இராமாயணப் பொழுதில் வாழ்ந்த திரு மறைக்காட்டு மணாளரின் (அசுரத்தில், விசுவாமித்திரர்) சமயத்தில், சிந்தையில் தோன்றியதை செய்யுளாக பதிவு செய்யும் வழக்கம் மட்டுமே இருந்தது. சிலையாக வடித்து, அதை நிறுவி, அன்றாடம் குளிப்பாட்டி, ஒப்பனை செய்து, படையல் போட்டு, படங்காட்டி & கல்லா கட்டும் தொழில் அன்றிலிருந்து 3,500+/- ஆண்டுகளுக்கு பிறகே தொடங்கியது.
ஒரு வேளை, காயத்திரி என்பது மணாளருக்கு தோன்றிய வடிவமென்று கொண்டால், அவ்வடிவம் உணர்த்தும் கருத்தில் அவருக்கு உடன்பாடு இருந்திருந்தால், அவரது கருவறையை (அசுரத்தில், சமாதி) ஒரு காயத்திரி வடிவமே அணி செய்து கொண்டிருக்கவேண்டும். ஆனால், தென்னாடுடையவனின் சின்னமல்லவா அணி செய்து கொண்டிருக்கிறது!!
🔸 மந்திரத்திலிருந்து தோன்றிய - மனதில் / சிந்தையில் / எண்ணத்தில் இருந்து தோன்றிய.
🔸 விசுவம் - மொத்த படைப்பு
🔸 மித்திரர் - நண்பர்
🔸 விசுவாமித்திரர் - படைப்பின் நண்பர் / படைப்பை விரும்புபவர். அதாவது, அன்னை / பெருமாள் வழிபாட்டினர். திரு மறைக்காட்டு மணாளரோ திருநெறியராவார்! அதாவது, படைப்பிற்கு எதிரானவராவார்.
பிற்காலத்தில் யாரோ செய்த வேலையை, மணாளரின் மேலேற்றி மதிப்பு கூட்டியுள்ளனர்.
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️






