Thursday, July 29, 2021

பாதங்களை நன்கு பார்க்கவேண்டுமாம்! உலகில் வேறெங்கும் இப்படியொரு அமைப்பு கிடையாதாம்!! 🤦



இந்த சிலைகள் என்ன தாமாகவே முளைத்தவையா? பாதங்கள் சற்று மாறியிருக்கும்படியான சிலைகளை இவர்களே செய்து வைத்து விட்டு, "இப்படி இருக்கிறது, பார்", "அப்படி இருக்கிறது, பார்" என்று கதைவிடுகிறார்கள்!!

கருவறையில் இருக்கும் திரு சீதை-ராம-லட்சுமணர் திருவுருவங்கள் உணர்த்துவது:

🌷 ராமர் - மரா எனில் இறப்பு. ராம எனில் இறப்பற்றது. பரம்பொருள்.
🌷 லட்சுமணர் - பரம்பொருளுடன் என்றுமே இருக்கும் அறிவு
🌷 சீதை - மெய்யறிவு கிடைத்த பின்னர் கிடைக்கும் குளுமை

அது சமாதித்தலமெனில், அங்கு சமாதியாகி இருக்கும் பெருமானின் நிலையை இவ்வுருவங்கள் உணர்த்துகின்றன.

இங்கு ராமர் (இருள்) முதலில் தோன்றியவர். லட்சுமணர் (ஒளி) பின்னர் தோன்றியவர். மெய்யறிவு கிடைத்தவுடன் துய்க்கப்படும் குளுமை (சீதை) ராமரின் மனைவியாகிறார். இங்கு அண்ணன்-அண்ணி & தம்பி என்பது பூரி திரு ஜெகந்நாதர் திருக்கோயிலில் சகோதர சகோதரியாகிவிடும். மேலும், அங்கு ஒளி (பலராமர்) முதலில் தோன்றியதாகவும், இருள் (கண்ணபிரான்) பின்னர் தோன்றியதாகவும், மெய்யறிவு கிடைத்தவுடன் துய்க்கப்படும் மகிழ்ச்சி தங்கையாகவும் (சுபத்ரை) கருதப்படுகிறது.

ஒரே வைணவத்திற்குள் ஏன் இவ்வளவு மாறுபாடுகள் என்று சிந்தித்தால் நாமும் ராம பிரானாகலாம் அல்லது கண்ண பிரானாகலாம். இதை விட்டு, மாறுபட்ட கால்களை நன்கு உற்றுப்பார்த்து 😳, உற்றுப்பார்த்ததை அவ்வப்போது நினைவிலும் நிறுத்திக்கொண்டிருந்தால் 😖, எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்ற விதியின் படி நாமும் அம்மாறுபட்ட கற்பாதங்களாக ஆகலாம்!! 🥴

("அன்பே வா" நாகேஷ் பாணியில்) எப்படி நம்ம வசதி? 😁

Friday, July 23, 2021

அங்காளம்மன் வந்திருக்கிறேன்டா!!

https://youtu.be/BX4jjVMbMGo

"யாரு வந்திருக்கிறது?"

"அங்காளம்மன் வந்திருக்கிறேன்டா!"

☺️

இது எப்படியுள்ளது எனில் நீருக்குள்ளிருக்கும் மீன், "தண்ணீர் வந்திருக்குடா" என்று சொல்வது போலுள்ளது!!

தண்ணீருக்குள் ஏற்கனவேயிருக்கும் மீனின் மீது மீண்டும் தண்ணீர் எப்படி வந்துசேர முடியும்?

இவ்வாறே, நாம் வாழும் அண்டம்தான் அங்காளம்மன்! ஏற்கனவே நாம் அவரை பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். காணப்படும் யாவும் அவர்தான். ஏற்கனவே இருக்கும் ஒருவர் மீண்டும் எப்படி வர முடியும்?

oOOo

சமயச் சின்னங்களை, குறியீடுகளைப் பற்றி ஒரு சிறிதும் தெரியாதவர்களின் கவனத்திற்கு: சில சொற்கள், செய்திகள், விளக்கங்கள் முதலில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தும். பின்னர், தொடர்ந்து படித்துமுடிக்கும் போது இதிலுள்ள ஏரணம் (தருக்கம்/லாஜிக்) புரியும். ஏற்றுக்கொள்ளவும் இயலும். நன்றி. 🙏🏽

oOOo

உலகிலுள்ள அனைத்துப் பொருட்களையும் இரண்டாக பிரிக்கலாம்:

நிலையானது - நிலையற்றது
காண்பவன் - காணப்படுவது
உயிர் - உயிரற்றது
ஒளி - இருள்

இருள் - கருப்பு - கருப்பி - காளி.

அங்காளி - அங்கத்திலுள்ள காளி அல்லது அங்கமாகிய காளி. (அங்கம் என்பது பெண்ணுறுப்பைக் குறிக்கும்)

☀️ அங்கத்திலுள்ள காளி: பெண்ணின் பிறப்புறுப்பில் உள்ள இருள். உயிரை உருவாக்குவதற்காக ஆணும் பெண்ணும் இணையும் போது, ஆணின் பிறப்புறுப்பு பெண்ணுக்குள் நுழைவதற்கு முன்பே அங்கு இருள் உள்ளது. இது பிண்டத்தின் (தனிப்பட்ட உடலின்) அடிப்படையில். இதுவே அண்டம் எனில் படைப்புத் தொடங்குவதற்கு முன்பு எங்குமுள்ள இருள். இந்த இருளில் இருந்தே யாவும் தோன்றியதால் இதுவே அனைத்திற்கும் மூலமாகிறது. இந்த மூல இருளே (பொருளே) அங்காளியாகிறார்.

☀️ அங்கமாகிய காளி: பெண்ணுறுப்பு இருந்தால் தான் ஆணுறுப்பு இயங்கி உயிர் உருவாகும். இவ்வாறே, அண்டம் என்று வரும் போது, உயிரற்றவை முதலில் இருந்ததால்தான் உயிர் வந்து கூடி படைப்புத் துவங்க முடிந்தது. இவ்வகையில், அங்காளியே முதலில் தோன்றியவராகிறார்.

☀️ பெரும் பொருள் பொதிந்ததும், படைப்பின் துவக்கத்தைக் குறிப்பதுமான மயானக் கொள்ளை திருவிழா இன்று பல அம்மன் கோயில்களில் நடைபெற்றாலும், உண்மையில் இத்திருவிழா அங்காளம்மன் வழிபாட்டிற்கு உரியதாகும். இதிலிருந்தும் அங்காளம்மன் படைப்பின் துவக்கத்தைக் குறிப்பவர் என்று அறியலாம். அங்காளம்மன் வந்திருக்கிறேன்டா!

☀️ அங்காளம்மன் கோயில் திருவிழாக்களில் ஊஞ்சல் சடங்கு நடக்கும். வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும் ஊஞ்சலை நிறுத்தாமல் ஆட்டிக்கொண்டேயிருப்பர். "அங்காளம்மன் நிலையற்றவர்; மாறிக் கொண்டேயிருப்பவர்" என்பதை உணர்த்தவே இப்படிச் செய்வர். எனில், அங்காளம்மன் என்பது யாது?

நாம் வாழும் அண்டம் தான் அது!! அண்டமானது நிலையற்றது. மாறிக்கொண்டேயிருப்பது. எனில், இதிலுள்ள யாவும் தோற்றம்-வளர்ச்சி-சிதைவு-மறைவு என்ற சுழற்சியில் பயணித்துக் கொண்டேயிருக்கிறது.

அங்காளம்மன் - நிலையற்ற பொருள் - அண்டம் - படைப்பு முழுவதும்.

முடிவாக, அங்காளம்மனே படைப்பின் மூல பொருளாகிறார். முதலில் தோன்றியவராகிறார். மொத்த படைப்புமாகிறார். நிலையற்றவராகிறார்.

("தலையில் ஆப்பிள் விழுந்ததும் புவியீர்ப்பு விசையை உணர்ந்ததாக" புருடா விடும் வெள்ளையினத்தின் கவனத்திற்கு: தம் முன் பழுதற தோன்றும் காட்சியைக் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து, காட்சியின் அடிப்படை அலகு "நிலையாமை / மாற்றம்" என்றுணர்ந்து, உணர்ந்ததைப் போற்றி பாதுகாக்க ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கி, அதை வைத்து மக்களை நெறி படுத்தி, பொருளாதாரத்திற்கும் வழிகோலிய எம் முன்னோர்களே உண்மையான இறைமகனார்களும், இறைதூதுவர்களும், அறிவியலாளர்களும், மாமேதைகளும், பகுத்தறிவு தந்தைகளும், சமூகவியலாளர்களும் & சமூக பணியாளர்களும் ஆவர்!! 💪🏽)

oOOo

பெண்தெய்வ வழிபாடு பிற்காலத்தில் மூன்று பிரிவானது:

🌷 மாரியம்மன், காளியம்மன்... - இந்த பிரிவில் அங்காளம்மன் இருக்கிறார்.
🌷 காமாட்சி, மீனாட்சி ... - இப்பிரிவிலுள்ள ஆதி பராசக்தி அங்காளம்மனுக்கு சமமாகிறார்.
🌷 பெருமாள் - இங்கு துணைவியர், கருடன், அனுமன் என யாருமில்லாத பெருமாள் அங்காளம்மனுக்கு சமமாகிறார். பெண்தெய்வ வழிபாட்டிலிருந்து வந்ததால்தான் வைணவத்திலும் ஊஞ்சல் சடங்கு சிறப்பு பெறுகிறது.

பெண்தெய்வ வழிபாட்டினர் எப்பொருளை அங்காளம்மன் என்று குறிப்பிடுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே இந்த இடுகையை எழுதியுள்ளேன். அவர்களது கொள்கை ஏற்புடையதா, அல்லதா என்று நான் விளக்க முற்படவில்லை. நிலையற்ற பொருளை அதற்கு எதிரான நிலையான பொருளோடு (சிவம்) ஒப்பிடவேயில்லை.

oOOo

இறுதியாக, இணைப்புக் காணொளியில் நடக்கும் சடங்கை அருள்வாக்கு என்றழைப்பர். ஆனால், இன்று, இவை பெரும்பாலும் வெற்றுச் சடங்காக, அரங்கேற்றப்பட்ட வாக்குகளாகிவிட்டன!!

உடுக்கை, பம்பை போன்ற இசைக்கருவிகளின் ஒலியால் சிலர் தன்னிலையிழப்பர். ஒன்று சரி அல்லது தவறு, ஒன்றைச் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்ற சிந்தனையற்று, மனம் சொல்வதை அப்படியே சொல்வார்கள். மனமானது அன்னை மாயையின் (காளியின்) கூறாவதால் மனம் சொல்வதை வடிக்கட்டாமல் அப்படியே வெளிப்படுத்தும்போது அது அன்னையிடமிருந்து நேரடியாக வெளிப்படுவதாகிறது.

(இது போன்ற பழங்கால நாகரிகங்களின் சடங்குகளைத் திருடி உருவாக்கப்பட்டதுதான் வெள்ளையர்களின் உளவியல். கேட்டால், மதுரை, தென்காசி, திருநெல்வேலி என்று அல்வா பெயர்களைக் ("அறிவியல்" சொற்களைக்) கூறுவான்!! 😏)

oOOo

யாதுமாகி நின்றாய் - காளி
தீது நன்மையெல்லாம் - காளி
பூதம் ஐந்தும் ஆனாய் - காளி
போதமாகி  நின்றாய் - காளி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, July 20, 2021

பக்ரீத் கதையின் உட்பொருள்

(இவ்விடுகை கதை உணர்த்தும் பொருளைப் பற்றியது. கதையை தெரிந்துகொள்ள விரும்புவோர், தயவு செய்து இணையத்தில் தேடிப் படித்துக்கொள்ளவும். அல்லது, இந்த விகடன் கட்டுரையைப் படிக்கவும்: https://www.vikatan.com/spiritual/temples/68302-the-story-of-eid-al-adha--bakrid. நன்றி.)

பக்ரீத் கதையின் அடிப்படை வீடுபேறாகும். இக்கதையின் இரண்டு முக்கிய சொற்கள்: மகன் & ஆடு.

🔹மகன்

தீபாவளிக் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். கண்ணபிரானும் அன்னை சத்யபாமாவும் சேர்ந்து அவர்களது மகனான நரகாசுரனைக் கொன்ற நாளே தீபாவளி. இதில் கண்ணபிரான் என்பது பரம்பொருளின் கூறாகிய நாம். புவியின் கூறாகிய சத்யபாமா என்பது நமதுடல் முதலான அனைத்தும். நரகாசுரன் என்பது "நான் இவ்வுடல்" என்ற தவறான அறிவு. இந்த தவறான அறிவு நீங்குவதற்காக நாம் செய்யும் முயற்சிகள்தாம் கண்ணபிரான்-சத்யபாமா & நரகாசுரனுக்கு இடையே நடந்த போர் ஆகும். இந்த தவறான அறிவு நீங்கியவுடன் நாம் யாரென்று நம்மைப் பற்றிய தெளிவு (மெய்யறிவு) கிடைத்துவிடுகிறது. இந்த தருணமே தீபாவளி.

எல்லாவற்றையும் ஏடாகூடமாக பார்ப்போர் உண்டு. இக்கதையை அப்படி பார்த்தால்... "பெற்றோரே பிள்ளையைக் கொன்றால் நல்லது நடக்கும் (தீபாவளி)" என்றாகிவிடும்!! 😂

அண்மையில், ஆந்திரா/தெலுங்கானாவில் ஒரு கல்லூரிப் பேராசிரியரும் அவரது மனைவியும் சேர்ந்து அவர்கள் பெற்ற 2 மகள்களை, ஒரு கிறுக்கு/ஏமாற்றுக்கார மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, பலியிட்டனர். இந்நிகழ்வை "பெற்றோர்-பிள்ளைகள்-பலி" என்று சுருக்கலாம். பெரும்பாலான புறம்போக்குகள் மகனை பலியிடச் சொல்லும். பெண்தெய்வ வழிபாட்டு புறம்போக்குகள் மகளை பலியிடச் சொல்லும்.

தகவல் தொடர்பு வெகுவாக வளர்ந்து விட்ட இக்காலத்திலும் இப்படி ஏமாறுபவர்களும், ஏமாற்றுபவர்களும் இருக்கும் போது அக்காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவும். அதுவும், பண்படாத, காட்டுமிராண்டித்தனமான மக்களையே பெரும்பான்மையாகக் கொண்டிருந்த ஐரோப்பிய & மத்திய கிழக்குப் பகுதிகள் எப்படியிருந்திருக்கும்?

கிறித்துவ மதத்தின் முக்கிய நகரமான வாடிகன் ஒரு காலத்தில் சிறு பிள்ளைகளையும் விலங்குகளையும் பலியிடும் இடமாக இருந்தது. அந்நகரின் அடித்தளமே மண்டையோடுகளால் ஆனது என்று சொன்னாலும் மிகையாகாது!

இஸ்ரவேலர் இயேசுவின் கதையும் "தந்தை-மகன்-பலி" வகை தான்! ("உலகைக் காப்பதற்காக பரமபிதா தனது ஒரே மகனான இயேசுவை பூமிக்கு அனுப்பியதன் மூலம் அவரை பலியாக்கினார்") குறுக்கை என்பது நமது உடலாகும். அதில் அறையப்பட்டிருக்கும் இயேசு என்பது சிதைக்கப்பட்ட  மனமாகும். இவ்வுருவைக் கண்டவுடன் "மனதை அழி" என்று அவர்களுக்குத் தோன்றவேண்டும். மாறாக, "2000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேய்யா!" என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

ஐரோப்பாவின் கதையே இப்படியெனில் பாலைவனப் பகுதிகள் எப்படியிருந்திருக்கும்?

🔹ஆடு

"மனதை அழி" என்று சொன்னால் எல்லோரையும் சென்றடையாது என்பதால் "நரகாசுரன்" வகை கதைகளை உருவாக்கினர். இது, சமூகத்தின் சில பகுதிகளில் ஏடாகூட விளைவுகளை ஏற்படுத்தியதால் அடுத்து விலங்குகளுக்கு மாறினர். குறிப்பாக, ஆட்டைத் தேர்ந்தெடுத்தனர்.

நம் ஊர்களில் "கிடா வெட்டு" திருவிழாக்கள் நடக்கும். ஆட்டுக்கிடாவை வெட்டி, பொங்கல் வைத்து, இறையுருவங்களுக்கு படையலிட்டு, உற்றார் உறவினருடன் விருந்துண்பர்.

இதில், ஆடு என்பது மனமாகும் (மனதைக் குறிக்கும் முருகப்பெருமானின் ஊர்திகளில் ஒன்று ஆடு). ஆட்டை வெட்டுதல் என்பது மனதை அழித்தலாகும். பொங்கல் என்பது மனம் அழிந்தோரிடமிருந்து (மெய்யறிவாளர்களிடமிருந்து) வெளிப்படும் சொற்கள் - அறிவுரைகளாகும். அந்த அறிவுரைகளை எல்லோரிடமும் எடுத்துச் செல்லுதலே பகிர்ந்து உண்ணுதலாகும்.

இதற்கு அண்மைக்கால மிகச்சிறந்த எடுத்துக்காட்டு: பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இவரது மனமழிந்த பிறகு, இவரிடமிருந்து பொங்கிய "நான் யார்?" எனும் பொங்கலால் வீடுபேறு அடைந்தோர் எத்தனையோ! இனி வரும் காலங்களிலும் ஆன்மபசி போக்கவல்ல உணவு இது ஒன்றேயாகும்.

மீண்டும் பாலைவனப் பகுதிக்கு திரும்புவோம்.

"மகனைக் கொல்" என்று சொன்னதால் வந்த விளைவைக் கண்ட அப்பகுதி பெரியவர், "ஆட்டைக் கொல்" என்று மாற்றியிருக்கிறார். "மகன் நின்ற இடத்தில் ஆடு இருந்தது" என்று பக்ரீத் கதையில் வரும் சொற்றொடர் உணர்த்தும் பொருள் இதுதான்.

இதன் பிறகு, ஆட்டின் இறைச்சியை மூன்றாகப் பிரிப்பதென்பது நாம் மேலே பார்த்த "பகிர்ந்துண்ணுதலுக்கு" சமம்.

பக்ரீத் = பக்ரு + ஈத் = ஆடு + திருநாள் = ஆட்டுத் திருநாள் = மனதை அழிக்கும் பெருநாள்!!

(எவ்வாறு நமது விநாயகர் சதுர்த்தி, அனுமார் படைப்பு/பிறப்பு (ஜெயந்தி) போன்ற திருவிழாக்கள், அந்தந்த இறையுருவங்கள் உருவாக்கப்பட்ட நாட்களோ (அல்லது, அப்படிப்பட்ட இறையுருவங்களை உருவாக்கலாம் என்ற எண்ணங்கள் நமது பெரியோர்களுக்கு தோன்றிய நாட்களோ), இவ்வாறே பக்ரீத்தும் "பிள்ளைக்கு மாற்று ஆடு" என்ற சிந்தனை தோன்றிய நாள் அல்லது அந்த சிந்தனை செயலாக்கப்பட்ட நாள். அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கருத்தில் கொண்டால் இது எவ்வளவு பெரிய, சிறப்பான, அப்பகுதி மக்களைக் காப்பாற்றிய மாற்றம் என்பதை உணரலாம்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, July 15, 2021

ஜி யு போப் என்ற வி(மி)ஷநரி!! 👊🏽👊🏽

"ஆனி மகம் - திரு மணிவாசகப் பெருமானின் திருநாள்" என்ற இடுகையின் தொடர்ச்சி...


திருவாசகம் பற்றி படிக்கும்போது உடன் ஜி யு போப் என்ற பரங்கி வி(மி)ஷநரி பற்றியும் படிக்க நேரிடும். "அவனே இப்படி சொல்லியிருக்கிறான்", "அப்படி எழுதியிருக்கிறான்" என்றெல்லாம் படிப்போம். இது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு!

இவன் என்ன தெய்வ சேக்கிழாரா? சிவஞானபோதம் தந்த மெய்கண்டாரா? முட்செடியையும் சிவபதம் அடையச் செய்த உமாபதியாரா? நம்மிடமிருப்பவற்றை திருடிச் செல்வதற்கும், அடிமை மனப்பான்மையை விதைப்பதற்கும்,
நஞ்சை பரப்புவதற்கும் வந்த விஷநரி!

திருவாசகத்தை மொழி பெயர்க்கும் போது, சைவத்தின் மீது தனக்கு தாழ்ந்த மதிப்பே உள்ளது என்றும், தனது வெள்ளையினத்தவர் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே மொழி பெயர்ப்பதாகவும் எழுதியிருக்கிறான். இதற்குப் பிறகும் இவனையும் இவனைப் போன்றோரையும் (வீரமாமுனிவன் எனும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி...) நாம் போற்றிக் கொண்டிருப்பதற்கு காரணம் இவர்களிடம் பொரை பெறும் திருட்டுத் திராவிடக் கழிசடைகள் & தேசத்துரோக பான்பராக் சட்டைகள்!! ✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽👊🏽🤬

மணிவாசகப் பெருமானின் வரலாற்றில், இறைவன் நரிகளை பரிகளாக மாற்றினார் என்ற நிகழ்வு வரும். அது போன்று, இன்றும் உலகெங்கிலும் பரவியுள்ள பல வி(மி)ஷநரிகளை இறைவன் பரிகளாக்கிவிட்டால் உலகம் எவ்வளவோ நிம்மதியாக இருக்கும்! 😍

Wednesday, July 14, 2021

ஆனி மகம் (13/07/21) - திரு மணிவாசகப் பெருமானின் திருநாள்!


ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo


திருவாதவூர் - பெருமான் பிறந்த ஊர். மதுரையம்பதிக்கு அருகிலுள்ளது.


மதுரையம்பதி - இத்திருத்தலத்தில், பெருமானுக்காக, இறைவன் (திரு சுந்தரானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️) பிட்டுக்கு மண் சுமந்தார், நரிகளை பரிகளாக்கினார்.


ஆவுடையார்கோயில் எனும் திருபெருந்துறை - பெருமான் தனது மெய்யாசிரியரை 🌺🙏🏽🙇🏽‍♂️ சந்தித்த திருத்தலம். ஆசிரியரது பார்வை பட்டதுமே "தானேத் தானாய்" சமைந்து மெய்யறிவு பெற்ற திருத்தலம்.


பெருமான் வரும் போது, ஆசிரியர் ஒரு கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்.  அம்மரம் இருந்தவிடத்தில் இப்போது ஒரு கற்சிலையை வைத்துள்ளனர்.

(இத்திருத்தலம் ஒரு சிற்ப கலைக்களஞ்சியமாகும். அசுவினி முதலான 27 விண்மீன் கூட்டங்களின் உருவ அமைப்பை, என்றோ உள்ளுணர்வில் உணர்ந்து, இங்கே சிற்பமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்! இங்குள்ள சிற்பங்களைப் பற்றி எழுதவேண்டுமானால் தனி நூலே எழுதவேண்டும்.)


திரு உத்திரகோசமங்கை - பெருமானது முற்பிறவி நிகழ்ந்த திருத்தலம்.  பேரரசர் இராவணன் மற்றும் மாமுனி மயனின் மகள் மண்டோதரியின் திருமணம் நிகழ்ந்த தலம். (மாமுனி மயனின் வேறு பெயர்கள் மாயாசுரன் & விஸ்வகர்மா. உலகின் முதல் அறிவியல் நூலான ஐந்திரத்தை எழுதியவர்.)


திருக்கழுக்குன்றம் - இங்குள்ள மூலவரை பெருமான் காணும் போது, திருப்பெருந்துறையில் தான் சந்தித்த தனது மெய்யாசிரியரையே மூலவராகக் கண்டார்.


திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில், பெருமான் வடக்கிருந்து நிருவிகற்ப சமாதித் துய்ப்பு பெற்றவிடம். இன்றும் நல்ல முறையில்  பாதுகாக்கப்பட்டுவருகிறது.


திருவண்ணாமலை - அடி அண்ணாமலை திருத்தலத்திற்கு அருகிலுள்ள இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் குடில் அமைத்து, சில காலம் தங்கி, பெருமான் திருவெம்பாவை இயற்றினார். 

(இது போன்றொரு திருத்தலம் மஞ்சள் அல்லது வெள்ளை இனத்தவரின் நாட்டில் இருந்தால், அவர்கள் அதைப் போற்றி, பாதுகாக்கும் விதமே வேறு. ஆனாலும், அவர்களால் நம்மைப் போன்று சமூகநீதியைக் காக்கமுடியாது! 😏)


தில்லை - பெருமானின் இறுதிக்காலம் கழிந்த திருத்தலம். இவ்வூருக்கருகில் உள்ள ஒரு கிராமத்தில் பெளத்தர்களை வாதில் வென்றார். உடன், பிறவி ஊமையான ஒர் இலங்கை இளவரசியை பேச வைத்தார். 

திருவாசகம் முழுவதையும் பெருமானை பாட வைத்து, கூத்தபிரானே (திருமூலர் 🌺🙏🏽🙇🏽‍♂️) அவற்றை தொகுத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை.


திருவாசகத்தின் முதலிரண்டு அடிகள்:

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க


திருவாசகத்தின் கடைசிப் பதிகத்தின் முதல் பாடல்:

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே

oOOo

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Thursday, July 8, 2021

அழுதால் இறைவனை அடையமுடியுமா?

யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

-- திரு மாணிக்கவாசகப் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️, #8.5.90

மரபுவழி பொருள்: நான் வஞ்சம் நிறைந்தவன். என் மனமும் தூய்மையானதல்ல. என் அன்பும் போலியாகும். நான் தீய செயல்களை செய்கின்றவனாலும், உன்னை நினைத்து மனம் உருகி அழுதால், உன்னை அடைய முடியும்.

(அதாவது, பொய்மையால் இறைவனை அடைய முடியாது. உண்மையான அன்பினால்தான் (பத்திமையால்) அடையமுடியும்.)

oOOo

"வினையேன்" என்பதற்கு "தீவினைகள் புரிபவன்" என்று பொருள் கொள்வதை விட "நான் எழுதுகிறேன்", "நான் படிக்கிறேன்", "நான் பேசுகிறேன்" என்று வினைகளை "தான் புரிவதாக எண்ணுகிறவன்" என்று பொருள் கொள்வது சரியாகவிருக்கும். இதற்கு காரணம், உடலல்லாத நம்மை நாம் உடலென்று தவறாக எண்ணுவதுதான் காரணம். எப்போது இது சரியாகும்?

அழுதால் சரியாகும் என்று குறிப்புக் கொடுக்கிறார் பெருமான். எவ்வாறு அழுதால்? வினையேன் அழுதால். இதற்கு, "தீவினைகளைப் புரிபவனான நான் அழுது அரற்றினால்" என்று பொருள் கொள்வதை விட, "வினைகளை நான் புரிவதாகக் கருதும் எனது தவறான எண்ணத்தை விட்டொழித்தால்" என்று பொருள் கொள்வது சிறப்பாகும்.

வேறு வழியேயின்றி ஒரு பொருளை யாருக்காவது கொடுக்க நேர்ந்தால் என்ன சொல்கிறோம்? அழுதோம் என்கிறோம். (எ.கா.: இப்பத்தான் அவனுக்கு தண்டம் அழுதுட்டு வர்றேன்). இது போன்று, "நான் வினை புரிகிறேன்" என்ற தவறான எண்ணத்தை (வினையேன்) விட்டொழித்தால் (அழுதால்) இறையுணர்வைப் பெறலாம்!!

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, July 2, 2021

திருவானைக்கா திருத்தலத்தின் தலவரலாறு உணர்த்தும் உண்மைகள்


🌺🙏🏽🙇🏽‍♂️

(இந்த சுதைக் காட்சியை, திருக்கோயிலுக்குள் செல்லும் போது வலது புறத்தில் காணலாம். உள்ளேயும் ஒரு கல்தூணில் இதே காட்சியை மிக அழகாக வடித்திருக்கிறார்கள்.)

தலவரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புவோர், தயவு செய்து, இணையத்தில் தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளவும். அது உணர்த்தும் கருத்துகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

🌷 உலக வாழ்வு என்பது அறிவுக்கும் (யானை) மனதிற்கும் (சிலந்தி) நடக்கும் போராட்டமாகும்.

🌷 இவற்றால் பரம்பொருள் (சிவலிங்கம்) பாதிப்படைவதில்லை. பரம்பொருளுக்கு பிறப்பில்லை, இறப்பில்லை, மாற்றமில்லை & செயலும் இல்லை. சாட்சி மாத்திரம்தான்.

🌷பரம்பொருள் சாட்சி மாத்திரம்தான் எனில், உலகை இயக்குவது இறைவனின் ஆற்றலாகிய அன்னை/பெருமாள். உலக இயக்கத்தை, அதில் நிகழும் நிகழ்வுகளை, "அன்னை இறைவனுக்கு நடத்தும் பூசனை" என்று சித்தரித்துள்ளனர். இதையே, காசியம்பதியில், "அன்னை இறைவனுக்கு அளிக்கும் அமுது" என்று சித்தரித்திருப்பர்.

🌷 நாம் காணும் உலகம் நம்முள்ளிருந்து வெளிப்படுகிறது என்ற பேருண்மையைக் கண்டுணர்ந்து உலகுக்கு தெரிவித்தவர் ஜம்பு முனிவர். இத்திருத்தலத்தின் மூலவர். 🌺🙏🏽🙇🏽‍♂️ (தலவரலாற்றில், இவரது வயிற்றிலிருந்து வாய் வழியாக நாவல் மரம் வெளிவருவதாக எழுதியிருப்பர். இங்கு சித்தரிப்பில், இவரது தலைவழியாக வெளிவருவது போன்று காட்டியுள்ளனர்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️