Wednesday, April 24, 2024

அயோத்தியின் பட்டை நாமங்கள்!!


|/ இராமனுக்கு பருத்தியாடை


தெலுங்கர் இராமானுஜர், 8-9 நூற்றாண்டுகளுக்கு முன்னர், "மார்கழி திங்கள் குளிரிலிருந்து திருவரங்கம் பெருமாளை காக்க வெந்நீரால் குளிப்பாட்டுவோம்; கம்பளியாடை போர்த்துவோம்" என்று தொழிலை தொடங்கிவைத்தார். இன்றுவரை அந்த நுட்பத்தின் (டெக்னிக்) "மவுசு" குறையவில்லை! 😏 அதன் தொடர்ச்சிதான், "இராமனுக்கு வெயில் நேரத்தில் பருத்தியாடை அணிவித்தல்" என்பது.

மண்சிலைக்கு (திருவரங்கம் பெருமாள்) குளிருமா? கற்சிலைக்குதான் (அயோத்தி இராமன்) வியர்க்குமா?

திருவரங்கமாவது உயிர்ப்புள்ள திருக்கோயில். பெருமாள் சிலைக்கு கீழே, திரு சட்டைமுனி சித்தர் திருநீற்று நிலையிலுள்ளார். அயோத்தியிலிருப்பது உயிரற்ற கோயில். அங்கு எப்பெருமானும் திருவிடம் (அசுரத்தில், சமாதி) கொள்ளவில்லை. அப்படியே ஒரு பெருமான் திருவிடம் கொண்டிருந்தாலும், மேலே வைக்கப்பட்டிருக்கும் அடையாளச் சிலைக்கு செய்யும் எதுவும், கீழேயுள்ள பெருமானை பாதிக்காது.

பருவத்திற்கேற்ற ஆடையணிவிப்பது என்பது மக்களை கவர்ந்திழுப்பதற்கான ஒரு விற்பனை நுட்பம் மட்டுமேயாகும். அதை காண்பதால் அன்பர்களுக்கு ஒரு மெய்யியல் (அசுரத்தில், ஆன்மிகம்) பயனும் கிட்டாது.

|/ இராமன் மீது படும் பகலவனின் ஒளி


அன்று, பகலவனின் நகர்வைக் கணக்கிட்டு, அதற்கேற்றவாறு கட்டடங்களை கட்டி, ஒரு குறிப்பிட்ட நாளில் / குறிப்பிட்ட வேளையில் பகலவனின் ஒளி இறைவடிவத்தின் மீது படும்படி செய்தார்கள். இன்று, கண்ணாடி & ஆடிகளை (லென்ஸ்) பயன்படுத்தி, குழாய்கள் வழியாக ஒளியை, தேவையான இடத்திற்கு கொண்டுவருகிறார்கள். எது கடினமான தொழிற்நுட்பம்? எதற்கு அதிக மூளைத்திறன் வேண்டும்? எது பெரிதும் போற்றப்பட வேண்டும்?

மேலும், பகலவனின் ஒளி இறைவடிவத்தின் மீது பட்டாலென்ன? படாவிட்டாலென்ன? இதற்கும் மெய்யியலுக்கும் என்ன தொடர்புள்ளது? 

|/ இராமனுக்கு 1 மணி நேரம் ஓய்வு


அசுரர்கள் ஒரு கற்சிலைக்கு உயிரூட்டினார்கள் என்பது ஒரு மடங்கு நகைச்சுவை எனில், பல ஆண்டுகள் வாழ்ந்த ஒருவருடைய 5 வயது ஆதனை (அசுரத்தில், ஆன்மா) பிடித்து, அக்கற்சிலைக்குள் செலுத்தியுள்ளனர் என்பது பல மடங்கு நகைச்சுவையாகும்!! 😄 பராமரிப்பு பணிகளுக்காக இவர்களுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படலாம். அதை இராமனின் தலையில் சுமத்திவிட்டார்கள்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் உடல் இறக்கும் போது அதற்கு 70 வயது. பகவான் நிலைபேற்றினை அடைந்தவர். இன்றும் அங்கேயே இருப்புவர். இனியும் அங்கேயே இருப்பார். அன்பர்களின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்கும் அண்ணலான அவரது அருளைப் பெறும் நல்வினைப்பயன் நமக்கிருந்து, இன்று அவரை வேண்டினோம் என்றால், 144 ஆண்டுகள் முதிர்ச்சி கண்ட ஆதனாக வந்து ஆட்கொள்வார். 5 வயது ஆதனாக மீண்டும் வரமுடியாது.

இதே கணக்கு இராமனுக்கும் பொருந்தும் - அவரும் நிலைபேற்றினை அடைந்தவராக இருந்தால்!

oOOo

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, April 23, 2024

பொருள் புரியாமல் இறைபெயர்களை உருட்டுவதால் எந்த பயனுமில்லை!!


எனக்குத் தெரிந்த நபரொருவர், பின்வரும் அசுரச்செய்யுளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் உருட்டிக் கொண்டிருப்பார்: 

ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

அவருக்கு நான் கொடுத்த விளக்கங்களின் ஒரு பகுதியை இச்சிறு இடுகையாக மாற்றியுள்ளேன்.

oOo

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொன்னால்தான் பயனளிக்கும் என்பது திரு மணிவாசகப் பெருமானின் வாக்காகும்.

🌷 நாராயணன் -> நீராய் இருப்பவன். நீர் -> பாற்கடல் -> மாறிக்கொண்டேயிருப்பது -> நமதுடல். நமதுடலாக இருப்பவன்.

🌷 வாசுதேவன் -> வசுதேவனின் மகன். வசு - ஒளி, நெருப்பு போன்ற 8 பொருட்களை குறிக்கும். அதாவது, நாம் காணும் யாவுமானவன்.

🌷 விஷ்ணு - எங்கும் நிறைந்திருப்பவன். காட்சிகள் தோன்றாத பகுதியென்று வையகத்தில் ஏதேனுமுள்ளதா? இல்லையல்லவா? எனவே, எங்கும் நிறைந்திருப்பவன்.

நாம் இவ்வுடல் என்பது பொய்யறிவு. நாம் இவ்வுடலல்ல என்பது மெய்யறிவு. இந்த மெய்யறிவை விடாது இறுகப் பற்றுவது நிலைபேறு (அசுரத்தில், சமாதி). இந்நிலையை அடையும்போது, மேற்கண்ட யாவும் பொய்த்துப் போகும். காட்சிகள் தோன்றாது. தோன்றினாலும் நம்மை பாதிக்காது. மாற்றம் என்பது இருக்காது. அதாவது, நாராயணனாகவும், வாசுதேவனாகவும் & விஷ்ணுவாகவும் இருக்கும் மாயைக்கு அங்கு வேலையிருக்காது.

✨ காண்பான் - சிவம் - நாம்.
✨ காணப்படுவது - அன்னை / பெருமாள் - நம்மை தவிர மீதமனைத்தும்.

நம்மை நாமுணர, நாம் செய்ய வேண்டியதெல்லாம்: சும்மா இருத்தலே!!

oOo

இராமன் என்பவன் தன்னை இராமனென்று உணர கண்ணாடி வேண்டுமோ?

-- பகவான் திரு இரமண மாமுனிவர்

இந்த "நெத்தியடி" அறிவுரையை கேட்டவுடன் அவரது மனம் அமைதியடைந்தது! 😌

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, April 20, 2024

வாசுகிப் பாம்புக்கு போதாத நேரம்! 😃




வாசுகியின் படிமம் கிடைத்துள்ளதெனில், அது இங்கு வந்து, வாழ்ந்து & இறந்துவிட்டது என்பது உறுதியாகிறது. எனில், அச்சமயத்தில் சிவபெருமானின் கழுத்தை யார் அணி செய்தார்கள்? வாசுகியின் பாடி-டபுளா? அல்லது, உடன் பிறந்த ஆதிசேஷனே பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் ஓவர்டைம் பார்த்தாரா? 😆


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


திருட்டுப்பயல்களே!! இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?


🌷 வாசுகி - மனம் / மூச்சுக்காற்று


🌷 சிவபெருமானின் கழுத்தை அணி செய்யும்போது - மனம்


🌷 மந்தார மலையை கடையும் போது - மூச்சுக்காற்று


இனி, மந்தார மலையை கடைதலின் உட்பொருளை பார்ப்போம்:


🌷 பாற்கடல் - நமதுடல் / வையகம். மாறிக்கொண்டேயிருப்பதை குறிக்கும்.


🌷 மந்தாரமலை - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து பெறப்படும் அறிவுரை.


🌷 மலையை தாங்கும் ஆமை - புலனடக்கம்


🌷 தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி


🌷 அசுரர்கள் - நாம் வெளிவிடும் கரியமிலம்


🌷 கடைதல் - மெய்யாசிரியரிடமிருந்து பெறப்பட்ட அறிவுரையை செயல்படுத்துதல்.


🌷 முதலில் வெளிப்படும் நஞ்சு (தவ்வை / மூத்தவள் / மூதேவி) - அவரவர் வினைப்பயன்களின் படி வெளிவரும் எண்ணங்கள், அரிய அறிவு & திறமைகள். அசுரத்தில், சித்திகள்.


🌷 இறுதியில் வெளிப்படும் அமுது (மலர்மகள் / இளையவள் / ஶ்ரீதேவி) - நாமே உள்ளபொருள் என்ற மெய்யறிவு.


மொத்தத்தில், இக்கடைதல் நிகழ்வு வடக்கிருந்து, மெய்யறிவு பெறுதலை குறிக்கும்.


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, April 17, 2024

மோடிக்காக சுண்டு விரலை இழக்கலாமா?


செந்நீரை காணிக்கையாக கொடுத்து, மோடி வெற்றி பெறவேண்டுமென்று வேண்ட வந்தவர், பெருக்கெடுக்கும் செந்நீரை அப்படியே காணிக்கையாக பயன்படுத்தி, தனது சுண்டுவிரல் மீண்டும் இணையவேண்டும், அல்லது, புதிய சுண்டுவிரல் முளைக்கவேண்டும் என்று வேண்டியிருக்கலாமே? 😏

மெய்யியலின் அடிப்படைகளை பற்றிய தெளிவில்லாததால் இது போன்ற முட்டாள்தனமான செயல்கள் நிகழ்கின்றன!

🌷 காளியன்னை - நான் எனும் நமது தன்மையுணர்வைத் தவிர மீதமனைத்தும். அல்லது, அசையும் யாவும் / தோன்றி மறையும் யாவும் / படைக்கப்பட்டது யாவும்.

🌷 காணிக்கை - செந்நீரை காணிக்கையாக்குதல், உடலின் ஒரு பகுதியை காணிக்கையாக்குதல், தனது தலையை தானே வெட்டிக்கொண்டு, மொத்த உடலையும் காணிக்கையாக்குதல் என யாவும் "உடலை விட்டுவிடு" என்ற சொற்றொடரிலிருந்து தோன்றியவையாகும்.

🌷 "உடலை விட்டுவிடு" எனில் "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணத்தை விட்டுவிடுதலாகும். உடலை வெட்டிக்கொண்டு துன்புறுவதோ / மாண்டு போவதோ அல்ல!

oOo

திருவிழா சமயங்களில் எல்லா அம்மன் கோயில்களிலும், சமயபுரம் போன்ற புகழ் பெற்ற திருக்கோயில்களில் எப்போதும், உடலுறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளீயத் தகடுகள் விற்கப்படும். அன்பர்கள் அவரவர் வேண்டுதல்களுக்கு ஏற்ப அத்தகடுகளை 
வாங்கி, உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துவர். 

இன்று, உடலிலுள்ள குறையோ, அல்லது, பிடித்திருக்கும் நோயோ நீங்குவதற்காக அம்மனிடம் வேண்டிக்கொண்டு, அது நீங்கிய பின்னர், அவ்வுறுப்பை குறிக்கும் தகடை வாங்கி காணிக்கையாக செலுத்திவிடுகின்றனர். ஆனால், இதற்காக தோன்றியதல்ல இவ்வினைமுறை (அசுரத்தில், சடங்கு)! தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வதற்காக தோன்றியது. பின்னர் மருவி, "தனக்குத்தானே தண்டனை வழங்கிக் கொள்வதற்காக" என்று மாறியது. பிறகு இன்னும் மருவி, இன்று, மேற்கண்ட வேண்டுதலாகிவிட்டது!

தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளல் என்ற கணக்கில்:

🌷 கண்ணை கொடுத்தல் - புறமுகப் பார்வையை விட்டு விடுதல். அதை விட்டுவிட்டால், மீதமிருப்பது "நான்" எனும் தன்மையுணர்வு மட்டுமே.

🌷 நாக்கை கொடுத்தல் - பேசுவதை விட்டு விடுதல். அதாவது, பேசாமலிருத்தல்.

🌷 காலை கொடுத்தல் - நகர்வை / அசைவை விட்டு விடுதல். அதாவது, மனதை அசையவிடாதிருத்தல்.

🌷 கையை கொடுத்தல் - "செயலை செய்பவன் நான்" என்ற எண்ணத்தை விட்டு விடுதல்.

🌷 தலையை கொடுத்தல் - "நான் இன்னார்" என்ற எண்ணத்தை விட்டு விடுதல்.

oOo

என்ன நடக்கிறது என்பதை மிக சுருக்கமாக, அழகாக, எளிமையாக விளக்கியருக்கிறார் நம் முப்பால் முனிவர்:

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும் 

-- திருக்குறள் #364

தூய்மை & வாய்மை ஆகிய இரு சொற்களும் உள்ளபொருளை (கடவுளை) குறிக்கும்.

வேண்டினால் வேண்டியது கிட்டும் (அதற்கான கூலியை கொடுத்த பிறகு). ஆனால், வேண்டாதிருந்தால் - அவா (ஆசை) அற்றிருந்தால் - மனதை அசைய விடாதிருந்தால்... நாமே உள்ளபொருளாவோம்!

"மோடி வெற்றி பெறவேண்டும்" என்று வேண்டினால் வேண்டியது நடக்கலாம். ஆனால், அப்படி வேண்டுவதினால் - அவா அடைவதால் - ஆசைப்படுவதினால் - மனதை அசைய விடுவதால் - நாம் மாசடைவோம். பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மாசற்ற ஒருவருக்காக நாம் மாசடையலாம். ஆனால், மாசே வடிவான ஒரு அரசியல்வியாதிக்காக நாம் மாசடைவது... ஒரு சூதாட்டத்திற்காக வாழும் வீட்டையே பந்தயப் பொருளாக்குவதற்கு இணையாகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

மோடிக்காக சுண்டு விரலை இழக்கலாமா?


செந்நீரை காணிக்கையாக கொடுத்து, மோடி வெற்றி பெறவேண்டுமென்று வேண்ட வந்தவர், பெருக்கெடுக்கும் செந்நீரை அப்படியே காணிக்கையாக பயன்படுத்தி, தனது சுண்டுவிரல் மீண்டும் இணையவேண்டும், அல்லது, புதிய சுண்டுவிரல் முளைக்கவேண்டும் என்று வேண்டியிருக்கலாமே? 😏

மெய்யியலின் அடிப்படைகளை பற்றிய தெளிவில்லாததால் இது போன்ற முட்டாள்தனமான செயல்கள் நிகழ்கின்றன!

🌷 காளியன்னை - நான் எனும் நமது தன்மையுணர்வைத் தவிர மீதமனைத்தும். அல்லது, அசையும் யாவும் / தோன்றி மறையும் யாவும் / படைக்கப்பட்டது யாவும்.

🌷 காணிக்கை - செந்நீரை காணிக்கையாக்குதல், உடலின் ஒரு பகுதியை காணிக்கையாக்குதல், தனது தலையை தானே வெட்டிக்கொண்டு, மொத்த உடலையும் காணிக்கையாக்குதல் என யாவும் "உடலை விட்டுவிடு" என்ற சொற்றொடரிலிருந்து தோன்றியவையாகும்.

🌷 "உடலை விட்டுவிடு" எனில் "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணத்தை விட்டுவிடுதலாகும். உடலை வெட்டிக்கொண்டு துன்புறுவதோ / மாண்டு போவதோ அல்ல!

oOo

திருவிழா சமயங்களில் எல்லா அம்மன் கோயில்களிலும், சமயபுரம் போன்ற புகழ் பெற்ற திருக்கோயில்களில் எப்போதும், உடலுறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளீயத் தகடுகள் விற்கப்படும். அன்பர்கள் அவரவர் வேண்டுதல்களுக்கு ஏற்ப அத்தகடுகளை 
வாங்கி, உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துவர். 

இன்று, உடலிலுள்ள குறையோ, அல்லது, பிடித்திருக்கும் நோயோ நீங்குவதற்காக அம்மனிடம் வேண்டிக்கொண்டு, அது நீங்கிய பின்னர், அவ்வுறுப்பை குறிக்கும் தகடை வாங்கி காணிக்கையாக செலுத்திவிடுகின்றனர். ஆனால், இதற்காக தோன்றியதல்ல இவ்வினைமுறை (அசுரத்தில், சடங்கு)! தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வதற்காக தோன்றியது. பின்னர் மருவி, "தனக்குத்தானே தண்டனை வழங்கிக் கொள்வதற்காக" என்று மாறியது. பிறகு இன்னும் மருவி, இன்று, மேற்கண்ட வேண்டுதலாகிவிட்டது!

தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளல் என்ற கணக்கில்:

🌷 கண்ணை கொடுத்தல் - புறமுகப் பார்வையை விட்டு விடுதல். அதை விட்டுவிட்டால், மீதமிருப்பது "நான்" எனும் தன்மையுணர்வு மட்டுமே.

🌷 நாக்கை கொடுத்தல் - பேசுவதை விட்டு விடுதல். அதாவது, பேசாமலிருத்தல்.

🌷 காலை கொடுத்தல் - நகர்வை / அசைவை விட்டு விடுதல். அதாவது, அசைவற்றிருத்தல்.

🌷 கையை கொடுத்தல் - "செயலை செய்பவன் நான்" என்ற எண்ணத்தை விட்டு விடுதல்.

🌷 தலையை கொடுத்தல் - "நான் இன்னார்" என்ற எண்ணத்தை விட்டு விடுதல்.

oOo

என்ன நடக்கிறது என்பதை மிக சுருக்கமாக, அழகாக, எளிமையாக விளக்கியருக்கிறார் நம் முப்பால் முனிவர்:

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும் 

-- திருக்குறள் #364

தூய்மை & வாய்மை ஆகிய இரு சொற்களும் உள்ளபொருளை (கடவுளை) குறிக்கும்.

வேண்டினால் வேண்டியது கிட்டும் (அதற்கான கூலியை கொடுத்த பிறகு). ஆனால், வேண்டாதிருந்தால் - அவா (ஆசை) அற்றிருந்தால் - மனதை அசைய விடாதிருந்தால்... நாமே உள்ளபொருளாவோம்!

"மோடி வெற்றி பெறவேண்டும்" என்று வேண்டினால் வேண்டியது நடக்கலாம். ஆனால், அப்படி வேண்டுவதினால் - அவா அடைவதால் - ஆசைப்படுவதினால் - மனதை அசைய விடுவதால் - நாம் மாசடைவோம். பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மாசற்ற ஒருவருக்காக நாம் மாசடையலாம். ஆனால், மாசே வடிவான ஒரு அரசியல்வியாதிக்காக நாம் மாசடைவது... ஒரு சூதாட்டத்திற்காக வாழும் வீட்டையே பந்தயப் பொருளாக்குவதற்கு இணையாகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, March 17, 2024

காதுகுத்துக்கு நாள் குறிச்சிட்டாங்கோ!! 😁


நமக்கிருக்கும் தெரிவுகள்:

💥 உள்ளூர் கொள்ளையர்களா? வடக்கத்திய கொள்ளையர்களா?

💥 பீட்டர், கோழிக்கிறுக்கல் & பிணம் போன்ற தமிழா? வாந்தி, அசுரம் & காத்து விட்டுண்டு பேசப்படும் தமிழா?

💥 தமிழ் பஜாரியா? தமிழ் மாமியா?
(இருவருக்கும் பெரிய வேறுபாடில்லை! 😏)

💥 இட ஒதுக்கீடா? அக்ரஹாரமா?

💥 குழு 1: குறி மதம், ஒப்பாரி மதம், ஈன வெங்காய மதம் & "ஓபியடிப்பவரே உயர்ந்தவர்" மதம்

குழு 2: அசுர மதம் (சிலையை வணங்குதல், கண்டதை வணங்குதல், அசுரத்தை மேன்மையானதாக கருதுதல், மம சொல்லுதல், படம் பார்த்தல், உணவுப் பொருட்களை கரியாக்குதல், நீர் நிலைகளை மாசு படுத்துதல், நமக்கு நாமே திருநீறு அடித்துக் கொள்ளுதல்...). (விரைவில், மஸ்தான் மதம், அல்லது, மஸ்தான் பிரிவு இக்குழுவில் சேர வாய்ப்புள்ளது!)

மொத்தத்தில், யார் வெற்றி பெற்றாலும், தென்தமிழ், தமிழரது சமயம், அடையாளங்கள், வளங்கள், வேலை & தொழில் வாய்ப்புகள்... கோவிந்தா!!

oOo

உயரும் வெப்பநிலை, பெருகும் மாசு, குறையும் வளங்கள், அழியும் உயிரினங்கள், எங்கும் நீதியின்மை, வலுவற்ற & தாங்குதிறனற்ற மக்கள் என பல பேரிடர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நம் வையகத்தின் தேவை:

✨ ஓர்ந்து, கண்ணோடாது, கோன்முறை அரசு செய்து, இறைபுரியும் ஆட்சியாளர்கள்

✨ "சித்த நேரம் சிவனேன்னு கிடக்கவேண்டியதுதானே?" என்ற சொற்றொடரின் பொருளுணர்ந்து வையும் மக்கள் (அதாவது, வசவு மொழியிலும் மெய்யியல் கலந்து பேசுமளவிற்கு முதிர்ந்த மக்கள்!)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, March 1, 2024

செயலித் துறைக்குள் பரவும் குறிமத நஞ்சு!!


பன்னாட்டு மகளிர் நாளை கொண்டாடும் வகையாக, கூகுள் நிறுவனம் பெண்களுக்கான மற்றும் பெண்களால் வடிவமைக்கப்பட்ட செயலிகளை முன்நிறுத்தி கொண்டாடுகிறது. இதற்கான கூகுள் ப்ளேஸ்டோர் பக்கத்தின் திரைநகலை இங்கு இணைத்துள்ளேன்.


வலது ஓரத்தில், ஒரு வெள்ளையினப்பெண். நடுவில், ஒரு கறுப்பினப்பெண். எனில், இடது ஓரத்தில், மஞ்சள் இனப்பெண் இருக்கவேண்டும். ஆனால், இருப்பது... பெண்குறியை நினைவுபடுத்தும் வகையாக, தலை முதல் கழுத்து வரை மூடிய தோற்றத்தில் காணப்படும் குறிமதப்பெண்!!


ஒன்று, அனைத்து மதங்களை சேர்ந்தவர்களையும் காட்டவேண்டும். அல்லது, மத அடையாளங்களே இல்லாமல் காட்டவேண்டும். ஏன் குறிமதம் மட்டும் காட்டப்படுகிறது? கூகுள் நிறுவனம் குறிமதத்தாரின் கைகளுக்குள் சென்றுவிட்டதா?


அதுவும், எப்படி காட்டியுள்ளனர்? அறிவியல் ஆய்வாளராக! குறிமதத்திற்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்புள்ளது? ஒரு வேளை, புவி உருண்டு ஓடாமலிருக்க மலைகளை நட்டுவித்த இறைவன் மிகப்பெரியவனின் செயலை ஆராய்வார்களோ? அல்லது, அன்று, நீர் நிலைகளில் நஞ்சு கலந்து எதிரிப்படைகளை "நீதி" வழியில் வென்ற அவர்களது முன்னோர்களின் "அருஞ்செயல்களை" அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வது (அதாவது, நீரின் அருகில் சென்றவுடனே சுருண்டு விழுவது) பற்றி ஆராய்வார்களோ?


ஊடகம், திரைத்துறை, விளம்பரம், அரசுத்துறைகளைக் கடந்து, இப்போது, செயலித் துறைக்குள்ளும் குறிமத நஞ்சு பரவத் தொடங்கியுள்ளது. எந்த செயலியைத் தொட்டாலும் ஆண்குறித்திறப்பு (பிறைநிலா) தெரிவதற்குள், தொடக்கத்திலேயே, தடுக்கப்படவேண்டும்!


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Sunday, February 11, 2024

திருவீழிமிழலைப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெயர் விளக்கம் & அத்திருக்கோயில் புனைவு கதைகளின் உட்பொருள்


🌷 தொன்மையான நிலப்பகுதியிலுள்ள பழமையான திருக்கோயில்
🌷 மூவர் பெருமக்களாலும் பாடல் பெற்ற திருக்கோயில் (23 பதிகங்கள்!!)
🌷 அப்பர் பெருமானும், காழியூர் பிள்ளையாரும் பெருமானிடமிருந்து படிக்காசு பெற்று, பஞ்சம் போக்கிய திருக்கோயில்
🌷 சுந்தரமூர்த்தி நாயனார் பொன் அணிகலன் பெற்ற திருக்கோயில்
🌷 பெருமிழலைக் குறும்ப நாயனார் பிறந்து, இறைத்தொண்டு புரிந்த ஊர்

oOo

புனைவு #1: கருவறையிலுள்ள இறைச்சின்னத்திற்கு பின்னால் அம்மையப்பர் சிலைகள் உள்ளன. இதற்கு, "அகத்தியப் பெருமானுக்கு இறைவன் திருமணக்காட்சியை காட்டியருளிய இடம்" என்று புனைந்திருப்பார்கள்.


புனைவு #2: திருமால் தனது கண்ணை பறித்து, மலராக கருதி, இறைவனை வழிபட்டு, திகிரியை (அசுரத்தில், சக்கிரம்) பெற்ற இடம்.

oOo

🌷 பெருமானின் திருநெறியத்தமிழ் பெயர்: வீழிமிழலைப் பெருமான்.

> வீழி + மிழலை + பெருமான் = வீழிச்செடிகள் + மழலைச்சொல் + மெய்யறிவாளர்.

அதாவது, இறைச்சின்னத்தின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், வீழிச்செடிகள் நிறைந்த பகுதியிலிருப்பவர்; ஒரு குழந்தை பேசுவதைப்போன்று பேசுபவர். அல்லது, குழந்தைத்தனமாக நடந்துகொள்பவர்.

🌷 பெருமானின் அசுரப்பெயர்: நேத்திரார்ப்பணேசுவரர்.

> நேத்திரம் + அர்ப்பணம் + ஈசுவரர் = கண் + [பிறிதொருவருக்கு] உரியதாகக் கொடுத்தல் + மெய்யறிவாளர்.

புனைவுக்கதை #2-ன் படி, இங்கு, பெருமாள் தனது கண்ணை பறித்து இறைவனுக்கு கொடுத்திருக்கிறார். எனில், "இறைசின்னத்தின் கீழிருப்பது பெருமாளா?" என்ற கேள்வியெழும்!

உண்மை என்னவெனில், மனம் இயங்கும் வரை நாமனைவரும் பெருமாள்களே! மனமழிந்தால் சிவமாவோம். இவ்விதிக்கு ஒருவரும் விலக்கல்ல. கருவறையின் கீழேயிருக்கும் பெருமானும் இதற்கு விலக்கல்ல.

அவர் உடல் தாங்கியிருந்த காலத்தில், மனமும் இயங்கிக் கொண்டிருந்த வேளையில், அவரும் பெருமாளாகிறார். மெய்யறிவில் நிலைபெறுவதற்காக வெகுவாக போராடியிருக்கிறார். எல்லா பற்றுகளையும் விட்டுள்ளார். இதை, "999 மலர்கள் (பற்றுகள்) கொண்டு வழிபாடு நடத்தினார்" என்று பதிவு செய்துள்ளனர்! இறுதியாக, புறமுகப் பார்வையை விட்டுள்ளார். இதை, "கண்ணை பறித்து இறைவனுக்கு படைத்தார்" என்று பதிவு செய்துள்ளனர்!

புறமுகப் பார்வையை விடுதலென்பது அகமுகப் பார்வையை இறுகப் பற்றுதலுக்கு சமம். அகமுகப் பார்வையென்பது தான் எனும் தன்மையுணர்வாய் நிற்றலாகும்.

இங்கு, பகவான் திரு இரமண மாமுனிவரின் 2 பொன்மொழிகளை நினைவு கூர்வது பொருத்தமாகவிருக்கும்:

🌷 தானாயிருத்தலே தன்னையறிதலாம்
🌷 தன்னை விடாதிருத்தல் மெய்யறிவு. அந்நியத்தை நாடாதிருத்தல் பற்றின்மை. இரண்டும் ஒன்றே.

> அந்நியத்தை நாடாதிருத்தல் = புறமுகப் பார்வையை விட்டுவிடுதல் = கண்ணை பறித்துக் கொடுத்தல்!

புறமுகப் பார்வை இருந்தவரை அவர் பெருமாளாகிறார். அகமுகமாய் நிலைபெற்றவுடன் அவர் அகத்தியாராகிறார். (எல்லா மெய்யறிவாளர்களும் அகத்தியர்களே!)

தற்போது, வையகத்தினுள் நாமிருப்பதாக உணர்கிறோம். நிலைபேறு அடைந்த பின், எதுவும் தோன்றாமலிருக்கலாம். அல்லது, ஒரு திரையரங்கிலிருப்பது போன்று, நாம் ஒரு புறமும், வையகக்காட்சி இன்னொரு புறமும் தோன்றிக் கொண்டிருக்கலாம். இத்தகைய காட்சியே மிழலைப் பெருமானுக்கு கிட்டியுள்ளது.

> காண்பான் ஒரு புறம் & காட்சி ஒரு புறம்
> காண்பான் & காட்சி = அப்பன் & அம்மை
> அம்மையப்பர் = திருமணக்காட்சி

மேற்கண்ட நிலையில் மிழலைப் பெருமான் இருக்கிறார் என்பதை நமக்குணர்த்தவே அம்மையப்பர் சிலையை இறைசின்னத்தின் பின்னே வைத்துள்ளனர். மேலும், "அகத்தியருக்கு திருமணக்காட்சி கிட்டிய திருவிடம்" என்றும் பதிவுசெய்து வைத்துள்ளனர்.

இப்போது நாம் காணும் காட்சியில் சூழ்ச்சி நிறைந்துள்ளது. நமதுண்மையை நாம் உணர வெகுவாக போராடவேண்டியுள்ளது. ஆனால், திருமணக்காட்சியில் சூழ்ச்சியே இருக்காது. எனவே, அதை நல்ல காட்சியென்று அழைத்துள்ளனர்.

> திருமணக்காட்சி = நல்ல காட்சி
> நல்ல + காட்சி = அசுரத்தில், சு + தரிசனம் = சுதர்சனம்!

காட்சி என்பது இடைவிடாது மாறிக்கொண்டேயிருக்கும். இதையுணர்த்துவதற்காக, திகிரி (அசுரத்தில், சக்கிரம்) என்று பதிவு செய்துள்ளனர். திகிரி சுழன்று கொண்டேயிருக்கும்.

🌷 சுதர்சன சக்கிரம் = நல்ல காட்சி = திருமணக்காட்சி!!

🌷 அகத்தியர் திருமணக்காட்சியை காணுதல் = பெருமாள் சுதர்சன சக்கிரத்தை பெறுதல்!!!

(எதற்காக ஒரே செய்தியை சொல்லும் இரண்டு புனைவுக் கதைகளை, ஒரு திருக்கோயிலில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்?... விடையை உங்களது சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.)

oOo

திருமணக்காட்சியின் வேறு பெயர்கள்:

🌷 திருக்கயிலாயக் காட்சி
🌷 சூழ்ச்சியில்லாக் காட்சி (இது திரு மணிவாசகப் பெருமானின் படைப்பு)
🌷 கூடம் (அசுரத்தில், சபை - இரத்தின சபை, பொற்சபை...)
🌷 கண்கூடாகக் காணுதல்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, February 6, 2024

இராமக்கிருஷ்ண புருடம்!!


பின்வரும் படக்கதை இராமக்கிருஷ்ண விஜயத்தின் மாசி 2024 இதழில் வெளிவந்துள்ளது:


💥 சோழர்களின் ஆட்சி முழுவதுமாக முடிவுக்கு வந்தது 1,279ல். பாண்டியர்கள் வலுவாக இருந்தது 1,311 வரை. கிருஷ்ணதேவராயர் ஆட்சி தொடங்கியது 1,509ல். எனில், இல்லாத சோழர்கள் எப்படி பாண்டியர்களின் அரியணையை கவர்ந்திருக்கமுடியும்?

(ஒரு வேளை, தற்போது, இராமனின் சிலைக்கு அசுரர்கள் "உயிரூட்டியது" போல, அன்று, பிழைத்திருந்த சோழ வாரிசுகளிடம் "வெயிட்டான" தட்சிணை பெற்றுக்கொண்டு, பெரிய வேள்வித்தீ வளர்த்து, வாயில் போட வேண்டியவற்றை நெருப்பில் போட்டு, "ஓட்டைப் பானைக்குள் நுழைந்த ஈ" எழுப்பும் ஒலியை எழுப்பி, சோழர்களின் சிலைகளுக்கும், வரைபடங்களுக்கும் "உயிரூட்டினார்களா"? 😜)

💥 ஆட்சியிலிருப்பவனை போட்டுத் தள்ளிவிட்டு அரியணை ஏறுவதென்பது குறிமதத்திலும், தேவலோகத்திலும் (வடக்கில்) இருந்த எழுதப்படாத நடைமுறை. அந்தளவுக்கு இல்லையென்றாலும், விஜயநகர மன்னர்களும் அவ்வழியை பல முறை பின்பற்றியவர்கள்தாம். இப்படிப்பட்டவர்களின் ஆட்சியில், நீதியை நிலைநாட்டுவதற்காக மகனே தந்தையை கைது செய்தானாம்! நீதிக்காக கைது செய்தானா? அவன் மேலே வருவதற்காக கைது செய்தானா?

💥 அண்மையில், "பாண்டியர்களை அழித்தொழித்ததே விஜயநகரத்தின் பிரதிநிதிகளான தெலுங்கு நாயக்கர்கள்தாம்" என்ற செய்தி இணையத்தில் சுற்றிவந்தது. இது உண்மையெனில், எப்படி அவர்கள் பாண்டியர்களுக்கு உதவ முன்வந்திருப்பார்கள்? (எனக்கென்னவோ, இப்படக்கதையே அச்செய்திக்கான "டேமேஜ் கண்ட்ரோல்" என்று தோன்றுகிறது!)

💥 சோழர்களின் மீது சேற்றை வாரி வீசும் ஈனர்களுக்கு விஜயம் இடம் கொடுக்கலாமா? அப்படிப்பட்ட பிழைப்பு விஜயத்திற்கு தேவையா?

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, February 5, 2024

திரு நடுக்கந்தீர்த்தப் பெருமான் (திருப்புவனம், தஞ்சை) 🌺🙏🏽🙇🏽‍♂️ - பெயர் விளக்கம்



🌺🙏🏽🙇🏽‍♂️

கடந்த 02/02/24 அன்று குடமுழுக்கு கண்ட திரு நடுக்கந்தீர்த்தப் பெருமான், திருப்புவனம், தஞ்சை மாவட்டம் (அப்பர் பாடல் வைப்புக் கோயில்).

🌷 நடுக்கம் தீர்த்த - அச்சம் போக்கிய.

"மெய்யறிவு கிடைத்தவுடன் என்ன நடந்தது?" என்று கேட்ட ஓர் அன்பருக்கு, பகவான் திரு இரமண மாமுனிவர் கொடுத்த பதில்: அத்தோடு இறப்பை பற்றிய அச்சம் என்னை விட்டு நீங்கியது!!

இதே செய்தியைத்தான் திருக்கடவூர் திருக்கோயிலின் புனைவுக்கதையும் தெரிவிக்கிறது.

கதை: திரு மார்க்கண்டேயரை பற்ற வந்த காலனை, இறைவன் எட்டி உதைத்தார்.

🌷 பற்ற வந்த காலன் - இறப்பை பற்றிய அச்சம்.
🌷 உடையவரிலிருந்து வெளிப்பட்ட இறைவன் - நமக்குள்ளிருந்து வெளிப்படும் மெய்யறிவு.
🌷 காலன் உதை வாங்குதல் - இறப்பை பற்றிய அச்சம் நீங்குதல்.

🔥 இறப்பை பற்றிய அச்சம் / நடுக்கம் நீங்குதல் = மெய்யறிவு பெறுதல்!

🙏🏽 நடுக்கந்தீர்த்தப் பெருமான் = மெய்யறிவு வழங்கிய பெருமான்!

தன்னாட்டம் ("நான் யார்?") என்ற எளிமையான வழியை மீட்டுக் கொடுத்த பகவானும், தம்மை தஞ்சமடைந்த அன்பர்கள் உய்வடைய வழிகாட்டிய அனைத்து பெருமான்களும் நடுக்கந்தீர்த்தப் பெருமான்களாவர்!!

இவ்வாறு, நம் பெருமான்களின் திருநெறியத்தமிழ் பெயர்களை சிந்தித்துக் கொண்டிருந்தாலே பிறவிப்பெருங்கடலை நீந்திவிடலாம். 😍

ஆனால், இப்படி எளிதாக நாம் விளங்கிக்கொண்டு, உய்வடைந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அசுரத்தை உயர்த்திக் காட்டுவதற்காகவும், நமக்கு தாழ்வு மனப்பான்மை தோன்றவேண்டும் என்பதற்காகவும் அசுரக்கூட்டம் அசுரப்பெயர்களை திணித்துள்ளது! சில பழமையான திருக்கோயில்களில், பெயரளவிற்கு மட்டும், தென்தமிழ் பெயர்கள் உள்ளன. "அண்ணாமலையார்" போன்ற ஒரு சில திருப்பெயர்களே, அசுரப்பெயர்களை காட்டிலும் பெரும் புகழ் பெற்று, அன்னைத்தமிழின் மேன்மையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

நடுக்கந்தீர்த்தப் பெருமானின் அசுரப்பெயர் - கம்பகரேசுவரர்.

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, February 2, 2024

யார் நல்லவர்? இராமனா இராவணனா?


திரு இராமேச்சுரத்தை சுற்றியுள்ள பல திருக்கோயில்களில், "[பேரரசர்] இராவணனை கொன்றதினால் தன்னை பிடித்துக்கொண்ட 'பிரம்மஹத்தி' (மனநோய்) விலகுவதற்காக, இராமன், இங்கு சிவலிங்கம் நிறுவி, வழிபட்டார்" என்று எழுதி வைத்திருப்பார்கள்...


> பிரம்மம் - உள்ளபொருள்

> பிரம்மஹத்தி - உள்ளபொருளை உணர்ந்த மெய்யறிவாளரை (பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றோரை) கொல்பவன்.


எனில், இராவணன் ஒரு மெய்யறிவாளராகிறார்! அவரை கொன்றதால் இராமன், பிரம்மஹத்தி ஆகிறார்!!


ஒரு மெய்யறிவாளர் பிறன்மனை நோக்குவாரா? நோக்கமுடியுமா? உண்மையில், யார் நல்லவர்? யார் தூற்றப்படவேண்டியவர்?


வடக்கிலிருந்து வந்த அத்தனையுமே புருடா, பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை, நயவஞ்சகம், நச்சு... இராமன் கதைமட்டும் விதிவிலக்காகிவிடுமா?


மெய்யியல் அடிப்படையில், இராமன் என்பது மனம், இராவணன் என்பது உடல் & இராமாயணம் என்பது மனம் அடங்குதல். வரலாற்று அடிப்படையில்... 😏


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Thursday, February 1, 2024

போச்சு! நம்ம ஜி-க்கு போட்டியாளர் வந்துட்டார்!! 😁


💥 சாப்பிடாமல் இருப்பதற்குப் பெயர் பட்டினி கிடப்பது. நோன்பல்ல (அசுரத்தில், விரதமல்ல).

🌷 நோன்பு எனில் உண்ணாமல் இருப்பதுடன், இறைசிந்தனையும் இருக்கவேண்டும்.

🌷 உண்ணாமல் இருப்பது எனில் உடலுக்கான உணவை உண்ணாமல் இருப்பதல்ல. மனதில் தோன்றும் எண்ணங்களையும், நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சிகளையும் சட்டை செய்யாமல் இருப்பதாகும்.

🌷 இறைசிந்தனை எனில் பொருள் புரியாமல், பாடல்களை, செய்யுள்களை, இறைவனின் திருப்பெயர்களை உருட்டிக் கொண்டிருப்பதல்ல. அல்லது, இறைவனை எங்கோ இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, அவ்விடத்தையும், அவரது வடிவத்தையும் சிந்தித்துக் கொண்டிருப்பதல்ல. நான் எனும் நமது தன்மையுணர்வை (உள்ளபொருளை) இடைவிடாது பற்றிக் கொண்டிருப்பதாகும்!

🌷 கண் எப்படி தன்னையே பார்க்கும்? நாம் எப்படி நம்மையே பற்றிக் கொண்டிருக்க முடியும்?

பகவான் திரு இரமண மாமுனிவரின் பதில்:

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்  
தான் இரண்டற்றதால் உந்தீபற 
தன்மய நிட்டையீது உந்தீபற

🌷 "சும்மா இரு" என்ற பேரறிவுரையின் விளக்கமும் இதுவேயாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼

Tuesday, January 30, 2024

சாத்தான்களையும் சைத்தான்களையும் மிஞ்சிய அசுரர்கள்!! 😡😡


வெள்ளைச்சாத்தான்களும் & காட்டுமிராண்டி குறிமதத்தான்களும் செய்த அட்டூழியங்களையும், அவர்களால் நாம் இழந்தவைகளையும் அறிவோம். ஆனால், இவ்விருவரையும் மிஞ்சும் அசுரர்களை பற்றி... மறந்துவிட்டோம்! மறக்கடிக்கப்பட்டுள்ளோம்!!

(அசுரர்கள் - சமணர்கள், பெளத்தர்கள், பௌத்தத்திலிருந்து தோன்றிய நாமப்பேர்வழிகள், வைதீகர்கள் - மொத்தத்தில், வடக்கிலிருந்து வந்த அத்தனை கழிசடைகளும்!)

நம்மால் வளர்ந்து, நம்மை அழித்து, இன்றுவரை நம்மிடம் தட்டேந்திக் கொண்டு, நம்மையே அசுரர்களாக அவர்களது கதைகளிலும், வரைபடங்களிலும் காண்பித்து, அந்த நயவஞ்சகத்தையும் நம்மை ஏற்றுக்கொள்ளும்படி செய்திருக்கிறார்கள்!!

உள்ளபொருளை மிகச்சரியாக உணர்ந்து, மனிதப்பிறவியின் நோக்கமறிந்து, சரியாக இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்த நம்மை வெற்றுச் சிலைவணங்கிகளாக, கண்டதையும் வணங்கும் முட்டாள்களாக, மம சொல்லும் மடையர்களாக, நம்மை அழித்த அவர்களையும், அவர்களது "ஓட்டைப்பானைக்குள் ஈ"-ஐயும் (அசுரத்தையும்) மேன்மையானதாகக் கருதும் அறிவிலிகளாக மாற்றியுள்ளனர்! கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை வீண் செய்ய வைத்துள்ளனர்!! இவ்வகைகளில் நாமும், வையகமும் இழந்தவற்றை மதிப்பிட்டால்... சாத்தான்களும், சைத்தான்களும், வையகத்தில் இன்றுவரை தோன்றிய கொடுங்கோலர்களும் செய்தவை ஒன்றுமேயில்லை என்றாகிவிடும்!! 👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

💥 சாத்தான்களின் கொட்டம் - 350 ஆண்டுகளாக.
💥 சைத்தான்களின் கொட்டம் - தெற்கில், 700+ ஆண்டுகளாக. வடக்கில், 1,300- ஆண்டுகளாக.
💥 அசுரர்களின் கொட்டம் - வரலாறு பதிவு செய்யப்படத் தொடங்கியப் பொழுதிற்கும் முன்பிருந்து!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, January 28, 2024

திரு இரமண நிலையத்தில் இராமன் வழிபாடு நடந்துள்ளது!! 😔


மெய்பொருளுக்கு உள்ளபொருள் என்று பெயரிட்ட மாமுனிவரின் நிலையத்தில், அல்லாத பொருளுக்கு வழிபாடு!! 😔

💥 பகவான், தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியது - அசைவற்ற நிலை (நிலைபேறு).

இராமனின் வடிவம் உணர்த்துவது - அசைவு (அலைபேறு).

பகவானின் நிலைப்பாட்டிற்கு நேரெதிர் நிலைப்பாட்டினை உணர்த்தும் ஒரு வடிவத்தை, அவரது நிலையத்தில் வைத்து, வழிபடலாமா?

💥 பௌத்தம் போற்றும் சூன்ய நிலையை பற்றிய உரையாடலின் போது, "அது இருளல்ல. அவ்விருளை காண்பவன் ஒருவன் இருக்கிறான். அதுவே ஒளி." என்று அருளினார். எனில், இருளை போற்றும் / முன்வைக்கும் வைணவத்தின் இறைவடிவத்தை, ஒளியை மட்டும் போற்றியவரின் திருக்கோயிலில் வைத்து, வழிபடலாமா? (வைணவத்தின் வேர் அம்மன் வழிபாடாகும். வைணவர்களின் வேர் பௌத்தமாகும்.)

💥 இராமனின் வடிவத்தை 2 வகையாக ஆராயலாம்:

🔸 கறுப்பு உடல் & அவ்வுடலை போர்த்திய காவி / மஞ்சள் / வெள்ளை ஆடை

பொருள்: இருளிலிருந்து ஒளி பிறந்தது. அல்லது, இருளுக்குள் ஒளி அடக்கம்.

🔸 மேல் பாதி கறுப்பு நிறம் & கீழ் பாதி காவி / மஞ்சள் / வெள்ளை நிறம்

பொருள்: இருள் மேலானது. ஒளி கீழானது.

அறிவிலிருந்து அறிவற்றது பிறந்ததா? அறிவற்றதிலிருந்து அறிவு பிறந்ததா? அறிவு மேலானதா? அறிவற்றது மேலானதா?

"நாமுலங் காண்டலால்..." என்ற செய்யுளை அருளியவரின் நிலையத்தில் வைப்பதற்கே ஏற்புடைய வடிவமில்லாத போது, எப்படி அதற்கு வழிபாடு நடத்தலாம்?

💥 இராமன் என்ற வடிவத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் யாவற்றையும் (பெருமாளின் திருவிறக்கம், இன்னாரின் மகன், இன்னார் உடன்பிறந்தோர், இராமன் என்ற பெயர்....) நீக்கிவிட்டுப் பார்த்தால், அது அன்னை மாயையின் ஆண் வடிவமென்பது புலப்படும். எதை காமாட்சி, வெண்ணெய் திருடிக் கண்ணன் என்றழைக்கிறோமோ, அதுவே இங்கு வில்லேந்திய இராமனாகிறது. இராமனின் அம்பு... பற்றுகளை தோற்றுவிக்கும் கணையாகிறது!

பற்றுகளை அறுத்தெறிவதற்கு வழிகாட்டிய பெருமானின் நிலையத்தில், பற்றுகளை தோற்றுவிக்கும் வடிவங்களை வைத்து, வழிபாடு செய்யலாமா?

oOo

இராமனும் கண்ணனும் அவர்களுடைய இனமாக இருக்கலாம். அல்லது, அவர்கள் படைத்த கதாபாத்திரங்களாக இருக்கலாம். அல்லது, இம்மண்ணின் மைந்தர்கள் படைத்ததை, அவர்கள் தங்களுடையதாக்கி இருக்கலாம். எப்படியானாலும், இன்று வரை, இராமனும் கண்ணனும் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். எனில், அவரவர் இல்லங்களில், அல்லது, வேறு ஏதாவதொரு இடத்தில் வைத்து, வழிபாடு செய்து கொள்ளலாம். திரு இரமண நிலையத்தில் வைத்து, வழிபாடு செய்வது தவறாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, January 26, 2024

இராமாயணம் = மனம் அடங்குதல்!!


🌷 படத்தின் மேல் பகுதி:

> மனதின் (பெருமாளின்) அடிப்படைத் தன்மை அசைவாகும். அத்தன்மையை மனதிற்கு வழங்குவது இறைவனாகும்!

> உள்ளபொருள் (நமது தன்மையுணர்வு) தன்னொளி கொண்டது. சிவந்த நிறத்தில் காண்பித்திருக்கிறார்கள். மனம் தன்னொளியற்றது. கருமை நிறத்தில் காண்பித்திருக்கிறார்கள்.

🌷 படத்தின் நடுப்பகுதி:

> நீரோட்டம் - வையகம்.

> இலங்கை - நீரோட்டத்திலுள்ள திட்டு (அசுரத்தில், தீவு). "நான் இன்னார்" என்ற எண்ணமுள்ள மனிதன்.

மெய்யறிவில் நிலைபெற்றிருப்போர் (மெய்யறிவாளர்கள்) தங்களை படைப்பிலிருந்து வேறாக உணரமாட்டார்கள். ஏனையோர் தம்மை வேறாக, தனிமனிதர்களாக உணர்கிறாரகள். இப்படிப்பட்டவர்களையே இலங்கை என்ற சொல் குறிக்கிறது.

> குரங்குப்படை - எண்ணங்கள்.

மேற்கண்ட "இலங்கை" நிலையிலிருப்போரையே - அதாவது, தன்னை தனிமனிதனாக உணர்பவரையே - எண்ணங்கள் தாக்குகின்றன. மெய்யறிவாளர்களை குரங்குப்படை தாக்காது.

🌷 படத்தின் கீழ் பகுதி:

> இராவணனின் 10 தலைகள் - ஐம்புலன்கள் & ஐந்து உறுப்புகள் - உடல்.

> இராமன் - மனம்.

> உடலின் தொடர்பு ஏற்பட்டவுடனேயே, மனம் தனது குளுமையை / நிம்மதியை (சீதை) இழந்துவிடுகிறது. பின்னர், பல போராட்டங்களுக்குப் பிறகு, இறையருளால் மெய்யறிவாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, தன்னைப் பற்றியும், உடல் & வையகத்தைப் பற்றியும் புரிந்துகொண்டு அமைதியடைகிறது (சீதையை மீண்டும் பெறுதல்).

oOo

இராமாயணம் போன்ற உவமைகள் மிகுந்த கதையை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். ஓரிடத்தில் இராமன் மனதை குறிப்பார். இன்னொரு இடத்தில் தசரதன் மனதை குறிப்பார். வேறோரிடத்தில் இராவணன் மனதைக் குறிப்பார். இன்னுமொரு இடத்தில் சீதை மனதை குறிப்பார். ஒவ்வொரு காட்சியையும் / நிகழ்வையும் தனித்தனியாக சிந்திக்கவேண்டும்.

ஓர் எடுத்துக்காட்டிற்காக, வாலியின் கதையை பார்ப்போம்.

> வாலி - மனம்
> வாலி பறித்துக்கொண்ட ருமா (சுக்கிரீவனின் மனைவி) - உடல் 
> சுக்கிரீவன் - நல்லறிவு
> மறைந்திருந்து கொல்லும் இராமன் - உள்ளபொருள்
> இராமன் எய்தும் அம்பு - மெய்யறிவு

வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் நடக்கும் சண்டையென்பது மனதிற்கும் அறிவுக்கும் நடக்கும் போராட்டமாகும். இதே சண்டையை, திருவானைக்கா திருக்கோயிலில் சிலந்தி-யானை சண்டையாக காண்பித்திருப்பார்கள்!

மொத்த இராமாயணத்தை பொருத்தவரை இராமன் மனமெனில், இவ்விடத்தில் உள்ளபொருளாகிறார்!

இராமாயணத்தை ஒரு MCU-வாக (Marvel Cinematic Universe) வைத்துக்கொண்டால், அதில் வரும் தசரதன், இராமன், குரங்குகள் கதைகளை MCUவில் வரும் Iron Man, Thor, Dr Strange போன்ற கதைகளாக கொள்ளலாம். ஒவ்வொன்றிலும் கதாபாத்திரங்கள் & சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், ஒரே கரு தானிருக்கும். MCUவில், தீயது அழிதல்; இராமாயணத்தில், மனம் அழிதல் / மனம் அமைதியடைதல்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, January 16, 2024

கொல்லிமலை திரு அறப்பளிக்கும் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ - பெயர் விளக்கம்


🌷 கொல்லிமலையில் குடிகொண்டிருக்கும் திரு அறப்பளிக்கும் பெருமான். இவரை, இன்று, அறப்பளீசுவரர் என்று அசுரம் கலந்து அழைக்கிறோம்.

🌷 அறப்பளிக்கும் பெருமான் - அறப்பு + அளிக்கும் + பெருமை வாய்ந்தவர்.

🌷 அறப்பு - இறையிலி நிலம் / பகுதி. அதாவது, இப்பகுதியில் குடியிருப்போர் வரி கட்டத்தேவையில்லை.

🌷 இவரது அருளுக்கு பாத்திரமானால், வரியில்லாத பகுதியில் நம்மை குடியமர்த்துவார் என்பது இவரது திருப்பெயருக்கான விளக்கமாகும்.

🌷 எனில், தற்போது, நாம் வரி கட்டி, வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது. நீர், உணவு, எரிபொருள், உடை, இருப்பிடம்... என பல வரிகளை செலுத்தி, உடலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

🌷 உடலுடன் வாழ்வதென்பது வரி கட்டி வாழும் பகுதியெனில், உடலற்று வாழ்வதே வரி கட்டாமல் வாமும் பகுதியாகும். அதாவது, திருநீற்று நிலையாகும் (அசுரத்தில், சமாதியாகும்)!

அறப்பளிக்கும் பெருமான் = திருநீற்று நிலையை வழங்கும் பெருமான்!!

oOo

இவ்வாறு, நமது பெருமான்களின் திருநெறிய தமிழ்ப்பெயர்களை சிந்தித்துக் கொண்டிருந்தாலே நிலைபேற்றினை அடைந்துவிடலாம்! 🙏🏽

அசுரப்பெயர்களும் இத்தகையதே. ஏனெனில், அவர்கள் கற்றுக்கொண்டதும் நம்மிடமிருந்தே!

நமது முன்னோர்கள், இறைநிலையை அடைந்தவர்களுக்கு ஒரு வகையான பெயர்களும், ஏனையோருக்கு வேறு வகையான பெயர்களும் வைத்தனர். அசுரர்கள், எல்லோருக்கும் இறைநிலையை குறிக்கும் பெயர்களையே வைத்தனர். நம்மிடமிருந்து கற்றுக்கொண்டு, சில மாற்றங்களை செய்து, "நாங்க ஒசத்தியாக்கும்" என்று படங்காட்டுவது அவர்களது இன-நுட்பமாகும்! 👊🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

விடையை உணவுப்பொருட்களால் ஒப்பனை செய்யலாமா?


விடையென்பது மனமாகும். விடையை அழகு செய்யும் உணவுப் பொருட்கள்: 

- "நான் இன்னார்" என்ற எண்ணம் முதற்கொண்டு, நாம் சேர்த்து வைத்திருக்கும் பற்றுகள்
- நம் மீது மாட்டப்பட்டிருக்கும் உடல்
- நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சிகள்

இப்படி ஒப்பனை செய்யப்பட்ட விடையும், "ஒப்பனை விரும்பி" (அசுரத்தில், அலங்காரப்பிரியர்) என்ற பெயர் பெற்ற பெருமாளும் ஒன்றுதான்!

வருவிருளின் (அசுரத்தில், பிரதோஷம்) போது அனைத்தையும் நீக்குபவர்கள், மாட்டுப்பொங்கலின் போது அனைத்தையும் மாட்டிவிடுகிறார்கள்!! எது சரி?

"பெயர்களும் வடிவங்களும் தொல்லைக்கே" என்பது பகவானது வாக்காகும்!

(இணைப்பு படங்கள்: திருவண்ணாமலை, திரு இரமண நிலையம் & தஞ்சை விடைகள்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

மாட்டுப்பொங்கல் திருநாள்!


மாடு - விடை - மனம்.

மாட்டுப்பொங்கல் - மனதிற்கான பொங்கல்.

மாட்டை குளிப்பாட்டி, ஒப்பனை செய்து பொங்கல் கொடுப்பார்கள். இதுபோன்று, மனதை சீர் செய்து, பண்படுத்தி, பகவான் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட பொங்கலை ("நான் யார்?") கொடுக்கவேண்டும்.

மாட்டிற்கு கொடுக்கப்படும் பொங்கல், அதற்கு மகிழ்ச்சியளிக்கும். மனதிற்கு கொடுக்கப்படும் பொங்கல், அதை நிலைபெறச் செய்யும்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த மாட்டுப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Sunday, January 14, 2024

இனிய போகி, பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽


🔥 போகி - பற்றுகளை விட்டொழித்தல்

🍚 பொங்கல் - மெய்யறிவு பெறுதல். நமக்கே தோன்றும் அறிவாக கொள்ளலாம். பகவான் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்படும் (பொங்கி வழியும்) அறிவுரையாகவும் கொள்ளலாம்.

🎪 வாடி வாசல் - வாடிய வாசல் - மனம் வாடினால்தான் எண்ணங்கள் தோன்றும் - காளைகள் வெளிப்படும்.

🐂 ஜல்லிக்கட்டு - மனதை அடக்குதல்

🐮 மாட்டுப்பொங்கல் - மெய்யறிவில் நிலைபெறும் முயற்சிகள் / நிலைபெறுதல்.

🎪 காணும் பொங்கல் - நிலைபேறு அடைந்து, திரு மணிவாசகப் பெருமான் குறிப்பிடும் "சூழ்ச்சியில்லா காட்சியை" கண்டு, களித்து & இருத்தல்.

அனைவருக்கும் எனது உளங்கனிந்த, இனிய போகி, பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, January 12, 2024

மார்கழி-மூலம்: திரங்கன்முகவன் என்ற வடிவம் வெளியிடப்பட்ட நாள்!


திரங்கன்முகவனின் (அசுரத்தில், ஆஞ்சநேயர், அனுமான்) மொத்த வரலாறு: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது!

💥 சைவத்துடன் இணைந்துவிட்ட பிள்ளையார் வழிபாடு, மக்களிடையே ஹிட் அடித்ததால், அதற்கு போட்டியாக நாமப்பேர்வழிகள் வடிவமைத்ததுதான் இந்த திரங்கன்முகவன். இப்படியொரு வடிவத்தை வடிக்கலாமென்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிய நாளை, அல்லது, இப்படியொரு வடிவத்தை வடித்து, அவர்கள் வெளியிட்ட நாளை, இவ்வடிவத்தின் பிறந்தநாளாக கொண்டாடுகிறார்கள்.

💥 மாயையை பெண்ணாக பார்த்தால் அன்னை; ஆணாக பார்த்தால் பெருமாள். அதாவது, பெருமாள் அசையும் யாவற்றையும் (மனம், உடல், வையகம், படைப்பு) குறிக்கிறார். ஏற்கனவே மனதை குறிக்க பெருமாள் என்ற வடிவம் இருக்கும்போது, திரங்கன்முகவன் என்ற இன்னொரு வடிவம் எதற்கு தேவைப்படுகிறது?

💥 அத்தனை அநீதிகளுக்கும் அட்டூழியங்களுக்கும் அடிப்படை மனமாகும். எப்பாடுபட்டாவது மனதை அழிக்க வேண்டுமென்று அனைத்து மதங்களும் வலியுறுத்தும்போது, மனதை போற்றலாமா? வணங்கலாமா? வலுப்படுத்தலாமா (உளுந்துவடை, வெற்றிலை, ஜிலேபி மாலைகள்)?

💥 ஒழுங்காக போய்க்கொண்டிருந்த அயோத்தி இராமர் கோயில் நிகழ்ச்சி ஏற்பாடுகள், ஒருவரது மனம், "தான் சிலையை நிறுவவேண்டும்" என்று நினைத்ததால், என்னவாயிற்று என்பது அனைவருக்கும் கண்கூடாகும்.

👊🏽 உள்ளபொருளை உள்ளபொருளாக அறிந்திருந்த மக்கள்திரளை வெற்றுச் சிலைவணங்கிகளாக, கண்டதையும் வணங்கும் முட்டாள்களாக, கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை வீண் செய்யும் ஏமாளிகளாக மாற்றியது... ஒரு கூட்டத்தின் மனமேயாகும்!

🌷 திரு கௌதம புத்தரை திருநீற்று நிலையிலிருந்து வெளித் தள்ளுவதற்காக, அவரது திரங்கன்முகவன் (மனம்), "வையகத்தையே ஆளும் அளவிற்கு உன்னை உயர்த்துகிறேன்" என்று தூண்டில் போட்டதாம். தூண்டிலில் மாட்டியிருந்தால் அவரது நிலை என்னவாகியிருக்கும்?

🌷 திரங்கன்முகவனே அனைத்து தொல்லைகளுக்கும் மாறலாகும் (அசுரத்தில், காரணமாகும்). அதை வணங்கக்கூடாது. அழிக்கவேண்டும்.

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் ஆர்க்கும் இது உந்தீபற

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻