Tuesday, September 8, 2026

இறைவன் நஞ்சுண்டாராம்! மயங்கிக் கிடந்தாராம்!! 😏


எவ்வளவு தவறான காட்சியமைப்பு (அசுரத்தில், சித்தரிப்பு)! 😒

திரைத்துணியின் மீது ஓடும் திரைப்படக் காட்சிகளால் அத்துணி பாதிப்படையுமா?

பாதிப்படையும் எனில், நஞ்சை உண்டுவிட்டு இறைவன் படைத்திருப்பதும் சரியாகும்!

🌷 துணி - இறைவன்
🌷 காட்சி - அன்னை

முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பிறகும், முழுமை முழுமையாகவே இருக்கிறது.

-- அசுரமறை

🌷 முழுமை - உள்ளபொருள் - இறைவன்!

ஏதேது வந்தாலும்
ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்றிருந்தாலும்
ஏதேதும் தானாக வண்ணம் 
தனித்திருக்கும் அறிவே நாம்!

-- திரு நடனானந்தர்

🌷 நாம் - நமது தன்மையுணர்வு - உள்ளபொருள் - இறைவன்!

உள்ளபொருள் நஞ்சும் உண்ணாது; மயங்கியும் கிடக்காது. செயல் என்பதே அதற்கு கிடையாது!

oOo

அடுத்து, "இறைவன் நஞ்சுண்டு மயங்கிக் கிடந்தார்" என்ற புனைவு இடம்பெறும் "பாற்கடல் கடைதல்" கதையின் உட்பொருளை பார்ப்போம்:

🌷 பாற்கடல் - நமதுடல்
🌷 கடைதல் - வடக்கிருத்தல்
🌷 கடைவதற்கு பயன்படுத்தப்படும் பாம்பு - நமது மூச்சுக்காற்று
🌷 தேவர் (தமிழர்) - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
🌷 அசுரர் (ஆரியர்) - நாம் வெளிவிடும் கரியமிலம்
🌷 முதலில் வெளிப்படும் நஞ்சு எனும் தவ்வை - பல பிறவிகளாக நம்முள் சேர்ந்து கிடக்கும் எண்ணப்பதிவுகள்
🌷 இறுதியாக வெளிப்படும் இளையவள் எனும் இலக்குமி - நம்மை பற்றிய மெய்யறிவு

நஞ்சை உண்ணுவது எனில் அதை பொருட்படுத்துவதாகும். அப்படி பொருட்படுத்தினால் வடக்கிருத்தல் கோவிந்தாவாகிவிடும்! மேலும், பொருட்படுத்துதல் என்பது அன்னையின் (மனதின்) செயலாகும். எனவே, "இறைவன் நஞ்சுண்டு மயங்கிக்கிடந்தார்" என்பது பொருந்தாத காட்சியமைப்பாகும்!

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, September 6, 2026

நிர்வாண பூசை, பரிகாரம் - சிறு விளக்கம்


🌷 எள் விளக்கேற்று - பற்றுகளை எரித்து விடு
🌷 முடியிறக்குதல் - பற்றுகளை இறக்குதல்
🌷 பிறந்தமேனியாக திகழ்தல் - "நான் இன்னார்" என்ற ஆடையாகிய செருக்கை விட்டுவிடுதல்

பற்றுகளை விடுத்து, நாம் அழியும் உடலல்ல என்ற பேருண்மையை உணர்தலே எல்லா இடர்களுக்கும் "பரிகாரம்" ஆகும்!

வருவதை ஒருவராலும் தடுக்கமுடியாது. தாங்குதிறனை வளர்த்துக் கொள்ளலாம். இந்த "தாங்குதிறன்" என்ற தமிழ்ச்சொல்லிற்கு நிகரான அசுரச்சொல்தான் "பரிஹாரம்"!

🔸 பரி - சுற்றி
🔸 ஹாரம் - காப்பு

போருக்கு செல்லும் படைவீரர் அணியும் தற்காப்பு உடையை போன்று, "நம்மை பற்றிய அறிவு" என்ற பாதுகாப்பு வளையத்தை அணிந்து கொள்ளலாம்.

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, September 5, 2026

பழமைக்காக பயன்படுத்தப்படும் திரு மறைக்காட்டு மணாளர்!


இராமாயணப் பொழுதில் வாழ்ந்த திரு மறைக்காட்டு மணாளரின் (அசுரத்தில், விசுவாமித்திரர்) சமயத்தில், சிந்தையில் தோன்றியதை செய்யுளாக பதிவு செய்யும் வழக்கம் மட்டுமே இருந்தது. சிலையாக வடித்து, அதை நிறுவி, அன்றாடம் குளிப்பாட்டி, ஒப்பனை செய்து, படையல் போட்டு, படங்காட்டி & கல்லா கட்டும் தொழில் அன்றிலிருந்து 3,500+/- ஆண்டுகளுக்கு பிறகே தொடங்கியது.

ஒரு வேளை, காயத்திரி என்பது மணாளருக்கு தோன்றிய வடிவமென்று கொண்டால், அவ்வடிவம் உணர்த்தும் கருத்தில் அவருக்கு உடன்பாடு இருந்திருந்தால், அவரது கருவறையை (அசுரத்தில், சமாதி) ஒரு காயத்திரி வடிவமே அணி செய்து கொண்டிருக்கவேண்டும். ஆனால், தென்னாடுடையவனின் சின்னமல்லவா அணி செய்து கொண்டிருக்கிறது!!

🔸 மந்திரத்திலிருந்து தோன்றிய - மனதில் / சிந்தையில் / எண்ணத்தில் இருந்து தோன்றிய.
🔸 விசுவம் - மொத்த படைப்பு
🔸 மித்திரர் - நண்பர்
🔸 விசுவாமித்திரர் - படைப்பின் நண்பர் / படைப்பை விரும்புபவர். அதாவது, அன்னை / பெருமாள் வழிபாட்டினர். திரு மறைக்காட்டு மணாளரோ திருநெறியராவார்! அதாவது, படைப்பிற்கு எதிரானவராவார்.

பிற்காலத்தில் யாரோ செய்த வேலையை, மணாளரின் மேலேற்றி மதிப்பு கூட்டியுள்ளனர்.

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Thursday, September 3, 2026

கண்ணன் பிறந்தநாள் = திராவிடன் பிறந்தநாள்! 😜


கற்புடன் திகழும் ஒரு கற்புக்கரசியிடம் திராவிடமாக (நயவஞ்சகமாக) பேசி, அவரை கெடுத்துவிட்டு, பெருமிதத்துடன் திரும்பும் பிள்ளையை, துடைப்பக்கட்டையால் சாத்தாமல், வாரியணைப்பதற்கு பெயர்தான் கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம்! 😏

🔸 கண்ணன் - மனம்
🔸 அவன் திருடிய வெண்ணெய் - மெய்யறிவு

எடுத்துக்காட்டு: பெண்ணாசையால் வீடுபேற்றினை இழந்த திரு மறைக்காட்டு மணாளர் (அசுரத்தில், விசுவாமித்திரர்)

🌷 மணாளர் - மெய்யறிவாளர்
🔸 அவருக்கு தோன்றிய பெண்ணாசை - கண்ணனின் திராவிடத்தனம்
🔸 மணாளர் இழந்த மெய்யறிவு - கண்ணன் திருடிய வெண்ணெய்

அம்மன் வழிபாட்டில் காமாட்சி என்று எதை அழைக்கின்றனரோ, அதுவே நாமத்தொழிலில் வெண்ணெய் திருடிய கண்ணன் ஆகிறது. அதுவே பாலைவன மதங்களில் சாத்தான் & சைத்தான் ஆகிறது.

🌷 தீபாவளி - மெய்யறிவை போற்றும் திருவிழா
🔸 கண்ணன் பிறந்த நாள் - மெய்யறிவை தூற்றும் விழா

ஏனிந்த நிலையற்றப்பாடு?

நாமாசுரனின் பதில்: வெயில் அடிக்கறச்சே இளநீர் விற்போம். குளிர் அடிக்கறச்சே தேநீர் விற்போம். 🤑

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, September 1, 2026

பூணூல் & கார்மடை - சிறு விளக்கம்


🔸 பூணூல் என்பது மனமாகும்.
🔸 பூணூலை இடது தோளில் போட்டிருந்தால், அவரது கண்ணோட்டம் அகத்தை நோக்கியுள்ளது என்று பொருளாகும்.
🔸 வலது தோளில் போட்டிருந்தால், புறத்தை நோக்கியுள்ளது என்று பொருளாகும்.
🔸 பெருமாளும் மனதை குறிப்பவர்.
🔸 பெருமாளுக்கு பூணூல் அணிவித்தல் எனில் மனதிற்கு மனதை அணிவித்தலாகும்! 😄

oOo

இன்றும் கூட அகவை முதிர்ந்த / பழமையில் பிடிப்புமிக்க அசுரர், கழிவறைக்கு செல்லும் போது, நூலை எடுத்து காதில் மாட்டிக் கொள்வதை காணலாம். கேட்டால், "நூலை காதில் மாட்டினால் bowel movement நன்னாயிருக்கும். அங்கிருக்கிற அக்குப்பஞ்சர் பாயிண்ட்ஸ் ஆக்டிவேட் ஆகும்." என்று கதைவிடுவர். ☺️

உண்மையென்னவெனில், அக்காலத்தில் எல்லாம் திறந்தவெளிதான். பூச்சி, பாம்பு, விலங்கு என ஏதேனும் தீண்டிவிடப்போகிறது என்பதற்காக, "எச்சரிக்கையாக இரு! காதை தீட்டி வை!" என்று எச்சரித்தனர்.

🔸 நூல் - மனம்
🔸 நூலை காதில் மாட்டுதல் - மனதை காதில் செலுத்துதல் - சுற்றுப்புற ஓசைகளை கூர்ந்து கேட்டல்

oOo

திருநெறி & இரண்டன்மை (அசுரத்தில், அத்துவைதம்) ஆகியவற்றிலிருந்து உருவி, அதை இடம்-வலம், மேல்-கீழ், முன்-பின் & ஆண்-பெண் என்று மாற்றி தொழில் செய்யும் அரவமதத்தினர், பூணூல் & கீழாடை ஆகியவற்றை மட்டும் மாற்றாமல் அப்படியே பயன்படுத்துகின்றனர். சுட்டிக்காட்டினால், திருடனுக்கு தேள் கொட்டியது போன்று முழிப்பர்! 😁

oOo

🌷 காரமடை - கார்+மடை
🌷 கார் - கருமை - இருள் - அறியாமை
🌷 மடை - மதகு / மதகுக்கண்
🌷 கார்மடை - அறியாமை எனும் இருள்கடலின் மதகுக்கண்

உடலுறுப்பில் இது பெண்ணுறுப்பை குறிக்கும். உடலை தவிர்த்துப் பார்த்தால் மனதை குறிக்கும்.

🌷 கார்மடை - பெண்ணுறுப்பு / மனம்.

ஆனால், காரமடை விகாரையின் தலபுருடாவில், காரைச்செடிகள் மிகுதியாக இருந்த வனம் என்பதால் காரைவனம் என்றழைக்கப்பட்டு, பின்னர் காரைமடை என மருவியது என்ற ஸ்டாண்டர்ட் அசுர அல்வாவை கிண்டியிருப்பர். உடன், அந்த விகாரையை கட்டச் சொன்னது வேதவியாசபட்டர் என்ற அசுரன் என்றொரு ஐட்டத்தையும் சேர்த்திருப்பர்.

oOOo

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Sunday, August 23, 2026

நடு தில்லை எனும் சேவூர்! 🙏🏽


🌷 சுக்கிரீவன் - அறிவு
🌷 வாலி - மனம்

மனம் தோன்றிய பிறகு அறிவு தோன்றியது, அதாவது, வாலிக்கு தம்பி சுக்கிரீவன், என்பது நாமமதத்தின் கண்ணோட்டமாகும்.

🌷 நடு தில்லை (அசுரத்தில், சிதம்பரம்) - இங்கிருக்கும் பெருமானின் கண்ணோட்டமும், தில்லையிலிருக்கும் பெருமான்களின் கண்ணோட்டமும் ஒன்றாக இருக்கும்.

🌷 ஆடை (அசுரத்தில், வஸ்திரம்) அணிவித்தல் - "நான் இன்னார்" என்ற பற்றை விட்டுவிடுதல்.
🌷 திருமணம் - மனமழிவதால் கிடைக்கும் வீடுபேறு.
🌷 பிள்ளை (அசுரத்தில், புத்திரன்) - மெய்யறிவு

நம்மிடம் இருக்குமொன்றை கொடுத்தால், இல்லாதவொன்றை இறைவன் நமக்கு கொடுப்பார் என்ற கணக்கில், நம்மிடம் இருக்கும் "நான் இன்னார்" என்ற பற்றை விட்டுவிட்டால், மனமழிந்து (திருமணம் நடந்து), மெய்யறிவு (பிள்ளைபேறு) கிட்டும்.

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, August 18, 2026

உள்ளபொருளின் குறையை மனம் போக்கியதாம்! 😆


நாமமதத்தில், உயர்ந்த நிலையிலிருக்கும் ஒருவருக்கு ஆசைகளை தூண்டிவிட்டு, அவரை தாழ்ந்த நிலைக்கு தள்ளுவதற்கு பெயர்தான் குறையை (அசுரத்தில், தோஷம்) போக்குதல்! திருமறைக்காட்டு மணாளர் (அசுரத்தில், விசுவாமித்திரர்) பெண்ணாசையால் (மேனகையால்) தூண்டப்பட்டு குடும்பியானார். இதுதான் குறைநீக்கமாகும்!

கண்டியூர் பெருமாள் சிலைக்கு கீழேயிருப்பவர் திராவிசத்தின் முன்னோடியாக இருந்திருப்பார் போலிருக்கிறது. வந்து சிக்கியவரிடம் "திராவிசமாக" பேசி (🤭), ஒழுக்கங்கெட்டவனாக (திராவிடனாக 🤣) மாற்றியிருப்பார் போலிருக்கிறது! 😜

🌷 சிவன் = மனமழிந்தவர்
🌷 தோஷம் = மெய்யறிவு
🌷 பெருமாள் = மனமியங்குபவர்

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️