Showing posts with label பகவான். Show all posts
Showing posts with label பகவான். Show all posts

Friday, October 13, 2023

ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரியம் கலக்காதபோது, தமிழில் மட்டும் ஏன் ஆரியம் கலந்திருக்கவேண்டும்?


👆🏽 பகவான் திரு இரமண மாமுனிவரிடமிருந்து வெளிப்பட்ட ஒரு பொன் மொழி.


அப்பொன்மொழியின் ஆங்கில மொழி பெயர்ப்பு 👆🏽.

ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரியம் கலக்காதபோது, தமிழில் மட்டும் ஏன் ஆரியம் கலந்திருக்கவேண்டும்?

கேட்டால், பகவான் அப்படித்தான் பேசினார் என்பார்கள். பிறப்பால் மட்டுமே பகவான் ஆரியராவார். மனதளவில் அவர் தமிழராவார். திருநெறிய தமிழை அவர் விரும்பினார் என்பதற்கு அவர் வாழ்விலிருந்தே பல சான்றுகளை கொடுக்கமுடியும். அவர் வளர்ந்த & வாழ்ந்த சூழ்நிலையால் ஆரியம் கலந்து பேசினார். இரண்டன்மையை (ஆரியத்தில், அத்வைதம்) பற்றிய தூயத்தமிழ் நூல் இல்லையென்ற குறையை போக்கியவர். ஆரியத்தை கலந்து அன்னைத்தமிழை குறையாக்கும் பணியை தெரிந்து செய்திருக்கமாட்டார்.

இன்று பகவான் உடல் தாங்கியிருந்து, அவரிடம் நாம், "பகவானே, தாங்கள் இப்படி பேசினால் எங்களுக்கு சரியாக புரிவதில்லை. தயவு செய்து, ஆரியம் கலக்காமல் விளக்க வேண்டுகிறோம்." என்று வேண்டினால், மகிழ்ச்சியுடன் தூயத்தமிழில் விளக்குவார்; அல்லது, முயற்சியாவது செய்வாரென்று உறுதியாகக் கூறலாம்.

oOo

பகவானின் பொன்மொழி என்றுமுள தென்தமிழில் - சற்று விரிவாக:

மனமானது நமது தன்மையுணர்வில் ஒருமுகப்பட்டிருக்கவேண்டும். எண்ணங்கள் எழுந்து, மனதின் ஒருமுகம் சிதறுமானால், "அந்த எண்ணங்கள் யாருக்காக தோன்றின?" என்று ஆராயவேண்டும். இப்படி ஆராய்வதால், எழுந்த எண்ணங்கள் அடங்கிவிடும்; மனமும் மீண்டும் தனது வேரான தன்மையுணர்விற்கு திரும்பிவிடும்.

சற்று சுருக்கி:

மனதின் ஒருமுகம் சிதறுமானால், ஏன் சிதறியதென்று ஆராய வேண்டும். இப்படி ஆராய்வதால், அது தனது வேரில் ஒடுங்கிவிடும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, May 26, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #30: பிரான், வானவர், தேவர் - சிறு விளக்கம்

கண்டம் இருளக் கடுவிடத்தை வானவர்க்கா
உண்டுபிரான் ஆகி உதவுமலை - தொண்டர்
இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி
வணங்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #30

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

பிரான் என்று சொல்லை குரு நமச்சிவாயர் 🌺🙏🏽 பயன்படுத்திய விதம் சிந்திக்க வேண்டியது!

#பிரான் என்ற சொல்லுக்கு எல்லோருக்கும் இறைவன், அரசன், தலைவன் மற்றும் தந்தை ஆகிய பொருள்கள் உண்டு. இன்று பல தெய்வங்களைக் குறிக்க பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், ஆதியில் இது சிவபரம்பொருளை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்பட்டது.

🔹பிரான் ஆகி - எப்படி ஒருவர் பிரான் ஆக முடியும்? கொடிய விடத்தை வானவர்க்காக உண்டு.

🔹யார் #வானவர்? #தேவர்கள். முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலானோர் நுண்ணுயிரிகளே!! நாம் இல்லாமல் இவ்வுலகு இயங்கும். ஆனால், நுண்ணுயிர்கள் இல்லாமல் இவ்வுலகு இயங்காது. மீதமுள்ளவை, உடலிலும் உலகிலும் இயங்கும் இயற்கை விதிகள் (ஈர்ப்பு விசை...), ஐம்பூதங்கள், பகலவன், நிலவு போன்ற கோள்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்தால் என்ன கிடைக்கும்? மொத்த உலகம்! 😊 வானவர்க்காக எனில் உலகுக்காக!! (மனிதர்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே இல்லை. மொத்த உலக மக்கள் தொகையைவிட ஒரு கையளவு மண்ணில் அதிக நுண்ணுயிரிகள் இருக்கும்!)

🔹தன்னை பாதித்தாலும், தான் இறந்தே போனாலும் பரவாயில்லை என்று, தனது உலகுக்காக, கொடிய விடத்தைக்கூட அருந்தத் தயங்காதவரே பிரான் என அழைக்கப்பெறும் தகுதி பெற்றவர். இங்ஙனமே அரசன், தலைவன், தந்தை என விரித்துப் பொருள் கொள்ளலாம். (இவ்விதி இன்றைய ஆட்சியாளர்களுக்கு பொருந்தாது என்பது சிறு பிள்ளையும் அறிந்ததே. 😛)

🔹இவ்வளவு பாடுகளையும் பட்டு பிரான் நிலையை அடைவது எதற்காக? உதவுவதற்காக!! ("பிரான் ஆகி உதவுமலை")

🔹யாருக்கு உதவுவதற்காக? தன்னை நாடி வரும் அன்பர்களுக்காக.

🌷"ஐயே! அதிசுலபம் ஆன்ம வித்தை" என்று ஊக்குவித்து,
🌷 "மனத்தின் உருவை மறவாது உசாவு" என்று வழிகாட்டி,
🌷"தானாயிருத்தலே தன்னை அறிதலாம்" என்று இருத்துவதற்காக!! (இருத்து - நிலைபெறு - நிலைபேறு)

(எல்லாம் பகவான் திரு ரமணரது 🌺🙏🏽 பாடல் வரிகள்!!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, May 19, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #23 - "சிம்புள்" - சிறு விளக்கம்



நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை
ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை
உதைத்தமலை அன்றுஅரியை ஓர்சிம்புள் ஆகி
வதைத்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #23

🔸ஏற்றைப் பரியாக ஏறுமலை - ஏறு-எருது-சிவன்காளை-மனம். பரி-குதிரை. மனதை வேகமாக விரட்டுபவர். மனதை இயக்குபவர். மனதின் தலைவனுமாகிய எம்பெருமான்.

🔸கூற்றை உதைத்தமலை - எமனை உதைத்த படலம். மார்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற விதம். முதல் இறப்பு துய்ப்பு கிடைத்த பின்னர் என்ன நடந்தது என்பதை பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 விளக்குகிறார்: அத்தோடு மரணபயம் என்னை விட்டு விலகியது!! ஆக, கூற்றை உதைத்தல் என்பது மரணபயம் போதல். எனில், மெய்யறிவு பெறுதல் ஆகும்!!

🔸அரியை ஓர்சிம்புள் ஆகி வதைத்தமலை - சிம்புள்-எண்காற்புள்-நடுக்கந்தீர்த்த பெருமான்-சரபேசுவரர் 🌺🙏🏽 அரி-நரசிங்கம். இரணியனைக் கொல்ல தூணிலிருந்து வெளிப்பட்டவர். இரணியன்-ஆணவம். தூண்-தாணு-சிவம். ஆணவத்தை அழிக்க இறை வெளிவிட்ட தெளிவே நரசிங்கம் 🌺🙏🏽 இந்த தெளிவு கிடைத்த பின், இதுவே இறுதி நிலை என்று முடிவு செய்து விடுவோம். இது தவறு. இதற்கும் மேல் உள்ளும் புறமும் இணைந்த நிலையொன்று (சகஜ நிலை) உள்ளது என்பதைக் குறிப்பதே சிம்புள். சைவம் என்ற சொல்லின் பொருளும் "உள்ளும் புறமும் இணைந்தது" என்பதாகும்!!


🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

Wednesday, September 25, 2019

இந்த வார ஞானானந்தம் = ஒரு ஆரம்பநிலை பைத்தியம் + 23ஆம் புலிகேசிக்கு சமமான ஒரு அரசர் + ஒரு முக்கால் வேக்காடு!! 😝



காலையில் முதன் முதலில் கண்ணில் படும் நபரை ராமா என்று சொல்லச் சொல்லி, பின்னரே வேலையைத் துவங்குவாராம். அப்படிச் சொல்லாவிட்டால், சண்டையிட்டு அரசர் வரை செல்வாராம். வேலை வெட்டி இல்லாத புலிகேசி அரசரும், இது ஒரு வழக்கென்று விசாரிப்பாராம். விசாரித்து முடிக்காமலேயே வைக்கப்படும் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாராம். இன்னும் ஒரு முறை இறைவனின் பெயரைச் சொன்னாலே விடுதலை என்று உணர்ந்த அதி தீவிர பத்திமர், இன்னும் குடும்பத்தின் மேல் பற்று வைத்து, பரம்பொருளை நம்பாமல் அரசரை நம்புவாராம். இறைபெயரைச் சொன்னவுடன், கபாலம் திறந்து, ஒரு ஒளிச்சுடர் புறப்பட்டு (கண்டசாலா  பின்னணி இசையுடன் 😁) ஆகாயம் நோக்கிச் சென்றதாம் (ஏனெனில்,  அங்கு தான் Z+ பாதுகாப்புடன், அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் கொண்ட பரம்பொருளின் ஆஃபீஸ்-கம்-ரெசிடன்ஸ் உள்ளது! 😜).

இன்னும் எவ்வளவு காலம் தான் மக்களை மாக்களாகவே வைத்திருக்க முயற்சிப்பரோ? 😔

ஜபத்தின் பொருள், எல்லா நினைவகளும் / எண்ணங்களும் விலகுவதற்காக ஒரு நினைவை / எண்ணத்தை உறுதியாகப் பற்றுதல் (பகவான் திரு ரமணரின் 🌺🙏🏼 விளக்கம்). அந்த ஒரு எண்ணம் ராமரைப் பற்றியதாகவும் இருக்கலாம். அவரது மாமனார் இராவணனைப் பற்றியதாகவும் இருக்கலாம் (வான்மீகி இராமாயணம் தவிர வேறு இராமாயணங்கள் எத்தனையோ உண்டு. சிலவற்றில் இவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.). எல்லாவற்றிலும் சிறந்ததாக பகவான் அருளுவது நான் என்னும் நமது தன்மையுணர்வை ஜபிப்பது ("நான் நான் என்று கருதிக் கொண்டிருந்தாலும் இருதயத்திற்கு கொண்டு போய்விடும்").

ஜபம் வெகு தீவிரமடையும் போது அஜபமாக மாறும். தானாக நடக்கும். தானாக நடக்கும் ஜபத்தைக் காண (சாட்சி) ஒருவன் இருக்க வேண்டுமல்லவா? அந்த ஒருவன் தான் நாம். மனதின் சாட்சி. என்றும் உள்ளபொருள். நாம் எப்போதுமே உள்ளபொருளாக இருந்தாலும், நம்மை நாம் அவ்வாறு உணர்வதில்லை. அவ்வாறு உணர்வதற்காகத் தான் ஜபம், தியானம், தன்னாட்டம், திருத்தல பயணம் என பல உத்திகளை நம் முன்னோர்கள் உருவாக்கினர்.

ஒரு மண்குடத்தின் உள்ளேயும் வெளி உள்ளது. வெளியேயும் வெளி உள்ளது. இரண்டையும் சேர்க்க, மண்குடத்தை உடைத்தால் போதும். இது போன்றது தான் இறைவனை அடைதலும். இந்த மொத்த அண்டமும் இறைவன் தான். நம்முள் சாட்சி மாத்திரமாக இருப்பதும் அவர் தான். "நான் இன்னார்" என்ற மண்குடத்தை உடைத்தால் போதும். கபாலம் திறந்து, கண்டசாலா இசையுடன், ஒளிச்சுடர் வானோக்கி செல்லத் தேவையில்லை!! 😛

ஜபத்தின் முடிவு அஜபம். தியானத்தின் முடிவு தியானிப்பவனே தியானிக்கப்படுபவன் என்று உணர்தல். இவ்விரண்டு உத்திகளும் வெற்றி பெற பகவான் அறிவுருத்தும் நுணுக்கம்:

விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சிபோல்
விட்டிடாது உண்ணலே உந்தீபற
விசேடமாம் உன்னவே உந்தீபற

அவ்வப்போது ஜபித்தலைக் / தியானித்தலைக் காட்டிலும் தொடர்ந்து, ஆற்றின் நீரோட்டத்தைப் போல, ஊற்றப்படும் நெய்யின் வீழ்ச்சியைப் போல ஜபித்தலே / தியானித்தலே சிறப்பானதாகும்.

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

Monday, May 6, 2019

திருக்கடவூர் - எமபயம் போக்கும் தலம்!! 🌺🙏🏼

#திருக்கடவூர் - மார்க்கண்டேயருக்கு அருளிய தலம் - எமபயம் போக்கும் தலம் - #காலசம்ஹாரமூர்த்தி வெளிப்பட்ட தலம்

🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺


🔆 யம (Yama) என்பதை மாற்றிப் படித்தால் மாய (Maya) என்று வரும். அதாவது, மாயை - இல்லாதது (#பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼 அருளியது). யமனின் வாகனம் எருமை மாடு - சோம்பலைக் குறிக்கும். நம்முள் இருக்கும் இமைப்பொழுதும் நீங்காதான் தாள்களை இமைப்பொழுதும் நீங்காமல் பற்ற வேண்டும். ஒரு கணம் தவறினாலும் மாயையின் பிடிக்குள் போய்விடுவோம். ஆக, இறப்பு என்பது மெய்யிலிருந்து பொய்க்குள் போய் விழுவது! மற்றும், பிறப்பு என்பது பொய்யிலிருந்து மெய்க்கு வந்து சேருவது!!


"#மெய்யறிவு (#ஞானம்) கிடைத்த பிறகு என்னவாயிற்று?", என்று அன்பர் ஒருவர் கேட்டதற்கு, "அத்தோடு உயிர் பயம் போயிற்று", என்று பதிலளித்தார் பகவான் ஸ்ரீ ரமணர். ஆக, "எம பயம் போயிற்று" என்பதன் பொருள் "மெய்ஞானம் கிடைத்தது" என்பதாகும்! "எமபயம் போக்கும் தலம்" எனில் "மெய்ஞானம் அருளும் தலம்" என்பதாகும்!!


🔆 "#யமன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறைவனைப் பணிந்து நின்றார்" என்பதன் பொருள் - மெய்யறிவு தோன்றும் கணம் மாயக் காட்சிகள் மறைந்து போகும். பின்னர், மீண்டும் தோன்றும். மெய்யறிவு பெறுவதற்கு முன் மாயை என்பது அரைகுறை வெளிச்சத்தில் தெரியும் பாம்பு போன்றது; பெற்ற பின்  நல்ல வெளிச்சத்தில் தெரியும் கயிறு போன்றது (மெய்யறிவே வெளிச்சம்). மெய்யறிவு பெற்ற பின்னரும் மாயக் காட்சிகள் தொடரும். ஆனால், மெய்யறிவாளரை ஒன்றும் செய்யாது. யமன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறைவனைப் பணிந்து நிற்பதன் பொருள் இதுவே!!


🔆 மூலவரின் பெயர் திரு #அமிர்தகடேச்சுவரர். கடம் என்றால் குடம். இங்கு குடம் உடல் என பொருள்படும்.. அமிர்தம் என்பது இங்கு அழிவற்றது / இறப்பற்றது என பொருள்படும். இணைத்துப் பார்க்கும் போது "அழிவற்ற உடலை உடையவர்" என பொருள் வரும். "பிறப்பிலியான சிவப்பரம்பொருளுக்கு உடலா?", என்ற கேள்வி எழலாம். பொருள் நிலையைத் தாண்டிய இறையை (பரம்), பொருள் என்ற சொல்லோடு இணைத்து பரம்பொருள் என்றழைப்பது போல, தோன்றி மறையும் நுண்ணுயிரியின் உடல் முதல் விண்மீன் வரை அனைத்திற்கும் இடம் அருளும் அண்டத்தை இறைவனின் உடலாகக் கருதி இவ்வாறு பெயரிட்டிருக்கிறார்கள்.


🔆 #காலசம்ஹார #மூர்த்தி - தன்னை வணங்கிய மார்க்கண்டேயனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காலனை (யமனை) உதைத்து தள்ளியவர் என்று சுவைபட ஒரு பேருண்மையை பதிவு செய்திருக்கிறார்கள்.


சீவனாகிய நம்மால் ஓரளவிற்கு மேல் நமக்குள் ஆழ முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் வெளிமுகமாகவே செல்ல எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை, திரும்ப திரும்ப நான் என்னும் நமது தன்மையுணர்வின் மேல் கொண்டு வந்து வைப்பது மட்டுமே. ஒரு சமயத்தில் நமது இயலாமையை நாம் உணர்ந்து நமது முயற்சியை கைவிடுவோம் (இதுவே #சரணாகதி எனப்படும்). அச்சமயம் உள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நமக்கு ஒரு புதிய தெளிவைக் (அறிவு என்றும் கொள்ளலாம்) கொடுக்கும். இந்த ஆற்றலே காலசம்ஹார மூர்த்தி ஆவார் (இந்த காலசம்ஹாரம் வைணவத்தில் #ஆணவ #சம்ஹாரம் - #இரணிய #வதம் -  என்றும், காலசம்ஹார மூர்த்தி #நரசிம்மர் என்றும் மாறிவிட்டது.) கிடைத்த புதிய தெளிவே #தகப்பன் #சுவாமி (#சுப்ரமணியர்) எனப்படும் (சாக்தத்தில் #அன்னபூரணி என்று அழைக்கப்படுவதும் இதே தெளிவு தான்). இந்த தெளிவால், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு (மாயை) அழிந்துவிடும். காலசம்ஹாரம் - காலனை உதைப்பது என்பது இதுவே!! (உள், வெளி, ஆழ்ந்து, வெளிப்பட்டு என்பதெல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்தியுள்ள சொற்கள். உண்மையில் இருப்பது ஒரு பரம்பொருளே. காணப்படும் அனைத்து அதன் வெளிப்பாடே. நாம் இறைவனை தேடுவதென்பது: "ராமன் என்பவன் தன்னை ராமன் என்று உணர கண்ணாடி வேண்டுமோ?", பகவான் ஸ்ரீ ரமணர் 😀)


🔆 என்றும் 16 பெற்ற #மார்க்கண்டேயர் - இதை படித்ததும், மார்க்கண்டேயர் வரம் பெற்ற பிறகு 16 வயது இளைஞனாகவே வாழ்ந்தார் என்று நினைத்துக் கொள்வோம்!! இது தவறு. 😁


பகவான் ஸ்ரீரமணர் தனது 16 வயதில், மதுரையில் அவரது சிறிய தந்தையின் வீட்டில் தங்கியிருந்த போது மெய்யறிவு பெற்றார். பிற்காலத்தில் அவரது ஆசிரமத்திற்கு வந்த ஒர் அன்பர், "இத்தனை வருடங்களில் தங்களது (மெய்யறிவு) நிலையில் ஏதேனும் மாற்றமுண்டா?" என்று கேட்டதற்கு, பகவான், "இல்லை. அதே நிலைதான் இன்றும். சிறிதும் மாற்றமில்லை." என்று பதிலளித்தார்.


இது தான் "என்றும் 16" என்பதின் பொருள்!! மார்க்கண்டேயர் தனது 16 வயதில் மெய்யறிவு பெற்று மார்க்கண்டேய மகரிஷியாக 🌺🙏🏼 உயர்ந்திருக்கிறார். பின்னர், அந்த நிலையிலேயே வாழ்ந்து, இறுதியில் திருக்கடவூரில் திரு அமிர்தகடேச்சுவர அடையாளத்தின் கீழ்  சமாதியாகியிருக்கிறார். மெய்யறிவு பற்றிய அவரது அறிவுரைகளை அல்லது மெய்யறிவுப் பாதையில் அவருக்கு கிடைத்த பட்டறிவை தல வரலாறு, திருவிழாக்கள், இறை உருவங்கள் மற்றும் இறை பெயர்கள் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!! 🙏🏼


🌸🏵️🌻🌷🌼🌹💮


தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி

விலக்குவா ரிலாமை யாலே விளக்கத்திற் கோழி போன்றேன்

மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்து

கலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னீரே


-- அப்பர் 🌺🙏🏼 தேவாரம் 4.31.5


பொருள்: கடவூர் வீரட்டனீரே! நாணத்தக்க செயல்களையே செய்து வாழ்நாளைக் கடத்தி, ஏற்ற செயல் எதுவும் செய்யாமல், தவறு செய்வதைத் தடுத்து நல்வழிப்படுத்துவாரும் ஒருவரும் இல்லாமையால், செஞ்சுடர் விளக்கத்தில் தானே கூவித் தானே அடங்கும் கோழியைப் போல உள்ளேன். என் மனத்தினுள்ளே ஐம்பொறிகளும் கலக்கத்தைத் தருகின்றன. யமனுடைய ஏவலர்கள் வந்து கலக்குதலால் யான் யம பயத்தாற் கலங்குகின்றேன்.


🌸🏵️🌻🌷🌼🌹💮


குறிப்புகள்:


1. இணைப்பு படம்:  சென்ற 13/04/19 சனிக்கிழமையன்று திருக்கடவூரில் நடந்த யம சம்ஹார விழாவின் போது எடுக்கப்பட்ட படம். திரு சிவ ஏ விஜய் பெரியசுவாமி அவர்களின் முகநூலில் பக்கத்திலிருந்து எடுத்தேன்.


2. திருக்கடவூர் பழம்பெரும் தலமாக இருந்தாலும், எண்ணற்ற அருளாளர்களை ஈர்த்த தலமாக இருந்தாலும், மக்கள் வரவு அதிமாக இருப்பதால், அமைதியும் தனிமையும் வேண்டுவோர் அருகிலுள்ள இன்னொரு தேவாரப் பாடல் பெற்ற தலமான #திருக்கடவூர் #மயானம் செல்லலாம். என்ன ஓர் அமைதி!! 😍 நம் தனித்துவத்தை இழக்க - நான் என்னும் வடிவில் ஒளிரும் இறைவனின் திருப்பாதத்தை பற்றிக் கொள்ள _ தவமியற்ற சிறந்த தலம்!! 😌

Saturday, December 1, 2018

அனுமாரையும் குடும்பி ஆக்கிவிட்டார்கள்!! 😀


மனதைக் குறிக்க வைணவர்கள் உருவாக்கிய உருவம் தான் #ஆஞ்சநேயர் / #அனுமார்.

அலைபாயுதல் என்பது மனதின் இயல்பு. இதனால் தான் குரங்கைக் குறியீடாக எடுத்துக்கொண்டனர். இப்போது இந்த இயல்பை தனியாகப் பிரித்து, #சுவர்ச்சலா தேவி என்ற பெண்ணாக்கி, அப்பெண்ணிற்கு மனித முகத்தை வேறு கொடுத்துள்ளனர். அலைபாயும் தன்மை இல்லையெனில் மனம் மனமாகாது. அது "திரு" என்றாகும் வாய்ப்புள்ளது (திரு - நிலைத்த; நிலைபேறு - மெய்யறிவு - இறை)!!

"ஒரு நீர் நிலையில் உள்ள நீர் அசையாமலும் தெளிவாகவும் இருந்தால் நீர் தெரியாது. உள்புறம் மட்டுமே தெரியும்." என்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர் (பகவத் வசனாம்ருதம், எண் # 146; இதே விளக்கத்தை குங்ஃபூ பாண்டா - பாகம் 1 என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பர் (ஆசான் ஊக்வே ஆசான் ஷிஃபூவிற்கு மெய்யறிவு பற்றி விளக்கமளிக்கும் காட்சி)). இது போன்றே மனதின் அலைபாயும் தன்மையை விளக்கிவிட்டால் அங்கே மனம் இருக்காது; இறை வெளிப்படவே வாய்ப்புள்ளது. அப்படி வெளிப்படுங்கால், இணைப்பு படத்தின் பொருள் பெருந்தவறாகிவிடும் - பெருமாளும் சுவர்ச்சலா தேவியும் அமர்ந்திருப்பது போலாகிவிடும்!! 😀

இறையுருவம் என்பது ஒரு காலத்தில் ஒரு மெய்யறிவாளரின் (ஞானியின்) சமாதியைக் குறிப்பதற்காக (அடையாளத்திற்காக) பயன்படுத்தப்பட்டது. இன்று, அழிக்கப்பட வேண்டிய மனதிற்கு துணைவியைத் தரும் அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது. பெரும்பாலான மதங்களும், நம் சமயத்தின் சில பிரிவுகளும் "மனதை அழி" என்று அறிவுறுத்தும் போது, நம் சமயத்தின் மீத பிரிவுகள் மட்டும் மனதைக் கொண்டாட 3 முக்கிய காரணங்கள்:

▶ மனதின் வழியாகத்தான் இறையை அடைய முடியும்
▶ உலகம் செவ்வனே இயங்க மனம் இன்றியமையாதது
▶ மனமும் இறைவனின் படைப்பே

வாழ்க்கை வண்டி ஓட வேண்டும் என்பதற்காக, மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து வைக்கிறார்கள். பின்னர், அது நம் சமயத்திற்கே பெரும் கேடாக வந்து நிற்கின்றது!! 😔

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் யாவர்க்கும் இது உந்தீபற

-- பகவான் ஸ்ரீரமணர், உபதேச உந்தியார்


🌸🙏🌸🙏🌸


__(ஸ்ரீஆஞ்சநேயரைப் மேலும் அறிந்து கொள்ள: https://m.facebook.com/story.php?story_fbid=10156330139391052&id=698176051)__

posted from Bloggeroid

Monday, November 19, 2018

இணையத்தில் தமிழ் வளர்க்க உதவும் கூகுளின் 4 அருமையான உள்ளீட்டு சாதனங்கள்!!

கடந்த சில வருடங்களில் கூகுள் அதன் #உள்ளீட்டு சாதனங்களை மிகவும் செம்மையாக்கி உள்ளது! 👌 புதிய உள்ளீட்டு முறைகளையும் உருவாக்கியுள்ளது. ஆனால், இவை யாவும் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையவில்லை என்றே கருதுகிறேன். இன்றும் பலர் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை தப்பும் தவறுமாக எழுதுகின்றனர். தமிழில் எழுதுவோரும் பிழைகளை சரி செய்ய முயல்வதில்லை (தமிழில் #உள்ளீடு செய்வது சிரமம் என்று அவர்கள் கருதுவதால்). இத்தகையோருக்கு உதவுவதற்காக இந்த பதிவு.

🔷 தங்களது கைபேசியின் முதன்மை மொழியாக #தமிழ் இருப்பது நல்லது.

🔷 தங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் கீழ்காணும் 2 செயலிகள் தாம்:


இச்செயலிகளை பதிவிறக்கம் செய்த பின், அதன் அமைப்புகளுக்குச் சென்று (Settings - Language & Input) தேவையான மாற்றங்களை செய்து கொள்ளவும்.

இனி, தங்களால் 4 வழிகளில் தமிழை உள்ளிட முடியும். இவற்றைப் பற்றி பார்ப்போம்:

1. தட்டச்சு - இது அனைவரும் அறிந்த முறை. எனவே மற்றவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

2. விரலை நகர்த்தி உள்ளிடுதல் (Swiping) - தட்டச்சை விட சுலபமானது என்றாலும் இம்முறையிலும் தட்டச்சு முறையைப் போன்று நேரம் மற்றும் மிகுந்த பொறுமை தேவைப்படும். மேலும், ஒவ்வொரு சொல்லின் உயிர் & மெய் எழுத்துக்கள் வேகமாக நினைவிலிருந்து வெளிவரவேண்டும் (வேலை - வ+ஏ+ல+ஐ). ஆனால், ஆரம்ப நிலை தமிழ் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கும், பெரியோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும். 👍 (செயல் விளக்கம்)

3. கையெழுத்து உள்ளீடு (Handwriting Input) - இனி வரும் காலங்களில் இம்முறையே அதிகம் பயன்படுத்தப்படும் என்று உறுதியாகக் கூறலாம். அவ்வளவு எளிமையானது. குழந்தைகள் முதல் கை நடுக்கமுள்ள பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எழுத்தாணி (Stylus) இல்லாமல், வெறும் விரலை நகர்த்தியே எழுதலாம். ஆனால், குறியீடுகளை உள்ளிடுவது கடினம். குறியீடுகளுக்கு மேற்சொன்ன விசைப்பலகையை பயன்படுத்தவும். (செயல் விளக்கம்)

4. குரல் உள்ளீடு (Voice Input) - முதன்முதலாக இம்முறையை பயன்படுத்தியவுடன் பெரும்பாலானோருக்கு தோன்றும் உணர்வு - ஆச்சர்யம்!! முகமலர்வு, புன்முறுவல், பெருமிதம் போன்ற உணர்வுகளும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். 😊 இம்முறையினால் சமூக வலைதளங்கள் இன்னமும் பல மடங்கு வளரும். எதிர்காலத்தில் கருவிகள் பெரும்பாலும் இம்முறையில் தான் இயக்கப்பெறும்.

மேற்சொன்ன அனைத்து முறைகளையும் இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தலாம். ஆனால், தமிழ் குரல் உள்ளீட்டிற்கு, தற்போதைக்கு, இணையம் தேவை. அமைதியான சுற்றுபுறச் சூழல் மற்றும் சரியான உச்சரிப்பு இருக்கும் போது 100% சரியாக வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். இம்முறையிலும் அனைத்து குறியீடுகளை உள்ளிடுவது கடினம். (செயல் விளக்கம்)

மேலே பட்டியலிட்ட முறைகளில், கையெழுத்து மற்றும் குரல் உள்ளீட்டு முறைகளுக்காக கூகுள் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். "இனி நம் தமிழன்னை இணையத்தில் வாழ்வார்" என்று சொன்னால் எவ்விதத்திலும் மிகையாகாது. இதை சாத்தியப்படுத்திய கூகுள் நிறுவனத்திற்கு நாம் என்றென்றும் நன்றி கூறவேண்டும். 👏👌👍🙏

கருவிகள் எவ்வளவு மேம்பட்டாலும் அவற்றை பயன்படுத்தும் நாம் மேம்படாவிட்டால், நமது சிந்தனை மேம்படாவிட்டால், எவ்வித மாற்றமும் ஏற்படாது. சூழ்நிலைக்கேற்ற சரியான சொற்களை பயன்படுத்த முயலவேண்டும். வாழ்வில் ஒரு முறையேனும் சொல்லாராய்ச்சியில் ஈடுபடவேண்டும். இதனால் நமது சிந்தனை வளம் பெறும். நமது அன்னையும் நலம் பெறுவார். 🙏

💮💮💮

குறிப்புகள்:

1. இணைப்பு காணொளிகளில் நான் பயன்படுத்தியுள்ள வாசகம் #பகவான் #ஸ்ரீரமணர் அருளியது. உலக வாழ்க்கையிலிருந்து முழுதும் விடுபட முடியாத ஆன்மிக அன்பர்களுக்காக பகவான் அருளிய அருமருந்து. 🌸🙏

2. இந்த இடுகையை பெரும்பாலும் கையெழுத்து உள்ளீட்டு முறையைக் கொண்டும், சிறிதளவு குரல் உள்ளீட்டு முறையைக் கொண்டும், குறியீடுகளை GBoard கொண்டும் உருவாக்கியுள்ளேன்.

🌼🏵🌷🌻🌺🌹🌼

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

நமது தமிழ்தாய் வாழ்த்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல் இது! அந்நிய சக்திகளின் பொரைகளை உண்டு, வளர்ந்து, அப்போது தான் ஆட்சிக்கு வந்திருந்த கருங்காலி போலி திராவிடவியாதிகளின் செஞ்சோற்றுக் கடனால் இப்பாடல் இடம் பெறாமல் போனது!! 😠

ஒரு பொருளிலிருந்து சிறிது எடுத்தால் அப்பொருள் அளவில், எடையில் குறையச் செய்யும். ஆனால், பரம்பொருளிலிருந்து நாம் வாழும் பேரண்டம் தோன்றிய பின்னரும் பரம்பொருள் சிறிதும் குறையவில்லை (இக்கருத்து இடம் பெற்றிருந்து, மக்களின் சிந்தனையைத் தூண்டியிருந்தால், பலருக்கு தொழில் ஓடியிருக்காதே 😛). இது போலத் தான் நம் தமிழன்னையும். அவரிடமிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளுவ மொழிகள் (பிள்ளைகள்) தோன்றிய பின்னரும் அவரின் அழகு சிறிதும் குறையவில்லை என்கிறார் பாடலாசிரியர் பெ. சுந்தரனார். 😊 மேலும், ஆரியம் போல் வழக்கொழிந்து போகாமல் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று வியக்கிறார் ஆசிரியர்.

இப்பாடலில் இடம் பெற்றிருக்க வேண்டிய 2 முக்கிய உண்மைகள்:

💥 "மொழிகளில் பரத்தை" என்னும் பட்டம் பெற்றுள்ள ஆங்கிலமும் 😝 மேம்பட்டது தமிழர்களால் - தமிழால் - தான்!!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இது பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளது. ஆங்கிலத்திலுள்ள சுமார் 13,000 சொற்கள் தமிழிலிருந்து சென்றவை (WW #Skeat, The #Etymological #Dictionary of #English Language).

1706-ல் தரங்கம்பாடியில் டேனிஷ் பரங்கி மதத்தினர் வந்திறங்கினர் (பரங்கி இனம் ஓர் இடத்திற்குச் செல்கிறது என்றால் அது திருடவும், ஏமாற்றவும், கொள்ளையடிக்கவும், ஸ்லீப்பர் செல்களை உருவாக்கவும் தான்). அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களையும், சித்த மருத்துவர்களையும் பணியில் அமர்த்திக் கொண்டனர். ஆயிரக்கணக்கான ஒலைச்சுவடிகளை சேகரித்து, கப்பல் கப்பலாக அவர்களது நாட்டிற்கு அனுப்பிவைத்தனர். இதன் பின்னரே அவர்களது மருத்துவம், அழி(றி)வியல் எல்லாம் வளர ஆரம்பித்தது. (முனைவர். ஆனைவாரி ஆனந்தன், சித்த மருத்துவ வரலாறு)

💥 #ஆரியம் செம்மையானதும் நம்மால் தான்!!

ஆரிய இலக்கண நூலான #பாணிணீயம் அரங்கேற்றப்பட்டது நமது #திருவொற்றியூர் #ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் தான் (முனைவர் மா.கி. ரமணன், ஓங்கு புகழ் ஒற்றியூர்). #சமற்கிருதம் எனில் "சமன் செய்யப்பட்ட / சரி செய்யப்பட்ட மொழி" என்று பொருள். ஆனால், நம் தமிழ் நிறைமொழியும் இறைமொழியுமாகும். 'அ' என்ற உயிரெழுத்திற்கு சிவன் என்றொரு பொருளும் உண்டு. எதிலிருந்து அனைத்தும் தோன்றி நிலைபெறுகிறதோ அதுவே சிவம் எனப்படும். இந்தப் பொருளை அனைத்திற்கும் முதலான 'அ' என்ற உயிரெழுத்திற்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால் தமிழின் அடிப்படையெது? கலாம் என்றால் கலகம் என்று பொருள் கண்டுபிடிக்க உதவும் பகுத்தறிவா? ✊👊👊👊

posted from Bloggeroid

Monday, October 22, 2018

மகரிஷி வாய்மொழி: வேலை தடையல்ல. அந்த வேலையைச் "செய்கிறவன் நான்" என்ற எண்ணமே தடை!!



🔥 வேலை தடையல்ல. அந்த வேலையைச் "செய்கிறவன் நான்" என்ற எண்ணமே தடை.

🔥 எந்த வேலையும் உனதல்ல என்ற எண்ணம் எப்போதும் உன் கவனத்திலிருந்தால் அதுவே போதும். இதை நினைவுப்படுத்திக் கொள்ள முதலில் முயற்சி தேவை. பின்னர், இது இயல்பாகவும் இடைவிடாதுமிருக்கும். வேலையும் நடந்து கொண்டிக்கும். உனது மன அமைதிக்கும் குறைவிருக்காது.

🔥 "வேலை செய்வது யார்?" என்று ஆராய்ந்து உன் உண்மை இயல்பை நினைவிற் கொள்; #வேலை தானே நடக்கும்; உன்னைக் கட்டுப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயலவேண்டாம். உன் முயற்சியே தளை.

🔥 ஆத்மாவைக் கவனிப்பதே வேலையை கவனிப்பதாகும்.

-- பகவான் ஸ்ரீரமணர், #மகரிஷி #வாய்மொழி 🌸🙏

எங்கேயோ, எப்போதோ, யாரோ என்று குழப்பாமல் இங்கேயே, இப்போதே, நீயே என்று தெளிவு தருபவை தான் #உபதேசங்கள் (உப - அருகில்). இன்றைய காலத்தில் (இனி வரும் காலங்களிலும்), இதற்குப் பொருத்தமானவை பகவானின் அறிவுரைகள் மட்டுமே.

அகம், புறம் என இரண்டு படகுகளில் ஒரே நேரத்தில் பயணம் செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு (அதாவது, நம்மைப் போன்று நிலைபேற்றை "அடைய" முயலுபவர்களுக்கு 😀), பகவானின் இந்த அறிவுரைகள் படிக்கும் போதே மன ஆறுதல், நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 😍 தெளிவையும் கொடுக்கும். இவற்றைப் பற்றி சிந்திக்கும் முன்னர், நமக்குத் தேவையான அடிப்படை அறிவு: நம்முடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் முதல் அண்டவெளியில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் வரை அனைத்தையும் நடத்துவது இறைவனின் ஆற்றலே (இறைவனும் இறைவனின் ஆற்றலும் வேறுவேறல்ல).

இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விடுவதாலேயே அனைத்து துன்பங்களுக்கும் உள்ளாகிறோம். நம் மனதில் எண்ணங்களைத் தோற்றுவித்து, அதற்கு செயல் வடிவம் கொடுக்க வைத்து, தேவையான மாற்றங்களை நிகழ்த்திக் கொள்வது வரை அனைத்தையும் நடத்துவது இறைவனே. எனில்,

▶ அனைத்து வேலைகளும் யாருடையவை? இறைவனுடையது. நமதல்ல.
▶ அனைத்து வேலைகளைச் செய்வது யார்? இறைவனே. நாமல்ல.
▶ எல்லாம் அவர் செயல் எனில், நம் பணி என்ன? ஆத்மாவைக் கவனிப்பதே. நம் கவன ஆற்றலை (மனதை) நமது தன்மையுணர்வின் (ஆன்மாவின்) மீது வைத்திருப்பதே.

மனதை ஒன்றின் மீது செலுத்திக் கொண்டு, இன்னொரு வேலையை எப்படி செய்ய முடியும் என்ற கேள்வி எழலாம். இதற்கு பகவான் கொடுத்த பதில், "ஒரு நடிகனைப் போல". எந்த வேடம் போட்டுக் கொண்டு நடித்தாலும், தான் ஒரு நடிகன் என்பதை ஒரு நடிகன் மறந்து விடுவதில்லை. இவ்வாறே, எதில் ஈடுபட்டாலும், நமது உண்மையை நாம் மறக்காமல் இருக்க முடியும். மறக்காமல் இருந்தாலே போதும். இது மட்டுமே நமக்கு சாத்தியமும் கூட.

அடுத்து, நாம் செய்யும் வேலைகள் எதிர்வினைகளை உருவாக்காதா? பற்றில் முடியாதா? என பல கேள்விகள் எழலாம். பிறவியிலிருந்தே மெய்யறிவில் திளைத்த #சுக #மகரிஷி 🙏 பிற்காலத்தில் குழந்தைப் பெற்றுக்கொண்டார். இஸ்ரவேலிலிருந்து தப்பி, காஷ்மீரம் வந்து, சாலிவாகன மன்னரின் சபையில் அங்கம் வகித்த #ஞானி #யேசு -வும் 🙏, மன்னரின் அறிவுறுத்தலின் படி, தனது பணிப்பெண் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டார். மகரிஷி #அஷ்டாவக்கிரரின்🙏 வழிகாட்டுதலின் படி மெய்யறிவு பெற்ற மன்னர் #ஜனகர் 🙏 ஆட்சிக்கட்டிலிலே தொடர்ந்து வீற்றிருந்தார். #கொங்கணவச் #சித்தரின் 🙏 (#திருமலைப் #பெருமாள்) வாழ்வில் வரும் #வாசுகி #அம்மையாரும் 🙏, இறைச்சி வியாபாரியும் 🙏 மெய்யறிவு பெற்றிருந்தாலும் இல்லறத்தில் இருந்தவர்கள். இறைச்சித் தொழில், இல்லறம், அரச பதவி, உடலுறவு - பற்றை பெருகச் செய்ய இவற்றை விட வேறென்ன வேண்டும்? எதையும் "நான் செய்கிறேன்" என்ற எண்ணத்துடன் செய்தால் தான் பற்று ஏற்படும். தன்மையுணர்வில் நிற்கும் போது நாம் சாட்சி மாத்திரமே. விளைவுகள் நம்மை பாதிக்காது. இங்ஙனமே இந்த மகான்கள் வாழ்ந்தார்கள்.


இறுதியாக, வேலை என்ற சொல்லைப் பற்றி சற்று பார்ப்போம்.

வேலை ஒலியை விழுங்கியெழ விளங்கி ஓங்கும் வியப்பினதால் (பெரிய புராணம்)

வேலை உலகில் பிறக்கும் வேலை ஒழிந்தோமில்லை (திருவரங்கக்கலம்பகம்)

மேலுள்ள 2 பாடல் வரிகளிலும் வரும் வேலை என்னும் சொல் கடலைக் குறிக்கிறது ("கடல் எழுப்பும் ஒலியை", "கடல் சூழ்ந்த உலகில்"). தேவார மூவர் இச்சொல்லை கடல் என்ற பொருளிலேயே பயன்படுத்தியுள்ளனர். இது தவிர இச்சொல்லுக்கு கானல்நீர், கடற்கரை மற்றும் சில பொருள்களும் உண்டு (இங்கு கடல், கடற்கரை & கானல் நீர் ஆகிய மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளேன்). இந்த மூன்று பொருள்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு - நிலையற்ற தன்மை. கடலின் மேற்பரப்பு சலித்துக் கொண்டேயிருக்கும். கானல் நீர் காட்சி தெளிவாக இல்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும். கடற்கரையின் மேற்பரப்பு மாறிக்கொண்டே இருக்கும். இவற்றிற்கெல்லாம் காரணம் காற்றாகும் (கடற்கரை காற்றாலும் அலைகளாலும் மாறுகின்றது. அலைகள் உருவாவதற்கு காரணமும் காற்றே). இது போன்றே இவ்வுலகிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன (உருவாக்குவது, உருமாற்றுவது & அழிப்பது என அனைத்தும் மாற்றங்களே). இதற்குக் காரணம் காற்று பூதத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரிகளின் மனமாகும். ஆக, வேலை எனில் மாற்றம், மாற்றுவது, மாறுவது என்று பொருள் கொள்ளலாம்.

என்ன மாறுகிறது? ஆற்றல் மாறுகிறது. வே என்ற எழுத்தின் பொருள் வெப்பம் / எரி. இன்று, பரங்கி அழிவியலின் (நமது அறிவியலே அறிவியல். உலகக் கொள்ளையர்களான பரங்கியரது அறிவியல் அழிவியலாகும். ✊👊👊💪) கோட்பாடுகளில் ஒன்று: ஆற்றல் அழியாதது. ஒன்றிலிருந்து இன்னொன்றாக உருமாற்றம் மட்டுமே ஆகும். இது எங்கிருந்து அந்த திருடர்களுக்கு கிடைத்திருக்கும்? நம்மிடமிருந்து தான். இதை அன்றே உணர்ந்ததால் தான், வெப்பத்தை அடிப்படையாகக் கொண்ட வேலை என்ற சொல்லை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். 💪

🌺🌻🏵

நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன் கடன் அடியேனையுந் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே.    

-- அப்பர் பெருமான், தேவாரம் 5.19.9 🌸🙏


ஓர் உயிரி இவ்வுலகில் எங்ஙனம் வாழவேண்டும் என்பதை நம் திருத்தலங்களில் கருவறை முன் நிறுவப்பட்டிருக்கும் #சிவன்காளை வடிவில் வடித்திருப்பர் நம் மூதாதையர். அதை நம் உள்ளம் கவரும் பாடலாக வடித்திருக்கிறார் நாவின் அரசர். 😍

🌺🌻🏵

posted from Bloggeroid

Thursday, October 11, 2018

மஹரிஷி வாய்மொழி: உழைப்பும், தன்னை அறிதலும்



ஒருவன் உழைக்கவேண்டியிருக்கற வரையில் தன்னை அறியும் முயற்சியையும் கைவிடக் கூடாது.

-- பகவான் ஸ்ரீரமணர், #மகரிஷி #வாய்மொழி 🌸🙏

இந்த அறிவுரையும், உலக வாழ்க்கையை விட்டு ஒதுங்க முடியாமலும், ஆன்ம வாழ்க்கையில் முழு மூச்சாக ஈடுபடமுடியாமலும், மெய்யறிவைப் பற்றியத் தெளிவு கிடைக்காமலும் போராடும் அன்பர்களுக்காக பகவான் அருளியது.

🌼🏵🌹🌻🌷🌺🌼

அவர் குறிப்பிடும் "தன்னை அறிதல்" என்பது நான் எனும் நமது தன்மையுணர்வை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதே (நமது கவன ஆற்றலை அத்தன்மையுணர்வில் கொண்டு போய் மீண்டும் மீண்டும் நிறுத்துவது என்றாலும் இதே பொருள் தான்).

"உழைக்கவேண்டியிருக்கற" என்ற சொற்களின் மூலம் பகவான் குறிப்பிடுவது என்னவெனில் "நாம் உழைக்கின்றோம்" என்ற எண்ணம் (தனியிருப்பு) இருக்கும் வரை என்பதையே. (1) தனியிருப்பு அழிந்த பிறகு உழைப்பு என்று எதுவும் கிடையாது. எல்லாம்...

🙏 அரவனின் முடிவில்லாப் பெருமகிழ்ச்சி கூத்துத்தான் (எல்லாம் இறைவனே)

🙏 பிணக்காட்டில் பேயோடு கூத்தன் தெவிட்டாமல் ஆடும் கூத்துத்தான் (இறைவனும் இறைவியும் ஆடும் கூத்து)

🙏 பெருமானின் பேய்த்தொழிலாட்டி நடத்தும் தொழில் தான் (இறைவன் எனும் அரங்கில் இறைவி ஆடும் ஆட்டம்)

(நம் அருளாளர்கள் 🙏 இவ்வண்டத்தின் இயக்கத்தை உணர்ந்த விதங்கள் 😊)

🌸 தானாம் ரமணேசன் அடி போற்றி 🌸

🌼🏵🌹🌻🌷🌺🌼

குறிப்பு:

1. #உழை என்ற சொல் உழு என்ற சொல்லில் இருந்து வருகிறது. உழு எனில் உட்செலுத்து. இன்று, ஏரை நிலத்தினுள் செலுத்துவது என்ற பொருள் கொண்டுள்ளோம். புழு என்பது உட்புகுந்து செல்லும் உயிரியாகும். முழுகு என்பது நீரினுள் உட்புகுதலாகும். நுழை என்பது ஒன்றினுள் செலுத்துவதாகும். மழை என்பது வளிமண்டலம் புகுந்து வரும் நீராகும்.

இவ்வரிசையில், உழை என்பதும் ஒன்றை மற்றொன்றினுள் செலுத்துவதாகவோ, ஒன்று மற்றொன்றினுள் நுழைவதாகவோ இருக்கலாம். ஆனால், சென்னை பல்கலையின் சொல்லகராதி கொடுக்கும் பொருள் "உட்படுத்து". உட்படுத்துதலோ, உட்புகுதலோ, உட்செலுத்துவதோ எதுவாக இருந்தாலும் இரண்டு பொருட்கள் சம்பந்தப்படுகின்றன. ஒன்று நாம். இன்னொன்று உலகம்.

நாம் என்பது நமது மனதை, நமது தனியிருப்பை, குறிக்கும். மனம் முடிவு செய்ததை உடல் செய்வதால், உடலைக் கருவியாக மட்டுமே கருதியுள்ளனர் நம் முன்னோர்கள். அடுத்தது, உலகம். நம் சமயத்தின் சில பிரிவுகளைத் தவிர மற்றவை உலகைக் கொடியது என்றே உருவகப்படுத்துகின்றன. அன்றே இந்நிலை எனில், இன்று? இப்படிப்பட்ட உலகினுள் புகும் போது தகுந்த எச்சரிக்கையுடன் புக வேண்டுமல்லவா? எனவே தான் பகவானின் அறிவுரை முக்கியத்துவம் பெறுகிறது! 👍

உழை எனில் நமது மனதை உலகின் பால் செலுத்துவது அல்லது உலகினுள் புகுத்துவது / நுழைப்பது அல்லது மாய உலகின் விதிகளுக்கு உட்படுத்துவது என்று எடுத்துக் கொள்ளலாம். எனில், உழைப்பு இல்லாத நேரத்தை நம் முன்னோர்கள் என்னவென்று அழைத்தார்கள்? ஓய்வு. ஒய்வு - ஒழிவு - அழிவு - அமைதி. மனமழிந்து கிடைக்கும் அமைதி.

(இவையெல்லாம், நம் அன்னைத் தமிழ் எவ்வளவு தூரம் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் மெய்யறிவு தாகம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதையும் காட்டுகின்றன. 😍)

இப்போது பகவானது அறிவுரையை சற்று மாற்றி வாசிப்போம்: ஒருவன் மனதை உலகின்பால் செலுத்த வேண்டியிருக்கிற வரையில், தனது தன்மையுணர்வை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

posted from Bloggeroid

Tuesday, October 9, 2018

மகரிஷி வாய்மொழி: உண்மையான கடவுள் வணக்கமும், சுகாசனமும்



தன் கடமையைப் புரிவதே உண்மையான கடவுள் வணக்கம். கடவுளிடம் நிற்பதொன்றே ஆசனம்.

- பகவான் ஸ்ரீரமணர், மகரிஷி வாய்மொழி 🌸🙏

"உலக வாழ்க்கையை விட்டொதுங்க முடியவில்லை. ஆன்மிகத்திலும் நிலைபேற்றை அடைய முடியவில்லை." என்று திண்டாடும் அன்பர்களுக்காக பகவான் அருளியது. இரண்டே வரிகளில், புறத்தே எவ்வாறு வாழவேண்டும் என்பதையும், அகத்தே என்ன செய்யவேண்டும் என்பதையும் அவரது பாணியில் இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறார்!! 👌

🌼🏵🌹🌻🌷🌺🌼

நமக்குத் தெரிந்த ஒரு நபரை சந்திக்க நேர்ந்தால், அவர் மீதிருக்கும் மதிப்பு, மரியாதை, அன்பு மற்றும் கலாச்சாரம் போன்ற காரணங்களால் அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறோம். எனில், அனைத்திற்கும் ஆதாரமான கடவுளைக் கண்டால்?

🌿🍁🍀

▶ இந்த அண்டம் சுழல்கிறது. நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ விண்மீன் கூட்டம் சுழல்கிறது. நகரவும் செய்கிறது. நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ நமது விண்மீனமான ஞாயிறு சுழல்கிறது. தனது குடும்பத்துடன் நகரவும் செய்கிறது. நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ நமது பூமித்தாய் சுழலவும், நகரவும் செய்கிறார். நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ மேற்சொன்னவற்றை இயக்கும் அதே ஆற்றல் தான் இந்த இடுகையை எழுதியது. தங்களைப் படிக்கவும் வைக்கிறது. 🤔🤔🤔 இதை மட்டும் ஏற்றுக் கொள்வது கடினம். 😁

நம் வயிற்றில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அங்கே இருக்கும் பொருட்களிலிருந்து பிறந்து, வந்து விழுவதை உண்டு, வாழ்ந்து, மடிந்து போகின்றன. அதனிடம் சென்று, "நீ இப்படிப்பட்ட ஒரு உடம்பில் வாழ்கிறாய்" என்றால் ஏற்றுக் கொள்ளுமா? அவ்வுயிரி போலத் தான் நாமும். இறைவனிடமிருந்து வெளிப்படும் ஆற்றலின் வடிவாகிய இவ்வுலகில் வாழ்ந்தாலும், இவ்வுண்மையை உணர்வதில்லை.

நம்மை பிறவியெடுக்க வைத்து, தினந்தோறும் காலையில் எழுப்பி, பலவித எண்ணங்களை தோன்ற வைத்து, பல காட்சிகளை காண வைத்து, பல செயல்களை செய்ய வைத்து, மீண்டும் உறங்க வைப்பது வரை, பிறவிகளின் இறுதியில் நிலைபேறு வழங்குவது வரை அனைத்தையும் நடத்துவது அந்த இறையாற்றலேயாகும். இவ்வாற்றலும் இறைவனும் வேறுவேறல்லர். (1)

இந்த இறைவனை எவ்வாறு வணங்குவது? நம்மிடம் வரும் பணிகளை, பலன் கருதாமல், செவ்வனே செய்து முடிப்பது தான் அவரை வணங்குவதற்குச் சமம். (2) இதைத் தான், அப்பர் பெருமான், "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று அழகாகப் பாடினார். கடமை என்ற சொல்லிற்கு கடன் என்ற பொருளும் உண்டு. எனில், "என் கடமை பணி செய்து கிடப்பதே" என்று மாற்றிக் கொண்டால், பெருமானும், பகவானும் அறிவுருத்துவது ஒன்றையே!! 👏👌

("செய்து முடிப்பது தான் ..." என்று ஏதோ நம் கையில் இருப்பதைப் போல் எழுதியுள்ளேன். இந்தக் குழப்பமெல்லாம் தெளிவு கிடைக்கும் வரை தொடரும். "ஒரேயொரு முறையேனும் மெய்யறிவை துய்த்தால் மட்டுமே மனமடங்கும்", என்கிறார் பகவான். அதுவரை செய்வினை & செயப்பாட்டு வினை என்று மாறி மாறி பயணிக்க வேண்டியது தான். 😀)

🌿🍁🍀

இறுதியாக, கடவுளிடம் நிற்பது எனில் நமது தனியிருப்புக்கு காரணமான நம் மனதை (கவன ஆற்றலை), நான் எனும் நமது தன்மையுணர்வில் (இறை, சிவம், கடவுள் எல்லாம் இதுவே) கொண்டு போய் திரும்ப திரும்ப நிறுத்தவேண்டும். எதுவரை எனில், நமது தனியிருப்பு அழியும் வரை. நாம் வேறு இறைவன் வேறு அல்ல என்ற தெளிவு ஏற்படும் வரை. இவ்வாறு நிறுத்தி நிலைபெறுவது தான் ஆசனம் - அமருதல் - இளைப்பாருதல் - ஒய்வு - அமைதி - #நிலைபேறு என எல்லாம்.

🌼🏵🌹🌻🌷🌺🌼

எண்ணுரு யாவும் இறையுருவாம் என
எண்ணி வழிபடல் உந்தீபற
ஈச நற் பூசனை இது உந்தீபற

- பகவான் ஸ்ரீரமணர், உபதேச உந்தியார்

(எண்ணுரு - எண் + உரு - மனதில் தோன்றும் எண்ணங்கள் அல்லது புற உலகில் காணும் உருவங்கள் (ஐம்பூதங்கள், பகலவன், திங்கள் மற்றும் உயிர் ஆகிய 8 பொருட்களின் கலவை))

🌸 அருணமாமலை ஈர்த்தணைத்துக் கொண்ட குகேசனடி போற்றி 🌸🙏

(இணைப்புப் படம்: அண்ணாமலையாரின் மேலுள்ள சிவன்காளை போன்ற பாறையமைப்பு)

🌼🏵🌹🌻🌷🌺🌼

குறிப்புகள்:

1. இவ்விடுகையை நான் எழுதினேன் என்று சொல்லலாம். அல்லது, நான் உண்ட உணவு ஆற்றலாக மாறி, மூளையை செயல்பட வைத்து, உருவான சிந்தனையை, கை எழுத்துருவாக்கியது என்றும் சொல்லலாம். 😀 இது போன்றே, "இவ்வண்டமே இறைவன்" என்பதும், "இறைவனிடமிருந்து வெளிப்படும் ஆற்றலால் உருவாகி, இயங்கி வரும் அண்டம்" என்பதும் ஒன்று தான்.

2. "பலன் கருதாமல் செய்தல்", "வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல்" - இவற்றை மிகச் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில், பெரும் இன்னல்களை, அழிவுகளை சந்திக்க நேரிடும்!

தன்னை வைணவத்திற்கு இழுக்க முயன்ற கூட்டத்தை பகவான் திருப்பி அனுப்பியதையும், ஏமாற்ற முயன்ற வேறொருவரை, "உன் கனவில் வந்த அதே கடவுளை எனது கனவிலும் வந்து சொல்லச் சொல். ஏற்றுக் கொள்கிறேன்." என்று முகத்தில் அடித்தாற் போல் பதிலளித்து ஓடவிட்டதையும் நினைவில் கொள்ளவேண்டும். வருவதனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஏற்றுக்கொள்ளச் சொல்லி நமது உள்ளுணர்வு சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில், தவிர்க்கலாம். சாப்பாடும் இறைவனின் படைப்புத்தான். சாக்கடையும் இறைவனின் படைப்புத்தான். இரண்டையும் வேறுபடுத்தி அறியும் அறிவும் இறைவனின் படைப்புத்தான். அறிவை பயன்படுத்தி, ஒதுக்க வேண்டியதை ஒதுக்கி, ஏற்க வேண்டியதை ஏற்றுக் கொள்ளலாம். கடமை என்ற பெயரில் வருவதையெல்லாம் ஒருவன் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தால், பின்னர் எல்லாவற்றையும் கடமை என்ற பெயரில் அவனது தலையில் சுமத்தி விடும் இவ்வுலகம். 😰 எவையெல்லாம் நமது அடிப்படை கடமைகள் என்று உணருகிறோமோ, அவற்றை மட்டும், "நான் செய்கிறேன்" என்ற உணர்வு தோன்றாமல் செய்து கொண்டிருந்தால் போதும்.

நம் சமயத்தின் மிக முக்கியமான தனித்துவமாகிய சகிப்புத்தன்மையும் இங்கிருந்து தான் பிறக்கிறது. இதை வைத்துத் தான் இதுவரையும் நம்மை முட்டாள்களாக்கி வந்துள்ளனர். விடுதலைக்குப் (!?) பின்னர் இந்து-முஸ்லீம் சண்டை உச்சமடைந்திருந்தது. மலபாரில் மாப்ளா என்ற முகம்மதிய காட்டுமிராண்டிப் பிரிவினர், இந்து ஆண்களைக் கொன்று குவித்து விட்டு, இந்துப் பெண்களை ஆடையில்லாமல் ஊர்வலம் போகவைத்தனர்!! 😡😡😡 இதைக் கேள்விப்பட்டு பாரதம் கொதித்த போது, ஒரு நயவஞ்சகன் சொன்னான், "அவர்கள் அவர்களுடைய மத நம்பிக்கையின் பேரில் இதை செய்திருக்கிறார்கள். நாம் நம்முடைய மதம் போதிக்கும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்." (இந்த ரீதியில் இன்னும் மூளைச்சலவை செய்து, காட்டுமிராண்டிகளைக் காப்பாற்றியிருக்கிறான்). 😠 இந்த நயவஞ்சகன் தனது பேத்தி வயதொத்த பெண்பிள்ளைகளுடன் ஆடையில்லாமல் படுத்துக் கொண்டவன். இச்செய்தி வெளிவந்த போது, "தன்னால் தனது ஆண்மையைக் கட்டுப்படுத்த முடிகிறதா என்று தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டதாக" கதை விட்டான்! 😛😜😝

சகிப்புத்தன்மை, (இந்து) மதச்சார்பின்மை போன்றவற்றை நமக்கெதிரான ஆயுதங்களாக உபயோகப் படுத்தப்படுவதை உணர்ந்து கொள்வோம்! நம் சமயம் காப்போம்!! திருவருள் நமக்கு துணைபுரியட்டும்!!! 🙏 (சமயம் என்ற சொல்லிலேயே நமது அடையாளங்கள், திருத்தலங்கள், வாழ்க்கைமுறை என அனைத்தும் அடங்கும்)

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

posted from Bloggeroid

Thursday, September 20, 2018

சுவாமியை நன்றாகப் பார்த்தீரா? 👎 நன்றாக தரிசனம் ஆயிற்றா? 👎 இறையுணர்வு பெற்றீரா? 👍

சென்ற இடுகையில், "சுவாமியை நன்றாகப் பார்த்தீரா?", "நன்றாக தரிசனம் ஆயிற்றா?" போன்ற கேள்விகளின் சரியான உட்பொருள், "இறையுணர்வு பெற்றீரா?" என்பது தான் என்று எழுதியிருந்தேன். அதன் விரிவே இந்த இடுகை.

🌸🌻🌷🌺🌼

உடையாரை வணங்கும் போது தானாகவே நமது கண்கள் மூடும். இது இயற்கையானதே. பலர் இன்று செயற்கையாக கண்களை திறந்து வைத்திருக்க முயலுகின்றனர். சில ஆன்மிகவாதிகளும் கண்களைத் திறந்து வைக்கச் சொல்லி அறிவுருத்துகின்றனர். இது தவறு. இத்தவறு இறைவன், ஆன்மா, வணங்குதல் பற்றிய சரியான புரிதல் இல்லாமையால் ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலைக்கென்றே ஒரு ஆன்மிக கதையை நம் பெரியவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அக்கதை...

கம்சனின் அழிவுக்குப் பின்னர், கண்ணபிரான் மதுரா செல்லத் தயாராகிறார். பிரிவுத் துயரம் தாங்காமல் அவரது வளர்ப்பு அன்னை யசோதை கேட்கிறார், "இவ்வளவு காலமும் உன்னோடு வாழ்ந்து விட்டு இனி உன்னை விட்டுப் பிரிந்து வாழ்வது எங்ஙனம் சாத்தியம்?". அன்னையின் நிலையைப் புரிந்து கொண்ட கண்ணபிரான் பதிலளிக்கிறார், "அம்மா, நீ என்னை விட்டுப் பிரிவதென்பது இயலாத காரியம். உங்களது கண்களை மூடிக் கொண்டுப் பாருங்கள். நான் காட்சியளிப்பேன்.". யசோதையும் கண்களை மூடிப் பார்த்து விட்டு, "ஆம் கண்ணா. நீ காட்சியளிக்கிறாய். நீ என்னை விட்டுப் பிரியவில்லை. நான் தான் தவறாக எண்ணிவிட்டேன்.", என்று பதிலளித்தார்.

யசோதை கண்களை மூடியவுடன் கண்ணபிரான் அவரது மனக்கண்ணில் தெரிந்தார் என்று எண்ணிக் கொள்வோம். 😁 சிலர், கண்களை மூடியவுடன் தோன்றும் கருமை நிறமே கண்ணபிரான் என்று நினைத்துக் கொள்வர். இதுவும் தவறே. தோன்றி மறைவது இறையாகாது.

காட்சிகள் மறையும் போது காணும் நாம், நம்மை நாமாக உணர முடியும் என்பதையே இக்கதை காட்டுகிறது. பகவான் ஸ்ரீரமணரும், "காணும் காட்சிகள் யாவும் பொய்யே. காண்பவனே மெய்." என்கிறார். இத்தனை காலமும் காட்சிகளுடன் (மனதில் தோன்றும் எண்ணம் முதல் வெளிப்புறத்தில் காணும் காட்சிகள் வரை அனைத்துமே காட்சிகள் தான்) நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டதால், அவையில்லாமல் இருப்பது கடினம். அவற்றிலிருந்து நம்மை பிரித்தறிவது இன்னும் கடினம். இதற்காகத் தான் வெவ்வேறு தலங்களில் வாழ்ந்த மகான்கள், தங்களை நாடி வந்தவர்கள் ஒரு கணமாவது தங்களை தாங்களாக உணரவேண்டும் (நிலைபேறு, ஞானம், மெய்யறிவு என்பதெல்லாமும் இதுவே) என்பதற்காக சில உத்திகளை உருவாக்கினார்கள். அந்த ஒரு சில கண உணர்வு அவர்களது கண்ணோட்டத்தை மாற்றிவிடும் என்பதால். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:

🔥 கங்கையில் மூழ்குவது

மிக எளிமையான மற்றும் சுலபமான உத்தியிது. பாமரர் முதல் படித்தோர் வரை அனைவருக்கும் ஏற்றது. இதனை பயன்படுத்தி எண்ணில்லா மனிதர்கள் நிலைபேறு பெற்றுள்ளனர். ஆகையால் தான், இத்தலமும் இந்த உத்தியினை வழங்கியருளிய திருநந்திதேவரும் 🌸🙏(காசி ஸ்ரீவிஸ்வநாதர் என்னும் அடையாளத்தின் கீழ் சமாதியில் இருப்பவர்) நமது சமயத்தில் இன்று வரை பெரிதும் புகழப்படுகின்றனர்.

புறஅறிவியல் அடிப்படையில் பார்த்தோமானால், கங்கை நீரில் கரைந்துள்ள அபரிமிதமான உயிர்வளியும், வசிக்கும் கோடான கோடி பாக்டீரியா உண்ணிகளும், அந்நீரில் மூழ்கும் போது உடலுக்கு அளவிலா நன்மையைத் தருகிறது. #அகஅறிவியல் (ஆன்மிகம்) அடிப்படையில் பார்த்தோமானால், கங்கையில் மூழ்கும் போது, அந்நீரின் குளிர்ச்சி ஏற்படுத்தும் அதிர்ச்சியின் விளைவால், மூழ்கிய முதல் சில கணங்களுக்கு நாம் நம்முடலில் இருந்து (நாம் உடல் என்னும் எண்ணத்திலிருந்து) தனிப்படுவோம்.  எவ்வளவு படித்தாலும், எவ்வளவு கேட்டாலும் அவ்வளவு எளிதில் உணர முடியாத மெய்பொருளை (நம்மை), மணிவாசகப் பெருமான் பிடித்தது போல், சிக்கெனப் பிடித்துக் கொள்ளலாம். (1) "ஒரு முறை உணர்ந்தால் கூட போதும். பின்னர், அந்நிலையின் மீது அதீத ஈர்ப்பு உண்டாகி மீண்டும் மீண்டும் அந்நிலைக்குத் திரும்பச் செல்வோம்.", என்று அருளியுள்ளார் பகவான் ஸ்ரீரமணர். 🌸🙏

🔥 சிதம்பர மறைபொருளைக் (ரகசியத்தைக்) காணுதல்

இந்த உத்தியும் மிகவும் புகழ் பெற்றது. இதை உலகுக்கு வழங்கியது திருமூலர். 🌸🙏 இவர் மற்றும் இவரது வழி வந்த சில மகான்களின் சமாதித் தொகுப்பே தில்லை திருச்சிற்றம்பலம். பாரதத்தில் உருவாக்கப்பட்ட இறையுருவங்களில் மிகச்சிறந்ததான ஸ்ரீநடராஜப் பெருமான் இத்தொகுப்பைக் குறிக்கும் அடையாளமாவார். கற்றுத் தெளிய திருமந்திரம் தந்து, சிந்தித்து பெருமகிழ்ச்சி கொள ஆடல்வல்லானை அடையாளமாகக் கொண்ட திருமூலர், சிதம்பர மறைபொருள் வழியாக எவ்வாறு நமக்கு நிலைபேறு அளிக்கிறார் என்று பார்ப்போம்.

சிதம்பர மறைபொருள் என்பது ஆடல்வல்லானின் வலப்புறமுள்ள சுவற்றில், கருமை நிறத்தில் இருக்கும் ஒரு சிறு பகுதி. இப்பகுதிக்கு தங்க வில்வயிலை மாலை அணிவித்திருப்பர். பட்டுத்துணியால் மூடியிருப்பர். ஒவ்வொரு நாளும் நடக்கும் ஆறுகால வழிபாட்டின் போது, இப்பகுதியின் திரை சடாரென விலக்கப்பட்டு, அகல்ஒளி காட்டுவர். பின், திரையை மீண்டும் மூடுவர். உருவங்களைக் கண்டே பழக்கப்பட்ட நம் மனதிற்கு, உருவமற்ற இக்காட்சி தடுமாற்றத்தை / குழப்பத்தை / அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதன் விளைவாக நம் மனம் (நாம் இவ்வுடல் என்னும் தனியிருப்பு) நிலை குலைந்து தனது மூலத்தில் (தான் என்னும் இறையில்) ஒடுங்கும் (நிலை பெறும் - நிலைபேறு). இவ்வாறு ஒடுங்குதலே சிதம்பர மறைபொருளைக் காணுதல் எனப்படும். இவ்வனைத்தும் சில கணங்களுக்குள் நடந்தேறும். கூர்மையான அறிவு மற்றும் சரியான பயிற்சி இல்லையெனில், நமது தனியிருப்பு - மனம் - மீண்டும் வெளிப்பட்டு விடும்.

மேற்சொன்ன பட்டறிவும் (அனுபவமும்) புதிதாக வருபவர்களுக்குத்தான் கிடைக்கும். அடுத்தடுத்து வருபவர்களுக்கு அதிர்ச்சி / தடுமாற்றம் / குழப்பம் என எதுவும் ஏற்படாது. ஏனெனில், அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்து விடுவதால். இது போன்ற சூழ்நிலையில், முதல் முறை நமக்கு கிடைத்தப் பட்டறிவை மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து மன ஒடுக்கத்தைப் பெற முயற்சிக்கலாம். இல்லையெனில், திருமூல நாயனாரின் திருமந்திரம், கூத்தப் பெருமானின் திருவுருவம், மேற்சொன்ன சிதம்பர மறைபொருள் விளக்கம் என நமக்குப் பிடித்த / ஏற்ற ஒன்றைப் பற்றி சிந்திக்கலாம்.

🔥 அண்ணாமலையாரை நினைக்க விடுதலை (முக்தி)

இந்தச் சொற்றொடர் "அண்ணாமலையில் சமாதியான #இடைக்காட்டுச் #சித்தர் 🌸🙏 அருளிய உத்தியை நினைக்க விடுதலை" என்று விரியும். சித்தப் பெருமான் வழங்கிய இந்த உத்தி நிலைபேறு வழங்கவல்ல உத்திகளுள் மிகமிக எளிதும் & மிகமிக உயர்ந்ததும் ஆகும். கங்கையில் மூழ்க கங்கை வேண்டும். சிதம்பர மறைபொருளைக் காண தில்லைக்குச் செல்லவேண்டும். ஆனால், எங்கும் செல்லாமல், யார் உதவியும் இல்லாமல் நம் சொந்த முயற்சியால், இருந்த இடத்திலிருந்து, இருக்கும் நிலையிலேயே நிலைபேறு பெற்றுத் தரவல்லது இந்த உத்தி!! 👌🙏

உடல், உலகம் என வெளிமுகமாகச் செல்லும் போது, மனமானது பெருகும்; மற்றும், தன்னையும் மற்றவற்றையும் தனித்தனியாக உணரும். அதே மனம், தான் எனும் தனது மூலத்தை நோக்கி உள்முகமாக திரும்பும் போது (தான் என்ற தன்மையுணர்வை நாடும் போது) அதில் ஒடுங்கிவிடும். "மூலத்தை நோக்கி திரும்புதல்", "தன்மையுணர்வை நாடுதல்" என்பதெல்லாம் என்னவெனில் மூலத்தை / தன்மையுணர்வை / சிவத்தை நினைத்தலாகும். ஏனெனில், மனதின் அடிப்படைத் தொழில் நினைத்தலாகும். (2) மனம் தனித்து நிற்காது. எதையாவது பற்றிக் கொண்டுத்தான் நிற்கும். எதைப் பற்றுகின்றதோ அதுவாகிவிடும். தனது மூலத்தை தொடர்ந்து பற்றுமானால் அடங்கி, ஒடுங்கி இறுதியில் அழிந்தே போகும். தன்மையுணர்வு மட்டுமே மீதமிருக்கும். (சிவத்தைப் பற்றிய மனம் சிவமாகியது என்றும் வேடிக்கையாக கூறலாம்.)

ஆக, "அண்ணாமலையாரை நினைக்க விடுதலை" என்னும் சொற்றொடரில் அண்ணாமலையார் என்னும் சொல்லுக்கு பரம்பொருள் என்று பொருள் கொண்டால், பரம்பொருளை (தன்மையுணர்வை) நினைத்தாலே போதும் நான் இவ்வுடல் என்கிற நரகாசுரனிடமிருந்து விடுதலை கிட்டிவிடும். 👏👏👏👌 எவ்வளவு எளிமையான உத்தி!!! இதைவிட எளிமையான சுலபமான உத்தி இருக்காது என்பது என் கருத்து. 🙏

அண்ணாமலையார் கவர்ந்திழுத்து அணைத்துக் கொண்ட செல்வங்களுள் ஒருவரான பகவான் ஸ்ரீரமணரும், "உன் சுயஉருவை நினைவில் கொள்" என்று பல முறை அறுவுருத்தியிருக்கிறார். பகவானது "நான் யார்?" என்ற தன்னாட்ட உத்தியும், அவரது அருட்தந்தை அண்ணாமலையாரின் உத்தியும் ஒன்று தான். தன்னாட்டம் எனில் தன்னை நாடுதல். நாடுதல் எனில் நினைத்தல். தன்னை நினைத்தல். 👏👏👌

"தொழிலற்ற பரம்பொருளை நினைப்பது என்பது எவ்வாறு அப்பரம்பொருளாக ஆவதாகும்?", என்ற கேள்வி எழலாம்.  மனம் எதைப் பற்றுகின்றதோ அதுவாக ஆகிவிடும் என்று ஏற்கனவே பார்த்தோம். பகவான் ஸ்ரீரமணரின் விளக்கம்: உள்ளதை (உள் - பரம்பொருள்) உணர உணர்வு வேறு இல்லையாதலால், உள்ளதை உணரும் (நினைக்கும்) உணர்வே (நினைவே) உள்ளதுமாகும்.

கைலாயத்தில் உறையும் மகானால் 🌸🙏 "அம்மையே" என்று அழைக்கப் பெற்ற பேரு பெற்ற காரைக்கால் அம்மையாரும் 🌸🙏 இறைவனிடம் வேண்டுவது, "மீண்டும் பிறக்கின், உன்னை என்றும் மறவாமை வேண்டும்". பேயார் வேண்டும் மறவாமை என்னவெனில் எக்கணமும் தன்மையுணர்வை (சிவத்தை) நினைவில் கொள்வதாகும்!

🔥 மலை / நதி வலம் வருதல்

தன்னாட்ட உத்திக்கு அடுத்ததாக பகவான் ஸ்ரீரமணர் அறிவுருத்தியது அண்ணாமலையை வலம் வருதல். இன்று அண்ணாமலை வலத்தின் பெருமை பற்றி எழுதுபவர்கள் மூலிகைக் காற்று, சித்தர்கள், அடிக்கொரு லிங்கம் போன்ற இரண்டாம் தர தகவல்களைத் தான் பெரிதுபடுத்திக் காட்டுகிறார்களே அன்றி மலைவலம் வருதலின் அடிப்படை நோக்கமாகிய உடல் மரத்தல் என்பதைப் பற்றி எழுதுவதேயில்லை. "ஒரு நிறைமாத பேரரசி நடை பயில்வதைப் போல மலைவலம் வர வேண்டும்", என்று மலை / நதி வலம் வரும் உத்தியை விளக்குகிறார் பகவான் ஸ்ரீரமணர். வெட்டிக் கதைகள் பேசாமல், கவன ஆற்றலைக் கண்டபடி சிதறவிடாமல், பகவான் சொல்வது போல் நடந்து வந்தால், அடி அண்ணாமலை திருக்கோயில் வருவதற்குள் உடல் மரத்திருப்பதை உணரலாம். "உடல் மரத்திருக்கிறது" என்று உணர்வது யார் / எது? நாமே. "நாம் வேறு. நம் உடல் வேறு." என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும். இந்த பட்டறிவை இனி மறக்காமல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நினைவில் நிறுத்தினால் போதும். ஆரம்பத்தில் முயற்சியுடன் அடையப் பெறும் இந்நிலை, ஒரு சமயத்தில் முயலுதல் இல்லாமலேயே அடையப்படும். இதுவே நம் இயல்பு நிலை என்பதை உணருவோம். இத்தனைப் பிறவிகளும், இத்தனைப் பாடுகளும் மறந்த நம் இயல்பை மீண்டும் அடையவே என்பதையும் உணருவோம். பிறகென்ன? தன் மேல் களி நடனம் புரியும் கூத்தப் பெருமானை திரும்பி வணங்கும் முயலகனைப் போல் நாமும், உயிர்களின் மறதியைக் கொண்டே அண்டம் என்ற தனது கூத்தினை நடத்தும் இறைவனின் திறத்தைக் கண்டு வியந்து, அவரது கூத்தைக் (நமது வாழ்வை) கண்டு களித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!! 🌸🙏😍

பகவான் அறிவுருத்திய இந்த அண்ணாமலை வலம் வரும் உத்தி மலைகள், நதிகள், மானசரோவர் போன்ற நீர் நிலைகள், பெரும் சுற்றுப் பாதைகளைக் கொண்ட திருத்தலங்கள் என அனைத்து ஆன்மிக மையங்களுக்கும் பொருந்தும் - திருக்கயிலாய வலம் நீங்கலாக (குறைவான உயிர்வளி & ஆபத்தான பாதை என்பதால்). இந்த உத்தியை சரியாக பயிற்சி செய்து கொண்டு வந்தால், காலப்போக்கில் எல்லா வேலைகளும் மலைவலம் வருவதற்கு சமமாகிவிடும். இறையுணர்வைப் பெற - நமது இயல்பை உணர - தனியாக ஓர் இடமோ, பயிற்சியோ தேவைப்படாது.

🔥 பால்குடம் சுமத்தல்

மேற்சொன்ன மலைவலம் வருதல் நடக்கத் தெரிந்த குழந்தைகளுக்கு எனில், இந்த உத்தி நடை பழகும் குழந்தைகளுக்கானது. ☺ "நிறைமாத பேரரசி போன்று நட", என்று பகவான் அரிச்சுவடிப் பாடம் நடத்தினாலும், சிலர் ஏவுகணை கணக்காக சுற்றி வருவார்கள். 😁 "கவன ஆற்றலை சிதறவிடாமல் உன் மீதே திருப்பு", என்றாலும், அஷ்டாவதானிகள் தசாவதானிகள் தோற்கும் அளவிற்கு எல்லா கதைகளும் பேசிக்கொண்டு வருவர். 😂 இது போன்றவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் பால்குடம் சுமத்தல். தலையில் எடை ஏறியவுடன், தானாகவே வேகம் குறைந்துவிடும். கவனமும் சிதறாது. போதாதற்கு மஞ்சள் உடை, மேளதாளம், இவைகளால் ஏற்படும் கவனஈர்ப்பு என அனைத்தும் சேர்ந்து பொறுப்பும் சிரத்தையும் கூடிவிடும். உடலுணர்வு உறுதியாக இழக்கப்படும். ஆனால், எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே ஈடுபடுவதால், தன்மையுணர்வு என்னும் அரியபொருள் கிடைத்தும், அதை சிக்கென பிடிக்கத் தெரியாததால், பெருமிதம், ஆணவம் என எதிர் விளைவுகளில் முடிந்துவிடுகிறது. இதுவே செய்வதைத் தெரிந்து செய்தால், நீர்குடம் சுமந்தாலே போதும்! அதாவது, தினப்படி செய்யும் தொழிலே தெய்வமாகி விடும்!!

🔥 தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி தூக்குதல், தலையில் தேங்காய் உடைத்தல், தலையில் அரைத்த மிளகாய் பூசுதல், கொதிக்கும் எண்ணெய்யில் அப்பம் சுடுதல் மற்றும் சில உத்திகள்

இவையெல்லாம் தமிழரோடு மட்டுமே, அதிலும் பெரும்பாலும் சிறுதெய்வங்களை (முருகப் பெருமான் சிறுதெய்வமல்ல) வழிபடுவோரோடு மட்டுமே, அடையாளப்படுத்தப்படும் உத்திகளாகும் (3). இந்த உத்திகள் பயம், வலி, அதிர்ச்சி, சூடு, எரிச்சல் போன்றவற்றால் சிதறிக் கிடக்கும் நமது கவன ஆற்றலை குவித்து, நம் மீதே திருப்பி, நம்மை நம் உடலிலிருந்து சில மணித்துளிகள் (தீ மிதித்தல், தேங்காய், மிளகாய், எண்ணெய்) முதல் சில மணி நேரம் (தீச்சட்டி, அலகு, காவடி) வரை விடுபடச் செய்யவல்லவை. ஆனால், பால்குட உத்தியில் பார்த்தது போல் இங்கும், எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே ஈடுபடுவதால் எதிர் விளைவுகள் தான் மிஞ்சுகின்றன. சில சமயம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று வள்ளுவம் கூறுவது போல மேற்சொன்ன எளிதான வழிகள் இருக்க இந்தக் கடினமான மற்றும் கொடிய (தேங்காய், மிளகாய் & எண்ணெய்) வழிகள் தேவையற்றது.

இது போன்று இன்னும் பல உத்திகள் இருந்திருக்கக் கூடும் (எ.கா.: கபாலிகம்). காலப்போக்கில் அவை வழக்கொழிந்து போயிருக்கலாம். அல்லது, வேரறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் உறுதி: அவையும் நமது இயல்பை - தன்மையுணர்வை / சிவ தத்துவத்தை - நாம் உணரச் செய்யக் கூடியதாகத் தான் இருந்திருக்கும். இவ்வாறு வழக்கிலுள்ள மற்றும் வழக்கறுந்த உத்திகளை வைத்தே தமிழரின் சமயம் என்னவென்று உறுதியாகச் சொல்லலாம்: உடலுணர்வை ஒழித்து மீண்டும் சிவமாவதே தமிழரது சமயமாகும்!! 👏👏 இதிலிருந்து தோன்றியவை தாம் இன்று உலகிலுள்ள அனைத்து மதங்களும். "எல்லா வழிகளும் சம்மதம்",  "எல்லா வழிகளும் ஓர் இறையையே அடைய உதவுகின்றன" போன்ற நம் பெரியோர்களின் சொற்கள் குறிப்பிடும் வழிகள் (மதங்கள்) மேற்சொன்ன கங்கை முதலான வழிகளைத் தாம். வட பாரத மொட்டை (சமண & பெளத்த), பரங்கி, மிலேச்ச, நாம வழிகளை அல்ல!! ✊👊👊👊💪

🔥 ஓர்தல்

கனவு காண்பவனிலிருந்து கனவு வேறில்லை. இது போன்றே காணும் உலக காட்சிகளிலிருந்து நாம் வேறல்ல. வேறு போன்று தோன்றுவதற்கு காரணம் நமது தன்மறதியே. நமது சுயத்தை நாம் மறந்துவிடுவதால், நாம் வேறாகவும் காணும் உலகை வேறாகவும் உணர்கிறோம். இறைவனின் இத்திருவிளையாடலை அநேகத்துவம் என்று எடுத்துக் கொண்டால், அனைத்தையும் ஒன்றாக, நாமாக, உணர்வதை ஏகத்துவம் என்று அழைக்கலாம். இந்த ஏகத்துவத்தை அடையும் முயற்சியை ஒர்தல் என்றும் அழைத்திருக்கிறார்கள் நமது மூதாதையர். ஓர்தல் = ஒருவனாகுதல். (சென்னைப் பல்கலையின் தமிழ் அகராதியில் ஓர்தல் என்ற சொல் இல்லை. இணையத்தில் தேடினால், உணர்தல், தெளிதல், அறிதல் என்று பொருள் வருகிறது.)

ஓர் என்பது உரிச்சொல். உயிரெழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் ஒருமைப் பெயர்களுக்கு முன்னர் வரும் (எ.கா.: ஓர் ஊரில் ஒரு ராஜகுமாரி...). ஓர் என்பது உயிரையும், ஒரு என்பது உயிர்மெய்யையும் குறிக்கும். இவ்வுலகு உயிர் + மெய்யால் ஆன கலவை. இக்கலவை தோற்ற மாத்திரமே. இதுவும் உயிரிலிருந்தே வெளிப்படுகிறது. எனவே அனைத்திற்கும் மூலமான உயிர் நிலைக்கு திரும்புதலை ஓர்-தல் என்று அழைத்திருக்கிறார்கள்!! (ஏன் அன்னைத்தமிழ் நிறைமொழி என்றழைக்கப்பட்டது என்பதை உணர இவையெல்லாம் சிறு சான்றுகள். தமிழ் நிறைமொழி மட்டுமல்ல. சமய படையெடுப்புக்களுக்கு முன்னர் அதுவே உலகின் இறைமொழியும் ஆகும்!! 👏👌👍💪)

மேலே நாம் பார்த்த அனைத்து உத்திகளையும் ஓர்தல் என்ற கணக்கில் சேர்க்கலாம். ஆனாலும், இங்கே பேசப்படும் உத்தியை மட்டுமே ஓர்தல் என அழைத்துள்ளனர். உத்தியை பார்க்கும் முன் இச்சொல் இன்று எவ்வாறு மருவியுள்ளது என்று பார்ப்போம்.  பேச்சு வழக்கில் ர் & ற் ஆகியவை த்-ஆக மாறும். காற்று = காத்து, நேற்று = நேத்து. எனில், ஓர்தல்...? 😯

உயரிய ஆன்ம அறிவை வழங்கக் கூடியதாகக் கருதப்பட்ட ஒரு செயல், இன்று எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்த செயலாகிவிட்டது. அதைக் குறிக்கும் சொல்லும் இன்று உச்சரிக்க முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது. 😑 இச்சொல்லும் இன்று கீழ்தட்டு மக்களிடம் மட்டுமே வழக்கில் உள்ளது (கீழ்தட்டு, மேல்தட்டு என்பதற்கு பணம், மெக்காலே / பெண்டிங்க் கல்வி, ஆங்கிலம், உயர் பதவி போன்றவை அளவு கோள்கள் அல்ல).

இந்த உத்தி அன்றிருந்த அனைத்து கலாச்சாரங்களிலும் இடம் பெற்றிருந்தது. எகிப்தில் இந்த சேவையை வழங்குவதற்கென ஆலயங்களில் பெண்கள் இருந்துள்ளனர்! இந்த உத்தியில் பல ஆராய்ச்சிகள் (ஆண்களுக்கு, பெண்களுக்கு எந்த நிலையில் என்ன நடக்கிறது என்பது போன்ற) நடந்துள்ளன. பல உச்சங்களையும் தொட்டுள்ளனர். இவர்களில் எனக்குத் தெரிந்து 2 தமிழ்நாட்டு மகான்களும் உள்ளனர். 🌸🌸🙏🙏 இவர்களது சமாதித் தலங்கள் இன்றும் பெரும் புகழ் பெற்று விளங்குகின்றன (ஊர் பெயர்களை வெளியிட விரும்பவில்லை). வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றில் வாழ்ந்த ஒரு பெளத்த மகானும் இவ்வுத்தியைக் கையாண்டிருக்கிறார். அப்ரகாமிய மதங்களில் ஒன்றில் அதன் நிறுவனர் காலத்திலேயே இந்த உத்தி முக்கியத்துவம் பெற்றிருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

எதற்கும் ஒரு எதிர் விளைவு உறுதியாக உண்டு. அதிலும் இது போன்ற உடலுறவு உத்திகளில் சொல்லவேத் தேவையில்லை. அப்படி ஏற்பட்ட ஒரு தவறான எதிர்விளைவு தான் வைணவர்களின் நாமச்சின்னம். (இது பற்றி பின்னொரு இடுகையில் பார்க்கலாம்).

இப்பொழுது உத்தியை பார்ப்போம். உடலுறவு முடியும் தருவாயில் ஆணிடமிருந்து விந்துநீர் வெளியேறுகிறது. இந்நீர் வெளியேறும் சில வினாடிகளுக்கும், வெளியேறியவுடன் சில வினாடிகளுக்கும் ஆண் தனது உடலுணர்வை இழக்கிறான். உடலுணர்வு நீங்கியதால், "தான்" எனும் இறை (சிவ) தத்துவமாக ஒளிர்கிறான். ஒரு சில வினாடிகளே கிடைக்கும் இவ்வரிய மெய்யறிவை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மீண்டும் பேயோடு சேர்ந்து ஆட வேண்டியது தான்!! (பேய் - காளி - எண்ணங்கள், உலகம், ...) 😂😂

இந்த பட்டறிவெல்லாம் (அனுபவமெல்லாம்) ஆணுக்குத் தான் என்பது பெரும்பாலான மகான்களின் கருத்தாகும். மத்வம் மட்டும் மாறுபடுகிறது என்பது என் கருத்து (அவர்களுக்குள்ளும், உடலுணர்வை பெண் எப்போது இழக்கிறாள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது).

இவ்வாறு அன்றாடம் இல்லற வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வைக் கொண்டே மெய்யறிவு பெற முயற்சித்த பண்டைய உலகம் எங்கே? வெறும் உணர்ச்சி எழுச்சிக்காக இனணயத்தில் அதைப் பற்றி அதிகம் தேடும் இன்றைய உலகம் எங்கே? மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. அதாவது, முன்நடத்திச் செல்பவர்கள் எவ்வாறோ, அவ்வாறே பின் செல்பவர்களும். அன்று உலகின் முன்னே நடந்தது நமது மூதாதையர்கள்! 👏👍💪🙏 இன்று நடப்பது பரங்கியர்கள்!! 👿👹☠✊👊👎

மேலே நாம் பார்த்த உத்திகளில் "நினைக்க விடுதலை தரும் அண்ணாமலை" என்ற உத்தியைத் தவிர மீதமனைத்தும் விருந்து சாப்பாடு போன்றது. நினைக்க... என்ற உத்தியையும் பழக ஒரு பக்குவ நிலையை அடைந்திருக்க வேண்டும். எனில், எல்லோருக்கும், எல்லா காலங்களுக்கும், எல்லா இடங்களுக்கும் ஏற்றது... உடையாரை வணங்கும் போது தன்னிச்சையாக மூடும் கண்களை மூட விடுவது தான்!

🏵 கண்களை மூட விடுங்கள்
🌼 அன்னை யசோதை கண்டவாறு கண்ணபிரானைக் காணுங்கள்
🌺 கண்ணபிரானைக் காணுவது என்பது கண்ணபிரானாக ஆவதே
🌻 நாம் நாமாக இருப்பதே

🌸 கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌸🔥🙏

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

குறிப்புகள்:

1. மூழ்கிய முதல் சில கணங்களுத் தான் இவ்விளக்கம் பொருந்தும். பின்னர், உடல் அக்குளிர்ச்சிக்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளும். அதன் பின்னர், "கங்கையில் வாழும் உயிரினங்களுக்கும் விடுதலை (முக்தி) கிடைக்குமா?", என்ற "அந்நிய சக்திகள் வீசியெறியும் பொரைகளுக்காக தம் மூதாதையரின் அரிய செல்வங்களின் மேலே சாணி வீசும் கருங்காலி போலி திராவிடவியாதிகளின்" கேள்விக்குப் பதில் தான் கிடைக்கும்!! 😁

"குளிர்ந்த நீர் தான் அடிப்படைத் தேவையெனில், குளியல் தொட்டியில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் மூழ்கினால் போதாதா? கங்கைக்குத் தான் செல்லவேண்டுமா?", என்று சில அறிவுஜீவிகள் கேட்கலாம். அவர்களுக்கு எனது பதில் கேள்வி, "எங்கு அமர்ந்து உண்டாலும் உணவு செரிக்கும் என்பதற்காக, கழிவறையில் அமர்ந்து உண்பீர்களா?" 😲😰😎👊

ஒரு வேளை இந்த உத்தி பரங்கியர்களுக்குத் தெரியவந்தால்... ஆத்மா ஆதம் ஆனது போல், ஜீவன் ஏவாள் ஆனது போல் இந்த உத்தி என்னவாகியிருக்கும் என்று சிந்தித்ததன் விளைவே இந்த இடுகை ... https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/4VUC7xTdgWv 😛😜😝

2. நமது கைபேசி, கணினி போன்றவற்றைக் கொண்டு பலத் தகவல்களைப் பெறுகிறோம். நமக்கு வேண்டுமானால் அவை பலவித தகவல்கள். ஆனால், அந்தக் கருவிகளின் இயக்ககங்களுக்கு அவை 0 & 1 என்னும் இரண்டே எண்கள் தாம். இவ்வாறே நம் மனதும் இயங்குகிறது. பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், உணருதல், சிந்தித்தல் என பல தொழில்களை நாம் புரிந்தாலும், நம் மனதின் அடிப்படைத் தரவு நினைவு / எண்ணம் தான்.

3. நமது தீ மிதித்தல் உத்தியை வைத்து சில பரங்கி அமெரிக்கர்கள் பல கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். 🤑🤑🤑 ( https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/QXVH2DvPLJa )

இந்தப் பரங்கி இனத்திற்கு சில இயல்புகள் உண்டு. தனித்து வாழ முடியாது. 😛 மற்றவர்களின், குறிப்பாக கருப்பு மற்றும் மஞ்சள் இனத்தவரின், உழைப்பில் வாழும். 😜 ஒட்டுண்ணியாக வாழ்ந்தாலும், கோலோச்ச வேண்டும் என்று நினைக்கும். 😝 எதையும் அரைகுறையாக புரிந்து கொள்ளும்.🙃  அதுவே சரி என்று உலகின் தலையில் கட்டிப் பணம் பார்க்கும். இவ்வினம் புகுந்த நாடு, தொழில், துறை என அனைத்தும் நாறிப்போகும். 💩 சுருங்கச் சொன்னால், பரங்கிகள் இவ்வுலகை அழிக்க வந்த பீடைகளாகும் 😠😡 (பீடை - ஒட்டுண்ணி). இந்த விளக்கம் பரங்கி மனிதர்களுக்கு மட்டுமல்ல. அவை வாழுமிடத்தில் உள்ள மாடு, புழு, தேனீ போன்ற உயிர்களுக்கும் பொருந்தும். அங்கிருந்து நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மாடுகள், புழுக்கள், தேனீக்களால் என்ன விளைவுகள் இங்கு ஏற்பட்டுள்ளன என்பது, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அனைவரும் அறிந்ததே.