலுக்கு எதிரான பொருளை நெடில் தரவேண்டும். ஆகையால், நீதி என்பது அடக்குவது, கட்டுப்படுத்துவது, வெளிவராமல் இருப்பது என்று விரியும். எதை அடக்குவது...? மனதை அடக்குவது, கட்டுப்படுத்துவது, வெளிவராமல் தடுப்பது. அதாவது, பற்றற்றிருப்பது. பற்றற்ற மலை. பற்றற்ற இறைவன். இறைவன் பற்றற்றவர்.

🔸தந்த்ரமலை, யந்த்ரமலை & மந்த்ரமலை

🔹த்ர எனும் ஆரிய எழுத்துக்களின் பொருள் விடுவிப்பது.

🔹மந்த்ர எனில் மனதை தளைகளிலிருந்து, பற்றுகளிலிருந்து விடுவிப்பது. ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ திரும்ப திரும்ப "உருட்டிக்" கொண்டிருப்பதால் இது நடக்காது. அச்சொல்லின் / சொற்றொடரின் உட்பொருளை உணரவேண்டும். உணர்ந்ததை எக்கணமும் நினைவில் நிறுத்தவேண்டும். இப்பாடலில் வரும் "பஞ்சாக்கரம்" என்னும் திருவைந்தெழுத்தான "நமசிவாய" என்பது மிகச்சிறந்த மந்திரம் - பொருள் உணர்ந்து, அதன்படி நின்றால்!

🔹யந்த்ர எனில் உடலை விடுவிப்பது. இன்று இயந்திரம் எனில் நமது பணிச்சுமையைக் குறைப்பது என்று பொருள் கொண்டுவிட்டோம். ஆனால், இதன் உண்மையான பொருள், "உடல் எனும் தளையிலிருந்து நம்மை பிரித்துக்கொள்ள உதவுவது" என்பதாகும்.

🔹தந்த்ர எனில் மூச்சிலிருந்து / அசைவுகளிலிருந்து விடுவிப்பது. மூச்சு என்பது மனதின் தூல வடிவம் என்று அருளியிருக்கிறார் பகவான். மூச்சிலிருந்து விடுபடுவது என்பது மனதிலிருந்து விடுபடுவதாகும். அசைவுகளிலிருந்து விடுபடுவது என்பது அசைவற்ற நிலைக்கு செல்வதாகும். அசைவற்ற நிலை என்பது நிலைபேறு.

ஆக, மந்த்ர தந்த்ர யந்த்ர என்பவை நாம் மெய்யறிவில் நிலைபெற உதவும் கருவிகள் / உத்திகள்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, September 1, 2020

உமையன்னை ஒரு ஆடிப்பூரத்தன்று பருவமடைந்ததாக தொன்நம்பிக்கையாம்!!

"நம் சமயத்தை முதலில் யாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்?" என்ற கேள்வியெழுந்தால், "இப்படி புருடா விடுபவர்களிடமிருந்துதான்!" என்று பதில் வரும். உருவகப்படுத்துவதற்கு வேறு வழியே இல்லையா?

ஒரு பெண் பருவமடைந்துவிட்டாள் எனில் அவளது உடல் கருத்தரிக்கத் தயாராகிவிட்டது என்று பொருள். உமையன்னை நமது உடல், உலகம் என எல்லாவற்றையும் குறித்தாலும், இங்கு மண்ணைக் குறிக்கிறார். ஆடி மாதத்தில் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியிருக்கும். தென்மேற்குப் பருவமழையால் நீர் வளமும் சற்று உயர்ந்திருக்கும். அடுத்த பருவத்திற்கான உழவுப்பணிகளை தொடங்க ஏற்ற மாதம். அதாவது, ஆடி மாதத்தில், மண்ணானது (உமையன்னை) விதைகளைப் பயிர்செய்ய (கருவுற) ஏற்றதாகிறது!

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற பழமொழியின் மூலம், நம் பெரியவர்கள் அழகாகச் சொன்னதைத்தான் இவர்கள் "உமையன்னை பருவமடைந்தார்" என்று திரித்திருக்கிறார்கள்.

oOOo

அருகிலுள்ள கேரளத்தில் கொண்டாடப்படும் திருவோணமும் அடுத்தப் பருவத்தை கோலாகலத்துடன் வரவேற்கும் திருவிழா தான். வாமனர்-மகாபலி கதை மெய்யறிவு பெறுவது பற்றியதாக இருந்தாலும், கீழ் உலகத்திலிருந்து பேரரசர் மகாபலி வருகை தருவது என்பது அன்றைய கேரளப் பொருளாதாரத்தின் மறுதொடக்கத்தைக் குறிக்கும்.

தென்மேற்கு பருவமழையால் பெரும் இழப்புகளைக் கண்டு, "இந்த மழை ஓய்ந்தால் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்." என்றளவிற்கு மனம் வெறுத்துப் போயிருப்பர். ஆனால், மழை ஓய்ந்ததும், மீண்டும் ஆசைகளை வளர்த்துக்கொள்வர். நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பதும், வளர்ப்பதும் மனிதர்களின் நல்லாசைகள் தாம் என்பதால், ஆசைகள் முளைவிடுவதை "மகாபலி வருகை தருவதாக" சித்தரித்து, மக்களை ஊக்குவித்துள்ளனர்.

இந்த உருவகம் எப்படியிருக்கிறது? மேற்சொன்ன "பூப்பு" உருவகம் எப்படியிருக்கிறது?

நம் சமயத்தின் மீது சேற்றை வீசத் துடிக்கும் இந்து சமய, சமூக & பாரத எதிரிகளுக்கு நாமே சேற்றை தூக்கி கொடுத்தது போலிருக்கிறது!!

Monday, August 31, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #65 - பெருமானுக்கும் மேலான அன்னைத்தமிழ் & அவரது புலவர்கள்!!

பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்துஎழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #65

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

கடல்கொண்ட தென்மதுரையில் நடந்த முதல் தமிழ்சங்கத்தில் அன்னைத்தமிழை, தகுதியான புலவர்களோடு ஆராய்ந்த சிவபெருமானையும் 🌺🙏🏽, தனது மெய்யாசிரியரான திரு குகை நமச்சிவாயப் பெருமானையும் 🌺🙏🏽 போற்றுகிறார் ஆசிரியர்.

இங்கு சிவபெருமான் எனில் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர் என்று பொருள்.

அந்த மெய்யறிவாளர் எப்படி நம் நிறைமொழியை ஆராய்ந்தாராம்? தமிழ் சங்கத்திலே அங்கம் வகித்த தகுதியான புலவர்களைப் போன்று ஆராய்ந்தாராம்!! உலகின் வேறெந்த கலாச்சாரத்திலும் இப்படியொரு நடைமுறை இருந்திருக்குமா என்று தெரியவில்லை. புலவர்களை இறைவனுக்கும் மேலானவர்களாக சித்தரிக்கும் உரிமையை கொடுத்துள்ள இனம் எவ்வளவு பண்பட்டதாக இருந்திருக்கும்! அவ்வாறு மேலானவர்களாக சித்தரிக்கப்படும் புலவர்கள் எவ்வளவு "திரு" உடையவர்களாக இருந்திருப்பர்!! தனது மொழியை எல்லாவற்றிற்கும் மேலானதாக ஒரு இனம் கருதுகிறது என்றால் அந்த மொழி எவ்வளவு மேன்மையானதாக இருக்கும்!!!

நம் அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல. உண்மையான இறைமொழி. அவரை முறையாகக் கற்றால் அவரே நிலைபேற்றினை நமக்கு கொடுத்துவிடுவார்!

அந்நிய இனத்தின் ஊடுறுவல், இருள் மதங்களின் படையெடுப்பு (சமண, பௌத்த மற்றும் பௌத்தத்திலிருந்து தோன்றியவைகளும் சேர்த்து), தகுதியற்றவர்களின் கையில் ஆட்சி, அதிகாரம் & அனைத்திலும் முன்னுரிமை, பகுத்தறிவு என்னும் பெரும் தீநுண்மி ... இத்தனைக்குப் பிறகும் நமது மொழியும், அடையாளங்களும் இன்னமும் பெயரளவிலாவது இருக்கிறதென்றால் அது நம் முன்னோர் செய்த நல்வினைகளும், விட்டுச்சென்ற உறுதியான கட்டமைப்பும் தான் காரணம். 🙏🏽🙏🏽🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, August 30, 2020

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்...

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்:

🔸பசுவின் பின்புறம் சாணம் வெளிவரும்
🔸 இந்த சாணத்தை மக்க வைத்து நிலத்திற்கு உரமாக இட்டால் விளைச்சல் பெருகும்
🔸 விளைச்சல் பெருகினால் வருமானம் - செல்வம் - பெருகும்
🔸 செல்வம் என்பது மலர்மகள்
🔸 பின்னே சென்றால்: மலர்மகள் <- செல்வம் <- விளைச்சல் <- சாண உரம் <- பசுமாடு

எனவே, பசுமாட்டின் பின் பகுதி மலர்மகள் வசிக்குமிடம் என்றார்கள்!!

oOOo

"மலர்மகள் இப்பிறவியில் செல்வவளமும், பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்பதின் பொருள்:

முதலில், மலர்மகளின் தோற்றத்தைப் பார்ப்போம். பாற்கடலைக் கடையும் போது இறுதியாக வெளிவந்தவர் மலர்மகள் என்று படித்திருப்போம்.

🔸 பாற்கடல் - நமது உடல்
🔸 கடைதல் - கடும் வடக்கிருப்பு

வடக்கிருப்பின் தொடக்கத்தில் பல குப்பைகள் நம்முள்ளிருந்து வெளிவரும். சில புதிய ஆற்றல்கள் கூட நமக்கு கிடைக்கும். இவையனைத்தும் மூத்தவள் - மூத்தாயி - மூதேவி (ஆரியத்தில், ஜேஷ்டாதேவி) எனப்படும். இவற்றை ஒதுக்கி, மேலும் தொடர்ந்தால், இறுதியில் மெய்யறிவு கிடைக்கும். இம்மெய்யறிவே இளையவள் - சின்னாயி - நப்பின்னை (பின்னே வந்தவர் - நல்ல பின்னை) - மலர்மகள் (ஆரியத்தில், ஸ்ரீதேவி) - செல்வமகள் (ஆரியத்தில், லட்சுமி) எனப்படும்.

இந்த மெய்யறிவை விடாப்பிடியாக இறுகப் பற்றிக்கொண்டால் நிலைபேற்றில் முடியும். இடையில் படைப்பின் பல புதிர்கள் திறக்கப்படலாம். இவற்றைத்தான் "இப்பிறவியில் செல்வவளமும்" என்ற சொற்றொடர் குறிக்கிறது.

மெய்யறிவில் நிலைபெற்ற ஒருவர் பிறவிகளைப் பற்றி சிந்திக்கப்போவதில்லை. அவர் ஏற்கனவே விடுதலை அடைந்தவர் தான். இருந்தாலும், தற்போதைய பிறவி முடிந்த பின், இறுதித் தளையான உடலும் விலகுவதையே விடுதலை (ஆரியத்தில், மோட்சம்) என்றழைக்கின்றனர். இறப்பின் போது எல்லோருக்கும் தான் உடல் விலகுகிறது. மெய்யறிவில் நிலை பெறாதவர் அடுத்த பிறவியில் சிக்கிக் கொள்கிறார். நிலைபெற்றவர் விடுதலையடைகிறார். இதனால் தான் மெய்யறிவை (மலர்மகளை) "பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்று போற்றுகின்றனர்.

இறுதியாக, மெய்யறிவு என்றால் என்ன? நம்மைப் பற்றிய அறிவு. நாமே உள்ளபொருள் என்ற அறிவு. இதுவரை நாம் தேடியது நம்மையே என்ற அறிவு.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, August 29, 2020

கங்கை = வடக்கின் காவிரி, திரிவேணி சங்கமம் = உத்திரபிரதேசத்தின் கூடுதுறை!!

"பாரதத்தின் மான்செஸ்டர்", "பாரதத்தின் டெட்ராய்ட்" என்று அழைப்பதெல்லாம் எவ்வாறு அடிமைத்தனமாகுமோ அவ்வாறே "#தட்சிண #கங்கை", "#தமிழகத்தின் #திரிவேணி" என்று அழைப்பதுமாகும்.

💥 "உலகின் எந்த நதிக்கரையில் அதிக மாமுனிவா்கள் சமாதி கொண்டுள்ளனர்?" என்ற கேள்வியெழுந்தால் நமது #காவிரி அன்னையே முதலிடம் பெறுவார்! எண்ணற்ற மாமுனிவர்கள் அவரது பயண வழியில், அவரது கரைகளில் சமாதி கொண்டுள்ளனர். இந்த புனிதக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் கங்கையன்னை தான் "வடக்கின் காவிரி" என்றழைக்கப்படவேண்டும்.

💥 #பவானி (#திருநணா) கூடுதுறையில் திரு அளகேசப் பெருமான் (திரு #சங்கமேஸ்வரர்) 🌺🙏🏽 குடி கொண்டுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽 தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம். (#அளகேசர் எனும் சிவ அடையாளத்தின் கீழ் சமாதி கொண்டுள்ள மாமுனிவர் யாரென்று தெரியாவிட்டாலும், இத்திருத்தலம் ஒரு மாமுனிவரின் சமாதி என்பதில் எந்த ஐயமும் இல்லை) இது போன்று எந்த மாமுனிவரும் #பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் குடி கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எனவே, மீண்டும் புனிதக் கணக்கின் படி, திரிவேணி சங்கமம் தான் "உத்திரபிரதேசத்தின் கூடுதுறை" என்றழைக்கப்படவேண்டும்!

💥 கங்கையன்னை பனிப்பாறையிலிருந்து வருகிறார். காவிரியன்னையோ ஊற்றிலிருந்து வெளிவருகிறார். எப்போதுமே ஊற்று நீருக்கு தான் மதிப்பு அதிகம்!

oOOo

கங்கையன்னையை மட்டம் தட்டுவது எனது நோக்கமல்ல. "நமது அடையாளங்கள் யாருக்கும் எதற்கும் இரண்டாவதல்ல" என்று உரக்கச் சொல்வதே எனது நோக்கம். 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #64

கூனல் சிறுபிறையைக் கோள்அரவுக்கு அஞ்சாமல்
வான்அப்பு அணிசடைமேல் வைத்தமலை - ஞானச்
சரதமலை ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற
வரதமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #64

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கூனல் சிறுபிறையைக் ... வைத்தமலை

சிவபெருமானின் திருவுருவைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். பெருமான் என்பது நிலைபேற்றை அடைந்த ஒரு மெய்யறிவாளருக்கு சமம். எனில், அவரது திருவுருவத்தில் இருக்கும் பொருள்கள் மெய்யறிவாளரின் உள்ளநிலை மற்றும் அவரிடம் காணப்படும் பண்புகள், இயல்புகள் & தன்மைகளைக் குறிப்பவையாகும்.

🔸ஞானச் சரதமலை - மெய்யறிவில் உறுதியாய் உள்ள மலை அல்லது மெய்யறிவை உடலாகக் கொண்ட மலை

🔸ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற வரதமலை

ஆனந்த - ஆ+நந்த - எல்லையில்லா / முடிவற்ற.

ஆனந்த தாண்டவம் - எல்லையில்லா / மரணமில்லாப் பெருவாழ்வு - நிலைபேறு.

வடக்கிருந்து நிலைபேற்றினை அடைவதற்கு ஏற்ற இடம் திருவண்ணாமலை என்கிறார் ஆசிரியர்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Friday, August 28, 2020

"பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்" என்பதின் பொருள்

🐂 பசு - மெய்யறிவு பெறாதவர்கள். உலக வாழ்க்கையில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள்.

🌿 அகத்தி - அகம் + தீ - மெய்யறிவு. பல பிறவிகளாக, பன்நெடுங்காலமாக உடலையும், உலகையும் உண்மை என்று கருதிக் கொண்டிருப்பவர்களை மாற்றுவது எளிதல்ல. அவர்களுக்கு சிறிது சிறிதாக, ஆனால், தொடர்ந்து மெய்யறிவைப் பற்றி எடுத்துக்கூறவேண்டும். இதனால் தான், "தினம் ஒரு கட்டு வாங்கிக் குடுங்க" என்றார்கள். "ஒரு செமை" என்று சொல்லவில்லை.

🥭 பழம் - நாம் கேள்விப்படுவதை எல்லாம், நமக்கு தோன்றுவதையெல்லாம் மற்றவர்களிடம் தெரிவிக்கும் முன், அவற்றைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு, சோதித்துப் பார்த்துவிட்டு, துய்த்தும் பார்த்து விட்டு மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

"பசுவுக்கு அகத்திக்கீரை..." என்ற சொற்றொடரின் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல், அகத்திக்கீரை சாகுபடியை வளர்த்துவிட்டார்கள்! பல மாடுகளை, தினமும் அதிகாலையில், கீரை கொடுக்கப்படும் இடங்களில் வடக்கிருக்க வைத்துவிட்டார்கள்!! 😁

oOOo

Thursday, August 27, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #63 - அடி முடி காணா அண்ணாமலையார் - சிறு விளக்கம்

அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலம்எ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமலை கோன்அறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #63

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

மீண்டும் ஒரு முறை திருவண்ணாமலை தலவரலாற்றில் வரும் "அடி முடி காணா அண்ணாமலையார்" படலத்தைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். (அன்னம் - நான்முகன், கோலம் - பன்றி - பெருமாள்)

"நான்முகனாலும் மாயோனாலும் இறைவனைக் காணமுடியவில்லை" எனும் உவமையைக் கொண்டு 2 பொருள்களைப் பெறுவர்:

1. கல்வியாலும் (குறிப்பாக, மெக்காலே கல்வியால் 😊) செல்வத்தாலும் மெய்யறிவைப் பெறமுடியாது

2. புத்தியாலும் ஆணவத்தாலும் இறைவனை உணரமுடியாது

உவமையில் வரும் மேல் - கீழ் என்பதை வெளி - உள் என்று மாற்றிக்கொண்டால் இன்னொரு பொருளும் கிடைக்கும்.

பூமி என்பது மண். மண் என்பது நம் உடல். "பெருமாள் பூமிக்குள் சென்று தேடினார்" என்பது நாம் நமக்குள் இறைவனைத் தேடுவதற்கு சமம். நான்முகன், பெருமாள் சென்ற திசைக்கு எதிரில் சென்றிருப்பார். எனில், உடலுக்கு வெளிப்புறம் என்று பொருள். இது, நாம் உலகிற்குள் இறைவனைத் தேடுவதற்கு சமம். இருவரும் தோற்றார்கள். அதாவது, இறைவன் உடலினுள்ளும் இல்லை. வெளியேயும் இல்லை. பிறகு, எவ்வாறு இறைவனை அடைவது?

உவமையில் மீதமிருக்கும் கதாபாத்திரமான சிவபெருமான் வழிகாட்டுகிறார். தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு நெருப்புத் தூணாக நின்றிருப்பார். இறைவனை அடைய நாம் செய்யவேண்டியது தேடுவதல்ல. இருத்தல்!! நாமாக - தன்மையுணர்வாக - இருக்கவேண்டும். "தானாய் இருத்தலே தன்னையறிதலாம்" என்பது பகவான் திரு ரமணரின் 🌺🙏🏽 வாக்கு.

உவமை உணர்த்தும் மூன்றாவது பொருள்: இறைவன் உடலினுள்ளும் இல்லை. வெளியேயும் இல்லை. இறைநிலையை அடைய நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாமாக இருத்தலே!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Sunday, August 23, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #62 - பிட்டுக்கு மண் சுமந்த படலம், கூத்தப்பெருமான் - சிறு விளக்கம்

பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #62

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

சிவப்பரம்பொருள், பழமையான மதுரை மாநகரில் சொக்கநாதப் பெருமானாக பிட்டுக்கு மண் சுமந்த படலத்தையும், தில்லையில் கூத்தப்பெருமானாக திருநடனம் புரிவதையும் போற்றிப் பாடுகிறார் ஆசிரியர்.

🔸#பிட்டுக்கு #மண் #சுமந்த #படலம்

🔹பிட்டு - இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் அனைத்து துய்ப்புகள்

🔹சுமக்கும் மண் - நமது உடல். "மண்ணினாய விகாரமும் மண்ணே" என்பது கண்ணபிரானின் 🌺🙏🏽 வாக்கு. உடல் எப்படி உருவானது? உணவிலிருந்து. உணவு எங்கிருந்து கிடைத்தது? தாவரங்களிடமிருந்து (அசைவம் எனில் தாவரம் -> விலங்கு -> மனித உடல்). தாவரம் எங்கிருந்து உருவானது? மண்ணிலிருந்து. ஆக, உடல் = மண்.

மண்ணை (உடலை) சுமந்து என்ன பெறுகிறோம்? வாழ்க்கை எனும் ஒரு சொல்லில் அடங்கும் பலவிதமான துய்ப்புகள். இந்த துய்ப்புகள் எனும் பிட்டுக்காக மண்ணைச் சுமக்கிறோம். எப்போது "இனி, பிட்டு வேண்டாம்" என முடிவெடுத்து அசைவற்று நிற்கிறோமோ (தன்மையுணர்வில் நிலை பெறுகிறோமோ) அதன் பிறகு மண்ணைச் சுமக்க வேண்டியிருக்காது.

🔹பெருமானின் மீது பட்ட பிரம்படி அனைத்துயிர்களின் மீதும் படுவது - எல்லோருக்குள்ளும் இருப்பது ஓர் இறைவன் தான் என்பதைக் குறிக்கிறது. படைப்பு என்பது நீரில் தோன்றும் குமிழிகள் போன்றது. குமிழிகள் பலவாக இருந்தாலும், எல்லாம் நீர் தான்.

#பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 அருளுகிறார்: ... பொருட்களை, அவற்றின் உருவங்களையும், பெயர்களையும் கொண்டு வேறுபடுத்தி அறியலாம். ஆனால், மனிதர்களைப் பொறுத்தவரையில், எல்லோரும் தங்களை ஒரே பெயரில் தான் அறிகிறார்கள். அப்பெயர்... "நான்"! யாரை வேண்டுமானாலும் கேட்கலாம். ஒவ்வொருவரும் தன்னை "நான்" என்றே உணர்கிறார். சிவபெருமானேயானாலும் அவரும் தன்னை "நான்" என்றே உணர்கிறார். ... (பகவத் வசனாம்ருதம் - #582)

🔸#கூத்தப்பெருமான் திருநடனம் புரியும் தில்லை பொன்னம்பலம்

🔹பொன்னம்பலம் என்பது திருமூலர் 🌺🙏🏽 மற்றும் அவரது வழிச்சென்ற சிலரது 🌺🙏🏽 சமாதித் தொகுப்பாகும்.

🔹கூத்தப்பெருமான் என்பது நம்மைப் பற்றிய மெய்யறிவைக் கொடுக்கும் மெய்யாசிரியர், அவ்வறிவில் நிலைபெற உதவும் நல்ல துணைவன், நிலைபெற்ற பின் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் நல்வழிகாட்டி!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Friday, August 21, 2020

மூத்தோன் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! 🌺🙏🏽

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்தெனக் அருளி...

-- ஒளவைப் பாட்டி 🌺🙏🏽

இன்று #பிள்ளையார் #பிறந்தநாள்! 🌺🙏🏽 எனில், "இப்படியொரு இறையுருவத்தை உருவாக்கலாம்" என்ற எண்ணம் நம் சமயப் பெரியவர்களுக்குத் தோன்றிய நாள். அல்லது, அவர்கள் #கரிமுக உருவத்தை வெளியிட்ட நாள்.

#ஆனைமுகத்தானை பரம்பொருளாகவும் காணலாம்; சிவகுடும்பத்தில் ஒருவராகவும் காணலாம். சிவகுடும்பத்தில் ஒருவராகும் போது அவர் அறிவைக் குறிக்கிறார். அவரை பரம்பொருளாகக் காணும் போது...

🌷 அவரது யானை உருவம் உணர்த்துவது நமது நினைவுகளை! முதன் முதலில் எழும் "நான்" என்பதிலிருந்து அனைத்துமே நினைவுகள் தாம்; எண்ணங்கள் தாம். நினைவுகளின் குவியலே நாம். எல்லா நினைவுகளையும் நீக்கிவிட்டால் இங்கு எதுவும் மிஞ்சாது. யாரும் இருக்க மாட்டார்கள்.

எனவே, நினைவாற்றலுக்குப் பெயர் பெற்ற யானை உருவத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.

🌷 #முறக்கன்னன் தனது வலது தந்தத்தை உடைத்து தனது வலது கையில் வைத்திருக்கும் அமைப்பு உணர்த்துவது:

🔹 நம் வாழ்க்கை நம் கையில்
🔹 தீதும் நன்றும் பிறர் தர வாரா

சென்ற பிறவிகளில் நாம் ஆடியக் கூத்துகளின் விளைவுகளில் ஒரு பகுதி இப்பிறவியாக அமைந்திருக்கிறது. மீதமிருப்பவையும், இப்பிறவியில் நாம் சேர்ப்பவையும் இனி வரும் பிறவிகளாக அமையும்.

சில ஓவியங்களில் #வேழமுகத்தான் மகாபாரதம் எழுதுவது போல் வரைந்திருப்பர். அந்த மகாபாரதம் குறிப்பது நமது வாழ்க்கையை! "வியாச பெருமான் சொல்ல சொல்ல #ஐங்கரன் எழுதினார்" என்று படித்திருப்போம். இங்கு வியாசர் பெருமாளுக்கு சமம். பெருமாள் மாயைக்கு சமம். மாயை என்பது உடல், உலகக் காட்சிகள். இந்தக் காட்சிகளின் பொய்த்தன்மையை உணராமல் மேலும் மேலும் வினைகளைச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். நமது மகாபாரதத்தை எழுதிக் கொண்டேயிருக்கிறோம்!!

🌷 #வாரணனின் மேல் இடது கையிலிருக்கும் பாசக்கயிறு உணர்த்துவது: நமது பற்றுகளுக்கு நாமே காரணம். நமது பற்றுகளை நாமே சேர்த்துக் கொள்கிறோம். உலக வாழ்க்கை எனும் மாயையிடம் நாமே சிக்கிக் கொள்கிறோம்.

🌷 #ஒற்றைக்கொம்பனின் மேல் வலது கையிலிருக்கும் மழு / அங்குசம் உணர்த்துவது:

🔹 மழு எனில்: நமது பற்றுகளை நாமே அறுத்தெறிய முடியும்.
🔹 அங்குசம் எனில்: நமது ஆணவத்தை நாமே போக்கிக் கொள்ள முடியும்.

🌷 #மூத்தோனின் இடது கையிலிருக்கும் சிவலிங்கம் உணர்த்துவது: தன்மையுணர்வில் நிலைபெறுவதும் (சிவமாவதும்) நம்மிடம்தான் உள்ளது.

எல்லாம் நம்மிடமிருந்தும், வாழ்க்கையை வளர்க்கவே - பற்றுகளைச் சேர்த்து கொள்ளவே - நாம் விரும்புகிறோம். எனவேதான் #நால்வாயனின் வலது கையில் உடைந்த தந்தமும், இடது கையில் சிவலிங்கத்தையும் கொடுத்திருக்கின்றனர் நம் சமயப் பெரியோர்கள்.

🌷 #தும்பிக்கையான் அறிவைக் குறித்தால் அவரது ஊர்தியான எலி (சுண்டெலி, பெருச்சாளி) குறிப்பது அறியாமையை (மாயை). அறியாமை என்பது இருள். எனவேதான், இருட்டில் வாழும் கருமை நிற எலியை ஊர்தியாகக் கொடுத்துள்ளனர். நமக்கு அன்னியமாக ஒன்று இருப்பதாகக் கருதுவதே அறியாமை. இது ஆசைக்கு இடங்கொடுக்கும். ஓர் ஆசை பல ஆசைகளாக வெகு குறுகிய காலத்தில் பெருகிவிடும். எலிகளும் வெகு குறுகிய காலத்தில் எண்ணிக்கையில் பெருகிவிடும். #பூழ்க்கைமுகனுக்குப் படைக்கப்பட்ட கொழுக்கட்டையை (அல்லது இனிப்பை) எலி உண்ணுவது போல் வரைந்திருப்பார்கள். இதன் பொருள்: நம்மிடமுள்ள மெய்யறிவை அறியாமை அழித்துவிடும்.

🌷 மொத்தத்தில் #ஆகூர்தியானின் உருவம் உணர்த்துவது:

🔹நம் வாழ்க்கை நம் கையில்
🔹மாயையிடம் சிக்கிக் கொள்வதும் நாமே
🔹அதனிடமிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதும் நாமே
🔹நிலைபேறும் நம்மிடமே உள்ளது
🔹உடல், உலகக் காட்சிகளைக் கண்டு அச்சப் படத்தேவையில்லை. அவை தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் நாம் நாமே.

oOOo

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா

-- ஒளவைப் பாட்டி

oOOo

இவ்விடுகையில் நான் பயன்படுத்தியுள்ள சில பிள்ளையார் பெயர்களின் பொருள்:

🔹முறக்கன்னன் - முறம் போன்ற காதுகளைக் கொண்டவர்
🔹வாரணன் - யானை உருவத்தான்
🔹நால்வாயன் - தொங்கும் வாயை உடையவர்
🔹பூழ்க்கைமுகன் - யானைமுகன் அல்லது தும்பிக்கை முகன்
🔹ஆகூர்தியான் - பெருச்சாளியை ஊர்தியாகக் கொண்டவர்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

(இணைப்புப் படங்கள்: இந்தோனேசியாவிலுள்ள புரோமோ மலையின் மீதமைந்திருக்கும் பழமையான பிள்ளையார். பின்புறம் இருப்பது ஓர் எரிமலை.)

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #61

முக்குணம் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்கும்உணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குஉலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #61

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸முக்குணம் ... பாதமலை

மனதின் மூன்று குணங்களையும், உடலின் ஐம்புலன்களையும் அடக்கி, தகுந்த பக்குவ நிலையை அடைந்தோர் உள்ளத்தே புகுந்து உலாவும் இறைவன்.

ஏற்கனவே வீட்டிலிருப்பவர் மீண்டும் வீட்டிற்குள் எப்படி புக முடியும்? தன்மையுணர்வு என்பது புதிதாகவா நமக்குள் வருகிறது? நம்மை நாம் உணராத பொழுது என்று ஏதேனும் உள்ளதா? நம்மை நாம் எப்பொழுதுமே உணர்ந்திருந்தாலும், "இது தான் நாம்" என்று அறிவதில்லை. இந்த அறிவு தான் நமக்குள் புக வேண்டியது. இதுவே மெய்யறிவு. இவ்வறிவு கிடைப்பதையே - உட்புகுதலையே - "உள்ளத்தே புக்கு" என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது இறைவன் எங்கே உலாவ முடியும்? உலா எனில் மகிழ்ச்சியுடன் சுற்றிவருதல். இங்கு முனைப்பு அற்றிருத்தலைக் குறிக்கும். மெய்யறிவில் நிலைபெற்றவுடன் தானாகவே முனைப்பு என்பது போய்விடும். பின்னர் வாழ்க்கை என்பது... உலா வருதல் தான்!! மீதமிருக்கும் ஊழ்வினைப்படி வருவதை துய்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

🔸தாய்வயிற்றில் ... பிறவாதமலை

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது தாய் மட்டும் எங்கிருக்க முடியும்? அவரும் இறைவனுக்குள் தான்! பார் எனும் தமிழ் சொல் குறிக்கும் உலகமும் (ஆரியச் சொல்லான "லோக"த்திலிருந்து வந்தது) இறைவனுக்குள் தான். தனக்குள் இருப்பவற்றில தான் எப்படி வந்து பிறக்க முடியும்? எனவே, இறைவன் பிறப்பற்றவாராகிறார். பிறப்பில்லா ஒன்று இறக்கவும் முடியாது. எனவே, இறைவன் இறப்புமற்றவராகிறார். சொற்களை சற்று மாற்றிக்கொண்டால், இறைவன் தொடக்கமற்றவர் முடிவுமற்றவர் என்றாகும். பிறப்பற்ற, இறப்பற்ற, தொடக்கமற்ற & முடிவற்ற பொருள் எப்படியிருக்கும்? என்றும் இருக்கும்! இதனால்தான் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 இறைவனை  [என்றும்] உள்ளபொருள் என்றழைத்தார்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Wednesday, August 19, 2020

முளைப்பாரி / முளைப்பாலிகைச் சடங்கின் ஆன்மிக அடிப்படை

முளைப்பாரியைப் பற்றி ஏதேச்சையாக இணையத்தில் தேடிய போது கிடைத்த கட்டுரைகள் அனைத்தும் அதை உழவுடன் மட்டுமே தொடர்பு படுத்தி, ஆன்மிக அடிப்படை சற்றும் இல்லாததுபோல் காட்டியிருந்தன. சில கட்டுரைகள் "பகுத்தறிவு" கண்ணாடி வழியாக ஆராய்ந்திருந்தன! 😁

ஆன்மிகம் தான் முளைப்பாரியின் அடிப்படை! பெண்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையது. பிறப்பறுக்கும் மெய்யறிவுக்கு எதிரானது. உலக வாழ்க்கையைப் போற்றுவது. அவ்வாழ்க்கைக்கு அடிப்படையான ஆசைகளை ஊக்குவிப்பது.

🔸#முளைப்பாரி - மண்ணில் முளைத்திருக்கும் நாற்றுகள். பாரி - மண். பாரியாள் - மனைவி. மண், தன் மீதும் விழும் மற்றும் தனக்குள் இடப்படும் விதைகள் வளர இடங்கொடுக்கும். மனைவி, கணவர் தனக்குள் இடும் விந்து வளர இடம் கொடுப்பவர்.

🔸#முளைப்பாலிகை - மண்ணும் அதை தாங்கியிருக்கும் பாத்திரமும் (மண் குடம், மூங்கில் / பனையோலைக் கூடை) பாலிகையாகும். முளைப்பாரி என்பதை விட முளைப்பாலிகை என்பதே சரி.

🔹பாத்திரம் - நம் உடல்
🔹வளமான மண் - நல்ல மனது
🔹இடப்படும் நல்விதைகள் - நல்ல ஆசைகள்

🔸முளைப்பாலிகையை பூசையறையில் இருட்டானப் பகுதியில் பகலவனின் ஒளி தீண்டாத வகையில் வைத்து வளர்ப்பர்.

ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வோம். அது, பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 உடலுடன் இருந்த காலம். அச்சமயம், திருவருணையில், பெரும் கனவுடன் ஒருவர் வாழ்ந்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அவரது கனவு: தனது மகன் மெக்காலே கல்வியை நன்கு படித்து, மொழிகளில் பரத்தையான ஆங்கிலத்தில் நன்கு பேசி, பாரதக்கொல்லிகளான வெள்ளையர்களின் தாயகமான இங்கிலாந்து சென்று, பொய் பேசவும் பணம் கறக்கவும் கற்று (அதாவது, பாரிஸ்டர் பட்டம் பெற்று), தாயகம் திரும்பி, பெரும் பொருள் ஈட்டி, வாழ்வின் அனைத்து வசதிகளையும் பெற்று, நிம்மதியாக வாழவேண்டும் என்பது.

இவர் தனது மகனை பகவானின் அருகில் செல்லவிடுவாரா? அப்படியே செல்ல நேர்ந்தாலும் பகவானின் அறிவுரைகளைப் படிக்கவோ சிந்திக்கவோ விடுவாரா?

இதைத்தான் "பகலவனின் ஒளி படாமல் இருட்டில் வைத்து முளைப்பாலிகையை வளர்க்க வேண்டும்" என்பது குறிக்கிறது.

🔹பகலவன் - பகவான் போன்ற மெய்யறிவாளர்கள்

🔹பகலவனின் ஒளி - நமக்குள் உதிக்கும் மெய்யறிவு அல்லது பகவான் போன்றோரின் அறிவுரைகள்.

🔹இருட்டு - மெய்யறிவைப் பற்றிய அறிவின்மை. அறியாமை.

🔸9 விதைகள் இடப்பட்ட முளைப்பாலிகை - 9 விதைகள் நமது உடலிலுள்ள 9 துளைகளைக் குறிக்கும். எனில், முளைப்பாலிகை என்பது நமது உடலைக் குறிக்கும். செழித்து வளரும் பயிர்கள் என்பது நம் உடலைக் கொண்டு இவ்வுலகில் நாம் விளைவிக்கும் நல்விளைவுகள். பாலிகையைத் தாங்கும் பெண் என்பவர் உலகை இயக்கும் இறையாற்றல் - காளியன்னை!

🔸21 விதைகள் இடப்பட்ட முளைப்பாலிகை - நமது உடலிலுள்ள 5 உணரும் பொறிகளையும், அவற்றின் மூலம் கிடைக்கும் 5 உணர்வுகளையும், 5 தொழிற்கருவிகளையும், உடலினுள் இயங்கும் 5 காற்றுகளையும் மற்றும் மனதையும் குறிக்கும். மொத்தத்தில், நமது உடலைக் குறிக்கும். மேலேச் சொன்ன மீதம் யாவும் இங்கும் பொருந்தும்.

🔸சில ஊர்களில், அம்மன் கோயிலுக்கு அருகில், பகலவனின் ஒளி புகாவண்ணம் ஒரு கீற்றுக்குடிசையை நன்கு கட்டி, அதில் ஊராரின் முளைப்பாலிகைகளை வைத்து பராமரிப்பர். இதற்கென்று நல்ல பக்குவமுள்ள ஒரு பெண்ணை நியமிப்பர். அவர் அம்மனின் தீவிர பத்திமையராக இருப்பார். மிகவும் சுத்தமானவராக இருப்பார். அக்குடிசையில் தங்கியிருக்கும் வரை தலைவாராமல், தலைக்கு எண்ணெய் தடவாமல், எந்த ஒப்பனையும் செய்துகொள்ளாமல் இருப்பார்.

பல துளைகளைக் கொண்ட கீற்றுக்கொட்டகை என்பது சற்று பெரிய 9 துளைகளையும், எண்ணற்ற வியர்வைத் துளைகளையும் கொண்ட நமது உடலுக்கு சமம். கொட்டகையினுள் வைத்துப் பராமரிக்கப்படும் முளைப்பாலிகைகள் என்பவை நமக்குள் இருக்கும் எண்ணற்ற எண்ணக்குவியல்களுக்கு சமம். பராமரிக்கும் பெண் என்பவர் காளியன்னைக்கு சமம். (ஒப்பனையற்ற அவரது கோலத்தைப் பற்றி பிறகு பார்ப்போம்)

🔸9 அல்லது 10ஆம் நாள், முளைப்பாலிகைகளை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்று, அம்மனின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு, கோயில் வளாகத்திலேயே பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்துவிட்டு, படைத்ததை எல்லோருக்கும் பிரித்து வழங்கி விட்டு, முளைப்பாலிகைகளை நீர் நிலைகளில் விட்டுவிடுவர்.

🔹நமது பண்டைய மன்னர்கள், தங்களை தங்களது குல தெய்வத்தின் அடியவர்களாக, பணியாளர்களாக கருதிக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். (முற்காலச் சோழர்கள் - உய்யக்கொண்டான் திரு உச்சிநாதர் / கற்பகநாதர் 🌺🙏🏽, பிற்காலச் சோழர்கள் - திரு கூத்தப்பெருமான் 🌺🙏🏽, பாண்டியர்கள் - திரு சொக்கநாதப் பெருமான் 🌺🙏🏽, சேதுபதிகள் - இராமேச்சுரம் திரு இராமநாதப் பெருமான் 🌺🙏🏽). இவ்வாறே இவர்களும் (பாலிகைகளை சுமந்து வந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்) தங்களை அம்மனின் அடியவர்களாக கருதிக் கொண்டு, வாழும் வாழ்க்கையை அம்மனின் திருப்பணியாக கருதி வாழவேண்டும் என்பதே வளர்த்த முளைப்பாலிகைகளை அம்மனின் பாதங்களில் வைப்பதின் பொருள்.

- முளைப்பாலிகைகள் - நமது உடல்

- அம்மனின் பாதத்தில் வைப்பது - நம்மை அம்மனின் பணியாளனாகக் கருதுவது

🔹பிறந்துவிட்டோம். வளர்ந்துவிட்டோம். ஆசைகளை, குறிக்கோள்களை வளர்த்துக்கொண்டோம். உழைக்கிறோம். போராடுகிறோம். பொருளோ, அறிவோ, பாடமோ சம்பாதிக்கிறோம். சம்பாதித்ததை (பொங்கியதை) தன்னோடு மட்டுமே வைத்துக் கொள்ளாமல் ஏனையோருக்கும் பிரித்துக் கொடுப்பதே பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்குவது.

🔹எவ்வளவு வளமுடனும் நலமுடனும் வாழ்ந்தாலும் ஒரு நாள் இறக்கவேண்டிவரும். எவ்வளவு பாடுபட்டு சம்பாதித்திருந்தாலும், சம்பாதித்தவற்றை எவ்வளவு போற்றிப் பாராட்டிப் பாதுகாத்திருந்தாலும் அனைத்தும் ஒரு நாள் நம்மைவிட்டு விலகிவிடும். இவையே முளைப்பாலிகைகளை நீர்நிலைகளில் விடுவதின் பொருள்.

இதை உணர்ந்து கொண்டால், உணர்ந்ததை என்றும் நினைவில் கொண்டால் சுயநலம், அகந்தை, பேராசை போன்றவற்றை ஒதுக்கி, முறையுடன் நீதியுடன் அடக்கத்துடன் எளிமையாக அமைதியாக வாழ்வோம்.

(இன்று ஆறுகள் இல்லாததால் கிணறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் விடுகின்றனர். ஆறுகளில் விடுவதே சரி. ஆற்றுநீர் காலவெள்ளத்திற்கு சமம். காலவெள்ளத்தில் தோன்றும் குமிழ்கள் போன்றது படைப்பு. பெருமானின் திருப்பெயர்களில் ஒன்று காலபைரவர்.)

oOOo

மீண்டும் ஒரு முறை சுருக்கமாக...

முளைப்பாலிகை திருவிழா உணர்த்துவது:

🔹உலகை பரிபாலிப்பது காளியன்னை
🔹 உலகில் காணப்படுபவை யாவும் ஏதாவது ஒரு உடலால் விளைந்தவையே
🔹 விளைவு செயலிலிருந்தும், செயல் எண்ணத்திலிருந்தும் தோன்றுகிறது. ஆகையால், நமக்குள் நல்லெண்ணங்களை விதைக்க வேண்டும்.
🔹 வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, அகந்தையற்று தன்னலமற்று பொறுப்புடன் வாழ்ந்து, கிடைப்பதை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்.

oOOo

வடக்கிருந்து சமாதி நிலையடையும் போது உலகத்தோற்றம் மறைந்து கருப்பாக இருக்கும். நம்மிடம் இன்னமும் பழவினைகள் மீதமிருப்பின், அவற்றைக் கொண்டு நம்மை சமாதி நிலையிலிருந்து வெளியே தள்ள இறையாற்றல் முயற்சிக்கும். இன்னதென்று உணரமுடியாத கொடுமையான உருவங்களைத் தோற்றுவித்து அச்சமூட்ட முயற்சிக்கும். பெண்தெய்வ வழிபாட்டை உருவாக்கிய பெரியவர்கள் இத்தோடு புறமுகமாகிவிட்டார்கள் என்பது என் கருத்து. இதனால் தான், கருப்பு நிறத்தையும், அதில் கொடுமையான உருவங்களையும் தோற்றுவித்த இறையாற்றலை முடிவாகக் கருதி, கருப்பாயி (கருப்பு + ஆயி - காளியன்னை) என்று பெயரிட்டு, பெண்தெய்வ வழிபாட்டை உருவாக்கியுள்ளனர்.

இன்னும் சற்று தாக்குப் பிடித்திருந்தால், முயற்சித்திருந்தால் அடுத்த நிலைக்கு சென்றிருப்பர். காட்சிகளை விட காண்பவனே உயர்ந்தவன். மேற்சொன்ன காட்சிகளைக் கண்ட தாமே என்றுமுள்ள மெய்ப்பொருள் (சிவம்) என்பதை உணர்ந்திருப்பர். பெண்தெய்வ வழிபாட்டுப் பிரிவை உருவாக்காமல், ஏற்கனவே இருந்த சிவ (மெய்ப்பொருள்) வழிபாட்டையேக் கடைபிடித்திருப்பர்.

(இங்கே உணர வேண்டிய மிக முக்கியமான செய்தி: மத & கருத்து உரிமை!! குறையுள்ளது என்று தெரிந்தும் அன்றைய சமயப்பெரியவர்கள் பெண்தெய்வ வழிபாட்டை அனுமதித்திருக்கிறார்கள். இதுவே பாலைவன மதங்களாக இருந்திருந்தால்...? ஒரு கூட்டம் வெட்டியே அழித்திருக்கும்! இன்னொன்று நயவஞ்சகமாக ஏமாற்றி முடித்திருக்கும்!!)

இந்தப் #பெண்தெய்வ #வழிபாடு பிற்காலத்தில் மூன்றாக பிரிந்துவிட்டது:

🔹 காளியம்மன், மாரியம்மன், அங்காளம்மன், ...
🔹காமாட்சியம்மன், மீனாட்சியம்மன், கோமதியம்மன், விசாலாட்சியம்மன், லலிதா திரிபுரசுந்தரி, ...
🔹 பெருமாள் (பெண்தெய்வ வழிபாட்டில் எந்தக் கோட்பாட்டைப் பெண்ணாகக் கருதினரோ அதை வைணவம் ஆணாக மாற்றிக்கொண்டது)

oOOo

கருப்பு நிறம், கொடுமையான அச்சமூட்டும் காட்சிகள் போன்றவை காளியன்னையின் அடையாளங்கள் என்பதால் தான் முளைப்பாலிகை குடிசையை பராமரிக்கும் பெண் (காளியன்னையாகக் கருதப்படுபவர்) திருவிழா காலம் முழுவதும் தலைவிரி கோலமாக, எந்த ஒப்பனையும் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Saturday, August 15, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #60 - செறிவு, விள்ளு, யாது - விளக்கம்

கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதுஇருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #60

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கள்ளப் புலவேடர் ... கருத்துமலை

ஐம்புலன்களை அடக்கி, பக்குவமடைந்து, உலகம் எனும் மாயையிலிருந்து தெளிந்தோர் நிலைபெறுவதற்காக (செறிவாக - திண்ணியராக - திடமாக - அசைவற்று நிற்க) மலர்ந்த பெருமான்.

எப்போது நிலைபெறுவோம்? நாம் யாரென்று உணர்ந்த பிறகு. எப்போது நாம் யாரென்று உணர்வோம்? உலக காட்சி நீங்கிய பிறகு. இந்த உலக காட்சி நீங்குதலையே "விள்ள" (மலர்ந்த) என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். உலக காட்சிகள் நீங்குவது என்பது கிட்டதட்ட ஒருவர் அணிந்திருக்கும் அணிகலன்களைக் கழட்டுவது போலிருக்கும். (இதை வைத்தே திரு சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽 (திருவரங்கத்து மூலவரின் கீழ் சமாதியாகி இருப்பவர்) "பெருமாள் அலங்காரப்பிரியர்" என்று அருளியிருக்கவேண்டும் என்பது என் கருத்து)

🔸யாது இருக்கக் ... மருத்துமலை

யாது என்ற சொல் ஐயம், மயக்கம் மற்றும் நினைவு போன்ற பொருட்களில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நாம் யாரென்று ஐயமற தெரிந்துகொள்ளாத வரை, உலக காட்சிகளைக் கண்டு மயங்கும் வரை (உண்மையென்று நம்பும் வரை), பழவினைகள் மீதமுள்ள வரை உடல் & உலக காட்சிகள் தோன்றிக்கொண்டுதானிருக்கும்.

காட்சிகள் தோன்றுவது எதற்காக? ஒரு முறை பகவான் திரு ரமணரிடம் 🌺🙏🏽 இத்தகைய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "காண்பான் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்வதற்காக" என்று பதிலளித்தார்!! 👌🏽👏🏽

இவ்வகையில், காட்சிகளின் தோற்றம் என்பது நாம் நம்மை உணர்வதற்காக, அதில் நிலைபெறுவதற்காக, பிறப்பறுப்பதற்காக. பிறப்பு எனும் நோயை, காட்சிகளின் மூலம் குணப்படுத்துவதால் இறைவனை தெய்வ மருத்துவன் என்றழைக்கிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Thursday, August 13, 2020

திருச்சத்திமுற்றம் - பெயர் விளக்கம்

(தினமலர் - ஆன்மீக மலர் - 17/07/2020)

#திருச்சத்திமுற்றம் என்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில், அன்பின் காரணமாக உமையன்னை பெருமானுக்கு முத்தம் கொடுத்தாராம்! இதனால் இத்தலம் "சக்தி முத்தம்" என்று அழைக்கப்பட்டதாம்!! பின்னர், மருவி, சத்திமுற்றம் என்றாயிற்றாம்!!! 😝

மெக்காலே கல்வியும் பகுத்தறிவும் அவற்றின் உச்சநிலையை அடைந்து விட்டதற்கு இந்த பெயர் விளக்கத்தை விட சிறந்த சான்று இருக்கமுடியாது. 😁

தில்லைக் கூத்தப்பெருமான் 🌺🙏🏽 ஆடும் மேடை எதைக் குறிக்கிறதோ, எந்த அரங்கத்திற்கு திருவரங்கம் பெருமாள் 🌺🙏🏽 நாதராக இருக்கிறாரோ அதையே தான் சக்தி முற்றமும் குறிக்கிறது. நாம் வாழும் அண்டமே அது!!

இப்போது நாம் அண்டத்திற்குள் இருப்பதாக உணர்கிறோம். ஆனால், இது உண்மையல்ல. அனைத்தும் நம்முள் இருக்கின்றன. சமாதியில் இதை உணர்வோம். எல்லாம் நமக்குள் நடப்பதைப் பார்ப்போம். இதை திரையில் தோன்றும் காட்சிகளாக, நீரில் தோன்றும் குமிழிகளாக, மேடையில்/அரங்கத்தில் அரங்கேறும் நடனமாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள் நம் பெருமான்கள். திருச்சத்திமுற்றத்தில் சமாதியாகியிருக்கும் பெருமானோ அல்லது அவருக்குப் பின் தோன்றிய பெரியவர்களோ, ஒரு பெரிய வீட்டின் முற்றத்தில் நடைபெறும் விழாவாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

#சத்திமுற்றம் = சக்தி முற்றம் = நாம் வாழும் அண்டம்

oOOo

பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
அத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே

-- அப்பர் 🌺🙏🏽 தேவாரம் 4.96.3

பொழிப்புரை: மெய்யறிவில் நிலைபெற்றவர் உள்ளத்தில் இருப்பவராய் உள்ள திருச்சத்திமுற்றச் சிவக்கொழுந்துப் பெருமானே! 🌺🙏🏽 பல துளைகள் உள்ள கூடாகிய இவ்வுடம்பில் புகுந்து ஐம்பொறிகளும் நாள்தோறும் அடியேனுக்குப் பற்றுக்கோடான உன் திருவடிப்பற்றினை அழிக்க, மத்தால் குழப்பப்படும் தயிர்போலச் சுழலும் என் சிந்தையின் கலக்கத்தை ஒழியச் செய்வாயாக. தலைவனே! அடியேன் உன் அடைக்கலம் என்பதனை நோக்குக.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Wednesday, August 12, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் - #59 - வடக்கிருத்தல், மலைமாது, ஒரு பாகம் - சிறு விளக்கம்

தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரைஇலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றுஅருளும்
மாகமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #59

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

மேலோட்டமாகப் பார்த்தால் உமையன்னை இடப்பாகம் பெற்ற வரலாற்றைப் பற்றி பாடுகிறார் குருநமச்சிவாயர் 🌺🙏🏽 என்று தோன்றும். ஆனால், சற்று ஆழ்ந்து சிந்தித்தால் பல காலம் கடுமையாக வடக்கிருக்கும் ஒருவர், முதலில் நிர்விகற்ப சமாதியைப் பெற்று, இறுதியில் சகஜ சமாதியில் நிலை பெறுவதைப் பற்றி பாடியிருக்கிறார் என்பது விளங்கும்.

🔸தனித்திருந்து - உலக வாழ்க்கையிலிருந்து விலகியிருந்து

🔸கரைஇலா மாதவம் - ஆற்றின் நீரோட்டத்தைப் போல், உருக்கிய நெய்யின் வீழ்ச்சியைப் போல் விடாது செய்யப்படும் வடக்கிருத்தல்.

நம் தலையானது உடலின் வடக்குப் பகுதியில் இருப்பதாக கணக்கு. நமது கவனத்தை உடலின் வேறு பகுதிகளுக்கு செல்லவிடாமல் நம் தலை / முகப்பகுதியிலேயே வைத்திருப்பதற்குப் பெயர் தான் #வடக்கிருத்தல் (ஆரியத்தில், #தவம்). எப்படி எக்கணமும் கவனத்தை தலையிலேயே வைத்திருப்பது? நம் மீது - நம் இருப்புணர்வின் மீது - கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால் முடியும். இவ்வாறு நம் மீது கவனத்தை செலுத்திக்கொண்டிருப்பதே சும்மா இருத்தல், தானாய் இருத்தல், தன்னை நாடுதல், தன்னாட்டம், ஆத்மவிசாரம் (ஆரியம்) என பலவாறாக அழைக்கப்படுகிறது.

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம் - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽

🔸#விரவி - கலந்து. "நாம் வேறு உலகம் வேறு" என்ற துய்ப்பை நீக்கி, "நாமும் உலகமும் ஒன்றே" / "நாமே உள்ளபொருள்" என்ற துய்ப்பைக் கொடுத்தலே விரவுதல்.

🔸ஒரு பாகம் மலைமாது பெற பாலித்து

🔹#மலைமாது - சீவன். விழிப்பு நிலையில் சீவன் தலையிலிருப்பதாக கணக்கு. இங்கு மலை என்பது தலையைக் குறிக்கும். மெய்யறிவு பெறும் வரை மாது. பெற்ற பின், அப்பன்!

🔹ஒரு பாகம் - இடப்பாகமோ வலப்பாகமோ அல்ல. அசைவற்ற பாகம் - அசைவற்ற நிலை. மேற்சொன்ன "விரவி" நிலைக்குப் பின், நாம் யாரென்றும், உலகின் தன்மை என்னவென்றும் உணர்ந்து கொள்வோம். முயற்சிகளற்று (அசைவற்று) இருப்போம். இந்நிலையை நாம் அடைவதற்கு உதவிய "விரவுதலே" அருள் பாலித்தலாகும்.

🔸மாக மலை - வானளாவிய உயர்ந்த மலை

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, July 28, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #58 - குன்றம் குனிக்குமலை - சிறு விளக்கம்

நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #58

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸நீலமலை தேடரிதாய் நின்றமலை

நீலமலை - பெருமாள். நான்முகனும் பெருமாளும் பெருமானின் முடி-அடியைத் தேடிய கதையில் வரும் பெருமாள். இங்கு பெருமாள் அகந்தையைக் குறிக்கிறார். அகந்தையால் மெய்யறிவை அடையமுடியாது என்று பாடுகிறார் ஆசிரியர்.

🔸நின்றதழல் கோலமலை

மேற்சொன்ன "அடிமுடி காணா அண்ணாமலை" கதையில் பெருமான் நெருப்புத் தூணாக நின்ற கோலம்.

🔸#குன்றம் #குனிக்குமலை

முப்புரம் எரித்த கதையில் பெருமான் மேருமலையை வளைத்ததைப் பாடுகிறார்.

#முப்புரம் #எரித்த கதை: புவியைத் தேராக்கி, மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகிப் பாம்பை நாணாக்கி, பெருமாள் கொடுத்த "தீர்ந்து போகாத அம்பாரத்துணியுடன்", மூன்று பறக்கும் கோட்டைகளில் சுற்றி வந்த மூன்று அரக்கர்களுடன் பல காலம் பெருமான் போரிடுகிறார். ஒரு சமயத்தில், "தாங்கள் கொடுத்த பொருட்களால்தான் பெருமானால் போரிடமுடிகிறது" என்று தேவர்கள் அகந்தை கொள்கின்றனர். இதையுணர்ந்த பெருமான், போரிடுவதை நிறுத்திவிட்டு, புன்முறுவல் பூக்கிறார். முப்புரமும் எரிந்து சாம்பலாகிவிடுகிறது!

இது மிகப்பழமையான கதை. பெருமான் புரிந்த "#அட்டவீரட்ட" செயல்களுள் (8 வீரச்செயல்களுள்) ஒன்று. பல திருத்தலங்களின் தலவரலாறாக உள்ளது. பல வடிவுகளில் உள்ளது. நான் மேற்கண்ட வடிவை எடுத்துக் கொண்டேன்.

🔹3 பறக்கும் கோட்டைகள் - முப்புரம் - கனவு, நனவு & தூக்கம்
🔹தேரான புவி - நம் உடல்
🔹நாணான வாசுகி - மூச்சுக்காற்று
🔹வில்லான மேருமலை - சீவன் / மனம்
🔹பெருமாள் வழங்கிய தீராத அம்பாரத்துணி - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்கள் வழங்கிய அறிவுரைகள். பெருமாள் உயிரற்றதைக் குறிக்கிறார். உயிரற்றது என்பது ஐம்பூதங்களின் கலவை. உள்ளபொருளேயான பகவானிடமிருந்து ஒர் அறிவுரை வெளிப்பட்டிருந்தாலும், வெளிப்பட்ட பின் அது உயிரற்றதாகிவிடுகிறது. எனவே, எல்லா அறிவுரைகளும் பெருமாளின் கூறுகளாகின்றன. பெருமாள் வழங்கியவையாகின்றன.

எல்லாவற்றிற்கும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது: இங்கு போரிடும் சிவபெருமான் யார்?

நாமே அது! நாமே உள்ளபொருள்!! இதை நாம் உணர்வதில்லை. பல காலம், வடக்கிருக்கிறேன் பேர்வழியென்று, பல சர்க்கஸ் வேலைகளை செய்துகொண்டு, உடலைக் கெடுத்துக்கொள்வோம். ஒரு சமயத்தில், "தானாய் இருத்தலே தன்னையறிதலாம்" என்பதை உணர்ந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு தானாய் இருப்போம் - தன்மையுணர்வில் நிற்போம். இத்தோடு எல்லாம் முடிந்தது. இதைத்தான் "பெருமான் புன்முறுவல் பூத்து முப்புரம் எரித்தார்" என்று மேலே உருவகப்படுத்தியுள்ளனர்!

முப்புரம் எரிப்பு என்பது வடக்கிருந்து மெய்யறிவு பெறுதல். குன்றம் குனித்தது என்பது மனதை அழிப்பது.

🔸மூலமலை அந்தமலை

உள்ளபொருளான பரம்பொருள் எல்லாவற்றிற்கும் முன்னரும் இருக்கும். எல்லாம் அழிந்த பின்னரும் இருக்கும். என்றும் இருக்கும்.

🔸சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய் வந்தமலை

#குரு #நமச்சிவாயர் 🌺🙏🏽 தனது மெய்யாசிரியரான குகை நமச்சிவாயருக்கு 🌺🙏🏽 அடுத்தபடியாக அதிகம் குறிப்பிடுவது திரு சுந்தரமூர்த்தி நாயனாரைத்தான் 🌺🙏🏽!!

நாயனாருக்காக, அவர்தம் முதல் மனைவியான பரவை நாச்சியாரிடம் தூது சென்று அவரது கோபத்தை தணித்த பகவான் போன்ற ஒரு மெய்யறிவாளரைக் 🌺🙏🏽 குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Monday, July 27, 2020

ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க!!

🙏🏽 இந்த இடுகை எல்லோருக்கும் ஏற்றதல்ல. சமயக் குறியீடுகளைப் பற்றி ஓரளவாவது அறிந்தவர்கள் தாம் மேற்கொண்டு படிக்கவேண்டும். ஏனையோர், தக்க துணையுடன் படிக்கவேண்டும். இல்லையேல், தயவு செய்து வெளியேறுங்கள். நன்றி.

🙏🏽 மேலும், இது சற்று நீண்ட இடுகை. பொறுமையுடன் படியுங்கள். தொடக்கத்தில் அருவெறுப்பும் கோபமும் தோன்றலாம். ஆனால், போகப்போக வியக்கச் செய்யும். மலைக்கவும் வைக்கும்.

oOOo

நமது உடல், நாம் காணும் உலகம் எல்லாம் தோற்ற மாத்திரமே. உண்மையல்ல. நாமே (நமது தன்மையுணர்வே) என்றும் மாறாத, அழியாத உள்ளபொருள் - பரம்பொருள் - மெய்ப்பொருள். இந்த பேருண்மையை எவ்வளவு நன்றாக விளக்கினாலும், எத்தனை விதமாக விளக்கினாலும், திரும்ப திரும்ப எடுத்துக் கூறினாலும் மக்களுக்குப் புரிவதில்லை என்பதால், நேரடியாகவே நாம் யார் என்ற அறிவைப் பெற பல உத்திகளை அறிவுருத்திவிட்டுச் சென்றுள்ளனர் நம் மாமுனிவர்கள். (3 உத்திகளை மட்டும் இங்கு பார்ப்போம்)

பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 அறிவுருத்தியது 2 உத்திகள்: தன்னாட்டம் & மலைவலம். புறமுகமாகவே ஓட எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை நம் மீது - நமது தன்மையுணர்வின் மீது - வைத்திருப்பதே தன்னாட்டம். ஒரு நிறைமாத பேரரசி எவ்வாறு நடைபழகுவாரோ அவ்வாறு அண்ணாமலையாரை வலம் வருதல் மலைவலம். இப்படிச் செய்தால், ஒரு சமயத்தில், உடலுணர்வு அற்றுப்போகும். உடலுணர்வு அகன்றால் மீதமிருப்பது என்ன? நாம்!!

அடுத்து, காசியில் திரு விசுவநாத சிவஅடையாளத்தின் (சிவலிங்கம்) கீழ் சமாதியாகி இருக்கும் திரு நந்திதேவர் 🌺🙏🏽 அறிவுருத்திய கங்கையில் முழுகுதல். கங்கை நீர் குளிர்ச்சியானது. அந்நீரில் மூழ்கினால், குளிர்ச்சி மிகுதியால், முதல் ஒரு சில கணங்களுக்கு, நமது உடலுணர்வை இழப்போம். உடலுணர்வை இழந்தால் மீதமிருப்பது என்ன? நாம்!!

இவ்வாறே காவடி தூக்குதல், அழகு குத்துதல், தீ மிதித்தல், பால்குடம் சுமத்தல், தீச்சட்டி ஏந்துதல், தலையில் தேங்காய் உடைத்தல், உடல் உறுப்புகளை வெட்டிக் கொள்ளுதல் (கபாலிகர்கள்), திருத்தலப் பயணம் என எல்லா உத்திகளையும் சரியாக செய்தால், நாம் யார் என்ற அறிவைக் கொடுக்கும். இது போன்றொரு உத்திதான் உடலுறவு! உடலுறவின் முடிவில் ஆணிடமிருந்து "விந்து வெளிப்படும்போது" ஆண் தனது உடல் & உலக உணர்வை இழந்து தானாக இருக்கிறான். இந்த துய்ப்பு விந்து வெளிப்படும்வரை தான். வெளிப்படுவதற்கு முன்னரோ, பின்னரோ கிடைக்காது.

தன்மையுணர்வாம் இறையுணர்வை துய்க்க எத்தனையோ எளிய உத்திகள் இருந்தும் இந்த உத்தி புகழ் பெற்றுவிட்டது! எங்கும் பரவிவிட்டது!! தொன்றுதொட்டு வழக்கிலிருந்த சமயங்களின் குறியீடுகளுக்கும் புதிய பொருள்களைக் கற்பித்தது. இம்முறையில் இறையுணர்வை துய்ப்பதற்கென்றே எகிப்து, கிரேக்க, ரோமானிய நாடுகளிலுள்ள வழிபாட்டுத்தலங்களில் பெண்களை "சேவையில்" அமர்த்தியிருக்கின்றனர்! தகுதியானவர்கள், இறையுணர்வு தேவைப்படும்போதெல்லாம், அங்கு சென்று, அப்பெண்களைப் புணர்ந்துள்ளனர்!! (அவ்வளவு தூரம் இறையுணர்வுத் தாகம்! 😏 இதுவே, அத்தலங்களில், வாட்டசாட்டமான பூசாரிகளை அமர்த்தி, கைகளில் தேங்காய்களைக் கொடுத்திருந்தால்... ஒரு பயலுக்கும் இறையுணர்வு துய்ப்பே தேவைப்பட்டிருக்காது. 😂)

✴️ #முகம்மதியம்

மேற்சொன்ன "விந்து வெளிப்படுதல்" தான் இம்மதத்தின் அடிப்படை!


❇️ மசூதியிலுள்ள #மினார்

மகுதிக் கட்டிடங்களிலேயே மிக உயரமானதாக இருக்கும். விரைத்த ஆணுறுப்புக்கு சமம். அக்காலத்தில், தொழுகைக்கு முன், ஒருவர் இதன் உச்சிக்குச் சென்று குர்ஆன் வாசகங்களை உறக்கச் சொல்லுவார். இன்று ஒலிப்பெருக்கிகள் அவ்விடத்தை எடுத்துக்கொண்டன. மினாரிலிருந்து ஒலி வெளிவருவதென்பது ஆணுறுப்பிலிருந்து விந்து வெளிவருவதற்கு சமம். விந்து வெளிப்படும்போது ஆணுக்கு மெய்யறிவு கிடைக்கிறது (கவனமாக இருந்தால்). இது போன்றே, மினாரிலிருந்து ஒலி வெளிப்படும்போது, அதை கவனமாக, பொருளணர்ந்து கேட்போருக்கு மெய்யறிவு கிடைக்கும் என்பது பொருள்.

உயரமான மினார் குறிக்கும் இன்னொரு பொருள்: இறைவன் படைப்பில் ஆணே சிறந்தவன் & உயர்ந்தவன்.

❇️ #மகுதி

தொழுகை நடத்தப்படும் பகுதி. பெண்ணுறுப்புக்கு சமம். நுழைவாயிலின் தோற்றம் பெண்ணுறுப்பைக் தலைகீழாக கவிழ்த்தது போலிருக்கும். பானை கவிழ்க்கப்பட்ட கோபுரமும் மகுதியின் உட்பகுதியும் பெண்ணுறுப்பின் உட்பகுதிக்கு சமம். மசூதிக்குள் நுழைவதென்பது பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு நுழைவதற்கு சமம். ஆணுக்கு எப்போது மெய்யறிவு கிடைக்கிறது? விந்து வெளிப்படும் போது. விந்து எங்கு வெளிப்படுகிறது? பெண்ணுறுப்புக்குள். எப்போது வெளிப்படுகிறது? புணர்ச்சியின் இறுதியில். எனில், பெண்ணுறுப்புக்கு சமமான மசூதியினுள் நடத்தப்படும் தொழுகை புணர்ச்சிக்கு சமம்.

(இந்த தலைகீழ் பெண்ணுறுப்புக் குறியீட்டை முகம்மதியர்களின் கட்டிடங்கள் அனைத்திலும் காணலாம். இன்று, பொருட் செலவு, திறனின்மை போன்ற காரணங்களால் நுழைவாயில் தவிர மீதமுள்ள பகுதிகள் செவ்வகமாகிவிட்டன.)

❇️ முகம்மதிய ஆண்

இன்று பலவிதமான உடைகள் அணிந்தாலும், இவர்களது பாரம்பரிய உடை என்பது தலை முதல் கணுக்கால் வரை வெள்ளைநிறத்தினதாக இருக்கும். பாலைவனப்பகுதியினர் தலையில் #குல்லா/துணி & உடல் முழுவதும் மூடிய வெள்ளை அங்கி அணிந்திருப்பர். நம் தென்நாட்டினர் தலையில் குல்லா, வெள்ளைச் சட்டை, வெள்ளை லுங்கி அணிந்திருப்பர். வடநாட்டினர் வெள்ளை குல்லா, குர்தா, முழுகாற்சட்டை அணிந்திருப்பர்.

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது: ஒரு முகம்மதிய ஆண் விருத்தச்சேதனம் செய்யப்பட்ட (முன்தோல் நீக்கப்பட்ட) ஆணுறுப்புக்கு சமம். தலை, விருத்தச்சேதனம் செய்யப்பட்ட பகுதி.


🔹வெள்ளை #வட்டக்குல்லா, வெள்ளை ஆடை

உடலுறவு முடிந்து, விந்துவெளிப்பட்ட பிறகு வெளியே எடுக்கப்பட்ட ஆணுறுப்புக்கு சமம். ஆணுறுப்பு முழுவதும் வெள்ளையாகியிருக்கும். தலையிலிருக்கும் குல்லா, ஆணுறுப்பின் முன் பகுதியில் சிறிது தங்கியிருக்கும் விந்துக்கு சமம். இவையெல்லாம் "அவர் இறையுணர்வு பெற்றவர்" என்பதற்கு சமம்.


🔹வட்டக்குல்லாவிற்கு பதிலாக வெள்ளை துணி கட்டியிருப்பின்

விந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்று பொருள். விந்து வெளிப்படும்வரை தான் இறையுணர்வு கிடைக்கும் என்று முன்னமே பார்த்தோம். அதாவது, "இந்த நபர் இறையுணர்விலேயே இருக்கிறார்" என்பது பொருள்.

🔹வெள்ளைத் துணிக்கு பதிலாக சிவப்பு/கருப்பு கட்டங்கள் போடப்பட்டத் துணி கட்டியிருப்பின்

மேற்சொன்ன பொருள் தான். வெளியே எடுக்கப்பட்ட ஆணுறுப்பு முழுதும் வெள்ளைவெளேரென்றா இருக்கிறது? முன் பகுதி சிவப்பு-வெள்ளையாகவும், ஏனைய பகுதி கருப்பு-வெள்ளையாகவும் தானே இருக்கிறது? அதாவது, "வெள்ளைத்துணி கட்டியவரைக் காட்டிலும் இவர் இன்னும் சரியானவர் (துல்லியமானவர்)" என்று பொருள்.

🔹வெள்ளை குல்லா, வெள்ளை மேல்சட்டை & வெள்ளை லுங்கி

இவற்றை தென்பாரத முகம்மதியர்களிடம் காணலாம். ஆங்கில எழுத்தான 'V'யை தலைகீழாக போட்டது போல் லுங்கியை மடித்துக்கட்டியிருப்பார்கள். சற்று தூரத்திலிருந்து பார்த்தால், அவர்களது குறியீடான தலைகீழ் பெண்ணுறுப்புத் தெரியும். இந்த பெண்ணுறுப்பு போன்ற அமைப்பு, லுங்கியைக் கட்டியிருப்பவரின் ஆணுறுப்புடன் மோதிக்கொண்டிருக்கும். அதாவது, "உடலுறவிலேயே இருப்பவர் - இறையுணர்விலேயே இருப்பவர்" என்று பொருள்.

இந்த உடையமைப்பு இன்னொரு பொருளையும் தரும்: உடலின் மேல் பகுதி ஆண். கீழ் பகுதி பெண். அதாவது, ஆணும் பெண்ணும் இணைந்ததே படைப்பாகும். ஆணில்லாமல் பெண்ணில்லை. பெண்ணில்லாமல் ஆணில்லை. ஆனால், ஆணே சிறந்தவன் & உயர்ந்தவன்.

🔹வெள்ளை குல்லா, வெள்ளை மேல்சட்டை & பல வண்ண லுங்கி

இந்த உடையமைப்பையும் தென்பாரத முகம்மதியர்களிடம் மட்டுமே காணலாம். மேற்கண்ட "வெள்ளை லுங்கி" கொடுக்கும் இரு பொருள்கள் இதற்கும் பொருந்தும். அவற்றுடன் வெள்ளைச் சட்டை & வண்ண லுங்கி உணர்த்துபவை:

- மேல் பகுதி - இறைவன், கீழ் பகுதி - அவரது படைப்பு.
- இறைவனையும் அவரது படைப்பையும் பிரித்துப் பார்க்கவியலாது.
- வண்ணமயமான படைப்பு, தூய இறைவனிடமிருந்து தோன்றினாலும் படைப்பு தாழ்ந்ததே. இறைவனே உயர்ந்தவன்.

(இவர்களது உடைகள் இவர்களது மத நம்பிக்கையை உணர்த்துவதற்காக மட்டுமல்லாது, இவர்கள் வாழும் இயற்கை சூழலுக்கேற்றவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன)

❇️ முகம்மதிய பெண்

ஆணைப்போன்றே பெண்ணின் உடையமைப்பும் இன்று வெகுவாக மாறிவிட்டது. பெண்ணின் பாரம்பரிய உடை முழுக்கருப்பாகும். உச்சந்தலை முதல் பாதம் வரை முழு உடலையும் மறைத்திருக்கும். முகம்மதிய ஆண் புணர்ந்து முடித்த ஆணுறுப்புக்கு சமம் எனில் பெண் எதற்கு சமம்? பெண்ணுறுப்புக்கு சமம். புணரப்பட்டதா (இறையுணர்வு பெற்றவரா), புணரப்படாததா (இறையுணர்வு பெறாதவரா) என்ற கேள்விகளுக்கு இடமில்லை.

கருப்பு நிறத்திற்கு பதில் வெள்ளை, நீலம், ரோஜா, ஊதா என எந்த நிற ஆடையாக இருந்தாலும் ஒரே பொருள் தான். பெண்ணுறுப்புத் தான்.

பிள்ளைகள் பெற்று, உடலமைப்பு சற்று மாறிய பெண்ணை, முழுகருப்பு உடையில், சற்று தூரத்திலிருந்து கவனித்தால் இவர்களது குறியீடான தலைகீழ் பெண்ணுறுப்பு தெரியும்.

இவர்களது சமூகங்கள் சிலவற்றில், திருமணமாகி, பிள்ளைகள் பெற்று, சற்று வயதானவர்கள் வெள்ளை ஆடை அணிந்திருப்பார்கள். இளம் பெண்கள் கருப்பு ஆடை அணிந்திருப்பார்கள். இங்கு வெள்ளை ஆடை, உடலுறவு முடிந்து, விந்து வெளிப்பட்டு, அதனுடன் பெண்ணுறுப்பு திரவமும் சேர்ந்து வெள்ளையாகத் தோன்றும் பெண்ணுறுப்பைக் குறிக்கும். அதாவது, "இறையுணர்வு பெற்றவர்" என்பது பொருள்.

❇️ #பிறைநிலா

ஆணுறுப்பிலிருந்து விந்து வெளிவரும் திறப்பின் வடிவு. விந்து வெளிப்படும் போது இறையுணர்வு கிடைக்கிறது. எனவே, இந்த திறப்பு இறையுணர்வு வெளிப்படும்/கிடைக்கும் இடமாகிறது.

கங்கையாற்றை எங்கு தொட்டாலும் புனிதம் என்றாலும் சிலர் ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் மூழ்குவதை மேலானதாகக் கருதுகின்றனர். இன்னும் சிலர் தேவப்பிரயாகை வரை செல்கின்றனர் (இங்கு தான் கங்கை என்ற பெயரை ஏற்கிறார் கங்கையன்னை). இன்னும் சிலர் கங்கோத்திரி செல்கின்றனர். வெகு சிலரோ மேற்கொண்டு பயணித்து கோமுகம் செல்கின்றனர். கோமுகம் போன்றது பிறைநிலா.

உடலுறவு முடிந்து விந்து வெளியேறிய ஆண்குறி, விந்து வெளியேறிக் கொண்டிருக்கும் ஆண்குறி, விந்து வெளிப்படும் திறப்பு என்று துல்லியமாக்கி இருக்கிறார்கள். பிறைநிலா இறையுணர்வு வெளிப்படும் இடம். துல்லியமான இறையுணர்வுவைக் குறிக்கும்.

இதனுடன் ஒரு விண்மீனையும் சேர்த்திருப்பார்கள். பிறைநிலா ஆணுறுப்பின் திறப்பு எனில் விண்மீன் பெண்ணுறுப்பின் உள்ளேயுள்ள திறப்பு (செர்விக்ஸின் திறப்பு). இதனால்தான் பிறைநிலாவைப் பெரிதாகவும் விண்மீனைச் சிறியதாகவும் (ஆண் உயர்ந்தவன்), கிட்டதட்ட பிறைநிலவுக்குள் விண்மீன் வருவது போன்றும் (ஆணின் ஆதிக்கத்தின் கீழ் பெண்) சித்தரித்திருப்பார்கள்.

(பெண்ணுறுப்பின் உள்திறப்பை வீண்மீனாக சித்தரித்தது தவறு என்பது எனது கருத்து. இத்திறப்பும் பிறைநிலா போன்றுதானிருக்கும். இல்லை, திறப்பை மட்டும் கணக்கிடாமல் சுற்றியிருக்கும் பகுதிகளையும், அதிலும் அவை சற்று சுருங்கியிருக்கும்போது கணக்கில் எடுத்துக்கொண்டார்கள் என்று எண்ணிக்கொள்ளலாம்.)

பிறைநிலா & விண்மீன் குறியீடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக பயனில் இருந்தாலும், முகம்மதியம் மேற்சொன்ன பொருளில் பயன்படுத்த ஆரம்பித்தது 5 நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான். வெகுவாக பயன்பாட்டிற்கு வந்தது சென்ற நூற்றாண்டில் தான். இவற்றிலும், பிறைநிலாதான் எல்லா இடங்களிலும் இருக்கும். விண்மீன் ஆங்காங்கே தானிருக்கும்.

✴️ #கிறித்தவம்

முகம்மதியத்தின் முன்னோடிகளில் ஒன்று. அதை விட காலத்தால் 6 நூற்றாண்டுகள் முந்தையதாக இருந்தாலும், ரோமானிய அரசர் கான்ஸ்டன்டைனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது 4ஆம் நூற்றாண்டில் தான். அதன் பிறகே இதன் குறியீடுகள், சின்னங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கும். உருவாக்கப்பட்டதில் ரோமானிய-கிரேக்கர்களின் பங்கும் தாக்கமும் அதிகமாக இருக்கும்.

உடலைக் குறிக்கும் குறுக்கைக்கு அடுத்ததாக இவர்கள் அதிகமாக பயன்படுத்தும் குறியீடு தலைகீழ் பெண்ணுறுப்பு. முகம்மதியக் குறியீடுகளில் ஆண், பெண் இரண்டுமிருக்கும். கிறித்தவக் குறியீடுகளில் பெண் மட்டும்தானிருக்கும். இவர்களது சர்ச்சுகள், கல்விச்சாலைகள், நீதிமன்றங்கள், அரண்மனைகள், இல்லங்கள் என எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பைக் காணலாம். இத்தாலிய வாடிகன் சர்ச்சின் முன்னுள்ள மக்கள் கூடும் பகுதி அப்படியே ஒரு பெண்ணுறுப்புக்கு சமம். இவர்களைப் பொறுத்தவரையில், படைத்தவர் ஆண், படைப்பனைத்தும் பெண், படைப்பில் நடக்கும் தொழில்கள் அனைத்தும் புணர்தலாகும். எனவே எங்கும் பெண்ணுறுப்பு குறியீடு.

இவர்களது பழங்கால சர்ச்சுகளின் உள்ளமைப்பு அப்படியே பெண்ணுறுப்பின் உள்ளமைப்பிற்கு சமமாக இருக்கும். பெண்ணுறுப்புவாயின் தோற்றத்தையே மேற்கூரைக்கும் பயன்படுத்தி இருப்பார்கள். இவர்களிடமிருந்து வேறுபடுத்தியும், மேம்படுத்தியும் காட்டுவதற்காக, முகம்மதியம், கவிழ்க்கப்பட்ட பானை போன்ற அமைப்பை மேற்கூரைக்கு பயன்படுத்தியிருக்கும். பெண்ணுறுப்பின் உட்புற இறுதிப்பகுதி சற்று விரிந்திருக்கும். இதையே முகம்மதியம் கவிழ்த்த பானையாக மாற்றியிருக்கிறது. சர்ச்சுக்குள் நுழைவதென்பது பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு நுழைவதற்கு சமம். இறையுணர்வு பெறப்படுவது அதற்குள் தான். எனவே, இவர்கள் மினார் என்று தனியாக ஒரு பகுதியை வைத்துக்கொள்ளவில்லை.

#பாதிரி #உடை அணிந்தோர் அனைவருமே புணரப்பட்ட / புணர்ச்சியில் இருக்கின்ற பெண்ணுறுப்புகளுக்கு சமம். அதாவது, இறை சிந்தனையில் இருப்பவர்கள் - இறையுணர்வைத் துய்ப்பவர்கள் - இறைவனால் புணரப்படுபவர்கள் (பட்டவர்கள் அல்ல; படுபவர்கள். தொடர்ந்து இறையின்பம் பெறுபவர்கள்.)

oOOo

பாலைவன மதங்களின் குறியீடுகள், சின்னங்கள், உடைகள், கட்டிடங்கள் போன்றவை உணர்த்தும் உட்பொருள்களைப் பற்றி மட்டும் சற்று எழுதியிருக்கிறேன். இவை சரியா, உயர்ந்ததா, சிறந்ததா என்றோ, யார் இவர்களுக்கு இவ்வாறு வடிவமைத்து கொடுத்திருப்பார்கள் என்றோ, இவற்றால் அவர்கள் பண்பட்டிருக்கிறார்களா என்றோ எழுத முயலவில்லை. இந்த நீண்ட இடுகையை நான் எழுதியதற்கு காரணம் பின்வரும் 2 கேள்விகள்:

👊🏽 வட்டக்குதத்தை வல்வேல் காக்க என்பதற்கே பொங்கிய ஆச்சாரக் கூட்டம் இப்போது இந்த பாலைவன மதங்களைப் பற்றி எப்படி பொங்குமாம்?

👊🏽 "பானையைக் கவிழ்த்தது போலிருந்தால் அது மசூதி, உயரமாகக் கட்டியிருந்தால் அது சர்ச்சு, அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்!" என்று கெக்கலித்த "சாதி எதிர்ப்பாளரான" ஒரு வீரப்"பறையர்" இப்போது பாலைவன மதங்களைப் பார்த்து எப்படி கெக்கலிப்பாராம்?

oOOo

சேரிள முலைமார் திருவேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக்குதத்தை வல்வேல் காக்க
அசுரர் குடிகெடு"க்க" ஐயா வருக 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

✴️ இணைப்பு படங்கள்:

1. முகம்மதிய மசூதி - மினார், பானை கோபுரம், பிறைநிலாச் சின்னம், எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பு வடிவங்கள் (கவிழ்த்த ஆங்கில 'U' போன்றவை)

2 - 4. முகம்மதிய ஆண் & பெண்கள்

5. வானிலிருந்து வாடிகன் சர்ச்சின் தோற்றம் - மக்கள் கூடும் முன்பகுதி பெண்ணுறுப்புக்கு சமம்.

6. சர்ச்சின் உட்புறம் - பெண்ணுறுப்பான வஜினா போன்று நீண்டிருத்தல், எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பு வடிவங்கள் (கவிழ்த்த ஆங்கில 'V' போன்றவை). அவற்றிலுள்ள செதில் போன்ற அமைப்புகள் பெண்ணுறுப்புவாயிலுள்ள தோல் மடிப்புகளுக்கு சமம்.

7. விதவிதமான உடையணிந்த பாதிரிகள் - இவர்களது உடைகள் எந்த நிறத்தில் இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும், இவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், இவர்கள் இறைவனால் புனரப்படும் பெண்ணுறுப்புகள். இறையுணர்வில் திளைப்பவர்கள்.