Monday, January 31, 2022

தர்ப்பணம் கொடுத்தல் எனும் கண்ணாடி கொடுத்தல்!!


தர்ப்பணம் என்ற ஆரிய சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. "கண்ணாடி" என்பது அவற்றில் ஒன்றாகும். தர்ப்பணம் கொடுத்தல் எனில் கண்ணாடி கொடுத்தலாகும்.

நம்மை நாம் எவ்வாறு காணமுடியும்? ஒரு பிரதிபலிக்கும் பொருளைக் கொண்டு காணமுடியும். இவ்வாறே, மெய்யறிவு பெறாத உயிர்களுக்கு உலகக்காட்சி என்பது கண்ணாடியாகிறது.

"படைப்பு என்பது எதற்காக?" என்று ஓர் அன்பர் கேட்டதற்கு, "காண்பான் என்றொருவன் இருக்கிறான் என்பதை உணர்வதற்காக" என்று பதிலளித்தார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

காண்பவன் தன்னைப் பற்றிய உண்மையை உணர்வதற்கு படைப்பு எனும் கண்ணாடி தேவைப்படுகிறது. அந்த தேவையின் முதல் படி உடலாகிறது. உடலின்றி அலையும் உயிர்களுக்கு உடல் கிடைக்க உதவும் சடங்கே தர்ப்பணமாகும். இச்சடங்கு முழுக்க முழுக்க நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

🔸 எள்ளு-தண்ணீரை மண்ணில் விடுவது: இது கண்ணாடி கொடுக்கும் சடங்கின் முகமையான படியாகும். இங்கு மண் என்பது பெண்; எள்ளு-நீர் என்பது ஆணிடமிருந்து வெளியேறும் விந்துநீர். அதாவது, யாருக்கு கண்ணாடி கொடுக்க நினைக்கிறோமோ அவரை நினைத்து, மனைவியை புணரவேண்டும். கண்ணாடி தேவைப்படுபவர், வாய்ப்பிருப்பின், கருவில் வந்து சேருவார்.

முதலில், இறந்தவர் இன்னும் நம்முடன் இருக்கிறார் என்பதை உணரவேண்டும். அவர் மீண்டும் நம்மிடையே வந்து பிறக்க விரும்புகிறார் என்பதையும் நாம் உணரவேண்டும். பிறகே, அவரை நினைத்து, நம்பிக்கையுடன், புணரவேண்டும்.

🔸 வாழைக்காய் கொடுப்பது: ஆண்கள் இல்லாத அல்லது வயது முதிர்ந்த ஆண்களை உடைய குடும்பத்துப் பெண்களை, அக்குடும்பத்து ஆண்கள் சார்பாக, புணருவது. கர்ப்பதானம் எனப்படுவதும் இதுவேயாகும். இரண்டிற்கும் வேறுபாடு புணரும் போது கொள்ளும் நினைப்பாகும்.

🔸 பரங்கிக்காய் கொடுப்பது: வாழைக்காயின் எதிர்மறை. பெண்கள் இல்லாத அல்லது வயது முதிர்ந்த பெண்களை உடைய குடும்பத்து ஆண்கள் புணருவதற்கு தன் வீட்டுப் பெண்களை கொடுப்பது.

இவையெல்லாம் அக்கால ஆரியர்களிடையே இருந்த நம்பிக்கைகளாகும். இச்சடங்கு உருவாக்கப்பட்ட காலம் வேறு. இன்றைய காலம் வேறு. அன்றிருந்ததுபோன்று திடம் குறையாமல் இன்று கடைபிடிப்பதென்பது முடியாத செயல். சட்டத்திற்குப் புறம்பானதும்கூட!

ஒரு வகையில், தெரிந்த இடத்தில், தெரிந்த குடும்பத்தில் மீண்டும் பிறந்து, தெரிந்த தொழில் / வேலை செய்து, தெரிந்த வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகை செய்வதே இந்த சடங்கின் நோக்கமாகும். இதனால்தான், சில சமூகங்களில், மகன் இல்லாமல் இறக்கக்கூடாது என்ற நம்பிக்கையுள்ளது. மகன் இருப்பின், அவன் இந்த சடங்கைச் செய்து, தன்னை மீண்டும் இதே இடத்திற்கு வரச் செய்திடுவான் என்ற நம்பிக்கையே ஏதுவாம்.

இன்று உலகம் இருக்கும் நிலையை, செல்லும் பாதையை கருத்தில் கொண்டால், தெரிந்தவிடம் தெரியாதவிடம் என்பதைவிட பிறவாதவிடத்தை சென்றடைவதுதான் சரி! ☺️

யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் போது, மொத்த அண்டமும் இறைவனின் படைப்பே (அல்லது, இறைவனே) எனும் போது எங்கு பிறந்தாலென்ன? எப்படிப் பிறந்தாலென்ன? தெரிந்த வாழ்க்கையையே ஏன் மீண்டும் மீண்டும் வாழவேண்டும்? தெரிந்த நூலையோ / திரைப்படத்தையோ எத்தனைமுறை மீண்டும் மீண்டும் படிக்க / பார்க்க விரும்புவோம்?

இறுதியாக, பிறவி கிடைக்காமலிருக்கும் முன்னோர்கள் பசியாற வருவார்கள் என்பது ஓரளவு உண்மையானாலும் இதற்கு ஏது: இங்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவு! உடல் உலகக் காட்சிகளைப் பற்றிய சரியான அறிவைப் பெற்றிருப்போர் மீண்டும் இங்கு வர விரும்புவார்களா? அப்படியே வருபவர்களுக்கு என்ன கொடுக்கப்படவேண்டும்? சரியான அறிவு!

பிறவி எடுப்பதே பிறவாதிருக்கத்தான்! வாழ் என்ற சொல்லைப் பிரித்து ஆராய்ந்தால் "நுழைந்து + வருதல்" என்ற பொருள் கிடைக்கும். உலகக் காட்சிகளுக்குள் நுழைந்து தன் இயல்பு நிலைக்கு திரும்புதல். "பூங்காவைவிட்டு வரமாட்டேன். விளையாடிக் கொண்டேயிருப்பேன்." என்று அடம்பிடிக்கும் குழந்தைக்குத் தேவை: முதலில், அறிவுரை; அடுத்தது, அடி!! 😄

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

தை - 19: திரு வள்ளற் பெருமானின் பருவுடல் மறைந்த நாள்!!

பசித்திரு. விழித்திரு. தனித்திரு.

🌺🙏🏽🙇🏽‍♂️

''பெருமான் அணையா அடுப்பைத் துவங்கி வைத்தார்", "வாடி வந்த மக்களின் பசியாற்றினார்" என்றெல்லாம்தான் நமக்கு சொன்னார்களே தவிர, ஏன் அதை செய்தாரென்று சொல்லவில்லை! (பொரை வீசும் முதலாளியின் பெயரைக் காப்பாற்றுவது பான்பராக் சட்டைக்காரனின் கடமையல்லவா! 👊🏽)

பேராசை பிடித்த நயவஞ்சக கிறித்தவப் பரங்கி ஓநாய்களின் கொள்ளையால் (ஆட்சியால்) விளைந்த விளைவு: ஒரு நூற்றாண்டு காலம் நீடித்த பஞ்சம்!!

காலம்காலமாக ஆறில் ஒரு பங்கு வரி என்றிருந்த சமன்பாட்டை மூன்றில் இரண்டு பங்கு என்று மாற்றியதால் விளைந்தது. அச்சமயம் மக்களின் துயர் துடைக்கத் தோன்றிய பெருமான்களில் ஒருவர் வள்ளலார் எனப்படும் திரு இராமலிங்க அடிகளாராவார். 🙏🏽

(திருவள்ளுவர், ஒளவையார், வள்ளலார் போன்ற அருளாளர்களின் படங்களை பகிரும்போது, தயவு செய்து, அவர்கள் திருநீறு தரித்திருக்கும் படங்களையேப் பகிரவும். பாலைவன மதங்களின் கால்வருடிகளான திருட்டுத் திராவிட கும்பல் பரப்பி வைத்திருக்கும் திருநீறு தரிக்காதப் படங்களை, தயவு செய்து, தவிர்க்கவும்.)

Friday, January 28, 2022

பாரம்பரியமும் தொழிற்போட்டியும் படுத்தும் பாடு!! 😁

"பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் தன்பாலினச் சேர்க்கையாளர்களாக இருந்தால், தயவு செய்து, அவர்களை ஆதரியுங்கள்" -- நேற்று (28/01/22) உலக அளவில் பரவப்படுத்தப்பட்ட செய்தி

oOo

"என்னங்கைய்யா, இப்புடி ஒரு அறிவிப்பு?"

"என்ன செய்யறது தம்பி! பாரம்பரியத்தையும் காப்பத்தனும்; தொழில் போட்டியையும் சமாளிக்கணுமே!"

"பாரம்பரியத்த காப்பத்தணுமா?"

"பல ஆயிரம் வருசமா எங்க ஆளுங்க பெரும்பாலும் தன்பாலினச் சேர்க்கையாளர்கள், தம்பி. அலெக்சாண்டர், ஜூலியஸ் போன்ற மன்னர்களுக்கு ஆண் மனைவிகள்தான் அதிகம். அந்த பாரம்பரியம் இன்னி வரைக்கும் கொஞ்சம் தொடருது, தம்பி."

"சரிங்கய்யா. அப்புறம், தொழில் போட்டின்னு சொன்னீங்களே?"

"ஆமாம். எங்களுக்கும் துலுக்கனுங்களுக்கும் எப்பவுமே போட்டாபோட்டி இருக்கும், தம்பி. இப்ப, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கறதுக்கு முதல் சம்சாரம் ஒத்துக்கலன்னு வெச்சுக்குவோம். அதே சமயம் குடும்பத்தவிட்டு மொத்தமா விலகிப்போகவும் முடியலன்னு வெச்சுக்குவோம். என்ன செய்யுறாங்க ஜனங்க? துலுக்கனா மாறிடறாங்க, இல்லயா?

"அதே மாதிரி நம்ம தொழிலுக்கும் ஒரு தனி அடையாளம் வேணுமில்லையா? அதான், இந்த தன்பாலினம், இருபாலினம் இவங்களுக்கு ஒரு புகலிடமா நம்ம நிறுவனத்த முன்னிறுத்தறோம். உலகத்துல இந்த மாதிரி மக்கள் 2-2.5% இருக்காங்க, தம்பி."

"நல்லதுங்கய்யா. நல்லா யோசிச்சிருக்கீங்க!"

🤭

அதெல்லாம் கற்காலம். இன்று நாம் பகுத்தறிவில் உச்சம் தொட்டுவிட்டோம்! 😉


சில எடுத்துக்காட்டுகள்:

👊🏽 வளர்த்த மகளை மணப்பதற்கு பெயர் பகுத்தறிவு

👊🏽 வேசியிடம் உடலின்பம் துய்த்துவிட்டு, பின்னர், வேண்டுமென்றே சண்டையிட்டு, அவளிடம் கொடுத்தப் பணத்தை திரும்பப் பிடுங்கிக்கொண்டவனுக்கு பெயர் பேரறிஞன்

👊🏽 இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில், தானே திரைக்கதை-உரையெழுதிய நாடகத்தை கடற்கரையில் அரங்கேற்றியவனுக்கு பெயர் தமிழினத் தலைவன்

👊🏽 மகளின் தோழியை மடக்கியவனுக்கு பெயர் பேராசிரியர்

👊🏽 ஜேப்படி செய்யவந்தவனுக்கு பெயர் பாரதத்தைக் கண்டுபிடித்தவன்

👊🏽 பாரதம் போன்ற நாடுகளிலிருந்து அறிவைத் திருடிய கெப்ளர், நியூட்டன், கலிலியோ, வோல்ட் வகையறாக்களுக்கு பெயர் விஞ்ஞானிகள், மாமேதைகள், கண்டுபிடிப்பாளர்கள்

👊🏽 35களுக்கு நிலையான, வசதியான, பாதுகாப்பான வாழ்க்கையும், 90களுக்கு எதிர்மறையான வாழ்க்கையும் கொடுக்கும் முறைக்கு பெயர் சமூக நீதி

👊🏽 நோகாமல் நுங்கு தின்பவர்கள் நடத்தும் அமைப்புக்கு பெயர் தொழிற்சங்கம்

👊🏽 நல்லுணவையும், வாந்தியையும், மலத்தையும் சமநோக்கில் காண்பதற்கு பெயர் மதச்சார்பின்மை

👊🏽 கொள்ளையடிப்பதற்கு பெயர் ஆட்சி

👊🏽 பீட்டரில் பேசுவதற்கு பெயர் அறிவாளித்தனம்

👊🏽 ஆரியம் கலந்து உளறுவதற்கு பெயர் ஆன்மிகம்

👊🏽 புலன்களின் வழியே சென்று, மதியை இழப்பதற்கு பெயர் சேவித்தல்

👊🏽 "2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன கொன்னுட்டாங்களேய்யா" என்று ஒப்பாரி வைப்பதற்கு பெயர் வழிபாடு

👊🏽 நீர் நிலைகளில் நஞ்சு கலந்து, பயிர்களுக்கு தீ வைத்து, பால் சுரக்கும் மார்புகளை அறுத்தெறிந்து, கலைப் பெட்டகங்களை சீரழித்தவர்களுக்கு பெயர் அன்பு மதத்தினர்

Thursday, January 27, 2022

பூசை, வேள்வி & தன்னாட்டம்


பூசை: இறைவனைப் போற்றும் பாடல்களைப் பாடிக் கொண்டும், அவரைப் பற்றிய பொருண்மொழிகளை ஓதிக்கொண்டும் பூ & இலைகளை உடையவர் மீது தூவுவார் பூசாரி.


வேள்வி: பொருண்மொழிகளை ஓதிக்கொண்டு, வேள்விக்குழியில் எரியும் நெருப்பிற்குள் அரசமர சுள்ளி முதலான பொருள்களை இடுவார் புங்கவர்.

மேற்கண்ட இரண்டு செயல்களும் ஒரு வகையில் ஒன்றுதாம். அதென்ன வகை? தன்னாட்டம்!

நமக்கு தோன்றும் எண்ணங்களை (பூக்கள் / அரசமர சுள்ளிகள்) நமது தன்மையுணர்விற்கு (மூலவர் / நெருப்பு / உள்ளபொருள்) காணிக்கையாக்கிக் கொண்டு, அவ்வுணர்வை விட்டு விலகாமல் இருப்பதே தன்னாட்டமாகும்.

நமது தன்மையுணர்வு என்றும் மாறாது & அசையாது. இவ்வகையில் கருவறையிலுள்ள உடையவருக்கு சமமாகிறது. அதுவே அனைத்திற்கும் ஒளி கொடுப்பது. அதிலிருந்தே அனைத்தும் தோன்றுகிறது. அதுவே அனைத்தையும் செரிக்கிறது. இவ்வகையில் வேள்விக்குழியில் எரியும் நெருப்பிற்கு சமமாகிறது.

🌷 பூக்கள் = சுள்ளிகள் = எண்ணங்கள்
🌷 உடையவர் = நெருப்பு = தன்மையுணர்வு
🌷 பூசாரி = புங்கவர் = நாம் (நமது தனித்துவம் / அகந்தை)

எவ்வாறு நமக்கு தோன்றும் எண்ணங்களை நமது தன்மையுணர்விற்கு காணிக்கையாக்குவது?

எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பின் தொடர்ந்து சென்று, நிறைவேற்ற எண்ணாமல், நமது தன்மையுணர்வை இறுகப்பற்றிக் கொண்டிருந்தோமென்றால் எழுந்த எண்ணங்கள் அடங்கிவிடும். இப்படி எண்ணங்கள் எழுந்து அடங்குவதை, உடையவர் மீது தூவப்படும் மலர்களுக்கு சமமாக அல்லது வேள்வித்தீயில் போடப்படும் சுள்ளிகளுக்கு சமமாக கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, January 21, 2022

பெருமாளின் திருவிறக்கங்கள் - மெய்யியல் அடிப்படையில்


மனிதனுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது - செய்தி.

அவ்வளவுதான்! "நமது முன்னோர்கள் இதை என்றோ உணர்ந்திருந்தனர். இதனால்தான் பன்றியையும் மனிதனையும் இணைத்து பன்றிப்பெருமாளை உருவாக்கியிருந்தனர்." என்ற வகையில் எழுதத் தொடங்கிவிட்டனர்!

பன்றியின் இதயத்திற்கும் பன்றிப் பெருமாளுக்கும் எந்த தொடர்புமில்லை. பெருமாளின் திருவிறக்கங்கள் யாவும் மெய்யறிவைப் பற்றியது:

🌷 மெய்யறிவு பெறுவதற்காக மாமுனிவர்கள் பயன்படுத்திய நுட்பங்கள்
🌷 அல்லது, அவர்கள் அறிவுருத்திய நுட்பங்கள்
🌷 அல்லது, பயணிக்கும் வழியில் அவர்களுக்கு கிடைத்த துய்ப்புகள்

இனி, திருவிறக்கங்களை மிகவும் சுருக்கமாக பார்க்கலாம்:

1. மீன் திருவிறக்கம்

உடலென்னும் கடலுக்குள் ஆழ்தல். அதாவது, தனக்குள் தேடுதல்.

2. ஆமைத் திருவிறக்கம் - புலனடக்கம்.

புலன்களை அடக்கி, மூச்சுப் பயிற்சி செய்து கொண்டு (உட்செல்லும் உயிர்வளி - தேவன், வெளியேறும் கரியமிலம் - அசுரன்), மெய்யாசிரியரின் அறிவுரையை (மந்தார மலை) சிந்தித்துக் (கடைந்து) கொண்டிருந்தால் முதலில் நஞ்சில் (பல காலமாக, பல பிறவிகளாக நம்முள் சேர்ந்துள்ள பதிவுகள்) தொடங்கி, இறுதியில் "நாமே உள்ளபொருள்" என்ற மெய்யறிவில் (நப்பின்னை - இலக்குமி) முடியும்.

3. பன்றித் திருவிறக்கம்

மீன் திருவிறக்க கதையில் வரும் கடலை மண்ணாகவும், மீனை பன்றியாகவும் மாற்றிக்கொண்டு, உடன் மோப்ப ஆற்றலையும் சேர்த்துக்கொண்டால் பன்றித் திருவிறக்க கதை கிடைத்துவிடும்! ஏன் மோப்ப ஆற்றல்? இதற்கு பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பதிலளிக்கிறார்: இருப்பு என்ற ஒன்றில்லாமல் இருக்கிறேன் என்ற உணர்வு தோன்றுமா? 

ஆகையால், இருக்கிறேன் என்ற உணர்வைக் கொண்டு நமதிருப்பை மோப்பம் பிடிக்கவேண்டும்.

4. கோளரி (சிங்கம்) திருவிறக்கம்

இந்த கதைக்கு திருக்கடவூர் தலவரலாறுதான் அடிப்படை. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் எளிதில் புரிந்துகொள்ளலாம். நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் (பிரகலாதன் வெளிபடுத்தும் குணங்கள்), நமது தன்மையுணர்வை விடாது இறுகப்பிடிக்கவேண்டும் (மார்க்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ சிவலிங்கத்தை இறுகப்பிடித்தது போன்று). ஒரு சமயத்தில், நமக்குள்ளிருந்து ஒரு தெளிவு பிறக்கும்^; உலக காட்சி விலகிவிடும்; நாம் யாரென்பது தெளிவாகிவிடும்.

^ (மார்க்கண்டேயர் கதையில், சிவபெருமான் சிவலிங்கத்திலிருந்து வெளிப்படுவார்; பிரகலாதன் கதையில், கோளரிப் பெருமாள் தூணிலிருந்து வெளிப்படுவார்)

5. குறளன் (வாமனர்) திருவிறக்கம் - மெய்யறிவாளரிடமிருந்து (இந்திரன்) வெளிப்படும் அறிவுரை (உபேந்திரன்). 

பகவானிடமிருந்து வெளிப்பட்ட "நான் யார்?" என்பது மிகச்சிறந்த குறளனாகும். இந்த அறிவுரையை ஏற்க மனமெனும் அசுரகுரு தொடக்கத்தில் தடைபோடும். மனதை ஒதுக்கி, இவ்வறிவுரையை ஏற்றுக்கொண்டு, விடாது சிந்திக்கத் தொடங்கினால் நனவு, கனவு, தூக்கம் (குறளன் அளந்த 3 அடிகள்) என்று எல்லா நிலைகளையும் அந்த சிந்தனை நிறைத்துவிடும். இறுதியில், மீதமிருக்கும் நமது தனித்துவத்தையும் (நான் இன்னார்) விட்டுவிடுவோம் (மகாபலியின் தலை மீது குறள் பெருமாள் கால் வைத்தது).

6. பரசுராமர் திருவிறக்கம் - பற்றறுத்தல்.

மற்ற திருவிறக்கங்கள் யாவும் அவற்றில் வரும் முகமை கதாபாத்திரங்களைக் கொண்டு பெயரிடப்பட்டிருக்கும். இந்த திருவிறக்கம் மட்டும் கதாநாயகர் கையில் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயரைக்கொண்டு தொடங்கும். ஏனெனில், பரசு குறிக்கும் பற்றறுத்தல் இறுதி நிலையான நிலைபேற்றை வழங்கவல்லதாகும்!

"கோட்டைக்குள் எத்தனை எதிரிகள் இருந்தாலென்ன? வெளியே வர வர, வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், கோட்டை நம் வசமாகும்." என்று அருளியிருக்கிறார் பகவான். இந்த சொற்றொடரை உருவகப்படுத்தினால் நமக்கு கிடைப்பது பரசு (பற்றறுத்தல்) எனும் ஆயுதம் கொண்டு பல்லாயிரம் மன்னர்களை (எண்ணங்களை) கொன்று குவித்த ராமர் - பரசுராமர்.

எண்ணங்களை எவ்வாறு வெட்டிச் சாய்ப்பது? "ஒவ்வொரு எண்ணம் கிளம்பும் போதும் அதை பின்பற்றி செல்லாமல், 'இந்த எண்ணம் யாருக்கு தோன்றியது?' என்று கவனித்தால், மனம் மீண்டும் தனது பிறப்பிடத்திற்கு திரும்பிவிடும். எழுந்த எண்ணமும் கவனிப்பாரின்மையால் அடங்கிவிடும்." என்பது பகவானது வாக்கு. அதாவது, எண்ணங்களை பற்றிக் கொள்ளாமலிருக்கவேண்டும்.

7. இராமர் திருவிறக்கம்

வரலாறும் மெய்யியலும் பின்னிப் பிணைந்துள்ள கதை. மெய்யியல் அடிப்படையில் இராவணன் என்பது ஐம்புலன்களையும், ஐங்கருவிகளையும் கொண்டியங்கும் நிலையற்ற மனமாகும் (மனதுடன் உடல் உலகக்காட்சிகளையும் இணைத்துக் கொள்ளலாம்). இந்த மனதை அழித்தால் நாம் இழந்த நமது குளுமையை (சீதை, Coolness) மீண்டும் பெறலாம்.

மனதை எவ்வாறு அழிப்பது? மனமென்றால் என்னவென்று ஆராய்ந்து, அதன் இயல்பை அறிந்துகொள்வதே அதை அழிப்பதாகும். மனமழிந்த பின் - மெய்யறிவு கிடைத்த பின் - நமக்கு கிடைப்பது குளுமை மட்டுமே. வேறெதுவும் புதிதாக கிடைத்துவிடாது. எதுவும் நம்மை விட்டகலாது. ஆனால், இப்போது எதுவும் நம்மை பாதிக்காது.

8 & 9. பலராமர் & கண்ணன் திருவிறக்கங்கள்

கண்ணபிரான் திருவிறக்கத்தை தனியாக அணுகமுடியும். ஆனால், பலராம திருவிறக்கத்தை தனியாக அணுகமுடியாது. பிரானோடு இணைத்துத்தான் பொருள் காணமுடியும்.

மீன், பன்றி & பலராம திருவிறக்கங்கள் ஒன்றுதாம். மீனில், கடலுக்குள் மீன் ஆழ்ந்து செல்லும். பன்றியில், மண்ணை பன்றி நோண்டும். பலராமரில், மண்ணை பலராமர் உழுவார் (பண்படுத்துவார்).

மீன் & பன்றி கதைகளில், அவைகளே மெய்யறிவைப் பெற்றுவரும் (மீன் - திருமறைகள், பன்றி - அன்னை பூமா). இங்கு, பலராமருக்கு பின்னர் கண்ணன் (மெய்யறிவு) தோன்றுவார்.

பகவான் போன்ற ஒரு சில மெய்யறிவாளர்களே, மெய்யறிவு பெற்றது முதல், உலகக் காட்சியினால் (மாயையால்) பாதிப்படையாமல் இருந்துவிடுகின்றனர். பலருக்கு பெரும் போராட்டம்தான்! இந்த போராட்டத்தையே பலராமரும் கண்ணபிரானும் இணைந்து கம்சனோடு (உலகக் காட்சியோடு) மோதி வீழ்த்தினர் என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

(கண்ணபிரானின் கதைக்குள் பல செய்திகளை பதிவு செய்துள்ளனர். இந்த ஒரு திருவிறக்கத்தை ஆழ்ந்து கற்றுணர்ந்தாலே போதுமானதாகும்.)

10. கல்கித் திருவிறக்கம்

இந்த திருவிறக்கத்தை இரு விதமாக அணுகலாம்: இனி தோன்றப்போகும் நுட்பம் மற்றும் விடா முயற்சி.

🌷 விடா முயற்சி

வெற்றிவாகை சூடி, கோலோச்சிக் கொண்டிருக்கும் எந்த கொடூரனும் அவ்வளவு எளிதில் தோல்வியடைய விரும்புவதில்லை. இவ்வாறே இவ்வளவு நாள் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மாயையும் எளிதில் விலகிச்சென்றுவிடாது. விலகவேண்டிய சமயம் வரும்போது இன்னும் பல மடங்கு பலங்கொண்டு நம்மை தாக்கும். முதலில், நாம் விரும்பியதை, மதிப்பதை தாக்கும். இறுதியில், நமக்கேற்றவாறு உலகை மாற்றிக்கொடுப்பதாகக் கூட மன்றாடும். எதற்கும் சலையாமல், தோன்றும் காட்சிகளை ஒதுக்கித் தள்ளி (கல்கிப் பெருமாளின் கையிலிருக்கும் வாள்), விடாமுயற்சியுடன் (வெண்குதிரை) நமது தன்மையுணர்வை பற்றிக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், வேறு வழியில்லாமல் மாயை மாயமாகும் (உலகக் காட்சிகள் நீங்கிவிடும்).

🌷 இனி தோன்றப்போகும் நுட்பம்

தில்லை கூத்தபிரானின் தூக்கிய இடது பாதம், திருவாலங்காடு இரத்தின சபாபதி பெருமானின் மேல் நோக்கிய இடதுகால், மூலவரை நோக்கியிருக்கும் சிவன்காளை மற்றும் பகவானின் "நான் யார்?" ஆகிய இவை யாவும் உணர்த்தும் தன்னாட்டம் என்ற எளிமையான, சிறப்பான & மேன்மையான நுட்பத்தை விட மேலானதொரு நுட்பம் இனி தோன்றுமா என்று தெரியவில்லை. அப்படி தோன்றி உலகம் செம்மையானால் நல்லதே!

"திரும்பி அகந்தனை தினம் அகக்கண் காண்
தெரியும் என்றனை என் அருணாசலா!!"

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, January 15, 2022

அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், மாட்டுப் பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨



(திருவருணை திரு அண்ணாமலையார் திருக்கோயில் பிரதோஷ விடை)

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

-- குறள் #624, இடுக்கணழியாமை

இக்குறளில் விடாமுயற்சிக்கு அடையாளமாக காளையை காண்பிக்கிறார் முப்பால் முனிவர்.

எனில், நமது திருத்தலங்களில் மூலவரை நோக்கி அமர வைக்கப்பட்டிருக்கும் சிவன்காளை உணர்த்துவதென்ன?

வெளிப்புறமாகவே ஓட எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை நம் தன்மையுணர்வின் மீது திருப்பி (விடை இறைவனை நோக்கியிருத்தல்), விடாமுயற்சியுடன் அவ்வுணர்வை பிடித்துக் கொண்டிருக்கவேண்டும் (விடை இறைவனையே பார்த்துக்கொண்டிருத்தல்).

இவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது! இவ்வளவுதான் நம்மால் இயன்றதும்கூட!! இதன் பிறகு இறைவனின் பாடு. 🙏🏽

oOo


இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்

-- குறள் #1035, உழவு

இக்குறளில், ஓர் உழவன் எப்படியிருக்கவேண்டும் அல்லது எப்படியிருப்பார் என்று சுட்டிக்காட்டுகிறார் தெய்வப்புலவர்.

யாரிடமும் ஒரு பொருளை இரந்து கேட்கமாட்டார். வந்து இரந்து கேட்போருக்கு இல்லையென்று சொல்லமாட்டார்.

அன்று எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் உழவர்கள்!! 😌

oOo


திருவள்ளுவர் திருநாள் 🌺🙏🏽🙇🏽‍♂️

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

-- கல்லாடர், வள்ளுவமாலை

(நல்லவேளை, கல்லாடர் காலத்தில் சமய வேறுபாடுகள் உள்ளபொருளை அடிப்படையாக கொண்டிருந்தன. நாசகார, நயவஞ்சக தொற்றுகள் நுழைந்த பின்னர் பாடியிருந்தால்... 🤢)

(இணைப்பு படம்: 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி செருப்படி பெற்றவனின் படைப்பான பகுத்தறிவு உச்சம் பெறுமுன் பயன்பாட்டிலிருந்த திருவள்ளுவ நாயனாரின் ஓவியங்களுள் ஒன்று)

oOo


பழையதை போக்கி, என்றும் புதிதாய் உள்ள உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு, வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து, வேண்டுதல் வேண்டாமை இலான் திருவடி சேருவோம்! 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, January 9, 2022

சபரிமலையில் செலுத்தப்படும் நெய் தேங்காய் காணிக்கை - சிறு விளக்கம்


"சபரிமலை வரலாற்றில் முதன்முறையாக 18,000 நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டன" -- செய்தி.

18 ஆயிரமென்ன, 18 கோடி நெய் தேங்காய்களை உடைத்தாலும் பொருள் புரியாமல் செய்வதால் பயனில்லை.

எவ்வாறு "விளக்கேற்றுதல் எனில் தன்னலமற்று வாழ்தல்" என்ற பொருள் புரியாமல் 108, 1008, 10008, 100008 என எத்தனை விளக்குகள் ஏற்றினாலும் பயனில்லையோ, அவ்வாறே பொருள் புரியாமல் நெய் தேங்காய்களை உடைப்பதுமாகும்.

🔸 தேங்காய் - நமது தலை
🔸 தேங்காய்க்குள் நிரப்பப்படும் நெய் - நமது மூளை - நமது சிந்தனை
🔸 தேங்காயை உடைத்து நெய்யால் மூலவரை முழுக்குவது - நமது ஆணவத்தை ஒழித்து, சிந்தனையை இறைவனது திருவடிக்கு உரித்தாக்குவது. அதாவது, சித்தத்தை சிவன்பால் வைப்பது. அல்லது, சித்தமெல்லாம் சிவமயமாக்குவது.

இதை ஒரு முறைதான் செய்யமுடியும். ஆணவமழிந்தால் தானாகவே சித்தம் சிவமயமாகிவிடும். 18,000 முறை எப்படிச் செய்யமுடியும்?

நெய் தேங்காய் சடங்கின் உட்பொருள் மறந்து போனதால் வந்த விளைவு இது!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, January 8, 2022

அ. எது இலங்கை? ஆ. எது சிறந்த சித்தரிப்பு? கீதோபதேசமா? அன்னை அன்னபூரணியா?

ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல ...

கோளறு பதிகத்தின் 8வது பாடலில் இந்த வரிகள் இடம் பெறுகின்றன.

இலங்கையை "ஏழு கடல்கள் சூழ்ந்த" என்று குறிப்பிடுகிறார் ஆளுடைய பிள்ளையார் 🌺🙏🏽🙇🏽‍♂️. ஆனால், இலங்கையை 3 கடல்கள்தானே சூழ்ந்துள்ளன! (நுட்பமாக கணக்கிட்டால், இரு கடல்கள்தாம் தேறும்) எனில், எதை இலங்கையென்று குறிப்பிடுகிறார்?

நீரோட்டத்திற்கு இடையேயான பகுதியும் இலங்கை எனப்படும்!

எனில், ஏழு கடல்கள் என்பன எவை? ஏழு தாதுக்கள்! ஏழு தாதுக்களால் ஆன நம் உடல்!!

எனில், கடலெனும் உடல் சூழ்ந்த இலங்கை எது? நாம்தான்!!

இந்த இலங்கையின் அரையன் (தலைவன்) யார்? ஐம்புலன்களையும் ஐங்கருவிகளையும் கொண்ட மனமெனும் இராவணன்! ^

இந்த மனமெனும் இராவணனாலும் தனக்கு எந்த இடரும் நேர்ந்திடாது என்கிறார் பெருமான். ஏனெனில், தான் நிலைபேற்றை அடைந்துவிட்டதால் (உளமே புகுந்த அதனால்).

ஆகையால், உடலெனும் ஆழ்கடலும் நல்லதே என்கிறார். நாம் உடலை சிறை என்கிறோம். ஆனால், நிலைபேற்றை அடைந்துவிட்டால் உடலும் நல்லதே என்கிறார் பெருமான்.

oOo

^ - மெய்யறிவில் நிலைபெறும்வரை மனம்தான் நமக்கு தலைவனாகும் (படம் #1: கீதோபதேசம்). நிலைபெற்ற பின், அது நமக்கு உணவு சமைத்துப் பரிமாறும் அன்னை அன்னபூரணியாகிவிடும் (படம் #2).


🌷 கீதோபதேசம்

நின்று கொண்டிருக்கும் திருமால் இருள் பொருந்திய குழப்பத்தை / மயக்கத்தைக் குறிக்கிறார். மால் எனும் சொல்லிற்கு குழப்பம் / மயக்கம் என்பது பொருள். மாலோனே - மயக்குபவனே. அதாவது, மாயை.

வைணவம் அன்னை வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். உடலல்லாத நம்மை உடலாக காணச் (மயக்க) செய்யும் ஆற்றலுக்கு அன்னை வழிபாட்டில் மாயை என்று பெயர். அங்கு பெண்ணானது இங்கு ஆணாகிவிட்டது.

திருமாலின் காலடியிலிருக்கும் அர்ஜுனன் இருளுக்கு எதிரான ஒளியைக் குறிக்கிறார். சுய ஒளி கொண்டது எது? அறிவுப் பொருளாகிய நாமே அது.

தற்போது நம்மை நாம் ஓர் உடலாக காண்கிறோம். காட்சி மாத்திரமேயான உலகை உண்மையென்று கருதுகிறோம். அசைவற்ற நாம் ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு செல்வதாக உணர்கிறோம். அசையும் உலகு அசைவற்று நிற்பதாக காண்கிறோம். இதற்கு மயக்கம் என்று பெயர். நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும் வரை இந்நிலை தொடரும். இந்நிலை தொடரும் வரை நம்மை இயக்குவது மாயையாகும். இதனாலேயே நம்மை இயக்கும் மாயையை நிற்பது போன்றும், இயங்குவதாகத் தோன்றும் நம்மை மாயையின் காலடியிலிருப்பது போன்றும் சித்தரித்திருக்கிறார்கள்.



🌷 அடுத்து, அன்னை அன்னபூரணி

ஒரு சமயத்தில், நாம் அழியும் உடலல்ல, அசைவு நமக்கில்லை, இயங்குவது நாமில்லை, காணப்படும் உலகம் காட்சி மாத்திரமே என்பதையெல்லாம் உணர்ந்துவிடுவோம். அதாவது, மெய்யறிவு பெற்று நிலைபெற்றுவிடுவோம். இதன் பிறகு மாயையால் (திருமாலால்) நம்மை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், எடுத்த பிறவி முடியும்வரை காட்சிகள் மட்டும் தொடரும். தோன்றும் காட்சிகளை கண்டுகளித்திருப்பதைத் தவிர வேறு பணி நமக்கில்லை. இதை சற்று மாற்றிச் சொல்லவேண்டுமானால்: தானாக சமைந்து வருவதை உண்டு களித்திருப்பதைத் தவிர வேறு பணி நமக்கில்லை!

இவ்வுடல் வழியாக நாம் காணவேண்டிய காட்சிகளை சமைத்துக் கொடுக்கும் மாயையே அன்னை அன்னபூரணி ஆகிறார். மெய்யறிவில் நிலைபெறுவதற்கு முன் மாயையால் இயக்கப்பட்ட நாம், இப்போது, அதே மாயையால் உணவு பரிமாறப்படுகிறோம்!! ☺️

மெய்யறிவு பெறுவதற்கு முன்புள்ள நிலைக்கு பொருந்திய கீதோபதேசம், மெய்யறிவு பெற்ற பின் பொருந்தவில்லை. மெய்யறிவு பெற்ற பின் பொருந்தும் அன்னை அன்னபூரணி, பெறுவதற்கு முன் பொருந்துவாரா? பார்ப்போம்.


மெய்யறிவு பெறுவதற்கு முன்பும் பின்பும் நம்மைப் பற்றிய அறிவு & தோன்றும் காட்சிகளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைத்தவிர வேறெதுவும் மாறிவிடாது. பெறுவதற்கு முன், அன்னையுடன் சேர்ந்து (காட்சிகளை உண்மையென்று நம்பி) நடனமாடிக் கொண்டிருப்போம் (படம் #4: அம்மையப்பரின் கூத்து). பெற்ற பின், தோன்றும் காட்சிகளை கண்டுகளித்துக் கொண்டிருப்போம். நம் நிலைதான் மாறுகிறதேயன்றி அன்னையின் நிலை மாறுவதில்லை. காட்சிகளை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கிறார். அதாவது, சமைத்து உணவு பரிமாறிக் கொண்டேயிருக்கிறார். அன்னபூரணியாகவே இருக்கிறார்.

இவ்வகையில், கீதோபதேச சித்திரத்தைவிட அன்னை உணவு பரிமாறும் (படம் #2) அல்லது உணவு பரிமாற தயாராக தனியாக அமர்ந்திருக்கும் (படம் #3) சித்திரமே சிறந்ததாகும்.

🌷 கீதோபதேச சித்திரம் மட்டுமல்ல. பின்வரும் வைணவ & அன்னை வழிபாட்டுச் சித்திரங்களும் மெய்யறிவு பெறுவதற்கு முன்னர் மட்டுமே பொருந்தும்:

🔸 கண்ணபிரான் குழலூதுவது போன்றும், ராதை மயக்கத்துடன் அவரை காண்பது போன்ற சித்திரங்கள் (பிரான் - இருள், ராதை - ஒளி)
🔸 கண்ணபிரான் குழலூதுவது போன்றும், பல வகை விலங்குகள் மயக்கத்துடன் அவரை சுற்றியிருப்பது போன்ற சித்திரங்கள் (பிரான் - இருள், விலங்குகள் - உயிர்கள் - ஒளி)
🔸 மொத்தத்தில் மஞ்சள் வேட்டி உடுத்தியுள்ள பெருமாளின் சித்திரங்கள் யாவும்! கருமையான பெருமாளின் மேலுடல் இருளைக் குறிக்கும். அவரது மஞ்சள் கீழாடை ஒளியைக் குறிக்கும். அதாவது, ஒளியைவிட இருள் மேலானது / உயிரைவிட உயிரற்றது மேலானது / அறிவைவிட அறிவற்றது மேலானது என்பது அச்சித்திரங்கள் உணர்த்தும் பொருளாகும்.
🔸 சிவபெருமானுக்கு அன்னை பிச்சையிடுவது போன்ற சித்திரங்கள். இவற்றிலும், அன்னை அரியணையில் அமர்ந்திருக்க, பெருமான் அவரிடம் வந்து பிச்சை பெறுவது போன்ற சித்திரம் என்றைக்குமே பொருந்தாது! கண்ணுக்கெட்டிய தூரம்வரை புவியின் மேற்பரப்பு வளையாமல் காட்சியளிப்பதால், புவி தட்டையானது என்று பரங்கியர்கள் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்ததற்கு சமமாகும்.

oOOo

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, January 3, 2022

மார்கழி - மூலம் - மறைமதி நன்னாள்: ஆஞ்சநேயர் பிறந்தநாள்!


மார்கழி - மூலம் - மறைமதி நன்னாள். மனதைக் குறிக்கும் ஆஞ்சநேயர் திருவுருவத்தை வைணவர்கள் உருவாக்கிய நாள் அல்லது உருவாக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிய நாள்.

ஆஞ்சநேயர் - அனுமான் - ஹனுமான் - ஹ (இறை/சிவம்) + னு (கருவி) + மான் (மனம்) = இறையை அடைய உதவும் கருவியே மனம்.

🔸 மனம் நிலையற்றது
🔸 ‎பலம் பொருந்தியது
🔸 ‎ஒரு நொடியில் பல இடங்களுக்கு சென்று வரக்கூடியது
🔸 இதன் மூலம் கிடைக்க பெறும் துய்ப்புகள் யாவும் இறுதியில் பிறவிப்பிணி நீக்கவல்லது
🔸சேவை மனப்பான்மையுடன் வாழ்வதே இக்கருவியை சிறந்த முறையில் பயன்படுத்துவதாகும்

இனி, சற்று விரிவாக பார்ப்போம்.

🌪‎ மனம் நிலையற்றது. காற்றைப் போல. எனவே, சதா தாவிக் கொண்டிருக்கும் குரங்கின் வடிவத்தைக் கொடுத்தார்கள் வைணவர்கள்.

💪 மனம் பலம் பொருந்தியது. மனதையடக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகவே, அனுமானை பலசாலியாக வடிவமைத்தனர்.

🍩 உடல் உறுதியாகவும், நலத்துடனும் இருந்தால் மட்டுமே மனமும் பலமுடனும் இருக்கும். இதையே திருமூலர் 🌺🙏🏽🙇🏽‍♂️ "உடம்பாற் அழியின் உயிராற் அழிவர்..." என்ற திருமந்திரப் பாடலில் உணர்த்துகிறார். இதை உணர்த்தவே அனுமானுக்கு வடைமாலை சாற்றுகிறார்கள். வடைமாலை செய்ய பயன்படும் தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலுக்கு அவ்வளவு நன்மைகள் தரக்கூடியது.

🌏 மனதால் ஒரு நொடியில் பூமியின் எப்பகுதிக்கும் சென்றுவரலாம். அனுமான் ஒரே தாவலில் இலங்கை சென்றது போல.

😍 "மனம் என்பது ஓர் அதிசய சக்தி", என்று கூறுகிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இதே போன்று மனதை அற்புதம், அழகு, விஷேசம், பிரமிப்பு என்றழைத்த அருளாளர்களும் உண்டு. மனம் கொடுமையானது என்று சொன்ன அருளாளர்களும் உண்டு. ஆனால், உலகம் செம்மையாக இயங்க வேண்டி, நம் முன்னோர்கள் முன்னதிற்கே முகமைத்துவம் கொடுத்தனர். இதனால் தான் சைவத்தில் மனதை (முருகர்) அழகு என்றனர். இதையொட்டி வைணவர்களும் அனுமானை அழகன் என்றனர்.

🔺 ஒரு நதியின் பயணத்தில் தோன்றும் இன்னல்கள் யாவும் அதன் பயனுக்கே - அதன் இறுதி இலக்கான கடலில் கலப்பதற்கே. இது போன்றதே உயிரிகளின் பிறவிப் பயணமும். எண்ணற்ற பிறவிகள். பிறவி தோறும் இன்னல்கள். இவை யாவும் உயிரியின் இறுதி இலக்கான நிலைபேற்றை அடைவதற்காகவே. பிறவிகள், இன்னல்கள் என அனைத்தும் ஒரு உயிரிக்கு மனதின் வழியாகவே துய்ப்பாகும். ஆக, மனம் (அனுமான்) கொண்டு வரும் யாவும் உயிரியின் பிறவிப்பிணியை போக்கி அவனை உயிர்ப்பிக்கும் (^) சஞ்சீவினி மருந்தாகும். இக்கருத்தையே அனுமான் சஞ்சீவினி மலையைக் தூக்கிக்கொண்டு பறந்து வருவது போன்ற ஓவியம் உணர்த்துகிறது.

(^ - பிறவியெடுத்தலை இறத்தல் என்றும், தன்னைத் தெளிவாக அறிதலே (மெய்யறிவு பெறுதலே) பிறத்தல் (விடுதலை பெறுதல்) என்றும் கூறுகிறார் பகவான்)

🐂 ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதை சிவன்காளை வழியாக சைவம் உணர்த்துகிறது.

விளையும் பயிரை தலைவன் எடுத்துக்கொள்ள, உழைத்த காளைக்கு வைக்கோல் மட்டுமே உணவாகக் கிடைக்கிறது. வண்டியை இழுத்து, ஏற்றப்பட்ட சுமைகளை தலைவன் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சேர்த்து, அவன் பெரும்பயன் அடைந்தாலும் காளை பெறுவது என்னவோ வைக்கோலும் தண்ணீரும் தான். ஆக, தனது உழைப்பால் காளை பெரிதாக பயனடையவில்லை. உழைப்பால் மட்டுமல்ல; தனது கழிவுகளாலும் அது பயனடைவதில்லை. ஆனாலும், அது உழைப்பதை நிறுத்துவதில்லை. தலைவன் இட்ட பணியை செவ்வனே செய்து முடிக்கிறது. இது போன்றே மனிதனும் வாழவேண்டும். 

அனைத்தையும் உடையவர் இறைவன். அனைத்தையும் இயக்குவதும் அவரே. நமக்கு வந்து சேர்வதை செவ்வனே செய்து முடிப்பது மட்டுமே நமது கடமையாகும். இதையே அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பாடினார். பகவானும், "எண்ணுரு (தோன்றும் எண்ணங்கள் அல்லது காணும் உருவங்கள்) யாவும் இறையுருவாம் என எண்ணி வழிபடலே (வாழ்தலே) ஈசனை (இறையை) நல்ல முறையில் வழிபடுதலாகும்" என்றார். "செய்யும் தொழிலே தெய்வம்" என்பதும், "வாழ்தலே வழிபடுதல்" என்பதும் இப்படிப்பட்ட சேவை மனப்பான்மையுடன் சிவன்காளையாக வாழ்வதையேக் குறிக்கிறது. இதே சேவை மனப்பான்மையைத் தான் திரு ராம-லட்சுமண-சீதா பிராட்டியாரின் முன் கூப்பிய கைகளுடன் தலைவணங்கும் அனுமான் உணர்த்துகிறார்.

அனுமான் பிள்ளையாருக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்டவர் என்பதை "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற சொலவடை வாயிலாக அறியலாம். அதாவது, தமிழர்களின் ஆதிசமயமான சைவத்தில் பிள்ளையார் வடிவமைக்கப்பட்டு, மிகவும் புகழ் பெற்றுவிட, அவருக்குப் போட்டியாகவும், அவரையும் சிவன்காளையையும் மிஞ்சும் வண்ணம் ஒரு வடிவத்தை உருவாக்க முயற்சி செய்து, இறுதியில் மனதைக் குறிக்கும் குரங்கு வடிவ அனுமானாய் முடிந்துவிட்டது. பிறகு, அறிவைக் குறிக்க கருடனை வடிவமைத்தார்கள்.

மனதைப் (அனுமானைப்) பற்றி எத்தனையோ நல்லவிதமாக சிந்தித்தாலும் ஒரு சமயத்தில் மனதை ஒதுக்கித் தள்ள வேண்டிவரும். தள்ளியும் விடுவோம். இல்லையெனில் மீண்டும் பிறவியெடுப்போம்.

ஒரு வேளை, "நான் ஏன் இன்னும் எனது மனதை ஒதுக்கித் தள்ளாமலிருக்கிறேன்?" என்று பகவானிடம் கேட்டால், பகவானின் பதில் பின்வருமாறு இருக்கும்:

"நீ பட்டது போதல. இன்னும் படவேண்டியிருக்கு."

☺️

oOOo

மனதைப் பற்றி பகவான் அருளியவற்றில் சில...

🔸 மனம் என்று தனியாக ஒரு பொருளில்லை. எண்ணங்களின் தொகுப்பே மனம்.
🔸 ‎ "நான்" என்னும் எண்ணமே அனைத்திற்கும் முதலாகும். இது தோன்றிய பிறகே உடல், உலகு என அனைத்தும் தோன்றுகிறது.
🔸 வெளிமுகமாகச் சென்று கொண்டிருக்கும் நம் கவன ஆற்றலை, நம் மீதே திருப்பி, இந்த நான் என்பது என்ன என்று கவனித்தோமேயானால், மனம் ஓட்டம் பிடித்துவிடும். 
🔸 ‎ நல்ல மனம் என்றும், கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்கள் இல்லை. எண்ணங்களே இரண்டு விதம். நல்ல எண்ணங்களின் வயப்படும் போது நல்ல மனம் என்றும், தீய எண்ணங்களின் வயப்படும் போது கெட்ட மனம் என்றும் அழைக்கிறோம்.
🔸 ‎ மெய்யறிவு பெறுவதற்கு முன் மனோமயமாகத் திகழ்வது, மெய்யறிவு பெற்ற பின் பிரம்மமயமாகத் திகழ்கிறது. (அதாவது இருப்பது ஒரு பொருளே. "இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர். உபாதியுணர்வு மட்டுமே வேறுபடுகிறது.")
🔸 ‎ மனம், ஆத்மன், சீவன், சித்ஜடகிரந்தி என எல்லாம் ஒரு பொருட் பன்மொழிகளாகும்.

(2018ல் நான் எழுதிய ஓர் இடுகையிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கு பதிவிட்டுள்ளேன் 🙏🏽)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮