Sunday, February 19, 2017

"சப்பாணி" கோப்பர்நிக்கஸ்

"சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன" என்பதை இந்தப் பரங்கி தான் கண்டுபிடித்தானாம்! 😛 இவனக்கு கிரேக்க சிந்தனைகளின் தாக்கம் இருந்ததாம். (அப்போ இவரு புள்ளகுட்டி பெத்துகிறதுக்கு பொம்பள பொண்டாட்டியும், சமூகத்துக்காகவும் உடல் சுகத்துக்காகவும் ஆம்பள பொண்டாட்டிங்கள வெச்சிருந்தாருங்களா?). 😝😂

பார்த்திருப்பான் பரங்கி பொறுக்கி வாஸ்கோடகாமா பாரதத்தைக் கண்டுபிடித்ததாக புருடா விட்டு உல்லாச வாழ்க்கை வாழ்வதை. 🤔 "நமக்கென்ன குறைவு? நாமும் நம் பரம்பரையும் காலகாலத்திற்கு உட்கார்ந்து சாப்பிட வேண்டும்." என்று முடிவெடுத்திருப்பான். விளைவு? காமாவால் "கண்டுபிடிக்கப்பட்ட" பாரதத்திலிருந்து சில விஷயங்களை சுட்டு, அங்கே தான் கண்டு பிடித்ததாக படம் காண்பித்திருப்பான். பின்னர், லார்ட் லபக்தாசுகள் நம்மை ஆண்ட போது (அதாவது "கொள்ளையடித்த போது"), "நாங்க ஒசத்தியாக்கும்" என்று காட்ட சுட்டவனை கண்டுபிடித்தவனாக நம் தலையில் கட்டிவிட்டார்கள். 😛😜😝

💥 *சிலப்பதிகாரத்தில் வரும் ஞாயிறு என்ற தமிழ் வார்த்தையின் பொருள் "நடுவில் தொங்குவது / இருப்பது".* ஹாலிவுட் அல்வாக்களில் வரும் நேர பயணத்தை மேற்கொண்டு இளங்கோவடிகள் இவனை சந்தித்து விட்டு மீண்டும் பின்னோக்கி சென்றிருப்பார். வேறு வழியேயில்லை. 😉😀

💥 *பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் 108 பூமிகள் என்று விஸ்வாமித்திர மகரிஷி கண்டறிந்தார்.* கோப்பர்நிக்கஸின் கண்டுபிடிப்புக்கு முன்னர் இதெல்லாம் பிசாத்து. 😁😂

இவனது படத்தைப் பாருங்கள். "சந்தைக்குப் போகணும்... ஆத்தா வையும்... காசு குடு." என்று கேட்கும் கேரக்டர் ஒப்பனை செய்து கொண்டது போல் ஒரு முகம்!! 😂😂😂

(இணைப்பு: தினமலர் - சென்னை - 19/02/2017)

Wednesday, February 15, 2017

திரிபுரம் எரித்தது சிவன் அல்ல! அம்பு!! 😂

இணைக்கப் பட்டிருக்கும் அல்வாவை சுவைத்து விட்டு வாருங்கள்... 😀

முப்புரம் எரித்தது சிவபெருமான் இல்லையாம்! பெருமாள் கொடுத்த அம்பு தான் எரித்ததாம்!! அறிவாளிகள்!!! 😜

அப்படியானால், இராவணனைக் கொன்றது இராமன் இல்லை போலிருக்கிறது. இராமன் எய்த அம்பு. இப்படியே இதை வளர்த்துக் கொண்டு போகலாம். நாட்டில் ஏதாவது கருவியை வைத்து கொலை நடந்தால், அந்தக் கருவியைக் கைது செய்தால் போதும். 😝

"நாங்க அதுக்கும் மேல" என்று படம் காட்டுவதற்காக இப்படி ஒரு பிட்டைப் போட்டிருக்கிறார்கள். *முதலில், சிவன், பெருமாள், சக்தி என்று யாருமில்லை. இவையெல்லாம் தத்துவங்கள். பேருண்மைகளின் வடிவங்கள்.  அண்டத்திலும் பிண்டத்திலும் இயங்குபவை.* பெருமாள் தத்துவத்தை முன்னிறுத்துவதற்காக இப்படிக் கதை விட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். பெருமாள் என்ற வார்த்தை ஒரு காலத்தில் சிவ தத்துவத்தைத் தான் குறித்தது. எப்படி பள்ளிவாசலை முகம்மதியர்களிடமும், மாதாவை சர்ச்சியர்களிடமும் இழந்தோமோ, அப்படியே பெருமாளை வைணவர்களிடம் இழந்தோம். 🙁

*மூன்று கோட்டைகள் (முப்புரம்) என்பது தூல, சூக்கும, காரண உடல்கள் அல்லது கனவு, நனவு, தூக்கம் என்ற நிலைகள் அல்லது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் ஆகும்.* "மூன்று கோட்டைகளும் ஒரு நேர்கோட்டில் வரும் போது ஒரே அம்பினால் மூன்றையும் சிவபெருமான் அழித்தார்" என்பதெல்லாம் உவமானம் தான். *ஒரு ஜீவன் ஞானமடையும் (சிவநிலையை அடையும்) நிகழ்வைத் தான் இப்படி சித்தரித்திருக்கிறார்கள்.* "மூன்று மனைவிகளுடைய ஓர் ஆண் இறந்தால், அவனது மனைவியர் ஒவ்வொருவராக கைம்பெண் ஆவரா? அல்லது மூவரும் ஒரே நேரத்தில் கைம்பெண்கள் ஆவரா?" என்று கேட்பார் பகவான் ஸ்ரீரமணர். 👌 🙏 உண்மையில் அழிக்கப்படுவது "நான் இவ்வுடல்" என்ற பொய்யறிவு. இந்தப் பொய்யறிவு அழியத் தேவையான அம்பு - சரியான அறிவு.

*மங்கலான வெளிச்சத்தில், சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் கயிறு பாம்பு போல தோற்றமளிக்கும். நமக்கு பயத்தைக் கொடுக்கும். சரியான வெளிச்சத்தைப் பாய்ச்சியவுடன் கயிறு என்ற உண்மைத் தெரியவரும். நமது பயமும் போய்விடும். இவ்வாறே இந்த உலகம் உன்மையென்றும், நாம் இவ்வுடல் என்றும், நாம் தேடும் நிம்மதி இவ்வுலகில் உள்ள பொருட்களில் உள்ளதென்றும் புறத்தே தேடித்தேடி அல்லல் படுகிறோம். "நாம் இவ்வுடல் அல்ல" என்ற சரியான வெளிச்சம் பட்டவுடன் நம் தேடுதல் நின்று போகிறது. அகத்தே திரும்பி, "நாம் இது வரை தேடியது நம்மையே" என்றுணர்ந்து  தேடுதலும் நின்று போகிறது. தேடுபவனும் அழிந்து போகிறான். இதுவே ஞானம், முக்தி, சமாதி எனப் பலவாறு அழைக்கப்படுகிறது. அந்த சரியான வெளிச்சம் - சரியான அம்பு - ஒரு வார்த்தையாக, வாக்கியமாக, காட்சியாக, நினைவாக, எண்ணமாக, சிந்தனையாக என எது வேண்டுமானாலும் இருக்கலாம்.*

இந்த அம்பு உயிரற்றது (ஜடம்; வார்த்தை, வாக்கியம், ... உயிரற்றவைத் தானே). ஆகையால், இது பெருமாளின் அம்சம் எனக் கணக்கிட்டுள்ளனர் (சிவன் - உயிர், பெருமாள் - உயிரற்றது). இதே கணக்கை வைத்து, "அர்ஜுனன் தெளிவு பெற்றது ஸ்ரீகிருஷ்ணரால் அல்ல. அவரின் வார்த்தைகளால் தான். ஆகையால், பகவத் கீதையைப் போற்றினால் போதும். ஸ்ரீகிருஷ்ணரை வணங்கத் தேவையில்லை." என்றால் ஏற்றுக் கொள்வார்களா? 😁

"நீங்க கேக்குற கேள்வியெல்லாம் சரிதான்னா, ஏன் திருவதிகை திரிபுரம் எரிப்பு திருவிழாவில் திருசரநாராயணப் பெருமாளிடம் திருவீரட்டானேஸ்வரர் சரம் (அம்பு) வாங்குகிறார்?" என்று கேள்வி எழலாம். 🤔

*இதற்கு ஒரே பதில்: தலையெழுத்து!!* சமூக ஒற்றுமைக்காக, சைவ-வைணவ ஒற்றுமைக்காக நம் பெரியோர் தலையெழுத்தே என்று தங்களை தாழ்த்திக் கொண்டிருப்பார்கள். 😞

நம் நாட்டுக்கு, சமயத்துக்கு, மொழிக்கு, கலாச்சாரத்துக்கு, வாழ்க்கைக்கு, செல்வங்களுக்கு "எவ்வளவோ நல்லது" செய்த ஆரியர்களை, சமண பெளத்தர்களை, முகம்மதியர்களை, பரங்கி மதத்தவர்களை நாம் ஏற்றுக் கொண்டுவிட்டோம். வைணவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோமா? என்ன, மற்றவர்களோடு ஒப்பிடுகையில் இவர்கள் கொஞ்சம் குறைவாக "நல்லது" செய்திருக்கிறார்கள். பரவாயில்லை. 😂😝

🌸🏵🌹💮🌺🌷🌼

*அடுத்து, வக்ராசுரனை வதைத்த களைப்பு போக போக சயனத்தில் இருக்கிறாராம் ஸ்ரீ நரசிம்ஹர்!* 😂

இதைப் படித்துவிட்டு பள்ளிகொண்ட பெருமாளும், அவரது படுக்கையான ஆதிசேஷனும், ஸ்ரீகிருஷ்ணரும்,  ஸ்ரீநப்பின்னை பிராட்டியாரும் ஸ்ரீபோக நரசிம்ஹரிடம் வந்து, "எங்க வம்புக்கு ஏன் வருகிறீர்?" என்று சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள்!! 😂😂

🔥 *முதலில் பள்ளிகொண்ட பெருமாள். இந்த வடிவம் சிவலிங்கத்துக்கு சமம்.* சிவலிங்கம் ("சிவநிலையிலுள்ள ஒரு மகானின் சமாதியின் அடையாளம்" என்கிற பொருளுக்கு அடுத்தபடியாக) மொத்த அண்டத்தைக் குறிக்கும். அண்டம் என்பது உயிர்கள் மற்றும் உயிரற்றவைகளின் கலவை. இதை வைணவத்தில் தனித்தனியாகக் காண்பித்துள்ளனர். *ஆதிசேஷன் (5 தலைகள் - ஐம்பூதங்கள்) உயிரற்றப் பகுதியைக் குறிக்கும். பெருமாள் உயிர்ப் பகுதியைக் குறிப்பார்.*

🔥 *அடுத்து, ஸ்ரீநரசிம்ஹர். இந்த வடிவம், ஞானமடைதலின் கடைசி நிலையான சரணாகதியின் போது உள்ளிருந்து வெளிப்படும் இறை சக்தியைக் குறிக்கும். சடாரென்று வெளிப்பட்டு நம் தனித்துவத்தை (அகந்தையை - வக்ராசுரனை) கபளீகரம் செய்துவிடும்.* ஆகையால், சிங்கமுகம் (மேற்கொண்டு இவரைப் பற்றி அறிய https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/Sbx4S7jWGhN).

🔥 *இறுதியாக, ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் நப்பின்னை பிராட்டியார். ஸ்ரீகிருஷ்ண வடிவம் அஞ்ஞான இருள் விலகிய ஞானியைக் (சிவனை) குறிக்கும். ஞானமடைந்த பின், பூத உடல் இறக்கும் வரை, அவ்வுடலின் ஐம்புலன்களின் வழியே கிடைக்கும் இன்ப துன்பங்களை (நப்பின்னையை) ⭐ஆனந்தமாக⭐ அனுபவித்துக் கொண்டிருப்பார் அந்த ஸ்ரீகிருஷ்ணர். புலன் அனுபவம் = நப்பின்னை பிராட்டியார்.* (மேற்கொண்டு பிராட்டியைப் பற்றி அறிய https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/akrUTZKEUMo)

ஆக, மூன்று பேர் செய்யக் கூடிய வேலைகளை ஸ்ரீநரசிம்ஹரே செய்து விட்டு ஜாலியாக போக சயனத்தில் படுத்திருந்தால், வேலை பறி போனவர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்!! 😂😂😂

🌸🏵🌹💮🌺🌷🌼

*இனி, திருவதிகை வீரட்டானம் என்னும் பழம் பெரும் தலத்தைப் பற்றி சிறிது பார்ப்போம்.*

🔥 அப்பர் பெருமான் ஆட்கொள்ளப்பட்டத் தலம் என்ற ஒரு சிறப்பு போதுமே இத்தலத்தின் சிறப்பை அறிய. 😅

🔥 நால்வராலும் பாடல் பெற்றத் தலம் என்பதை படிக்கும் போதே உற்சாகம் பொங்கும். 😍

🔥 வீரட்டானம் எனில் வீரச் செயல் நிகழ்ந்த இடம். இது போன்று 8 தலங்கள் உண்டு. *இங்கு சமாதியாகியிருக்கும் மகான்கள் செயற்கரிய செயல் ஏதேனும் செய்திருப்பர் அல்லது மிகப் பெரும் உண்மை(களை)யை உணர்ந்து வெளிப்படுத்தியிருப்பர்.* உதாரணத்திற்காக இந்தத் தலத்தையே எடுத்துக் கொள்வோம். *புகழ் பெற்ற நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உருவாக்கியது இங்கு சமாதியில் உறையும் மகான் (சிவன்) தான்.* 🌸🙏

🔥 *மேலும், இப்பெருமான் "ஒரு புன்சிரிப்பினாலேயே முப்புரத்தையும் எரித்தார்" என்கிறது தல புராணம் (அதாவது, ஒரு கணப்பொழுதில் ஞானமடைந்திருக்கிறார்).* "இது எப்படி செயற்கரிய செயலாகும்?" என்று கேட்கலாம். தொன்று தொட்டு வரும் "நான் இன்னார்" என்ற எண்ணத்தை சுட்டெரிப்பது அவ்வளவு சுலபமல்ல. இதற்காக புத்த பிரான் மாட்டுச்சாணியை உண்டு பார்த்திருக்கிறார். ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு சுகாதாரப் பணியாளர் ஒருவரின் இல்லத்துக் கழிவறையை தன் கைகளால் சுத்தம் செய்து, தனது தலைமுடியால் துடைத்துப் பார்த்திருக்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. இம்மகான்களின் போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும் திருவதிகை மகானின் முப்புர எரிப்பு ஏன் செயற்கரிய செயலாகக் கருதப்படுகிறதென்று. திருவதிகை மகானை உயர்த்திக் காட்டுவதற்காக மற்றவர்களை தாழ்த்திக் காட்டவில்லை. *இம்மகான்கள் போராடியது நாம் போராடாமல் இருக்கவே.* திருவதிகை மகான் அனைத்தையும் முயற்சி செய்துவிட்டு, இறுதியில் "அட, இவ்வளவு தானா?" என புன்முறுவலுடன் ஞானத்தை அடைந்திருக்கலாம். அல்லது, செய்ய வேண்டிய தவங்களை முற்பிறவியில் முடித்துவிட்டு இப்பிறவியில் ஒரு நொடியில் சிவநிலையை அடைந்திருக்கலாம். இதற்கு உதாரணமாக பகவான் ஸ்ரீரமணரின் பதிலை மேற்கோள் காட்டலாம். பகவான் 16 வயதில் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், எந்த தவமும் செய்யாமல் ஞானமடைந்தவர். பின்னாளில் பக்தர்கள் இதுபற்றி கேட்ட போது, "நீங்கள் குறிப்பிடும் தவ முயற்சிகளை முற்பிறவிகளிலே முடித்துவிட்டேன்" என்று பதிலளித்தார்.

*திருவதிகை சிவன் ஒரு புன்சிரிப்பினால் முப்புரத்தை எரித்ததோடு நிற்காமல், மற்றவர்களும் அங்ஙனமே சிவ நிலையை கணப்பொழுதில் அடைந்திட வழிவகுத்து விட்டேச்சென்றார் - சிதறு தேங்காய் உடைத்தல் எனும் சடங்கின் வழியாக.* 👍

*ஆம், சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் இத்தலத்திலிருந்தே பிறந்துள்ளது.* தேங்காய் உடைத்தல் நமது கர்வத்தை (அகந்தை - அகங்காரம் - உள்+உடல்) அழித்தலுக்குச் சமம். தேங்காய்க்கு உள்ளிருக்கும் வெளியும், வெளியே இருக்கும் வெளியும் ஒன்று தான். தேங்காயை உடைக்க (நமது தனியிருப்பை அழிக்க), இரண்டும் வேறில்லை என்ற உண்மை புலப்படும். ஞானம் ஒன்றும் புதிதாக அடையப்பட வேண்டியதில்லை. ஏற்கனவே நம்மிடம் இருப்பது தான். அதை உணராமல் தடுப்பது நம் அகங்காரம் தான். அதை அழித்தால் போதும். 👏

🌸🏵🌹💮🌺🌷🌼

*வெளிவிட்டேன் உன் செயல் வெறுத்திடாது*
*உன் அருள் வெளிவிட்டு எனைக்கா அருணாசலா*
-- பகவான் ஸ்ரீரமணர் 🌼🙏

🔯 ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய 🔯

*தென்னாடுடைய சிவனே போற்றி*
*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி*

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

(இணைப்பு: தினமலர் - ஆன்மிக மலர் - சென்னை - 11/02/2017)

🌸🙏🌼🙏🌼🙏🌸

Thursday, February 9, 2017

Bhagavaan Shree Ramana Maharshi's daily life 

(as told by Prof. NR Krishnamurti to V Ganesan):

- Personal cleanliness
- Tidiness of dress
- Habitual wearing of vibhuti and kumkum on the forehead
- Equal sharing of all enjoyment with those around him
- Strict adherence to a time schedule
- Performing useful work however ‘low’ it may be
- Never leaving a work unfinished
- The pursuit of perfection in every action
- Incessant activity except while sleeping or resting after a spell of hard work
- Never considering oneself superior to others
- Speaking the truth always, or strict silence if the expression of truth would hurt or lower the reputation of others
- Perfect self-help
- Never asking another to do a piece of work which can be done by oneself
- Taking full responsibility for failure, if any, without shifting the blame on others
- Accepting success or failure with equanimity
- Never disturbing the peace of others
- Leaving the leaf-plate clean after eating
- Complete non-interference in the affairs of others
- Never worrying about the future

🔯 ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாசல ரமணாய 🔯

🌸🙏

தமிழ் - மொழிகளின் தந்தை!!

இன்று தைப்பூச நன்னாள். *#வள்ளலார் என்றும், வள்ளற் பெருமான் என்றும் அழைக்கப்படும் #திருராமலிங்க #அடிகள் #சித்தி #வளாக அறை ஒன்றினுள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்ட நாள்!* 🌸🙏

🌸🏵🌹💮🌺🌷🌼

ஒரு முறை சங்கராச்சார்யாரை பெருமானார் சந்திக்க நேர்ந்தது. *ஆச்சார்யார் "சமற்கிருதமே மொழிகளின் தாய்" என்று வாதிட, பெருமானார் "#தமிழ் #மொழிகளின் #தந்தை" என்று கூறி, உடன் இருந்த தன் மாணவர் ஒருவரை விளக்கச் சொன்னார் ("இதை நான் விளக்குவானேன், என் மாணவனே இதற்குப் போதும்" என்ற எண்ணத்தில்).* 👏👍☺ பின்னர், பெருமானார் அவ்விளக்கத்தை அச்சிட்டுப் புத்தகமாக வெளியிட்டார்.

அவ்விளக்கத்தை கீழே தந்துள்ளேன் (vallalar.org என்னும் வலைத்தளத்திலிருந்து எடுத்தேன்) கால வெள்ளத்தால் நமது தமிழ் வெகுவாக நீர்த்துப் போய்விட்டது. சைவமும் தமிழும் கற்றவர் மட்டுமே புரிந்து கொள்ளும் படியாக உள்ளது பெருமானாரது விளக்கம். யாரேனும் இதை இக்காலத்திற்கேற்ப மாற்றி, பாமரரும் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் எழுதி வெளியிட வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி வெளியிட்டால், அப்பணி, இன்றைய நிலையில், அன்னைத் தமிழுக்குச் செய்யும் அரும்தொண்டாக அமையும்! 🙏

🌸🏵🌹💮🌺🌷🌼

*"தமிழ்" என்னும் சொல்லுக்கிட்ட உரை*

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை.

அ அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம்.

இ பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்கரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக் காதாரமாகி உயிரினுக்குடலையொத்துக் குறிக்கப்படும் த், ம், ழ் எழுத்துக்களுக் குரை:

த் ஏழாவது மெய்;

ம் பத்தாவதாகும்;

ழ் 15-வது இயற்கை உண்மைச் சிறப்பியல் அக்கரமாம்.

ஐந் தலகுநிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புபக்ஷத்தாரால் அனாதியாய் - சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் - கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமை என்று நிருத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை:-

த் - அ:- தத்வரூபாதி சிவபோகாந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறியவிடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய த் என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம். அ - அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத் துட்பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர் நிலையிற்றலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவநிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம். என்னவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று.

ம் - இ:- சங்கார ப்ரணவமாகிய மகாரம் முக்தான்மாக்களுக்கு ஒளிவண்ணச் சதானந்தமாயும் பெத்தான்மாக்களுக்கு இருள் வண்ணமலரூபமாயும் இருந்து கற்பாந்தப் பிரளய முடிவின் சிருஷ்டி திதியாதிகளில் சிதான்ம சக்தியாகிய ஜீவனுக்கு அதிகரணமாகவும், முற்குறித்த பத்தாவது நிலயமாகிய ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம்.

இ - பன்னீருயிர்நிலைகளில் மூன்றாம் நிலை உயிராகிய இகாரம் திரிகலா ஆன்மவருக்கத்தில் அபரமாகிய சகலாகலரையும் பரமாகிய பிரளயாகலரையும் கீழ்ப்படுத்தி அவ்விரு கூட்டத்தாருக்கும் மேற்பட்டு நின்ற சுத்த விஞ்ஞானகலராகிய சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம். என்னவே, ஆதார ஆதேயக் கூட்டுறவால் என்றுந் தோன்றி விளங்கும் சிதான்ம வருக்கங்கள் பரபதி லக்ஷியமாகிய பூரணானந்தத்திற்கு அனுபவிகளாக உரியவர்களெனக் குறிக்கொள்ளல் வேண்டும்.

ழ்:- இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரதகண்டத்தில் பௌராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை யுரிமையாயும், முத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்ததற்குப் பரமேசுரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழிற் காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஸ்ரீமாணிக்கவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட் டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும், பலநாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுர ஒலிபேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ’யம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேட வேண்டியதாயும், அவ்வவைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெறவேண்டியதற்குப் பாஷ’யகாரர்கள் வியாக்கியானகர்த்தர்கள் டீக்காவல்லபர்கள் டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற ஆரியம் மகாராட்டிரம் ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும் கவிசெய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்கார மின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ், ற், ன் என்னும் முடிநடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்.

உரை கூறிப்போந்த சுத்தசித்தாந்த ஆரிடரீதி முப்பதவுரைப் பொழிப்பு:- மருளியற்கை மலஇருளைப் பரிபாகசத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க.

*இதன் கருத்து யாதெனில்:- தமிழ்ப்பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்கு மென்பதாம்.*

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

🌸🏵🌹💮🌺🌷🌼

இணைப்புகள்:

1. பெருமானாரின் வரைபடம் அவரது கையொப்பத்துடன்

2. பெருமானார் திருக்காப்பிட்டுக் கொண்டு, தனது உடலைக் காற்றில் கரைத்து, தானும் அருட்பெருஞ்ஜோதியுடன் (இவ்வண்டத்துடன் / பரப்பிரம்மத்துடன்) கலந்த அறை

"தமிழ் நாடகத் தந்தை" #பம்மல் #சம்பந்த #முதலியார் பிறந்த தினம் இன்று!!

(இணைப்பு: தினமலர் - சென்னை - 09/02/2017)

Tuesday, February 7, 2017

மோதிலால் நேரு

#மோதிலால் #நேரு - இந்தக் கேடுகெட்டவனைப் பற்றியும், இவனது தேசத் துரோக பரம்பரை பற்றியும் எவ்வளவோ செய்திகள் வெளியில் வந்த பிறகும், இன்னமும் இவர்களை காஷ்மீர் பண்டிதர்கள் என்றும், நாட்டுக்கு உழைத்தவர்கள் என்றும் ஏன் ஊரை ஏமாற்றுகிறார்கள் என்றுத் தெரியவில்லை? 😡

💥 இவர்கள் இந்தியாவை சீரழித்த மொகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். காஜி என்பது குடும்பப் பெயர். இவர்களது மூதாதையரான கியாசுதீன் காஜி என்பவனின் காலத்தில் டில்லியில் சிப்பாய் கலகம் ஏற்பட்டது. அதை அடக்கி முடித்த கையோடு, பரங்கியர்கள் மொகலாய மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்களை அழிக்கத் தொடங்கினர். அச்சமயம் உயிர் தப்ப இந்த காஜி குடும்பத்தினர் இந்து வேடம் போட்டுக் கொண்டனர். இவர்களது பூர்விக வீட்டிற்கு அருகில் ஒரு கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. அது இந்தியில் நேஹ்ர் என்றழைக்கப்பட்டது. நேஹ்ருக்கு அருகில் வசித்ததால் நேஹ்ருக்கள் ஆனார்கள். தமிழில் நேரு என்றழைக்கிறோம். ஆனால், ராஜீவ் கான் (ராஜீவ் காந்தி) காலம் வரையில் இவர்கள் மனதளவில் முகம்மதியர்கள் தாம் (தற்போது எஞ்சியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிறித்தவர்கள்). *வெளிநாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜீவ் கான் "இந்தியாவை 300 வருடங்களுக்கு முன்பிருந்ததைப் போல் மாற்றவேண்டும்" என்று பேசியுள்ளான்* (அதாவது, காலையில் எழுந்தவுடன் மனதிற்குத் பிடித்த திசையில் பயணித்து, கைகள் ஓய்ந்து போகும் வரை அல்லது மனது உற்சாகம் இழக்கும் வரை இந்துக்களை வெட்டித் தள்ளுவது 😠).

💥 மோதிலால் காஜி ஒரு விபச்சார விடுதியின் சொந்தக்காரன். அவ்விடுதியில் பிறந்தவனே ஜவஹர்லால் காஜி. இக்காரணத்தினால் தான் இவன் பிறந்தவிடம் இன்னும் நினைவிடமாக்கப்படவில்லை.

💥 இவன் ஒரு முகம்மதியனிடம் வேலைப் பார்த்துவந்தான். அவன் "மர்மமான முறையில்" இறக்கவே, அவனது மனைவியையும் அந்த நிறுவனத்தையும் இவன் தக்க வைத்துக்கொண்டான்.

💥 இப்படி இவனுக்கு பல பெண் தொடர்புகள். இந்தத் தொடர்புகளின் வழியாக இவன் பெற்றெடுத்த குப்பைகளே ஜவஹர்லால், ஜின்னா, ஷேக் அப்துல்லா, விஜயலட்சுமி போன்றோர். "இவனது பிள்ளைகள் நாட்டை ஆள வேண்டும். அவர்கள் ஆளும் நாட்டை/பகுதியை சீரழிக்க வேண்டும்." என்பது இவன் வாங்கி வந்த வரமாக இருக்கவேண்டும். மேலும், இவனது வாரிசுகள் ஒன்று கூட ஒரு ஒருவனுக்கு-ஒருத்தி என்ற கொள்கையில் வாழ்ந்தது கிடையாது. (யார் யாருக்குப் பிறந்தார்கள், யார் யாருடன் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், ஜவஹர்லாலிடம் வேலை செய்த ஓ.பி.மாத்தை என்பவர் எழுதிய புத்தகத்தைப் படிக்கவும். இணைக்கப்பட்டிருக்கும் பரம்பரை விளக்கப் படத்தையும் பார்க்கவும். 😵😜😝)

💥 இடாவா மன்னர் இறந்த பின், அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாததால், நாட்டை பரங்கியர் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதிலிருந்து தப்பிக்க ராணி இவனை நாடினார். இவன் அடிப்படையில் ஒரு வழக்கறிஞன். வேண்டுமென்றே வழக்கை உள்ளூர், டில்லி மற்றும் லண்டன் நீதிமன்றங்களுக்கு என இழுத்து பெருந்தொகையைப் பிடுங்கினான் (உள்ளூர் - 5 லட்சம், டில்லி - 5 லட்சம், லண்டன் - பெருந்தொகை என்று மட்டும் வரலாறு சொல்கிறது. எனில், 15-20 லட்சம் இருக்கலாம். இன்றைய மதிப்பில் சுமார் 150-180 கோடிகள். மேலும், இன்றைய அமேதி தொகுதியையும் இனமாக பெற்றான். இன்று வரை அமேதியின் முடிசூடா மன்னர்களாக இந்தக் குப்பை பரம்பரை வலம் வருவதன் பின்னணி இது தான்.)

💥 இவர்களை காஜிக்கள் என்றோ, நேருக்கள் என்றோ, காந்திகள் என்றோ அழைப்பது தவறு. ஜவஹர்லாலின் பட்டப்பெயரான மாமா என்பதை வைத்து இவர்களை மாமாக்கள் என்றழைப்பதே சரி. ஏனெனில், இன்று வரை இவர்கள் செய்தது "மாமா" வேலை தான்!! 😛😜😝

(இணைப்புகள்: 1. தினமலர் - சென்னை - 06/02/2017, 2. காஜி பரம்பரை விளக்கப்படம்)