Tuesday, July 30, 2019

அன்பளிப்பா? வைப்புநிதியா? 😃




மேலுள்ள படத்தில் வட்டமிட்டப் பகுதியை படித்ததும், கிராம / கீழ்தட்டு மக்களின் தொடர்பில்லாதவர்களுக்கு சிரிப்பு வரும்! சில்லறைத்தனம் என்று கூடத் தோன்றும்!! தொடர்புள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய செய்தியாகத் தோன்றாது. இன்னும் சொல்லப் போனால், இவர்களுக்கு இது நியாயமானதாகத் தோன்றும்.


தம்மால் முடிந்ததை, தாம் விரும்பியதை கொடுக்காமல், அன்பளிப்பை வட்டியில்லா வைப்பு நிதியாக அவர்கள் பார்ப்பது ஏன்?


நம் நாட்டின் மீது பன்னெடுங்காலமாக நடந்த படையெடுப்புகளே முதன்மையான காரணம். தமிழகத்தை பொருத்தவரை கடந்த 1000 வருடங்களாக (சுமார் 1060லிருந்து) தமிழரல்லாதோர் தான் ஆட்சி செய்துள்ளனர். அதிலும், காட்டுமிராண்டிகளும், பாவாடைகளும் ஆட்சி செய்தனர் என்று சொல்வதை விட கொள்ளையடித்தனர், சீரழித்தனர் என்று சொல்வதே சரி. இத்துடன், இன்று போல் அன்று வங்கியமைப்புகளும் இல்லை என்ற உண்மையையும் நினைவில் கொள்ளவேண்டும்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு ஒருவரால் பணத்தை சேர்த்து வைக்க முடியும்?


தனது சேமிப்பை தன்னிடத்திலேயே வைத்துக்கொள்ளாமல் பல ஊர்களிலுள்ள பலரிடம் பிரித்துக் கொடுத்துவிட்டால் ஓரளவேனும் பாதுகாப்பாக இருக்குமல்லவா?



(#மொய் என்ற சொல்லுக்கு கொடுத்தல் என்ற பொருளோடு, நெருங்குதல் என்ற பொருளும் உண்டு.)


🎁🎁🎁🎁🎁


குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.


-- திருக்குறள் #549


பொருள்:


குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் காத்து, குற்றம் செய்தவர்களை தக்க தண்டனையின் மூலம் ஒழித்தல் அரசனது தொழிலாகும். அஃது அவனுக்குப் பழியன்று.


இன்று வள்ளுவப் பெருந்தகை 🌺🙏🏼 இருந்திருப்பின், மேற்கண்ட குறளை, "குடிமக்களைப் பிறர் வருத்த விட்டு, தானும் வருத்தி, குற்றம் செய்தவர்களுக்கு தக்க பதவி/ஒப்பந்தம் அளித்துக் காப்பது அரசனது தொழிலாகும். அஃது அவனுக்கு இழுக்கன்று." என்ற பொருளில் அமைத்திருப்பார்!! 😁

Friday, July 26, 2019

அவெஞ்சர்ஸும் பரிசுத்த ஆண்டவரும்!!! 😁😁😁

👊🏼 #அவெஞ்சர்ஸ் #1 படத்தில் ஒரு காட்சி

ஆஸ்கார்ட் உலகத்திலிருந்து திடீரென தோன்றும் தார், லோகியை கழுத்தைப் பிடித்து இழுத்துச் செல்கிறான். தாரை தடுக்க ஐயர்ன்மேன் செல்கிறான். இவனுக்கு உதவ கேப்டன் அமெரிக்கா புறப்பட தயாராகிறான். அவனிடம்...

நடாஷா: இவர்கள் எல்லாம் (தார் & லோகி) புராணக் கதைகளில் வருபவர்கள். அடிப்படையில் இவர்கள் கடவுளர்கள்.

கேப்டன்: மன்னிக்க வேண்டும், நடாஷா. என்னைப் பொறுத்தவரை ஒரு கடவுள் தான் இருக்கிறார்! அவர் இவர்களைப் போன்று உடையணியமாட்டார்!!

ஆக, கடவுளின் அளவுகோல் உடை மட்டுமே! 😜 ஒரு பெரிய வெள்ளை பாவாடையை யாரேனும் ஒருவர் மாட்டிக்கொண்டால் அவர் கடவுளாகிவிடுவார் போலிருக்கிறது!! 😝

👊🏼 அவெஞ்சர்ஸ் #2 படத்தில் ஒரு காட்சி

ஏற்கனவே இருக்கும் அனைத்து சூப்பர் ஹீரோக்களை விடவும் சிறந்த சூப்பர் ஹீரோ ஒருவனை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இப்படத்தில் ஒரு ஹீரோவை உருவாக்கியிருப்பார்கள். சுயஉணர்வு பெற்றவுடன் அவன்/அது பேசும் வசனங்களில் ஒன்று:

நான் அல்ட்ரான் இல்லை. நான் ஜார்விஸும் இல்லை. நான் நானே (I am [that] I am).

இந்த "ஐ ஆம் தட் ஐ ஆம்" என்பது எம்.எல்.எம். நிறுவனக் கையேட்டில் வரும் ஒரு சொற்றொடராகும். அவர்களது கையேட்டில் பரம்பொருளை மிகச்சரியாக விளக்கக் கூடிய சொற்றொடர் இது என்று #பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼 கூறியுள்ளார் (அதுவும், கேள்வி கேட்ட பரங்கியர்களுக்காக சொன்னார்). சில காலம், இந்த சொற்றொடரை முன்வைத்து தொழில் நடத்தினார்கள். "ஐ ஆம் தட் ஐ ஆம்" என்ற பெயரிலேயே நிறுவனக் கிளைகளை கூட ஆரம்பித்தார்கள். சரியாக 'போனி'யாகததால், மீண்டும் "2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா!! 🥺😩🤧" என்ற அவர்களது வெற்றி சூத்திரத்திற்கே திரும்பிவிட்டனர்.

👊🏼 இனி "ஐ ஆம் தட் ஐ ஆம்" (பரம்பொருள்) அவெஞ்சர்ஸ் 2 & 3 மற்றும் கேப்டன் அமெரிக்கா 3 படங்களில் என்னென்ன செய்கிறது என்று பார்ப்போம்.

🍝 இது உருவாகும் போது, இது காட்டும் படத்தால் மற்ற சூப்பர் ஹீரோக்கள் "அல்லு விட்டுடுச்சு" 🥶 நிலையில் இருப்பர் - "பார்ட்டி, அத்தனையையும் மொத்தமாஅள்ளிகிட்டு பூடும் போலிருக்கே!" 😰 (பரம்பொருள் உருவாகுமா? அதை உருவாக்க முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. சாமி கண்ண குத்திடும்! 😆)
🍝 எந்த பொருளுக்குள்ளும் ஊடுருவி செல்லும்
🍝 வாண்டா மேக்ஸிமாவை காவல் காக்கும்
🍝 காவல் பணியின் போது கிளின்ட் பார்டனிடம் தோற்றுப் போகும். வாண்டாவும் பல தளங்களுக்கு கீழே தள்ளி விட்டு ஓடி விடுவாள்.
🍝 ஒரு சமயத்தில், வாண்டாவை டாவு அடிக்கும்.
🍝 வார் மெஷினைக் காப்பாற்ற முனையும் போது தவறு செய்துவிடும். இதன் தவறால் வார்மெஷினின் இடுப்புக்கு கீழ் உணர்வு இல்லாமல் போய்விடும்.
🍝 தேனோஸின் அடியாட்களிடம் தர்மஅடி வாங்கி குற்றுயிராக கிடக்கும். உதவிக்கு சிலர் வந்தவுடன் நிம்மதி பெருமூச்சு விடும்.
🍝 இறுதியில், தேனோஸால் இறந்துபோகும்.

(இது ஓவர் தொல்லை/குழப்பம் கொடுத்ததா என்று தெரியவில்லை, அவெஞ்சர்ஸ் 4ஆம் படத்தின் இறுதியில் அனைவரும் திரும்ப வந்தாலும், இதை திரும்பக் கொண்டு வரவில்லை.)

ஆக, இவர்களது பரம்பொருள் சிலரின் வயிற்றில் புளியைக் கரைக்கும்; சிலரிடம் தோற்றுப் போகும்; சிலரை டாவடிக்கும்; தவறும் செய்யும்; அடியும் வாங்கும்; யாராவது உதவிக்கு வர மாட்டார்களா என்று ஏங்கும்; இறந்தும் போகும்!! மொத்தத்தில் பரங்கியன் அவனது மதத்திற்கு உருவம் கொடுத்தது போலிருக்கும்!!! 😂😂🤣🤣🤣

👊🏼 அவெஞ்சர்ஸ் #3 படத்தில் ஒரு காட்சி

டைட்டன் கோளில் சில அவெஞ்சர்ஸ் சில கார்டியன்ஸை முதன் முறையாக சந்திக்க நேரிடுகிறது. எச்சரிக்கை உணர்வின் மிகுதியால், ஒருவரையொருவர் நம்பாமல், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. நிலைமை கைகலப்பாக மாறுவதை உணர்ந்த மரு. ஸ்ட்ரேன்ஜ் எதிர்பக்க பீட்டர் க்விலைப் பார்த்து...

மரு. ஸ்ட்ரேன்ஜ்: எந்த தலைவனுக்கு கீழ் நீ வருகிறாய்?

பீட்டர் க்வில்: யாருக்கு கீழ் வருகிறேனா? இதற்கு நான் என்ன பதில் சொல்வது? யேசு என்றா?

😝😆😂😂

எம்.எல்.எம். நிறுவனத்தின் நச்சு பார்வை படாத நாடும் இல்லை & தொழில்களும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. மாபெரும் வெற்றி பெற்ற அவதார் படத்தை கோட்டை விட்ட பிறகு, ஹாலிவுட் திரைப்படங்களை அது கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது. அறிவியல் புதினங்களைக் கூட விட்டு வைப்பதில்லை. ஏதாவது ஒரு காட்சியிலாவது இஸ்ரவேல் அத்வைதியான யேசுவின் பெயர் உச்சரிக்கப்பட வேண்டும். அல்லது, உயிரற்றதை (பிணத்தை) கொண்டாடும் நிறுவன குறியீட்டை காண்பிக்க வேண்டும். இல்லையெனில்... 👻👹👺👽☠️

எதற்கு வம்பு என்று சேர்க்கப்பட்டது தான் முதல் படக்காட்சி. அது பெரும் வெற்றி பெறவே, 2வது படத்தில் "ஐ ஆம் தட் ஐ ஆம்"ஐ சேர்த்தார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததாலும், மேற்கொண்டு வளர்க்க முடியாததாலும், 3வது படத்தில் இஸ்ரவேல் அத்வைதியின் பெயர் மட்டும் வருவது போன்று ஒரு காட்சியை அமைத்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽

உடல் எனும் குறுக்கையில் மனம் எனும் யேசுவை அறைந்தால் (அழித்தால்) வெளிப்படுவது தூய அறிவு (இறைவன்). இதுவே உயிர்த்தெழுதல் (மெய்யறிவு பெறுதல்) எனப்படும்.

-- பகவான் ஸ்ரீரமணர் 🌺🙏🏼

Friday, July 19, 2019

அத்திவரதர் வரலாறு - ஓர் ஆய்வு & இந்த ஆதி அடையாளத்தை வணங்கலாமா?

"நாளொன்றுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பத்திமர்கள் காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயிலின் ஆதி அடையாளத்தை (ஆதி மூலவரை) வந்து வணங்கிச் செல்கின்றனர்"

(இந்த இடுகை முழுக்க அத்திவரதரை சிலை அல்லது அடையாளம் என்றே குறிப்பிட்டுள்ளேன். சமாதியல்லாத தலங்களில் சிலைகள் உணர்த்தும் பேருண்மைகளை உணராது, சமாதி திருத்தலங்களில் சிலைகள் அடையாளப்படுத்தும் மகான்களை உணராது, வெறும் சிலை வணங்கிகளாகவே நாமிருப்பதை உணரவேண்டும் என்பதற்காகவும், வடிவம், ஒப்பனை, ஆரியம், மணம், சுவை என புலன்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும் நாமிருப்பதை உணரவேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு எழுதியுள்ளேன்.)

-- இச்செய்தியால் ஒரு புறம், தமிழ்நாடு சமூக, இந்து சமய, தேச விரோத சக்திகளின் ஆரம்பமாகிய வளர்ப்பு மகளை மணந்தவனின் மண் இல்லை 💪🏽 என்று பெருமை கொள்கின்றனர். மறு புறம், தங்களது முட்டாள்தனம் வளர்க்கப்படுவதை அறியாமல் எல்லையில்லா பெருமகிழ்ச்சி கிடைத்துவிட்டதைப் போல்  உருகுகின்றனர். 😒

அத்தி மரத்தினாலான ஆதி அடையாளத்தை வைத்து, பலவிதமான பலகாரங்கள் தினம் தினம் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. 😁 அதில் ஒன்றுதான் இந்தக் காணொளி: https://youtu.be/KwaYdmZy_c0. பலகாரத்தை சுவைத்து 😋 விட்டு வாருங்கள். பிறகு, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களைப் பற்றி ஆராய்வோம்.

🍝 பிரம்மதேவர் - இவரின் 4 முகங்கள் 4 திசைகளைக் குறிக்கும். படைப்பாற்றலின் அடிப்படை 4 திசைகளிலிருந்தும் வரும் செய்திகள், காணும் காட்சிகள் மற்றும் இவற்றால் கிடைக்கும் பட்டறிவு. ஒரு காலத்தில் பிரம்மாவிற்கு 5 முகங்கள் இருந்தன என்றும் வானோக்கிய முகத்தை சிவன் கொய்தார் என்றும் கேள்விப்பட்டிருப்போம். இதன் பொருள், முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் வானையும் ஒரு திசையாக தவறாக கணக்கிட்டுள்ளனர். பின்னர், காரைக்கால் அம்மையார் 🌺🙏🏼, நந்தனார் 🌺🙏🏼, ஒளவையார் 🌺🙏🏼 போன்ற ஒரு மெய்யறிவாளர் (சிவன்), இந்த தவற்றை சரி செய்துள்ளார். (இதன் பிறகு சிவபெருமானை பிரம்மஹத்தி பிடித்தது, அன்னபூரணித் தாயாரால் தீர்ந்தது என்பது வேறொரு பேருண்மையைப் பற்றியது)

🍝 வேள்வி - வேள்வி எனில் குண்டம் வைத்து, தீ வளர்த்து, ஆரிய செய்யுள்கள் ஓதி, உணவு தானியங்களை தீக்குள் இடுவது மட்டுமல்ல. வயிறு எனும் குண்டத்தினுள் உணவிடுவது, மனம் எனும் குண்டத்தினுள் எண்ணங்களை வளரவிடுவது, உலகம் எனும் குண்டத்தினுள் செயல்களை புரிவது, மனைவி எனும் குண்டத்தினுள் விந்துநீரை இடுவது என எல்லாமே வேள்வி தான்.

இங்கு, காஞ்சி எனும் நகரை (குண்டத்தை) உருவாக்கி, அரசு எனும் வேள்வியை நடத்துகிறார் அதன் மன்னர் / தலைவர் (பிரம்மா)

🍝 சரசுவதி / வேகவதி - சரஸ்+வதி - நீரில் இருப்பவள். வெண்மை நிறமுடையவர். பொதுவாக, நமது மூளையைக் குறிக்கும். இங்கு வேகவதி நதியாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இந்நதி காஞ்சிக்கு அருகிலுள்ள பிரம்மதேசம் எனும் பகுதியில் சற்று திரும்பி, காஞ்சியை விட்டு விலகிச்செல்கிறது. அப்படி விலகிச் செல்லாமல், தொடர்ந்து பாய்ந்திருந்தால் காஞ்சியைத் தாக்கியிருக்கும். நதியின் போக்கை மாற்றிய நிலப்பரப்பை விஷ்ணுவாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். வைணவம் தோன்றிய போது (சுமார் 7ஆம் நூற்றாண்டின் இறுதி; திருஞானசம்பந்தர் 🌺🙏🏼 மற்றும் ஆதிசங்கரரின் 🌺🙏🏼 மறைவுக்குப் பின்னர்) பெருமாளின் பொருள்: தோன்றி மறைவது / அழிவது / சுய ஒளியற்றது. இதன் படி, அந்நிலபரப்பு விஷ்ணுவாகிறது.

வேள்வி நடத்த மனைவி வேண்டும் என்பது என்னவெனில் எந்த ஒரு செயலையும் செய்ய ஒர் ஆண் தத்துவமும் ஒரு பெண் தத்துவமும் தேவை என்பது தான். அண்டத்தின் இயக்கமே இவ்வடிப்படையில் தான். வேள்வி நடத்த மனைவி ஒத்து வரவில்லையெனில் வேறு துணைவியரை சேர்த்துக் கொண்டு வேள்வி நடத்தலாம் என்பது பாலைவன மதங்களின் அடித்தளங்களில் ஒன்றான ஆணாதிக்கம் மற்றும் பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடு!!

🍝 "அத்திவரதர் ஒரு சித்திரை மாதம் அஸ்தம் நாள்மீனுடன் கூடிய பதினான்மையன்று (சதுர்த்தசி) தோன்றினார்" என்பதின் பொருள்:

🔶 அத்தி மரத்திலான இந்த சிலையை மேற்சொன்ன நாளன்று நிறுவியிருப்பார்கள்
🔶 இப்படி ஒரு சிலையை செதுக்கலாம் என்ற எண்ணம் மேற்சொன்ன நாளன்று தோன்றியிருக்கும்
🔶 வைணவம், பௌத்தத்திலிருந்து பெண் தெய்வ வழிபாடு வழியாக வந்தது. இன்று வேண்டுமானால் திரு வரதராஜப்பெருமாள் கோயில் வைணவத் தலமாக இருக்கலாம். இதற்கு முன்னர் அது பெண் தெய்வ வழிபாட்டுத் தலமாகவோ, பெளத்த தலமாகவோ இருந்திருக்கும். மேற்சொன்ன நாள் அது வைணவத் தலமாக மாறிய நாளாக இருக்கலாம்.
🔶 இன்று தான் வியக்க வைக்கும் கட்டிடங்களும், அழகுச் சிலைகளும், அவற்றிற்கு மனதைக் கொள்ளை கொள்ளும் ஒப்பனைகளும், விரிவான வேள்விகளும், தெளிவான உச்சரிப்புடன் கூடிய ஆரிய செய்யுள்களும் இருந்தால் போதும் அவை புனிதத் தலங்களாகிவிடும். 😏 அன்று இப்படியல்ல. மேற்சொன்ன எதையுமே ஒரு பொருட்டாக மக்கள் கருதவில்லை. அவர்கள் தேடிச் சென்றது உயிர்ப்புள்ள திருத்தலங்களை - அதாவது, திரு தாயுமானவ சுவாமிகள் 🌺🙏🏼 போன்ற மெய்யறிவு பெற்ற மகான்களை அல்லது அவர்களது சமாதிகளை. பழமையான சிவத்தலங்களின் மூலவர்களை (சமாதி அடையாளங்களை) கவனித்தாலே இதை உணரமுடியும். அன்று இருந்தவை சமாதி அடையாளங்கள் மட்டுமே. திரு வரதராஜப்பெருமாள் கோயிலும் இது போன்றொரு சமாதித் தலமாகத்தான் இருக்கும். எனில், மேற்சொன்ன நாளன்று அங்கிருந்த மகான் 🌺🙏🏼 சமாதியாகி இருக்கலாம்.

(இந்த அத்திமர ஆதி அடையாளத்தைப் பற்றிய சில வரலாற்று குறிப்புகள் குறிப்பு #1ல் கொடுத்துள்ளேன்)

🍝 "குளத்தில் இருக்கும் அத்திவரதரை சுற்றி 16 நாகர்கள் காவலிருக்கின்றன" - இச்செய்தி இணைப்புக் காணொளியில் இல்லாவிட்டாலும் இணையத்தில் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கிறது.

பழமையான திருத்தலங்கள் பெரும்பாலும் மகான்களின் சமாதிகள் என்று பார்த்தோம். ஒரு மகான் உடலுடன் இருக்கும் போதும், உடலை விட்ட பிறகும் அவரைத் தேடி பல மெய்யன்பர்கள் வருவர். அவர் காட்டிய வழியில் வடக்கிருப்பர் (தவமியற்றுவர்). அங்கேயே சமாதியும் அடைவர் (மெய்யறிவு பெறுவர் & உடலையும் உகுப்பர்). அவர்களது சமாதிகளை அடையாளங்கள் வைத்து பாதுகாப்பர். இவ்வடையாளங்கள் ஒரு காலத்தில் நீள் உருளைக் கற்களாகவும், பின்னர் 3 அல்லது 5 பின்னல்கள் கொண்ட பாம்புகள் இருக்கும் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்ட பட்டைக் கற்களாகவும் (மேல் பின்னலில் சிவலிங்கம் (2) இருக்கும்), அல்லது 3/5 தலைகள் கொண்ட பாம்புகள் உடலைச் சுருட்டி, ஆசனமிட்டு, சிவலிங்கங்களை படமெடுத்துக் காப்பது போன்றும் வடித்திருப்பார்கள். இந்த அடையாளங்களை விட, அவை நடப்பட்ட இடங்கள் தாம் முக்கியமானவை. ஏனெனில், அவை சமாதிகள் - உயிர்ப்புள்ள இடங்கள். ஆனால், தொடர்ந்த படையெடுப்புகளாலோ அல்லது குறுகிய சிந்தனை கொண்ட சிலராலோ இவ்வறிவை நம் முன்னோர் இழந்துவிட்டனர். திருத்தல வளாகத்தில் ஆங்காங்கே இருந்த சமாதி அடையாளங்களை எல்லாம் திருச்சுற்றில் வைத்துவிட்டனர். பழத்தை தூக்கி எறிந்து விட்டு தோலை உண்ணும் அறிவுஜீவிகளாயினர்!! 😔 இன்றோ நாம் அவர்களையும் மிஞ்சிவிட்டோம். தலமரங்களைச் சுற்றி, ரெடிமேட் நாகர்களை வைத்து, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் பாடல்களை ஒலிக்க விட்டு, நாகர்களுக்கு பாலூற்றி... உவ்வே!! 🤢🤮

திரு வரதராஜப்பெருமாள் கோயில் வளாகத்திலும் பலர் வடக்கிருந்து சமாதியாகி இருப்பார்கள். மேற்சொன்ன அடையாளங்களால் அவர்களது சமாதிகளும் பாதுகாக்கப்பட்டிருக்கும். காலப்போக்கில், பிற தலங்களில் நடந்தது போலவே இங்கும் சமாதியிடங்களை ஒதுக்கிவிட்டு அடையாளங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டிருக்கும். இப்படி பாதுகாக்கப்பட்ட 16 அடையாளங்களைத் தான் அத்திவரதர் சிலை மீது சாத்தி வைத்து, வரதர் சிலை நீரின் மேலெழும்பாமல் பாதுகாக்கிறார்கள். அதாவது, வெறும் எடைகற்களாக பயன்படுத்துகின்றனர்!! 😮

🍝 "அத்திவரதரை ஐராவத யானை தாங்கி நின்றது. பின்னர் மலையாக மாறியது."

ஐராவதம் என்பதே சிறுபிள்ளைத்தனம் தான்!! 😀 பள்ளிக்கூடம் செல்லும் இரண்டு பிள்ளைகள் விடுமுறைக்கு பின் மீண்டும் சந்திக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒரு பிள்ளை, "டே, நேத்து நான் வி.ஆர். மால் போயிருந்தேன்டா. அங்க பெரிய கோயில் மணி தொங்க விட்டிருந்தாங்கடா", என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது இன்னொரு பிள்ளைக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடும். அப்பிள்ளை எங்குமே சென்றுவரவில்லை என்றாலும், "நானும் ஃபீனிக்ஸ் மால் போயிட்டு வந்தேன்டா. அங்க காப்பான் சூட்டிங் நடந்திட்டிருந்ததுடா. நம்ப சூர்யாவ பார்த்தேன்டா." என்று ஒரே போடாக போடும். உண்மையில் மால் சென்று வந்த பிள்ளை அமைதியாகிவிடும். எங்கும் போகாத பிள்ளை காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளும். இது போன்றது தான் ஐராவதம் கதை. 😁

இன்று ரஷ்யா எனப்படும் ரிஷிவர்ஷாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தாம் ஆரியர்கள். ஒரு பிரிவு பாரதத்திற்குள்ளும், இன்னொரு பிரிவு ஈரானுக்கும் சென்றது. அன்றைய பட்டுப்பாதை நெடுகிலும் உள்ள நாடுகளையும் ஆக்ரமித்தது. பாரதத்தில் தான் இக்கூட்டம் முதன் முதலில் யானைகளைப் பார்க்கிறது. யானைகளின் உருவம், உயரம், பலம், நினைவுத்திறன், அவற்றின் பல்வேறு பயன்பாடுகள் போன்றவை இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்துவிட்டது. இதன் விளைவு: உங்க லோகத்துல கருப்பு யான தான். எங்க லோகத்துல வெள்ள யான இருக்குதாக்கும்!!! 😝😂😂🤣

அத்திவரதர் கதையில் வரும் ஐராவதம் என்பது நமது மூளையைக் குறிக்கும்.

நமது திருத்தலங்கள் யாவும் பெரும்பாலும் ஒரு மனிதர் படுத்திருப்பதை போலவும்,  சிறு கோயில்கள் ஒரு மனிதர் அமர்ந்திருப்பதை போன்றும், சில கோயில்கள் தேர் போன்றும் வடிவமைத்திருப்பார்கள். வெகு சில கோயில்கள் சற்று மாறுபடும். தில்லைக் கருவறை மனிதனின் இதயத்திற்கு சமமாகும். கேரள சபரிமலைக் கோயில், ஒரு மனிதர் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் போன்றும் (கட்டுமலை), அவரது சகஸ்ரார சக்கிரத்தில் பரம்பொருள் வீற்றிருப்பது போன்றும் வடிவமைத்திருப்பார்கள். வரதராஜப் பெருமாள் கோயிலும் ஒருவர் அமர்ந்திருப்பது போன்று வடிவமைத்திருக்கிறார்கள். கீழுள்ள குடைவரைக் கருவறை இதயத்தைக் குறிக்கும். நம்முள்ளிருந்து சடாரென வெளிப்பட்டு "நாம் இவ்வுடல் எனும் பொய்யறிவை" அழிக்கும் தெளிவை சிங்கப்பெருமாளாக உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த தெளிவான அறிவு நிலைபெற்று நிற்காது. தொடர் முயற்சியால், சிறிது காலம் கழித்து இது நிலைபெறும். அவ்வாறு நிலைபெற்று நிற்கும் அறிவை வரதராஜப் பெருமாளாகவும், அவர் நிற்கும் சகஸ்ரார சக்கிரத்தை (மூளையை) ஐராவத யானையாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

(இங்கே, வைணவத்தின் டிரேட்மார்க்கைக் மீண்டும் காணலாம்: தோன்றி மறையும் தெளிவும் பெருமாளாம்! என்றுமே இருக்கும் தூய அறிவும் பெருமாளாம்!! 😁)

🍝 "பிரம்மா மறுமுறை செய்த வேள்வியால் அத்திவரதர் பாதிக்கப்பட்டார்"

கருவறையில் எப்போதும் நிலவும் வெப்பத்தாலோ, பல நூறு வருட தொடர் வழிபாட்டின் காரணமாகவோ, வழிபாடு செய்து வைப்போரின் கவனக்குறைவாலோ சிலையில் பழுது ஏற்பட்டிருக்கிறது. மேற்கொண்டு வழிபாட்டில் வைத்திருக்க அவர்களது வழிபாட்டு நூல்கள் இடம் கொடுத்திருக்காது. ஆகையால், குளத்திற்குள் விட்டுவிட்டார்கள். நிலத்தை விட நீருக்குள் மரம் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும். ஐரோப்பிய நகரிங்களில் சில நீரோட்டத்திலேயே, மரத்தால் அடித்தளமிட்டு கட்டப்பட்டவை. 200-300 ஆண்டுகளாகியும் இன்றும் அடித்தள மரங்கள் வலுவாகவுள்ளன.

40+/- ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலையை வெளிக்கொணரக் காரணம் - குளத்து நீர்!! மேற்சொன்ன ஐரோப்பிய நகரங்கள் ஓடும் நீரில் கட்டப்பட்டவை. நீரிலுள்ள உயிர்வளி குறைய வாய்ப்பில்லை. சேறும் சேர வாய்ப்பில்லை. ஆனால், குளத்து நீரில் உயிர்வளி குறைவாகவும், சேறு மிகுதியாகவும் இருக்கும். ஆகையால், இத்தனை வருடங்களுக்கு ஒரு முறை எனக் கணக்கு வைத்து சுத்தம் செய்துவிடுகிறார்கள்.

🍝 "அத்தி வரதரை ஒரு முறை வணங்கினால் மோட்சம் கிடைக்கும். இரண்டாம் முறை வணங்கினால் வைகுண்டம் கிடைக்கும்."

அத்திமர அடையாளத்தின் வரலாறு என சுற்றி வரும் தகவல்களில் இது தான் நெற்றிசுட்டி போன்றது!! 😃 முதல் முறை வணங்கிய சீவர்கள், சீவத்துவத்திலிருந்து விடுதலை பெற்று, பல லோக முனையத்தில் காத்திருப்பார்கள் போலிருக்கிறது. 😄 அடுத்த முறை வணங்கியவுடன், புஷ்பக விமானம் வந்து வைகுண்டம் அழைத்துச் செல்லும் போலிருக்கிறது. 😆 ஒரு வேளை, விமானத்தை தவிர்த்து விட்டு, மூன்றாம் முறையும் வணங்கி விட்டால்... "பெருமாள், உங்க டைம் ஓவர். இப்பத்திலேர்ந்து நான் தான் பெருமாள்."!!! 😂😂🤣

நாம் இவ்வுடல் என்ற பொய்யறிவிலிருந்து விடுதலை பெறுவதே மோட்சம். நாம் நாமே என்ற மெய்யறிவில் நிலைபெறுவதே வைகுண்டம். இந்த அண்டமே பெருமாள்.

அத்திவரதர் மட்டுமல்ல. இமயத்தில் வீற்றிருக்கும் பத்ரிநாத் பெருமாள் 🌺🙏🏼 முதல் பாரதத்தின் தென்னகத்தில் இருக்கும் திரு அனந்தபத்மநாப பெருமாள் (அகத்திய மாமுனிவர்) 🌺🙏🏼 வரை யாரை வணங்கினாலும், எத்தனை முறை வணங்கினாலும், எவ்வளவு மனமுருகி வணங்கினாலும் வைகுண்டவாசம் கிட்டாது. பார்ப்பவனை பார்த்தால் ஒழிய, பார்ப்பவனே வைகுண்டவாசன் என்று தெளிந்தால் ஒழிய வைகுண்டவாசம் (நிலைபேறு) கிட்டாது. அத்தனை பெருமாள்களையும் சென்று வணங்குவதின் பயன் இதுவே!!

அத்திவரதரை ஒரு காட்சி பொருளாக பார்த்து விட்டு, கருவறைக்குச் செல்லுங்கள். அங்கு, அடையாளத்திற்கு பூசை செய்பவர்கள், அவர்களது உழைப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக, "உடையார நல்லா பாத்துக்கோங்கோ" என்பர். 😁 எவ்வளவு நன்றாக பார்த்தாலும், எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஒரு பயனுமில்லை என்பதை உணருங்கள். கருவறையிலுள்ள அடையாளத்தைக் கண்டதும் கண்கள் தானாக மூடும். மூட விடுங்கள். ஒரு கணமாவது, நீங்கள் நீங்களாக இருங்கள். பின்னர், சடாரியை தலையில் வைத்து எடுப்பார்கள். நன்றாக வைத்துவிட்டு எடுக்கும் போது, ஒரு கணம், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மை விட்டு அகலும். (3) இவ்வுணர்வை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள். திருச்சுற்றில் அமர்ந்து இதைப் பற்றி சிந்தியுங்கள், வடக்கிருங்கள்.

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவதே. கடவுளை அறிவது என்பது கடவுளாய் இருத்தலே. கடவுளாய் இருத்தல் என்பது கடவுளாய் ஆதலே." -- பகவான் ஸ்ரீரமணர் 🌺🙏🏼

🏵️🌼🌻💮🏵️

குறிப்புகள்:

1. அத்திமர ஆதி அடையாளத்தைப் பற்றிய சில வரலாற்று குறிப்புகள்:

✳️ 1487 வரை அத்திமர அடையாளம் தான் கருவறையில் இருந்துள்ளது. பின்னர், பழைய சீவரத்திலிருந்து கல் அடையாளம் கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இதன் பின்னர், அத்திமர அடையாளத்தை எங்கு வைத்து பாதுகாத்தனர் என்பது பற்றிய தகவல் ஏதுமில்லை.

✳️ 1688ல் உலக கொல்லிகளுக்கும் (பரங்கியர்களுக்கும்) காட்டுமிராண்டிகளுக்கும் போர் மூண்டுள்ளது. அச்சமயம் இக்கோயிலின் விழாநாதர் (உற்சவ சிலை) திருச்சிக்கு அருகிலுள்ள உடையார்பாளையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அப்போது இந்த அத்திமர அடையாளம் கோயில் குளத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 1710ல் விழாநாதர் சிலை மீண்டும் காஞ்சிக்கு கொண்டு வரப்பட்டது. அது சமயம் அத்திமர அடையாளத்தை குளத்திலிருந்து வெளிக்கொண்டு வந்தனரா என்பது பற்றிய தகவல் ஏதுமில்லை.

✳️ 1781ல் அத்திமர அடையாளம் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது என்பதற்கான தெலுங்கு கல்வெட்டு ஒன்று கோயில் வளாகத்திலேயே உள்ளது. இதன் பின்னர் ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நடந்துள்ளது என்பதற்கான சான்றும் ஏதுமில்லை. மேலும், 40 ஆண்டுகள் என்பது ஒரு தோராய கணக்கு தான். 42 ஆண்டுகளும் அகியிருக்கின்றன. 35 ஆண்டுகளிலும் இவ்விழாவை நடத்தியிருக்கிறார்கள். (40 ஆண்டுகள் என்பது 500 பிறைகளுக்கு சமம். "ஆயிரம் பிறை கண்ட அரசு" எனும் சொற்றொடர் வாயிலாக அப்பர் பெருமான் 80 ஆண்டுகள் பருஉடல் தாங்கியிருந்தார் என்று அறிகிறோம்.)

-- காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 2 வைணவ பேராசிரியர்கள் யு-டியூப் காணொளிகளில் பேசியதிலிருந்து தொகுத்துள்ளேன்

2. சைவத்தில் முதல் பாம்பு பின்னலில் சிவலிங்கம் இருக்கும். வைணவத்தில் நடனமாடும் கண்ணன் இருப்பார். வேகவதி நதியின் போக்கை மாற்றிய "உயிரற்ற" நிலப்பரப்பை விஷ்ணு என்றவர்கள், இங்கு, எல்லாம் அடங்கி மீதமிருக்கும் "நான் எனும் உணர்வை" விஷ்ணு என்கிறார்கள்!! 😏

நம் இந்து சமயத்தின் அடையாளங்கள் அனைத்தையும் வெட்கமேயில்லாமல் ஒவ்வொன்றாக திருடிக் கொண்டிருக்கும் எம்.எல்.எம் மதம், இந்த நாகர்களை எப்படி மாற்றிக்கொள்ளும்? சிவலிங்கத்திற்கு பதில் குறுக்கை? 😁 அல்லது, கண்ணபிரானுக்கு பதில் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடும் இஸ்ரவேல் அத்வைதி யேசு? 😆 குறுக்கை உயிரற்ற பிணம் போன்ற உடலைக் குறிக்கும். பிணக்குறியீடு என்றே அழைக்கலாம்!! யேசு அழியும் மனதைக் குறிக்கும். இவ்விரண்டில் எதை அவர்கள் பயன்படுத்தினாலும் காமெடியில் தான் முடியும். ஏனெனில், பாம்பு பின்னல்கள் ஏற்கனவே அவற்றைத் தான் குறிக்கின்றன:

✳️ 3 பின்னல்கள் - தூல, சூக்கும & காரண உடல்கள்.

✳️ 5 பின்னல்கள் - ஆன்மாவை போர்த்தியுள்ள உணவு, உயிர்வளி, மனம், அறிவு & எல்லையில்லா மகிழ்ச்சி எனும் 5 உறைகள்.

குறுக்கை, யேசு என எம்.எல்.எம். மதம் ஒரு விதமாக சப்பைக்கட்டு கட்டினாலும், இவர்கள் வழியை தற்போது பின்பற்ற ஆரம்பித்திருக்கும் வெடிகுண்டு மதத்தினர் என்ன உருவத்தை வைப்பர்? சுவரை குறிக்க சதுரம் / செவ்வகம்? 😂🤣🤣

(அடையாளங்களைத் தான் இம்மதங்களால் திருட முடியுமே அன்றி ஒரு மெய்யறிவாளரையும் உருவாக்க இயலாது 💪🏽)

3. இந்த சடாரி உத்தியை கண்டுபிடித்தது திரு நம்மாழ்வார் 🌺🙏🏼. இதனால் தான் சடாரிக்கு சடகோபன் என அவரது பெயரையே வைத்திருக்கிறார்கள். இந்த உத்தியால் நமக்கு கிடைப்பதென்னவோ இரண்டற்ற அத்வைத நிலை. ஆனால், அதை மறைத்து, அதற்கு "பெருமாளின் பாதம்" என பெயர் வைத்து, நம்மை த்வைத நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். ஓட்டையில்லா சட்டதிட்டங்கள், செவ்வனே இயங்கும் சட்டம்-ஒழுங்கு, குப்பையில்லா வாழுமிடங்கள், போதுமென்ற மனம் கொண்ட மக்கள்... பொருளாதாரம் என்னாவது? 🤔 தலீவர்கள் சமூக அநீதி காப்பது எவ்வாறு? 😏 சமூகப் போராளிகள் பிழைப்பது எவ்வாறு? 😉 எல்லோரும் பெருமாள் ஆகிவிட்டால் யார் வந்து அத்திவரதரை வணங்குவது? 🤭