Sunday, October 22, 2023

தட்சிண கயிலாயமா? உத்திர திருவண்ணாமலையா?


👊🏽 பாரதத்தின் மான்செஸ்டர்
👊🏽 பாரதத்தின் டெட்ராயிட்
👊🏽 பாரதத்தின் நெப்போலியன்

சமுத்திர குப்தர் வாழ்ந்தது 4ஆம் நூற்றாண்டில். நெப்போலியன் வாழ்ந்தது 18ஆம் நூற்றாண்டில். சமுத்திர குப்தர் ஒரு பேரரசர். நெப்போலியன் ஒரு சிற்றரசன். சமுத்திர குப்தர் வெற்றிவாகை சூடியவர். நெப்போலியன் தோற்று மடிந்தவன். இவ்வளவு வேறுபாடுகளிருந்தும், நயவஞ்சக வெள்ளையர்களை உயர்த்திக் காட்டுவதற்காகவும், நம்மை தாழ்த்துவதற்காகவும், நம் மனதில் அடிமை மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும் சமுத்திர குப்தரை நெப்போலியனோடு ஒப்பிட்டு சிறுமைபடுத்தியிருப்பார்கள்.

இதுபோன்றொரு நயவஞ்சக செயல்தான் திருவருணையை "தட்சிண கயிலாயம்" என்றழைப்பதாகும்!! 👊🏽👊🏽

💥 திருக்கயிலாயத்தின் வயது இலட்சங்களில். திருவருணையின் வயது கோடிகளில்.

💥 புவிப்பந்தின் வயதில் மூன்றிலொரு பங்கு வயதுடையது திருவருணை. ஒப்பிடுகையில், திருக்கயிலாயமோ அண்மையில் தோன்றியது. 

💥 இருவிடங்களிலும் பல பெருமான்கள் வடக்கிருந்து (ஆரியத்தில், தவமிருந்து) திருநீற்று நிலையை (ஆரியத்தில், சமாதி) அடைந்துள்ளனர். ஆனாலும், "அடிக்கொரு இலிங்கம்" என்ற புகழ் திருவருணைக்குத்தான் உண்டு (அத்தனை பெருமான்கள் திருநீற்று நிலையிலுள்ளனர் என்பது பொருளாகும்!).

💥 இயக்கமற்ற உள்ளபொருளுக்கு (சிவம்) வலப்புறத்தையும், எண்ணங்கள் & காட்சிகளை தோற்றுவிக்கும் ஆற்றலுக்கு (அன்னை) இடப்புறத்தையும் ஒதுக்கலாமென்று முடிவு செய்யப்பட்டது திருவருணையில்தான்!

🙏🏽 "திருக்கயிலாயம் சிவன் குடியிருக்கும் இடம் மட்டுமே. திருவண்ணாமலையோ சிவனேயாவார்!" என்பது பகவான் திரு இரமண மாமுனிவரின் வாக்காகும்.

🙏🏽 செயற்கரிய செயல்கள் புரிந்து, தம்மை நாடி வந்த திரு காரைக்கால் அம்மையாரையும், திரு அப்பர் பெருமானையும் தமிழகத்திற்கே திருப்பியனுப்பி வைத்து, திருவாலங்காட்டிலும், திருவையாறிலும் குடியிருக்கும் பெருமான்களை சிறப்பித்தனர் அன்று திருக்கயிலையில் உடல் தாங்கியிருந்த பெருமான்கள்.

ஆனால், வயிற்றுப் பிழைப்பிற்காகவும், குறி மதத்தான்களிடமிருந்து உயிர் தப்புவதற்காகவும் இங்கு வந்து தஞ்சமடைந்த புல்லுருவிகள், காரியம் செய்யப்பட வேண்டிய ஆரியத்தையும், சிறு பிள்ளைகள் வைத்து விளையாட வேண்டிய உயிரற்ற பொம்மைகளையும், நெருப்புக்குழிகளையும் வைத்துக்கொண்டு, "தட்சிண கயிலாயம்", "தட்சிண கங்கை" என்று வாழ்வளித்த மண்ணின் அடையாளங்களை சிறுமை படுத்திக்கொண்டிருக்கின்றன!!! 👊🏽👊🏽👊🏽🤬😡

திருக்கயிலாயத்தை திருக்கயிலாயமாக பார்ப்போம். திருவருணையை திருவருணையாக பார்ப்போம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment