Wednesday, July 1, 2026

முருகப்பெருமான் வடக்கத்திய கடவுள்தான்!! 😉


> தமிழர்: முருகப்பெருமான் வடக்கத்திய கடவுளா?
> அரவம்: அவுனு நைனா!
> தமிழர்: இப்புடு சூடு!! 😎

🔸 முதல் சங்கம் - 4,440 ஆண்டுகள்
🔸 2வது சங்கம் - 3,700 ஆண்டுகள்
🔸 3வது சங்கம் - 1,850 ஆண்டுகள்
🔸 சங்கப் பொழுது முடிவடைந்தது - பொஆ 3ம் நூற்றாண்டு

எனில், இன்றிலிருந்து 7,250 ஆண்டுகளுக்கு முன்னர் 2வது சங்கம் தொடங்கியுள்ளது என்று கொள்ளலாம். 2வது சங்கத்தின் தலைவராக முருகப்பெருமான் இருந்துள்ளார். அதாவது, முருகன் என்ற பெயரும், வடிவமும் உணர்த்தும் மெய்ம்மை (அசுரத்தில், தத்துவம்) 7,250 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரிடையே தோன்றிவிட்டது என்பது பொருளாகும்.

🔸 ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து ஈரானுக்கு வந்து, தொழில் கற்றுக் கொண்டு, நம் நாட்டிற்குள் அசுரர் நுழைந்தது - 3,600 ஆண்டுகளுக்கு முன்னர்.

எனில், அசுரரது வருகைக்கு 3,650 ஆண்டுகளுக்கு முன்னரே முருக மெய்ம்மை இங்கு இருந்திருக்கிறது. அப்போது வடக்கிலிருந்த தமிழர், முருக மெய்ம்மையை பற்றி சிந்தித்து, கட்டமைத்தனர் என்று கொண்டால், "முருகப் பெருமான் வடக்கில் தோன்றியவர்" என்ற கூற்று 100% உண்மையாகிறது!

அசுரர்-அரவக் கூட்டணி: 😵‍💫😫

oOo

அடுத்து, வடக்கில் தோற்றுவிக்கப்பட்டு, நடுவில் வளர்க்கப்பட்டு, தெற்கில் வழிபடப்பட்டவர் என்ற கூற்றை பார்ப்போம்.

இக்கூற்று முருக மெய்ம்மைக்கு மட்டுமல்ல; அனைத்து மெய்ம்மைகளுக்கும் பொருந்தும்!

நாட்டை வடக்கு, நடு & தெற்கு என்று பிரிப்பது போன்று, ஒரு மனிதரையும் பிரிக்கலாம்.

ஒரு மனிதனுக்கு சிந்தனை எங்கு தோன்றுகிறது? தலையிலுள்ள மூளையில். அதாவது, வடக்கில்!

தோன்றிய சிந்தனையை, அவன் போற்றி, பேணி & பாதுகாப்பது எங்கு? நெஞ்சில். அதாவது, நடுவில்!

அப்படி போற்றி, பாதுகாத்த சிந்தனையை அவன் என்ன செய்கிறான்? தனது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறான். பிள்ளைகள் எங்கிருந்து தோன்றுகின்றனர்? பிறப்புறுப்பிலிருந்து. பிறப்புறுப்பு எங்கிருக்கிறது? உடலின் தெற்கில்! அதாவது, அந்த சிந்தனை தெற்கில் வழி-படுகிறது!!

இவ்வளவுதான் வடக்கு-நடு-தெற்கு என்ற கூற்றின் பின்னாலிருக்கும் ஏரணம் (பீட்டரில், இலாஜிக்).

அசுரர்-அரவக் கூட்டணி: 😵

oOo

ஓர் உயிர்ப்புள்ள திருக்கோவிலின் கருவறையில்:

🌷 வேல் மட்டுமிருந்தால்

எல்லா பற்றுகளும் நீங்கிய பின்னர், இறுதியில், "நானே உள்ளபொருள்" என்ற மெய்யறிவு மட்டும் மிஞ்சுகிறது என்பது, அவ்வேலின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் (அசுரத்தில், சமாதியிலிருக்கும்) பெருமானின் கருத்தாகும்.

🌷 கையில் கோலுடன் நிற்கும் ஆண்டி முருகன்

"எல்லாவற்றையும் துறந்த மனம், 'நானே உள்ளபொருள்' என்ற நிலையான அறிவை மட்டும் இறுக பிடித்துக் கொண்டிருக்கிறது" என்பது அங்கு உறையும் பெருமானின் கருத்தாகும்.

🌷 வள்ளி, முருகன் & தெய்வானை இருந்தால்

🔸 முருகன் - நான் என்ற தன்மையுணர்வு
🔸 தெய்வானை - "நானே உள்ளபொருள்" என்ற மெய்யறிவு
🔸 வள்ளி - கனிந்த, இரக்கமுள்ள மனம்

அதாவது, அங்கு உறையும் பெருமான், தான் யாரென்பதை உணர்ந்து கொண்டு, தன்னை நாடி வருவோரையும் தன் நிலைக்கு உயர்த்தும் மனநிலை கொண்டவர் என்பது பொருளாகும்.

(மெய்யறிவு வள்ளலாகிய திரு அருட்கடல் பெருமான் (அசுரத்தில், பகவான் இரமணர்) இந்நிலையில் இருக்கிறார் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். 🙏🏽🙏🏽)

oOo

முருக மெய்ம்மை மட்டுமல்ல, சிவம், அன்னை என உருப்படியான யாவும் தமிழருடையதே! 💪🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, June 25, 2026

அனுவாவி என்ற பெயரின் உட்பொருள்


அனுவாவி - கோவைக்கருகில் மருதமலைத் தொடரின் வடக்குப்பகுதியில் இருக்கும் திருக்கோவிலாகும். இதன் தலபுருடாவை இணைப்புப் படத்தில் காணலாம்.

🔸 அனுவாவி - அனு+வாவி - இரண்டுமே அசுரச் சொற்களாகும்.

🔸 அனு - எதிர் செயல் / பிறகு.

🔸 வாவி - நடைகிணறு / நீர்நிலை - இங்கு மனதை குறிக்கும்.

எனில், அனுவாவி என்பது மனதிற்கு எதிரானது / மனதை கடந்தது என்று பொருள் கொள்ளலாம்.

மனதிற்கு எதிரானது எது? மெய்யறிவு!

மனதை கடந்த பிறகு இருப்பது எது? உள்ளபொருள்!

அதாவது, அங்கு குடிகொண்டிருக்கும் பெருமானை பற்றிக் கொண்டால், தேவையான தெளிவு பெற்று, மனதை கடக்கலாம்.

இப்படி பொருள் காண்பதை விட்டுவிட்டு, இராமாயணம், இலக்குவன், அனுமன், சஞ்சீவினி என பல டுபாக்கூர் பொருட்களை போட்டு அசுர அல்வாவை கிண்டியள்ளனர்!! 👊🏽👊🏽

மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு!
தலபுருடா நமக்கும் சமயத்திற்கும் கேடு!!

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Wednesday, June 10, 2026

வினைமுறைகளின் உட்பொருளை உணராமல் செய்தால்...


🌷 பால்குடம் சுமத்தல்:

பால்குடம் சுமப்பவர், நடந்து சென்று கொண்டிருந்தாலும், குடத்திலிருக்கும் பாலானது தளும்பி, வெளிவராமல் பார்த்துக்கொள்வார். அதாவது, எந்த செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அவரது கருத்தானது பால்குடத்தின் மீதேயிருக்கும். இது போன்று, நமது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், "நாம் இவ்வுடல் அல்ல" என்ற உண்மையின் மீது கருத்தாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு போதும் அதை மறவாதிருக்கவேண்டும்.

🌷 காவடி தூக்குதல்: 

🔸 காவடி = நமது பிறவி.
🔸 காவடி தூக்குதல் = இப்பிறவியை சுமத்தல்.
🔸 காவடியை சுழற்றுதல் = இப்பிறவியை நாமே இயக்குதல்.
🔸 காவடியை எதுவரை தூக்குகிறோம்? பழநி முருகப் பெருமானை காணும் வரை.
🔸 பழநி முருகப் பெருமான் என்பதென்ன? பழநி - பழம்+நீ - நீயே உள்ளபொருள் என்ற மெய்யறிவு.

நாமே உள்ளபொருள் என்ற மெய்யறிவு கிட்டும்வரை, இப்பிறவியை நாம் சுமக்கிறோம் என்ற உணர்விருக்கும். பின்னர் அது நீங்கிவிடும். பிறகு, வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருப்போம்.

இவ்வாறு வினைமுறைகளை பற்றி சிந்தித்து தெளிந்தால் நமக்கு பயன் கிட்டும். அல்லாமல், செக்கு மாடு போன்று, வினைமுறைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அசுரருக்கு பயன் கிட்டும்! 😏

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, May 27, 2026

கருமை நிறப் பொட்டு வைத்தால் கண்ணூறு தாக்காதாம்! 😏


தேர்தலுக்கு முன்னால், கருங்காலி கட்டையை கையில் வைத்திருந்தால் அரசப்பதவி கிடைக்குமென்று கொம்பு சீவினர். இப்போது கருமை நிறப் பொட்டு வைத்தால் கண்ணூறு தாக்காதென்று கொம்பு சீவத் தொடங்கியுள்ளனர். 😏...

🌷 நெற்றியில் வெண்மையான திருநீறு இட்டால்: மாறாத உள்ளபொருளே மேலானது [என்பது வைப்பவரின் கண்ணோட்டமாகும்].
🌷 கருமை நிறப்பொருள்: மாற்றத்தை ஏற்படுத்தும் அன்னையே / பெருமாளே மேலானவர் [என்பது வைப்பவரின் கண்ணோட்டமாகும்].

🌷 நீறு: பற்றுகளை விட்டவர் / விட முயற்சிப்பவர்.
🌷 மை: பற்றுகளை விரும்புபவர்.

🌷 நீறு: எண்ணங்களற்று இருப்பவர் / இருக்க முயற்சிப்பவர்.
🌷 மை: எண்ணங்களின் ஊற்றுக் கண்ணாக இருப்பவர்.

🌷 நீறில்லா நெற்றி பாழ் - மெய்யறிவு பெறாதவரின் பிறப்பு வீணாகும்.
🌷 மை வைத்த நெற்றி பாழ் - பற்றுகளில் உழல்பவரின் பிறப்பு வீணாகும்.

அரகஜா என்ற அசுரப்பெயர் ஒரு கருமை நிறப்பொருளை குறிக்கிறது. எனவே, மேலே கருமைக்கு கண்ட யாவும் பொருந்தும். அவற்றை ஒதுக்கிவிட்டு, அதன் பெயரை மட்டும் ஆராய்ந்தால் கிடைப்பது: நல்லெண்ணங்களால் ஆனவர் / பிறந்தவர்!

ஆனால், 1.5ல தமிழரை கொன்று குவித்த சிங்களக் காட்டேறிகளுக்கு எதிராக கையெழுத்திட மறுத்தவருக்கு இது பொருந்துமா? 😡

oOo

இன்றைய நிலையில், நெற்றியில் கருமைப் பொருளை இடுவதற்கு, அதாவது, எண்ணங்களின் ஊற்றுக்கண்ணாக இருப்பதற்கு மிகவும் தகுதியானவர்: நம்ம ஜி! 😁

தோல்வியடைந்தாலும் புகழ் தேடுவார். வெற்றி பெற்றாலும் புகழ் தேடுவார். விலையேற்றத்திலும் புகழ் தேடுவார். விலை குறைப்பிலும் புகழ் தேடுவார். மொத்தத்தில், தற்புகழ்ச்சி எனும் எண்ணத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறார். 😜

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, May 23, 2026

ஒற்றைக்காலில் வடக்கிருத்தல் & நெருப்புக்கிடையே வடக்கிருத்தல் - உட்பொருள்


அன்னபூரணி என்ற பெயர் கொண்ட உருசியப்பெண், தனது ஆயருடன், அஜ்மீர் (இராஜஸ்தான்) நகரில், தங்களை சுற்றி 9 நெருப்பு மூட்டி, அதற்கிடையே அமர்ந்து, ஞாலம் அமைதியடைவதற்காக கடுமையாக வடக்கிருக்கிறாராம். இதற்கு முன்னர், இதே குறிக்கோளுக்காக, சில வாரங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று வடக்கிருந்தாராம்.

இவை போன்ற கடுமையான செயல்களால், அவருக்கு புகழ் கிட்டலாம். வசதி, வாய்ப்புகள் & தொல்லைகள் பெருகலாம். வேறெதுவும் நடக்காது!

🌷 ஒற்றைக்காலில் வடக்கிருத்தல்:

அகமென்பது ஒரு கால். புறமென்பது இன்னொரு கால். ஆனாலும், ஒற்றைக்கால் என்பது அகத்தை மட்டுமே குறிக்கும். ஒற்றைக்காலில் நிற்பது, அதாவது, அகத்தில் நிற்பதென்பது தன்மையுணர்வாக மட்டும் இருப்பதாகும்.

🌷 9 நெருப்புகளுக்கிடையே வடக்கிருத்தல்:

9 நெருப்பு = 9 துளைகள் = நமதுடல்!

நம் உடலிலுள்ள துளைகள் வழியாக உள்ளே வரும் ஒவ்வொரு தரவும், நம்மை எப்படியெல்லாம் படுத்துகிறது என்பது எல்லோருக்கும் கண்கூடாகும். எனவே ஒவ்வொரு துளையும் ஒரு நெருப்பாகிறது.

9 நெருப்புக்கு பதிலாக, நண்பகல் வெயிலில், 4 பக்கமும் நெருப்பு மூட்டி, நடுவே அமர்ந்து வடக்கிருந்தால்:

4 நெருப்பு + பகலவன் எனும் நெருப்பு = 5 நெருப்பு = 5 புலன்கள் = நமதுடல்!

இங்கு, துளைகளுக்கு பதிலாக புலன்கள். மற்றபடி, துளைகளுக்கு பார்த்த அதே விளக்கம் புலன்களுக்கும் பொருந்தும்.

5 / 9 நெருப்புக்கிடையே அமர்ந்து வடக்கிருத்தல் = உடலிலிருந்து கொண்டு வடக்கிருத்தல்.

எனில், அன்றாட வாழ்வை வடக்கிருத்தல் போல அணுகுதல். அதாவது, வருவதை வரவிட்டு, போவது போக விட்டு, தன்மையுணர்வை விட்டு விலகாதிருத்தல்.

இவ்வாறிருப்பதாலோ, அல்லது, மேற்கண்டவாறு ஒற்றைக்காலில் நிற்பதாலோ என்ன கிட்டும்? நம்மை பற்றிய அறிவு (மெய்யறிவு) கிட்டும். அதை இறுகப் பற்றினால் வீடுபேறு கிட்டும். அதாவது, நமக்கு அமைதி கிட்டும். ஆனால், ஞாலத்திற்கு அமைதி கிட்டுமா?

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, May 20, 2026

நீரில் மிதத்தல் (அசுரத்தில், ஜலப்பிரதட்சணம்) - உட்பொருள்


தீச்சட்டி ஏந்துதல், பால்குடம் சுமத்தல், தீ மிதித்தல் வரிசையில் நீரில் மிதத்தலும் சேரும். இதனடிப்படை மெய்யியலாகும்.

🌷 கிணறு என்பது நமது மனமாகும்.

🌷 "கிணற்று நீரில் மிதந்து கொண்டிரு" என்பதை "கிணற்றின் ஆழத்திற்கு செல்லாதே" என்றும் கூறலாம்.

🌷 கிணற்றின் ஆழம் = மனதின் ஆழம் = எண்ணப்பதிவுகள் இருக்குமிடம்!

🌷 ஆழத்திற்கு செல்லாதே = எதையும் பதிவு செய்யாதே!

🌷 அன்றாட வாழ்வில், நமக்கு கிடைக்கும் பல நுகர்வுகள் பதிவுகளாக நம் ஆழ்மனதில் பதியும். அப்படி பதியவிடாமல், வருவதை வரவிட்டு, போவதை போகவிடுவதே, கிணற்று நீரில் மிதப்பதின் உட்பொருளாகும்!

சரி. யார் அவ்வாறு வாழ்வர்? மெய்யறிவாளர்!! வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருப்பர்.

oOo

சோழவந்தான் சட்டக்கூட உறுப்பினரின் வேண்டுதல்: அம்மா தாயே! யோசேப்பு விசயை மட்டும் முதலமைச்சராக்கிடு. இந்த கிணத்து தண்ணில மிதக்கிறேன்.

அவரது உண்மையான வேண்டுதல்: அம்மா தாயே! யோசேப்பு விசயை மட்டும் முதலமைச்சராக்கி விடு. அப்புறம் நான் ஒரு பார்வையாளான, நீ காட்டுற காட்சிய பாத்துகிட்டு மட்டுமிருக்கேன்!!

இதுதான் தனது உண்மையான வேண்டுதலென்பது அவருக்கு தெரிந்திருந்தால்... 😂😂🤣!!

oOo

இன்றைய சூழலில் அரசியலிலிருப்போர் மெய்யறிவுத் தேடலில் ஈடுபடமுடியுமா? ஆனால், மெய்யறிவாளரே ஆட்சியாளராக திகழ்ந்த பெருமை, அண்டையிலிருந்தும், வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும், சாக்கடைகளும் நஞ்சுகளும் வந்து கலப்பதற்கு முன்னரிருந்த தமிழ்த் திருநாட்டிற்கு உண்டு!! 😍

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, May 16, 2026

குறையற்றவரின் குறையை போக்கினாராம் குறையே வடிவானவர்! 😏


😆 இராமசாமி சாதியை ஒழித்தான்! 
😝 இராமசாமி பெண்ணுரிமையை காத்தான்!
😂 ஈழத்தமிழரை காக்க கடற்கரையில் கருணாநிதி உண்ணா நோன்பிருந்தான்! 
...
என்ற வகை உருட்டில் சேர்ந்ததுதான் சிவபெருமானின் தோஷத்தை பெருமாள் போக்கினார் என்பதாகும்!!

(அரவங்களுடன் வந்த அரவமதத்திடம் உருட்டைத்தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? 😏)

ஓர் எடுத்துக்காட்டு:

திரு அருட்கடல் பெருமானிடம் (அசுரத்தில், பகவான் இரமணர்) சென்று, திராவிசமாக பேசி (அதாவது, நயமாக பேசி 😁), அவரை வீடுபேறு நிலையிலிருந்து  பாற்கடல் நிலைக்கு கொண்டுவருவதே, சிவபெருமானின் (மெய்யறிவாளரின்) தோஷத்தை போக்குவதாகும்!! 🤭

அரவமதத்தை பொறுத்தவரையில்,

வீடுபேறு = சாபம்!
மெய்யறிவு = தோஷம்!!

சரி. அரவமதத்தில், சிவபெருமான், சாபம் & தோஷம் ஆகிய சொற்கள், உண்மையில், எவற்றை குறிப்பிடுகின்றன என்று பார்த்தோம். பெருமாள் என்ற சொல் எதை / யாரை குறிப்பிடுகிறது? 😉

oOOo

👊🏽 திராவிசத்தை கற்பித்தவன் அயோக்கியன்!
👊🏽 திராவிசத்தை பரப்பியவன் காட்டுமிராண்டி!
👊🏽 திராவிசத்தை நம்புபவன் முட்டாள்! 

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻