Monday, February 22, 2021

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்!! 😛

"காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்"
என்கிறார் நாலடியார்!!

"காக்கா கறி சமைத்து,
கருவாடு உண்பவர்களா சைவர்கள்?" என்று பதற வேண்டாம்! ☺️

சைவர்களின் மேன்மையைக் கூறுவதற்காக தமிழில் விளையாடியிருக்கிறார் ஆசிரியர். தமிழும் சைவமும் தமிழரின் இரு கண்கள்.

இனி, பாடலின் உட்பொருளைப் பார்ப்போம்.

🔸 காக்கை = கால் கை. உள்ளங்கையில் கால் அளவு.

🔸 கறி சமைத்து = காய்கறி சமைத்து. உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து.

🔸 கருவாடு மென்று = கரு வாடும் என்று. உடலின் கருவாகிய உயிர் வாடும் என்று.

🔸 உண்பர் சைவர் = சைவர்கள் உண்பார்கள்

பொருள்: உள்ள பொருளாகிய சிவமாய் சமையும் வாழ்நாள் நோக்கம் கொண்ட சைவர்கள், உடலில் உயிர் தங்க வேண்டுமென்பதற்காக, உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து உண்பர்.

இப்படி உண்பதால், உடல் நோய்கள் பெருகாது; சுறுசுறுப்பாக இயங்க முடியும்; பற்றுகள் குறைய வாய்ப்புண்டு; எல்லாவற்றிற்கும் மேலாக, வடக்கிருத்தல் எளிதாகும்!!

வடக்கிருத்தல் = தவமியற்றுதல்.

"நான் இன்னார்" என்ற அகந்தை அற்ற பின் "இருந்து விளங்கும்" உள்ளபொருளை அறிந்து கொள்ள உதவும் வழியே / உத்தியே தவமாகும்.

-- பகவான் திரு ரமணர் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

அன்னைத்தமிழ் வாழ்க!

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்!!

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

(வாட்ஸ்அப்பில் கிடைத்த ஓர் இடுகையை சிறிது செப்பனிட்டு பதிவேற்றியிருக்கிறேன் 🙏🏽)