Saturday, November 30, 2019

"நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்"!!!




வைணவராக கருதப்படும் நம்மாழ்வாரின் 🌺🙏🏽 பாடல்களை பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 பல முறை மேற்கோள் காட்டியதுண்டு. ஒரு சமயம், பகவான் பொன்விழா கொட்டகையில் இருக்கும் போது "#உள்ளது #நாற்பது" எழுதியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது டி கே சுந்தரேசய்யர் "உள்ளது நாற்பதின் முதல் பாட்டில் வரும் 'உள்ளது' என்னும் சொல் பரம்பொருள், மெய்பொருள், இதயம் போன்றவற்றைக் குறிக்கின்றது. இச்சொல்லை இதுவரை இப்பொருள்களைக் குறிக்கும்படி யாராவது தம் பாடல்களில் கையாண்டிருக்கிறார்களா? அல்லது, பகவான் தான் முதன்முதலாக பயன்படுத்தினாரா?", என்று கேட்டார். 

அதற்கு பகவான், “இல்லாதது வராது” என்று கூறிவிட்டு, “ஏன்,  நம்மாழ்வாரின் பாசுரங்களில் கூட இருக்கிறதே!” என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழி கொண்டு வரச்சொல்லி அதிலிருந்து பின்வரும் பாடலை எடுத்துக்காட்டினார்:

உளனெனில் உளன்அவன் உருவம்இவ் வுருவுகள்
உளனலன் எனில்அவன் அருவமிவ் வருவுகள்
உளனென இலனென இவைகுண முடைமையில்
உளன்இரு தகைமையொ டொழிவிலன் பரந்தே

-- திருவாய்மொழி #9


(பரம்பொருளை உளன் - உள்ளவன் - என்று குறிப்பிடும் போது ஆண்பாலாகி விடுகிறது. அனைத்துச் சமயங்களும் இப்படித்தான் குறிப்பிடுகின்றன. ஆனால், பகவான் உள்ளது / உள்ளபொருள் என்று குறிப்பிட்டு பரம்பொருளின் பாலற்ற தன்மையை வெளிப்படுத்துகிறார்.)

மேலும், பகவான் தொடர்ந்தார், "வைணவ மதத்தைப் பற்றிய வாத விவாதங்களுக்கு நம்மாழ்வார் பாசுரங்களை சில வைணவர்கள் மேற்கோளாக பயன்படுத்துவதில்லை. ஏனெனில், அவை பெரும்பாலும் அத்வைதத்தைக் வெளிப்படுத்தும். ஆகையால், அவர்களது வாதத்திற்குச் சரிப்பட்டு வராது. இதனால், இவர்களிடையே, '#நம்மைக் #கெடுத்தான் #நம்மாழ்வான்' என்ற வாசகம் வழக்கிலுள்ளது!! 😛 நம்மாழ்வாரின் பாசுரங்கள் பரம்பொருளைப் பற்றிக் கூறும்போது (சீவனிலிருந்து) வேறுபடுத்துவதில்லை."

🌸🏵️🌼🌻💮

பகவான் புகழ் பெறாத ஆரம்ப காலத்தில் வைணவர்கள் வந்து அவரவர் காப்புரிமையை (U, V நாமங்கள்) பகவானது நெற்றியில் போட்டுவிட்டு செல்வர். 🤭 பகவானும் அமைதியாக இருந்து விட்டு, அவர்கள் சென்ற பின் அழித்து விடுவார். 😃 சற்று புகழ் பெற ஆரம்பித்த பின், வைணவர்கள் வாதம் புரிய வருவர். ஒரே பதிலில் அல்லது ஒரே பதில்-கேள்வியில் அவர்களை தலைதெறிக்க ஓடவிடுவார் 😁 (பரங்கிச் சர்ச்சியர்களுக்கும் இது போன்று அருள் புரிந்திருக்கிறார் 😍). பகவானைப் போன்று நம்மாழ்வார் இருந்திருக்கமாட்டார். மூகாம்பிகையாக"நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்"!!!இருந்திருப்பார். இதனால், காப்புரிமை, திரைக்கதை ("செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்...") என பல கைங்கர்யங்கள் செய்து நம்மாழ்வாரை வைத்து தொழிலில் நிலை பெற்றுவிட்டார்கள். 😒

🌸🏵️🌼🌻💮

நம்மாழ்வார் பரம்பொருளை "அடங்கப் பிடித்தேனே" என்கிறார். மணிவாசகப் பெருமானோ "சிக்கெனப் பிடித்தேன்" என்கிறார். பேயாரோ "உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும்" என்கிறார்.

யார் யாரை அடங்கப் பிடிப்பது / சிக்கெனப் பிடிப்பது / மறவாதிருப்பது? எப்படிப் பிடிப்பது / மறவாதிருப்பது? பல பொருட்களா இருக்கின்றன? ஒன்று மற்றொன்றை பிடிப்பதற்கு / மறவாதிருப்பதற்கு. இருப்பது ஒரு பரம்பொருள் தான். அதுவே யாதுமாகி இருக்கிறது. அது எவ்வாறு தன்னைத் தானே பிடிப்பது / மறவாதிருப்பது? இவற்றிற்கெல்லாம் விடையாக பகவான் அளிப்பது, "உள்ளத்தே உள்ளபடி உள்ளதே உள்ளல் (பிடித்தல், மறவாதிருத்தல்)". இந்த 4 சொற்களை சுருக்கினால், தாயுமான சுவாமிகளின் மெய்யாசிரியர் மெளன குரு சுவாமிகள் அருளிய "சும்மா இரு" கிடைக்கும். இந்த சும்மாவும் வேண்டாம் என்றால் பகவானின் "இரு" என்பது எஞ்சி நிற்கும். இருத்தலே பிடித்தலும், மறவாதிருத்தலும், உள்ளலும் ஆகும்!! 😍

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Sunday, November 24, 2019

"மகாவீர் சக்ரா" ஜஸ்வந்த் சிங் 🙏🏽💐

பாரத-சீன போரின்போது நவம்பர் 15, 1962 அன்று தனி ஒருவராக 72 மணிநேரம் போரிட்டு 300 சீன வீரர்களை கொன்று குவித்த மாவீரர் #ஜஸ்வந்த் #சிங் பற்றிய கட்டுரை...



#திருக்குறள் ஊழியத்திற்கு வ.உ.சி. கிடைத்துவிட்டார்!!

https://www.hindutamil.in/amp/news/opinion/columns/525736-voc.html

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அசோக்நகர் பகுதியில் இயங்கி வந்த ஒர் இந்து சமய-சமூக-தேசத் துரோக நிறுவனம் (கருங்காலி சாதி அரசியல் கட்சி), அது இயங்கி வந்த வாடகை இடத்திலிருந்து காலி செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டும், காலி செய்ய மறுத்தது. பின்னர், காவல்துறையைக் கொண்டு அவர்களை வெளியேற்றிய போது அப்பகுதியையே போர்களமாக்கினர். (முதலில் வாடகைக்கு குடி வந்து, பின்னர் மொத்தத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்ற அவர்களது "நியாயமான" கனவில் மண் விழுந்ததால் அவ்வளவு வயிற்றெரிச்சல், கோபம், ஆத்திரம்.) இதற்கு சமமான "அறப்போர்" தான் இன்று  திருவள்ளுவரை வைத்து நடந்து கொண்டிருக்கின்றது. 😎

எத்தனை ஆண்டு கால "ஊழியம்"? வளர்ப்பு மகளை மணந்தவன் 🤢, தொழில் செய்தவளுக்கு பிறந்து அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவன் 🤮, திருட்டு ரயில் ஏறி வந்து மொத்த தமிழ்நாட்டையும் தன் குடும்பத்தாருக்கு கூறுபோட நினைத்தவன் 🥶 ...  வளர்ப்பு மகளை அடைய நினைத்தவன் 🤯 என்று எத்தனை கருங்காலிகளின் "ஊழியங்கள்"? திருக்குறளில் டுபாக்கூர் புத்தகத்தின் கருத்துக்கள் உள்ளன என்றும், காலத்தால் முற்பட்ட திருவள்ளுவரை 🌺🙏🏽 பாரதத்திற்கு வந்தேயிராத தோமையரின் மாணவர் என்றும் பல வித விதைப் பந்துகளை உருவாக்கி, கல்வி, ஊடகம் போன்ற விமானங்கள் வாயிலாக மக்கள் என்னும் விளைநிலத்தில் வீசியெறிதல் போன்ற எத்தனை மெக்காலே "ஊழியத்" திட்டங்கள்? 🥵 அத்தனையும் வீணாக விடுவரா? 👻👹👺

சிவஞானபோதத்திற்கு உரை எழுதி, இறுதி வரை சைவ சமய வகுப்புகள் நடத்திக் கொண்டு, சுத்த சைவராக வாழ்ந்த வ உ சிதம்பரம் பிள்ளையவர்களை கேடயமாக்க முயற்சித்திருக்கிறார்கள் - பரிமேல்அழகரின் திருக்குறள் உரையில் பிழைகள் உள்ளனவாம்!! நம் சமய கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக காணப்படும் கடவுள் வாழ்த்து முதலான முதல் 4 திருக்குறள் அதிகாரங்களும் இடைச்செருகலாம்!!! இப்படி #வஉசி சொன்னார் என்று மட்டும் எழுதியிருக்கிறார்கள். இதற்கு பின்னர், தமிழறிஞர் வையாபுரி பிள்ளையவர்களின் விளக்கத்தைக் கேட்டு வஉசி அமைதியுற்றார் என்பதை எழுதவில்லை. "ஊழியத்திற்கு" உதவாததை ஒதுக்குவதும் / மறைப்பதும் சிறந்த ஊழியம் எனக் கருதியிருக்கலாம். 😒

தமிழையும், தமிழரையும் அவர்களது சொந்த சமயத்திலிருந்து பிரிக்க பல "ஊழியத்" திட்டங்கள் இயக்கத்தில் உள்ளன. தற்போது இயக்கத்திலுள்ள #சுமேரியா #திட்டம் வெற்றி பெற்றால் திருக்குறள் திட்டத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அவ்வளவு பாதகமானது!! திருக்குறளை வைத்து நம்மை நம் சொந்த சமயத்திலிருந்து பிரித்து, நாம் சமணர்கள் என்று போக்கு காட்டி, நரித்துவத்தோடு இணைக்க முற்பட்டார்கள். சுமேரியா திட்டத்தின் மூலம் நமது தோற்றம், சமயம், மொழி, நாட்டுப்பற்று என அனைத்தையும் ஒரே நேரத்தில் குறி வைத்து, இஸ்ரவேல் அத்வைதியான யேசுவை நமது மாமன்-மச்சான் கடவுளாக கொண்டாட வைத்து, நரித்துவத்தை நமது சொந்த மதமாக காண வைத்து, தமிழகத்தை காஷ்மீரம் போன்று மாற்றி ஆள்வதே இவர்களது குறிக்கோள். 🤬😡

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்

-- குறள் #319

வள்ளுவ நாயனாரின் சொற்படி உலகக் கொல்லிகளான பரங்கியரும், அவர்களது அடிவருடும் நம் நாட்டு கருங்காலிகளும் துன்பப்படும் காலம் விரைவில் வரும்!!

🌸🏵️🌼🌻💮

"#மனத்துக்கண் #மாசிலன் ..." என்ற திருக்குறளுக்கு வஉசியின் உரை: மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாய் செய்யப்படுவது அனைத்தும் அறம்; குற்றம் உள்ளவனாய் செய்யப்படுவன துன்பம் தருவன.

(மற்றவர்கள் "... மாசிலன் ஆதல்..." என்று பதம் பிரிக்க, இவர் மட்டும் "மாசிலன் ஆவது" என்று பிரித்துள்ளார்.)

"தன் மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆகுக; அவ்வளவே அறம்", என்று உரை எழுதியவர்களை, "மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆதல் ஓர் ஒழுக்கமேயன்றி அதுவே அறமாகாது.", என்று எதிர்க்கிறார். மேலும், "அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல்", என்று பொருள் கூறுகிறார்.

🌸🏵️🌼🌻💮

அறம் என்பது அறு என்ற வினையோடு தொடர்பு கொண்டது. நல்லறம், இல்லறம், துறவறம். நல்வழி, இல்வழி, துறவு வழி. இந்த மாய உலகில் நல்லபடியாக பயணித்து கரையேற - மெய்யறிவு / நிலைபேறு பெற - நாம் தேர்ந்தெடுக்கும் / உருவாக்கி கொள்ளும் வழியே அறம்.

மெய்யறிவாளரை (இறைவனை) வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன், தனக்குவமை இல்லாதான், ஐந்தவித்தான் என்று பலவாறு அழைத்த நாயனார், இக்குறளில் மனத்துக்கண் மாசிலன் என்றழைக்கிறார். இப்படி பலவாறு அழைப்பதன் மூலம் மெய்யறிவாளர் என்பவர் யார், அந்நிலையை எப்படி அடைவது போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் - மனதில் மாசு இல்லாதவன். மாசு எனில் தீய எண்ணங்கள் மட்டுமல்ல. நல்லெண்ணங்களும் மாசு தான். மாசற்று - எண்ணங்களற்று - இருத்தலே நிலைபேறாகும். சிவப்பரம்பொருளுக்கு #மாசிலாமணி என்றொரு அருமையான பெயர் இருப்பதும் இந்த அடிப்படையில் தான்.

எண்ணங்களற்று இருப்பது எவ்வாறு?

இக்கேள்விக்கு, நம் தமிழ் மண் உருவாக்கிய பெரும் மாமுனிவர்களில் ஒருவரான பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கொடுத்த அருமையான பதில் ("நான் யார்?" என்ற நூலிலிருந்து, கேள்விகள் 10 & 11):

"நான் யார்?" என்னும் விசாரணையினாலேயே மனம் அடங்கும். "நான் யார்?" என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்து, பிணம் சுடும் தடி போல் முடிவில் தானும் அழியும். பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல், அவை "யாருக்கு உண்டாயின?" என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழினும் என்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே "இது யாருக்கும் உண்டாயிற்று?" என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும். "நான் யார்?" என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பி விடும்; எழுந்த எண்ணமும் அடங்கிவிடும். இப்படி பழகப்பழக மனதிற்கு தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது.

(விசாரித்தல் / விசாரணை - தற்கவனம் - தன்னாட்டம் - தன்னை நாடுதல் - நான் என்னும் நம் தன்மையுணர்வின் மேல் நம் கவன ஆற்றலை வைத்திருத்தல்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Wednesday, November 13, 2019

A Hindu's ignorance of his glorious past is deadlier than a dirty bomb!!

After the recent #Ayodhiyaa verdict, a person I know quipped that Hindhus should hand over their temples to Buddhists & Jains as he was under the impression that Hindhus built their temples upon the ruins of #Buddhist & #Jain temples. The following text was my reply to him:

There are 2 kinds of #Temples: alive & lifeless. Our #Annaamalaiyaar temple is a live temple. It's the samaadhi temple of Idaikkaattu Siddhar. Most of the ancient temples are such temples. In fact, before Buddishm & Jainism, only such places were called temples. Practice of constructing lifeless temples started with Buddhists & Jains. After the fall of these 2 religions, Hindhuism took over this practice because of growing population & unemployment (commercial reasons).

Worship, Temples, ... did not start with #Buddishm & #Jainism. Famous #Thirumalai temple is an example. Right now, it's maintained by Vaishnavites (a section of erstwhile Buddhists). Before that, it was maintained by Vedic Priests. Before that, Jains. Before everyone else, Saivites (Aadhi Saivam).

The famous practice of #Sallekhana of Jains (death by fasting) comes from Thamizhs. Research about the Thamizh word #Vadakkiruththal (#வடக்கிருத்தல்). It predates Jainism. Aadhi Saivam was the original religion of this land. Everything else comes from it.

In TN, Buddhists weren't as successful as their Jain siblings because of wrong marketing strategy. Thamizhs loved their language very much. Jains marketed their -ism in Thamizh and Buddhists in Sanskrit. After gaining control of TN, Jains started their  atrocities (like the Buddhists did & doing in Sri Lanka) - converting Hindhu temples, etc., The famous #Mulaiyur incident from the life of Appar Swaamigal (one of the 4 major Saiva Naayanmaargal) is a proof. Jains took over the Siva temple in Mulaiyur, covered the Lingam with cloths, placed their deity in front of the Lingam. Appar & His disciples protested by fasting in front of the temple and made the ruler (probably a Chozhan ruling under Pallavan) remove the Jains and their deity.

Buddhists & Jains are welcome to take back all their lifeless temples. If it's a live temple and if they can prove that the Lord residing there in samadhi is one of their monks/followers, they are welcome to take over. Our ancient temples are enough to guide us. In fact, a person with correct knowledge of Thamizh does not require any temple or any other guidance. His language will show him the way. In Thamizh, both a person's place of living and 4th Purushaarthaa is called #Veedu (#வீடு). If he understands it's etymology, nothing else and no one else is required to realize his true Self!! 💪🏽

💥💥💥💥💥

This reply not only made him quiet. It made him accept his ignorance of our past. Like him, because of Communist & Periyaarist influenced education, movies & other media (funded by anti-Hindhu, anti-social & anti-national elements), most of us have wrong or little knowledge about our past resulting in very low respect for our glorious history, culture and knowledge. 😔

Monday, November 11, 2019

காட்டுமிராண்டிகள் பாரதத்தை சீரழித்ததற்கு காரணம் பரிணாம வளர்ச்சியாம்!! 😏



#காப்பான் படத்தில், சுமார் 01:10 மணி நேரம் ஓடிய பின்னர், பாரதப் பிரதமராக வரும் மோகன்லால், காஷ்மீரத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பேசும் சற்று நீண்ட வசனத்தின் ஒரு பகுதி இது:

பரிணாம வளர்ச்சியில, இயற்கை ஒரு விதி வச்சிருக்கு... ஒவ்வொரு ஸ்டேஜுலேயும் தன் பலவீனத்த கரெக்ட் செஞ்சு, பலமான உயிரினமா ஆக்கியிருக்கு... இது தான் இயற்கை நமக்கு சொல்ற அற்புதமான மெசேஜ்... காப்பான்லெசன் அண்ட் அட்வைஸ்!

இதற்கு முன்னும், பின்னும் வரும் வசனங்களுக்கு பொருத்தமில்லாத இந்த வசனத்தின் மூலம் "இவர்கள்" சொல்ல வருவது என்னவென்றால், 700 முதல் 1700 வரை சுமார் 1000 ஆண்டுகள், காட்டுமிராண்டிகள் பாரதத்தின் மீது படையெடுத்து, கொள்ளையடித்து, கொன்று குவித்து, சீரழித்து, நிர்மூலமாக்கி, நாசம் செய்ததற்கு காரணம் இவர்களது வயிற்றெரிச்சலோ, பேராசையோ, உழைக்காமல் மற்றவர்களிடமிருந்து பிடுங்கித் தின்னும் உயரியக் கொள்கையோ இல்லையாம்! இயற்கையன்னையின் பரிணாம வளர்ச்சியாம்!! நாம் வலுவற்றவர்களாம். 4 காட்டெருமைகளும், 4 கழுதைப்புலிகளும் சேர்ந்த காட்டுமிராண்டிகள் வலுவானவர்களாம். ஆகவே, வலுவற்ற நம்மை அழிக்க வலுவான காட்டுமிராண்டிகளை இயற்கையன்னை வரவழைத்தாராம்!! 😠😠

ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டு, அப்பெண்ணின் அழகுதான் தன்னை கற்பழிக்க வைத்தது என்று அவளையே தண்டிக்கும் கேடுகெட்ட சாக்கடை இனத்தின் கோணல் புத்தி வேறெப்படி நியாயம் கற்பிக்கும்? 😡🤬

Thursday, November 7, 2019

🐷 #பன்றி #திருவிறக்கம் (#வராக #அவதாரம்)




(ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் கார்த்திகை 2019 இதழின் பின்பக்க அட்டைப்படம்)

🌸🏵️🌼🌻💮

✳️ ஒவ்வொரு திருவிறக்கக் கதையையும் தனித்தனியே அணுக வேண்டும். மற்றவற்றோடு ஒப்பிட்டால் குழப்பம் தான் மிஞ்சும். 

✳️ இக்கதைகள் யாவும் மெய்யறிவு பெறுவதற்காக நமக்குள் நடக்கும் போராட்டங்களையும், நிகழ்வுகளையும் உருவகப்படுத்திக் காட்டுகின்றன என்பதை நினைவில் கொண்டு தொடரவும்.

🌸🏵️🌼🌻💮

பாரம்பரிய கதை: இரணியகசிபு என்ற அசுரனின் இளைய சகோதரனான இரணியாட்சன் படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி வடக்கிருந்து பல பேறுகளைப் பெறுகிறான். அவை கொடுத்த மனத்துணிவால் தலைக்கனம் பிடித்து ஆடுகிறான். அனைவரையும் துன்புறுத்திகிறான். ஒரு சமயத்தில், புவியை கடலுக்குள் ஒளித்து வைத்துவிடுகிறான். பிரம்மா முதற்கொண்டு அனைத்து கடவுளர்களும் பெருமாளை வேண்டுகின்றனர். பெருமாள், கட்டை விரல் அளவேயான ஒரு சிறு பன்றியாக பிரம்மாவின் மூக்கிலிருந்து வெளிப்படுகிறார். மிக விரைவில், மிக பெரிதாக வளர்கிறார். இரணியாட்சனுடன் பல்லாயிரம் ஆண்டுகள் போரிடுகிறார். இறுதியில் அவனைக் கொன்று விட்டு, கடலுக்குள் மூழ்கியிருந்த புவியை, தனது கோரைப் பற்களால் தூக்கி வெளிப்படுத்தி, அதனுடைய பழைய இடத்தில் நிலை நிறுத்துகிறார்.

இந்த கதை எழுதப்பட்ட காலத்தில் எழுதியவர் மட்டுமில்லாமல், கேட்டவர்களும் ரசித்திருப்பர். ஏனெனில், அனைவருக்கும் பொருள் தெரிந்திருக்கும். பின்னர், பல காரணங்களால் மூடர்களாகிப் போனோம்; மூடர்களாக்கப்பட்டோம். சிந்திக்காமல் பயபக்தியுடன் கேட்டோம். இப்போது பயமும் இல்லை. பக்தியுமில்லை. பகுத்தறிவு வேறு வளர்ந்துவிட்டது. எள்ளி நகையாடுகிறோம். "அறிவைப் போற்றுவோம். அறிவைப் போற்றுவோம்." என்று உரு போடுவதோடு நில்லாமல், எக்காலமும் எல்லோரையும் உண்மையாகவே அறிவைப் போற்ற வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? 😔

🏵️🌼🌻

☀️ #இரணியகசிபு - நம் உடல்

☀️ #இரணியாட்சன் -  நமது கண்ணோட்டம் அல்லது நமது பார்வை. உடலின்றி பார்வையில்லை. ஆகவே, பார்வையை உடலின் சகோதரனாக சித்தரித்துள்ளனர். நமது பார்வை என்றும் வெளிமுகமாகவே இருக்கும். அனைத்திற்கும் ஆதாரமான திரை போன்ற நம்மைக் காணாது, திரையில் தோன்றும் காட்சிகள் போன்ற உலகையே காண விழையும். உலகிலுள்ள அனைத்து படைப்புகளுக்கும் அடிப்படை இந்த வெளிமுகப் பார்வை தான். இது மட்டும் இல்லை எனில், உலகில் ஒன்றும் நடக்காது, உருவாகாது. நமது உண்மையை / இயல்பை நாம் உணர முடியாமல் போவதற்கும், இதனால் விளையும் அனைத்து இன்னல்களுக்கும் நமது வெளிமுகப் பார்வையே காரணம்!! எனவேதான் "இரண்யாட்சன் படைப்பு கடவுளிடமிருந்து பேறுகளைப் பெற்று, தேவர்களைக் கொடுமைப்படுத்தினான்" என்று சொன்னார்கள். 

☀️ #பூமா #தேவி - மெய்யறிவு. இதுவே முழுமையான, நிறைவான & குறைவற்ற அறிவு. எனவேதான், ஒரு கோளமாக சித்தரித்துள்ளனர். அதென்ன மெய்யறிவு? தன்னைப் பற்றிய அறிவு! தானே என்றும் உள்ளபொருள் என்ற அறிவு!!

☀️ #கடல் - ஒரு விதத்தில், நம் உடல். இன்னொரு விதத்தில், அறியாமை எனும் இருள். இரணியாட்சன் பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்பதன் பொருள்: பிறந்ததிலிருந்து நமது கண்ணோட்டம் வெளிமுகமாகவே - உலகை நோக்கியே - இருப்பதால், உலகறிவு பெருக பெருக, "நாமே உள்ளபொருள்" என்ற மெய்யறிவு நமக்குள் புதைந்துவிடுகிறது.

☀️ #பிரம்மாவின் #மூக்கிலிருந்து #வெளிப்பட்ட #சிறு #பன்றி - பிரம்மா இங்கு மெய்யாசிரியரைக் குறிக்கும். சிறு பன்றி என்பது அவரிடமிருந்து வெளிப்பட்ட, நமது அறியாமையை நீக்க வல்ல, ஒரு அறிவுரை! பகவான் ரமணரின் 🌺🙏🏼, "தன்மையின் உண்மையை, தான் ஆய தன்மை அறும்" என்ற அறிவுரை ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு!! முதலில் இது வெறும் 6 சொற்கள் கொண்ட ஒரு சொற்றொடராகத் தோன்றும். ஆனால், போகப் போக, இதைப் பற்றி சிந்திக்க சிந்திக்க, நம் மனம் முழுவதையும் நிறைத்து விடும். இதையே, "பன்றி மிகப் பெரிதாக, வானளாவ வளர்ந்தது" என்று சித்தரித்துள்ளனர்!! மனம் எதை நினைக்கிறதோ அதுவாக மாறிவிடும். இப்போது நாம் பன்றியாகி விட்டோம்! 😛

ஏன் பன்றியைத் தேர்ந்தெடுத்தார்கள்? பன்றிக்கு மோப்பத் திறனும், மண்ணில் புதைந்து கிடப்பதைக் கிளறி வெளிக்கொணரும் திறனும் உள்ளது. இங்கு, மெய்யாசிரியர் சுட்டிக்காட்டிய மெய்ப்பொருளை மோப்பம் பிடித்து, நம்முள் ஆழ்ந்து, அறியாமை இருளைக் கிளறி, மெய்யறிவுடன் வெளிப்படுகிறோம். இது அவ்வளவு சுலபமான செயலல்ல. காலகாலமாக உடல், உலகு எல்லாம் மெய் என்று நம்பி, நமது இயல்பாகவே மாறிவிட்டதை, பொய்யென்று அவ்வளவு சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதைத்தான் பன்றியும் இரணியாட்சனும் பல்லாயிரம் ஆண்டுகள் போர் புரிந்தனர் என்று சித்தரித்துள்ளனர்!! இறுதியில், உடல், உலகு எல்லாம் இருப்பற்றவை, நிலையற்றவை, பொய் என்று உணர்கிறோம். அதாவது, இரணியாட்சனைக் கொல்கிறோம். பொய்யறிவு நீங்குகிறது - அறியாமை இருள் விலகுகிறது - மெய்யறிவு வெளிப்படுகிறது. உள்ளாழ்ந்த போதும் சரி, மீண்டும் வெளிவரும் போதும் சரி, பன்றி பன்றியாகத்தான் இருக்கிறது. நாம் நாமாகத் தான் இருக்கிறோம். வேறுபாடு பூமாதேவி மட்டுமே. மெய்யறிவு மட்டுமே. முன்னர் நம்மை பற்றிய தெளிவில்லை. இப்போது, நம்மை நாம் சரியாக, தெளிவாக உணர்ந்துள்ளோம். இதுவே சீவன் சிவனாகியது எனப்படும்!!

இருக்கும் இயற்கையால் ஈச ஜீவர்கள் ஒரு பொருளேயாவர் உந்தீபற
உபாதி உணர்வே வேறு உந்தீபற

-- பகவான் திரு ரமணர், உபதேச உந்தியார்

மொத்த திருவிறக்க கதையையும் ஒரு வரியில் சுருக்கிச் சொல்ல வேண்டுமானால்: புறமுகமாகவே செல்லும் நமது கவன ஆற்றலை அகமுகமாக திருப்பி, நான் எனும் தன்மையுணர்வின் மீது தொடர்ந்து வைத்திருப்பின், ஒரு சமயத்தில் நாமே என்றும் உள்ளபொருள் என்ற மெய்யறிவு கிட்டும்!!

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

🌸🏵️🌼🌻💮

✳️ இந்த திருவிறக்க கதையில் ஒரு புவியியல் நிகழ்வும் பதிவாகியுள்ளது. பூமாதேவியை வெளிக்கொணரும் போது, பன்றியின் பல் பட்ட இடம் #பிராக்ஜோதிஸ்பூர் - இன்றைய கவுகாத்தி, அஸ்ஸாம் - என்று பதிவு செய்திருக்கிறார்கள். இது ஒரு புவியியல் நிகழ்வைக் குறிக்கும். நம் பாரத துணைக்கண்டம், ஆசிய கண்டத்தோடு மோதியதன் விளைவாக இமயமலை உருவானது. அப்படி முதன்முதலாக மோதி உயர்ந்த பகுதியே இந்த பிராக்ஜோதிஸ்பூர். எத்தனையோ கோடி வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை, இந்த கதையில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். 

✳️ பூமா என்ற ஆரிய சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. மெய்யறிவு என்ற பொருளைக் கொண்டு இந்த இடுகையை எழுதியுள்ளேன். பெரும்பாலானோர், "நாம் வாழும் புவிப்பந்து" என்று பொருள் கொள்வர். அதற்கேற்றவாறு ஓவியங்களை, சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். குப்தர்கள் காலத்திய சிலையே மிகப்பழமையானது என கணக்கிட்டுள்ளனர். உலகக் கொள்ளையர்களான பரங்கிகள் உலகம் உருண்டை என்று "கண்டுபிடிப்பதற்கு" 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் இவ்வுண்மையை சிலையாக்கி உள்ளனர். எனில், அவர்கள் உணர்ந்தது எத்தனை ஆயிரமாண்டுகளுக்கு முன்னரோ?

இவை யாவும் நமக்கு மலைப்புத் தராது. 😏 ஏனெனில், யார் தலையிலும் ஆப்பிள் விழவில்லை. 😀 யாரும் பிறந்த மேனியாக குளியல் தொட்டியிலிருந்து எழுந்து "யுரேகா! யுரேகா!!" என்று கத்திக் கொண்டு ஓடவில்லை. 😁 யாரையும் "ஆண்டுக்கு USD150+B வருமானம் பார்க்கும்" ஒரு பன்னாட்டு நிறுவனம் வீட்டுக்காவலில் வைக்கவில்லை. 😝 ஆகையால், இவை நமக்கு ஒரு பொருட்டேயில்லை. ஆமென்!! 😂 (இதுவும், "ஆமாம் ஆமாம்" என்ற சொற்களின் மருவு என்கிறது சொல்லாராய்ச்சி! 😎)

🌸🏵️🌼🌻💮

பின் குறிப்புகள்:

✳️ வழக்கம் போல இக்கதையிலும், திராவிட உடலமைப்பு கொண்டவர் அசுரன். ஆரிய உடலமைப்பு கொண்டவர் கடவுள். உண்மையில் திராவிட உடலமைப்பு கொண்டவர் தான் கடவுளாக சித்தரிக்கப் படவேண்டும்.

✳️ இக்கதையின் முதல் பதிப்பில் (தைத்திரீய உபநிடதம் என்று நினைக்கிறேன்) படைப்புக் கடவுளான பிரம்மா தான் பன்றியாக உருவெடுத்து புவியை காப்பதாக எழுதியிருக்கிறார்கள். பின்னர் வந்த பதிப்புகளில் (புராணங்களில்) பெருமாளாக மாற்றியிருக்கிறார்கள்.

Saturday, November 2, 2019

நிறத்தை வைத்து ஊழியம்!! 😏

"வள்ளலார் ஏன் காவியை நிராகரித்தார்?" என்று கேள்வி கேட்டு விட்டு, "இந்து மதத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது காவி நிறம்" என்று  கட்டுரையை ஆரம்பித்து, வள்ளலாரின் எழுத்துக்களில் இருந்து ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டு, கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்துள்ளார்கள்:

தத்துவங்களை கடக்க முடியாதவர்கள் அணிந்து கொள்வது காவி உடை. தத்துவங்களை கடந்து இறை அருளைப்பெற்றதால், வெற்றி அடைந்ததால், வெற்றியின் சின்னமான வெள்ளை உடையை தேர்ந்தெடுத்தார் வள்ளலார் என்று அவரின் உபதேசம் மூலம் அறியமுடிகிறது.

(https://www.nakkheeran.in/360-news/thodargal/vallalar-story)

இந்தக் கருங்காலி ஊடகங்களை அறிந்தவர்கள், இந்த கட்டுரை எதற்கு என்று இந்நேரம் உணர்ந்திருப்பார்கள்.

முதலில் இப்படி ஒரு பிட்டை போடுவார்கள். அடுத்து, பாவாடைகளின்  நிறத்தோடு ஒப்பிடுவார்கள். இறுதியில், "இஸ்ரவேல் அத்வைதி யேசுவின் உடையின் நிறத்தால் வள்ளலார் கவரப்பட்டார்", என்று "ஆராய்ச்சிக் கட்டுரைகளை" வெளியிடுவார்கள். இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர்களது டுபாக்கூர் பல்கலைகழகங்களைக் கொண்டு அங்கீகரிப்பார்கள். பின்னர், இந்த ஆராய்வுகளை பரங்கிப் பல்கலைக்கழகங்களுக்கு கொண்டு செல்வார்கள். "இன்றைய உலகின் தேவர்களாகிய" பரங்கிகள் அங்கீகரித்த பின், நமது பாட நூல்களில் சேர்ப்பார்கள். "வாஸ்கோடகாமா பாரதத்தை கண்டுபிடித்தான்", என்ற பேருண்மையை நாம் படித்தது போல, நம் வருங்கால சந்ததியினர், "இஸ்ரவேல் அத்வைதியான யேசு அணிந்திருந்த உடையின் நிறத்தால் கவரப்பட்ட வள்ளலார் வெள்ளையாடை உடுத்தினார்", என்ற பேருண்மையை படிப்பார்கள். ஆமென்!! 😝

இது ஊழியத்தின் முதல் படி!

பட்டினத்தார், திரு அருணகிரிநாதர், வள்ளலார், திரு ரமணர் போன்றோர் வெள்ளையாடை உடுத்தியிருந்தவர்கள். யாரும் யேசுவுக்கு போட்டியாகி விடக்கூடாதல்லவா? வள்ளலாரை தாழ்த்தியாகி விட்டது (அதாவது, "யேசுவின் உடையைப் பார்த்துத்தான் பெருமானார் வெள்ளையாடையை தேர்ந்தெடுத்தார்" என்ற பிட்). மற்றவர்களையும் தாழ்த்த வேண்டுமே! மேலும், பொரைகள் தொடர்ந்து வந்து விழுந்து கொண்டிருக்க வேண்டுமே!!

இனி ஊழியத்தின் அடுத்த படி!!

"எவ்வளவு பெரிய வெள்ளையாடை உடுத்தியிருக்கிறார்களோ அவ்வளவு தூரம் அவர்கள் தத்துவங்களைக் கடந்தவர்கள்" என்ற பிட்டை வெளியிடுவார்கள். 😂 இதன் படி, யேசு முதலிடம் பெறுவார். பட்டினத்தார் 2ஆம் இடமும், திரு அருணகிரிநாதரும் திரு ரமணரும் 3ஆம் இடத்தை பெறுவார்கள். 🤣 இதனால் "யேசுவே மெய்யான தேவன்" என்ற வேதாகம வசனம் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று திருச்சபைகள் தோறும் களிகூத்து 🥴 நடத்துவார்கள்.

"ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை" -- கொரிந்தியர் 4:16

😁😜🤪😝😂🤣

🙈 "காவி உடுத்திய திரு கௌதம புத்தர் எந்த தத்துவத்தையும் கடக்கவில்லையா?", என்று கேட்பவன் முட்டாள்!

🙉 "முழுவதுமாக வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு பிணக்கிடங்கிலிருந்து வெளிவரும் பிணம் எல்லா தத்துவங்களையும் கடந்ததா?", என்று கேட்பவன் அயோக்கியன்!

🙊 "எல்லாவற்றையும் விட்டு தத்துவமாய் நிற்பது தான் குறிக்கோள். அதென்ன தத்துவங்களை கடப்பது?", என்று கேட்பவன் காட்டுமிராண்டி!

"நக்கீரனை நம்புகிறவனோ செழிப்பான்"

😂😂😂🤣
👊🏽👊🏽👊🏽👊🏽