Monday, December 18, 2023

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது!!


பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது -- அனுமன் என்ற வடிவத்தின் மொத்த வரலாறும் இவ்வளவுதான்!

சைவத்தோடு இணைந்த பிள்ளையார் வடிவம் மக்களிடையே ஹிட் அடித்ததால், அதற்கு போட்டியாக நாம மதத்தினர் கொண்டுவந்ததுதான் அனுமன்.

🔸 குரங்காக முடிந்ததில் என்ன தவறிருக்கிறது?

பதில்: கொரோனாவை உருவாக்கி, பில்கேட்ஸ் கோடான கோடிகள் சம்பாதித்ததில் என்ன தவறிருக்கிறது?

இவ்வையகத்தில் நடக்கும் அத்தனை அநீதிகளுக்கும், அட்டூழியங்களுக்கும் வலுவான மனமே (அனுமன்) மாறலாகும் (அசுர மொழியில், காரணமாகும்). எல்லா மதங்களும் மனதை அழிப்பதையே அறிவுறுத்துகின்றன. போற்றச் சொல்லவில்லை.

🔸 விசுவரூப ஆஞ்சநேயன் - நம் கண் முன்னே விரியும் வையகம்.

🔸 ஐந்துமுக ஆஞ்சநேயன் - நினைத்தல், சிந்தித்தல் போன்ற மனதின் ஐந்தொழில்கள்.

🔸 உளுந்துவடை / வெற்றிலை மாலை - சுண்ணாம்பு சத்து மிகுந்தவை. "உடல் வலுவானால் மனம் வலுவாகும்" என்ற கருத்தை சொல்லும் ஒப்பனை.

ஆனால், நடைமுறையில், இது தவறு என்பது அனைவரும் அறிந்ததே. வலுவான உடலும், கோழையான மனதும் கொண்ட பலரையும், வலுவான மனமும், நோஞ்சானான உடலும் கொண்ட பலரையும், அன்றாட வாழ்வில் காண்கிறோம்.

மேலும், நாம மதத்தினர் அறிவுருத்தும் ஏகாதசி நோன்பு போன்ற நோன்புகள் இதற்கு எதிரானவையாகும். நோன்பின் போது உண்ணாதிருக்கவேண்டும். உண்ணாவிட்டால் உடல் வலுவிழக்கும். உடல் வலுவிழந்தால் மனம் வலுவிழக்கும். மனம் வலுவிழந்தால் உள்ளபொருளை எளிதில் உணரமுடியும்.

💥 நோன்பு = மனதை அழிக்கும் முயற்சி
💥 அனுமன் வழிபாடு = மனதை வளர்க்கும் முயற்சி 😏

மனதிற்கு வலு சேர்ப்பதும், மனதை போற்றுவதும், மனதை வணங்குவதும் மிக மிக தவறானதாகும்!!

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் யாவர்க்கும் இது உந்தீபற

-- பகவான் திரு இரமண மாமுனிவர்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment