Showing posts with label பேமானி. Show all posts
Showing posts with label பேமானி. Show all posts

Thursday, December 7, 2023

பேமானியாகலாம்! ஞானியாக முடியாது. 😏


இயேசுவே மெய்யானத் தேவன். ஞானியாக முயற்சிக்காதீர்கள். அது சாத்தானின் வேலையாகும்.


😆😆😂🤣🤣


(மேற்கண்ட வரிகளை, சில நாட்களுக்கு முன்னர், ஒரு ஆட்டோவின் பின்புறம் பார்த்தேன். மழை பெய்துகொண்டிருந்ததால் படமெடுக்க இயலவில்லை.)


அவனவன், இயேசு அடைந்த நிலையை அடைந்துவிட்டால், பாவமன்னிப்புத் தொழில் எப்படி நடக்கும்? ஒப்பாரி நிலையங்களை எப்படி தொடர்ந்து நடத்துவது?


குறி மதத்தை பொருத்தவரை, இந்த வம்பே வேண்டாமென்று தொடக்கத்திலிருந்தே கட்டுப்படுத்தியுள்ளனர். இறுதிவரை பஸ்கி, தண்டால்தான்! இம்மதத்தின் நிறுவனர் இறந்தபிறகு, அவனவன் தன்னை இறைத்தூதனாக அறிவித்துக்கொண்டு, தொழில் தொடங்கியுள்ளான். எல்லோரையும் அடக்கி, கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பெரும் பாடுபட்டுள்ளனர். எனவே, ஒருவரும் விழித்துக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்கின்றனர்.


(இங்கு சில கேள்விகள் எழவேண்டும்:


- திருஞானசம்பந்தருக்கு பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த திருஞானசம்பந்தராக அறிவித்துக்கொண்டனர்?

- அப்பர் பெருமானுக்கு பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த அப்பர் பெருமானாக அறிவித்துக்கொண்டனர்?

- பகவான் திரு இரமண மாமுனிவருக்குப் பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த பகவானாக அறிவித்துக்கொண்டனர்?


எனில், ஏன் மெக்காவில் மட்டும் அவனவன் தன்னை இறைத்தூதனாக அறிவித்துக்கொண்டான்? 😉)


அடுத்து, நம் சமயத்திற்கு வருவோம்.


இங்கும் மற்ற மதங்களின் நிலைதான். ஒரு பயலும் விழித்துக்கொள்ளக்கூடாது என்பதில் அசுரக்கூட்டம் தெளிவாக & உறுதியாக இருக்கிறது.


கேட்டதும் சிந்தனையை தூண்டவேண்டுமென்ற கண்ணோக்கத்தில், நம் முன்னோர்கள் வைத்த இறைவனின் திருப்பெயர்களாகட்டும், பார்த்ததும் சிந்தனையை தூண்டவேண்டுமென்ற கண்ணோக்கத்தில், அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இறைதிருவுருவங்களாகட்டும், திருக்கோயில்களின் வடிவமைப்புகளாகட்டும், எதுவும் எவ்வகையிலும் நம் சிந்தனையை தூண்டாதவாறு பார்த்துக்கொண்டுள்ளனர்!


நமது வேலையென்ன? கோயிலுக்கு செல்லவேண்டும். வரிசையில் நிற்கவேண்டும். ஓட்டைப் பானைக்குள் ஈ நுழைந்தது போன்று, அசுரர்கள் ஒப்பிக்கும் கா(ஆ)ரியச் செய்யுள்களை கேட்டுவிட்டு, அவர்கள் தட்டுவிளக்கை சுழற்றும் போது, ஏதோ கிடைத்தது / புரிந்தது போன்று கன்னங்களில் போட்டுக்கொண்டு, தட்டு அருகில் வரும்போது காசை போட்டுவிட்டு, விளக்கொளியை தொட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு, திருநீறு பெற்றுக்கொண்டு, நமக்கு நாமே திருநீறு அடித்துக்கொண்டு வெளியே வந்துவிடவேண்டும். சுபமஸ்து! 🤣


இந்த மாயவலைகளையெல்லாம் தாண்டி, யாராவது விழித்துக்கொண்டால், அவருக்கு கட்டம் கட்டிவிடுவார்கள். (இதுவே 1,000 ஆண்டுகளுக்கு முன்னரெனில், எல்லோருக்கும் ஒரே நீதியென்ற நிலைப்பாட்டை கொண்டிருந்ததற்காக, மன்னர் ஆதித்த கரிகாலச் சோழரை போட்டுத்தள்ளியது போல போட்டுத்தள்ளுவார்கள். இன்று, இம்மியளவு பண்பட்டு, கட்டம் கட்டுகிறார்கள்). ஆனால், அப்படி விழித்துக்கொண்டவர் உடல் உகுத்த பின்னர், அவரது திருவிடம் (கா(ஆ)ரியத்தில், சமாதி) புகழ்பெறத்தொடங்கினால், உரிமையுடன் உள்ளே நுழைந்து, கல்லா கட்டத்தொடங்கிவிடுவார்கள்.


அண்மை காலத்தில், இவர்களது அசுரக் கண்காணிப்பையும் தாண்டி, பெரும் புகழ்பெற்று, பலரது உள்ள விளக்கைத் தூண்டிவிட்ட ஒரே பெருமான் பகவான் திரு இரமண மாமுனிவராவார்! உள்ளபொருளை தெளிவாக காட்டியதற்காக, இன்றும், சில அசுரர்கள் அவரை வெறுத்து ஒதுக்குவதை நானறிவேன்.


எப்படியோ பகவானிடம் கோட்டைவிட்டாலும், இந்நேரம், "இன்னொரு பகவான் உருவானால், எப்படி கட்டம் கட்டுவது?" என்று ஆய்வு செய்து, அவர்களது "எப்படி மக்களை முட்டாளாக்கி, Safe-அ, Comfort-அ, Secured-அ, நன்னா & வாழையடி வாழையாக வாழ்வது?" என்ற கையேட்டுப் புத்தகத்தில் சேர்த்திருப்பார்கள். 👊🏽👊🏽


குறிமதமும், ஒப்பாரி மதமும் வையகத்தை பிடித்த பீடைகளெனில், இவ்வசுரக் கூட்டம் நம்மை பிடித்த பீடையாகும்! 😞


பொழுது இப்படியே போய்விடாது. அல்லவை இல்லாமல் போகும் சமயம் வரும். நல்லது வெளிப்படும். "ஓர்ந்து கண்ணோடாது இறை புரியும்" ஆட்சியாளர்கள் மீண்டும் தோன்றுவார்கள். எல்லாம் நலமாகும்.


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻