Thursday, June 30, 2016

ஆட்டோக்காரர்... ஆட்டோக்காரர்... நாலும் தெரிந்த ரூட்டுக்காரர்!!


☺ 👏👏👏 👍

(தினமலர் - வாரமலர் - சென்னை - 26/06/2016)

posted from Bloggeroid

இனமானம் காத்த தமிழர்கள்!!! 😤😡

திராவிடம் = திரமிளம் = திரை+மீளம்!!

திரை கடலோடி மீண்டும் கரை வந்து சேர்தல் அன்று வியக்கத்தக்க செயலாகும். இத்தகைய வியத்தகு செயலை செய்தது நம் தமிழ் முன்னோர்கள் தாம். 👍

மேலும், தமிழ் = அமிழ். தமிழர் = அமிழ்ந்தோர். கடலில் அமிழ்ந்த இனத்தின் மிச்சமே தமிழர்கள்! 👍

இப்படி பெயரிலேயே மலைக்க வைக்கும் விஷயங்களை வைத்திருந்த தமிழனின் இன்றைய நிலை: "அன்று பிராமணன் பொங்கவில்லை. ஆகையால், இன்று நாங்கள் வேடிக்கை பார்ப்போம். பொங்கமாட்டோம்." 😔

இவனெல்லாம் தமிழனேயல்ல! அயல் மதங்களுக்கும் அயல் நாட்டினருக்கும் கூஜா தூக்கும் கருங்காலிகள்!! 😛😜😝

நம்மை மொட்டைப் போட்டு அழித்துக் கொண்டிருந்த வடக்கத்திய சமண பெளத்தர்களிடமிருந்து நம் மொழி, சமயம் மற்றும் கலாச்சாரத்தைக் காப்பாற்றிய ஆளுடையபிள்ளையார் ஆதிசைவ பிராமணரே. அந்த பிராமணர் தோன்றியிருக்காவிட்டால் இன்று நாம் மொட்டையர்களாக வடக்கத்தியர்களுக்கு கல் படுக்கைகள் தயார் செய்து கொண்டிருப்போம். 😂

பரிதிமாற்கலைஞர் எனும் சூரியநாராயண சாஸ்திரிகள் தோன்றியிருக்காவிட்டால் இன்று தமிழே இருக்காது!! நாமனைவரும் மொழிகளில் தாசியாகிய ஆங்கிலத்தில் "பீட்டர்" விட்டுக் கொண்டிருப்போம். ஆற்காடு பீட்டர் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்! 😂😂😂

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

#திராவிடம், #தமிழ், #தமிழர்

posted from Bloggeroid

Wednesday, June 29, 2016

மனநோயாளிகளின் கூடாரமாக மார்றிவருகிறதா சமூக வலைதளங்கள்?


(தினமலர் - சென்னை - 30/06/2016)

மிக அருமையான கட்டுரை!!

தலைப்பு மட்டும் சரியாகத் தேர்வு செய்திருந்தால் கனகச்சிதமாக இருந்திருக்கும்! 👍

posted from Bloggeroid

🔯 திருமறைகள் - ஒரு சிறிய அறிமுகம் 🔯

நம் சமய நூல்களான திருமறைகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகக் கட்டுரை.


(வைகாசி மாத ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழிலிருந்து)

பேருண்மைகளை மறைத்து வைத்ததால் மறைகள். விலைமதிப்பற்ற பேருண்மைகள் என்பதால் திரு எனும் அடைமொழி சேர்க்கப்பட்டது.

இந்தத் திருமறைகளும், அவை இயற்றப்பட்ட சமற்கிருதமும் நமதே! அதிலுள்ள பேருண்மைகளை உள்ளுணர்வால் உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்திய பெரும் மகரிஷிகளின் சமாதிகள் நம் தென்னகத்தில் இருப்பது ஒன்றே போதுமான சான்றாகும்!!

posted from Bloggeroid

Tuesday, June 28, 2016

மொகஞ்சதாரோ படக்கதையும் மூன்று துரோகிகளும் 👿👹👺


(தினமலர் - பட்டம் - சென்னை - 27/06/2016)

தினமலரின் இப்பணியை மனமார பாராட்ட வேண்டுகிறேன்!! 👏👏👏

நம் முன்னோர்கள் கடைபிடித்த விஷயங்களை, வாழ்ந்த விதத்தை, அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செய்தியாக இளம் வாசகர்களின் மனதில் ஆழப் பதியுமாறு கொடுத்திருக்கிறார்கள். 👍

இதே போன்று நம் மன்னர்கள், மகான்கள், பெரியோர்கள் மற்றும் அக்கால தமிழர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மெக்காலே கல்வி கற்று வளரும் இளம் தலைமுறைக்கும், வளர்ந்த நம் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும்.

இங்கே 3 துரோகக் கூட்டம் இருக்கிறது!! 😠

சிறுவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றால், "பிரகலாதன் போன்று" என்றும், ஒரு காரியத்தில் எப்படி கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் என்றால், "அர்ஜூனன் போன்று" என்றும் ஒரு கூட்டம் பதில் கூறும். 😛

இன்னொரு கூட்டம் அதே கேள்விகளுக்கு அன்றைய அரேபியாவில் வாழ்ந்த ஏதாவது ஒரு காட்டுமிராண்டியை எடுத்துக்காட்டாகக் கூறும். 😜

மூன்றாவது கூட்டம், ஏதாவது ஒரு பரங்கி நாட்டிலிருந்து ஜேப்படி / வழிப்பறி / கொள்ளை பயிற்சி எடுத்த இளம் பரங்கியை எடுத்துக்காட்டாகக் கூறும். 😝

நம்மை மொட்டை போட்ட இரண்டு கூட்டங்களை திருஞானசம்பந்தரும் ஆதிசங்கரரும் அன்றே விரட்டியடித்து விட்டனர். இல்லையெனில், ஒன்று "போதிசத்வர்" என்று படம் காட்டும். இன்னொன்று "மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்" என்று புருடா தள்ளும். 😀

இந்த நிலை மாறவேண்டும்!!

இனி, வீரம், தியாகம், சமயோசிதம், அறிவுகூர்மை, திட்டமிடுதல், பெரியோரை மதித்தல் என அனைத்திற்கும் இந்த மண்ணில் வாழ்ந்த தமிழ் முன்னோர்களையே எடுத்துக்காட்டாக கூறப்படும் நிலையை உருவாக்கவேண்டும். 😍

posted from Bloggeroid

🔥வந்தே மாதரம்🔥 எனும் உயிர்ப்புமிக்க முழக்கத்தை அளித்த திரு. பங்கிம் சந்திர சட்டர்ஜி பற்றி....


(தினமலர் - பட்டம் - சென்னை - 27/06/2016)

posted from Bloggeroid

Monday, June 27, 2016

🌸 திருநீற்றைப் / விபூதியைப் பற்றி சில தகவல்கள் 🌸

சைவச் சின்னங்களுள் ஒன்று. திருநீறு எனில் "மதிப்பிற்குடைய / ஞான செல்வம்" (திரு+நீறு). விபூதி எனில் "மேலான செல்வம்" (வி+பூதி). இது, இரு வகையில் மேலான செல்வத்தைக் குறிக்கும்.

🔯 தத்துவ ரீதியில்:

*ஒரு பொருள் முழுவதும் எரிந்து முடிந்த பிறகு, சில சமயம், அதன் உருவம் கலையாமல் சாம்பல் அப்படியே இருக்கும். உருவம் கலையாதிருப்பதால் மட்டும் அப்பொருளினால் எந்த உபயோகமும் கிடையாது. அவ்வாறே, ஞானமடைந்த பின் (சிவ நிலையை அடைந்த பின்), ஞானிக்கு (சிவனுக்கு) இவ்வுலகம் எரிந்து முடிந்து சாம்பல் உரு கலையாமல் இருப்பது போல் தோன்றும் (தோற்றமாத்திரமே; இருப்பற்றது; சுயப்பிரகாசமற்றது). இக்காரணத்தினால் தான் "சிவன் சுடுகாட்டில் வாழ்பவர்" எனப்படுகிறார்!!*

அதாவது, ஞானிக்கு (சிவனுக்கு) தன்னைத் தவிர மற்றனைத்தும் கலையாத சாம்பால் உரு போன்று, கானல் நீர் காட்சி போன்று, கனவு போன்று , பொய்யென்றுத் தோன்றும்!

🔯 மருத்துவ ரீதியில்:

பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் விபூதி நல்ல கிருமிநாசினி!

மறைந்த மராத்திய பேராசிரியர் தபோல்க்கரின் ஆய்வின்படி, முழுவதும் எரிந்து முடிந்த பின் கிடைக்கும் சாம்பலில் இருக்கும் மேன்மையான சத்துக்கள் (மேலான செல்வங்கள்) மட்டுமே மண்ணிலிருந்து தாவரங்களால் உறிஞ்சப்பட்டவை. இவை அளவில் மிகக்குறைவாகவே இருக்கும். நம் உடலுக்கும் மிகக் குறைவாகவே தேவைப்படும். நாம் உடலில் பூசிக்கொள்ளும் போது தோலின் மூலம் சிறிதளவு அந்தச் சத்துக்கள் ஈர்த்துக் கொள்ளப்படும். அது போதுமானது.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

இந்த மருத்துவ ரீதியான பயன் நமக்கு உடனடியாகப் புரியும். தத்துவ ரீதியான பயன்? ஞானிக்கு (சிவனுக்கு) உலகம் எப்படித் தோன்றினால் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?

*நம் சமயத்தில் இருக்கும் பெரும்பாலான சமாச்சாரங்களைப் போன்று தான் இதுவும்: விபூதியை இட்டுக் கொள்வது, நம்மைப் பார்த்து மற்றவர்களும் மற்றவரைப் பார்த்து நாமும், மேற்சொன்ன பேருண்மைகளை மறவாதிருக்கவும் & இடைவிடாது சிந்திக்கவும் தான்!*

இந்த பேருண்மைகளை என்றும் மறவாது, தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருத்தால் இறுதியில் அதுவாகவே (சிவனாகவே) மாறிவிடுவோம் ("எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்ற கோட்பாட்டின் படி).


💠 "மந்திரமாவது நீறு" என்கிறார் ஆளுடையப்பிள்ளையார். மந்திரம் எனில் சிந்தனையைத் தூண்டக்கூடிய கருவி. இது சொல், சொற்றொடர், பொருள், அடையாளம், ஜீவன், எண்ணம், செயல் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகையால், பிள்ளையாரின் வார்த்தைகளை இப்படி மாற்றலாம்: "சிந்திக்கத் தூண்டுவது நீறு". எதை சிந்திக்கத் தூண்டுகிறது நீறு? *மேற்சொன்ன பேருண்மைகளை!!*.

💠 "விபூதியை கீழே சிந்தாதே" என்பர் நம் பெரியோர். இதுவும் தத்துவ ரீதியில் சொல்லப்பட்டதே. "பாடுபட்டு அடைந்த மேலான ஞானத்தை இழந்து விடாதே" என்பதே இதன் பொருள். ஞானம் என்பது அறிவு. என்ன அறிவு? "நான் இவ்வுடலல்ல என்ற *அனுபவ* அறிவு". இவ்வனுபவம் கிட்டும் போது உலகம் இருப்பற்று போகும் - கலையாத சாம்பல் உரு / சுடுகாடாகி விடும். இந்த நிலையை அடையும் ஜீவன் சிவனாகிறான். இப்படி சிவநிலையை அடைந்த பின்னும் சிலர் மீண்டும் உலகமாயையில் சிக்கிவிடுவர். ஞானானுபவம் ("நான் இவ்வுடலல்ல" என்ற அனுபவம்) ஸ்திரமாகும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பார் பகவான் ஸ்ரீரமணர்!


பகவானின் எச்சரிக்கைக்கு உதாரணமாக மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை சிறிது பார்ப்போம். திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயிலில்) முதல் ஞானானுபவம் பெற்று பின்னர் இழந்துவிடுகிறார் (விபூதியை சிந்திவிட்டார்!!). பின்னர், அழுதுபுலம்பி அவ்வனுபவத்தைத் தேடி பல இடங்களுக்குச் செல்கிறார். இரண்டாவது முறையாக திருக்கழுகுன்றத்தில் சிறிது நேரம் கிடைக்கப் பெறுகிறார். இறுதியில், சிதம்பரத்தில் அவரது ஞானம் (சிவானுபவம் / ஞானானுபவம் / இறையனுபவம்) ஸ்திரமாகிறது. சீவத்தன்மை முற்றிலும் நீங்கப்பெறுகிறார் - சிவமாகிறார். இதையே "இறைவனோடு கலந்தார்" என்கிறோம்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

விபூதியை வாங்குவதிலும் மிகுந்த கவனம் தேவை! நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட திருநீறே பூசிக்கொள்ள உகந்தது. தமிழகத்தில் மிகப் பிரபலமான விபூதி தயாரிப்பு நிறுவனம், பழைய காகிதங்களையும் மற்றும் குப்பை காகிதங்களையும் வாங்கி, எரித்து சாம்பலாக்கி பின்னர் அதனுடன் வாசனை வேதியல் பொருட்களைச் சேர்த்து "ஸ்பெஷல் விபூதி" என்று மக்களை ஏமாற்றுகின்றது!! ஆகையால், விசாரித்து வாங்கவும். நன்கு தெரிந்த அர்ச்சகரிடமிருந்து அபிஷேக விபூதி பெற்றாலும் கூட, தயவு செய்து பிரசாதமாக வாயில் போட்டுக் கொள்ளவேண்டாம்.

🔥 வெளிப்புறத்தில் தரமான திருநீற்றைப் பூசி மருத்துவப் பயன்களைப் பெறுவோம்
🔥 உள்புறத்தில் சரியான தவமியற்றி இறைவனடி எனும் திருநீற்றினைப் பெறுவோம்
🔥 பிறப்பறுப்போம்
🔥 பிறவிப்பயனையடைவோம்

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

posted from Bloggeroid

Friday, June 24, 2016

உலகக் கொள்ளையர்கள் ஐரோப்பிய கூட்டணியிலிருந்து ஓட்டம்!! 😘😘😘


இந்தப் பரங்கி தாசிமகன்களும் அவர்களது தாசிகளும் உலகம் முழுவது நுழையலாம். நுழைந்த நாட்டின் மொழி, சமய, கலாச்சார, சமூக மற்றும் தொழில் அமைப்புகளை சீர்குலைக்கலாம். செல்வங்களைக் கொள்ளை அடிக்கலாம். ஆனால், பிழைப்பிற்காகக் கூட யாரும் இவர்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது!! 😠

இன்று வரை இந்த தாசிமகன்களின் நாட்டில் பொது சேவைகள் அன்று இந்தியாவிலிருந்து கொள்ளையடித்த பணத்தினால் தான் நடக்கிறது. இந்த "ஊரான் காசில் அனுபவிக்கும் சுகம்" இன்னும் நீண்ட நெடுங்காலம் தங்களது தாசி பரம்பரைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற சுயநலமும், ஏனையோரை உள்நுழைய விட்டால் இந்த "சுகம்" நீண்ட காலத்திற்கு கிடைக்காது என்ற பயமும் தான் காரணங்கள்.

ஏன் பயப்படவேண்டும்? பணம் திர்ந்தவுடன், அன்று போல் மீண்டும் ஜேப்படி, வழிப்பறி, கொள்ளை என்று அவர்களது குலத்தொழில்களில் இறங்க வேண்டியது தானே! 😉😂

posted from Bloggeroid

🌋 தனியாருக்கு ஒரு நியாயம்! அரசாங்கத்திற்கு ஒரு நியாயம்!! 🌋


(தினமலர் - சென்னை - 25/06/2016)

இதே கவனக்குறைவு தனியார் மருத்துவமனையில் நடந்திருந்தால்....

அது கடைக்கோடி ஊழியனின் கவனக்குறைவாக இருந்தால் கூட, உடனடியாக முதலாளி கைது செய்யப்பட்டிருப்பார். அப்பகுதி "ஊருக்கு உழைப்பவர்" உள்ளே நுழைந்திருப்பார். மருத்துவமனையை சின்னாபின்னமாக்கியிருப்பர். மொத்த சொத்தையும் பிடுங்கியிருப்பர். காலத்திற்கு அவரிடம் பணம் பிடுங்கிக்கொண்டிருப்பர்.

நியாயம் என்ற வார்த்தை பிறந்த பூமியின் நிலை இது!!

😠😠😠

posted from Bloggeroid

🌼 அகரத்தில் ஓர் இராமாயணம் 🌼

From WhatsApp:

*ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?*

இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.

*இதுவே தமிழின் சிறப்பு*

அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

*உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்*

posted from Bloggeroid

Thursday, June 23, 2016

"இங்கே அம்மணம்! அங்கே பட்டாடையா!!"


posted from Bloggeroid

🌟 இயற்கைக்கு முழுமையாகத் திரும்பிய #சிக்கிம் 🌟



⚡ தமிழகம் இயற்கைக்குத் திரும்புவது எக்காலம்
⚡ மத்திய மானியத்தை வேண்டாம் என்பது எக்காலம்
⚡ இலவசங்களை வெறுப்பது எக்காலம்
⚡ டாஸ்மாக் கடைகளை உடைப்பது எக்காலம்
⚡ மெகாத் தொடர்களிலிருந்து வெளிவருவது எக்காலம்
⚡ அயல் மொழி, மத, கலாச்சாரங்களுக்கு சாவுமணி அடிப்பது எக்காலம்
⚡ போலி திராவிட அரசியல்வியாதிகளுக்கு பாடை கட்டுவது எக்காலம்
⚡ அனைத்தையும் குட்டிச்சுவராக்கிய இடஒதுக்கீடு எனும் தேசகொல்லியை கொல்வது எக்காலம்

posted from Bloggeroid

Wednesday, June 22, 2016

கலீலியோ தான் கண்டுபிடித்தானாம்!! 👎🏼👎🏼👎🏼


(தினமலர் - சென்னை - 22/06/2016)

முதல் பத்தியை இவ்வாறு படிக்கவும்: "சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, சூரியன் உட்பட அண்டத்தில் உள்ள அனைத்தும், பூமியை மையமாகக் கொண்டே சுற்றுகின்றன என்ற கருத்தைத்தான், *ப ர ங் கி* உலகம் ஏற்றுக் கொண்டிருந்தது."

பரங்கி என்ற வார்த்தையை உரிமையுடன் விட்டுவிடுவார்கள்! ஏனெனில், இன்றும் நம்மை ஆள்வது பரங்கிகள் தானே!! பரங்கிதாசிமகன்கள் அங்கிருந்து "ஆடுறா ராமா" என்றால் இங்கே நாம் ஆடவேண்டும்!!! 😤

பரங்கி நாடுகளுக்கிடையே சண்டை நடந்தாலும், அது உலகப் போராக சித்தரிக்கப்படும். பரங்கிகள் "நீ சூப்பர்மேனைப் போல் இரு" என்றால் நாமும் "என் ரோல் மாடல் சூப்பர்மேன்" என்று ஆமென் போடவேண்டும். பரங்கிகள் நமது சமய நூல்களைப் படித்துவிட்டு "நீ நீயாக இரு" என்றால் நாமும் புல்லரித்து T-சர்ட்டில் "Just Being Myself" என்று பதிப்பித்து போட்டுத் திரியவேண்டும். 😠

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வேளையிலும் திருந்தாத ஓநாய்கள் இவர்கள்!! 😡

👊🏼 ஞாயிறு என்ற தமிழ் வார்த்தையின் பொருள் "நடுவில் தொங்குவது / இருப்பது" (ஞா + இறு). இந்த வார்த்தை சிலப்பதிகாரத்தில் வருகிறது ("ஞாயிறு போற்றுதும்... ") எனில் அன்றே அல்லது அதற்கு முன்னரே இதை நம்மவர்கள் கண்டுபிடித்து விட்டனர் என்பது தெளிவு.

👊🏼 இங்ஙனமே, எப்போது கோயில்களில் நவக்கிரக அமைப்பை ஏற்படுத்தினர் என்று ஆராய்ந்தாலும், அது இந்தப் பரங்கிகளுக்கு முன்னரே என்று தான் விடை கிடைக்கும்.

👊🏼 மேலும், "ஜோதிடத்தின் தந்தை" என அழைக்கப்படும் பராசர மகரிஷியின் காலம் எதுவென்று ஆராய்ந்தாலும் அதுவும் இந்தப் பரங்கிகளுக்கு முன்னரே என்று தான் விடை கிடைக்கும்.

எவ்வளவு திமிர் இருந்தால், முழு பூசணிக்காயை அப்படியே சோற்றில் வைத்து விட்டு, "தேவாலயம் தடை விதித்தது" என்ற சென்டிமென்ட் அஜினமோட்டோவை வேறு கலந்து கொடுப்பார்கள்!! 😠😠

உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் சில வேதியல் பொருட்களை தடை செய்து இன்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அறிவுக்கு கேடு விளைவிக்கும் இது போன்ற புருடாக்களை எப்போது தடை செய்து அரசாணை வெளியிடப் போகிறார்கள்? பரங்கிதாசிமகன்கள் ஒப்புதல் அளித்த பின்னரா? 😏

posted from Bloggeroid

Tuesday, June 21, 2016

இதிலும் நாம் தான் முன்னோடிகளா!! 😉


(தினமலர் - சென்னை - 20/06/2016)

இந்திய தொழிற்சங்க சட்டம் இயற்ற வைத்தது முதல் நோக்கியா நிறுவனத்தை இழுத்து மூடவைத்தது வரை நாம் தொட்ட உச்சங்கள் பல போலிருக்கிறது. 😀

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்று படம் காட்டிக்கொண்டு, "உழைப்பவரே உயர்ந்தவர்" என்று உணர்வுகளைத் தூண்டி விட்டுக்கொண்டு, சுயநலத்துக்காகவும் பேராசையாலும் "இவர்கள்" அழித்த நிறுவனங்களின் எண்ணிக்கை பல்லாயிரம் என்றால், அழிந்த தனி மனிதர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் என்றால், இழந்த வருவாய் சில லட்சம் கோடிகளாவது இருக்கும்!! 😠

"இவர்கள்", ஜார்ஜ் ஆர்வெல்லின் புகழ் பெற்ற #Animal_Farm கதையில் வரும் பன்றித் தலைவர்களுக்கு சமம்!! 😛

அக்கதையின் சாராம்சத்தைக் கீழே இணைத்துள்ளேன்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

Animal Farm begins with a very drunk Mr. Jones (owner of Manor Farm) doing a really crummy job of, you know, his job. Luckily, there's a wise pig on the farm: Old Major. Old Major encourages the neglected animals to rebel and run the farm themselves with one important qualification: EVERYONE SHOULD BE EQUAL!

Then he dies.


This seems like a grand idea to everyone except Benjamin, a cynical donkey whose main job in life is to be, well, cynical. So, they rebel. The pigs, being the smartest animals, naturally take the leadership role. So much for that equality business. So much for Old Major's vision of a peaceful coup, too, because there's immediate conflict between two pigs, Napoleon and Snowball. Napoleon wants to sit around and be in charge of everything, while Snowball wants to teach the other animals and build a windmill. Obviously, Snowball's plan is way better, so he wins.

Not. Instead, Napoleon uses his private army of nine ferocious and enormous dogs to become the All Powerful Dominant Boss Leader Chief Pig. Okay, he doesn't call it that, but you know it's in the back of his mind somewhere.

With Snowball out of the picture, the other pigs blame everything on him. They exploit the other animals shamelessly, breaking all the rules about equality that they had established after the Rebellion. Life on the farm gets worse and worse, the animals forget old Major's original dream, and the pigs make some poor management decisions when dealing with the neighboring farms. The culminating miserable moment comes when the pigs send Boxer, a hardworking and loyal horse who is ready for retirement, to his death.Ouch.


In short, the pigs are starting to look a lot like the horrible human owners that we started with at the beginning of this whole mess, walking on two legs and everything. In fact, they may even be worse.

Hm. It looks like grumpy old Eeyore—we mean, Benjamin—was right after all! 😂😂

posted from Bloggeroid

"சிலம்பு செல்வர்" ம.பொ.சி


(தினமலர் - பட்டம் - சென்னை)

posted from Bloggeroid

Monday, June 20, 2016

சிலை மீட்பில் சிங்கப்பூர் தமிழர் 👏👍


(தினமலர் - சென்னை - 19/06/2016)

மனிதர் சிங்கப்பூரில் இருப்பதால் தப்பித்தார். இங்கு இருப்பவராக இருந்தால்...

வள்ளலார் திருவலிதாயத்தில் (பாடி, சென்னை) திருவல்லீஸ்வரப் பெருமானின் மேல் சாற்றப்பட்டிருந்த கிழிந்த வேட்டியைக் கண்டு மனம் நொந்து பாடியதைப் போல், பாடிக்கொண்டோ அல்லது மனதினுள் நொந்துகொண்டோ வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருப்பார்!

அல்லது, இது போல் இடுகைகளை எழுதிக்கொண்டிருப்பார்!! 😉😂

posted from Bloggeroid

Sunday, June 19, 2016

🔥 ஸ்ரீ & வராக ஆயுதங்கள் 🔥

இன்றைய நிலையில் முகம்மதிய காட்டுமிராண்டிகள் மீண்டும் படையெடுத்து வந்தால் அவர்களை தடுக்கவும், மீண்டும் தலைதெறிக்க ஓட வைக்கவும் இரண்டு யுக்திகள் உள்ளன:


(தினமலர் - சென்னை - 19/06/2016)

1. வீர பெண்களால் ஆன படையை முன்னிருத்தி தாக்குதல். இந்த முறையைத் தான் ஈராக்கின் குர்தி (யாசிடி) இன மக்கள் தற்போது உபயோகப்படுத்துகின்றனர். இவர்கள் இந்துக்களே! இவர்களது வழிபாட்டுமுறைகளும், சடங்குகளும், மதச் சின்னங்களும் நம்மோடு பலவிதத்தில் ஒத்துப்போகின்றன. "நாங்கள் இந்துக்களே! இந்து சகோதரர்களே எங்களுக்கு உதவுங்கள்!!" என்று எழுதிய பதாகைகளைக் கையில் ஏந்தி உதவி கேட்பது போன்ற படங்களை இணையத்தில் பார்த்திருக்கலாம். (அருகில் இருக்கும் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஆட்சியிலிருந்த நரமாமிச உண்ணிகளுக்கு மீண்டும் 89 இருக்கைகளைக் கொடுத்த பொன்னான நாடு இது. 😠 இவர்களிடம் உதவி எதிர்பார்ப்பதை விட தம் பெண்டிரை நம்பலாம் என்று களமிறங்கிவிட்டனர் போலும்.)

2. பெரும் பன்றிகளை முன்னிருத்துதல்! 🐷🐷🐷

விளையாட்டில்லை!! 😀 இன்று ஹங்கேரி இவர்களின் ஊடுருவலைத் தடுக்க இந்த யுக்தியைத் தான் கையாள்கிறது.


(திருப்பதி ஸ்ரீஆதிவராகர்)

கொங்கண சித்தரின் சமாதித் தலமான திருப்பதியைத் தாக்க முடிவு செய்து தக்காண பீடபூமி சுல்தான்கள் ஒற்றர்களை அனுப்பியபோது, அவர்களை விரட்டியடிக்க, அங்கிருந்த பட்டர்கள் உபயோகப்படுத்தியது பன்றிகளைத் தான்! அவர்கள் வரும் வழிகளில் பன்றிகளை உலவவிட்டார்கள். 😂 அவைகளைக் கண்டு அருவருப்படைந்த ஒற்றர்கள் மீண்டும் திருமலை வர விரும்பாததால் அடிவாரத்தில் முகாமிட்டிருந்த சுல்தானின் தளபதியிடம் பொய்த் தகவலைக் கூறினர் ("மேலே சிறு கோயில் தான் இருக்கிறது. செல்வ செழிப்பில்லாதது.") அவனும், ஏன் மெனக்கெட வேண்டும் என்று வேறிடம் சென்றுவிட்டான். 😜 இதற்கு நன்றிக்கடனாக எழுப்பப்பட்ட கோயில் தான் ஸ்ரீவராகமூர்த்தி திருக்கோயில். பக்தர்கள் மனதில் என்றென்றும் இந்நிகழ்வு நிலைத்திருக்க வேண்டுமென்று தான் பெரியோர்கள் பெருமாளை தரிசிக்கும் முன் ஸ்ரீவராகரை தரிசிக்கச் சொன்னார்கள்!!

திப்பு சுல்தானால் பல கொடுமைகளுக்கும் கட்டாய மதமாற்றத்திற்கும் உள்ளான கர்நாடகாவின் குடகு பகுதியில் உள்ள மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள பன்றிகளை வளர்க்க ஆரம்பித்தனர். அப்பாதுகாப்பு உணர்ச்சியின் தொடர்ச்சியாக இன்றும் அம்மக்கள் பன்றிகளை வளர்ப்பதைக் காணலாம்.

posted from Bloggeroid

Saturday, June 18, 2016

🌼 வீர வாஞ்சிநாதன் உயிர்தியாகம் செய்த நாள் (1911 - ஜூன் 17) 🌼


(தினமலர் - சென்னை - 17/06/2016)

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சென்னைக்கு ஒருமுறை வந்த போது தனது உதவியாளரிடம் இரண்டு நல்ல ரக புடவைகள் வாங்கி வரச் சொல்லி உத்தரவிட்டார்.

உதவியாளருக்கு குழப்பம்.

தேவர் பிரம்மச்சாரி. அவர் எதற்கு புடவை வாங்க - அதுவும் சென்னையில்.

குழப்பத்தோடு புடவை வாங்கி வர, கூடவே கொஞ்சம் பழங்கள் வாங்கி வந்தார்.

தேவர் உதவியாளரோடு காரில் ஏறி சென்னை மயிலாப்பூரில் ஒரு சந்துக்கு முன் காரை நிறுத்தச் சொல்லி - உதவியாளர் புடவை மற்றும் பழ தட்டுடன் பின் தொடர சந்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நொடிப் பொழுதில் நுழைகிறார்.

அங்கே அமர்ந்திருந்த பெண்மணியின் காலில் தேவர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.
உதவியாளரிடமிருந்து புடவை/பழ தட்டை வாங்கி தன் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை புடவையின் ஊடே நுழைத்து அந்த பெண்மணியின் முன்னே சமர்பித்து சற்று தள்ளி அமர்ந்து நலம் விசாரித்து

"எந்த உதவி எப்போது தேவை பட்டாலும் தன்னை அணுகலாம்" என தேவர் சொல்ல

"அந்த மாதரசி ,'செய்திருக்கும் உதவிகளே போதுமானது - அதிகமும்' " என சொல்கிறார்.

சில நிமிடங்கள் கழிய - தேவர் மீண்டும் எழுந்து பெண்மணியின் கால்களில் விழுந்து வணங்கி விடை பெறுகிறார்.

தேவரின் உதவியாளருக்கு மண்டையே வெடித்து விடும் நிலை!

ஓரிரு நிமிட மெளனமான வாகனப் பயணம். பின்னர்,

"ஐய்யா, அந்த பெண்மணி யார்?" - உதவியாளர்

"என்தாய்" - தேவர்

"பார்த்தால் ஐய்யர் பெண்மணியாக" - உதவியாளர்

"ஆம். என் தாய். வீர வாஞ்சிநாதன் மனைவி" - என்று தேவர் உணர்ச்சியுடன் கண்கலங்கி சுதந்திர போராட்ட சிந்தனைக்குள் மூழ்கினார்...

"தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்" என வெறும் வார்த்தைகளால் கூறாமல் அதன்படி வாழ்ந்து காட்டியவர் தேவர் அவர்கள்.

"தென்னகத்து பகத்சிங்" என்று போற்றப்பட்ட வீர வாஞ்சிநாதன் மனைவிக்கு சுதந்திரத்துக்குப்பின் நேரு அரசால் குறைந்த பட்ச கெளரவம் கூட கிடைக்கவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட போது அது இனி தேவையில்லை என தன்மானத்துடன் ஏற்க மறுத்தவர் திருமதி. வாஞ்சி.

தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு அப்போதே திராவிட இயக்கங்களால் நன்கு விதைக்கப்பட்டு இருந்தது. அதனால் தமிழகத்திலும் அவர்களின் தியாகம் மறைக்கப்பட்டது.

லண்டனில் இந்தியா ஹவுஸ் மாளிகையில் வீரசாவர்கரின் ஆயுதப் போராளி இயக்கத்தில் (Free India Society) தளபதியாக விளங்கிய வ.வே.சு. ஐயர் பாண்டிச்சேரியில் சுதந்திரப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தார்.

(இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன)

அவரிடம் ஆயுதப்பயிற்சி பெற்றவரே வீர வாஞ்சிநாதன்.

கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி-யை செக்கிழுக்க வைத்த திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் என்பவனை மணியாச்சி ரயில் நிலையத்தில் 1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு சுட்டுக் கொன்றுவிட்டு, தன் இயக்கத்தினரை பாதுகாக்க தானும் தன் வாய்க்குள் துப்பாக்கியை செலுத்தி சுட்டு வீரமரணம் அடைந்தார். 💐

அவரது உடலில் சட்டைப்பையில் ஒரு கடிதம் அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்தது. 📰 அக்கடிதத்தை படித்துப்பாருங்கள்......

"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்.

"ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

"எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்,

"கேவலம் ஒரு அன்னியனாகிய ஐந்தாம் ஜார்ஜ் (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது.

"அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம்.

"அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.

"இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.

- இப்படிக்கு, R. வாஞ்சி அய்யர்"


தேசத்தை நேசிப்பவர்கள் அனைவரும் வீர வாஞ்சிநாதன் தியாகத்தை நினைவு கொள்ளுங்கள்! 🙏

(மூலம்: திரு. ஆகாஷ் ரெட்டி பகிர்ந்த ஒர் இடுகையினை சிறிது மாற்றி மீண்டும் பகிர்ந்துள்ளேன்)

posted from Bloggeroid

"ஐந்து பெற்றால்...." - ஒரு அறிவியல் விளக்கம்


(மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=902629673181286&id=100003027847087)

posted from Bloggeroid

💥 தமிழனின் துலாக்கோல் தொழில்நுட்பம் 💥


இந்தப் படத்தில் இடதுபுறத்திலிருப்பது 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிற்பம். பக்கத்தில் இந்நாளைய புகைப்படம். இந்தக் கால இடைவெளியை கரைத்து இரண்டையும் இணைக்கும் ஒத்த அம்சம் ஒன்று இரண்டிலும் உண்டு! பொருளை நிறுக்க பயன்படும் துலாக்கோல் தான் அது!!

சிற்பம் சொல்லும் கதை: இருக்கையில் அமர்ந்திருப்பது சிபி சக்கரவர்த்தி. காலடியில் புறா. அடுத்து அமர்ந்த நிலையில் தொடைக்கறியை அறுத்தெடுக்கும் பணியாள். துலாக்கோலை கையில் பிடித்து தொடைக்கறியை எடைபோடுபவன். பின்புலத்தில் சிலர். இது தான் இந்த சிற்பம் விவரிக்கும் காட்சி.

எடைக்கல் இல்லாமல் பொருளை எடை போடும் ஒத்தத்தட்டு தராசு தொழிற்நுட்பத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்ததற்கு சாட்சியம் இந்த சிற்பம்!!

இந்தத் தொழிற்நுட்பம் தான் இன்றைய ரயில் நிலையம், சரக்குப் பதிவு அலுவலகங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் Platform Scale தயாரிப்புக்கு மூலம்! இதன் நீட்சி தான் முழு லாரியையே எடைபோடும் Weighbridge!
இன்றும் நமது கிராமங்களில் தோட்டதுக் காய்கறிகளை எடைபோடவும், கடப்புறத்தில் கருவாடு மீன் நிறுத்தவும், தேரிக்காட்டில் கருப்பட்டி தூக்கவும் இந்த துலாக்கோல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணி அறுபடாமல் நமது வாழ்வுமுறையில் தொடர்ந்து கொண்டிருக்கும் துலாக்கோல் ஓரு விந்தை தான்!!

இதைப் பற்றி இன்றைய மெக்காலே படிப்பு படித்த மேதாவிகளிடம் கேட்டுப்பாருங்கள்: "இந்தப் பரங்கிதாசிமகன் கண்டுபிடித்தான்", "அந்தப் பரங்கிதாசிமகன் கண்டுபிடித்தான்" என "மொழிகளில் தாசியாகிய" ஆங்கிலத்தில் "பீலா" (அல்லது "பீட்டர்") விடுவார்கள். 😛😜😝

(மூலம்: https://plus.google.com/+DWARAKANATHREDDYK/posts/ecxWN8c9ggj)

posted from Bloggeroid

Friday, June 17, 2016

🔥 ஆதார் - நவீன ரௌலட் சட்டம் 🔥


(தமிழ் இந்து - சென்னை - 17/06/2016)

உச்ச நீதிமன்றம் எவ்வளவு தான் சூடு வைத்தாலும், சளைக்காமல் மத்திய அரசாங்கங்கள் ஆதார் எண்ணை எல்லா இடங்களிலும் நுழைத்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு மேல் வளர்ந்த தலைமுறையை நிர்பந்திக்க முடியாது என்பதால், அடுத்த தலைமுறைகளை குறி வைத்து பள்ளிகளுக்கு சென்றுவிட்டன. எந்த எதிர்கட்சியும் இது பற்றி பேசாமல் இருப்பது, இவர்கள் கூட்டு களவாணிகள் என்பது நிரூபணமாகிறது!! 😡

மேலும், தமிழக அரசு (ஆண்ட , ஆண்டு கொண்டிருக்கின்ற மற்றும் ஆட்சி கனவில் இருக்கின்ற அனைத்து சாக்கடைகளும் அடக்கம்) ஒரு திட்டத்தை மனமுவந்து முனைப்புடன் செயல்படுத்துகிறது என்றால், அதை செயல்படுத்துவதிலோ அல்லது எதிர்காலத்திலோ அவர்களுக்கு கொள்ளை லாபம் என்று பொருள். 😉

ஆதார் திட்டத்தை எதிர்த்து என் பொதுநல வழக்குகள் போட்டார்கள்? 😕

நமது அரசாங்கங்கள் பெரும்பாலும் தகுதியில்லாத மனிதர்களால் ஆனவை. அவற்றை வழி நடத்தும் அரசியல்வியாதிகளோ பெரும்பாலும் ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் அல்லது தேவைப்பட்டால் பெற்றத்தாயையும் விற்கத் தயங்காதவர்கள். இப்படிப்பட்ட ஒரு அநியாய வியாபார நிறுவனத்தின் கையில் நமது ஒட்டுமொத்த ஜாதகமும் ஒரு பொத்தானை அடித்தவுடன் தோன்றினால்..... 😱😨

posted from Bloggeroid

Thursday, June 16, 2016

😈 தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் தொழிற்சங்கம் துவங்க வாய்ப்பு 😈


(தினமலர் - சென்னை - 13/06/2016)

சாதாரணமாக, தமிழக வரலாற்றில் ஆட்சிக்கு வந்தவுடன் தி.நகரில் கட்டிடங்கள் சீரமைப்பு, பள்ளிக் கட்டண சீரமைப்பு என ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்தி தேர்தல் செலவை மீட்டுக்கொள்வர். இம்முறை ஒரு மாற்றத்திற்காக தகவல் தொழில்நுட்பத்துறையிலும், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் கை வைத்துள்ளனர் என நினைக்கிறேன். இந்த கணக்கு சரியெனில், கோடிகள் இடம் மாறியவுடன் "இயல்பு" நிலை திரும்பி விடும். இந்த கணக்கு பொய்யெனும் பட்சத்தில் (அதாவது, தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டால் 😍😍😍) ....

😊 அரசியல் கட்சிகளின் மாத வருமானம் அதிகரிக்க வாய்ப்பு
☺ சங்க நிர்வாகிகள் எனும் ஜீவராசிகள் நேர்முகமாக இக்காலத்திற்கும், மறைமுகமாக வருங்கால சந்ததியினருக்கும் சொத்து சேர்க்க வாய்ப்பு
😀 "உழைப்பாளர்களின்" வேலைப்பளு வெகுவாக குறைய வாய்ப்பு
😁 தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு நிறுவனங்கள் தலை தெறிக்க ஓட வாய்ப்பு
😂 மொத்தத்தில், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு சங்கு ஊத வாய்ப்பு (ஆனானப்பட்ட நோக்கியாவிற்கே சங்கு ஊதிய "வாளோடு தோன்றிய மூத்த குடி" ஆயிற்றே 😉).

😛😜😝

posted from Bloggeroid

"Indians & Dogs are not allowed" - JRD டாடா -வை கொந்தளிக்க வைத்த வரி


"எங்க சாதி/சமூக/மத மக்கள் மட்டும் வீடு/நிலம் வாங்க/விற்க/வாடகைக்கு விட/வாடகைக்கு எடுக்கத் தொடர்பு கொள்ளவும்" என விளம்பரபடுத்தினால் ஏதும் தொந்தரவுகள் வரலாம். அதனால், இப்படி ஒரு யுக்தி!!

பி.இ.: ஆனால், இந்த யுக்தியை இந்துக்கள் உபயோகப்படுத்தினால் போலி மதசார்பின்மைவாதிகளும், பெற்றத்தாயை விற்கத் துடிக்கும் கன்னையாகுமார் வகையறா ஊடகங்களும் "நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே" என ஏ.பி.நாகராஜன் தோற்கும் வகையில் நடிப்பர்!! 😂

posted from Bloggeroid

Monday, June 13, 2016

😛 பரங்கி தாசிமகன்களின் சுட்டபிடிப்புகள் 💩


(தினமலர் - பட்டம் - சென்னை - 13/06/2016)

மொழி என்பதே குறியீடு தான்! மனிதன் தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை பதிவு செய்ய முதலில் உபயோகப்படுத்தியது குறியீடுகளைத் தான்.

💥 கணித மேதை ஆர்யபட்டா எப்படி சூத்திரங்களைக் கையாண்டிருப்பார்? "அங்க கொஞ்சம் சேத்துக்கோ; இங்க கொஞ்சம் கொறச்சுக்கோ" என்றா? 😀

💥 கல்லணையை கரிகாலன் கட்ட எந்தக் கணிதமும் தேவைப்பட்டிருக்காதா? வெறுமனே மீசையைத் திருகிக்கொண்டு, இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, "அந்தக் கல்ல அங்கப் போடு; இந்தக் கல்ல இங்கப் போடு" என்று உதார் மட்டும் காட்டி வேலையை முடித்தாரா? 😁

💥 தஞ்சை பெரிய கோயிலை எப்படிக் கட்டியிருப்பார்கள்? "அந்தக் கைய கொஞ்சம் முன்ன இழு; இந்தக் கைய அப்படிக்கா தள்ளு" என்றா? 😂

எல்லாப் பெரிய கோயில்களிலும் அவர்கள் உபயோகப்படுத்திய அளவுகள் மற்றும் சூத்திரங்களை செதுக்கி வைத்திருப்பார்கள். அதில் ஒன்றைப் பார்த்திருந்தாலே இந்த ஆசிரியர் இப்படிப் பாடம் எடுத்திருக்கமாட்டார்! இப்படி பெருமைப் பட்டிருக்கமாட்டார். வருத்தப்பட்டிருப்பார்!!

இந்தப் பரங்கி தாசிமகன்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் சுமார் 1300 ஆண்டிற்குப் பின்னரே! அதாவது இந்தப் பரங்கிகள் முகம்மதியக் காட்டுமிராண்டிகளைத் தாண்டி புது நீர் வழித்தடங்களை நம் மாலுமிகளை வைத்துத் தெரிந்து கொண்டு, இங்கு வந்து சேர்ந்து, ஜேப்படி, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து என கொஞ்சம் கொஞ்சமாக "முன்னேறிய" காலத்தில் நம் முன்னோர்களிடமிருந்து தெரிந்துகொண்ட / திருடிய விஷயங்கள் தான் அவர்களது "கண்டுபிடிப்புகள்". 😝 உண்மையில் அவைகளை திருடியபிடிப்புகள் அல்லது சுட்டபிடிப்புகள் என்று தான் அழைக்க வேண்டும். 😘😎💪

posted from Bloggeroid

💥 Birthdays are Deathdays 💥


Bhagavan Sri Ramana Maharshi was born on December 30, 1879. His birthday, however, is observed according to the Tamil calendar in Maargazhi when the moon is with the star Punarvasu.

When it was first proposed in 1912 to celebrate His birthday, Bhagavan expressed his objection in the form of the following two verses. Even so, his disciples were not deterred and the Jayanti day festival continues to be one of the great annual events at the Ashram.

1. You who wish to celebrate a birthday, inquire first who was born. One's true birthday is when one enters into the Eternal Being which shines forever without birth or death

2. Of all days on one's birthday one should mourn one's fall (into samsara). To celebrate it as a festival is like adorning and glorifying a corpse. To seek one's Self and merge in it is wisdom.


Till we attain certain maturity, till the Western venom has its effect, we think life is celebration, life is linear, we are in control of our life, etc., 😝 After a point, we begin to realize that life is a losing game, life is sorrowful, age is irrelevant, education is waste, experience has no meaning, etc., Crown jewel is when we realize we can't even pluck our own hair. 😂😂

If age is irrelevant, why did our ancestors said "பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி"? 😉

The clue to this question is, "முதுமை என்பது இரண்டாம் குழந்தை பருவம்". How do we make an adamant child eat? By calling him/her "நீ நல்ல பிள்ள தானே", "புத்திசாலி பிள்ள தானே", etc., Got it? 😀 By assigning the good qualities the child is lacking, we try to turn him/her good. In the same way, we equal old people with பெருமாள் and try to infuse godly qualities into them!!

Why பெருமாள்? Why not சிவன்? Because சிவன் is always silent and பெருமாள் is the one who does everything (வைணவ பெருமாள் = சைவ சக்தி). So, what use is of a silent oldy? 😉 God and, that too, a hard-working God is what a family needs!! 😂😂

posted from Bloggeroid

Sunday, June 12, 2016

🎭 வேறு உடை பூண்ட வைரமுத்து 😉


இந்த வாதம் ஸ்ரீராமனுக்கு மட்டும்தானா? இல்லை, ஞானி யேசுவுக்கும் அவர் தம் அன்னை மேரிக்கும், மனைவி மேக்தலினுக்கும் பொருந்துமா?

இல்லை இப்படி எழுதினால் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று பரங்கிகளிடம் ஒப்பந்தம் ஏதும் போட்டுவிட்டானா இந்தக் கருங்காலி?

😡😡😡

🌸🌹🍀🍁🌺🌻🌼

This is what Bhagavaan Sri Ramana Maharshi had to say about Lord Sri Raamar:

Ramana Mahashi recounts: “Rama and Lakshmana were wandering in the forest in search of Sita. Rama was grief-stricken. Just then Siva and Parvati happened to pass close by. Siva saluted Rama and passed on. Parvati was surprised and asked Siva to explain why He, the Lord of the Universe, being worshipped by all, should stop to salute Rama, an ordinary human who having missed his consort was grief-stricken and moving in anguish in the wilderness and looking helpless. Siva then said: “Rama is simply acting as a human being would under the circumstances. He is nevertheless the incarnation of Vishnu, and deserves to be saluted. You may test him if you choose.” Parvati considered the matter, took the shape of Sita and appeared in front of Rama, as he was crying out the name of Sita in great anguish. He looked at Parvati appearing as Sita, smiled and asked, “Why, Parvati, are you here? Where is Sambhu? Why have you taken the shape of Sita?” Parvati explained how she meant to test him and sought an explanation for Siva saluting him. Rama replied: “We are all only aspects of Siva, worshiping Him at sight and remembering Him out of sight.”

posted from Bloggeroid

Friday, June 10, 2016

🏥 மருத்துவர் எனும் கடவுளர்கள் 🙇


(தினமலர் - சென்னை - 10/06/2016)

முன்பெல்லாம் பரங்கிமுறை மருத்துவர்கள் தான் கடவுளர்கள் போல் நடந்துகொள்வர். கேள்வி கேட்காமல் கும்பிடு போட்டுவிட்டு இடத்தை விட்டு நகரவேண்டும். இப்போது நம் பாரம்பரிய மருத்துவர்களும் அதே வழியை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.

💥 கூட்டமாக வாழ்வது (இன்றும் கூட Doctors' Enclave என்று விளம்பரங்களைக் காணலாம்.)
💥 அவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் (ஏதாவது பரங்கி நம் சமய/தத்துவ புத்தகங்களைப் படித்துவிட்டு "எல்லாவற்றிற்கும் மனதே அடிப்படைக் காரணம். மனதை Coo|-ஆக வைத்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்." என்று ஏதாவது 5 நட்சத்திர விடுதியில் வகுப்பு எடுப்பான். அதன் பின்னர் சில மாதங்களுக்கு இவர்கள் வரும் நோயாளிகளிடம் அதையே ஒப்பித்துக் கொண்டிருப்பர். 😂)
💥 வரும் நோயாளிகளிடமிருந்து தகவலோ/உதவியோ தேவைப்பட்டாலும் "என்னிடம் கேட்டிருக்கிறாரே. என்னே என் பாக்கியம்." என்று பரவசமடையும் விதத்தில் கேட்பது 😀

அரசாங்கங்களின் தவறான கொள்கைகளால் எல்லா துறைகளும் இன்று தரமற்றவர்களால் நிறைந்திருப்பது போல், இந்தத் துறையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியே போனால், சிரிப்பு துணுக்குகளில் வருவது போல மருத்துவரிடம் செல்வது என்பது சொத்தை இழக்க அல்லது எமனை சந்திக்க என்ற நிலை தான் அடுத்தது!! 😔

இதற்கெல்லாம் தீர்வு நம் மூதாதையரின் இயற்கை சார்ந்த தற்சார்பான வாழ்க்கை முறை ஒன்றே!! 3 தலைமுறைகளில் வியாதிகளும், 5 தலைமுறைகளில் மரபணு கேடுகளும் பெருமளவு நீங்கிவிடும்.

பி.கு.: மக்கள் நலன், சேவை மனப்பான்மை, ஒளிவுமறைவின்மை போன்ற குணங்கள் பெற்ற மருத்துவர்கள் இல்லாமலில்லை. எண்ணிக்கையில் மிக குறைவு.

posted from Bloggeroid

Sunday, June 5, 2016

🎑 செம்மொழியான தமிழ் மொழியாம் 🌊


இந்தச் செய்தியைப் படித்தவுடன் சிலருக்கு உற்சாகம் பொங்கும், சிலர் பரவசமடைவர், ...

ஆனால், இத்தனை பெருமைகள் இருந்தும், உலக மூத்தக்குடி உலக இளைய குடிகளிடம் (பரங்கியரும் அடக்கம்) அங்கீகாரத்திற்கு போராட வேண்டியிருந்திருக்கிறது!! 😑

எப்போது இந்திலை மாறும்?

தமிழினம் அவர்தம் மூதாதையர் வழியான சுயசார்பு வாழ்க்கைமுறைக்கு திரும்பி "இருக்குமிடமே சொர்க்கம்" என்று அமரும்போது!! 😅

(இணைப்பு: தினமலர் - சென்னை - 06/06/2016)

posted from Bloggeroid

🔯 அனுபூதி நெறி 🔯




ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் வைகாசி 2016 இதழில் வெளியான ஒரு கட்டுரை. இது ஆடி 1958-ஆம் ஆண்டு இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.

சாந்தோக்ய உபநிடதத்திலுள்ள சில செய்திகளின் திரட்டு இது.

அந்தணன் என்பதற்கு விளக்கம் மற்றும் சுவேதகேதுவிற்கு பிரம்மத்தைப் பற்றி அவர் தந்தை எடுக்கும் பாடம் ஆகியன ஜொலிக்கின்றன.

posted from Bloggeroid

சூரியன் கிழக்கில் உதிக்கவில்லை! திராவி கட்சிகள் ஜாதி அரசியல் நடத்தவில்லை!!


கருத்து: திராவிட கட்சிகள் ஜாதி அரசியல் நடத்துகின்றன!

எதிர்வாதம்: ஆவணி அவிட்டத்திற்கு பூணூல் போடுவது ஜாதி ஒழிப்புக்கான ஏற்பாடா?

😂😂😂😂😂

கருத்துச் சொன்ன இதழ் ஐயங்காருடையதாகிப் போனதால் இப்படிப்பட்ட குண்டக்க மண்டக்க வாதம். இதுவே முதலியார், தேவர், வன்னியர், பரையர், பல்லர், முகம்மதியர், கிறித்துவர் என்று யாராவது நடத்துபவராக இருந்திருந்தால் எதிர்வாதம் எப்படியிடுந்திருக்கும்? 😉

திராவிட இயக்கங்களால் அன்று பயன்கள் இருந்தாலும், இன்று?

ஜாதி அரசியல், எங்கும் எதிலும் ஊழல், தரமற்றவர்களால் நிறைந்த அரசாங்கம், இலவசங்களாலும் மதுவாலும் சீரழியும் சமூகம் .... 😬

அரசாங்கத்தை அன்று ஒரு கூட்டம் ஆக்ரமித்திருந்தது. தங்களுக்குத் தேவையானதை செய்து கொண்டது. இன்று வேறு ஒரு கூட்டம் ஆக்ரமத்திருக்கிறது. தங்களுக்குத் தேவையானதை செய்து கொள்கிறது. அவ்வளவே.

எல்லா அவலங்களுக்கும் தீர்வு: அளவான மக்கள் தொகை & சுயசார்பான வாழ்க்கை முறை.

இப்போதிருக்கும் எந்த அரசியல் கட்சியும் தீர்வு காணப் போவதில்லை. கண்டுவிட்டால், அவர்களின் தலைவர்களின் பிறந்தநாள் விழா அன்னதானக் கூட்டத்திற்கு யார் வருவர்? 😕

(இணைப்பு: தினமலர் - சென்னை - 05/06/2016)

posted from Bloggeroid

Saturday, June 4, 2016

பால் காவடி! பன்னீர் காவடி!! பரங்கி காவடி!!!



இந்த விபரசீட்டுகள் சென்னையில் இருக்கும் ஒரு பெரிய பள்ளியில் இவ்வருடம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டவை. 20 சீட்டுகளில் 4 மட்டும் இந்தியர்கள்! மீதம் 16-ல்பரங்கிகள்!!

இப்படி தான் பரங்கி நாடுகளில் செய்வரா? நம் நாட்டில் அறிஞர்களே இல்லையா? பரங்கிகளின் கண்டுபிடிப்புகள் எல்லாம் நம்மிடமிருந்து சுடப்பட்டவையே. பரங்கிகள் இந்த பூமியில் தோன்றியிருக்காவிட்டால் இப்புவி இன்று எவ்வளவோ சிறப்பாகவேயிருக்கும். ஆனால், இந்தியர்கள் தோன்றியிருக்காவிட்டால், இப்புவியில் இன்னமும் காட்டுமிராண்டிகள் தான் உலவிக் கொண்டிருப்பர்!!

அணு முதல் அண்டம் வரை அனைத்தையும் ஆராய்ந்து "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உச்சம் தொட்ட நாம் எங்கே? "தான் வாழப் பிறரைக் கெடு" என்ற கொள்கையுடைய பரங்கிகள் எங்கே?

எதற்கு இன்னமும் இந்த மூளைச்சலவை வேலை? எப்போது இந்தக் கருங்காலித்தனம் வேரறுக்கப்படும்? 😡

posted from Bloggeroid

Friday, June 3, 2016

வ.வே.சு. ஐயர்


வ.வே.சு. ஐயரைப் பற்றி மேலும் சில தகவல்கள்:

🔥 பாரதியார் மற்றும் வ.உ.சி. யுடன் இணைந்து வெள்ளையரை எதிர்த்தார்
🔥 ஆஷ் பரங்கியைக் கொன்ற வீரர் வாஞ்சிநாதனுக்குப் பயிற்சி கொடுத்தவர்
🔥 ஆஷ் பரங்கியைக் கொல்ல திட்டம் வகுத்துக் கொடுத்தவர்
🔥 சுதந்திர போராட்டத்தில் வீரசர்வாக்கர் அணியைச் சேர்ந்தவர்
🔥 தமிழ் சிறுகதை உலகின் தந்தையாகப் போற்றப்படுபவர்
🔥 சிறையில் இருந்த போது இவர் எழுதிய கம்பராமாயண ஆராய்ச்சி புத்தகம் புகழ் பெற்றது
🔥 தமிழின் மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தவர்

பாபநாசம் அருவியில் தவறி விழுந்த மகளை காப்பாற்றப் போய் இவரும் இறந்தார் என்று சொல்லப்பட்டாலும், ஆஷ் பரங்கியைக் கொல்ல திட்டமிட்டுக் கொடுத்ததால் பரங்கியர் அவர்களது "முதுகில் குத்தும்" பாணியில் பின்னிருந்து தள்ளிவிட்டிருப்பர் என்பது என் கருத்து!!

இவரின் மறைவுக்கு வீரசர்வாக்கர் எழுதிய மிக அருமையான இரங்கலின் ஒரு பகுதி:

"... The noble story of thy life must for the time being, nay, perhaps for all time to come, remain untold. For while those who can recite it are living, the time to tell it may not come, and when the time comes, when all that is worth telling will no longer remain suppressed and will eagerly be listened to, the generation that could have recounted it might have passed away. Thy greatness, therefore, must stand undimmed but unwitnessed by man like the lofty Himalayan peaks. Thy services and sacrifices must lie buried in oblivion as do the mighty foundations of a mighty castle...."

(இரங்கல் மூலம்: tamilnation.co/hundredtamils/vvsaiyar.htm)

(இணைப்பு: தினமலர் - சென்னை - o4/06/2016)

posted from Bloggeroid

🐣 பிராய்லர் மாணவர்களைத் தயாரிக்கும் பள்ளிப் பண்ணைகள் 🏭

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாமக்கல் & ராசிபுரம் பள்ளிகளில் நடக்கும் அநியாயங்களை விகடன் இதழில் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள். அதைப் படங்களாக கீழே இணைத்துள்ளேன்.

தற்போது அதேப் பள்ளிகளில் நடக்கும் கொடுமைகளை ஒரு இடுகையாக WhatsApp-ல் வெளியிட்டிருக்கிறார்கள். அதை இங்கே இணைத்துள்ளேன்.

அவற்றைப் படிக்கும் முன், சுவாமி விவேகானந்தர் கல்வியைப் பற்றி ரத்தின சுருக்கமாக சொன்னதைப் படியுங்கள்:

"கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கின்ற பூர்ணத்துவத்தை வெளிப்படுத்துவது"

சுவாமிஜியின் அளவுகோலை வைத்துப் பார்த்தால் இன்று போதிக்கப்படும் ஒரு படிப்பும் தேறாது!! 😑

🌸🌹🍀🍁🌺🌻🌼

From WhatsApp:

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட கல்வியில் முன்னணியில் இருந்தவை சென்னை - வேலூர் மாவட்டங்கள்தான்... தென் தமிழகத்தில் எப்போதும் போல திருநெல்வேலி!

வசதி படைத்த பிள்ளைகளுக்கு ஊட்டி, ஏற்காடு கான்வென்டுகள்!

ஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திடீரென அந்தியூர், கரூர், நாமக்கல் வட்டாரங்களில் கல்வி வியாபாரம் களைகட்ட ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் அல்லது யார் சொல்லக் கேட்டாலும், ஏதாவது ஒரு விகாஸ், மந்திர், வித்யாலயா.. அல்லது ஏவிஎம் மாதிரி மூன்று இனிஷியல்களில் ஏகப்பட்ட பள்ளிகள். இப்போது இந்த மாவட்டங்களுடன் கிருஷ்ணகிரி (ஊத்தங்கரை), ஓசூரும் சேர்ந்து கொண்டுள்ளன.

இந்த பள்ளிக் கட்டடங்களைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள். ஏதோ பன்னாட்டு தொழிற்சாலை வளாகத்தைப் போல அத்தனை பிரமாண்டம். ஒவ்வொரு பள்ளிக்கும் நான்கைந்து பிராஞ்சுகள் வேறு. நாமக்கல்லில் ஒன்று, ராசிபுரத்தில் ஒன்று, திருச்செங்கோட்டில் ஒன்று, காரமடை சாலையில் ஒன்று என வளைத்து வளைத்து கட்டியிருக்கிறார்கள். அருமையான வயல்கள் ஆயிரம் ஏக்கரை வளைத்து மிகப்பெரிய கட்டடத்தைக் கட்டியிருக்கிறார்கள். அந்த பிரமாண்ட கட்டடங்களையொட்டி, பச்சைப் பசேல் நெல் வயல்கள், வேர்கடலை சாகுபடி, கரும்புத் தேட்டங்கள்...

இந்தப் பக்கம் கரூரிலும் இதற்கு நிகராக தனியார் பள்ளிகள். 30-க்கும் மேற்பட்ட கார்ப்பொரேட் லெவலில் இயங்கும் பெரிய தனியார் பள்ளிகள். அந்தியூரிலும் தான். ( பொது தேர்வில் பிட்வைத்து எழுதவைப்பது முதல் ஆள் வைத்துத் தேர்வெழுத வைப்பது வரை கல்விச் சேவைகள் தனி.. அதற்கு கூடுதல் கட்டணம்) கோடிகளில் பணம் புழங்கும் கல்வி யாவாரிகள்தான் உரிமையாளர்கள்.

இன்றைக்கு சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த கல்வி தொழிற்சாலைகளில் போய் தள்ளிவிட்டு வந்துவிடுவதில் குறியாக உள்ளனர். இதற்காக இவர்கள் படும் பாடுகள், சேர்த்த பிறகு இவர்களை அந்தப் பள்ளிகள் படுத்தும் பாடுகள் இருக்கிறதே... கொடுமை!

கடவுள் குறித்த மூடத்தனத்தை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டதைப் போல, இந்தக் கல்வி மூடத்தனத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வரமாட்டாரா என வாய்விட்டுக் கதறுவீர்கள் ஒரு முறை அனுபவப்பட்டால்!

மாணவர்களை பாடப் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே மனப்பாடம் செய்ய வைத்துத் தேர்வில் அப்படியே வாந்தியெடுக்கும் Xerox மெசின்களாக மாற்றும் இந்தப் பள்ளிகளில் சேர படும் பாட்டை முதலில் பார்ப்போம்...

கீழ்வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு இவர்கள் வைக்கும் தேர்வைப் பார்த்தால் ஐஐஎம்முக்காக நடத்தப்படும் CAT தேர்வு கூட தோற்றுப் போகும்... அத்தனை ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்ட்டு!!

எட்டாம் வகுப்பு சேர வரும் ஒரு பையனுக்கு வெக்டார்ஸ் பற்றி கேள்வி. அவன் இதற்கு முன் கேள்விப்பட்டிராத பல பாடங்களிலிருந்து தேர்வுத் தாள் தயாரித்திருப்பார்கள். இப்படித் தயாரிப்பது தவறு என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன... தெரியும். ஆனால் இப்படியெல்லாம் கஷ்ட்ட்டமான கேள்வியை வைக்கக் காரணம்... அதிகபட்ச பேரத்துக்காகவே.

உதாரணத்துக்கு.... கரூரில் XXX என்று ஒரு பள்ளி, அந்தியூரில் xxxx பள்ளி.
இதில் உங்கள் பிள்ளையை 9-ம் வகுப்பு சேர்க்க வேண்டும் எனப் போகிறீர்கள். அவர்கள் வைத்த உலக மகா தேர்வில் பையன் தேறாமல் போகிறான். அப்போதுதான் உங்களுக்கு எப்படியாவது இந்த உலகத் தரமான பள்ளியில் பையனை / பெண்ணை சேர்த்துவிட்டால் போதும்... அத்தோடு அவன் வாழ்க்கையே பெட்ரோமாக்ஸ் லைட் போட்ட மாதிரி ஜெகஜ்ஜோதியாக இருக்கும் என்று தீர்மானித்து விடுகிறீர்கள்.

அடுத்து உள்ளூரில் உள்ள ஏதாவது ஒரு கட்சிப் பிரமுகரிடம் போவீர்கள்... 'நான் இன்னார்... என் பக்கத்துத் தெருவில் உங்க கட்சி வட்டச் செயலாளர் எனக்கு வேண்டப்பட்டவர்... என் பையனுக்கு சீட் வேணும்... கொஞ்சம் பாத்துப் பண்ணிக்குடுத்தா நல்லாருக்கும்....' என கெஞ்ச ஆரம்பிப்பீர்கள்.

அவரும் அங்கிருந்து போன் செய்வார்.... 'நம்மாளுதாங்க... கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க' என்பார். உடனே நம்பக்கம் திரும்பி, செலவு கொஞ்சம் ஓவரா ஆகும்... ஓகேன்னா தரச் சொல்றேன். எனக்கு எதுவும் நீங்க தர வேண்டாம்... ஸ்கூல்ல கேக்குறதைக் கொடுத்துடுங்க,' என்பார்.

'ஆகட்டும் சார்.... எப்படியாவது புரட்டி கட்டிடுவேன்..'

பையன் அப்போதே எஞ்ஜினீயர் அல்லது டாக்டராகி கால் மேல் கால்போட்டு சம்பாதிக்கும் கனவில் மூழ்கிவிடும் பெற்றோர், கடன் வாங்கி, நகையை விற்று எட்டாம் வகுப்புக்கு மட்டும் விடுதிக்கும் சேர்த்து 6 மாதங்களுக்கு கட்டும் கட்டணம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் வரும். அடுத்த ஆறு மாதங்களுக்கு இன்னொரு 60 ஆயிரம். புத்தகம் - சீருடைக்கு தனியாக சில ஆயிரங்கள். அப்புறம் அந்தப் பிள்ளையை விடுதியில் சேர்க்கும் முதல் நாளன்று, ஏதோ தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு சீர் செய்வது போல கட்டில், மெத்தை, தலையனை, வாளிகள், பெட்டிகள், தின்பண்டங்கள்...

ப்ளஸ் ஒன் சேரும் பிள்ளை / அல்லது பையனுக்கு இந்த செலவு இருமடங்காக இருக்கும்.

அதன் பிறகு வாரம் ஒரு முறை சென்னையிலிருந்தோ மதுரை - கோவையிலிருந்தோ போய் வந்துகொண்டிருக்க வேண்டும். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கும். பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வரும்வரை.

அதன் பிறகு பள்ளிகள் காட்டும் சுயரூபம் வேறு மாதிரி இருக்கும்.

அதுவரை உங்கள் பையன் நன்றாகப் படிக்கிறான். திருப்திகரமான மதிப்பெண்... என்றெல்லாம் தொடர்ந்து வீட்டுக்கு கடிதங்கள் வரும் பள்ளி தாளாளரிடமிருந்து. அரையாண்டு தேர்வு முடிவு வந்ததும்... இந்த கடிதத்தின் தொனி தலைகீழாக மாறிப் போகும்!

'அவசரம்... உடனே வந்து தாளாளர், செயலர் அல்லது தலைமையாசிரியரைப் பார்க்கவும்' என்று ஒற்றை வரியில் தந்தி வரும்... செல்போன், இமெயில் சமாச்சாரங்கள் பெருகிவிட்ட இந்த நேரத்திலும், இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் தந்தியைத்தான் உபயோகிப்பார்கள் (தந்தி இல்லாததால் இப்போது SMS). உளவியல் தாக்குதல்!

தூக்கம் தொலைத்து அடித்துப் பிடித்துக் கொண்டு நாமக்கல்லுக்கோ கரூருக்கோ, அந்தியூரோ மட்ட மத்தியானம் போய் நின்றால்.. 'என்னங்க இவ்ளோ லேட்டா வர்றீங்க... கரஸ்பாண்டன்ட் வீட்டுக்குப் போயிட்டார்... திரும்ப நாளைக்குதான் வருவார்... எதுக்கும் நான் தகவல் சொல்றேன்... மாலையில் ஒரு வாட்டி வந்து பாருங்க' என்பார் அங்குள்ள உதவியாளர். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது அப்படி. அவரைத் திட்டி என்ன ஆகப் போகிறது. மாலை வரை பிள்ளையோடு பேசலாமா என்றால்... 'ம்ஹூம், அவர்களுக்கு வகுப்பு இருக்கிறது. விசிட்டிங் அவர்ஸ் கிடையாது. நாளைக்குதான்,' என்பார்கள்.

'இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்து என்னத்தடா கிழிச்சீங்க' என்று கேட்கும் திராணியின்றி, கரூர் அல்லது ராசிபுரத்தில் உள்ள லாரி ஷெட்டுகள், பெட்ரோல் பங்குகள், புழுதி பறக்கும் பஸ் நிலையங்களைப் பராக்குப் பார்த்துவிட்டு மீண்டும் மாலையில் போனால், அமர்த்தலாக உட்கார்ந்திருப்பார் கரஸ்பாண்டன்ட்!

தயங்கிக் தயங்கி பெற்றோர் உள்ளே நுழைந்ததும், அந்த ஆண்டிறுதி நாடகத்தின் அதிரடி க்ளைமாக்ஸை இப்படி ஆரம்பிப்பார் அந்த ஆசாமி!

எதிரில் உள்ள லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இப்படியும் அப்படியும் தட்டிக் கொண்டு, உதட்டை நான்கு முறை சுழித்து... 'ம்ம்... என்னங்க இது... உங்க பிள்ளை இப்படி கவுத்திட்டானே... ரொம்ப மோசம்... தேர்றது கஷ்டம்.. ம்ம்... என்ன பண்ணப் போறீங்க... எங்க ரிசல்ட்டையே கெடுத்துடுவான் போலிருக்கே... வெளிய அனுப்பிடலாம்னு செக்ரட்டரி கூட சொல்றார்... எங்க ஸ்கூல் பேருதான் முக்கியம்... '

'சார் சார்... என்ன சார் இப்படி சொல்றீங்க... நீங்கதானே சொன்னீங்க... எப்படி படிச்சாலும் பரவால்ல நாங்க குறைஞ்சது 1000 மார்க்குக்கு உத்தரவாதம்னு... இப்படி சொன்னா எப்படி... அவனைத்தான் நம்பியிருக்கோம்... என்ன வேணும்னாலும் செய்யறோம்,' என்ற கதற ஆரம்பிப்பார்கள் பெற்றோர்.

வழிக்கு வந்துவிட்டார்கள் என்பது புரிந்ததும், அடுத்த அதிரடியை சாவகாசமாக ஆரம்பிப்பார் கரஸ்!

'சரி.. ஒரே ஒரு வழியிருக்கு. நீங்க என்ன பண்றீங்க... ஒரு நாலு மாசம் உங்க பையன் / பெண்ணை கூட்டிட்டுப் போய், பக்கத்துல எங்காவது ஒரு ரூம் எடுத்து தங்கி பார்த்துக்க முடியுமா... கூடவே ட்யூஷனுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. ஒவ்வொரு சப்ஜெக்டும் தனித்தனியா இந்தப் பள்ளி ஆசிரியர்களே கூட இருக்காங்க. இதுக்கு நீங்க தயாராக இருந்தா சொல்லுங்க..'

வேறு வழியே இல்லாமல் மண்டையை ஆட்டுவார்கள் பெற்றோர்கள்.

அடுத்த வாரமே, ஹாஸ்டலிலிருந்து மீண்டும் தனி வீட்டுக்கு மாறுவார்கள் மாணவர்கள். ஏதோ ஒரு பையனுக்கு, அல்லது பெண்ணுக்கு இந்த நிலை என்று நினைத்துவிட வேண்டாம். பல மாணவ மாணவிகளுக்கு இதே ட்ரீட்மெண்ட்தான்.

ராசிபுரத்தைச் சுற்றிச் சுற்றி எக்கச்சக்கமாய் புதுப் புது ப்ளாட்கள் முளைத்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு கையில் பையனை அல்லது பெண்ணை அழைத்துக் கொண்டு ராசிபுரம் தெருக்களில் பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்து பாருங்கள்... 'வாங்க சார்.. ஸ்டூடன்ட்டா.... வீடுவேணுமா... சிங்கிள் பெட்ரூம்... ரூ 7000 வாடகை... டபுள் பெட்ரூம் கூட இருக்கு... அதுக்கு ரூ 10000 ஆகும். ஓகேவா?' என்று அடுத்தடுத்து குரல்கள் கேட்கும்.

ஏதோ ஒரு வீட்டைப் பிடித்து, இவர்களுக்காகவே ப்ளாக்கில் விற்கும் கேஸ் கனெக்ஷன் வாங்கி தற்காலிக தனிக்குடித்தனத்தை அங்கு ஆரம்பித்தாக வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிவரை போய் வர ஷேர் ஆட்டோ உண்டு!

அடுத்து ட்யூஷன்... ஒரு பாடத்துக்கு ரூ 10000. தமிழ் தவிர மற்ற 5 பாடங்களுக்கும் சேர்த்து ரூ 50000!

ஒரு நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான்... எல்லாமே பக்கா செட்டப் என்பது புரியும். மாணவனை வெளியில் அனுப்பும் பள்ளி, வீடுதரும் 'பினாமி ஹவுஸ் ஓனர்கள்', ட்யூஷன் எடுப்பவன், கேஸ் விற்பவன், ஷேர் ஆட்டோ ஓட்டுபவன், எல்லாருக்குமிடையே ஒரு பிரிக்கமுடியாத உறவு இருப்பது புரிய வரும்.புரிந்து என்ன பயன்... பல்லைக் கடித்துக் கொண்டு கடைசி தேர்வு வரை ராசிபுரம் வாசியாகவே, கரூர்வாசியாகவோ காலத்தைத் தள்ளுவார்கள் பெற்றோர்.ரிசல்ட் நாளன்று பையன் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்ததைக் கொண்டாட வாயில் ஸ்வீட்டை வைக்கும்போது, நடந்ததை நினைத்தால் ரொம்பவே கசக்கும்!

இது யாரோ ஒருவரின் தனிப்பட்ட அனுவபம் அல்ல... பலரது அனுபவங்களின் சாம்பிள்!

எனக்குத் தெரிந்த ஒரு அரசு மருத்துவர் தனக்கு நேர்ந்த இதே அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது அழுதேவிட்டார்!

ஒரு முறை ராசிபுரத்தின் அந்த பிரபல பள்ளிக்குச் சென்றிருந்தோம் உறவுக்கார பெண்ணைக் காண. பள்ளி ஹாஸ்டல் பகுதி கட்டடத்தின் ஓரத்தில் எங்கள் காரை நிறுத்தினோம். ஒரு சில நிமிடங்களுக்குள் ஒரு பெரும் மாணவிகள் கூட்டம் அத்தனை ஜன்னல்களிலும் எட்டிப் பார்த்தது.

'அங்கிள் டிசிதானே வாங்க வந்தீங்க... தயவு செய்து கூட்டிட்டுப் போயிடுங்க... நேத்துகூட மூணு பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்க... ஒரு பெண் தற்கொலை பண்ணிக்குச்சு. எங்க பேரன்ட்ஸுக்கு தகவல் சொல்ல முடியுமா... இந்த நம்பருக்கு கொஞ்சம் போன் பண்றீங்களா...' என்று அடுத்தடுத்து கேட்டு துண்டுச் சீட்டுகளைத் தூக்கி எறிந்தனர். உடனே வாட்ச்மேன் ஓடிவர, அந்த மாணவிகள் தலைகள் மாயமாகிவிட்டன.

அந்த சீட்டுகளை எடுத்துக் கொண்டோம்.

கலாய்க்கிறார்களா... கவலையில் சொல்கிறார்களா என்று தெரியாமல் பள்ளி வளாகத்துக்கு வெளியே இருந்த ஒரு கடையில் பேச்சுக் கொடுத்தோம்...

'ரொம்ப கொடுமை நடக்குது சார்... இப்ப துண்டுச் சீட்டு வீசின பசங்கள்லாம் தனியா வீடு எடுத்து படிக்க முடியாத நிலையில் உள்ளவங்க. அவங்களைப் படுத்தி எடுப்பாங்க இந்த பள்ளியில். ஏன் இன்னும் வெளிய போகாம இருக்கீங்க... போங்க என்பார்கள். ஆனால் அவங்க பேரன்ட்ஸால வர முடியாததால மாணவ மாணவிகளுக்கு வேறு வழி தெரியாம இந்தக் கொடுமையை சகிச்சிட்டு படிக்கிறாங்க...,' என்றபோது, அதிர்ந்து போனோம்.

இரண்டு நம்பர்களுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னபோது, 'ஆமா சார், எங்களையும் தனி வீடு பார்க்கச் சொன்னாங்க. ராமநாதபுரத்தில் இருந்து வந்து அப்படியெல்லாம் பாத்துக்க முடியல. 'பிள்ளைகளை 1000 மார்க் வாங்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. கடைசி நேரத்தில் எங்களை நிர்பந்தம் செஞ்சா எப்படி?'ன்னு கேட்டுட்டுதான் வந்தோம். பெயிலானா எங்களைக் குறை சொல்லாதீங்கன்னு சொல்லி அதோட விட்டுட்டாங்க. எதுக்கும் வந்து பாக்குறோம் சார்,' என்றார்கள். வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை!

'என்ன நடக்குது... இந்த கொள்ளையை தட்டிக்கேட்க ஆளே இல்லையா?'

ம்ஹூம்... இல்லை..!

🌸🌹🍀🍁🌺🌻🌼

விகடன் இதழிலிருந்து....




posted from Bloggeroid

அமெரிக்காவில் நரசிம்மர் தபால்தலை வெளியீடு

Thursday, June 2, 2016

🌏🌊 திரைகடலோடிய தமிழனும் அவனுக்கு வழிகாட்டிய ஆமைகளும் 🐢

வாட்ஸ்அப்பில் கீழ்காணும் இடுகை கிடைத்தது. அதைப் படித்ததும் சில வருடங்களுக்கு முன்னர் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த ஒரு கட்டுரை ஞாபத்திற்கு வந்தது. அதை இதற்கு கீழே இணைத்துள்ளேன்.

💮 படியுங்கள்!
💮பெருமை கொள்ளுங்கள்!!
💮 மற்றவருடன் இத்தகவல்களையும் தங்களது உற்சாகத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!!

🔯 என்றும் வாய்மையே வெல்லும் 🔯

🌸🌹🍀🍁🌺🌻🌼

🐢 From WhatsApp:


பர்மாவில் தேக்குமரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு!! ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய!

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீரோட்டத்தைப் பயன்படுத்தி 150 கி.மீ. வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைகடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான்.
கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை!!

சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்! போதிதர்மர் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை! கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான். அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்! வாஸ்கோடகாமா முகம்மதியர்களின் தொல்லையில்லாமல் இந்தியாவுக்கு வந்துசேர உதவியது நம் மாலுமிகள் தான்!

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம். தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு.

⚓ From The Hindu:


Historian Sivagnanam Balasubramani, popularly known as Orissa Balu, deciphers the sea trade routes used by ancient Tamil sailors through his research on sea turtles

‘Thirai kadal odiyum thiraviam thedu’ (Seek your fortune even by venturing overseas) -- Tamil poet Avvaiyar.

The Sangam literature is a rich repository of information on the ancient Tamil way of living. Amidst its chapters that vividly describe the beauty of nature, lifestyle and social structure of the old Tamil country, the Purananuru elicits the flourishing sea trade of those times. From ships, sea routes, daring maritime voyages to the merchandise that were traded and the expertise of the Tamil seafarers, it talks in detail of the mighty ocean and the strong bond the people shared with it.

For the past two decades, historian Orissa Balu, has been collecting real-life evidences and remnants from across the coast of Tamil Nadu and elsewhere in the world, correlating them with the references in Sangam literature. “The land expanse mentioned in the literary works is a much larger area than the present day Tamil Nadu state. Our ancestors had maintained trade links from Europe in the west to the Far East,” says Balu. “Excavations at Adichanalur have yielded skeletons of people belonging to five different races. It’s an indication that we have been a centre of international trade, paving way for exchange of culture and language.”

According to Balu, the root of the word ‘Tamilar’ comes from ‘Dramilar’, which in turn is a derivative of ‘Thirai Meelar’ – an expression to denote sea farers. “It was considered a science to be able to return from the sea. The Tamil seafarers had an advanced idea of direction, geography and weather. They were able to come back to their home turf after sea voyages spanning months and years covering millions of nautical miles. The word ‘Thirai Meelar’ is mentioned repeatedly in works like Manimekalai and Silapathikaram.”

Sea faring was such a thriving industry that the Tamil society is said to have had over 20 different communities working for sea trade. Literature talks about the Vathiriyars (people who weaved the sail), Odavis (men who built ships), Kuliyalis (Surfers) and Mugavaiyars (divers who fished pearl from the deep sea bed).

Balu who has done an extensive study on the ‘Paimara Kappal’ (sail boat), the indigenous vessel of ancient Tamils, says, “The sail cloth used in the Sangam age was 20 metres in width, 10 metres in height and could withstand a wind velocity of 250km/hr. It’s notable that even the women were experts in sailing and pearl fishing. Even today, we can find women diving into the sea in search of pearls along the coast of Tuticorin.”

He adds, “The mechanism of building the boat was unique as they used nearly 42 kinds of wood including the Karunkali wood for the central pole that withstood lightning. Today, the coastal Muslim community practices the age-old boat building technique. There are hardly 25 sail boats and five families of boat builders left in Kayalpatnam and Keezhakarai.”

The Sangam literature also documents the presence of over 20,000 islands in the Indo-Pacific Ocean, says Balu. ‘Muziris Papyrus is a document on the evolved sea trade of Tamils. It shows how advanced and strategically planned were the supply chain network and management policies of Tamil traders.” Balu postulates that ancient Tamil seafarers followed sea turtles and thus chalked maritime trade routes. For over 21 years, he has been doing research on sea turtles, mapping their migration routes.

“The turtle has the ability of returning to its home turf even after migrating thousands of miles in the sea. They float along sea currents and don’t swim in the ocean. The technique used by Tamil sailors must have been inspired from this,” he says. “There’s a proper documentation of the life cycle of sea turtles in Sangam literature.”

Balu is researching on the migration routes of Olive Ridleys, Green Turtles and Leatherbacks which visit the Tamil Nadu coast.

“My idea is to use historical facts for sustainable living in the present times,” says Balu, who runs the Integrated Ocean Culture Research Foundation, based in Chennai. “We have people from over 72 sea-related fields researching on various subjects. We have created a link between the stakeholders of the sea, from marine engineers and ship builders to fishermen.” Orissa Balu delivered a lecture at a programme organised by INATCH Madurai Chapter.

(Source: m.thehindu.com/features/metroplus/society/sailing-in-search-of-history/article8537040.ece)

posted from Bloggeroid