Friday, December 31, 2021

ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் சொதப்பல் புத்தாண்டு!!! 👊🏽


வானவியலில் நம் முன்னோர்கள் முன்னோடிகள் என்பதற்கு சில சான்றுகள்:

💥 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், நம் தலைக்கு நேர் மேலே பகலவன் இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே ஆண்டு பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்!! 👏🏽👏🏽 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. (ஆகையால், சித்திரை முதல் நாளன்று புவியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே தென்மதுரை!)

இந்த நுட்பமான முறையினால் ஒவ்வொரு ஆண்டும் முழுதாக முடிவடையும். ஆனால், பரங்கி ஆண்டு முழுமையாக முடிவடைவதில்லை. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 நாளை சேர்க்கின்றனர். இதற்கும் பல விதிகள் உண்டு (4ஆல் வகுபட வேண்டும், 100ஆல் வகுபட்டாலும் 400ஆல் வகுபட வேண்டும், 400ஆல் வகுபட்டாலும் 4000ஆல் வகுபடக்கூடாது, ...😲). இன்றைய நிலையில் மீண்டும் பரங்கி ஆண்டு சீராவது பொ.ஆ. 4000-த்தில்தான். (பரங்கி ஆண்டை "சொதப்பல் ஆண்டு" என்றழைப்பதற்கு இதை விட சிறந்த ஏது வேறென்ன வேண்டும்? 😛)

💥 நம் முன்னோர்களின் ஆண்டு கணக்கிற்கு, தன் தாவரக் குழந்தைகளை பூக்க விட்டு, இயற்கை அன்னையும் உடன்படுகின்றார்!! மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி, புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் ஆண்டு பிறப்பு காலத்தில் தான்.

💥 உலகிலுள்ள பெரும்பாலான ஆண்டு பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆண்டும் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. மீண்டும் நம்முடன் ஏற்பட்டத் தொடர்பினால் தங்களது ஆண்டு கணக்கை திருத்திக் கொண்ட பரங்கியர்கள், தங்களது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தை முன்னிறுத்துவதற்காகவும், இஸ்ரவேல் மெய்யியலாளர் இயேசு பிறந்தது சனவரி 1 என்று ஒரு நம்பிக்கை இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் சனவரி 1-ற்கு மாற்றினர் (மாற்றியது அன்றைய போப் கிரிகோரியன்). அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ ஆண்டு பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்! 😏).

💥 சித்திரை 1-ஐ ஆண்டின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். பகலவன் வருடை ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் கற்றுக் கொண்டனர் எனலாம்! ஆரியர்களின் உத்திராயண-தட்சிணாயன கணக்கும் நம்முடையது தான்!!

அவர்களது பிறப்பிடமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு ரஷ்யா) பகலவன் காட்சி தருவதே ஆண்டிற்கு சில நாட்கள் தான். குகைகளையும், கூடாரங்களையும் விட்டு தகுந்த பாதுகாப்பின்றி வெளிவந்தால் இரத்தம் உறைந்துவிடும் நிலை. இதில் எங்கிருந்து அயண ஆராய்ச்சி செய்திருக்க முடியும்? மேலும், உத்திராயணமும் தட்சிணாயனமும் சரியாக 6 மாதங்களாகப் பிரிவது நிலநடுக்கோட்டுப் பகுதியில் தான் - நம் முன்னோர்கள் வாழ்ந்த தென்மதுரையில் தான்!! நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, தமது என்று முத்திரை குத்தி, மீண்டும் நம் தலையிலேயே கட்டிவிட்டார்கள் (கோல்கேட்காரன் கரியையும், உப்பையும் அன்று கிண்டல் செய்து விட்டு, இன்று அவற்றைக் கொண்டு பற்பசை தயாரித்து நம்மிடமே விற்பது போல).

💥 "இவ்வளவு தாென்மை, அறிவியல், வரலாறு இருந்தும் நம் மக்கள் ஏன் ஆங்கில புத்தாண்டன்று திருத்தலங்களுக்கு செல்கின்றனர்?" என்ற கேள்வி எழலாம். அன்று, சமூகத்தின் முக்கிய நபர்கள் ஒவ்வொருவரும்  அவரவர் பகுதிக் கொள்ளைக் கூட்டத்தலைவனை (பரங்கிப் பிரபு) சந்தித்து பூ மாலை, பழம், இனிப்பு போன்ற பரிசுகளை அளித்து வாழ்த்துச் சொல்ல / பெற வேண்டும். தலைக்கனமும் திமிரும் பிடித்த இந்த நச்சுப் பாம்புகளிடமிருந்து தப்பிக்க எண்ணிய நம் பெரியோர்கள் கண்டுபிடித்த வழிதான்... சாெதப்பல் புத்தாண்டன்று நம் திருத்தலங்களுக்கு செல்வது. திரு வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி படித்திருவிழாவை தாெடங்கியதும் இப்படித்தான். கொள்ளைக் கூட்டத் தலைவியும் (இங்கிலாந்து ராணி) நம் சமய நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று ஆணையிட்டிருந்தாள். இதையும் பயன்படுத்தி பகுதி கொள்ளையர்களிடமிருந்து தப்பினர் நம் பெரியோர்கள்! 😎

"இன்றும் இவ்வழக்கம் தொடரவேண்டுமா?" என்று கேட்டால், உறுதியாகத் தொடரவேண்டும் என்பேன். பரங்கியரின் சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் கருங்காலி / அறிவிலித் தமிழர்கள் இருக்கும்வரை இவ்வழக்கமும் தொடரவேண்டும்!! 👊🏽

oOOo

மேற்சொன்ன யாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் உயிரிகளும் ஏற்றுக் கொள்ளும் செய்தி ஒன்றுண்டு - மிகப் பழமையான மாந்தர்களான மாயன்களிடமும் எகிப்தியர்களிடமும் பகலவனை அடிப்படையாகக் கொண்ட நாள் மற்றும் நேரக் காட்டிகள் இருந்தன என்பதே அது. இந்த மாயன்களும் எகிப்தியர்களும் நம்மோடு நெருங்கிய தொடர்பிலிருந்தோர் என்பது அண்மை கால ஆராய்ச்சிகளின் முடிவு!!

oOOo

சொதப்பல் ஆண்டு பிறப்பு...

👊🏽 அறிவியல் & வானவியல் அடிப்படையற்றது
👊🏽 இயற்கை சுழற்சிக்கு மாறானது
👊🏽 சூழலுக்கு பொருந்தாத கொண்டாட்டங்களைக் கொண்டது
👊🏽 அடிமை மனப்பான்மையை வளர்ப்பது

சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடுவதை தவிர்ப்போம். நமது ஆண்டு பிறப்பைக் கொண்டாடி மகிழ்வோம். நமது தொன்மை, வரலாறு, அடையாளங்களைக் காப்போம். தமிழன் என்று பெருமை கொள்வோம். 👍🏽

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே"

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, December 26, 2021

பரங்கி மதத்தினரின் "ஐ ஏம் தட் ஐ ஏம்" (I am that I am) சடங்கு!! 😁

என்னப்பா தசமபாக மதத்தின் தேவர்களே & உலகின் தற்போதைய தேவாதிதேவர்களே^, டிசம்பர் 25 முடிஞ்சிடுச்சு! இன்னும் உங்க "ஐ ஏம் தட் ஐ ஏம்" (I am that I am) சடங்கு நடக்கலையே! 🤔

😁

(^ - வேறு யார்? உலகக் கொல்லிகளான வெள்ளையர்கள்தாம். ஆனால், தற்போது இந்த இடத்தைப் பிடிக்க சீனர்கள் பெருமுயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.)

ஒவ்வொரு ஆண்டும், இஸ்ரவேல் மெய்யியலளார் யேசு பிறந்ததாகக் கருதப்படும் டிசம்பர் 25 சமயத்தில், பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ சொற்களை "பயன்படுத்தி" 😉, தங்களது டுபாக்கூர் மதமே மேலானதென்று பிட் தயாரித்து வெளியிடுவார்கள். இந்த முறை அப்படியேதும் தென்படவில்லை. சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக உலகை, குறிப்பாக பாரதத்தை, சுரண்டி, பிழிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ருசி கண்ட பூனைகள். சற்று தாமதமாகக்கூட ஊழியம் நடக்கலாம். பார்ப்போம்.

26/11/1935 அன்று சுவாமி யோகானந்தா பகவானை சந்தித்தார். உடன் வந்த சுவாமியின் பரங்கிச் செயலாளர் சி ஆர் ரைட் (C R Right) பகவானிடம் சில கேள்விகளைக் கேட்டார். பதிலளிக்கும் போது, பகவான், "பைபிளில் வரும் 'ஐ ஏம் தட் ஐ ஏம்' தான் உள்ளபொருளை மிகச்சரியாக சுட்டிக்காட்டுகிறது" என்று கூறிவிட்டார். இது தான் பரங்கியரின் "வருடாந்திர 'ஐ ஏம் தட் ஐ ஏம்' சடங்கிற்கு" அடிப்படை!

எந்த சூழ்நிலையில் இந்த பதிலை பகவான் கூறினார் என்ற குறிப்பில்லை. ரைட் எப்படிப்பட்டவர் என்ற குறிப்புமில்லை. எல்லா சமயங்களிலும் பகவான், தான் கூற விரும்பியதை கூறியதில்லை. சில சமயம், அமைதியாக இருப்பார். சில சமயம், தனது பதிலைக் கூறுவார். சில சமயம், வந்தவர் கேட்க விரும்பிய பதிலைக் கூறி இடத்தை காலி செய்யவைப்பார். ☺️ சில சமயம், "கீதையும் பைபிளும் குர்ரானும் ஒன்றுதான்" என்று நகைச்சுவையும் செய்வார்!! 😂

குர்ரானைப் பொருத்தவரை, புவிப்பந்தை நிலை நிறுத்துவதற்காகத்தான் மலைகளை இறைவன் தோற்றுவித்திருக்கிறார். 🤣 பைபிளை பொருத்தவரை, உலகத்தை தப்பும் தவறுமாக படைத்த இறைவன், பின்னர், அதை சீர் செய்ய அவரது ஒரே மகனை அனுப்பிவைத்தார். 🤦

இந்த குபீர் காமெடிகளை அறியாதவரா பகவான்? வந்தவர், "இவையெல்லாம் கீதைக்கு சமம்" என்று பகவான் வாயால் கேட்க விரும்பியிருப்பார். பகவானும் அவர் விரும்பியதைக் கூறி, இடத்தை காலி செய்ய வைத்திருப்பார். பகவானைத் தேடி வந்த பெரும்பாலான பரங்கியர்கள், தங்களது டுபாக்கூரே பெரிது என்று நிலைநாட்டவும், பகவானை மட்டம் தட்டவும், ஆழம் பார்க்கவும், இதர "ஊழியங்களை" செய்யவும் வந்தவர்களே! வெகு சிலரே பகவானின் வழிகாட்டுதலுக்காக வந்தவர்கள்.

இன்றும் திருவருணைக்கு வரும் பரங்கியர்களில் ஓரிருவர்தாம் பகவானுக்காக வருபவர்கள். மீதமனைத்தும் "ஊழியம்" செய்வதற்குத்தான் வருகின்றன. இதில் ஒரு கூட்டம் பகவானிடம் குறை காண்பதற்காக, நம்மூர் கருங்காலிகளின் துணையுடன், வெகுவாக உழைத்துக் கொண்டிருக்கிறது. எதற்காக? என்றைக்காவது தேவைப்பட்டால் பகவான் மீது கல்லெறிவதற்காக! அவர்களது நிறுவனர்தான் உலகின் தலைசிறந்த மெய்யறிவாளர் என்று காட்டுவதற்காக!! (தேவைப்பட்டால், மெய்யறிவாளர். இல்லையெனில், பரலோகத் தந்தையின் ஒரே மகன். ஆமென்.)

மீண்டும் பகவானிடம் திரும்புவோம்.

"ஐ ஏம் தட் ஐ ஏம்" என்ற சொற்றொடர்தான் பரம்பொருளை மிகச்சரியாக குறிக்கிறதென்று பகவான் நினைத்திருந்தால் தனது பாடல்களில், பேச்சில் இந்த சொற்றொடரையே பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், பகவான் பயன்படுத்தியது: "நான்" & "உள்ளபொருள்"!! இவற்றிலும், "உள்ளபொருள்" எனும் சொல் பகவானது தனி பங்களிப்பாகும். எனவே, "ஐ ஏம் தட் ஐ ஏம்" என்பது கிறித்தவர்களுக்கானது. உலக மக்கள் யாவருக்குமானதல்ல.

இறுதியாக, எல்லாவற்றையும் அரைகுறையாக, தலைகீழாக புரிந்துகொண்டு, புரிந்துகொண்டதை வைத்து நோவாமல் கொள்ளைக் காசு பார்த்து, எந்த இடரிலும் மாட்டிக் கொள்ளாமல், வானவர்களாக வலம் வரவேண்டுமென்று விரும்பும் பரங்கியர்களின் மத நம்பிக்கைகளைப் பற்றி சற்று பார்ப்போம்.

🔸 குறுக்கை: இது அழியும் உடலைக் குறிக்கும். அழியும் பொருளை வணங்கலாமா? ஆனால், இதைக் கண்டால் உள்ளம் உருகுவார்கள்! ☺️

🔸 குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இயேசு: இங்கு இயேசு என்பது மனமாகும். அறையப்பட்ட இயேசு என்பது பல காலம் வடக்கிருந்து சிதைக்கப்பட்ட / ஒடுக்கப்பட்ட / அடக்கப்பட்ட மனமாகும். மொத்தத்தில், ஒரு கிறித்தவன் இவ்வுலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதை சித்தரிக்கும் உருவமாகும். இதைக் கண்டதும் அவர்களுக்கு பெருமகிழ்ச்சி தோன்றவேண்டும். ஆனால், கண்களில் நீர் தளும்புவது முதல் "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா!" என்று ஒப்பாரி வரை பலவித சோக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்!! 🤦

இந்த கேடு கெட்டவர்களைப் பற்றி எழுத வேண்டுமானால் இணையதள சர்வர்கள் சூடாகுமளவிற்கு எழுதலாம். ஆனால், இவர்களின் தரத்தை உணர்வதற்கு இந்த இரு குறிப்புகள் போதுமானதாகும்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Tuesday, December 21, 2021

திருநீறு பூசுவதின் மெய்யியல் அடிப்படை - சிறு விளக்கம்


திருநீற்றின் 3 கோடுகள் நனவு, கனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளைக் குறிக்கும். இக்கோடுகளை பூசுவதற்கு எவ்வாறு நம் நெற்றி பற்றுக்கோடாக அமைகிறதோ, இவ்வாறே நனவு முதலான 3 நிலைகள் தோன்றி மறைவதற்கு நாம் (நமது தன்மையுணர்வு - உள்ளபொருள் - சிவம்) பற்றுக்கோடாக அமைகிறோம்.

பூசுப்படும் திருநீறு இருந்தாலும், அழிந்தாலும் நெற்றிக்கு குறையில்லை. இவ்வாறே நனவு முதலான நிலைகள் தோன்றினாலும், மறைந்தாலும் நமக்கு எந்த குறையுமில்லை. இதை உணரவேண்டும்.

🌷 "நீறில்லா நெற்றி பாழ்" - மேற்கண்ட அறிவு இல்லாதவரின் சிந்தனையோட்டம் புறமுகமாகச் சென்று, கிடைத்தற்கரிய மனிதப்பிறவி வீணாகிவிடும்.

🌷  "திருநீற்றை சிந்தாதே / கீழே விடாதே" - அரும்பாடுபட்டு பெற்ற இறையுணர்வை (மெய்யறிவை) இழந்துவிடாதே.

oOo

ஒரு சைவர் தரித்திருக்க வேண்டிய சின்னங்கள் இரண்டு: திருநீறு & உருத்திராக்கம்.

🌷  திருநீறு 3 கோடாக பூசப்படும்போது மேற்சொன்ன பொருளைக் குறிக்கும். நெற்றி முழுதும் பூசும்போது அல்லது சிறு கீற்றாக பூசும்போது அதன் பொருள்: இந்த உலகை "எரிந்து உருக்கலையாத" சாம்பல் போன்று அவர் காண்கிறார் (அல்லது, காணவேண்டும்).

🌷 கழுத்தில் உருத்திராக்கம் அணிவதன் பொருள்: புறமுகமாகவே ஓட எத்தனிக்கும் மனதை, எக்கணமும் தனது தன்மையுணர்வின் மீது நிலைபெறச் செய்திருப்பவர் (அல்லது, செய்யவேண்டும்). (புறமுகமாக பல பொருட்களின் மீது செல்லும் மனம் வலுவில்லாமல் இருக்கும். அதை ஒன்று திரட்டி, அகமுகமாக, தன் மீது நிலைநிறுத்தும் போது உருத்திராக்கம் போன்று திரண்டு, வலுப்பெற்று விடும்.)

oOo

திருநீறு தரிப்பதாலும் & உருத்திராக்கம் அணிவதாலும் விளையும் இதர பயன்கள் யாவும் மிகைப்படி கணக்கில்தான் சேரும்.

காழியூர் பிள்ளை 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடிய புகழ்பெற்ற "மந்திரமாவது நீறு ..." எனும் பதிகத்தில் "உண்மையில் உள்ளது நீறு" என்ற சொற்றொடர் வருகிறது. இதில், அழியும் திடப்பொருளான சாம்பலை பெருமான் குறிக்கவில்லை. காணும் காட்சிகள் நீங்கிய பிறகு - பிறவிநோய் தீர்ந்த பிறகு - மீதமிருக்கும் நமது தன்மையுணர்வையே திருநீறு என்றழைக்கிறார்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

கோளறு பதிகம் - பாடல் #6 - கோளரி உழுவை - சிறு விளக்கம்

(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை, 21/12/2021.)

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்

நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

-- கோளறு பதிகம் - பாடல் #6

oOo

கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி ...

🔸 கோளரி - சிங்கம் - கோபம்

🔸 உழுவை - புலி - பற்றுகள் / தற்பெருமை

🔸 யானை - நினைவுகள், பழக்கவழக்கங்கள்

🔸 கேழல் - பன்றி - ஆராய்தல் / சிந்தித்தல்

🔸 நாகம் - மனம், மாயை

🔸 கரடி - கலக்கம்

🔸 ஆளரி - குரங்கு - அலைபாய்தல் / நிலையற்றத் தன்மை

பொருள்: ஏற்கனவே நான் நிலைபேற்றை அடைந்துவிட்டதால் (வந்தென் உளமே புகுந்த அதனால்), மேற்சொன்ன யாவும் என்னை ஏதும் செய்துவிடாது. அவற்றாலும் நன்மையே விளையும்.

நுட்பங்கள்:

> சிவமாய் சமைந்த பின்னரும் மேற்சொன்ன விலங்குகள் (குணங்கள், பழக்கவழக்கங்கள்...) நம்மை விட்டகலமால் இருக்க வாய்ப்புள்ளது
> அப்படி அகலாவிட்டாலும், அவற்றால் நிலைபேற்றை அடைந்தவருக்கு எந்த கேடும் விளையாது

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, December 20, 2021

கோளறு பதிகம் - பாடல் #4 - கொதியுறு காலன் - சிறு விளக்கம்


மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

-- கோளறு பதிகம் - பாடல் #4

(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை. 19/12/2021)

oOo

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்

மேலுள்ள பாடலில் இடம்பெறும் இந்த வரிகளை படிக்கும் போதே ஒரு நெருடல் தோன்றியது: ஒரே வரியில் ஏன் காலன் & நமன் என்று இருமுறை கூற்றுவரை (யமன்) குறிப்பிடுகிறார்?

தொன்ம வழியில் இச்சொற்றொடரின் பொருள்: கோபம் கொண்ட காலன், அக்கினி, யமன், யமதூதர் மற்றும் கொடு நோய்கள் பலவும்.

சொற்களைப் பிரித்து, வேறு பொருள்களை பொருத்திப் பார்ப்போம்:

🔸 கொதி - கோபம்

🔸 உறு - வலி / வருத்தம். "கண் உறுத்துகிறது" / "மனம் உறுத்துகிறது".

🔸 காலன் - சோம்பல். எருமை மாடு காலனின் ஊர்தியாகும். எருமை சோம்பலின் அடையாளம். சோம்பலினால் தன்மையுணர்விலிருந்து சற்றே விலகினாலும் மீண்டும் பிறவி சுழற்சிக்குள் சென்றுவிடுவோம். அதாவது, இறந்துவிடுவோம். மெய்யறிவில் நிலைபெறுவது - பிறப்பு. அதிலிருந்து விலகுவது - இறப்பு. விலகுவதற்கு ஏதுவாகும் சோம்பல் காலனாகிறது.

🔸 அங்கி - பசி

🔸 நமன் - அச்சம். மேலே "காலன்" என்ற சொல்லிற்கு கண்ட அதே விளக்கம்தான் இங்கும். தன்னிலையிலிருந்து விலகச் செய்யும் யாவும் கூற்றுவர்களே. எனிலும், நமது முன்னோர்கள் அச்சம் (கரிய உருவம்), சோம்பல் (எருமை), பற்றுகள் (சாட்டை) ஆகியவற்றை கூற்றுவர் பற்றுவதற்கான முகமை ஏதுக்களாக கருதியுள்ளனர்.

🔸 தூதர் ... - மேற்கண்டவற்றின் தூதர்களாக வரும் கொடு நோய்கள்

இனி, அனைத்தையும் இணைத்துப் பார்ப்போம்.

கோபம், வருத்தம், சோம்பல், பசி, அச்சம் மற்றும் இவற்றை விளைவிக்கும் கொடிய உடல் & மன நோய்கள் வந்தாலும், இவற்றால் பெருமானின் அடியார்களுக்கு கேடு விளையாது. ஏனெனில், அவர்களது உள்ளத்தில் ஏற்கனவே பெருமான் குடிகொண்டுள்ளார்! (அதாவது, ஏற்கனவே அவர்கள் நிலைபேற்றினை அடைந்தவர்கள்.)

(காெதி + உறு - கொதியுறு - கொதித்து இருத்தல் என்றும் கொள்ளலாம்)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

திருவாதிரைத் திருநாள்!!

இன்று மார்கழி - திருவாதிரை (20/12/2021).

(திருவருணை கூத்தபிரான்)

🔸உண்மையில் நாம் எவ்வாறு இயங்குகிறோம் என்பதையும், இந்த இயக்கத்திலிருந்து விடுபட நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் பதஞ்சலி & புலிக்கால் மாமுனிவர்கள் உணர்ந்த திருநாள். 🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️

🔸பிறவித்தளைகளிலிருந்து விடுபட நாம் செய்யவேண்டியதெல்லாம் ... எதுவும் செய்யாதிருத்தலே! தானாக சமைந்து நம் முன் வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு களித்திருக்கவேண்டும். இதை சேந்தனார் பெருமான் உணர்ந்த திருநாளும் இன்றே. 🌺🙏🏽🙇🏽‍♂️

(அன்று "சமைந்து வருவதை களித்திரு" என்று சேந்தனார் உணர்ந்தது இன்று "சமைத்து களி தின்னு" என்றாகிவிட்டது! 😂)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, December 18, 2021

காசி விசுவநாதப் பெருமானை ஏன் & எவ்வாறு வணங்கவேண்டும்?

காசி 

விசுவ நாதனைப், பசுவ தேறியைக்

கசிவி னோதிட, அசைவு தீருமே

-- திரு வ சு செங்கல்வராயப் பிள்ளை

> அசைவு தீருமே - அசைவை தீர்த்தலே மனிதப்பிறவியின் குறிக்கோள். அசைவு என்பது மனதின் அசைவை - நிலையற்ற மனதைக் குறிக்கும்.

> மனதை எப்படி நிலைகொள்ளச் செய்வது?

கசிவினோதிட - கசி + வினோதிட.
கசி - உள்ளம் உருகி (காதலாகி "கசிந்து" கண்ணீர் மல்கி...).
வினோதிட - ஒன்றையே இறுகப்பற்றிட.

> எதை / யாரை உள்ளம் உருகி, இறுகப்பற்றிட வேண்டும்?

பசுவதேறியை - பசு + அது + ஏறியை - பசுவின் மேல் பயணிப்பவரை.
சிவபெருமான் + விடை.
பரம்பொருள் + சீவன் / மனம்.
நான் + இன்னார்.

> நான் எனும் நமது தன்மையுணர்வை விரும்பி, இடைவிடாது இறுகப்பற்றினால் அலைபேறு ஒழிந்து, நிலைபேறு கிட்டும்! 🙏🏽

இப்படி எளிமையாக புரிந்துகொள்ளவேண்டியதை ஞானம், முத்தி, மோட்சம் என்று அயல்மொழியைக் கலந்து, கடினமானதாக தோன்ற செய்து, எட்டாக்கனி போலாக்கிவிட்டனர். 😔

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, December 13, 2021

கோவில்களுக்கு சென்றுதிரும்பும் முன்னர் சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு வருவது எதற்காக?

சில நாட்களுக்கு முன் வாட்ஸ்அப் மூலம் ஓர் இடுகை கிடைத்தது. அதில், ஒரு கோவிலுக்கு சென்று மூலவரை வணங்கிவிட்டு, வெளியேவந்து சற்று நேரம் அமர்ந்துவிட்டு செல்வதற்கான ஏதுவை விளக்குவதாகக் கூறி ஓர் ஆரியச் செய்யுளை ("அனாயாசேன மரணம் ...") பகிர்ந்திருந்தனர். ஆனால், ஏதுவை விளக்காமல் செய்யுளின் பொருளை உருகி உருகி விளக்கியிருந்தனர்! (இந்த இடுகை ஏற்கனவே ஒலி வடிவில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது)

கோவிலில் சற்றுநேரம் அமர்ந்திருந்துவிட்டு வெளியேறுவதுடன், வீட்டிற்கு திரும்பிய பிறகும், சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு, பிற்பாடு இதர வேலைகளை செய்யச் சொல்லியிருப்பார்கள் நம் பெரியோர்கள். இவற்றின் பொருள்களைப் பார்ப்போம்.

oOo

(இப்படத்தைப் பற்றிய சிறு குறிப்பை இறுதியில் இணைத்துள்ளேன்)

நமது பழமையான காேவில்கள் யாவும் மெய்யறிவில் நிலைபெற்ற மாமுனிவர்களின் சமாதிகளாகும். அம்முனிவர்கள் உடலுடன் இருந்த காலத்தில், அவர்களை தேடி பல அன்பர்கள் வந்திருப்பர். முனிவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டும், சிந்தித்துக்கொண்டும், அவர்கள் அறிவுருத்திய உத்தியை பயின்று கொண்டுமிருப்பர். முனிவர்களின் உடல்கள் இறந்த பின்னரும் (சமாதியான பின்னரும்) இந்த வழக்கம் (கேட்டல், படித்தல், சிந்தித்தல், பயிலுதல்) தொடர்ந்திருக்கும். இதற்கு இன்னொரு பெயரும் இருக்கிறது - வடக்கிருத்தல் (ஆரியத்தில், தவமியற்றுதல்)

(நமது அகந்தையை வேரறுக்க உதவும் உத்தி எதுவோ அதைப் பயிலுதலே தவம் என்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. எல்லாப் பொருள்களுக்கும் திசைகள் இருப்பது போன்று நமதுடலுக்கும் திசைகள் உண்டு. நமது தலை உடலின் வடக்குப் பகுதியாகும். நமது நாட்டத்தை உடலின் வேறு பகுதிகளுக்கும், வெளிப்புறத்திற்கும் செல்லவிடாமல் நமது முகம்/தலையிலேயே வைத்திருப்பதற்கு பெயர்தான் வடக்கிருத்தல் - வடக்குப் பகுதியில் நாட்டத்தை வைத்திருத்தல்.)

இப்படி வடக்கிருந்தோரில் சிலர் அங்கேயே சமாதியும் அடைந்தனர். அச்சமாதிகளைக் குறிப்பதற்காக அவற்றின் மேல் சிவலிங்கங்களை அடையாளமாக வைத்தனர் (ஏனைய இறையுருவங்களை அடையாளமாக பயன்படுத்தியது பிற்காலத்தில்தான்). ஒரு சமாதியில் தொடங்கிய நமது கோவில்கள், ஒரு காலத்தில் சமாதித் தொகுப்புகளாக விளங்கின. தொடர்ந்து நடந்த அரசியல் & மத படையெடுப்புகளால், ஒரு சமயத்தில், அறிவையிழந்து, சமாதிகளை மறந்து, அடையாளங்களை (சிவலிங்கங்களை) மட்டும் திருச்சுற்றுகளில் வைத்துவிட்டனர். மேலும், கோவில்களுக்குள் நீதிமன்றம், கல்விச்சாலை, நெற்களஞ்சியம், கருவூலம் என அனைத்தையும் நுழையவிட்டனர். விளைவு: கோவில்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாறிப்போயின! 

இவையெல்லாம் காலத்தின் தவிர்க்க முடியாத கோலங்கள் என்பதை உணர்ந்திருந்த நம் பெரியோர்கள், கோவிலுக்குச் செல்வதின் அடிப்படை நோக்கத்தைக் காப்பாற்றுவதற்காக கோவிலைவிட்டு வெளியேறும் முன் சிறிது நேரம் வடக்கிருந்துவிட்டு வெளியேறச் சொன்னார்கள். இதுவே நாளடைவில் சிதைந்து "சிறிது நேரம் அமர்ந்துவிட்டு" என்றாகிவிட்டது!!

oOo

வடக்கிருத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்யப்படும் செயலன்று. ஆற்றின் நீரோட்டத்தைப் போன்று, உருக்கிய நெய்யை ஊற்றியது போன்று இடைவிடாது இருக்கவேண்டுமென்று அறிவுருத்துகிறார் பகவான்.

கோவிலிலிருந்து வீடு திரும்பி, வேறு வேலைகளில் ஈடுபடும் முன், சற்று நேரம் அமர்ந்திருக்க (வடக்கிருக்க) சொன்ன நமது பெரியோர்களின் அறிவுரையும் பகவானது அறிவுரையைப் போன்ற ஒன்றுதான். இது கோவிலில் கிடைத்த துய்ப்பை (அனுபவத்தை) மேலும் உறுதிப்படுத்த உதவும். இவ்வாறு விட்டுவிட்டு செய்யப்படும் வடக்கிருத்தல், ஒரு சமயத்தில், நமது இயல்பாகிவிடும். விழிப்பு நிலையில் ஒன்றை இறுகப்பற்றினால் அந்த உணர்வு தூக்க நிலையிலும் தொடரும் என்கிறார் பகவான். விழிப்பையும் தூக்கத்தையும் வெற்றி கொண்ட பிறகு, இடைப்பட்ட கனவு மட்டும் எம்மாத்திரம்?

நனவு, கனவு, தூக்கம் என அனைத்து நிலைகளிலும் நமது தன்மையுணர்வை விடாது பற்றினால்... நிலைபேறு கிட்டும்!!

oOo

"சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு செல்" என்ற எளிய உத்தியின் மூலம் வீடுபேற்றையே அடையச் செய்த நம் முன்னோர்களின் நுண்ணறிவு எங்கே? பத்து வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளியவனை பெரியார் என்றழைக்க வைத்திருக்கும் இன்றைய பகுத்தறிவு எங்கே? 👊🏽

oOo

"வடக்கிருத்தல், தன்மையுணர்வு, நிலைபேறு ... இவையெல்லாம் எனக்கு புரியவில்லை. இறைவனின் திருப்பெயர், மாமுனிவர்களின் அறிவுரை, செய்யுள், பாடல் என ஏதாவதொன்றை உருப்போடவே விரும்புகிறேன்" என்போருக்காக:

🌷 குடும்ப வாழ்க்கையிலுள்ள அன்பருக்கு

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத [துணையும்]
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

-- அபிராமி பட்டர் 🌺🙏🏽🙇🏽‍♂️

(இருபாலரும் துதிப்பதற்கேற்ப "மனைவியும்" என்ற சொல்லை "துணையும்" என்று மாற்றியுள்ளேன்)

🌷 மெய்யியலில் நாட்டமுள்ள அன்பருக்கு

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு [உடலாசையை] மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்

-- வள்ளற்பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️

(இருபாலரும் துதிப்பதற்கேற்ப "பெண்ணாசையை" என்ற சொல்லை "உடலாசையை" என்று மாற்றியுள்ளேன்)

🌷 "வேண்டுதல் வேண்டாமை" என்ற நிலைக்கு ஒரு படி முன்னுள்ள அன்பருக்கு

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்
உன்னையென்றும் மறவாமை வேண்டும்

-- பேயார் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌷 பொதுநலன் வேண்டும் அன்பருக்கு

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
[திருமுறை] அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.

-- கச்சியப்ப சிவாச்சாரியார் 🌺🙏🏽🙇🏽‍♂️

(நமது திருமுறைகளின் பெருமையை முன்னிறுத்துவதற்காக "திருமறை" எனும் சொல்லை "திருமுறை" என்று மாற்றியுள்ளேன்.

வேள்வி என்பது மனதில் நற்சிந்தனையை விதைத்தல், பசித்த வயிற்றுக்கு சோறிடுதல் என பலவற்றைக் குறிக்கும்.)

oOo

ஒன்றை ஆரியத்தில் சொல்லிவிட்டால் அது மேன்மையாகிவிடாது. பீட்டரில் சொன்னால் அறிவாளித்தனமாகாது. எதில் சொல்லப்பட்டது என்பதை விட என்ன சொல்லப்பட்டது என்று சிந்திப்பதே சிறந்தது.

பரம்பொருளின் மொழி: அமைதி (மவுனம்).

oOo

இணைப்பு படம்: இது சிருங்கேரி திரு சாரதாம்பாள் திருக்கோயிலின் ஒரு பகுதியாகும். சிவப்பு குறியிட்ட கோவில்கள் யாவும் ஆச்சார்யார்கள் மற்றும் ஏனையோரின் சமாதிகளாகும். இது போன்றே ஆற்றின் எதிர்கரையிலும், திருத்தல வளாகத்தின் இதர பகுதிகளிலும் சமாதிகளைக் காணலாம். 🌺🙏🏽🙇🏽‍♂️

ஒரு காலத்தில், இத்தலம் போன்றே நமது திருத்தலங்கள் யாவும் காட்சியளித்தன. 

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, November 29, 2021

விளக்கேற்றுதலின் உட்பொருள்

சில நாட்களுக்கு முன்பு, திருவரங்கத்திலுள்ள திரு ரெங்கநாயகித் தாயார் கோயிலில் இலட்சம் விளக்குகள் ஸ்ரீ, சங்கு & சக்கிர வடிவமைப்பில் ஏற்றப்பட்டன. அந்த வடிவங்களைப் பற்றியும், விளக்கேற்றுதலைப் பற்றியும் சற்று காண்போம்.


🌷 ஸ்ரீ எனில் அசையாதிருத்தல் / நிலைபேறு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இதற்கு சமமான தமிழ் சொல் "திரு" ஆகும்.

🌷 ஸ்ரீ எனில் மேன்மையான செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆரியத்திலும் வைணவத்திலும் "ஸ்ரீயை உடையவர்" எனில் நிலைபேறு அடைந்தவர் என்று பொருள். இந்த ஸ்ரீ சைவத்தில் திருநீறு (விபூதி) ஆகிறது. திருநீறு தரித்தவர் எனில் நிலைபேறு அடைந்தவர் (சிவமானவர்) என்று பொருள்.


🌷 கூத்தப்பெருமானின் மேலிரு கைகளிலுள்ள டமருவும், நெருப்பும் பெருமாளின் சங்கு சக்கிரமாகியிருக்கும். கூத்தப்பெருமானின் கண்ணாடி பிரதிபலிப்பு பெருமாளாவார்.

டமரு / சங்கு - ஒலி
நெருப்பு / சக்கிரம் - ஒளி

இவ்வுலகம் ஒலி & ஒளியால் ஆனது.


🌷 சக்கிரத்தின் பின்புறத்தில் மடங்கல் (சிங்கம்) பெருமாளை வைத்தால் இரு பொருள்கள் கிடைக்கும்:

🔸 தோன்றும் / அசையும் காட்சிகளுக்கு (சக்கிரம்) பற்றுக்கோடு அசைவற்ற பரம்பொருளாகும் (மடங்கல் பெருமாள்).
🔸 அசையும் மனம், உடல் முதலியவற்றிற்கு அசைவற்ற ஆன்மா பற்றுக்கோடாகும்.

🌷 நூறு, ஆயிரம், இலட்சம், கோடி என்று எத்தனை விளக்குகளை ஏற்றினாலும், வகை வகையாக ஏற்றினாலும் விளக்கு உணர்த்தும் உட்பொருளை உணராமல், உணர்ந்ததன்படி வாழாமல் ஒரு பயனுமில்லை.

விளக்கு (அகல், மாவு, எலுமிச்சை, தேங்காய் ... ) என்பது நம் உடலுக்கு சமம். அதில் எரியும் நெருப்பு என்பது நம் உயிருக்கு சமம். ஒரு விளக்கு எரிவதால் அதற்கு எந்த பயனும் கிடையாது. ஆனால், அதிலிருந்து வெளிப்படும் வெளிச்சம், வெப்பம், நற்புகை மற்றவர்களுக்கு பயனளிக்கிறது. அதாவது, எரியும் விளக்கு என்பது தன்னலமற்று வாழ்வதைக் குறிக்கிறது.

🌷 "சாயங்காலம் வீட்டுல விளக்கேத்துமா" என்று பெண்களுக்கு பெரியவர்கள் அறிவுரை செய்வதைக் கேட்டிருப்போம்.

சாயங்காலம் - இரவுக்கு முந்தைய - இருள் சூழ்வதற்கு முந்தைய - காலம். குடும்பத்திற்கு கடின காலம் வருவதற்கு முன், தன்னலமற்று வாழும் மனப்பான்மையை குடும்பத்தலைவி வளர்த்துக் கொள்ளவேண்டும்.

ஓர் இல்லத்தில் கணவன்-மனைவி இடையே முறையான காதலும், பெற்றோர்-பிள்ளைகள் இடையே முறையான பாசமும் இருந்து, இல்லத்தரசி தன்னலமற்று, குடும்பத்தின் நலனுக்காக பாடுபடுபவராக அமைந்துவிட்டால் அந்த இல்லத்தில் மனநிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்குமா?

🌷 சிலருக்கு முயற்சி செய்யாமலேயே அல்லது சிறு முயற்சி செய்தவுடனேயே எல்லாம் கிட்டிவிடும். சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் எதுவும் கிட்டாது. எதிர்மறை பலன்கள்கூட கிட்டும். எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கும். தனக்கு கிட்டாது என்பதை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சி அனைவரிடமும் இருக்காது. முயற்சியற்று அமைதியாக இருக்கவும் முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நம் பெரியவர்கள் காட்டிய வழி: கோயில்களில் விளக்கேற்று!

இதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன:

🔸 இறைபணியில் தன்னலமற்று ஈடுபடு
🔸 தன்னலமற்று ஊருக்காக உழை (அக்காலத்தில் கல்விச்சாலை, நீதிமன்றம், நெற்களஞ்சியம் என ஊரே திருக்கோயிலிலிருந்து இயங்கியது. எனவே, ஊருக்காக உழை என்று சொல்லாமல் கோயிலில் உழை (விளக்கேற்று) என்று சொல்லியிருக்கிறார்கள்.)

பலன் கருதி எதையும் செய்தால்தான் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும். பலனை எதிர்பார்க்காவிட்டால் (தன்னலமற்று பணி செய்தால்) எதுவும் நம்மை பாதிக்காது.

கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. -- திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️

விளக்கேற்றுதல் = தன்னலமற்று வாழ்தல்.

(ராகு வேளையில் கொற்றவைக்கும், தேய்பிறை எண்மையில் பைரவருக்கும் விளக்கேற்றுவது என்பது மேற்கண்ட தன்னலமற்ற பணிகள் கணக்கில் வராது. முனைப்பற்று இருப்போருக்கும், ஆணவம், தற்பெருமை, அச்சம் போன்ற குணங்கள் மிகுதியாக உள்ளவர்களுக்கானவை.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, November 21, 2021

இராமநாதபுரத்தில் பெளத்த விகாரமாம்! அடிக்கல் நாட்டுவிழாவில் "மதச்சார்பற்ற" அண்ணன் திருமா கலந்துகொண்டாராம்!!


💥 இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது பௌத்தர்கள் என்பதை அண்ணன் மறந்துவிட்டார் போலிருக்கிறது.

💥 தமிழ்நாட்டிற்குள் ஆரியத்தை கொண்டுவந்ததில் பெளத்தர்களுக்கு பெரும் பங்குள்ளது என்பது அண்ணனுக்கு தெரியாது போலிருக்கிறது.

💥 இறுதிவரை தமிழுக்கு மாறாமல் ஆரியத்தை பிடித்துக் கொண்டிருந்ததால்தான் சமணத்தின் அளவிற்கு பெளத்தத்தால் வெற்றி பெற முடியவில்லை என்பதும் அண்ணனுக்கு தெரியாது போலிருக்கிறது.

💥 பெளத்தர்களின் அடையாளங்களில் ஒன்று மொட்டைத் தலை.

இன்றுவரை ஒருவர் தன்னிடமிருக்கும் அனைத்தையும் ஏமாந்துபோய் பறிகொடுத்தால் என்ன சொல்கிறோம்: உன்ன நல்லா மொட்ட போட்டுட்டாங்க பாேல? 

இதே போன்று, ஒருவர் மற்றொருவரை ஏமாற்றி, அவரிடமிருப்பதை கறந்துவிட்டு வந்தால் என்ன சொல்கிறோம்: அவன நல்லா மொட்ட போட்டுட்ட போலிருக்கு?

வடக்கிலிருந்து வந்த பெளத்தர்கள் நயவஞ்சகர்களாக இருந்து, மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருப்பதை பறித்துக் கொண்டுள்ளனர். எனவே, அவர்களது அடையாளங்களுள் ஒன்றான மொட்டைத் தலைக்கு "ஏமாற்றுதல்" மற்றும் "முழுவதையும் பறிகொடுத்தல்" ஆகிய பொருட்களை கொடுத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

(ஏற்கனவே அண்ணனின் முதலாளிகளில் ஒருவருக்கு "நயவஞ்சகமாகக் கறக்கும்" குணம் இருப்பதினால், பெளத்த மொட்டைகளையும் முதலாளிகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது! 😏)

💥 மொட்டை மதத்தை தமிழ்நாட்டிற்குள் மீண்டும் கொண்டு வருதல் என்பது "இந்து சமயத்திற்கு பல வகைகளில தொல்லைக் கொடுத்தல்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதிதான். இதற்கு பெரும் பொருட்செலவும், காலமும் தேவைப்படும். இதற்கு மாற்றாக, மொட்டை மதத்திலிருந்து தோன்றிய நாம மதத்தை ஊக்குவிக்கலாம். நாம மதம் ஏற்கனவே இங்கு நன்கு நிலை பெற்றுள்ளது. உடனடி பலன் கிடைக்கும். 😁

பல வைணவத் தலங்கள் பெளத்த விகாரங்களாக இருந்தவைதாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலாகும். அவற்றை மீண்டும் விகாரங்களாக மாற்றிவிட்டால் உடனடியாக உள்கட்டமைப்பு கிடைத்துவிடும். 

> நாமம் போட்டுட்டியா? - ஏமாற்றிவிட்டாயா?
> நாமம் போட்டுட்டாங்களா? - ஏமாற்றிவிட்டார்களா?
> நாமம் -> வைணவம் -> ஏமாற்றுவேலை. 

மொட்டைகளானாலும் நாமப்பேர்வழிகளானாலும் தொழில் ஒன்றுதான்.

💥 ஒரு கட்டமைப்பும் இல்லாத பௌத்தர்களை ஊக்குவிப்பதை விட, ஓரளவு கட்டமைப்பும் எண்ணிக்கையும் கொண்ட சமணர்களை ஊக்குவிக்கலாம். ஆனால், அன்று சமணர்களுக்கு பெரும் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த 

> பிறந்தமேனியாக வலம் வருதல் 
> மயிற்பீலியால் பாதையை தூய்மை செய்து கொண்டு செல்லுதல் 

போன்ற விற்பனை உத்திகள் இன்று உதவாது. பொருளை அடிப்படையாகக் கொண்ட தற்காலத்திற்கு ஏற்றவாறு புதிய உத்திகளை உருவாக்கவேண்டும்.

oOOo

தாேன்றிய யாவும் மறைந்தே தீரும். இறுதியாக நம் மண்ணிற்கு வந்துசேர்ந்த கிறித்தவம் முதல், முகம்மதியம், வைணவம், பௌத்தம், சமணம், வைதீகம் என யாவும் தோன்றியவைதாம். ஒரு நாள் இவை மறையும். ஆனால், சமயம் என்ற சொல்லுக்கு தகுதி பெற்ற ஒரே நெறியான சைவம், இன்னாரால் இன்ன நாளன்று தோற்றுவிக்கப்பட்டதன்று. மனிதன், தான் யாரென்று தன்னைப் பற்றி சிந்திக்க தொடங்கிய நாளிலிருந்து அது தொடங்குகிறது. மனிதர்கள் தோன்றிக் கொண்டிருக்கும் வரை அந்த சிந்தனையும் தொடரும். சைவமும் நிலைத்திருக்கும். 

பண்டைய நாகரிகங்கள் செழித்திருந்த பகுதிகளில் தற்போது அகழ்வாராய்ச்சி செய்யும் போது வெளிப்படுவது பெருமாள், புத்தர், தீர்த்தங்கரர் சிலைகளோ, குறுக்கைகளோ, வெள்ளை சுவர்களோ அல்ல. சிவலிங்கங்கள்!! ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சிவ வழிபாடே செழித்திருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும். மேன்மை கொள் சைவநீதி உலகெங்கும் மீண்டும் சிறந்து விளங்கும் காலம் வரும்.

சைவம் என்ற சொல்லின் பொருள் அசைவற்றது / உள்ளும் புறமும் இணைந்தது. எது அசைவற்றது? பரம்பொருள்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, November 14, 2021

இஸ்ரவேலர் இயேசுதான் கபாலீசுவரர் - திருமா!! 😆😂😂🤣🤣

திருமாவளவன் பேசிய காணொளி: https://youtube.com/shorts/VaVoMfCHNP8?feature=share

ஒரு திரைப்படத்தில் செந்திலைப் பார்த்து கவுண்டமணி சொல்வார், "ஃப்ரீயா கெடச்சா பினாயில கூட குடிப்படா நீ"!! 😄 இது போன்று, "பொர கிடைக்குதுன்னா என்ன வேணும்ன்னாலும் பேசுவடா நீ" என்று யாராவது இவரை பார்த்துச் சொன்னால்தான் அடங்குவார் போலிருக்கிறது. 👊🏽👊🏽

நேற்று அயோத்தியை மீட்டுவிட்டோம். நாளை கபாலீச்சரத்தை நாம் மீட்க முயற்சி செய்தால் என்ன செய்வதென்று யோசித்து இந்த ஊழியத்தில் இறங்கியுள்ளனர்.

இன்று நாம் கபாலீச்சரம் என்று வணங்கும் திருத்தலம் உண்மையான கபாலீச்சரமன்று! தற்போது சாந்தோம் என்றழைக்கப்படும் தசமபாக மதத்தின் தொழிற்கூடம் இருக்குமிடத்தில்தான் அன்று உண்மையான கபாலீச்சரம் ஓங்கி உயர்ந்திருந்தது. அத்திருத்தலத்தை அழித்து, அங்கிருந்த மூலவரை உடைத்தெறிந்தான் பரங்கி கொடூரனான வாஸ்கோட காமா! உடைத்தெறியப்பட்ட அம்மூலவரைக் கொண்டுவந்து இப்போதிருக்குமிடத்தில் வைத்துவிட்டனர் நம் முன்னோர்கள்.

புதையல் வைக்கப்பட்ட இடத்தின் அடையாளத்தை அழித்துவிட்டால் புதையல் அழிந்துபோகுமா? அடையாளத்தை இடமாற்றி வைத்துவிட்டால் புதையல்தான் தானாக இடம் பெயர்ந்துவிடுமா? மூலவரை இடமாற்றிவிட்டால் அதற்கடியில் சமாதியாகியிருக்கும் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ இடம்பெயரமாட்டார். அவ்விடத்து மண்ணை முற்றிலுமாக அகற்றினாலும் அவர் வேறெங்கும் போகமாட்டார். அவரது சமாதியின் மீது இன்று நிற்கும் தொழிற்கூடம் ஒரு நாள் அகற்றப்படும். காழியூர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை" என்று தாெடங்கும் பதிகம் பாடி பூம்பாவை அம்மையாரை உயிர்பித்த அந்த திருத்தலம் மீண்டும் நம் வசமாகும். கபாலீசரை மீண்டும் தொழும் பேறு நமக்கு கிட்டும்.

oOOo

இந்த காணொளியில் சொல்வதுபோல் இஸ்ரவேலர் ஈசன் என்றழைக்கப்படும் தகுதி பெற்றவரா?

தன்னை விட்டு உலகை வேறொன்றாக காணாத நிலையே சிவநிலை. எனில், பரங்கியரின் திரைக்கதையின் படி, இஸ்ரவேலர் குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் போது, உள்ளபொருளை தந்தை எனவும், அவரிடம் மக்களை மன்னிக்கும்படியும் கோரிக்கை வைக்கிறார். இந்த திரைக்கதை உண்மையெனில் தான், மக்கள், இறைவன் என நம்மைப் போன்று உலகைக் காண்பவரை எவ்வாறு ஈசனென்று ஏற்றக் கொள்ளமுடியும்?

அவருடைய இனம் மேம்பட வேண்டுமென அவர் உழைத்திருக்கலாம். போராடியிருக்கலாம். செயற்கரிய சில செயல்களை புரிந்திருக்கலாம். ஆனால், சிவநிலையை அடையவில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, November 9, 2021

டியூன் (Dune) திரைப்படத்தில் இடம் பெறும் மெய்யியல் காட்சிகள்



பின்வரும் உரைகள் அண்மையில் வெளிவந்த டியூன் (Dune) என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இடம் பெறுகின்றன.

1. படத்தின் தொடக்கத்திலும், 3/4 பங்கு முடியும் போதும் பின்வரும் உரை இடம் பெறுகிறது:

நான் அச்சமடையக் கூடாது. அச்சமடையக் கூடாது.
அச்சத்தைக் கொண்டு மனதைக் கொல்லலாம்.
அச்சமென்னும் சிறிய இறப்பு பிறவியெனும் பெரிய இறப்பிற்குள் தள்ளிவிடும்.
அச்சத்தை எதிர்கொள்வேன். அது என்னை கடந்து போகும்.
அச்சம் என்னை கடந்து சென்ற பின்னர் என்ன மிச்சமிருக்கும்?
நான் மட்டும் இருப்பேன். நானாக இருப்பேன்.

தமிழுக்கேற்றவாறு சற்று மாற்றியிருக்கிறேன். இதன் மூல ஆங்கில உரை பின்வருமாறு:

I must not fear. I must not fear.
Fear is the mind-killer.
Fear is the little death that brings obliteration.
I will face my fear and I will permit it to pass over me and through me.
And when it has gone past…
I will turn the inner eye to see its path.
Where the fear has gone there will be nothing.
Only I will remain.

இந்த அருமையான உரையை "மனனஞ் செய்ததை ஒப்பித்தல்" போன்று காட்சிப்படுத்தியுள்ளனர்! இதை விட, 2013ல் வெளிவந்த After Earth என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். சாவைப் பற்றிய அச்சத்தை Ursa என்ற விலங்காக சித்தரித்து, அதை வென்று மெய்யறிவு பெறுவதை Ghosting என்ற உத்தியாக சித்தரித்திருப்பார்கள்.

இவ்விரு திரைப்படங்களின் உரைகளை எழுதியவர்களை நன்கு ஆராய்ந்தால் பின்னணியில் பகவான் திரு ரமண மாமுனிவர்தான் 🌺🙏🏽🙇🏽‍♂️ இருப்பார். குறிப்பாக, மதுரையில் 1896-ல் அவருக்கு ஏற்பட்ட முதல் இறப்புத் துய்ப்புதான் அடிப்படையாகவிருக்கும். பின்னொரு நாளில், அந்த துய்ப்பை பற்றி அன்பரொருவர், "மெய்யறிவு கிடைத்தவுடன் தங்களுக்குள் என்ன நடந்தது?" என்று கேட்டதற்கு பகவான், "அத்தோடு எனது சாவச்சம் நீங்கிற்று" என்று பதிலளித்தார்.

திரு மார்க்கண்டேய மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதித் தலமான திருக்கடவூர் தலவரலாறும் சாவச்சத்தைப் பற்றியதுதான். இந்த தலவரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதுதான் மடங்கல் பெருமாள் திருவிறக்க கதை (நரசிம்ம அவதாரம்).

2. திரைப்படத்தின் இறுதி கால் பங்கில் பின்வரும் உரை இடம் பெறுகிறது:

கண் முன்னே விரியும் காட்சி என்பது விடுவிக்கப்படவேண்டிய புதிரன்று.
துய்க்கப்படவேண்டிய ஒன்று.
விரியும் காட்சியை நிறுத்தமுடியாது. விட்டு விலகவும் முடியாது.
கடல் அலைகளை எதிர்க்காமல், அவற்றோடு சருக்கி விளையாடுபவர்கள் போன்று காட்சிகளை கண்டுகளித்திருக்கவேண்டும்.

இதையும் தமிழுக்கேற்றவாறு நிறையவே மாற்றியிருக்கிறேன். இதன் மூல ஆங்கில உரை பின்வருமாறு:

The mystery of life isn't a problem to solve.
But a reality to experience.
A process that cannot be understood by stopping it.
We must move with the flow of the process.
We must join it. We must float with it.

இந்த உரையை விட, இது திரையில் பேசப்படும் போது பின்புறம் ஓடும் காட்சி அருமையாகவிருக்கும். மணல் துகள்கள் நிலையற்று, வேகமாக, ஒரு வடிவமைப்பில் இடம் பெயர்ந்து கொண்டேயிருப்பது போன்ற காட்சி பின்புறத்தில் ஓடிக் கொண்டிருக்கும். அணு நிலையில் உலகிலுள்ள யாவும் நிலையில்லாமல், ஓர் ஒழுங்கில் அசைந்து கொண்டிருப்பதை இப்படி சித்தரித்திருக்கிறார்கள்.

மேற்கண்ட உரை மற்றும் பின்புறக் காட்சியை ஓவியமாக்கினால்... அம்மையப்பரின் திருநடனம் கிடைக்கும்!! 😍

oOOo

இந்த டியூன் படம் போன்று பல ஹாலிவுட் திரைப்படங்களில் உள்ளபொருளைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

ஆனால், நமது திரைப்படங்களில்...

பிணக்குறியீடுகள், தசமபாகம் பெறும் தொழில் நிறுவனக் கட்டிடங்கள், காட்டுமிராண்டிப் பெயருடைய நல்லவர்கள், திருநீறு பூசிய அல்லது இந்துப் பெயருடைய கொடூரர்கள், "திருமணத்திற்கு முன் கலப்பதில் தவறென்ன இருக்கிறது?" என்ற பகுத்தறிவு கேள்விகள் ... 😔😡

இந்த அவல நிலை ஒரு நாள் முடிவுக்கு வரும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, November 3, 2021

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽✨🎁🍥🍡🎊🎉


☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ நரகாசுரனை கொன்ற நாள். அதாவது, கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நாள்.

☀️ நரகாசுரன் - "நான் இந்த உடல்" என்ற தவறான எண்ணம். இந்த தவறான எண்ணத்தை விட்டொழிக்க வேண்டுமெனில் நம்மைப் பற்றிய சரியான அறிவு துய்ப்பாக மலரவேண்டும். இது கண்ணபிரானுக்கு நடந்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

☀️ கங்கை குளியல் - தீபாவளியன்று சந்திக்கும் நபர்களிடம் கேட்கப்படும் கேள்வி: கங்கையில் குளித்தீரா? (கங்கா ஸ்நானம் ஆச்சா?) இதன் பொருள்: மெய்யறிவு கிடைத்ததா?

மெய்யறிவில் திளைக்கும்போது நம் தலையிலுள்ள பிட்டியூட்டரி சுரப்பி சிறப்பாக வேலை செய்யும். இதனால் உடலிலுள்ள மற்ற சுரப்பிகள் தூண்டப்பட்டு, அவையும் சிறப்பாக வேலை செய்யும். இதையே குளியல் என்று குறிப்பிட்டுள்ளனர். பிட்டியூட்டரி சுரப்பியிலிருந்து வெளிப்படும் நீர் வெள்ளை (கங்கை) நிறத்தில் இருப்பதால் "கங்கை குளியல்" என்று பெயரிட்டுள்ளனர். இதையே "சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவதாக" உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

☀️ தமிழகத்தில் தீபாவளியை அறிமுகப்படுத்தியது தெலுங்கு வைணவ மன்னரான திருமலை நாயக்கராவார். வைணவம் பரவுவதற்காகவும், அடைமழை காலத்தில் அடங்கிப் போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும் அறிமுகப்படுத்தினார். இன்றும் கூட, பெரும்பாலான கிராமப்புற தமிழர்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை. பொங்கலே தமிழர் திருநாளாகும்.

☀️ கண்ணபிரான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை மெய்யறிவைப் பற்றியது. ஆனால், தீபாவளி என்ற சொல் உணர்த்தும் பேருண்மை வேறு: விளக்குகள் பலவானாலும் எரியும் நெருப்பு ஒன்றுதான். இது போன்று, உயிரிகள் பலவானாலும் எல்லோருள்ளும் உள்ள தன்மையுணர்வு ஒன்றுதான்.

இந்த உண்மை உணரப்பட்ட திருத்தலம் நமது திருவண்ணாமலை (உணரப்பட்ட திருநாள் - திருக்கார்த்திகை). சில சமயம், ஒரு திரைப்படம் தமிழிலிருந்து வடக்கிற்கு சென்று, மீண்டும் வடக்கிலிருந்து தமிழுக்கு வரும். இது போன்று, திருக்கார்த்திகை வடக்கிற்கு சென்று கண்ணபிரானின் திருநாளோடு இணைந்து தீபாவளியாகி, பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. ஆனாலும், நம்மவர்கள் விளக்கிடுதலை மட்டும் திருக்கார்த்திகையன்றே தொடர்ந்துள்ளனர்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நாம் "தொல் கார்த்திகை நாளன்று" (காழியூர் பிள்ளையாரின் சொற்கள் 🌺🙏🏽🙇🏽‍♂️) விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, October 30, 2021

விளம்பரத்துறையிலும் கோலோச்சும் அந்நிய மதத்தினர்!!

அண்மைக்காலத்தில் என் கண்ணில் பட்ட சில விளம்பரங்கள்:

1. டாடா பஞ்ச்


சிற்றுந்தின் பின்புறம் மூன்று இன, மத & சமயச் சின்னங்களை வைத்துள்ளனர்.

முதலில், டெல்லியிலுள்ள "பாரதத்தின் வாயில்". முதல் உலகப்போரில் இறந்த பாரத வீரர்களை இச்சின்னம் குறித்தாலும், மறைமுகமாக, உலகக் கொல்லிகளான பரங்கியரையும், அவர்களது மதத்தையும் குறிக்கும்.

அடுத்து, டெல்லியிலுள்ள குதுப்மினாரும், ஜாமா தொழுகையில்லத்தின் முகப்பும். இவை, நம் மீது படையெடுத்து வந்து, நம்மை நாசம் செய்த முகம்மதியரையும், அவர்களது மதத்தையும் குறிக்கும்.

இறுதியாக, வட பாரத முறைப்படி கட்டப்பட்ட ஒரு இந்துசமயக் கோயில்.

நம்மை சீரழித்தவர்களுக்கு, கொன்று குவித்தவர்களுக்கு முதலிடங்கள்! நமக்கு கடைசியிடம்!! எண்ணிக்கையில், நமக்கு ஒன்று அவர்களுக்கு மூன்று!!! 

நமக்கென்று வரும்போது தனித்துவமில்லாத, புகழ் பெறாத அடையாளம். அவர்களுக்கென்று வரும்போது புகழ் பெற்ற, எல்லோரும் அறிந்த, தனித்துவமான அடையாளங்கள்.

2. டிவிஎஸ் ஜூபிடர் 125


இந்த காணொளி முமுக்க, எந்தவித மத & சமயச் சின்னங்களும் தரிக்காத மனிதர்களைக் காட்டியவாறு வந்து, இடையில் ஒரு விநாடி மட்டும் ஒரு முகம்மதியப் பெண் குழந்தையைக் காட்டுவார்கள்.

ஒன்று அனைத்தையும் காட்டியிருக்கவேண்டும். அல்லது, எதையும் காட்டியிருக்கக்கூடாது.

(முகம்மதியத்தைப் பொறுத்தவரை இரண்டே குறியீடுகள்தான்: ஆண்குறி & பெண்குறி. முழுவதும் கருப்பு ஆடை அணிந்த பெண் பெண்குறிக்கு சமம். உடலை கருப்பு ஆடையாலும், தலையை மட்டும் வெள்ளை / வண்ண ஆடையால் மறைத்திருக்கும் பெண் "புணரப்பட்ட பெண்குறிக்கு" சமம்.)

3. ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் - தயாரிப்பு


இந்த காணொளியின் முகப்பில் பெளத்த, கிறித்தவ, முகம்மதிய அடையாளங்களைக் காட்டிவிட்டு, பின்னர், யோகம் & இந்து சமய அடையாளத்தைக் காட்டுவர்.

டாடா பஞ்ச் காணொளியில் பயன்படுத்திய உத்தியை இங்கேயும் பயன்படுத்தியிருப்பர்: அழுக்கான, மனதில் சட்டென்று பதியாத இந்து சமய அடையாளம்! புகழ் பெற்ற, தூய்மையாகவுள்ள, மனதில் சட்டென்று பதியக்கூடிய இருள் மத அடையாளங்கள்!!


இவற்றுடன், அண்மையில், வெளிவந்த ஃவேப் இந்தியா & டாபர் நிறுவனங்களின் விளம்பரங்களையும், சென்ற ஆண்டு வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தனிஷ்க் விளம்பரத்தையும் (முகம்மதிய வீட்டிற்குள் ஓர் இந்துப்பெண் மருமகளாக உள்நுழைவார்) நினைவில் கொள்ளவேண்டும்.

கல்வி, ஊடகம், சின்ன & பெரிய திரைத்துறைகளை அடுத்து விளம்பரத்துறையையும் நயவஞ்சக & நாசகார மதத்தினர் கைப்பற்றியுள்ளனர் என்பதை மேற்கண்ட விளம்பரங்கள் காட்டுகின்றன.

இதற்கு என்ன பதிலடி கொடுக்கப் போகிறோம்? அவர்களது கட்டமைப்பை எவ்வாறு தகர்க்கப் போகிறோம்? அவர்கள் கைப்பற்றியிருக்கும் துறைகளை எப்போது மீட்கப் போகிறோம்? ... இந்த வகையில் இந்து சமயத்தின் அடையாளமாக தங்களை முன்னிறுத்திக் கொள்வோர் சிந்திப்பதாகத் தெரியவில்லை. 

நியூயார்க் டைம்ஸ், இந்திரலோக டைம்ஸ், வைகுண்டம் டைம்ஸ் என எல்லா டைம்ஸிலும் தவரிஷியைப் புகழ்ந்தாக ஃபோட்டோஷாப் செய்வது, வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்நாப்சாட் போன்ற செயலிகள் வழியாக செயல்படும் இந்து குழுக்களில் தவரிஷியின் திருப்புகழைப் பரப்பி, சற்று மறை கழன்ற கேசுகளை தற்கொலைப் படையினராக மாற்றுவது போன்ற கைங்கரியங்களில்தான் முனைப்பாக இருப்பது போல் தெரிகிறது.

பகவான் திரு ரமணர் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு முருகனார் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு ராமச்சந்திர மகராஜ் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட சொற்கள் மெய்யாகும் காலம் வரும். கோன்முறை அரசுகள் தோன்றும். இருள் விலகும். ஒளி வெளிப்படும். என்றும் வாய்மையே நிலைத்து நிற்கும். 💪🏽

வில்லர் வாழ்வு குன்றி ஓய
வீர வாளும் மாயவே
வெல்லுஞானம் விஞ்சி யோர்செய்
மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் வனைத்தும் வேறு
சூழ நன்மை யுந்தர
வல்ல நூல் கெடாது காப்பள்
வாழி அன்னை வாழியே!

-- மகாகவிஞர் 🌷🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, October 27, 2021

அந்தணர் & பிராமணர்: ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல!!




பெரும்பாலான தொன்ம வரலாறுகளில், செவிவழிச் செய்திகளில், தல புருடாக்களில் இறைவன் "முதிய அந்தணராக வந்தார்" என்ற வரியைக் காண முடியும். இது பற்றி ஓர் அன்பர் பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️ வருத்தப்பட்டார் (அதாவது, "வேறு சாதியினர் வடிவில் இறைவன் தோன்றமாட்டாரா?" என்பது அந்த அன்பர் கேட்க வந்த கேள்வி). அதற்கு பகவான், ஆறுதலாக, அக்கதைகளில் பதிவாகியிருக்கும் செய்தியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்.

அந்தணர் என்றதும் ஒரு குறிப்பிட்ட ஒப்பனை / இனம் நம் மனதில் தோன்றுவது போல் நமக்கு கொம்பு சீவி வைத்துள்ளனர். இது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த கைங்கர்யமாகும்.

அந்தணன் என்ற சொல்லுக்கு அறவோன், தூயவன், பிராமணன், எவ்வுயிரையும் தன்னுயிர் போல் காண்பவன் என்று பல பொருட்கள் உண்டு. இவையனைத்துமே சிவபெருமானைக் குறிக்கின்றன.

🔹அறவோன் எனில் அற வடிவினன் அல்லது அறத்தினின்று வழுவாதவன். அறம் எனில் நீதி. நீதிக்கு இறைவன் என்றொரு பொருள் உண்டு. காரைக்கால் அம்மையார் 🌺🙏🏽🙇🏽‍♂️ இறைவனை "அறவா" என்றழைக்கிறார்.

🔹தூயவன் எனில் மாசு சிறிதும் அற்றவன் என்று பொருள். மாசு என்பதற்கு மாயை, இருள், கருமை, விபரீதம் என்று பல பொருட்கள் உள்ளன. இவையனைத்துமே உடல் அல்லாத நம்மை, நாம் உடலாகக் கருதும் தன்மையைக் குறிக்கும். இந்த மயக்கம் தீர்ந்தவரே தூயவன். சிவபெருமானின் பெயர்களில் ஒன்று மாசிலாமணி (மாசு இல்லா மணி).

🔹பிராமணன் எனில் பிரம்மமாய் இருப்பவன். பிரம்மம் எனில் என்றும் மாறாதது. சிவதத்துவம் மாறாததை / அசைவற்றதைக் குறிக்கும். சக்தி / பெருமாள் தத்துவம் மாறுவதை / அசைவதைக் குறிக்கும்.

🔹சிவபெருமான் எனில் சிவநிலையில் உள்ள பெருமான். காண்பானிலிருந்து காட்சி வேறுபடாமலிருக்கும் நிலையே சிவநிலை. மொத்த அண்டமும் தானாக தோன்றும் இந்த நிலையில் பிறவுயிர்கள் மட்டும் பிரிந்து தனியாக தோன்றுமா? எவ்வுயிரையும் தன்னுயிராக உணர சிவநிலையில் உள்ள பெருமான்களால் மட்டுமே முடியும். இவர்களே உண்மையான அந்தணர்கள்.

எனில், சிவபெருமான் அந்தணனாகத்தான் தோன்ற முடியும். பிறவுயிர்களை தன்னிலிருந்து வேறாகக் காண்பவர் சிவபெருமான் அல்லர். ஆகையால், சிவபெருமான், அந்தணன் & பிராமணன் ஆகிய சொற்கள் ஒரு பொருட் பன்மொழியாகும். சிவபெருமானை - சிவநிலையில் இருப்போரை - குறிக்கும் சொற்களாகும். ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, October 26, 2021

சோற்று முழுக்கு / ஒப்பனை & சோறு கண்ட இடம் சொர்க்கம்


காலகாலமாக "சோற்று முழுக்கு" (அன்னாபிஷேகம்) என்றிருந்த விழா கடந்த 25+ ஆண்டுகளாக "சோற்று ஒப்பனை"-ஆக (அன்ன அலங்காரம்) மாறிவிட்டது!

சோற்று முழுக்கின் பொருள்: மொத்த உலகமும் உணவுமயம்!!

இந்த ஒப்பனையைக் கண்டால் மேலுலகம் கிட்டும் (சோறு கண்ட இடம் சொர்க்கம்) என்று எழுதுகிறார்கள். இது தவறு. இதை கண்டால் - அதாவது, மொத்த உலகமும் உணவுமயம் என்பதை உணர்ந்தால் - நமது ஆணவமடங்கும்!!

எனில், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற சொற்றொடரின் உண்மையான பொருளென்ன?

🔹 சோறு என்ற தமிழ் சொல்லுக்கு விடுதலை (ஆரியத்தில், முத்தி) என்றொரு பொருளுண்டு. நம்மை பற்றிய சரியான அறிவைப் பெறுதலே விடுதலையாகும்.

🔹 கண்ட - காணுதல் - உணர்தல்.

🔹 இடம் - நிலை

🔹 சொர்க்கம் - மேலுலகம் - தேவைகளற்ற கவலைகளற்ற மகிழ்ச்சியான நிலை.

நம்மை அழியும் உடலெனத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நாம் அழிவற்ற பரம்பொருள் என்பதை உணர்ந்து, அந்த மெய்யறிவில் நிலைபெறுதலே சொர்க்கமாகும்.

oOOo

மேலும் விரிவாக தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்காணும் இணையப் பக்கங்களைக் காணவும்:

1. சோற்று முழுக்கு: http://samicheenan.blogspot.com/2018/10/blog-post_23.html?m=1

2. சோற்று முழுக்கு & சோறு கண்ட இடம் சொர்க்கம்: http://samicheenan.blogspot.com/2020/11/blog-post.html?m=1

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்!!

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, October 20, 2021

தில்லை திருத்தலத்திற்குள் கோவிந்தராசர் சிலை நுழைந்த வரலாறு!!



("The Aravidu dynasty" (வரலாற்று ஆய்வு நூல்) மற்றும் திரு கா வெள்ளைவாரணரின் "தில்லை பெருங்கோயில்" ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை.)

இரத்தப்படுக்கை

-- சிவதீபன் (9585756797)

தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங்கூட மின்னிக் கொண்டிருந்தன. இன்று நிகழவிருக்கும் காட்சிகளைக் காண விரும்பாத கதிரவன், தனது கண்களை மூடிகொண்டே கிழக்கே அடி எடுத்து வைத்துள்ளான் போலும்! பொழுது புலராத அந்த வேளையில் தீட்சிதர்கள் யாவரும் கீழசன்னதி வாசலில் கூடிநின்று பரபரப்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அதிகாலை வேளையிலும் விரைவாக அகத்து வேலைகளை நிறைவுசெய்து கொண்டு, ஈரக்கைகளுடன், மடிசார் சரசரக்க, பெண்களும்கூட வந்துசேரத் தொடங்கினர்.

"எப்படியும் இன்று ஒரு பிரச்சனை இருக்கிறது!!" என்று ஊகித்தவர்களாக ஆலயத்தில் பணிபுரியும் சிற்பிகளும் எடுபிடிகளும் மெல்ல ஒதுங்கி கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை பார்க்கப் பார்க்க தீட்சிதர்கள் பலருக்கு மனம் வெகுண்டது. "காலங்காலமாக நமக்கு பாத்தியப்பட்ட கோயில் வாசலில் இன்று நாமே அகதிகள் போல நிற்க வேண்டியிருக்கிறதே!!" என்று சிலர் விம்மினர்!

அதிலொரு தீட்சிதர்,

பொங்கிய திருவில் நீடும்
பொற்புடைப் பணிக ளேந்தி
மங்கலத் தொழில்கள் செய்து
மறைகளால் துதித்து மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பில்
தகும்பணித் தலைநின் றுய்த்தே
அங்கணர் கோயி லுள்ளா
அகம்படித் தொண்டு செய்வார்

என்ற பெரிய புராணப் பாடலை உரக்க கூறியவராய், "நடராஜா! நடராஜா!! உனக்கு அடிமை செய்யவே பிறந்தவர்கள் நாங்கள் என்று திருமுறைகள் போற்றுகிறதே!! இன்று எங்களுக்கே இந்த நிலைமையா?" என்று வாய்விட்டே அழுதார்!!

அதைக் கேட்ட சிலர் வெகுண்டெழுந்து கீழகோபுர வாசல் வழியே உட்செல்ல முயற்சித்தபோது, செஞ்சியிலிருந்து வந்திருந்த சிறப்பு தெலுங்கு வீரர்கள், "எவரு ராக்கூடாதையா!! ஸ்தானிகாலு மாத்ரம்! ஸ்தானிகாலு மாத்ரம்!!" என்று தடுத்தனர்.

"நாங்கள் மூவாயிரம் பேரும் எங்கள் சுவாமிக்கு ஸ்தானிகம்தானடா!! எங்களை தடுக்க நீங்கள் யார்?" என்றார் ஒரு தீட்சிதர்.

இந்த கேள்விக்கு அங்கு யாரும் பதில் அளிக்கவில்லை. மாறாக, நெற்றியில் திருமண் சாற்றிகொண்ட வைணவர்கள் சிலரின் வேதாகம கோஷங்கள் மட்டுமே பதிலாக எழுந்தது. அவர்களுக்கு அருகிலேயே பெரிய பள்ளிகொண்ட திருமாலின் சிற்பம் ஒன்று ஸ்ரீதேவி பூதேவி தயார்களுடன் வடிவமைக்கப்பட்டு தயாராய் கிடந்தது.

அச்சிற்பம், வெறும் கல்லாக இங்கு வந்து இறக்கப்பட்ட காலத்திலிருந்து பூக்கத் தொடங்கிய பிரச்சனை அது! அன்றிலிருந்து தீட்சிதர்களும் எத்தனையோ முறை முயற்சித்தும் பலனில்லாமல், கல்லாய் தொடங்கிய பிரச்சினை இன்று மாலாய் மாறிக் கிடக்கிறது!!

(சற்று பின்னோக்கி செல்வோம்)

தீட்சிதர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். திருமங்கையாழ்வாரின் பேச்சைக் கேட்டு என்றோ நந்திவர்ம பல்லவன் வைத்துச் சென்ற புள்ளியில் இன்று வைணவ மதவெறி பிடித்த தெலுங்கன் செஞ்சி கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கோலம் போடுகிறான்.

நந்திவர்மன் தெற்றியம்பலமாக ஸ்தாபித்த சித்திரக்கூடத்து கோவிந்தராசரை, "தில்லைநகர்த் திருச்சித்திரக் கூடந் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே" என்று குலசேகர ஆழ்வாரும், "மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித் தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக்கூடம் சென்று சேர்மின்களே" என்று திருமங்கையாழ்வாரும் பாடியதனை நாயக்கனிடம் தீட்சிதர்கள் எடுத்துக் கூறினர்.

"நீங்கள் கோயில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், பூசிக்கும் உரிமையை எங்களிடம் விட்டுவிடுங்கள். உங்கள் வைணவ ஆகமப் பூசை முறைகள் உள்ளே வரவேண்டாம். நாங்கள் எங்கள் முறைப்படி உங்கள் கோவிந்தராசரை பூசிக்கிறோம். அதனைத்தானே உங்கள் பாசுரங்களும் குறிப்பிடுகின்றன." என்று இறங்கி கேட்டபோது
முழுதாக தமிழ் புரியாத நாயக்கன் அவனுக்கருகில் அமர்ந்திருந்த அவனது வைணவ குருவினை பார்த்தான்.

அதற்கு அவர், "கூடாது! கூடாது!! பெருமாளை நம் முறையில் நம்மவர்கள் தான் பூசிக்கவேண்டும். முன்னர் இவர்கள் பூசித்தப்போதுதானே சோழ மன்னர் பெருமாளை கோயிலைவிட்டே வெளியேற்றினார். மேலும், அப்போது வெளியே சென்ற பெருமாள், வைணவஸ்ரீபாத நாயக்க மன்னர்கள் வந்தபின்னர்தான் இந்த கோயிலுக்குள்ளே வந்திருக்கார். இப்போது, ராஜா, உங்களது புண்ணியத்தால் பெருமாள் பெரிய கோயிலுக்குள் மீண்டும் பள்ளி கொள்ளப்போகிறார். இவ்வளவு பெரிய சிலையை செய்து வைத்துவிட்டு, பூசையை இவர்களிடம் விட்டுச்செல்வதா?" என்று தெலுங்கில் கிசுகிசுத்தார். கொண்டம நாயக்கனுக்கு சினம் மிகுந்தது. 

அவனது சினத்தையும், தெலுங்கில் வைணவர் கூறிய கிசுகிசுப்பையும் புரிந்து கொண்ட தீட்சிதர்கள், "நாயக்கரே! அது என்றோ பழையகாலத்தில் நடந்தது. தவிர அன்றும் இப்படி சில வைணவர்கள் தாெல்லை கொடுத்ததால்தான், அம்பலத்தை விரிவாக்க எண்ணிய சோழ மன்னருக்கு கோபம் வந்து, அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்றும் தெற்றியம்பலத்தில் சிறியதாக இருந்த கோவிந்தராசரை பெரிதாக்கி, எங்கள் சபாநாயகர் ஆடுமிடத்தில் முக்கால் பங்கு காெள்ளைபோவதற்கும் இப்படிப்பட்ட தீயவர்கள்தான் காரணம்." என்று காேபத்தில் அரசன் முன்பே ஒரு தீட்சிதர் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.

அவ்வளவுதான்! நாயக்கனுக்கு ஆத்திரம் பீறிட்டது. "தீட்சிதர்களே! நீங்கள் அமைதியாக இருந்து எங்கள் சுவாமிக்கு நாங்கள் செய்யும் திருப்பணிக்கு ஒத்துழைத்தால் நல்லது. இல்லையென்றால் விளைவுகளுக்கு நான் ஒன்றும் அஞ்சியவனில்லை. குறித்த நாளில் சித்சபைக்கு எதிரில் புதிதாக கட்டப்பட்ட சித்திரக்கூடத்தில் பெரியபெருமாளை படுக்க வைத்தே தீருவேன்!!" என்று தெலுங்கு கலந்த தமிழில் முழங்கினான். அனுசரித்து பேசப்போன பஞ்சாயத்தும் நாயக்கனிடம் செல்லுபடியாகவில்லை.

அவன் சொன்னபடி சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள திருமுறைக் கைக்கொட்டி மேடையின் மேல்பகுதியை ஆக்கிரமித்து சித்திரக்கூடத்தை கட்டினான். நந்திவர்ம பல்லவன் காலத்தில் நிறுவப்பட்ட தெற்றியம்பலத்து கோவிந்தராசர் சிலை சிறியதாக இருந்ததால் அதற்கு பதில் பெரியதாக சிலைசெய்யக் கல்லை கொண்டுவந்து கீழவாசலில் நிறுத்தினான்.

அதுமுதல் தீட்சிதர்கள் கோயிலுக்குள் சரளமாக சென்றுவர தடைவிதித்தான். நடராசரை பூசிக்கும் முறைக்காரர் மற்றும் கோயில் பணியாளர்களைத் தவிர, மற்ற தீட்சிதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாரும் கோயிலுக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டான்.

அந்த ஆண்டு ஆனித்திருமஞ்சனம் கூட நாயக்கனின் காவல் வீரர்களின் கெடுபிடியால் பெரும் இடைஞ்சலுக்கு உள்ளானது. சுவாமியை யாத்ராதானம் செய்த போது தேருக்கு அழைத்து வரக்கூடாது என்று உத்தரவு போட்டான். தீட்சிதர்கள் தேவசபையிலேயே சுவாமியை எழுந்தருள செய்துவிட்டு, பிறகு, ஒருவழியாக ராஜசபைக்கு அழைத்து வந்து திருமஞ்சனம் செய்து முடித்தனர். அனைவரது மனமும் கனத்து இருந்தது!

இப்படியாக நாயக்கனின் கெடுபிடியில் காலம் சென்றதே தவிர மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. வந்திறங்கிய கல்லும் கோவிந்தராசராக உருமாறிவிட்டது.

(மீண்டும் அன்றைய நிகழ்வுக்கு வருவோம்)

இன்று சிலை கோயிலுக்குள் செல்ல இருக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் குடமுழுக்கும் செய்ய இருக்கிறார்கள். அதற்கான பூசையை வைணவ பட்டர்கள் வந்து தொடங்கிவிட்டனர். "இதனை தடுக்க ஏதேனும் வழி கிடைக்காதா? எங்கள் சுவாமியின் இடமும் கோயிலும் இப்படி பறிபோகிறதே!" என்ற ஆற்றமையால்தான் அந்த அதிகாலையில் தீட்சிதர்கள் கூட்டங்கூட்டமாக கீழசன்னதி வாசலில் கூடியிருந்தனர்.

அதுவரை ஆரவாரத்துடன் நின்றிருந்த அந்தணர்கள் கொண்டம நாயக்கன் வருகிறான் என்ற கட்டியங்கேட்டு அமைதியானார்கள்.

அவனது இரதம் பெரும் இறைச்சலுடன் கீழவாசலில் வந்து நின்றது. தீட்சிதர்களை ஏளனமாக பார்த்துவிட்டு, பட்டர்கள் கொடுத்த பூரணகும்பத்தை தொட்டு வணங்கிய நாயக்கனிடம் தீட்சிதர் ஒருவர் "நாயக்கரே!" என்று அனுசரனையாக பேசத் தொடங்கினார்.

அதனை சட்டைசெய்யாத நாயக்கன், காேவிந்தராசர் சிலை நோக்கி கும்பிட்டபடி நடக்கத் தொடங்கினான்.
அதனை கண்ட இளம்வயது தீட்சிதர்கள் சிலர், "நாயக்கரே! நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எங்கள் சைவக்கோயிலை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். இதனை எங்கள் உயிர் இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம்!!" என்று உரக்கக் கத்தினர்.

அதுசமயம் அங்கு கூடியிருந்த சிவனடியார் பெருமக்களும் தங்களது எதிர்ப்பை உரத்த குரலை பதிவு செய்தனர். அதனை கேட்ட நாயக்கன் மதம் பிடித்த யானையாய் தலையாட்டி, "நீங்கள் இறந்தாலும் ஏதும் நின்றுவிடாது. இன்று எங்கள் பெருமாள் உள்ளே போவது உறுதி!" என்று அலட்சியமாக பதிலளித்தான்.

"பீடையே! உன்னை பிரம்மஹத்தி பிடிக்கப் போகிறதடா!" என்று கத்தியவர்களாய் சில தீட்சிதர்கள் கீழகோபுரத்தின் மீது ஏறத்தொடங்கினர். அவர்களை தடுக்க முயற்சித்த தெலுங்கு வீரர்களை நாயக்கன் தடுத்தான். தீட்சிதர்கள் வரிசையாக மேலே ஏறி நின்று கொண்டனர்.

அவர்களது வீட்டுப் பெண்களும் சிவனடியார்களும் கதறியழுதனர். ஆனாலும், எதனையும் பொருட்படுத்தாத நாயக்கனை மேலிருந்து அழைத்த தீட்சிதர் ஒருவர், "நாயக்கனே! உனது மதவெறிக்கு தண்டனை நிச்சயம் உண்டு. எங்கள் கோயிலை காக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நீ எத்தனை பிறவியெடுத்தாலும் இந்த பிரம்மஹத்தி விடாது. நடராஜா! நடராஜா!! எங்களுக்கு வேறு வழி தெரியலையப்பா!! இனி எந்த பிறவியில் உன்னைப் பார்ப்பேனோ!" என்று உரக்க கத்தியவராய் கோபுரத்தின் உச்சியிலிருந்து தடாலென்று தரையை நோக்கிப் பாய்ந்து உயிரைத் துறந்தார். அதைக் கண்ட ஏனையோரும் அடுத்தடுத்து விழுந்து மாண்டனர். 😭🙏🏽😡

பெண்களும் குழந்தைகளும் சிவனடியார்களும் கதறிக்கதறி அழுதனர். இப்படியாக அடுத்தடுத்து இருபது பேர் தமது இன்னுயிரை தியாகம் செய்த பின்னர், நாயக்கன் வாய்திறந்து, "இனி யாராவது கோபுரத்தில் ஏறினால் சுட்டுத்தள்ளுங்கள்" என்று ஆணையிட்டான். "படீர்!" "படீர்!" என்று வெடித்த துப்பாக்கி குண்டுகளுக்கு இரண்டு தீட்சிதர்கள் பலியாகினர்.

கீழவாசல் முழுக்க சிவப்பானது. இரத்தம் ஆறாகப் பெருகி, அங்கு கிடக்கும் கோவிந்தராசர் சிலைக்கு கீழேயும் சென்றது. அந்த சிலையில் வடிக்கப்பட்டிருக்கும் ஆதிசேசனுக்கு உயிர் இருந்திருப்பின், இந்த அநீதியை பொறுக்காமல் அவனும் சற்று நெளிந்திருப்பான்! எங்கும் எழுந்த அழுகுரல்களுக்கு மத்தியில், தீட்சிதர் வீட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வீரத்துடன், அருகில் நின்ற வீரன் ஒருவனின் குத்துவாளை பிடுங்கிக் கொண்டு நாயக்கனை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார்!

"அடேய்! பிரம்மஹத்தி பிடித்த நாயக்கனே!! உன்னை இப்படியே குத்தி கொல்லவேண்டும் என்றுதான் இந்த வாளை உருவினேன். அதற்கு எனக்கு பலமில்லை. ஆனால், உனது பாவக்கணக்கு இன்னும் பெருகட்டும். பிரம்மஹத்தியோடு ஸ்த்ரீஹத்தியும் சேரட்டும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உனக்கும் உன் கூட்டத்தாருக்கும் விடிவு இல்லையடா, பாவி!!" என்றபடி குத்துவாளால் தன் கழுத்தை கீறிக்கொண்டு, இரத்த வெள்ளத்தில் விழுந்தார் அந்த வீரப்பெண்மணி!

இத்தனை உயிர்கள் சென்றபின்னும் மதம்பிடித்த நாயக்கனுககு மனம் மாறவில்லை. "இவற்றை அப்புறப்படுத்திவிட்டு, விரைவாக பெருமாளை உள்ளே இழுத்துச் செல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அழுகுரல்களுக்கு இடையில் எதிர்த்து வந்த தீட்சிதர்களின் குரல் அடங்கிற்று. இரத்தபெருக்கு கழுவிவிடப்பட்டது. ஆயினும், கோவிந்தராசருக்கு அடியில் புகுந்த இரத்தத்தை வைணவர்கள் மறந்திருந்தனர். பெரிய உருட்டுக் கட்டைகளுக்கு மேலே ஏற்றி, அவற்றை மெல்ல மெல்ல உருட்டி, உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்தராசர் சென்ற வழியெல்லாம் இரத்தக்கறை படிந்து கிடந்தது; காற்றில் இரத்தவாடை அடித்தது.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே ஆடிக் கொண்டிருக்கும் அம்பலக்கூத்தனின் புன்னகை மட்டும் அன்றும் மாறவில்லை. அதற்கான பொருளை யார்தான் விளக்க முடியும்?

- முற்றும் -

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

(மூலம்: https://www.facebook.com/100001999617640/posts/4383196351756975/?app=fbl)

(பி.கு.: மூல இடுகையின் சாரத்தையும் வேகத்தையும் மாற்றாமல், அதிலிருந்த எழுத்து & சொற்பிழைகளை முடிந்தவரை நீக்கி, நடையை சீராக்குவதற்காக சிற்சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளேன். 🙏🏽)

oOOo

👊🏽 பெளத்தத்தின் கதை தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்த பின், அதிலிருந்த ஒரு பிரிவினர், பெண்தெய்வ வழிபாட்டுக்குள் புகுந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக பெண் தத்துவத்தை ஆண் தத்துவமாக்கி விரித்த கடைதான் வைணவம்.

இவர்கள் பௌத்தர்களாக இருந்த போது:

- மொட்ட போட்டுட்டியா? (முழுவதும் கறந்துவிட்டாயா?)
- மொட்ட போட்டுட்டாங்களா? (முழுவதும் கறந்துவிட்டார்களா?)

இவர்கள் வைணவர்களாக மாறிய பின்னர்:

- நாமம் போட்டுட்டியா? (ஏமாற்றிவிட்டாயா?)
- நாமம் போட்டுட்டாங்களா? (ஏமாற்றிவிட்டார்களா?)

ஆக, பௌத்தம் = கொள்ளை; வைணவம் = ஏமாற்றுவேலை!! 👊🏽👊🏽👊🏽

👊🏽 "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற சொலவடை இவர்களது ஆஞ்சநேயர் எப்படி மற்றும் யாரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவர் என்பதைக் காட்டும்.

👊🏽 இவர்களிடம் இருக்கும் பெரும்பாலானவற்றிற்கு அடிப்படை சைவமும் அத்வைதமும்தான். இவையிரண்டும் இல்லையெனில் புருடா விடுவதற்குக்கூட இவர்களிடம் பொருளில்லை.

👊🏽 வைணவம் உருவாக்கப்பட்டது பொ.ஆ. 7ம் நூற்றாண்டின் பிற்பாதியில் என்றாலும், இவர்களது நாமச்சின்னம் உருவாக்கப்பட்டது 12ம் நூற்றாண்டின் இடையில்தான். பெண்குறியைக் குறிக்கும் இச்சின்னத்தை திரு ராமானுஜர் உருவாக்கினார் என்று இவர்கள் கதைவிட்டாலும், இச்சின்னத்திற்கு அடிப்படை பாலைவன மதமான முகம்மதியத்திலுள்ள குறியீடுகளாகும்!

முகம்மதியத்திற்கு அந்த பகுதியில் ஏற்கனவேயிருந்த பல சமயங்களும் & மதங்களும் அடிப்படையாக இருந்தாலும் ஆண் & பெண் குறிகளை வைத்தே அனைத்தையும் விளக்குவதென்பது இதன் தனிச்சிறப்பாகும். இதனை குறி மதம் என்றழைத்தாலும் தகும். அவ்வளவு தூரம் இவர்களது குறியீடுகளில் குறிகள் இடம் பிடித்திருக்கும். இதன் தாக்கம் உலகம் முழுவதுமுள்ளது.

நுழைவாயிலாக இம்மதத்தில் பயன்படுத்தப்படும் பெண்குறியை தலைகீழாக்கி, தனித்துவத்திற்காக, நடுவில் ஒரு கோட்டைப் போட்டு (பெண்குறியின் திறப்பு) தங்களது சின்னமாக அறிவித்துவிட்டார்கள் வைணவர்கள்.

👊🏽 திரு ராமபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்கள் வைணவர்களே அல்லர். அவர்களது காலத்தில் வைணவமே இல்லை. "அவங்க எல்லாம் எங்க ஆளுங்களாக்கும்" என்ற கணக்கில் அவர்களுக்கு பெண்குறியை போட்டுவிட்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

👊🏽 வைணவர்கள் மொட்டைகளாக (பெளத்தர்களாக) இருந்த போது ஆரியத்தைத் தூக்கிப்பிடித்தனர். பெளத்தம் இங்கு சரியாக போனியாகாமல் போனதற்கு முகமையான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இதிலிருந்து பாடம் கற்ற இப்பேர்வழிகள் வைணவம் என்ற பெயரில் மீண்டும் கடையை விரித்த போது தமிழை முன்னிறுத்திக் கொண்டார்கள்.

👊🏽 எத்தனையோ "கைங்கர்யங்கள்" செய்த பின்னரும் "நாமம் = ஏமாற்றுவேலை" என்ற சமன்பாட்டை இவர்களால் மாற்றமுடியவில்லை. ஆகவே, தமது தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக மக்களை முட்டாளாக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவு: பெரிய நாமம், திவ்ய மங்கள ரூபம், விசுவரூபம், பெரிய லட்டு / வடை / தோசை / இட்லி, பக்தி ரசம் / சாம்பார் / காரக்குழம்பு சொட்டும் பாடல்கள்... அதாவது, புலன்களை கவர்ந்து மனதை மயக்கி தொழிலை வளர்த்துக் கொண்டனர்.

👊🏽 வைணவம் உரிமை கொண்டாடும் ஆழ்வார்கள் அனைவரும் வைணவரல்லர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆவார். இவரது பல பாடல்களில் அத்வைதம் மிளிர்கிறது. பகவான் திரு ரமண மாமுனிவரும் 🌺🙏🏽🙇🏽‍♂️ இவரது பாடல்களை மேற்கோளாக பயன்படுத்தியிருக்கிறார். இதனால்தான் இவர்களிடையே "நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்" என்ற சொலவடை இருக்கிறது.

👊🏽 தில்லை கோவிந்தராசர் வரலாற்றிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய முகமையான செய்திகள்: 

- ஆழ்வார்களால் பாடப்பெற்ற இறையுருவங்கள் அனைத்தும் உயிர்ப்புள்ள சமாதிகளை குறிக்கவில்லை.

- ஓர் இனத்தை அந்த இனமேதான் ஆளவேண்டும். களப்பிரர்கள், பல்லவர்கள், முகம்மதியர்கள், தெலுங்கர்கள், கிறித்தவர்கள் (வெள்ளையர்கள்), தற்போது வடக்கத்தியர்கள் போன்ற அயலாரால் நாம் பட்ட துன்பங்கள், இழந்த செல்வங்கள் & அடையாளங்களை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.

👊🏽 வைணவத்திலுள்ள மதவெறி பிடித்த நயவஞ்சக பேர்வழிகளைத்தான் எதிர்க்கிறேனே தவிர இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள பெருமாள்களை அல்ல. நான் வணங்கும் மெய்யறிவாளர்களில் ஒருவர் கொங்கண சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️ (திருமலைப் பெருமாள் எனும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருப்பவர்). இவரின் காலம் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னராகும். அன்று வைணவமுமில்லை. நாமமுமில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, October 3, 2021

இராமேச்சுர திருத்தலத்தில் அதிகாலையில் நடக்கும் பளிங்கு சிவலிங்க பூசையின் உட்பொருள்


கண்ணாடியின் வழியாக ஒளி ஊடுருவும். விரிவடையாது. ஆனால், பளிங்கின் வழியே ஊடுருவும் ஒளிக் கற்றையானது விரிவடையும். அந்த பளிங்குப் பொருள் முழுவதும் பரவிவிடும். சற்று தூரத்திலிருந்து பார்த்தால், நிறமற்ற பளிங்குப் பொருள் ஊடுருவும் ஒளியின் நிறத்தினதாய் தெரியும். ஒரு வெள்ளைப் பொருளை அருகில் வைத்தால் வெள்ளையாய் தெரியும். நீலப் பொருளை வைத்தால் நீலமாய் தெரியும். எந்த பொருளும் இல்லாவிட்டால் தெளிவான பளிங்காகத் தெரியும். வைக்கப்படும் பொருளால் பளிங்கு பாதிப்படையாது. பொருளே இல்லாவிட்டாலும் பளிங்கில் ஏதும் குறைவிருக்காது.

இராமேச்சுர திருத்தலத்தில் நடக்கும் பளிங்கு சிவலிங்க பூசையின் போது, சிவலிங்கத்தை நீர், பால் முதலியவற்றால் தூய்மைபடுத்திவிட்டு, வில்வ இலைகள் மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு துதிப்பார்கள். சிவலிங்கத்தின் அருகில் வில்வ இலை விழும்போது லிங்கம் பச்சையாக தெரியும். சாமந்தி பூ விழும்போது மஞ்சளாக தெரியும்.

பளிங்கு சிவலிங்கம் உள்ளபொருளுக்கு சமம். அதனருகில் விழும் பூக்களும் இலைகளும் தோன்றும் உயிர்களுக்கு, உயிர்களுக்கு ஏற்படும் பிறவிகளுக்கு சமம். பகவான் திரு ரமணர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது சிவலிங்கம் ரமணராகிறது. திரு மெய்கண்டார் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது அதே சிவலிங்கம் மெய்கண்டாராகிறது. திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது அது ஞானசம்பந்தராகிறது.

நம்மிடம் இயற்கையாக அமைந்துள்ள நான் எனும் தன்மையுணர்வு பளிங்கு சிவலிங்கத்திற்கு சமம். தன்மையுணர்வுடன் இணைந்திருக்கும் "இன்னார்" (மனிதன், ஆண்/பெண், படிப்பு, பதவி...) பூவுக்கு சமம். எத்தனை பூக்கள் வந்து விழுந்தாலும் சிவலிங்கம் அப்படியேதானிருக்கும். எத்தனை பிறவிகள் நமக்கு ஏற்பட்டாலும் நமது தன்மையுணர்வு சிறிதும் மாறாது. (பகவான் இறுதியாக பேசிய சொற்றொடர்களில் ஒன்று: ஜென்மா (பிறவி) வரும். போகும். அதனாலென்ன?)

இவ்வாறே எத்தனை வகையான பூக்கள் வந்து விழுந்தாலும் சிவலிங்கம் மாற்றமடைவதில்லை. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என கோடான கோடி உயிர்கள் பிறந்தாலும் எல்லோருக்குள்ளும் இருக்கும் தன்மையுணர்வு ஒன்றுதான்!! "சிவபெருமானேயானாலும் அவரும் தன்னை நான் என்றுதான் உணர்கிறார்" என்று அருளியிருக்கிறார் பகவான்.

நம் மீது விழுந்திருக்கும் பூவை (பிறவியை) கவனியாது, நான் எனும் நமது தன்மையுணர்வில் (சிவலிங்கத்தில்) நிலைத்து நிற்றலே பிறவியறுத்தலாகும். இதை உணர்தலே பளிங்கு சிவலிங்க பூசையை காண்பதின் பயனாகும். 🙏🏽

ஏதேது வந்தாலும் ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்று இருந்தாலும் - ஏதேதும் 
தானாகா வண்ணம் தனித்திருக்கும் 
ஞானாகாரம் தானே நாம்

-- திரு நடனானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

சில சமூகங்களில் ஆயிரம் பிறை கண்டோர் (80 ஆண்டுகள் மற்றும் சில மாதங்களை கடந்தோர்) பளிங்கு மாலையை அணிந்து கொள்வர். அவர்கள், முனைப்பற்று, வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு, கரியாக (பார்ப்பானாக / அறிபவனாக / சாட்சியாக (ஆரியம்)) மட்டுமிருப்பவர்கள் என்பது பொருள்.

(நம் அன்னைத்தமிழ் மெய்யியலை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு "கரி" என்ற சொல் மேலும் ஒரு சான்றாகும். இதை விளக்குவதற்கு தனி இடுகையே தேவைப்படும்!!

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

-- திருக்குறள் #25)

oOOo

ஸ்படிகா என்ற ஆரியச் சொல்லை தமிழில் படிகம் என்று எழுதுகிறார்கள். இது தேவையற்றது. தமிழில் பளிங்கு என்ற சொல் ஏற்கனவேயுள்ளது.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

-- திருக்குறள் #706

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, September 17, 2021

திருத்தலங்களில் நாம் என்ன செய்யவேண்டும்?

சனாதன தர்மம் எனில் பூஜை, விரதம், ஹோமம், தர்ப்பணம், திதி, யாத்திரை, அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு நபருக்கு, திருவாலங்காடு திருத்தலத்திலிருக்கும் திரு இரத்தின சபையை மட்டும் வைத்து நம் சமயத்தைப் பற்றி சிறிது விளக்க முற்பட்டேன். அதன் தொகுப்பே இந்த இடுகையாகும். மேற்சொன்ன "நம்பிக்கைகளுடன்" ஆரியம் பேசினாலே மேன்மையானவராக ஆகிவிடுவோம் என்றொரு "நம்பிக்கையும்" அவரிடம் இருந்தது! 🤭

(தமிழ் அர்ச்சனை அரசாணையை எதிர்த்து பலர் வழக்குத் தொடுத்திருக்கிறார்களாம். அவர்களில் ஒருவர், "சிவபெருமானுக்கு தமிழ் தெரியாது. ஆகையால், தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது" என்று வாதிட்டுள்ளாராம்!! 😂😂🤣)

oOOo


பல ஆண்டுகளுக்கு முன்னர் திருவாலங்காடு திருத்தலம் சென்றிருந்தேன். அங்குள்ள இரத்தின சபையின் வடிவமைப்பு பின்வருமாறு இருக்கும்:

+----------------------------------------+
|                                                |
|                                                |
|                                                |
|          +------------------+            |
|          |    @ @ @     |            |
|          |                      |            |
+--------+                      +----------+

@ - திரு பேயார் எனும் காரைக்கால் அம்மையார், திரு இரத்தின சபாபதி (ஊர்த்துவதாண்டவப் பெருமான்) மற்றும் திரு அருகிலிருந்து வியந்த அம்மை (சமிசீனாம்பிகை)

🌺🙏🏽🙇🏽‍♂️

சபையை கவனித்தவாறே வலம் வந்துவிட்டு, அங்கிருந்த ஆரியப்பூசாரியிடம் கேட்டேன், "சிலைகளுக்கு பின்னாலுள்ள இடத்தில் என்ன உள்ளது?". சற்றே துணுக்குற்ற அவர், "நீங்க சிலைங்கறேள். நாங்க சுவாமிம்போம்." என்று நிறுத்திக்கொண்டார். "சரி, இவருக்கு சிலைகள்தாம் பரம்பொருள் போலிருக்கிறது." என்று எண்ணியவாறு விலகிவிட்டேன்.

அடுத்தமுறை சென்றிருந்த போது ஓர் இளம்வயது ஆரியப்பூசாரி இருந்தார். மக்களைக் கவர வேண்டுமென்ற ஆர்வமும் வேகமும் அவரிடம் இருந்தன. அவரிடம், "உள்ள 3 சுவாமிங்க இருக்காங்க. ஆனா, சபை பெரிசா இருக்கே. பின்னாடி என்ன இருக்கு?" என்று கேட்டபோது, "உள்ளே, சிவபெருமான் நடனமாடிண்டிருக்கா. காரைக்கால் அம்மையார் பாத்து ரசிச்சிண்டிருக்கா." என்று தொன்மவழியில் பெருமையுடன் பதில் கூறினார். 😊 அவர் சொன்ன பதிலின் ஆழத்தை அவர் அறிந்திருக்கவில்லை.

பின்னர், வேறு வழிகளின் மூலம் நான் தெரிந்துகொண்டதும் & உணர்ந்துகொண்டதும்:

☀️ இரத்தின சபை என்பது திரு பேயார் மற்றும் இன்னொரு பெருமானின் ஜீவசமாதித் தொகுப்பாகும். பெயர் தெரியாத அப்பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ பேயாருக்கும் மூத்தவர். பேயார் சமாதியடைந்த பின், அப்பகுதியை ஆண்ட மன்னர், இரு சமாதிகளையும் சுற்றி சபையை எழுப்பியுள்ளார். ஆனால், ஓர் அடையாளத்தை மட்டும் வைத்துள்ளார்.

☀️ பேயாரின் திருவுருவம் அவரை மட்டும் குறிக்கும். ஆனால், அம்மையப்பரின் திருவுருவங்கள் இரண்டாக இருந்தாலும் அவற்றை இணைத்து ஒன்றாகக் கருதவேண்டும். இத்திருவுருவங்கள் உள்ளே சமாதியிலிருக்கும் இருவரது நிலையையும் குறிக்கும். அது என்ன நிலை?

☀️ அம்மை என்பது நம் உடல் முதல் நம் கண் முன்னே விரியும் உலகனைத்தையும் குறிக்கும். அப்பன் என்பது நான் எனும் நமது தன்மையுணர்வைக் குறிக்கும். 

☀️ எவ்வளவு முயன்றாலும் உலகை (காளியை - அம்மையை) வெல்லமுடியாது. வெல்வதற்கு ஒரே வழி நம் கவன ஆற்றலை நம் மீது (நம் தன்மையுணர்வின் மீது - அப்பன்) திருப்புவது ஒன்றே. பெருமான் தனது காலை உயர்த்தி தனது காதணியை தானே கழட்டுவது என்ற சித்தரிப்பின் பொருள் இதுவே.

☀️ இந்த உத்தியை தன்னாட்டம் (ஆத்ம விசாரம்) என்றழைக்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🔹யாருக்காக இவ்வளவு செய்திகளையும் பெயர்கள், உருவங்கள், கோயிலின் அமைப்புகள், பாடல்கள், தல வரலாறுகள் போன்றவற்றின் மூலமாக பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்? நமக்காக. இனி வரும் தலைமுறையினருக்காக.

🔹எதற்காக பதிவு செய்துள்ளனர்? பேருண்மைகளை நாம் உணர்வதற்காக. பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்காக.

🔹ஆனால், என்ன நடந்திருக்கிறது? அபிஷேகம், அலங்காரம், லட்சார்ச்சனை, உற்சவம், சிறப்பு யாகம், அஷ்டபந்தன கும்பாபிஷேகம்...

🔹பேயார் என்ன செய்திருக்கிறார் திருத்தலத்தில்? வடக்கிருந்திருக்கிறார். 

🔹எனில், நாம் என்ன செய்யவேண்டும்? நாமும் வடக்கிருக்கவேண்டும். 

🔹ஆனால், என்ன செய்கிறோம்? அர்ச்சனை, சிறப்பு தரிசனம், பிரசாதம், நேர்த்திக்கடன்...

🔹வடக்கிருக்க வேண்டிய திருத்தலங்கள் சுற்றுலாத் தலங்களாக, அருங்காட்சியகங்களாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

🔹என்றுமே நமது திருத்தலங்கள் இப்படித்தான் இருந்தனவா? இல்லை. என்றுமே அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வு ஒன்றுதான்: வடக்கிருத்தல். இன்று இது தவிர மற்றனைத்தும் நடக்கின்றன. கடந்த 1800 ஆண்டுகளாக வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும் நிகழ்ந்த மத & அரசியல் படையெடுப்புகளால் நாம் இழந்தவைகளில் மெய்யறிவியலும் ஒன்று. 

முகம்மதியர்களின் கத்திக்காகவும், கிறித்தவர்களின் மூளைச்சலவையாலும்தான் நம் முன்னோர்கள் மதம் மாறினர் என்று நம்மில் பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருக்கிறோம். இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. திருவிசயநல்லூர் திரு ஸ்ரீதர அய்யாவாள் 🌺🙏🏽🙇🏽‍♂️ வரலாற்றில் அக்காரணம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சனாதன தர்மம் என்ற சொற்களுக்கு பல பக்கங்களைத் தாண்டும் மேன்மையான விளக்கம் இருக்கலாம். ஆனால், நடைமுறையில்?

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 11, 2021

அக்ஷரமணமாலையின் காப்புச் செய்யுளுக்கு மாற்று விளக்கம்


அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலைசாற்றக் 
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே!!

-- அக்ஷரமணமாலை பாடலுக்கு பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய காப்புச் செய்யுள்

பொருள்: அருணாசல வானவனுக்கு ஏற்ற எழுத்துக்களால் ஆன பாமாலையை நான் சாற்ற/இயற்ற கருணைக் கடலான கணபதி பெருமானே உனது திருக்கரம் கொடுத்து என்னைக் காக்க வேண்டுகிறேன்.

பகவான் மேற்சொன்ன பொருளில் அன்புவழிக்கேற்ப பாடியிருந்தாலும் அவரது மெய்யறிவு வழிக்கேற்ப சற்று மாற்றிப் பார்த்தேன்.

🔹அருணாசல வானவன் - உள்ளபொருள்

🔹எழுத்து - இதற்கு பல பொருள்கள் உள்ளன. சித்திரம் என்பதும் ஒரு பொருளாகும். நமது வாழ்வும் ஒரு சித்திரமாகும். எனில், சாற்ற/இயற்ற என்பதை "வாழ" என்று கொள்ளலாம்.

இவற்றை வைத்து மேற்கண்ட பொருளின் முற்பகுதியை "உள்ளபொருளுக்கு ஏற்ற வாழ்வை நான் வாழ" என்று மாற்றலாம். அதென்ன உள்ளபொருளுக்கு ஏற்ற வாழ்வு? உள்ளபொருளை அடைவதற்கேற்ற வாழ்வு. உள்ளபொருளாய் சமைவதற்கேற்ற வாழ்வு.

உள்ளபொருளாய் சமைவதெப்படி?

இதற்கு பகவானின் உள்ளது நாற்பதிலும், உபதேச உந்தியாரிலும் விடைகள் உள்ளன:

🌷 உள்ளத்தே உள்ளபடி உள்ளதே உள்ளல்
🌷 தானாய் இருப்பதே தன்னை அறிதல்

அதாவது, நமது தன்மையுணர்வை விடாது பற்றவேண்டும்.

அடுத்து, கணபதி கடவுள். இவர் நமது அறிவைக் குறிப்பவர். இவரது திருக்கரம் என்பது நமதறிவை ஒன்றின் மேல் செலுத்துதல் அல்லது அறிவால் ஒன்றைப் பற்றுதல் எனக் கொள்ளலாம்.

இப்போது அனைத்தையும் இணைத்தால்: உள்ளபொருளாய் சமைவதற்கேற்ற வாழ்வை நான் வாழ எனது அறிவே தன்மையுணர்வை விடாது இறுகப் பற்றுவாயாக!!

(பட்டினத்தடிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️ தனது நெஞ்சை நோக்கி தானே பாடுவது போன்றமைத்துள்ளேன்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 4, 2021

"நான் இயேசுவின் தூதுவர்... 3வது நாள் நானும் உயிர்த்தெழுவேன்... சவக்குழியில்சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி!!"

(https://m.dinamalar.com/detail-amp.php?id=2833095)

ஒருவிதத்தில் கிறித்தவம் பைசா நகர சாய்கோபுரம் போன்றது. கட்டிடத்தைக் கட்டத் தெரியாமல் கட்டி, அது சாயத் தொடங்கியவுடன், உலக அதிசயம் என்று கதை விட்டு இன்று வரை காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பரங்கியர்கள். உண்மையில் அது "கட்டிடக்கலையின் அவமானம்" ஆகும்! 👊🏽

இது போன்றே, இஸ்ரவேலர் இயேசுவின் அறிவுரைகளை வைத்து ஒரு சமயத்தை வளர்த்தெடுக்கத் தெரியாமல், கூட்டம் சேர்த்து காசு பார்க்கும் தொழிலாக, அரசுகளை ஆட்டிப்படைக்கும் கருவியாக வளர்த்துவிட்டார்கள். மக்களை நெறிப்படுத்தும் சமயமாக இல்லாமல், மூளையை மழுங்க வைக்கும் மதமாக ஆக்கிவிட்டார்கள்! இதனால் ஏற்பட்ட பல மோசமான விளைவுகளில் ஒன்று: இணைக்கப்பட்டிருக்கும் படத்திலுள்ள நிகழ்வு - தேவையற்ற உயிர்பலி!!

கதைகளும் குறியீடுகளும் உணர்த்தும் உண்மைகளை உணராமல், அவற்றை உண்மை என்று நம்பி மக்கள் மோசம் போகிறார்கள்.

☀️ குறுக்கை - உயிரற்றதை, குறிப்பாக உடலைக், குறிக்கும். (வரலாற்றின் படி, இது ஒன்றும் மேன்மையான குறியீடு அல்ல. குற்றவாளிகளை தண்டிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கருவியாகும்.)

☀️ குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இயேசு - குறுக்கை என்பது உடல். இயேசு என்பது மனம். பல காலம் பலவித உத்திகளைக் கையாண்டு (வடக்கிருந்து) பலவீனமாக்கப்பட்டு, அடக்கப்பட்ட மனம் என்பதைக் குறிக்கவே இயேசு குற்றுயிராக, தொங்கிக்கொண்டிருப்பது போன்று சித்தரித்துள்ளனர். அதாவது, இவ்வுருவைக் கண்டதும் "எப்பாடுபட்டேனும் மனதை அட(ழி)க்கவேண்டும்" என்ற எண்ணம் ஒரு கிறித்தவனுக்குத் தோன்றவேண்டும்.

(இவ்வுருவை உருவாக்கியவர், பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்றொருவரை சந்தித்திருந்தால் சித்தரிப்பு இப்படி இருந்திருக்காது. "மனதின் உருவை மறவாது உசாவ (ஆராய) மனமென ஒன்றில்லை" என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற் போல் ஓர் உருவை உருவாக்கியிருப்பார்.)

☀️ உயிர்த்தெழுதல் - பல போராட்டங்களுக்குப் பின்னர் கிடைக்கும் சமாதி துய்ப்பின்போது கிடைக்கும் மெய்யறிவு. இதுவரை நம்மைப் பற்றி தவறாக புரிந்துகொண்டிருப்போம். இதன் பிறகே நாம் யாரென்று சரியாக உணர்ந்துகொள்வோம். மெய்யறிவு பெறுவதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி நாம் நாம்தான். வேறுபாடு அறிவு மட்டும்தான். இதனால்தான் குறுக்கையில் அறையப்பட்டிருப்பதும் இயேசுவாகவும், உயிர்த்தெழுவதும் இயேசுவாகவும் சித்தரித்துள்ளனர். வேறுபாடு வெளிப்புறத் தோற்றம் மட்டும்தான்.

உயிர்த்தெழுதல் = மெய்யறிவு பெறுதல்.

(நல்ல வெள்ளிக்கும் உயிர்த்தெழுதல் ஞாயிறுக்கும் ஏன் 3 நாட்கள் இடைவெளி, இச்சடங்குகள் எங்கிருந்து வந்துள்ளன என்று ஆராய்ந்தால் "உயிர்த்தெழுதல்" என்பதன் பொருள் முற்றிலும் மாறுபடும். ஏன் கிறித்தவம் மேற்கண்ட பொருளில் பயன்படுத்துகிறது என்பதும் புரியும். இதை வேறொர் இடுகையில் பார்ப்போம்.)

oOOo

இஸ்ரவேலரின் இனம் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களிடம் அடிமையாக இருந்தது. கல்வி மறுக்கப்பட்டு பண்பாடற்று இருந்தது. இந்த இனத்தை உய்விக்கவே இயேசு பாரதம் வந்து மெய்யறிவியல் கற்றுத் திரும்பினார். பல பாடுகளும் பட்டார். ஆனால், தோல்வியடைந்தார். மீண்டும் பாரதத்திற்கே திரும்பி, காஷ்மீரத்தில் சமாதியடைந்தார். ஆனால், அவரது அறிவுரைகளோ தகுதியற்றவர்களிடம் சிக்கி உருத்தெறியாமல் போய்விட்டன.

தூக்கி எறியப்படவேண்டிய குறுக்கையை மதத்தின் சின்னமாக்கிவிட்டனர் (குறுக்கை = உயிரற்ற உடல் = பிணம் = பிணக்குறியீடு). அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவைக் கண்டதும் "மனதை அழி" என்ற எண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா" என்று ஒப்பாரி வைக்கும்படி செய்துவிட்டனர்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, August 26, 2021

நிருவாண பூசை என்றால் என்ன?

"நிருவாண பூசை நடத்தி இளம்பெண்ணை பலமுறை சீரழித்த சாமியார்! உடந்தையாக இருந்த கணவன்!!"

இந்நிகழ்வின் பின்னணியில் கணவனின் அறியாமை, இயலாமை & பொருளாசை மற்றும் சீரழித்தவனின் பெண்ணாசை & பொருளாசை ஆகிய காரணிகள் இருந்தாலும் இதற்கும் ஒரு மெய்யறிவியல் (ஆன்மிகம்) அடிப்படை உண்டு!

நிருவாணம் எனில் உடைகளைக் களைந்துவிட்டு பிறந்தமேனியாதல் அல்ல. "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னாரைக் களைதலாகும். நான் ஆண்/பெண், இன்ன படித்தவன், இன்ன நிறுவனத்தில் இன்ன பதவி வகிக்கிறேன், எனது மதிப்பு இவ்வளவு ... இவற்றையெல்லாம் களைய வேண்டும்.

🔹இவற்றைக் களைய முற்படும் பணி தான் நிருவாண பூசை.

🔹அனைத்தையும் களைந்த பின்னர், மீதமிருக்கும் நான் எனும் தன்மையுணர்வாய் மட்டும் இருப்பதுதான் நிருவாண நிலை.

🔹இந்நிலையை அடைவதற்கு முன் (மேற்சொன்ன பூசையின் போது) நமக்கு கிடைக்கும் பலவிதமான துய்ப்புகள்தாம் செல்வம் (லட்சுமி) எனப்படும். இறுதியாக கிடைக்கும் மெய்யறிவு பெருஞ்செல்வமாகும் (மகாலட்சுமி).

பற்றுகளை விட விட மெய்யறிவு பெருகும். பெண்தெய்வ வழிபாட்டைப் பொறுத்தவரை சீவர்கள் அனைவருமே பெண்கள்தாம். எனவே, பெண்கள் (சீவர்கள்) நிருவாண பூசை செய்தால் (பற்றுகளை விட்டால்) செல்வம் (மெய்யறிவு) பெருகும்!!

முழுவதும் மெய்யறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் உத்தியை எவ்வளவு தவறாக புரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அல்லது, எவ்வளவு தப்பாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தப்பாக பயன்படுத்துகின்றனர். என்ன செய்வது, ஈனவெங்காயங்கள் எல்லாத்துறைகளிலும் பிறக்கத்தானே செய்கின்றன! (ஈனவெங்காயம் - கோணல் புத்தியுடையவன்; சாக்கடை 👊🏽)

நாம் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். இங்கு ஈனவெங்காயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிறக்கின்றன. மறைந்து தொழில் செய்கின்றன. ஆனால், ஒரு மதமே இப்படியுள்ளது! அங்கு இந்த அநீதியை செய்பவர்கள் துணிவுடன், வெளிப்படையாக, நீதிமன்றங்களின் ஆதரவுடன் செய்கிறார்கள்!!

oOOo

ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டு, அவளது அழகுதான் தன்னை கற்பழிக்கத் தூண்டியது என அவள் மீதே பழியை போடுவான். புண்ணாக்கு நீதிபதியும் இந்த வாதத்தை ஏற்று, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையளிப்பான்!

இதற்கும் அடிப்படை மெய்யறிவியல்தான்!!

உலகில் நடக்கும் யாவற்றிற்கும் காரணம் மனம். மனதை பெண்ணாகக் கருதுவது மரபு (நம் சமயத்தில், அன்னை மாயை/காளி) (வைணவம் மாயக்கண்ணன் என்றழைத்தாலும் அடிப்படை பெண்தன்மைதான்.) அழகாகவிருக்கும் ஒரு பெண்ணைத் துய்க்கவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது மனம் (பெண்) என்பதால் தனது செயலுக்கு பெண்தான் காரணம் என்று வாதிடுவான். உண்மையில் இவனுக்குள்ளிருக்கும் பெண்தான் (இவனது மனம்) தண்டிக்கப்படவேண்டும். மனம் சொன்னால் அப்படியே கேட்டுவிடுவதா? சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டிய புத்தி எங்கே போயிற்று?

கேட்டால், பெண் என்ற படைப்பே புணருவதற்குத்தான் என்பான். பெண்ணைக் கண்டதும் புணரும் எண்ணம் தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் அவளுக்கு கருப்பு ஆடை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பான் (அம்மதத்தில், கருப்பு ஆடை போர்த்திக்கொண்டிருக்கும் பெண் பெண்குறிக்கு சமம்).

கருப்பு ஆடை போர்த்தியிருக்கும் பெண்ணைக் கண்டால் புணரும் எண்ணம் தோன்றவேண்டுமென்று ஈனவெங்காயம் கூட சொல்லியிருக்காது. எனில், உண்மையான பொருள்தான் என்ன?

கருப்பு என்பது அன்னை மாயையைக் குறிக்கும் (கருப்பாயி - கருப்பு + ஆயி - காளி). நம் மனதில் தோன்றும் எண்ணம் முதல் நம் கண் முன்னே விரியும் உலகக்காட்சிகள் யாவற்றுக்கும் இவர் தான் காரணம். நம் மனதில் ஓர் எண்ணம் தோன்றிவிட்டால் அதன் பின்னே சென்றுவிடக்கூடாது. நம் கண் முன்னே தோன்றும் உலகக் காட்சிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது. இவை நடந்தால், உடனடியாக, நமது கவனத்தை நம் மீதே திருப்பிக்கொள்ளவேண்டும். இதற்குத்தான் ஓர்தல் / [தன்னைத்தான்] புணருதல் என்று பெயர்.

கருப்பைக் கண்டால் (எண்ணம் தோன்றினால், உலகத்திற்குள் கவனம் சென்றால்) ஓர்ந்துவிடவேண்டும் (கவனத்தை நம் மீது திருப்பவேண்டும்)!!

எளிமையான இவ்வறிவுரை தாெடக்கத்தில் கண்ட நிருவாண பூசையை விட மிகவும் திரிந்துபோய் / திரிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனத்தில் முடிந்துள்ளது. 😔

oOOo

இருப்பது ஒரு பொருள்தான். அதுவே யாவுமாகியுள்ளது. நிலைத்த பொருளும் அதுவே. நிலையில்லாத பொருளும் அதுவே. எப்போது ஒன்றை ஆண் என்றும், மற்றொன்றைப் பெண் என்றும் அழைக்கத் தொடங்கினார்களோ அப்போதே ஈனவெங்காயங்களுக்கும், காட்டுமிராண்டிகளுக்கும் வித்திட்டுவிட்டனர்! 😔

oOOo

நம் மண்ணும், நம் மண்ணின் மைந்தர்களும் எவ்வளவு தூரம் பண்பட்டவர்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

உலகக்காட்சி பற்றி பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஓர் அன்பர் கேட்டார்: உலகக் காட்சி என்பது எதற்காக?

பகவானின் பதில்: [அதைக்] காண்பான் என்றொருவன் இருப்பதை உணருவதற்காக!!

👏🏽👏🏽👏🏽👌🏽🙏🏽😍

oOOo

தன்னை உபாதிவிட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

-- உபதேச உந்தியார் #25

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮