Friday, November 17, 2023

இரும்பை மாகாளம் & மடியிலே கனம் வழியிலே பயம்


🌺🙏🏽🙇🏽‍♂️

🌷 திரு இரும்பை மாகாளம் உடையவர்
🌷 தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்
🌷 இத்திருவுருவின் கீழே திருநீற்று நிலையிலிருப்பது திரு கடுவெளி சித்தராவார்.
🌷 இப்பெருமானின் வாழ்வில் நடந்த நிகழ்வொன்றை மேற்கோள் காட்டி பகவான் திரு இரமண மாமுனிவர் பேசியுள்ளார்.

oOo

கருவறைத் திருவுருவின் கீழேயிருப்பது யாரென்று கேட்டால்,

- பெரும்பாலான ஆரியப்பூசாரிகள் குழம்பிப்போவார்கள் ("இவன் என்ன கேட்கிறான்?")

- சிலர் மழுப்பிவிட்டு ("அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே!"), அத்திருக்கோயிலின் புனைவுக்கதையை சொல்லி, "அந்த சுவாமிதான் இவர்" என்று சமாளிப்பார்கள்

- வெகுசிலர் திடுக்கிடுவார்கள் / திருட்டுமுழி முழிப்பார்கள் ("இவன் எப்படி கண்டுபிடித்தான்?", "இச்செய்தி எப்படி வெளியே வந்தது?", "இப்போது என்ன செய்வது?"...)

- ஒரு திருக்கோயிலிலிருந்த 50+ வயதான பூசாரி, "ஓகோ, உனக்கு அவ்வளவு தெரியுமா? எனக்கு எவ்வளவு தெரியுமென்று பார்!" என்ற வகையில், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியே விடத்தொடங்கினார். 😈 ஜாப் செக்கியூரிட்டி கோவிந்தா-ஆவதைக் கண்டு, பதைபதைத்த அருகிலிருந்த இளம் பூசாரி, "மாமா!!" என்று அதட்டி, அவரை தன்னிலைக்கு திருப்பினார். 🤭

- ஆனால், இரும்பை திருக்கோயிலில் இருந்தவர் மட்டும், எவ்வித கலக்கமின்றி, தயக்கமின்றி, தெளிவாக, உள்ளேயிருப்பது திரு கடுவெளி சித்தரென்று சொன்னார். மடியில் கனமில்லாதவரென்று நினைக்கிறேன். 👏🏽👍🏽🙏🏽

oOo

மடியிலே கனம் வழியிலே பயம்

இப்பழமொழியின் புறப்பொருள் அனைவரும் அறிந்ததே. இதன் உட்பொருளை பார்ப்போம்.

🔸 மடி+இல் - மடித்து வைக்கக்கூடிய வீடு - கூடாரம் - நமது தலைக்கு சமம்
🔸 கனம் - செருக்கு - நான் இவ்வுடலென்ற தவறான எண்ணம். இவ்வெண்ணமே எல்லாவகையான பற்றுகளுக்கும் (கனங்களுக்கும்) ஆணிவேராகும்.
🔸 வழி - அன்றாட வாழ்க்கை

நம்மை நாம் உடலாக காணும்வரை, வாழ்க்கையை கண்டு அச்சமிருந்து கொண்டுதானிருக்கும்:

- இன்று தொழில் நன்றாக நடக்குமா?
- நமது வேலை நிலைக்குமா?
- கடன் கிடைக்குமா?
- கொடுத்த கடன் திரும்பவருமா?
- பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை அமையுமா?
...

அச்சம் நீங்கவேண்டுமெனில், கனம் நீங்கவேண்டும். கனம் நீங்கவேண்டுமெனில் நமதுண்மையை நாம் உணரவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment