Friday, May 31, 2019

சிங்கப்பெருமாள் பிறந்த தினம் – ஆதிசங்கரரின் கராவலம்ப தோத்திரம் - பகுதி #2


திருக்கடவூரில் மார்கண்டேய மகரிஷி மெய்யறிவு பெற்ற நிகழ்வை காலசம்ஹார மூர்த்தி என்று உருவகப்படுத்தினர். இதிலிருந்து நரசிம்மமூர்த்தியை அஹோபில வைணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். திருவரங்க தலவரலாற்றில் வரும் "பெருமாளிடமிருந்து புறப்பட்ட பெண் சக்தியும்" இதுவே தான் நரசிம்மருக்கு பின்னர் இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கும். இல்லையெனில், பத்து அவதாரங்களில் நரசிம்மருக்கு பதிலாக இந்தப் பெண் சக்தி இடம் பெற்றிருக்கும்.


🔷 காலசம்ஹார மூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிப்பட்டிருப்பார். நரசிம்மர் தூணைப் பிளந்து வெளிவந்திருப்பார். தூண் - தாணு - லிங்கம் - சிவம். வைணவம் சைவத்திற்கு மேல் என்று காட்டுவதற்காக "தூணிலிருந்து" என்று எழுதாமல், "தூணைப் பிளந்து" என்று எழுதியுள்ளார்கள். உயிரற்றது (தோன்றி மறைவது) உயிரைப் (என்றுமுளது) பிளந்து கொண்டு வருமாம்!! 😁


🔷 முன்னதில் உயிர் பயம் (எமதர்மன்) அழிக்கப்பட்டிருக்கும். பின்னதில் ஆணவம் (இரணியகசிபு) அழிக்கப்பட்டிருக்கும்.


🔷 முன்னதில் மார்க்கண்டேயர். பின்னதில் பிரகலாதன். இருவருமே சீவனைக் குறிப்பர். மார்க்கண்டேயர் உண்மையில் இருந்தவர். பிரகலாதன் என்பது உருவகம் மட்டுமே என்று நினைக்கிறேன்.

  

மெய்யறிவு கிடைக்கப் பெறுவது என்னவோ ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தான். அந்த ஒரு விநாடிக்குள் நடக்கும் அனைத்தையும் சேர்த்து காலசம்ஹார மூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார் என்று சொல்லிவிட்டார் மார்க்கண்டேய மகரிஷி. பின்னர் வந்த நம் தமிழ் பெரியவர்கள், இந்நிகழ்வை நன்கு துல்லியமாக ஆராய்ந்து, கிடைத்த முடிவுகளை நம் முன்னோர்கள் உருவாக்கிய முருக தத்துவத்தின் தோற்றத்தோடு இணைத்து, தகப்பன் சுவாமி என்று பெயரிட்டு, "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை" என்ற பழமொழிப் பரிசையும் பெற்றார்கள்.


ஒரு வேளை இந்த ஆய்வுகள் முன்னமே நடந்திருந்தால், இரணிய வதத்திற்குப் பிறகு பிரகலாதன் துதி பாடி இருக்க மாட்டார். நரசிம்மருக்கு அறிவுரை கூறி இருப்பார்!! 🤭


இந்த தகவல்கள் எல்லாம் காஞ்சிபுரம், சிருங்கேரி போன்ற பாரம்பரியம் மிக்க அத்வைத மடங்களுக்கு உறுதியாக தெரிந்திருக்கும். ஆனாலும், அவர்களது இணைய தளங்களில் "நரசிம்மர் பத்மபாதருக்குள் நுழைந்து..." என்ற அத்வைதத்துக்கு புறம்பான செய்தியே உள்ளது. 😔

Tuesday, May 28, 2019

சிங்கப்பெருமாள் பிறந்த தினம் - ஆதிசங்கரரின் கராவலம்ப தோத்திரம்

சென்ற வைகாசி வளர்பிறை பதினான்மையன்று (சதுர்த்தசி) சிங்கப்பெருமாளின் பிறந்த தினம் வைணவர்களால் கொண்டாடப்பட்டது. (பெரும்பாலும் சுவாதி நாள்மீனும் உடன் வரும்). அச்சமயம் சில இடுகைகளும், சில காணொளிகளும் எனக்கு வந்து சேர்ந்தன. அதிலொரு இடுகையில் சிங்கப்பெருமாளைப் புகழ்ந்து (அல்லது வேண்டி) #ஆதிசங்கரர் பாடிய #கராவலம்ப #தோத்திரம் (கை தூக்கி விடு / கை கொடு என்று வேண்டுதல்) பிறந்த வரலாற்றை எழுதியிருந்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி:

... ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த  காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு #கபாலிகன் அவரைக் காளிக்கு நரபலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நரபலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை). அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார். தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த கபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார். அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது வரலாறு. ...

👊🏼 தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் -  இவர்களாகவே ஆதிசங்கரரை சிங்கப்பெருமாளின் பத்திமன் என்று எழுதிக்கொண்டுவிட்டார்கள்!! 😃 பத்திமையும் மெய்யறிவும் வேறுவேறல்ல என்று இலக்கணம் எழுதியவர், வாழ்நாள் முழுவதும் "உருவமற்ற, செயலற்ற, குணங்களற்ற பரம்பொருள் ஒன்றே" என்ற பேருண்மையை நிலைநாட்டப் போராடியவர் ஒர் உருவத்திடம் பத்திமை கொண்டாராம்! விட்டால், அடுத்த பதிப்பில், சங்கரர் நாமத்தை போட்டுக் கொண்டுப் பாடினார் என்றும் எழுதுவார்கள்!! 😂

👊🏼 நரசிம்மர் பத்மபாதருக்குள் ஆவேசித்து, அந்த கபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார் - அவென்ஜர்ஸ் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவரை வைத்து எழுதியிருப்பார்கள் போலிருக்கிறது!! 😁 ஏற்கனவே ஒவ்வொரு சீவனுள்ளும் பரம்பொருள் உள்ளது (இந்த கண்ணோட்டம், மெய்யறிவு கிடைத்த பின், பரம்பொருளினுள் தான் அனைத்தும் உள்ளது என்ற மாறும்). இன்னொரு முறை பரம்பொருள் எப்படி நுழையும்? இப்படி நுழைய முடியும் என்று எடுத்துக் கொண்டால், ஏன் பத்மபாதருக்குள் நுழையவேண்டும்? கபாலிகனுக்குள் நுழைந்து அவனை சரி செய்திருக்கலாமே! 😎

(ஆவேசித்தல் - ஆ+வேசம் - ஆ+வேடம் - ஒரு சீவனின் உரு கொள்ளுதல்)

நாம் உயிரினும் மேலாக கருதும் ஒரு நபருக்கு கடுந்துன்பம் நேரப்போவதை உணர்ந்தால் / கண்டால், பாய்ந்தோடிச் சென்று எப்பாடுபட்டாவது அவரைக் காப்போம். துன்பத்தை போக்கிய பின்னரும், நாம் நமதியல்பு நிலைக்கு திரும்ப சற்று நேரமாகும். அச்சமயம், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை இளைப்பாற வைக்க முயற்சிப்பார்கள். இது போன்றொரு நிகழ்வு தான் பத்மபாதருக்கு நடந்திருக்கும். தனது மெய்யாசிரியருக்கு நேரவிருக்கும் இன்னலை உணர்ந்தவுடன் / கண்டவுடன் பாய்ந்தோடிச் சென்று கபாலிகனைக் கொன்றிருக்க வேண்டும். கொன்ற பின்னரும், தனதியல்பு நிலைக்குத் திரும்பாமல் இருந்தவரை, தவம் கலைந்து எழுந்த ஆதிசங்கரரும், மற்ற மாணவர்களும் இளைப்பாற செய்திருக்க வேண்டும்.

ஆதிசங்கரர் செயற்கரிய செயல்களை செய்தவர் என்பதாலும், அவர் காலம் முடிந்து பல நூற்றாண்டுகள் கடந்து விட்டபடியாலும் நிகழ்வுகள் கற்பனைகளோடு கலந்துவிட்டன. "பத்மபாதர் சிங்கமாக உருமாறினார்" என்ற ஆரம்ப நிலை 🤒 முதல், "பரம்பொருள் நரசிம்மமாக பத்மபாதருக்குள் நுழைந்து" என்று அவென்ஜர்ஸ் நிலை 🥴 வரை பல படிகளைத் தாண்டி விட்டது.  இவற்றுடன், ஒரு கூட்டத்தின் "தனது பத்திமனான" என்ற கைங்கர்யம் வேறு சேர்ந்துவிட்டது. 🤪

💥💥💥💥💥

ஆன்மாவின் போதமருளும் ஆசானாம் சங்கரன்
அவ்வான்மாவுக்கு அன்னியனாவனோ - அவ்வான்மாவாக
என்னகத்தே இருந்து இன்று தமிழ் சொல்வானும்
அன்னவனன்றி மற்றார்

ஆதிசங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய #ஆத்மபோதம் என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை பகவான் ஸ்ரீரமணருக்கு அனுப்பியிருந்தார் ஒரு முகம்மதிய பத்திமர். அதைக் கண்ணுற்ற பகவான், ஓர் இரவு முழுவதும் கண் விழித்திருந்து, ஒரு புதிய தமிழ் மொழிபெயர்ப்பை எழுதினார். அந்த மொழி பெயர்ப்பின் மங்கல செய்யுளே மேலுள்ள பாடல்.

(இந்தச் செய்யுளில் ஆதிசங்கரர் யார் என்பதை மிகத்தெளிவாக காண்பிக்கிறார் பகவான்)

🌸🏵️🌹🌻🌷🌼💮

#சிங்கப்பெருமாள் என்பவர் யார் அல்லது எது என்று தெரிந்து கொண்டால் எல்லா குழப்பங்களும் தீரும்:

சீவனாகிய நம்மால் ஓரளவிற்கு மேல் நமக்குள் ஆழ முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் வெளிமுகமாகவே செல்ல எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை, திரும்ப திரும்ப நான் என்னும் நமது தன்மையுணர்வின் மேல் கொண்டு வந்து வைப்பது மட்டுமே. ஒரு சமயத்தில் நமது இயலாமையை நாம் உணர்ந்து நமது முயற்சியை கைவிடுவோம் (இதுவே #சரணாகதி எனப்படும்). அச்சமயம் உள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நமக்கு ஒரு புதிய தெளிவைக் (அறிவு என்றும் கொள்ளலாம்) கொடுக்கும். இந்த ஆற்றலே #காலசம்ஹார #மூர்த்தி ஆவார் (இந்த காலசம்ஹாரம் வைணவத்தில் #ஆணவ #சம்ஹாரம் - #இரணிய #வதம் -  என்றும், காலசம்ஹார மூர்த்தி #நரசிம்மர் என்றும் மாறிவிட்டது.) கிடைத்த புதிய தெளிவே #தகப்பன் #சுவாமி (#சுப்ரமணியர்) எனப்படும் (சாக்தத்தில் #அன்னபூரணி என்று அழைக்கப்படுவதும் இதே தெளிவு தான்). இந்த தெளிவால், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு (மாயை) அழிந்துவிடும். #காலசம்ஹாரம் - காலனை உதைப்பது என்பது இதுவே!! 

(உள், வெளி, ஆழ்ந்து, வெளிப்பட்டு என்பதெல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்தியுள்ள சொற்கள். உண்மையில் இருப்பது ஒரு பரம்பொருளே. காணப்படும் அனைத்து அதன் வெளிப்பாடே. நாம் இறைவனை தேடுவதென்பது: "ராமன் என்பவன் தன்னை ராமன் என்று உணர கண்ணாடி வேண்டுமோ?", #பகவான் #ஸ்ரீரமணர் 😀)

Friday, May 24, 2019

Talk #196 (from #Talks #with #Maharishi)

Devotee: Seeking the ‘I’ there is nothing to be seen.


Maharishi: Because you are accustomed to identify yourself with the body and sight with the eyes, therefore, you say you do not see anything. What is there to be seen? Who is to see? How to see? There is only one consciousness which, manifesting as ‘I-thought’, identifies itself with the body, projects itself through the eyes and sees the objects around. The individual is limited in the waking state and expects to see something different. The evidence of his senses will be the seal of authority. But he will not admit that the seer, the seen and the sight are all manifestations of the same consciousness - namely, ‘I-I’. Contemplation helps one to overcome the illusion that the Self must be visual. In truth, there is nothing visual. How do you feel the ‘I’ now? Do you hold a mirror before you to know your own being? The awareness is the ‘I’. Realise it and that is the truth.


D.: On enquiry into the origin of thoughts there is a perception of ‘I’. But it does not satisfy me.


M.: Quite right. The perception of ‘I’ is associated with a form, maybe the body. There should be nothing associated with the pure Self. The Self is the unassociated, pure Reality, in whose light, the body, the ego, etc. shine. On stilling all thoughts the pure consciousness remains over.


Just on waking from sleep and before becoming aware of the world there is that pure ‘I-I’. Hold to it without sleeping or without allowing thoughts to possess you. If that is held firm it does not matter even though the world is seen. The seer remains unaffected by the phenomena.

🌺 ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாசலரமணாய 🌺


🏵️ திருச்சிற்றம்பலம் 🏵️


🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼

Sunday, May 12, 2019

வெங்காயம் சுக்கானால்... 😍

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே!!

-- #காளமேகப் #புலவர் 🙏🏼

சமையலறை சரக்குகளை வைத்தே ஒரு அருமையான ஆன்மிக #சிலேடை பாடலை எழுதியிருக்கிறார்! 👏🏼👌🏼😍 சிலேடை பாடல்கள் இரு பொருள் தரும். இப்பாடலின் ஆன்மிக பொருளை மட்டும் இங்கு பார்ப்போம்.

🔶 வெங்காயம் - வெறும் காயம் - வெங்காயத்தை இறுதி வரை உரித்தாலும் எதுவும் இருக்காது. அவ்வாறே இவ்வுடலையும் இறுதி வரை உரித்துப் பார்த்தாலும் உள்ளே யாரும் இருக்கமாட்டார்கள்.

🔶 சுக்கானால் - காய்ந்து சாரமற்ற இஞ்சி போன்று உயிர் பிரிந்த உடல் (காயம்).

🔶 வெந்தயத்தால் ஆவதென்ன - உயிர் பிரிந்த உடலை எரிப்பதால் கிடைப்பதென்ன? வெறும் சாம்பல் மட்டுமே.

🔶 இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - இந்த உலகில் யார் இறந்த உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்?

🔶 மங்காத சீரகத்தை தந்தீரேல்  - சீரகம் - சீரான அகம் - அலைபாயாத மனம் - சஞ்சலமற்ற அறிவு - நிலைபேறு. நிலைபேற்றை கொடுத்தீர்களேயானால்...

🔶 வேண்டேன் பெருங்காயம் - பெரும் / பெருமைக்குரிய உடல். மனித பிறவியே கிடைத்தற்கரிய பிறவியாதலால், இங்கு பெருங்காயம் மனித உடலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். கவன ஆற்றலை நான் என்னும் தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது மனிதப் பிறவியால் மட்டுமே முடியும். ஏனைய பிறவிகளுக்கு ஊழ்வினையில் கொடுப்பினை இருந்தால் மட்டுமே சாத்தியம். (இங்குதான் பேயாரின் (காரைக்கால் அம்மையார்) 🌺🙏🏼 அறிவுத் திறனை நாம் பாராட்ட வேண்டும். பெருங்காயமோ, சிறுகாயமோ, உன்னை என்றும் மறவாதிருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டார்! 😀)

🔶 வேரகத்து செட்டியாரே - வேரகம் - #திருவேரகம் - #சுவாமிமலை. செட்டியார் - (இங்கு) பலசரக்கு வாணிபம் செய்பவர். இவ்வண்டத்திலுள்ள அனைத்து சரக்குகளையும் வைத்து, அவற்றை உயிர்கள் அனுபவிக்க உழைப்பு என்னும் குடியிறையைப் பெற்றுக் கொண்டு வாணிபம் நடத்தும் சுவாமிமலையில் சமாதியாகியுள்ள பெருமான் - #தகப்பன் #சுவாமி!! 🌺🙏🏼

படிக்கும்போதே மனதிற்கு குதூகலத்தையும் 😊, பொருளை உணரும் போது பெரும் மகிழ்ச்சியையும் 😍 கொடுக்கும் இது போன்ற உயர்ந்த பொருள் பொதிந்த சிலேடைப் பாடல்களைப் இனி யார் தமிழன்னைக்கு அணிவிக்கப் போகிறார்கள்? 😔

🌱🌿🌳🌴

இந்த பாடல் எனக்கு கிடைக்கும் போதே நாமப்பேர்வழிகளின் கைங்கரியத்துடன் தான் கிடைத்தது. சீரகம் என்றால் ஸ்ரீ + அகமாம்! 😝 ஏரகம் என்றால் வைகுண்டமாம!! 😂 (கணவனும் மனைவியும் தனிதனிக் குடித்தனம் போலிருக்கிறது!! 😁) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தக் கூட்டம் சைவத்திலிருந்தோ, அத்வைதத்திலிருந்தோ கதைகளை சுட்டு வைணவ காப்புரிமை (நாமம்) போட்டுவிடும் என்பதை நன்கு அறிவேன். இது தான் முதல் முறை ஒரு சைவப் பாடலை சுடுவதைப் பார்க்கிறேன். அன்னை தமிழை யாரும் சரியாக கவனிப்பதில்லை என்பதாலா? "யாரும் சரியாக கவனிக்காத போது", "அனைவரின் கவனமும் வேறு திசையில் இருக்கும்போது", "இன்னும் புகழ் பெறாத மகான்"... எல்லாம் இவர்களது தொழிலின் உட்கூறுகள்!! அந்த கொங்கணவச் சித்தரும் (திருமலை பெருமாள் 🌺🙏🏼), சட்டை முனி சித்தரும் (திருவரங்கப் பெருமாள் 🌺🙏🏼) தான் இவர்களை திருத்த வேண்டும்.

💥💥💥💥💥

இப்படியே போனால் இவர்களது பாதையில் தொடர்ந்து வரும் பரங்கி மதத்தினர் இன்னும் சில தலைமுறைகளில் இப்பாடலை தமதாக்கி, சீரகம் எனில் உள்ளூர் கிளை என்றும், ஏரகம் எனில் இத்தாலியிலுள்ள தலைமை அலுவலகம் என்றும் கதை விட வாய்ப்புள்ளது!! 🤣🤣

💥💥💥💥💥

இன்று வரை வெட்டு, குத்து, குண்டு என்று தொழிலை ஓட்டும் வெடிகுண்டு மதத்தினர் ஒரு வேளை நாம பேர்வழிகளின் வழியில் பயணிக்க நேர்ந்தால்... சீரகம் எனில் உள்ளூர் தீவிரவாத பயிற்சி கூடத்திலுள்ள சுவர் என்றும், ஏரகம் எனில் கருப்புத்துணி மூடிய கட்டிடம் என்றும் கதை விடுவார்கள் என்று உறுதியாக கற்பனை செய்து கொள்ளலாம்!! 🤣🤣🤣

Thursday, May 9, 2019

என்றுமுள தென் தமிழ்!! 😍

நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்
என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்

-- #கம்பராமாயணம்

பொருள்: அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினார். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் (என்றுமுள) இனிய/அழகிய (தென்) தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவராகிய அகத்தியன், ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல் வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தார்.

"என்றுமுள" வேண்டிய தமிழ் இன்று? 😔

🥀🍃🍂🍂🍃🥀

ஆங்கிலேயர்களாலும், ஆரியர்களாலும் அழிந்தது போக மீதமிருப்பதை அழிக்க ஒரு பெரும் கருங்காலி கூட்டம் கடினமாக ஊழியம் செய்து கொண்டிருக்கிறது! வள்ளுவத்திற்கு முதலில் சமணச் சாயம் பூசி, தற்போது அதற்கு "இளம் வேதாகமம்" என்று பெயரும் வைத்துவிட்டது. ஆளுடையபிள்ளை முதல் வள்ளற்பெருமான் வரை அன்னைத் தமிழின் இறைத்தன்மையைப் போற்றிய அனைத்து அருளாளர்கள் & உரையாசிரியர்கள் மீதும் சேற்றை தெளித்துவிட்டது. மீதமிருப்பது தொல்காப்பியமும் ஐந்திரமும் மட்டுமே. இவ்விரண்டு நூல்களும் வெகு பழமையானது என்பதால், வள்ளுவத்துக்கு பயன்படுத்திய உத்தியை இங்கு பயன்படுத்த முடியாது என்பதால், இவற்றை மட்டம் தட்டும் ஊழியத்தில் இறங்கிவிடும்.

"#மெய்யின் #இயக்கம் #அகரெமாடு #சிவணும்" என்று தொல்காப்பியத்தில் வருவதாலும், இதே கருத்து அதற்கும் வெகு பழமையான ஐந்திரத்திலும் வருவதாலும் ("#மெய்யொளி #உயிரொலி #சிவணுதல் #இயல்பே"), "#தொல்காப்பியர் ஐந்திரத்திலிருந்து சுட்டவர்; சுய அறிவு கிடையாது." என்று சேறு தெளித்துவிடும். #ஐந்திரம் நமது நூலாக இருந்தாலும் ஆரியரும் அதன் புகழ்பாடுவர். மேலும், "சிவணுதல்" போன்ற சொற்களும் உடைத்தது. இவை போதாதா? ஆரிய, பார்ப்பனிய, ஏதேச்சாதிகார, ஆதிக்க சாதிவெறி கொண்ட, ... என்று பட்டங்கள் கட்டிவிடும்!! 😏

பின்னர், இறைத்தன்மையையும் சுய மதிப்பையும் இழந்த அன்னை தமிழ் ஆசீர்வாதமாய் இருக்கும்!! 🥴

🥀🍃🍂🍂🍃🥀

"மெய்யொளி உயிரொலி சிவணுதல் இயல்பே" - ஒளி போன்ற உடலும், ஒலி போன்ற உயிரும் இணைவது என்பது இயற்கையே என்கிறார் ஐந்திரத்தின் ஆசிரியர் #மயன் (#மாயாசூரன், #தேவசிற்பி, #விஸ்வகர்மா என்பன இவரது மற்ற பெயர்கள். இவர் மாமன்னர் இராவணின் மாமனார் என்பார் மறைந்த திரு. வை. #கணபதி #ஸ்தபதி அவர்கள்.). உடலியக்கத்தைப் பற்றி பேசும் இந்த செய்யுள் வரியை அடிப்படையாகக் கொண்ட தொல்காப்பிய சூத்திரம், "மெய்யின் இயக்கம் அகரெமாடு சிவணும்", தமிழ் எழுத்துக்களைப் பற்றி பேசுகிறது - மெய்யெழுத்துக்கள் தனித்து இயங்காது; உயிரெழுத்துக்களோடு இணைந்தால் தான் இயக்கம் பெறும். இவ்வாறு ஆராய்ந்து கொண்டு உள் சென்றால் இயற்கையன்னையும் தமிழன்னையும் வேறுவேறல்லர் என்பதை உணர்வோம்! 😍 இயற்கையின் இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தமிழை நன்றாக கற்றாலே போதும் என்பதையும் உணர்வோம்!! 🥰 இயற்கையின் இன்னொரு பெயர் இறைவன் என்பதால், இறைவனை உணர - மெய்யறிவு பெற - செய்ய வேண்டியதெல்லாம் "தமிழைக் கசடற கற்றலே" என்பதும் தெளிவாகும்!!! 😌

(#கசடற #கற்றல் என்றவுடன் பெண்டிங்க் / மெக்காலே முறையில் முனைவர் பட்டங்கள் வாங்கி குவிப்பதல்ல! 😁 #கல்வி எனில் கல் + வி = அசையாது + விடாது = நான் என்னும் தன்மையுணர்வை விடாது நாடி, புறம் நாடாது, தன்னை நாடி நிற்றல் = #நிலைபேறு. இப்படி தமிழைக் கற்க வேண்டும்.)

🎉🎇🎆🎆🎇🎊

"மெய்யொளி உயிரொலி... " - இவ்வுலகம் ஒலிஒளியால் ஆனது என்பதை விளக்கவே கூத்தப் பெருமானின் 🌺🙏🏼 மேலிரு கைகளில் டமருகமும் (ஒலி) நெருப்பும் (ஒளி) உள்ளது. இவ்வுருவின் கண்ணாடி பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட பெருமாள் 🌺🙏🏼 உருவில் ஒலியும் ஒளியும் இடமாறியிருக்கும் (சக்கரம் - ஒளி - வலப்புறம்; சங்கு - ஒலி - இடப்புறம்).

🎉🎇🎆🎆🎇🎊

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

-- #மனோன்மணீயம்

நமது தமிழ்தாய் வாழ்த்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல் இது! அந்நிய சக்திகளின் பொரைகளை உண்டு, வளர்ந்து, அப்போது தான் ஆட்சிக்கு வந்திருந்த கருங்காலி போலி திராவிடவியாதிகளின் செஞ்சோற்றுக் கடனால் இப்பாடல் இடம் பெறாமல் போனது!! 😠

ஒரு பொருளிலிருந்து சிறிது எடுத்தால் அப்பொருள் அளவில், எடையில் குறையச் செய்யும். ஆனால், பரம்பொருளிலிருந்து நாம் வாழும் பேரண்டம் தோன்றிய பின்னரும் பரம்பொருள் சிறிதும் குறையவில்லை (இக்கருத்து இடம் பெற்றிருந்து, மக்களின் சிந்தனையைத் தூண்டியிருந்தால், பலருக்கு தொழில் ஓடியிருக்காதே 😛). இது போலத் தான் நம் தமிழன்னையும். அவரிடமிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளுவ மொழிகள் (பிள்ளைகள்) தோன்றிய பின்னரும் அவரின் அழகு சிறிதும் குறையவில்லை என்கிறார் பாடலாசிரியர் பெ. சுந்தரனார். 😊 மேலும், ஆரியம் போல் வழக்கொழிந்து போகாமல் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று வியக்கிறார் ஆசிரியர்!

Monday, May 6, 2019

திருக்கடவூர் - எமபயம் போக்கும் தலம்!! 🌺🙏🏼

#திருக்கடவூர் - மார்க்கண்டேயருக்கு அருளிய தலம் - எமபயம் போக்கும் தலம் - #காலசம்ஹாரமூர்த்தி வெளிப்பட்ட தலம்

🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺


🔆 யம (Yama) என்பதை மாற்றிப் படித்தால் மாய (Maya) என்று வரும். அதாவது, மாயை - இல்லாதது (#பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼 அருளியது). யமனின் வாகனம் எருமை மாடு - சோம்பலைக் குறிக்கும். நம்முள் இருக்கும் இமைப்பொழுதும் நீங்காதான் தாள்களை இமைப்பொழுதும் நீங்காமல் பற்ற வேண்டும். ஒரு கணம் தவறினாலும் மாயையின் பிடிக்குள் போய்விடுவோம். ஆக, இறப்பு என்பது மெய்யிலிருந்து பொய்க்குள் போய் விழுவது! மற்றும், பிறப்பு என்பது பொய்யிலிருந்து மெய்க்கு வந்து சேருவது!!


"#மெய்யறிவு (#ஞானம்) கிடைத்த பிறகு என்னவாயிற்று?", என்று அன்பர் ஒருவர் கேட்டதற்கு, "அத்தோடு உயிர் பயம் போயிற்று", என்று பதிலளித்தார் பகவான் ஸ்ரீ ரமணர். ஆக, "எம பயம் போயிற்று" என்பதன் பொருள் "மெய்ஞானம் கிடைத்தது" என்பதாகும்! "எமபயம் போக்கும் தலம்" எனில் "மெய்ஞானம் அருளும் தலம்" என்பதாகும்!!


🔆 "#யமன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறைவனைப் பணிந்து நின்றார்" என்பதன் பொருள் - மெய்யறிவு தோன்றும் கணம் மாயக் காட்சிகள் மறைந்து போகும். பின்னர், மீண்டும் தோன்றும். மெய்யறிவு பெறுவதற்கு முன் மாயை என்பது அரைகுறை வெளிச்சத்தில் தெரியும் பாம்பு போன்றது; பெற்ற பின்  நல்ல வெளிச்சத்தில் தெரியும் கயிறு போன்றது (மெய்யறிவே வெளிச்சம்). மெய்யறிவு பெற்ற பின்னரும் மாயக் காட்சிகள் தொடரும். ஆனால், மெய்யறிவாளரை ஒன்றும் செய்யாது. யமன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறைவனைப் பணிந்து நிற்பதன் பொருள் இதுவே!!


🔆 மூலவரின் பெயர் திரு #அமிர்தகடேச்சுவரர். கடம் என்றால் குடம். இங்கு குடம் உடல் என பொருள்படும்.. அமிர்தம் என்பது இங்கு அழிவற்றது / இறப்பற்றது என பொருள்படும். இணைத்துப் பார்க்கும் போது "அழிவற்ற உடலை உடையவர்" என பொருள் வரும். "பிறப்பிலியான சிவப்பரம்பொருளுக்கு உடலா?", என்ற கேள்வி எழலாம். பொருள் நிலையைத் தாண்டிய இறையை (பரம்), பொருள் என்ற சொல்லோடு இணைத்து பரம்பொருள் என்றழைப்பது போல, தோன்றி மறையும் நுண்ணுயிரியின் உடல் முதல் விண்மீன் வரை அனைத்திற்கும் இடம் அருளும் அண்டத்தை இறைவனின் உடலாகக் கருதி இவ்வாறு பெயரிட்டிருக்கிறார்கள்.


🔆 #காலசம்ஹார #மூர்த்தி - தன்னை வணங்கிய மார்க்கண்டேயனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காலனை (யமனை) உதைத்து தள்ளியவர் என்று சுவைபட ஒரு பேருண்மையை பதிவு செய்திருக்கிறார்கள்.


சீவனாகிய நம்மால் ஓரளவிற்கு மேல் நமக்குள் ஆழ முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் வெளிமுகமாகவே செல்ல எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை, திரும்ப திரும்ப நான் என்னும் நமது தன்மையுணர்வின் மேல் கொண்டு வந்து வைப்பது மட்டுமே. ஒரு சமயத்தில் நமது இயலாமையை நாம் உணர்ந்து நமது முயற்சியை கைவிடுவோம் (இதுவே #சரணாகதி எனப்படும்). அச்சமயம் உள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நமக்கு ஒரு புதிய தெளிவைக் (அறிவு என்றும் கொள்ளலாம்) கொடுக்கும். இந்த ஆற்றலே காலசம்ஹார மூர்த்தி ஆவார் (இந்த காலசம்ஹாரம் வைணவத்தில் #ஆணவ #சம்ஹாரம் - #இரணிய #வதம் -  என்றும், காலசம்ஹார மூர்த்தி #நரசிம்மர் என்றும் மாறிவிட்டது.) கிடைத்த புதிய தெளிவே #தகப்பன் #சுவாமி (#சுப்ரமணியர்) எனப்படும் (சாக்தத்தில் #அன்னபூரணி என்று அழைக்கப்படுவதும் இதே தெளிவு தான்). இந்த தெளிவால், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு (மாயை) அழிந்துவிடும். காலசம்ஹாரம் - காலனை உதைப்பது என்பது இதுவே!! (உள், வெளி, ஆழ்ந்து, வெளிப்பட்டு என்பதெல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்தியுள்ள சொற்கள். உண்மையில் இருப்பது ஒரு பரம்பொருளே. காணப்படும் அனைத்து அதன் வெளிப்பாடே. நாம் இறைவனை தேடுவதென்பது: "ராமன் என்பவன் தன்னை ராமன் என்று உணர கண்ணாடி வேண்டுமோ?", பகவான் ஸ்ரீ ரமணர் 😀)


🔆 என்றும் 16 பெற்ற #மார்க்கண்டேயர் - இதை படித்ததும், மார்க்கண்டேயர் வரம் பெற்ற பிறகு 16 வயது இளைஞனாகவே வாழ்ந்தார் என்று நினைத்துக் கொள்வோம்!! இது தவறு. 😁


பகவான் ஸ்ரீரமணர் தனது 16 வயதில், மதுரையில் அவரது சிறிய தந்தையின் வீட்டில் தங்கியிருந்த போது மெய்யறிவு பெற்றார். பிற்காலத்தில் அவரது ஆசிரமத்திற்கு வந்த ஒர் அன்பர், "இத்தனை வருடங்களில் தங்களது (மெய்யறிவு) நிலையில் ஏதேனும் மாற்றமுண்டா?" என்று கேட்டதற்கு, பகவான், "இல்லை. அதே நிலைதான் இன்றும். சிறிதும் மாற்றமில்லை." என்று பதிலளித்தார்.


இது தான் "என்றும் 16" என்பதின் பொருள்!! மார்க்கண்டேயர் தனது 16 வயதில் மெய்யறிவு பெற்று மார்க்கண்டேய மகரிஷியாக 🌺🙏🏼 உயர்ந்திருக்கிறார். பின்னர், அந்த நிலையிலேயே வாழ்ந்து, இறுதியில் திருக்கடவூரில் திரு அமிர்தகடேச்சுவர அடையாளத்தின் கீழ்  சமாதியாகியிருக்கிறார். மெய்யறிவு பற்றிய அவரது அறிவுரைகளை அல்லது மெய்யறிவுப் பாதையில் அவருக்கு கிடைத்த பட்டறிவை தல வரலாறு, திருவிழாக்கள், இறை உருவங்கள் மற்றும் இறை பெயர்கள் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!! 🙏🏼


🌸🏵️🌻🌷🌼🌹💮


தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி

விலக்குவா ரிலாமை யாலே விளக்கத்திற் கோழி போன்றேன்

மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்து

கலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னீரே


-- அப்பர் 🌺🙏🏼 தேவாரம் 4.31.5


பொருள்: கடவூர் வீரட்டனீரே! நாணத்தக்க செயல்களையே செய்து வாழ்நாளைக் கடத்தி, ஏற்ற செயல் எதுவும் செய்யாமல், தவறு செய்வதைத் தடுத்து நல்வழிப்படுத்துவாரும் ஒருவரும் இல்லாமையால், செஞ்சுடர் விளக்கத்தில் தானே கூவித் தானே அடங்கும் கோழியைப் போல உள்ளேன். என் மனத்தினுள்ளே ஐம்பொறிகளும் கலக்கத்தைத் தருகின்றன. யமனுடைய ஏவலர்கள் வந்து கலக்குதலால் யான் யம பயத்தாற் கலங்குகின்றேன்.


🌸🏵️🌻🌷🌼🌹💮


குறிப்புகள்:


1. இணைப்பு படம்:  சென்ற 13/04/19 சனிக்கிழமையன்று திருக்கடவூரில் நடந்த யம சம்ஹார விழாவின் போது எடுக்கப்பட்ட படம். திரு சிவ ஏ விஜய் பெரியசுவாமி அவர்களின் முகநூலில் பக்கத்திலிருந்து எடுத்தேன்.


2. திருக்கடவூர் பழம்பெரும் தலமாக இருந்தாலும், எண்ணற்ற அருளாளர்களை ஈர்த்த தலமாக இருந்தாலும், மக்கள் வரவு அதிமாக இருப்பதால், அமைதியும் தனிமையும் வேண்டுவோர் அருகிலுள்ள இன்னொரு தேவாரப் பாடல் பெற்ற தலமான #திருக்கடவூர் #மயானம் செல்லலாம். என்ன ஓர் அமைதி!! 😍 நம் தனித்துவத்தை இழக்க - நான் என்னும் வடிவில் ஒளிரும் இறைவனின் திருப்பாதத்தை பற்றிக் கொள்ள _ தவமியற்ற சிறந்த தலம்!! 😌

மழை வேண்டி நம் கோவில்களில் பூசைகள், வேள்விகள் நடத்துவது மூடத்தனமாம்!! 😏

https://thewire.in/government/tamil-nadu-drought-yagnas

என்ன செய்வது? அரசின் கட்டுப்பாட்டில் சிலை திருட்டுத்துறை மட்டும் தானே உள்ளது!! 😒

வேண்டுமானால் ஒன்று செய்யலாம்... 🤔

சுவர் திருட்டு துறை, எச்சில் பிஸ்கோத்து திருட்டுத்துறை ஆகியவற்றை உருவாக்கி, நாட்டிலுள்ள தீவிரவாத பயிற்சி கூடங்களையும், எம்.எல்.எம் தொழில் செய்யும் நிறுவனங்களையும் அதனதன் துறைகளின் கீழ் கொண்டுவந்து, கோரி, கஜினி, தைமூர், பாபர், அக்பர், அவுரங்கசீப் என்று செவிப்பறை கிழிய கத்தச் சொல்லலாம்; பெலனில்லை, ராஜரீகம், ஆசீர்வாதமாய் போன்ற வார்த்தைகளைப் போட்டு கோலமாவு உறிஞ்சிய எஃபெக்ட் கொடுக்கலாம்!! இவையெல்லாம் பக்கா பகுத்தறிவு கணக்கில் வரும்.

எப்படி வசதி? 😎

😝😆😂🤣