Friday, October 13, 2023

ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரியம் கலக்காதபோது, தமிழில் மட்டும் ஏன் ஆரியம் கலந்திருக்கவேண்டும்?


👆🏽 பகவான் திரு இரமண மாமுனிவரிடமிருந்து வெளிப்பட்ட ஒரு பொன் மொழி.


அப்பொன்மொழியின் ஆங்கில மொழி பெயர்ப்பு 👆🏽.

ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரியம் கலக்காதபோது, தமிழில் மட்டும் ஏன் ஆரியம் கலந்திருக்கவேண்டும்?

கேட்டால், பகவான் அப்படித்தான் பேசினார் என்பார்கள். பிறப்பால் மட்டுமே பகவான் ஆரியராவார். மனதளவில் அவர் தமிழராவார். திருநெறிய தமிழை அவர் விரும்பினார் என்பதற்கு அவர் வாழ்விலிருந்தே பல சான்றுகளை கொடுக்கமுடியும். அவர் வளர்ந்த & வாழ்ந்த சூழ்நிலையால் ஆரியம் கலந்து பேசினார். இரண்டன்மையை (ஆரியத்தில், அத்வைதம்) பற்றிய தூயத்தமிழ் நூல் இல்லையென்ற குறையை போக்கியவர். ஆரியத்தை கலந்து அன்னைத்தமிழை குறையாக்கும் பணியை தெரிந்து செய்திருக்கமாட்டார்.

இன்று பகவான் உடல் தாங்கியிருந்து, அவரிடம் நாம், "பகவானே, தாங்கள் இப்படி பேசினால் எங்களுக்கு சரியாக புரிவதில்லை. தயவு செய்து, ஆரியம் கலக்காமல் விளக்க வேண்டுகிறோம்." என்று வேண்டினால், மகிழ்ச்சியுடன் தூயத்தமிழில் விளக்குவார்; அல்லது, முயற்சியாவது செய்வாரென்று உறுதியாகக் கூறலாம்.

oOo

பகவானின் பொன்மொழி என்றுமுள தென்தமிழில் - சற்று விரிவாக:

மனமானது நமது தன்மையுணர்வில் ஒருமுகப்பட்டிருக்கவேண்டும். எண்ணங்கள் எழுந்து, மனதின் ஒருமுகம் சிதறுமானால், "அந்த எண்ணங்கள் யாருக்காக தோன்றின?" என்று ஆராயவேண்டும். இப்படி ஆராய்வதால், எழுந்த எண்ணங்கள் அடங்கிவிடும்; மனமும் மீண்டும் தனது வேரான தன்மையுணர்விற்கு திரும்பிவிடும்.

சற்று சுருக்கி:

மனதின் ஒருமுகம் சிதறுமானால், ஏன் சிதறியதென்று ஆராய வேண்டும். இப்படி ஆராய்வதால், அது தனது வேரில் ஒடுங்கிவிடும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment