Friday, December 21, 2018

வைகுண்ட #னஏகாதசி - நம்மாழ்வார் விடுதலை (முக்தி) அடைந்த நாள்!! 🌸🙏


#விழாநாதர் (#உற்சவர்) #நம்பெருமாள் (சிலை) திரு நம்மாழ்வாரைக் குறிக்கும். விழாநாதர் வடக்கு வாசல் (வைகுந்த/சொர்க்க வாசல்) வழியாக வெளிவருவது என்பது நம்மாழ்வார் அவரது கபாலத்தின் வழியே வெளியேறியதை (கபால மோட்சம்) குறிக்கும்.

விழாநாதருடனோ அல்லது தனியாகவோ வடக்கு வாசல் வழியாக வெளிவந்துவிட்டால் #நிலைப்பேறு (#வைகுண்டம்) நமக்கு கிடைத்துவிடுமா? உறுதியாக கிடைக்காது!!! 😀

மனம் அழிந்தால் மட்டுமே நிலைபேறு கிடைக்கும். மனதை அழிக்காமல், யோகப் பயிற்சியினால் கபால பிளவு ஏற்பட்டு, அதன் வழியாக உயிர் வெளியேறினாலும் நிலைபேறு கிட்டாது (எ.கா.: திரு காவியகண்ட கணபதி முனிவர்). மேலும், மனம் அழிந்த பின்னர் உயிர் எப்படி வெளியேறினால் என்ன? குடம் உடைந்த பின்னர், குடத்தின் உள்ளும் புறமும் எப்படி கலந்தால் என்ன?

திரு நம்மாழ்வார் போன்ற மெய்யறிவாளர்களை வணங்குவது, போற்றுவது, மரியாதை செய்வது என்பது அவர்களது அறிவுரைகளை கசடறக் கற்று, அவர்கள் காட்டிய வழியில் பயணிப்பதேயாகும்.

யானேயென்னை அறியகிலாதே
யானேயென்தனதே யென்றிருந்தேன்
யானேநீயென் னுடைமையும்நீயே
வானேயேத்து மெம்வானவரேறே

(திருநம்மாழ்வார், 3107, நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

பதம் பிரித்து...

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

இப்பாடல் முழுவதும் அத்வைதம் வெளிப்படும். ஆனால், வைணவத்திற்கு ஏற்றவாறு பொருள் கூறியிருப்பார்கள்!! 😀 இது பற்றி #பகவான் திரு #ரமணர் அருளியதை கீழே இணைத்துள்ளேன். (Day by Day with Bhagavaan, Dhevaraaja Muthaliyaar)



🌼🌷🌺🌻🌼

திரு நம்மாழ்வாரின் விடுதலை நிகழ்வு இவ்வளவு சிறப்பாக திருவரங்கத்தில் கொண்டாடப்பட்டாலும், *அவர் சமாதியானது திருக்குருகூரில்* (#ஆழ்வார் #திருநகரி) தான். திருவரங்கத்தில் (மூலவருக்கு கீழே) சமாதியாகி உள்ளது 18 சித்தர்களில் ஒருவரான #சட்டைமுனி #சித்தர். 🌸🙏 முதன்முதலில் திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு விழா எடுத்தது திருமங்கையாழ்வார். பின்னர் வந்த ஆச்சார்யார்களால் 10 நாட்கள், 20 நாட்கள் என விரிவு படுத்தப்பட்டு தற்போதைய நிலையை பிற்காலத்தில் அடைந்தது.

🌼🌷🌺🌻🌼

ஏகாதசியன்று பட்டினி இருந்து, துவாதசியன்று அயல்நாட்டுக் காய்கறிகளை தவிர்த்து, உள்ளூர் காய்கறிகளைக் கொண்டு உணவு சமைத்து உண்ணுவது என்பது உடல்நலம் சார்ந்தது. பட்டினி கிடந்து உடல் வாடும் போது, மனதின் குவியும் திறன் அதிகரிக்கின்றது. இதைப் பயன்படுத்த தெரியாவிட்டால் ஆன்மிக பலன் ஏதும் கிடைக்காது. மற்றபடி இதற்கும் வைணவத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. இதே போன்றது தான் ஏனைய மற்ற நாட்களும் (பிரதோஷம், சஷ்டி, "அமாவாசை முழுஇரவு உபவாச ஜெபம்" 😁).

#உபவாசம் எனில் "அருகில் இருத்தல்". எதனருகில்? "நான் என்னும் தன்மையுணர்வின்" அருகில்! இறை, இறையுணர்வு என்பதெல்லாம் இதுவே. தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் நமது கவன ஆற்றலை (மனம் - அனுமார்) வெளிப்புறமாகவே இருக்கச் செய்துவிடும். இந்த கவன ஆற்றலை நம் மீது திருப்பி, நமதியல்பை சற்று நேரமாவது உணரவே தினசரி வழிபாடு, பூசை என சில ஏற்பாடுகளும், அடுத்த நிலையாக மாதத்தில் ஒரு சில நாட்கள் அருள் பெறவும் (#அருள் எனில் அருகில் இருத்தல்; இறையுருவிற்கு போடப்படும் மலர்மாலை எவ்வளவு அருகில் உள்ளதோ அவ்வளவு அருகில்) உடல் சீராகவும் ஒதுக்கி வைத்தனர் (இன்று, தினசரி மனதைக் கெடுத்துக் கொள்ள திறன்பேசிகளும், மாதம் சில முறை உடலை கெடுத்துக் கொள்ள உணவகங்களையும் தேடிச் செல்கிறோம் 😝).

🌼🌷🌺🌻🌼

💮 #திரு எனில் தன்மையுணர்வில் நிலைபெறுதலைக் குறிக்கும். மெய்யறிவாளர்களுக்குப் (ஞானிகளுக்கு) பொருந்தும்.

💮 #சைவம் எனில் அசைவற்று / உள்ளும் புறமும் ஒன்றுபட்டு என்று பொருள். சைவர்கள் அணியும் உருத்திராக்கம் அசைவற்றத் தன்மையைக் குறிக்கும். காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தாலும், மாறாத அசையாத வெண்திரை போன்றவர்கள் என்று பொருள்.

💮 #வைணவம் எனில் உள்ளும் புறமும் அற்று என்று பொருள்.

(சைவம் - கிறிஸ்டோபர் நோலன், வைணவம் - முருகதாஸ் 😁)

posted from Bloggeroid

Thursday, December 6, 2018

பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாள் - டிசம்பர் 6

ஒருசமயம் #அம்பேத்கர் தாம் ஏன் #இஸ்லாம் தழுவவில்லை என்பதை விளக்கினார்:

“நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால், கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப் பட்டிருக்கும். ஆனால், ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும். ஆகையால், 'மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன்' என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை’’ என்று கூறினார்

(Ambethkar – A Critical Study)

💥💥💥

அம்பேத்கர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் நாடு என்ன ஆகியிருக்கும் என்பதைப் பற்றி #பாலாசாகிப் #தேசாய் கூறுகிறார்:

‘‘இந்த நாட்டுக்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளார் பாபாசாகிப் அம்பேத்கர். பாரதத்தின் மீதும், அதன் பண்பாட்டின் மீதும் அவருக்கு அன்பு இருந்ததால்தான் அவர் #புத்தநெறி தழுவினார். அதை விடுத்து இஸ்லாம் மதம் போயிருப்பாரேயானால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நாடே சின்னாபின்னப்பட்டல்லவா போயிருக்கும்!’’

(Kamble, J.R. Rise and Awakening of the Depressed Classes in India, National Publishing House, New Delhi, 1979, P.211)

அதாவது இஸ்லாம் மதத்திற்கு மாறினால் நாடே சீரழியும் என்பது அம்பேத்கருக்கு தெரிந்திருந்த காரணத்தால்தான் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை.



💥💥💥

14-10-1956 அன்று அம்பேத்கர் புத்தமத தீக்‌ஷை பெற்ற போது பேசியதாவது :

….புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின்போது புத்தர் பிரானின் உருவச்சிலைகளை அழித்துச் சிதைத்தனர். இதுவே புத்தமதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்புகளுககு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத்துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர்.’’ என்று கூறினார்.

ஆகவே அம்பேத்கர் இஸ்லாம் மதம் மாறாததற்கு, புத்தமதத்தை அழித்தது இஸ்லாம் என்று தெளிவாக அறிந்திருந்தது தான் காரணம்.


__(மூலம்: http://www.tamilhindu.com/2011/08/why_ambedkar_converted_to_buddhism-14/)__

posted from Bloggeroid

Wednesday, December 5, 2018

Clyde Tombaugh did not discover Pluto!!

Another cat is out ...


#Clyde #Tombaugh, like his predecessors (Newton, etc.), stole the discovery of #Pluto from a great astronomer of Bhaaratham - #Venkatesh #Bapuji #Ketkar!! 😡😡

Clyde must have been a proud White - a race that excels in stealing, usurping, backstabbing, leg pulling, parasitic living, sleeper cell creation and destruction of Mother Nature!! 😛😜😝

Wherever Whiteman sets foot, destruction is sure to follow!! ✊👊👊👊

(Attachment: Found it on Aravindhan Neelakandan's page on FB)

posted from Bloggeroid

Saturday, December 1, 2018

அனுமாரையும் குடும்பி ஆக்கிவிட்டார்கள்!! 😀


மனதைக் குறிக்க வைணவர்கள் உருவாக்கிய உருவம் தான் #ஆஞ்சநேயர் / #அனுமார்.

அலைபாயுதல் என்பது மனதின் இயல்பு. இதனால் தான் குரங்கைக் குறியீடாக எடுத்துக்கொண்டனர். இப்போது இந்த இயல்பை தனியாகப் பிரித்து, #சுவர்ச்சலா தேவி என்ற பெண்ணாக்கி, அப்பெண்ணிற்கு மனித முகத்தை வேறு கொடுத்துள்ளனர். அலைபாயும் தன்மை இல்லையெனில் மனம் மனமாகாது. அது "திரு" என்றாகும் வாய்ப்புள்ளது (திரு - நிலைத்த; நிலைபேறு - மெய்யறிவு - இறை)!!

"ஒரு நீர் நிலையில் உள்ள நீர் அசையாமலும் தெளிவாகவும் இருந்தால் நீர் தெரியாது. உள்புறம் மட்டுமே தெரியும்." என்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர் (பகவத் வசனாம்ருதம், எண் # 146; இதே விளக்கத்தை குங்ஃபூ பாண்டா - பாகம் 1 என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பர் (ஆசான் ஊக்வே ஆசான் ஷிஃபூவிற்கு மெய்யறிவு பற்றி விளக்கமளிக்கும் காட்சி)). இது போன்றே மனதின் அலைபாயும் தன்மையை விளக்கிவிட்டால் அங்கே மனம் இருக்காது; இறை வெளிப்படவே வாய்ப்புள்ளது. அப்படி வெளிப்படுங்கால், இணைப்பு படத்தின் பொருள் பெருந்தவறாகிவிடும் - பெருமாளும் சுவர்ச்சலா தேவியும் அமர்ந்திருப்பது போலாகிவிடும்!! 😀

இறையுருவம் என்பது ஒரு காலத்தில் ஒரு மெய்யறிவாளரின் (ஞானியின்) சமாதியைக் குறிப்பதற்காக (அடையாளத்திற்காக) பயன்படுத்தப்பட்டது. இன்று, அழிக்கப்பட வேண்டிய மனதிற்கு துணைவியைத் தரும் அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது. பெரும்பாலான மதங்களும், நம் சமயத்தின் சில பிரிவுகளும் "மனதை அழி" என்று அறிவுறுத்தும் போது, நம் சமயத்தின் மீத பிரிவுகள் மட்டும் மனதைக் கொண்டாட 3 முக்கிய காரணங்கள்:

▶ மனதின் வழியாகத்தான் இறையை அடைய முடியும்
▶ உலகம் செவ்வனே இயங்க மனம் இன்றியமையாதது
▶ மனமும் இறைவனின் படைப்பே

வாழ்க்கை வண்டி ஓட வேண்டும் என்பதற்காக, மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து வைக்கிறார்கள். பின்னர், அது நம் சமயத்திற்கே பெரும் கேடாக வந்து நிற்கின்றது!! 😔

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் யாவர்க்கும் இது உந்தீபற

-- பகவான் ஸ்ரீரமணர், உபதேச உந்தியார்


🌸🙏🌸🙏🌸


__(ஸ்ரீஆஞ்சநேயரைப் மேலும் அறிந்து கொள்ள: https://m.facebook.com/story.php?story_fbid=10156330139391052&id=698176051)__

posted from Bloggeroid

Friday, November 30, 2018

சிறைமீட்ட தமிழ்ப்பா -- முனைவர் எஸ். சந்திரா

#பரத்தைவயல் #நாக #முத்தையா என்ற புலவர் இராமநாதபுரத்திலுள்ள #நயினார் #கோயில் நாகநாத சுவாமியிடமும், சவுந்தர்யநாயகி அன்னையிடமும் பேரன்பு கொண்டவர்.

ஒரு சமயம், அவர் முத்துராமலிங்க சேதுபதி அரண்மனைக்குச் செலுத்தவேண்டிய பணத்தில் நூறு பொன் பாக்கி வைத்து விட்டார். அதனால் இரக்கமின்றி தாசில்தார் அவரை சிறையில் அடைத்துவிட்டார்.

சிறையில் வாடிய அவர் #நயினார்கோயில் இறைவனை நினைத்து இந்த பாடலை பாடினார்:

கையிலே ஒருகாசுக்கு இடமோ இல்லை
கடனென்றால் ஐஞ்ஞூறு பொன் மேலாச்சு
நெய்யிலே கைபோட்டுக் கொடுப்போம் என்றால்
நிருவாகம் அரண்மனையார் அறிய மாட்டார்
பையிலே பணமிருக்க நீரும் சும்மா
பார்த்திருக்க நீதியுண்டோ பரனே எம் ஐயா
மையிலே தோய்ந்த விழி உமையாள் பங்கா
மருதூரா என் வரிக்கே வழி செய்வாயே.

அவர் பாடிய பாடலைக் கேட்டு பரமனின் மனம் இளகியது! அன்பனுக்கு உதவ அன்றிரவே இறைவன் சேதுபதியின் கனவில் சென்று, "ஏன் என் மகன் நாகமுத்தனை சிறையில் அடைத்தாய்?" எனக் கேட்டு மறைந்தார்.

திடுக்கிட்டு எழுந்த சேதுபதிக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் யோசித்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்றார்.

ஆனால், சற்று நேரத்தில் அன்னையும் அவர் கனவில் தோன்றி, "மகனே, என் தாலிப்பொட்டை அடகு வைத்து, வரிப் பணத்தை வாங்கிக் கொள்" என்று சொல்லி மறைந்தார்.

நடுக்கத்துடன் விழித்தெழுந்த சேதுபதி விபரமறிய தாசில்தாரை வரவழைத்தார். நடந்ததை அறிந்து, தானே சிறைச்சாலைக்குச் சென்று, அவரை வணங்கி மன்னிப்புக் கேட்டு அவரை விடுவித்தார். அத்தோடு, தன் தவறுக்குப் பரிகாரமாக அவருக்கு இரண்டு கிராமங்களை நன்கொடையாக அளித்தார்.


(இந்தக் கட்டுரை #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம், மார்கழி 2018 இதழில் வெளியாகி உள்ளது. அதன் ஒளியுருவை இங்கே இணைத்துள்ளேன். பின்னரும், எழுத்துருவாக பதிவேற்றக் காரணம், இணையத் தேடலில், இது போன்ற ஆராய்ந்து உறுதி செய்யப்பட்ட நிகழ்வுகள், இடம் பெற வேண்டும் என்பதால் தான்.)

posted from Bloggeroid

Thursday, November 29, 2018

173 வருடங்களில் ரூ. 70,67,500 கோடிகள் கொள்ளையடித்த பரங்கி ஓநாய்கள்!!

1765-1938 வரை பரங்கி ஓநாய்கள் நம்மிடம் கொள்ளையடித்த செல்வத்தின் மதிப்பு இன்றைய சந்தை நிலவரப்படி ரூ. 70,67,500 கோடிகளாம்!! 😡😡

▶173 வருடங்களில் ரூ. 70,67,500 கோடிகள்
▶1 வருடத்தில் ரூ. 40,853 கோடிகள்
▶1 நாளுக்கு ரூ. 112 கோடிகள்

அன்று அந்த ஓநாய் நாட்டின் மக்கள் தொகை சுமார் 1.50 கோடிகள். எனில், தலைக்கு சுமார் 75 ரூபாய்கள் பார்த்திருக்கிறார்கள்! இதனால் தான் மோகன்தாஸ், "நாங்கள் என்றும் ஆங்கிலேயர்களாக ஆக முடியாது. அப்படி ஆக வேண்டுமானால், நாங்கள் கொள்ளையடிக்க இன்னொரு பூமி வேண்டும்." என்று பஞ்ச் டயலாக் பேசினார். (இதுல ஒரு கொறைச்சலும் இல்ல. இந்தப் பக்கம் பஞ்ச் டயலாக் பேசிட்டு, அந்தப் பக்கம் அந்த ஓநாய்களோடயே அக்ரிமெண்ட்டு போட்டுக்க வேண்டியது. "பகத்சிங்க நீ போட்டுக்க. நான் கண்டுக்கல. நான் வெள்ளையனே வெளியேறுன்னு உதார் உடுவேன். நீ ஜகா வாங்குற மாறி கொஞ்சநாள் நடிச்சுக்கணும். டீல் ஓகேயா?" 😠)

இன்றும் கூட அந்நாட்டின் பொது திட்டங்கள் நடப்பது நம் பணத்தில் தான் என்று சில வருடங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. இதற்குப் பிறகும் பற்றாக்குறை மற்றும் பேராசை!! இன்று வரை அவர்களது வீணாய்ப் போன மொழி, கல்வி, உணவு, மருந்து, அ(ழி)வியல், மதம் என்று பல நஞ்சுகளைக் கொண்டு நம்மையும் உலகையும் அழித்துப் பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இங்கிலாந்து, அது செய்த பாவங்களின் பலனால், கடலுக்கடியில் போய்விடுமென்று ஸ்ரீராமசந்திர மகராஜ் என்ற மகான் சொல்லியிருக்கிறார். 👏👌👍😘 மகான்களின் வாக்கு பொய்யாகாது.

(https://www.livemint.com/Companies/HNZA71LNVNNVXQ1eaIKu6M/British-Raj-siphoned-out-45-trillion-from-India-Utsa-Patna.html)

Tuesday, November 27, 2018

ஜி யு போப் தமிழுக்கு தொண்டு செய்தானாம்!!!


எப்பொழுதெல்லாம் அடி, உதை அதிகமாக விழுகின்றதோ அப்பொழுதெல்லாம் மதச்சார்பின்மை, சிக்-குலரிஸம் போன்ற பதாகைகளை தூக்கிப் பிடித்துக் கொள்வர் சர்ச்சியர்கள். அதிலொரு பதாகை தான் இது.

நாவலரை #ஜி #யு #போப் என்ற ஒரு வெள்ளை நரியோடு சமன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கும், இந்த நரி, திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது தனது இனம் தெரிந்து கொள்ளத் தான் என்று வெளிப்படையாகவே ஊளையிட்ட பிறகும், இது ஏதோ தமிழுக்கும் சைவத்திற்கும் நாவலரைப் போன்று அருந்தொண்டு புரிந்தது போன்று இன்று வரை படம் காட்டுகிறார்கள். இது செம்பொருளை (மெய்பொருள் / பரம்பொருள்) வேறு அறிந்ததாம். இதற்குத் தெரிந்ததெல்லாம் எந்த கருவூலத்தில் எவ்வளவு பொருள் இருக்கிறதென்பதும், எந்த அறிஞரிடம் என்ன அறிவு இருக்கிறதென்பதும் தான் (அதுவும் திருடுவதற்கும், பிடுங்கிச் செல்வதற்கும் தான்).

பதாகை தூக்கிப் பிடிக்கும் போதும் கருங்காலித்தனத்தை கைவிடவில்லை. நாவலர் தான் பரலோக சாம்ராஜ்ஜியம், பரிசுத்த ஆவி, கிருபை போன்ற சொற்களை உருவாக்கினாராம். அதாவது, இவர்களது சுவிசேஷம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக காரணம் இந்த சொற்கள் தானாம்! இவற்றை #நாவலர் தான் உருவாக்கியதால், அவர் தான் இவர்களது நிலைக்கு காரணமாம். சோத்துல செங்கல்!!!!

சில காலத்திற்கு முன்பு, மிஷ-நரிகள், "நாவலர் ஒன்றும் மொழி பெயர்க்கவில்லை. அதற்கு முன்னரே ஒரு தேவன் (தேவன் - வெள்ளையன்; பெயர் நினைவில்லை) வேலைகளை ஆரம்பித்துவிட்டான்." என்று பிட் போட்டுப் பார்த்தார்கள். இதற்குக் காரணம் நிற வெறி! சர்ச்சிய மதத்தின் தேவர்களாகிய வெள்ளையர்கள் எப்படி ஒரு கருப்பரிடம் உதவி பெறுவது? வெட்கக்கேடு! ஆகையால், பிட் தயாரித்து வரலாற்றை மாற்ற முற்பட்டார்கள். இன்று கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியதால், நாவலரை முன் நிறுத்திவிட்டார்கள். வெள்ளை தேவர்கள் காப்பாற்றப் படவேண்டும். மதமானாலும் சரி, போபால் விஷவாயு கசிவானாலும் சரி, குரங்கணில்முட்டம் தீ விபத்தானாலும் சரி, வெள்ளையன் காப்பாற்றப்பட வேண்டும்!

நாவலர் ஒன்றும் புதிய மதத்தை உருவாக்கவில்லை. வெள்ளையர்கள் கொடுத்ததை தமிழில் மொழிப்பெயர்த்துக் கொடுத்தார். மூலத்தில் "பிம்பிளிக்கா பிலாபி" என்றிருந்தால் அவர் என்ன செய்யமுடியும்? மொழி பெயர்க்கும் போது, அவருக்குத் தோன்றியிருக்கும் ஐயங்களை வெள்ளையர் தாம் களைந்திருக்க வேண்டும். அந்த மடையர்கள் என்ன உளறி வைத்தார்களோ? இன்று தான் இவர்களது மதம் நமது அடையாளங்களை அடைய, உரிமை கொண்டாட துடிக்கிறது. ஆனால், அன்று தனி அடையாளங்களையே விரும்பியது. ஆகவே, நாவலரும் மற்ற மதங்களில் இல்லாத சில சொற்களைக் கொடுத்து அந்த புண்ணாக்குகளை தேர்ந்தெடுக்கச் சொல்லிப் பயன்படுத்தியிருப்பார். அடுத்து, நாவலர் மொழிப் பெயர்த்துக் கொடுத்ததை இவர்கள் திருத்தக்கூடாது என்று விதி ஒன்றுமில்லையே. இத்தனை வருடங்களில் மாற்றிக் கொண்டிருக்கலாமே. சமீப காலமாக தமிழில் உயர் மற்றும் முனைவர் கல்வி கற்பவர்கள் பெரும்பாலும் இவர்கள் மதத்தினர் தானே.

இறுதியாக, "மதவெறி கொண்ட யானைகள் மனிதனாக மாறட்டும்" என்று பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறார்கள். ஒருவேளை, தங்களுக்குத் தாங்களே அறிவுரை கூறிக் கொண்டிருப்பார்களோ? ஏனெனில், நமது சைவம் சமயம் எனப்படும். மற்ற அனைத்தும் மதம் எனப்படும். சமயம் x மதம். பக்குவம் x வெறி. "பக்குவ வெறி கொண்ட..." என்று வேண்டுமானால் நம்மை அவர்கள் புகழ்ந்து கொள்ளலாம்!

🔷🔶🔷🔶🔷🔶

சமீபத்தில் திரு. அரவிந்தன் நீலகண்டன் முகநூலில் பதிப்பித்த ஒரு இடுகையை சிறிதும் மாற்றாமல் கீழே கொடுத்துள்ளேன். அதில், #அருள் என்னும் புனிதச் சொல்லிற்கு #இஸ்ரேலிய அறிஞர்கள் கொடுத்திருக்கும் துல்லியமான மற்றும் அருமையான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். படித்துப் பயன்பெறுங்கள்.

🔷🔶🔷🔶🔷🔶

ஒவ்வொரு எழுத்திலும் நஞ்சு தோய்த்து வேலை செய்வது என்பதில் கை தேர்ந்தவர்கள் மிசிநரிகள். ஒவ்வொரு முறை நம்மவர்கள் ஜியு போப்பின் திருவாசக மொழி பெயர்ப்பை பாராட்டும் போது எனக்கு உடல் அருவெருப்பால் கூசும். ஜி.யு. போப் மிகத் தெளிவாகவே சைவத்தின் மீது தனக்கு மிகக் கீழ்மையான பரிவே (scanty sympathy) உண்டு என்றும் தான் இந்த மொழி பெயர்ப்பை செய்வதே ஆங்கிலம் படித்த நம்மவர்கள் அவர்களின் மத இலக்கியங்களை படிக்க வகை செய்ய என்று சொன்ன பின்னரும் ஏதோ ஜியு போப் இல்லை என்றால் தமிழும் இல்லை சைவமும் இல்லை என்பது போல போப் சொல்லாதவற்றை எல்லாம் சொல்லி அந்த ஆளைக் குறித்து புளகாங்கிதம் அடையும் அடிமையின் மோகம் என்னை கூசி குறுக வைக்கும் ஒன்று.

நான் மிகவும் மதிக்கும் ஒரு பிரபல சைவ சித்தாந்தி குறித்த ஒரு ஆவணப்படத்தில் அவர் வீட்டில் சைவம் குறித்து ஜி.யு.போப் சிலாகித்து சொன்னது போல ஒரு மேற்கோளை வைத்திருக்கிறார். அதை காட்டிய போது என் மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியது. நம்மவர்கள் ரொம்பவே நல்லவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என நம்பிவிடுகிறார்கள்.

யூதர்களுக்கு கிறிஸ்தவ மதமாற்ற திரிபுகள் குறித்து இரண்டாயிரம் ஆண்டுகள் பரிச்சயம் உண்டு. எனவே அவர்களால் மிகச் சரியாக கிறிஸ்தவ மொழிமாற்ற தகிடுதத்தங்களை கண்டு பிடித்து விட முடியும். நாம் பல நேரங்களில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து போகிற விஷயங்களில் மதமாற்ற விஷம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை அவர்களால் சட்டென கண்டடைந்து விட முடிகிறது.

ஜி.யு.போப் அருள் என்பதை grace என மொழி பெயர்ப்பு செய்கிறார். நமக்கு இது ஒரு விஷயமாக அல்லது ஒரு திட்டமிட்ட திரிபாக தோன்றுவதில்லை. நாமுமே பல நேரங்களில் இதை அடியொற்றி அருளை grace என மொழி பெயர்க்கிறோம். டேவிட் சூல்மனும் டான் காண்டெல்மனும் யூதர்கள். ஜெருசலேம் பல்கலைக்கழகத்தினர். சைவ திருமுறைகளின் மொழி பெயர்ப்புகளில் அருள் என்பது grace என மொழி பெயர்க்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள். இனி அவர்கள் கூறுவதை கேளுங்கள்:

There is an unfortunate tendency to translate this critical term [அருள்], in nearly every context, as ‘grace,’ with its heavy Christian connotations. Arul can, it is true, correspond in Śaiva texts to Sanskrit anugraha, the god’s compassionate giving to his servants. More often, however, it approximates a notion of coming into being or freely becoming present, close, alive…Arul, for the Siddhantins, is śakti - an active and female aspect of Śiva. Not ‘grace’ but ‘emergent presence. It, or she, is dynamic and oriented toward freedom…an experiential process of full, unconstricted potentiality.

என் வருத்தமெல்லாம் நம் ஆதீனங்களிடம்தான். போப் மொழி மாற்றத்தில் மத மாற்ற தகிடுதத்தம் செய்கிறார் என்பதை சொல்ல நமக்கு ஒரு டேவிட் சூல்மன் தேவையில்லை. ஆனால் நேருவிய-திராவிடிய பண்பாட்டு அறிவின்மையின் விளைவாக ஒரு டேவிட் சூல்மன் இதை சொல்ல தேவைப்படுகிறார்.

ஜி.யு. போப் செய்த மொழி பெயர்ப்பு ஒரு மதமாற்ற உக்தி. அது உண்மையில் திருவாசகத்தின் தமிழின் மகோன்னதத்தை ஆன்மிக அனுபவம் சார்ந்த ஒரு மகத்தான இலக்கியத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த ஓரிறை மத கோட்பாட்டுக்குள் குறுக்கும் ஒரு உக்தி எனவே வெறும் கீழ்மையான திரிபு அன்றி வேறில்லை. இந்நிலையில் நம் ஆதீனங்கள் போப்பின் மொழி பெயர்ப்பை சித்தாந்த நிலைபாட்டிலிருந்து அக்கு வேறு ஆணி வேறாக கழற்றிக்காட்டி அதன் பொய்மையையும் சிறுமையையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் நம் நேருவிய தலைமுறைகள் (நம் பெற்றோர், நாம் , நம் இளைஞர்கள்) எந்த பாரம்பரிய உரையையும் பொருளையும் தெரிந்து கொள்ளாமல் ’திருவாசகத்துக்கு நான் ஜி.யு.போப் உரையை வைத்திருக்கிறேன்’ என பெருமை பேசி திரிவதுதான்.

எனவே இதை நம் சைவ ஆதீன கர்த்தர்களிடமும் சித்தாந்த அறிஞர்களிடமும் ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன். போப்பின் மொழி பெயர்ப்பு தமிழை சிறுமைப்படுத்துவது; சைவத்துக்கு புறம்பானது; கீழ்மையான மதமாற்ற நோக்கம் கொண்டது என அவர்கள் அனைவரும் இணைந்து அதிகார பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

🔷🔶🔷🔶🔷🔶

நமது #அருள் என்னும் சொல்லை வடமொழியின் #அனுக்கிரஹம் என்ற சொல்லோடு சமன்படுத்தியிருக்கிறார்கள். இது சரியே. ஆனால், அனுக்கிரஹத்திற்கு பொருள் கூறும் போது "இறைவனின் கருணை கலந்த கொடை" (Compassionate giving) என்று பொருள் கூறியிருக்கிறார்கள். இது தவறு. இது மீண்டும் #Grace என்ற சொல்லிற்கு சமமாக்கியது போலாகும்.

💠 அனு + கிரஹம் = அருகில் + இடம் = அருகிலுள்ள இடம்
💠 அனு + கிர + ஹ = அருகில் + உணர் + இறைவன் = இறையை அருகிலிருந்து உணர்தல்

இப்படி பொருள் கொண்டால் மட்டுமே இரண்டு சொற்களும் சமமாகும்.

அடுத்து, அருளை #சக்தி என்ற வடமொழி சொல்லோடு சமன்படுத்தி, அதற்கு "இறையுணர்வு தோன்றும் / வெளிப்படும் இடம்" (Emergent Presence) என்று பொருள் கூறியிருக்கிறார்கள். அருமை! இதைத் தான் #சந்நிதானம் என்று அழைக்கிறோம். சக்தி என்ற சொல்லின் சரியான பொருள் கலந்திருத்தல். இறை உருவிற்கு போடப்பட்ட மாலையின் நிலை போன்று என்று கூறலாம். மிக மிக மிக மிக அருகில் என்றும் கூறலாம்.

இறுதியாக, அருள் = அ + ரு + ள் = அருகில் + உட்கொண்டு செல்லுதல் + இடத்திலிருந்து = வெளியிலிருந்து என்னை உனதருகே கொண்டு செல்

(அ-வுக்கு பதிலாக இ எனில் மறுத்தல் / மறைத்தல் = இறைவன் மறுத்துவிட்டார் / மறைந்துவிட்டார். அ-வுக்கு பதிலாக ம எனில் நின்று / தங்கிப் போதல் = வெளி உலகிலேயே தங்கிவிடல்.)

ஆக, அருள், அனுக்கிரஹம், சக்தி, சந்நிதானம் எல்லாம் ஒரு பொருளையேத் தருகின்றன - இறைவனுக்கு மிக மிக அருகில். பிறவியெடுக்கும் ஒரு சீவன் அடையக்கூடிய மிக உயர்ந்த நிலையும் இது தான். இதை உணர்ந்த விதத்தில் ஏற்பட்ட தகராறு தான் இன்று பூமியிலுள்ள பல்வேறு மதங்கள்.

அடுத்த முறை, "இறைவா, எனக்கு உன் அருள் தா" என்று வேண்டும் போது, "இறைவா, உனக்கருகில் என்னை வைத்துக் கொள்" அல்லது "இறைவா, உனக்கருகில் நானிருக்க இடம் கொடு" என்று வேண்டுகிறோம் என்பதை உணர வேண்டும். அந்த இடமும் வேறெங்கோ இல்லை. நம்முள் தான் உள்ளது. அந்த இறைவனும் வேறு யாருமல்லர். நாமே தான் (நமது இயல்பு)!

தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும் 
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்

- #அப்பர் #தேவாரம்

🙏 🙏 🙏 🙏 🙏 🙏

posted from Bloggeroid

Monday, November 19, 2018

இணையத்தில் தமிழ் வளர்க்க உதவும் கூகுளின் 4 அருமையான உள்ளீட்டு சாதனங்கள்!!

கடந்த சில வருடங்களில் கூகுள் அதன் #உள்ளீட்டு சாதனங்களை மிகவும் செம்மையாக்கி உள்ளது! 👌 புதிய உள்ளீட்டு முறைகளையும் உருவாக்கியுள்ளது. ஆனால், இவை யாவும் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையவில்லை என்றே கருதுகிறேன். இன்றும் பலர் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை தப்பும் தவறுமாக எழுதுகின்றனர். தமிழில் எழுதுவோரும் பிழைகளை சரி செய்ய முயல்வதில்லை (தமிழில் #உள்ளீடு செய்வது சிரமம் என்று அவர்கள் கருதுவதால்). இத்தகையோருக்கு உதவுவதற்காக இந்த பதிவு.

🔷 தங்களது கைபேசியின் முதன்மை மொழியாக #தமிழ் இருப்பது நல்லது.

🔷 தங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் கீழ்காணும் 2 செயலிகள் தாம்:


இச்செயலிகளை பதிவிறக்கம் செய்த பின், அதன் அமைப்புகளுக்குச் சென்று (Settings - Language & Input) தேவையான மாற்றங்களை செய்து கொள்ளவும்.

இனி, தங்களால் 4 வழிகளில் தமிழை உள்ளிட முடியும். இவற்றைப் பற்றி பார்ப்போம்:

1. தட்டச்சு - இது அனைவரும் அறிந்த முறை. எனவே மற்றவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

2. விரலை நகர்த்தி உள்ளிடுதல் (Swiping) - தட்டச்சை விட சுலபமானது என்றாலும் இம்முறையிலும் தட்டச்சு முறையைப் போன்று நேரம் மற்றும் மிகுந்த பொறுமை தேவைப்படும். மேலும், ஒவ்வொரு சொல்லின் உயிர் & மெய் எழுத்துக்கள் வேகமாக நினைவிலிருந்து வெளிவரவேண்டும் (வேலை - வ+ஏ+ல+ஐ). ஆனால், ஆரம்ப நிலை தமிழ் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கும், பெரியோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும். 👍 (செயல் விளக்கம்)

3. கையெழுத்து உள்ளீடு (Handwriting Input) - இனி வரும் காலங்களில் இம்முறையே அதிகம் பயன்படுத்தப்படும் என்று உறுதியாகக் கூறலாம். அவ்வளவு எளிமையானது. குழந்தைகள் முதல் கை நடுக்கமுள்ள பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எழுத்தாணி (Stylus) இல்லாமல், வெறும் விரலை நகர்த்தியே எழுதலாம். ஆனால், குறியீடுகளை உள்ளிடுவது கடினம். குறியீடுகளுக்கு மேற்சொன்ன விசைப்பலகையை பயன்படுத்தவும். (செயல் விளக்கம்)

4. குரல் உள்ளீடு (Voice Input) - முதன்முதலாக இம்முறையை பயன்படுத்தியவுடன் பெரும்பாலானோருக்கு தோன்றும் உணர்வு - ஆச்சர்யம்!! முகமலர்வு, புன்முறுவல், பெருமிதம் போன்ற உணர்வுகளும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். 😊 இம்முறையினால் சமூக வலைதளங்கள் இன்னமும் பல மடங்கு வளரும். எதிர்காலத்தில் கருவிகள் பெரும்பாலும் இம்முறையில் தான் இயக்கப்பெறும்.

மேற்சொன்ன அனைத்து முறைகளையும் இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தலாம். ஆனால், தமிழ் குரல் உள்ளீட்டிற்கு, தற்போதைக்கு, இணையம் தேவை. அமைதியான சுற்றுபுறச் சூழல் மற்றும் சரியான உச்சரிப்பு இருக்கும் போது 100% சரியாக வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். இம்முறையிலும் அனைத்து குறியீடுகளை உள்ளிடுவது கடினம். (செயல் விளக்கம்)

மேலே பட்டியலிட்ட முறைகளில், கையெழுத்து மற்றும் குரல் உள்ளீட்டு முறைகளுக்காக கூகுள் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். "இனி நம் தமிழன்னை இணையத்தில் வாழ்வார்" என்று சொன்னால் எவ்விதத்திலும் மிகையாகாது. இதை சாத்தியப்படுத்திய கூகுள் நிறுவனத்திற்கு நாம் என்றென்றும் நன்றி கூறவேண்டும். 👏👌👍🙏

கருவிகள் எவ்வளவு மேம்பட்டாலும் அவற்றை பயன்படுத்தும் நாம் மேம்படாவிட்டால், நமது சிந்தனை மேம்படாவிட்டால், எவ்வித மாற்றமும் ஏற்படாது. சூழ்நிலைக்கேற்ற சரியான சொற்களை பயன்படுத்த முயலவேண்டும். வாழ்வில் ஒரு முறையேனும் சொல்லாராய்ச்சியில் ஈடுபடவேண்டும். இதனால் நமது சிந்தனை வளம் பெறும். நமது அன்னையும் நலம் பெறுவார். 🙏

💮💮💮

குறிப்புகள்:

1. இணைப்பு காணொளிகளில் நான் பயன்படுத்தியுள்ள வாசகம் #பகவான் #ஸ்ரீரமணர் அருளியது. உலக வாழ்க்கையிலிருந்து முழுதும் விடுபட முடியாத ஆன்மிக அன்பர்களுக்காக பகவான் அருளிய அருமருந்து. 🌸🙏

2. இந்த இடுகையை பெரும்பாலும் கையெழுத்து உள்ளீட்டு முறையைக் கொண்டும், சிறிதளவு குரல் உள்ளீட்டு முறையைக் கொண்டும், குறியீடுகளை GBoard கொண்டும் உருவாக்கியுள்ளேன்.

🌼🏵🌷🌻🌺🌹🌼

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

நமது தமிழ்தாய் வாழ்த்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல் இது! அந்நிய சக்திகளின் பொரைகளை உண்டு, வளர்ந்து, அப்போது தான் ஆட்சிக்கு வந்திருந்த கருங்காலி போலி திராவிடவியாதிகளின் செஞ்சோற்றுக் கடனால் இப்பாடல் இடம் பெறாமல் போனது!! 😠

ஒரு பொருளிலிருந்து சிறிது எடுத்தால் அப்பொருள் அளவில், எடையில் குறையச் செய்யும். ஆனால், பரம்பொருளிலிருந்து நாம் வாழும் பேரண்டம் தோன்றிய பின்னரும் பரம்பொருள் சிறிதும் குறையவில்லை (இக்கருத்து இடம் பெற்றிருந்து, மக்களின் சிந்தனையைத் தூண்டியிருந்தால், பலருக்கு தொழில் ஓடியிருக்காதே 😛). இது போலத் தான் நம் தமிழன்னையும். அவரிடமிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளுவ மொழிகள் (பிள்ளைகள்) தோன்றிய பின்னரும் அவரின் அழகு சிறிதும் குறையவில்லை என்கிறார் பாடலாசிரியர் பெ. சுந்தரனார். 😊 மேலும், ஆரியம் போல் வழக்கொழிந்து போகாமல் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று வியக்கிறார் ஆசிரியர்.

இப்பாடலில் இடம் பெற்றிருக்க வேண்டிய 2 முக்கிய உண்மைகள்:

💥 "மொழிகளில் பரத்தை" என்னும் பட்டம் பெற்றுள்ள ஆங்கிலமும் 😝 மேம்பட்டது தமிழர்களால் - தமிழால் - தான்!!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இது பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளது. ஆங்கிலத்திலுள்ள சுமார் 13,000 சொற்கள் தமிழிலிருந்து சென்றவை (WW #Skeat, The #Etymological #Dictionary of #English Language).

1706-ல் தரங்கம்பாடியில் டேனிஷ் பரங்கி மதத்தினர் வந்திறங்கினர் (பரங்கி இனம் ஓர் இடத்திற்குச் செல்கிறது என்றால் அது திருடவும், ஏமாற்றவும், கொள்ளையடிக்கவும், ஸ்லீப்பர் செல்களை உருவாக்கவும் தான்). அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களையும், சித்த மருத்துவர்களையும் பணியில் அமர்த்திக் கொண்டனர். ஆயிரக்கணக்கான ஒலைச்சுவடிகளை சேகரித்து, கப்பல் கப்பலாக அவர்களது நாட்டிற்கு அனுப்பிவைத்தனர். இதன் பின்னரே அவர்களது மருத்துவம், அழி(றி)வியல் எல்லாம் வளர ஆரம்பித்தது. (முனைவர். ஆனைவாரி ஆனந்தன், சித்த மருத்துவ வரலாறு)

💥 #ஆரியம் செம்மையானதும் நம்மால் தான்!!

ஆரிய இலக்கண நூலான #பாணிணீயம் அரங்கேற்றப்பட்டது நமது #திருவொற்றியூர் #ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் தான் (முனைவர் மா.கி. ரமணன், ஓங்கு புகழ் ஒற்றியூர்). #சமற்கிருதம் எனில் "சமன் செய்யப்பட்ட / சரி செய்யப்பட்ட மொழி" என்று பொருள். ஆனால், நம் தமிழ் நிறைமொழியும் இறைமொழியுமாகும். 'அ' என்ற உயிரெழுத்திற்கு சிவன் என்றொரு பொருளும் உண்டு. எதிலிருந்து அனைத்தும் தோன்றி நிலைபெறுகிறதோ அதுவே சிவம் எனப்படும். இந்தப் பொருளை அனைத்திற்கும் முதலான 'அ' என்ற உயிரெழுத்திற்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால் தமிழின் அடிப்படையெது? கலாம் என்றால் கலகம் என்று பொருள் கண்டுபிடிக்க உதவும் பகுத்தறிவா? ✊👊👊👊

posted from Bloggeroid

Friday, November 16, 2018

பகவானின் தமிழார்வம்!! 😍

#பகவான் #ஸ்ரீரமண மகரிஷிகளின் பாடல்களுக்கு திருமதி. டி. ஆர். #கனகம்மாள் எழுதிய உரை நூலுக்கு #ஸ்ரீகுஞ்சு #சுவாமிகள் எழுதிய நூன்முகத்தில் பகவானது தமிழார்வத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

🌸🙏


posted from Bloggeroid

Thursday, November 15, 2018

நரகாசுரன் என்பது யார் / என்ன? (தீபாவளி திருநாளின் உண்மை பொருள்)




நரகாசுரன் ஒருவருக்கு பெரும் பாட்டனாராம்! 😛
இன்னொருவருக்கு மாமனிதராம்!! 😜
(1)

அந்நிய & தேசவிரோத சக்திகளின் பொரைகளுக்காக தம் முன்னோர்களின் அரிய செல்வங்களின் மேல் சாணி வீசும் இந்தக் கருங்காலி இனம் இன்னமும் புற்றீசல் போல் பெருகுவது எதனால்?

நமது அறியாமையால் தான்!!

தம்முள் ஆழ்ந்து அரிய பெரும் முத்துக்களை வெளிக்கொணர்ந்த நம் முன்னோர்கள், அவற்றை அப்படியே விட்டுச் சென்றால் தொலைத்து விடுவோம் என்று, கதை என்னும் தங்க உலோகத்தில் அழகுற பதித்து ஆபரணங்களாக விட்டுச் சென்றனர். சுயநலம், பேராசை, உழைப்பின்மை, அநியாயம் போன்ற குணங்களால் அவ்வாபரணங்கள் பொலிவிழந்து, புரூடா என்னும் வகையறாக்களுடன் சேர்க்கப்பட்டுவிட்டன. 😔

🌺🌺🌺

#தீபாவளி என்பது மனிதராயிருந்த கிருஷ்ணர், பகவான் ஸ்ரீகிருஷ்ணராக மாறிய நாள். 🌸🙏 அதாவது. #ஸ்ரீகிருஷ்ணர் மெய்யறிவு பெற்ற (ஞானமடைந்த) நாள். புத்த பகவான் மெய்யறிவு பெற்ற நாளை புத்த பூர்ணிமா என்று கொண்டாடப்படுவது போன்றதுதான் இந்த தீபாவளியும். புத்த பகவானை ஒரு ஞானியாக பார்க்க வைத்தனர். ஆனால், ஸ்ரீகிருஷ்ணரை ஒரு கடவுளாக பார்க்கப் பழக்கிவிட்டனர். மேலும், ஸ்ரீகிருஷ்ணர் பெரும் புகழ் பெற்றவராகத் திகழ்ந்ததால், அவரது வரலாற்றினுள் தத்துவம், ஆன்மிகம், வரலாறு என பலவற்றையும் சேர்த்துவிட்டனர். அவரவர் சொல்ல வந்ததையும் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதாக தள்ளிவிட்டனர். இதனால் தான் இவ்வளவு குழப்பங்களும் & அறியாமையும் நம்மிடம் வேர்விட்டுள்ளன.

சாதாரணமாக, நரகாசூரன் எனில் "நரகம் போன்ற இந்த உடல்" என்று பொருள் கொள்வோம். இது தவறு. நம் உடலோ அல்லது நம் உடலைச் சுற்றி அமைவனவோ நரகமல்ல. அல்லது, "இந்த உடலில் இயங்கும் மனம்" என்று பொருள் கொள்வோம். இதுவும் தவறே. "நானாவித எண்ணங்களின் தொகுப்பே மனம்." என்று அருளியிருக்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர்.

பின்னர், எது நரகாசூரன் எனில் "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணமேயாகும்!! அனைத்து துன்பங்களுக்கும் இதுவே காரணம். மனம் என்கிற எண்ணக் கூட்டத்திற்கு இதுவே அடித்தளம். இவ்வெண்ணம் அழிய - நரகாசூரன் அழிய - மேகங்கள் அகல பகலவன் வெளிப்படுவது போல் மெய்யறிவு (ஞானம்) வெளிப்படும். இச்சமயம் எல்லையில்லா பெருமகிழ்ச்சி (ஆனந்தம்) ஏற்படும். இதுவே தீபாவளி.

இந்த மெய்யறிவைப் போராடிப் பெற்றிருக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதோடு நிற்காமல், "இவ்வளவு தான் மெய்யறிவு" என்று உலகுக்கும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். 👌 ஆகையால் தான் இன்று வரை பெரிதும் புகழப்படுகிறார். அவரது வாழ்வில் நடந்த மற்ற நிகழ்வுகளை விட, அவர் மெய்யறிவு பெற்ற நாளும், அவர் வெளிப்படுத்திய மெய்யறிவின் தன்மையும் இன்று வரை தீபாவளி திருநாள் என்ற வடிவில் நினைவு கூறப்படுகிறது.

🌺🌺🌺

இனி, தீபாவளி கதைக்குள் நுழைவோம் (#காஞ்சி #சங்கராச்சார்யார் #ஸ்ரீசந்திரசேகரேந்திர #சரசுவதி சுவாமிகள் 🙏 சொல்லிய கதையை எடுத்துக் கொண்டுள்ளேன்)

#பன்றி #அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும், பூமித்தாய்க்கும் பிறந்தவர் நரகாசூரன் என்று கதை ஆரம்பிக்கும். பன்றியின் பல் பட்ட இடம் #பிராக்ஜோதிஸ்பூர் - இன்றைய கவுகாத்தி, அஸ்ஸாம். இது ஒரு புவியியல் நிகழ்வைக் குறிக்கும். நம் பாரத துணைக்கண்டம், ஆசிய கண்டத்தோடு மோதியதன் விளைவாக இமயமலை உருவானது. அப்படி முதன்முதலாக மோதி உயர்ந்த பகுதியே இந்த பிராக்ஜோதிஸ்பூர். எத்தனையோ இலட்சம் வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை, நரகாசூரன் கதையில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். (இது நமக்கு பிரமிப்பைத் தராது. 😏 ஏனெனில், யார் தலையிலும் ஆப்பிள் விழவில்லை. 😀 யாரும் பிறந்த மேனியாக குளியல் தொட்டியிலிருந்து எழுந்து "யுரேகா! யுரேகா!!" என்று கத்திக் கொண்டு ஓடவில்லை. 😁)

நம் உடல் உணவிலிருந்து பிறந்தது (ஆரியத்தில் உணவை #ஆகாரம் என்பர். ஆகாரம் - ஆ + காரம். ஆ - பசு - சீவன். காரம் - உடல். ஆகாரம் - சீவனின் உடலாக மாறுவது.). உணவு பூமியிலிருந்து பிறந்தது (தாவரங்கள் அல்லது தாவரங்களை உண்ட விலங்குகள்). ஆக, நம் உடல் பூமியின் அம்சமாகிறது. இந்த உடலை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் உயிர் (சீவன்) பரமனின் (மகாவிஷ்ணுவின்) அம்சமாகிறது. இவ்விரண்டையும் இணைப்பது "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம் (பாலைவன மதங்களில் #முதல் #பாவம் (#First #Sin) என்றழைக்கப்படுவதும் இது தான் (2)). உயிர் உடலுக்குள் குடியேறியவுடன் இந்த எண்ணம் தோன்றிவிடும் (இவ்வெண்ணமே மனதின் ஆணிவேர்). ஆகையால், இவ்வெண்ணம் உயிருக்கும், உடலுக்கும் பிறந்த பிள்ளை என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

உடலின் மூலம் வரும் பல்வேறு இன்பதுன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் சீவன், ஒரு சமயத்தில், அது செய்த நல்வினைகளின் பயனால் தகுந்த மெய்யாசிரியரைப் பெறும் (ஆசிரியர் என்பவர் மனிதராகவோ, சொற்றொடராகவோ, சொல்லாகவோ, குறியீடாகாவோ, நிகழ்வாகவோ, நினைவாகவோ இருக்கலாம்). தான் சிறைபட்டிருப்பதை உணரும். சிறையிலிருந்து விடுபடப் போராடும். போராட ஆற்றல் தேவை. இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சத்தியபாமாவின் துணையோடு நரகாசூரனுடன் போரிட்டார் என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

எவ்வாறு எவ்வளவு துரத்தினாலும் மாலை வெயிலால் ஏற்படும் நம் நிழலை நம்மால் பிடிக்க முடியாதோ, அவ்வாறே எவ்வளவு போரிட்டாலும் சீவனால் "நான் இவ்வுடல்" என்ற எண்ணெத்தை அழிக்க முடியாது. ஒரு சமயத்தில் தன் இயலாமையை உணரவும் செய்யும். அச்சமயம் திருவருள் துணைபுரியும். இதற்கு முன்னர் தான் கேட்டிருந்த / படித்திருந்த தனது மெய்யாசிரியரின் அறிவுரை நினைவுக்கு வரும். மாலை வெயில் நிழலை பிடிக்க தான் செய்ய வேண்டியதெல்லாம் தனது கையை தன் மேல் வைப்பதே என்று உணரும். "நான் இவ்வுடல்" என்ற எண்ணெத்தை அழிக்க தான் செய்ய வேண்டியதெல்லாம் தன் கவன ஆற்றலை தன் மீதே திருப்பி தானாய் இருப்பதே என்பதை உணர்ந்து, அதன் படி செய்து, மெய்யறிவு பெற்று அமைதியுறும் (பாலைவன மதங்கள் இதை #RIP - #Rest #in #Peace என்றழைக்கின்றன (2)). இவ்வாறு ஒரு நினைவால் மனமழிந்து, மெய்யறிவு ஏற்படுவதைத் தான், ஸ்ரீகிருஷ்ணர் (சீவன்) காயமுற்று ஓய்ந்து போக, சத்தியபாமா (நினைவு) நரகாசூரனை வீழ்த்தினார் என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

(இந்த விளக்கம் தீபாவளி கதைக்கு மட்டுமே பொருந்தும். மற்றொரு கதையை இதோடு இணைத்துப் பார்க்கக் கூடாது. (எ.கா.: ஸ்ரீகிருஷ்ணரும், ஸ்ரீபலராமரும் சேர்ந்து கம்சனைக் கொல்லுதல்.) மெய்யறிவு பெறுதல் என்ற நிகழ்வை ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு விதமாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உணர்ந்ததை கதைகளாக, பாடல்களாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும். ஒன்றோடு மற்றொன்றை இணைத்துப் பார்த்துக் குழப்பிக் கொள்ளலாகாது.)

மனமழிந்த பின் நம்மைப் பற்றிய புதிய தெளிவும், உடன் பெரு மகிழ்ச்சியும் வெளிப்படும். இதன் பின்னர் பேரமைதி குடிகொள்ளும். "எல்லாம் எம்பெருமானின் திருநடனம்" என்ற வரியின் உண்மை உணரப்படும். அவ்வளவே. இந்தக் கதையில் வருவது போன்று, நரகாசூரன் தனது தாய் சத்யபாமாவிடம் தனது இறப்பைக் கொண்டாடச் சொல்லி கோரிக்கை விடுத்தது போல எதுவும் நடக்காது. தீயவனும் திருந்துவான்; திருந்தவேண்டும்; அப்படி திருந்த மற்றவர்கள் வாய்ப்பளிக்க வேண்டும்; ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று உலகம் மேம்பட வேண்டி அப்படி எழுதியிருக்கிறார்கள்.

🌺🌺🌺

ஸ்ரீகிருஷ்ணரின் மெய்யறிவு நிகழ்வோடு, நமது #கார்த்திகை தீபத்திருநாளையும் சேர்த்துக் கொண்டனர் வடக்கத்தியர்கள். நமது கார்த்திகை பெருவிழா அவ்வளவு சிறப்பு பெற்றதும், பொருள் பொதிந்ததுமாகும்.

விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக இங்கு வந்து சேர்ந்த நாயக்க மன்னர்களில் புகழ் பெற்றவரான #திருமலை #நாயக்கர் காலத்தில் தான் தமிழகத்தில் தீபாவளி அறிமுகப்படுத்தப்பட்டது.

🌺🌺🌺

தீபாவளியன்று கடைபிடிக்கப்படும் இன்னொரு பாரம்பரியம்: தெரிந்தவரைக் சந்தித்தால், "#கங்கையில் #குளித்துவிட்டீரா?" (#கங்கா #ஸ்நானம் #ஆச்சா ?) என்று கேட்பது.

இதன் பொருள்: மெய்யறிவு பெற்றீரா?

உண்மையான கங்கை நீரில் மூழ்குவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனமழிந்து, மெய்யறிவு பெற்றவுடன், நம்மைப் பற்றிய புதிய தெளிவும், உடன் பெருமகிழ்ச்சியும் வெளிப்படும் என்று பார்த்தோம். இந்த மகிழ்ச்சியின் போது நமது உச்சந்தலையிலுள்ள #பிட்டியூட்டரி #சுரப்பி அபரிமிதமாக சுரக்கும். இந்த நீரே கங்கை நீர். இந்நீர் நம் உடலிலுள்ள மற்ற சுரப்பிகளை நன்றாக இயக்கவைக்கும். அனைத்துச் சுரப்பிகளும் நன்றாக இயங்கினால் உடலியக்கம் சீராகும்; மேம்படும். இதனாலும் ஒரு குதூகலம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். (இவற்றை சிவபெருமான் கண்மூடி தவமிருப்பது போன்ற உருவத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். கண்மூடி தவமிருக்கும் சிவன் - மெய்யறிவில் நிலைபெற்றிருக்கும் மெய்யறிவாளரைக் (ஞானியை) குறிக்கும். எ. கா.: பகவான் ஸ்ரீரமணர். சிவனின் உருவத்தில் இருப்பவை, ஒரு ஞானியிடம் காணப்படும் குணங்களாகும்.)

இவ்வளவு விரிவாக கேட்கவியலாது என்பதாலும், நேரடியாக "மெய்யறிவு பெற்றீரா?" என்று கேட்பது நாகரீகமன்று என்பதாலும், மெய்யறிவு கிடைக்கப் பெற்றவுடன் ஏற்படும் விளைவைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். 👌

🌺🌺🌺

"ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த 
ஞானம் விரைவினில் எய்துவாய்'' - எனத் 
தேனி லினிய குரலிலே - கண்ணன் 
செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை 
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன் 
ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி 
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன் 
ஆட லுலகென நான் கண்டேன்!

மகாகவிஞர் பாரதியார் 🙏

யான் அற்று இயல்வது தேரின் எது அது
தான் நல்தவம் என்றான் உந்தீபற
தானாம் ரமணேசன் உந்தீபற

பகவான் ஸ்ரீரமணர் 🌸🙏

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

🌺🌺🌺

குறிப்புக்கள்:

1. அசுரன் என்றால் மாமனிதன் என்று அரிய பொருள் கண்டுபிடித்த இந்த புண்ணாக்கு கருங்காலிகள், சூரசம்ஹார திருவிழாவோடு தொடர்புடைய சூரனுக்கு என்ன பொருள் சொல்வார்கள்? மகாகுடிகாரன் என்றா? 😂😂

#அசுரன் என்பது அசு (உயிர்) + ர (ஆசை / பற்று) என்று ஆரியத்தில் பிரியும். எனில், உயிரற்ற உலகின் மேல் பற்று வைத்திருக்கின்ற அல்லது மெய்யறிவு பெறாத சீவன்.

#சூரன் என்பது சூ (தந்தை) + ர (ஆசை / பற்று) என்று ஆரியத்தில் பிரியும். எனில், உயிரற்ற உலகின் மேல் பற்று ஏற்படக் காரணமானவை அல்லது பற்றைத் தோற்றுவிப்பவை. எது நம்மை பற்று வைக்கத் தூண்டுகிறது? ஆணவம், கர்வம் என்று பொதுவாக பதில் சொல்வார்கள். சரியான பதில்: "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இந்த ஆணி வேரிலிருந்து தான் அனைத்து மலங்களும் தோன்றி, இதிலேயே நிலை பெற்று, பல்கிப் பெருகுகின்றன.

2. பாலைவன மதங்கள் எல்லாம் நம்மிடம் இருந்துதான் உருவானவை. ஒருவர் வந்து தெரிந்து கொண்டு போனார். இன்னொருவர் இருந்த இடத்தில் பெரிய சிவாலயமே இருந்தது. இவர்களைப் பின்பற்றியவர்கள் மூடர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் அமைந்துவிட்டதால் "சமயங்களாக" (சமயம் - நல்ல வேளை; சமைதல் - பக்குவம் அடைதல்; சமைத்தல் - உண்பதற்கு ஏற்றவாறு மாற்றுதல்) வளராமல் "மதங்களாக" (வெறி) வளர்ந்துவிட்டன. "ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு திருமணத்தை செய்" என்பது "ஆயிரம் பொய்களை சொல்லி ஒரு திருமணத்தை செய்" என்று திரிந்தது போல் நமது பேருண்மைகள் இந்த மதங்களில் உருத்தெரியாமல் கொடூரமாய் திரிந்து போய்விட்டன.

posted from Bloggeroid

Monday, November 12, 2018

சிலைத் திருடர்கள் நிறைத்துள்ள துறையின் கட்டுப்பாட்டில் உள்ள #திருக்கண்ணபுரம் திருக்கோயிலில் பரங்கி மத தேவதைகள் வரையப்பட்டுள்ளன!! 😡



இது யாருடைய ஊழியமாக இருக்கும்? வேறு யாராக இருக்கும்... ஜாதகத்தில் தாலி பாக்கியம் பலமாக இருக்கும் பெண்களாக பார்த்து அடிக்கடி திருமணம் செய்து கொண்டு, தனது ஆயுளை உறுதி செய்துகொண்ட பகுத்தறிவு கருந்துளை காலத்தில் உள்நுழைந்தவைகள் தாம் இந்த சுவிசேஷத்தை செய்திருக்கும்!!! 😠 (இதுவே மாறி நடந்திருந்தால்... இந்து தீவரவாதம், ஆதிக்க சாதி வெறி என்று பலர் கலர்கலராக கூவிக் கொண்டிருப்பர்.)

அடுத்தது என்ன? பெருமாளுக்கு பிணக்குறியீடா? (1)

முதலில் இப்படி வரைவார்கள். பின்னர், இந்த மண்ணில் காலடியே எடுத்து வைக்காத ஒரு பரங்கிப் பன்னாடை இங்கு வந்ததாகக் கதை விடுவார்கள். பின்னர், திருக்கண்ணபுரம் மூலவருக்கு கீழ் சமாதியாகி இருக்கும் மகானுக்கு ஞானம் வழங்கியதே அந்தப் பன்னாடை தான் என்பார்கள்.

இன்று வேண்டுமானால் இந்த தேவதை உருவங்கள் பரங்கியருடையதாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தும் இங்கிருந்து சென்றவை தான். நமது கந்தர்வர்கள், தேவதைகள் தாம் இவ்வாறு உருமாறியுள்ளன. (பரங்கி இனத்திற்கு திருடுவது, ஏமாற்றுவது, ஏய்த்துப் பிழைப்பது, அழிப்பது தவிர வேறு ஏதும் தெரியுமா என்ன?)

காலம் இப்படியே போய்விடாது. பரங்கியன் புகுந்த துறை எதுவானாலும் அது ஆமை புகுந்த வீடு போன்றதுதான். பரங்கியன் கையில் கிடைத்த ஒன்று, குரங்கு கையில் கிடைத்த பூமாலைக்கு சமம். ஆத்மாவை ஆதாம் ஆக்கி, சீவனை ஏவாள் ஆக்கி அவர்கள் நடத்தும் பித்தலாட்டம் ஒரு நாள் முடிவுக்கு வரும்.

#நெற்றி #விழி #கண்மூன்று நித் திரையோ சோணேசா
பற்றுமழு சூலம் பறிபோச்சா-சற்றும்
அபிமான மின்றோ அடியார்கள் எல்லாம்
சபிமாண்டு போவதோ தான்

(#நகித் என்ற காட்டுமிராண்டி மன்னன் செய்த அட்டூழியத்தைக் கேட்டு வெகுண்டு, திரு அண்ணாமலையாரிடம் #குகைநமச்சிவாயர் வைத்த கோரிக்கை பாடல். அன்றிரவே நகித்தின் முதுகில் ராஜபிளவை உண்டாயிற்று. சில நாட்களில் அவனும் அவனது காட்டுமிராண்டிப் படையும் ஊரை விட்டுவிலகின. அவன் விலகியதை ஒரு தீபாவளி விழாவாக திருவண்ணாமலை மக்கள் கொண்டாடியுள்ளனர். நமக்கும் அப்படிப்பட்ட ஒரு தீபாவளியை அந்தக் கேடிலி விரைவில் வழங்குவாராக. 🌸🙏)

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

🏵🌷🌻🌺🌹

1. #குறுக்கை (#சிலுவை) என்பது உயிரற்ற உடலைக் குறிக்கும். இது தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று. குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் ஞானி யேசுவின் உருவம் இறந்த மனதைக் குறிக்கும். இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், நடப்பது எதிர்மாறாக இருக்கும். உயிரற்றதை வணங்குவார்கள். மனதின் அழிவைக் கண்டு அழுவார்கள். எல்லாம் ஞானி யேசுவின் போதாத காலம். தனது இனம் அடிமையாக, முட்டாளாக இருக்கிறதே என்று வருத்தப்பட்டு, அன்று உலகின் உயிர்நாடியாக இருந்த பாரதம் வந்து அத்வைதம், பெளத்தம் கற்றுச் சென்றார். ஆனால், இன்று வரை அவருக்கு அமைந்தது என்னவோ ...

posted from Bloggeroid

Tuesday, October 23, 2018

ஐப்பசி நிறைமதி நாள்! - சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்!! 🌸🙏

ஐப்பசி நிறைமதி நாள்! - சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடக்கும்.



"இந்த அண்டம் முழுவதும் உணவால் ஆனது" என்னும் பேருண்மை வெளிப்படுத்தப்பட்ட நாள்!!

லிங்கம் (அடையாளம்) - மொத்த உலகைக் குறிக்கும்
அன்னம் - உணவு

தாயின் கருப்பையில் முதல் செல் உருவானது முதல் இறுதி மூச்சு வரை, நம் உடலில் செல்கள் உருவாகிக் கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு வளர்சிதை மாற்றம் என்று பெயர்.

இந்த மாற்றம் நமக்கு மட்டும் நடப்பதில்லை. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உடல்களுக்கும் நடக்கின்றது. இறக்கும் செல்கள் என்னவாகின்றன? காற்றிலும், நிலத்திலும், நீரிலும் கலக்கின்றன. பின் என்னவாகிறது?

அவற்றை சில்லுயிரிகள் / நுண்ணுயிரிகள் உண்டு விடுகின்றன. உணவு என்று ஒன்று உள்ளே போனால், கழிவு என்று ஒன்று வெளியே வந்தாகவேண்டும். மேலும், அந்த நுண்ணுயிரிகளுக்கும் வளர்சிதை மாற்றம் நிகழும். அந்த செல்கள் என்னவாகும்? இந்த நுண்ணுயிரிகளின் கழிவையும், இறந்த செல்களையும் உணவாகக் கொள்ள வேறு வகை நுண்ணுயிரிகள் இருக்கும். இப்படி பல விதமான உயிரிகள் (ஜீவராசிகள்) காற்றிலும், நீரிலும், நிலத்திலும் உள்ளன. (முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலான கோடிகள் இந்த நுண்ணுயிரிகள் தாம்!! 😉)

இவற்றை நமது கண்களால் காண இயலாது. ஒரு வேளை, இவற்றை காணும் திறனை இறைவன் நமக்குக் கொடுத்திருந்தால்? 🤔

நம் உள்ளும் வெளியும் கோடான கோடி நுண்ணுயிரிகள் பிறந்தும், இறந்தும், ஒன்றை மற்றொன்று விழுங்கியும், உண்டும், சார்ந்தும் வாழ்வதைக் காணுவோம். (வாந்தி வரலாம். பைத்தியம் பிடிக்கலாம். நெஞ்சும் வெடிக்கலாம். 😂 இதல்லாம் நிகழாதவாறு நம்மை காப்பது இறைவனின் ஐம்பெரும் தொழில்களில் ஒன்றான மறைத்தல் ஆகும். 🙏)

மொத்தத்தில், எங்கெங்கும் உடல்களாக (உணவாக) காண்போம். (ஒன்றின் உடல் இன்னொன்றின் உணவு)

இந்த பேருண்மையை விளக்குவது தான் அன்னாபிஷேகம். ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஓரு உடலை / ஒரு இனத்தைக் குறிக்கும். அனைத்தும் சேர்ந்து உலகைக் குறிக்கும். 👏👌👍

ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஒவ்வொரு விண்மீன் கூட்டமாக (Galaxy) எடுத்துக்கொண்டால், மொத்த லிங்கமும் அண்டத்தைக் குறிக்கும். 👏👏👌👌👍👍

இங்ஙனம், ஒரே உவமையைக் கொண்டு உடலுக்குள்ளேயும், இந்த உலகிலும் மற்றும் மொத்த அண்டத்திலும் நடக்கும் நிகழ்வுகளை நமக்கு உணர்த்திய மகான் எப்பேர்பட்டவராக இருக்கவேண்டும்! அவருக்கு நம் சிரம் தாழ்த்துவோம்!! 🌸🙏

அவர் யாரென்றுத் தெரியவில்லை. ஆனால், அவர் இந்தப் பேருண்மைகளை உணர்ந்த / வெளியிட்ட நாள் இன்று தான் என்று உறுதியாகக் கூற முடியும். மேலும், அவர் ஒரு தமிழர் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும். ஏனெனில் இது தமிழக சிவன் கோயில்களில் மட்டும் நடத்தப்படும் ஒரு விழாவாகும்.

🕉 வாருங்கள், சிவன் கோயிலுக்குச் சென்று வருவோம்.
🌸 அன்னாபிஷேகத்தை கண்குளிர காணுவோம்.
🙏 அந்த ஒப்பனை உணர்த்தும் பேருண்மைகளை உணர்ந்து மனமழிப்போம்.
🔥 எல்லாம் வல்லவனை சிக்கெனப் பிடிப்போம்.

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

🌸🏵🌹🌺💮🌻🌷🌼

💥 நம் மகான் எப்போது இந்தப் பேருண்மைகளை உணர்ந்திருப்பார்? நியூட்டன் தலையில் "ஆப்பிள் விழுந்த" பின்னர் தானே? மெகல்லன் உலகம் உருண்டை என்று "நிருபித்த" பின்னர் தானே? அந்தோனி வான் லீயு வென்ஹோயெக் நுண்ணுயிரிகளை "கண்டுபிடித்த" பின்னர் தானே? 👊💪 😛😜😝😂

💥 அன்னாபிஷேக அலங்காரத்தில் கண், காது, மூக்கு என சேர்ப்பது அண்மை காலத்தில் ஏற்பட்ட அலங்கோலமாகும். 😑

posted from Bloggeroid

Monday, October 22, 2018

மகரிஷி வாய்மொழி: வேலை தடையல்ல. அந்த வேலையைச் "செய்கிறவன் நான்" என்ற எண்ணமே தடை!!



🔥 வேலை தடையல்ல. அந்த வேலையைச் "செய்கிறவன் நான்" என்ற எண்ணமே தடை.

🔥 எந்த வேலையும் உனதல்ல என்ற எண்ணம் எப்போதும் உன் கவனத்திலிருந்தால் அதுவே போதும். இதை நினைவுப்படுத்திக் கொள்ள முதலில் முயற்சி தேவை. பின்னர், இது இயல்பாகவும் இடைவிடாதுமிருக்கும். வேலையும் நடந்து கொண்டிக்கும். உனது மன அமைதிக்கும் குறைவிருக்காது.

🔥 "வேலை செய்வது யார்?" என்று ஆராய்ந்து உன் உண்மை இயல்பை நினைவிற் கொள்; #வேலை தானே நடக்கும்; உன்னைக் கட்டுப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயலவேண்டாம். உன் முயற்சியே தளை.

🔥 ஆத்மாவைக் கவனிப்பதே வேலையை கவனிப்பதாகும்.

-- பகவான் ஸ்ரீரமணர், #மகரிஷி #வாய்மொழி 🌸🙏

எங்கேயோ, எப்போதோ, யாரோ என்று குழப்பாமல் இங்கேயே, இப்போதே, நீயே என்று தெளிவு தருபவை தான் #உபதேசங்கள் (உப - அருகில்). இன்றைய காலத்தில் (இனி வரும் காலங்களிலும்), இதற்குப் பொருத்தமானவை பகவானின் அறிவுரைகள் மட்டுமே.

அகம், புறம் என இரண்டு படகுகளில் ஒரே நேரத்தில் பயணம் செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு (அதாவது, நம்மைப் போன்று நிலைபேற்றை "அடைய" முயலுபவர்களுக்கு 😀), பகவானின் இந்த அறிவுரைகள் படிக்கும் போதே மன ஆறுதல், நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 😍 தெளிவையும் கொடுக்கும். இவற்றைப் பற்றி சிந்திக்கும் முன்னர், நமக்குத் தேவையான அடிப்படை அறிவு: நம்முடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் முதல் அண்டவெளியில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் வரை அனைத்தையும் நடத்துவது இறைவனின் ஆற்றலே (இறைவனும் இறைவனின் ஆற்றலும் வேறுவேறல்ல).

இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விடுவதாலேயே அனைத்து துன்பங்களுக்கும் உள்ளாகிறோம். நம் மனதில் எண்ணங்களைத் தோற்றுவித்து, அதற்கு செயல் வடிவம் கொடுக்க வைத்து, தேவையான மாற்றங்களை நிகழ்த்திக் கொள்வது வரை அனைத்தையும் நடத்துவது இறைவனே. எனில்,

▶ அனைத்து வேலைகளும் யாருடையவை? இறைவனுடையது. நமதல்ல.
▶ அனைத்து வேலைகளைச் செய்வது யார்? இறைவனே. நாமல்ல.
▶ எல்லாம் அவர் செயல் எனில், நம் பணி என்ன? ஆத்மாவைக் கவனிப்பதே. நம் கவன ஆற்றலை (மனதை) நமது தன்மையுணர்வின் (ஆன்மாவின்) மீது வைத்திருப்பதே.

மனதை ஒன்றின் மீது செலுத்திக் கொண்டு, இன்னொரு வேலையை எப்படி செய்ய முடியும் என்ற கேள்வி எழலாம். இதற்கு பகவான் கொடுத்த பதில், "ஒரு நடிகனைப் போல". எந்த வேடம் போட்டுக் கொண்டு நடித்தாலும், தான் ஒரு நடிகன் என்பதை ஒரு நடிகன் மறந்து விடுவதில்லை. இவ்வாறே, எதில் ஈடுபட்டாலும், நமது உண்மையை நாம் மறக்காமல் இருக்க முடியும். மறக்காமல் இருந்தாலே போதும். இது மட்டுமே நமக்கு சாத்தியமும் கூட.

அடுத்து, நாம் செய்யும் வேலைகள் எதிர்வினைகளை உருவாக்காதா? பற்றில் முடியாதா? என பல கேள்விகள் எழலாம். பிறவியிலிருந்தே மெய்யறிவில் திளைத்த #சுக #மகரிஷி 🙏 பிற்காலத்தில் குழந்தைப் பெற்றுக்கொண்டார். இஸ்ரவேலிலிருந்து தப்பி, காஷ்மீரம் வந்து, சாலிவாகன மன்னரின் சபையில் அங்கம் வகித்த #ஞானி #யேசு -வும் 🙏, மன்னரின் அறிவுறுத்தலின் படி, தனது பணிப்பெண் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டார். மகரிஷி #அஷ்டாவக்கிரரின்🙏 வழிகாட்டுதலின் படி மெய்யறிவு பெற்ற மன்னர் #ஜனகர் 🙏 ஆட்சிக்கட்டிலிலே தொடர்ந்து வீற்றிருந்தார். #கொங்கணவச் #சித்தரின் 🙏 (#திருமலைப் #பெருமாள்) வாழ்வில் வரும் #வாசுகி #அம்மையாரும் 🙏, இறைச்சி வியாபாரியும் 🙏 மெய்யறிவு பெற்றிருந்தாலும் இல்லறத்தில் இருந்தவர்கள். இறைச்சித் தொழில், இல்லறம், அரச பதவி, உடலுறவு - பற்றை பெருகச் செய்ய இவற்றை விட வேறென்ன வேண்டும்? எதையும் "நான் செய்கிறேன்" என்ற எண்ணத்துடன் செய்தால் தான் பற்று ஏற்படும். தன்மையுணர்வில் நிற்கும் போது நாம் சாட்சி மாத்திரமே. விளைவுகள் நம்மை பாதிக்காது. இங்ஙனமே இந்த மகான்கள் வாழ்ந்தார்கள்.


இறுதியாக, வேலை என்ற சொல்லைப் பற்றி சற்று பார்ப்போம்.

வேலை ஒலியை விழுங்கியெழ விளங்கி ஓங்கும் வியப்பினதால் (பெரிய புராணம்)

வேலை உலகில் பிறக்கும் வேலை ஒழிந்தோமில்லை (திருவரங்கக்கலம்பகம்)

மேலுள்ள 2 பாடல் வரிகளிலும் வரும் வேலை என்னும் சொல் கடலைக் குறிக்கிறது ("கடல் எழுப்பும் ஒலியை", "கடல் சூழ்ந்த உலகில்"). தேவார மூவர் இச்சொல்லை கடல் என்ற பொருளிலேயே பயன்படுத்தியுள்ளனர். இது தவிர இச்சொல்லுக்கு கானல்நீர், கடற்கரை மற்றும் சில பொருள்களும் உண்டு (இங்கு கடல், கடற்கரை & கானல் நீர் ஆகிய மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளேன்). இந்த மூன்று பொருள்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு - நிலையற்ற தன்மை. கடலின் மேற்பரப்பு சலித்துக் கொண்டேயிருக்கும். கானல் நீர் காட்சி தெளிவாக இல்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும். கடற்கரையின் மேற்பரப்பு மாறிக்கொண்டே இருக்கும். இவற்றிற்கெல்லாம் காரணம் காற்றாகும் (கடற்கரை காற்றாலும் அலைகளாலும் மாறுகின்றது. அலைகள் உருவாவதற்கு காரணமும் காற்றே). இது போன்றே இவ்வுலகிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன (உருவாக்குவது, உருமாற்றுவது & அழிப்பது என அனைத்தும் மாற்றங்களே). இதற்குக் காரணம் காற்று பூதத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரிகளின் மனமாகும். ஆக, வேலை எனில் மாற்றம், மாற்றுவது, மாறுவது என்று பொருள் கொள்ளலாம்.

என்ன மாறுகிறது? ஆற்றல் மாறுகிறது. வே என்ற எழுத்தின் பொருள் வெப்பம் / எரி. இன்று, பரங்கி அழிவியலின் (நமது அறிவியலே அறிவியல். உலகக் கொள்ளையர்களான பரங்கியரது அறிவியல் அழிவியலாகும். ✊👊👊💪) கோட்பாடுகளில் ஒன்று: ஆற்றல் அழியாதது. ஒன்றிலிருந்து இன்னொன்றாக உருமாற்றம் மட்டுமே ஆகும். இது எங்கிருந்து அந்த திருடர்களுக்கு கிடைத்திருக்கும்? நம்மிடமிருந்து தான். இதை அன்றே உணர்ந்ததால் தான், வெப்பத்தை அடிப்படையாகக் கொண்ட வேலை என்ற சொல்லை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். 💪

🌺🌻🏵

நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன் கடன் அடியேனையுந் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே.    

-- அப்பர் பெருமான், தேவாரம் 5.19.9 🌸🙏


ஓர் உயிரி இவ்வுலகில் எங்ஙனம் வாழவேண்டும் என்பதை நம் திருத்தலங்களில் கருவறை முன் நிறுவப்பட்டிருக்கும் #சிவன்காளை வடிவில் வடித்திருப்பர் நம் மூதாதையர். அதை நம் உள்ளம் கவரும் பாடலாக வடித்திருக்கிறார் நாவின் அரசர். 😍

🌺🌻🏵

posted from Bloggeroid

Thursday, October 11, 2018

மஹரிஷி வாய்மொழி: உழைப்பும், தன்னை அறிதலும்



ஒருவன் உழைக்கவேண்டியிருக்கற வரையில் தன்னை அறியும் முயற்சியையும் கைவிடக் கூடாது.

-- பகவான் ஸ்ரீரமணர், #மகரிஷி #வாய்மொழி 🌸🙏

இந்த அறிவுரையும், உலக வாழ்க்கையை விட்டு ஒதுங்க முடியாமலும், ஆன்ம வாழ்க்கையில் முழு மூச்சாக ஈடுபடமுடியாமலும், மெய்யறிவைப் பற்றியத் தெளிவு கிடைக்காமலும் போராடும் அன்பர்களுக்காக பகவான் அருளியது.

🌼🏵🌹🌻🌷🌺🌼

அவர் குறிப்பிடும் "தன்னை அறிதல்" என்பது நான் எனும் நமது தன்மையுணர்வை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதே (நமது கவன ஆற்றலை அத்தன்மையுணர்வில் கொண்டு போய் மீண்டும் மீண்டும் நிறுத்துவது என்றாலும் இதே பொருள் தான்).

"உழைக்கவேண்டியிருக்கற" என்ற சொற்களின் மூலம் பகவான் குறிப்பிடுவது என்னவெனில் "நாம் உழைக்கின்றோம்" என்ற எண்ணம் (தனியிருப்பு) இருக்கும் வரை என்பதையே. (1) தனியிருப்பு அழிந்த பிறகு உழைப்பு என்று எதுவும் கிடையாது. எல்லாம்...

🙏 அரவனின் முடிவில்லாப் பெருமகிழ்ச்சி கூத்துத்தான் (எல்லாம் இறைவனே)

🙏 பிணக்காட்டில் பேயோடு கூத்தன் தெவிட்டாமல் ஆடும் கூத்துத்தான் (இறைவனும் இறைவியும் ஆடும் கூத்து)

🙏 பெருமானின் பேய்த்தொழிலாட்டி நடத்தும் தொழில் தான் (இறைவன் எனும் அரங்கில் இறைவி ஆடும் ஆட்டம்)

(நம் அருளாளர்கள் 🙏 இவ்வண்டத்தின் இயக்கத்தை உணர்ந்த விதங்கள் 😊)

🌸 தானாம் ரமணேசன் அடி போற்றி 🌸

🌼🏵🌹🌻🌷🌺🌼

குறிப்பு:

1. #உழை என்ற சொல் உழு என்ற சொல்லில் இருந்து வருகிறது. உழு எனில் உட்செலுத்து. இன்று, ஏரை நிலத்தினுள் செலுத்துவது என்ற பொருள் கொண்டுள்ளோம். புழு என்பது உட்புகுந்து செல்லும் உயிரியாகும். முழுகு என்பது நீரினுள் உட்புகுதலாகும். நுழை என்பது ஒன்றினுள் செலுத்துவதாகும். மழை என்பது வளிமண்டலம் புகுந்து வரும் நீராகும்.

இவ்வரிசையில், உழை என்பதும் ஒன்றை மற்றொன்றினுள் செலுத்துவதாகவோ, ஒன்று மற்றொன்றினுள் நுழைவதாகவோ இருக்கலாம். ஆனால், சென்னை பல்கலையின் சொல்லகராதி கொடுக்கும் பொருள் "உட்படுத்து". உட்படுத்துதலோ, உட்புகுதலோ, உட்செலுத்துவதோ எதுவாக இருந்தாலும் இரண்டு பொருட்கள் சம்பந்தப்படுகின்றன. ஒன்று நாம். இன்னொன்று உலகம்.

நாம் என்பது நமது மனதை, நமது தனியிருப்பை, குறிக்கும். மனம் முடிவு செய்ததை உடல் செய்வதால், உடலைக் கருவியாக மட்டுமே கருதியுள்ளனர் நம் முன்னோர்கள். அடுத்தது, உலகம். நம் சமயத்தின் சில பிரிவுகளைத் தவிர மற்றவை உலகைக் கொடியது என்றே உருவகப்படுத்துகின்றன. அன்றே இந்நிலை எனில், இன்று? இப்படிப்பட்ட உலகினுள் புகும் போது தகுந்த எச்சரிக்கையுடன் புக வேண்டுமல்லவா? எனவே தான் பகவானின் அறிவுரை முக்கியத்துவம் பெறுகிறது! 👍

உழை எனில் நமது மனதை உலகின் பால் செலுத்துவது அல்லது உலகினுள் புகுத்துவது / நுழைப்பது அல்லது மாய உலகின் விதிகளுக்கு உட்படுத்துவது என்று எடுத்துக் கொள்ளலாம். எனில், உழைப்பு இல்லாத நேரத்தை நம் முன்னோர்கள் என்னவென்று அழைத்தார்கள்? ஓய்வு. ஒய்வு - ஒழிவு - அழிவு - அமைதி. மனமழிந்து கிடைக்கும் அமைதி.

(இவையெல்லாம், நம் அன்னைத் தமிழ் எவ்வளவு தூரம் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் மெய்யறிவு தாகம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதையும் காட்டுகின்றன. 😍)

இப்போது பகவானது அறிவுரையை சற்று மாற்றி வாசிப்போம்: ஒருவன் மனதை உலகின்பால் செலுத்த வேண்டியிருக்கிற வரையில், தனது தன்மையுணர்வை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

posted from Bloggeroid

Tuesday, October 9, 2018

மகரிஷி வாய்மொழி: உண்மையான கடவுள் வணக்கமும், சுகாசனமும்



தன் கடமையைப் புரிவதே உண்மையான கடவுள் வணக்கம். கடவுளிடம் நிற்பதொன்றே ஆசனம்.

- பகவான் ஸ்ரீரமணர், மகரிஷி வாய்மொழி 🌸🙏

"உலக வாழ்க்கையை விட்டொதுங்க முடியவில்லை. ஆன்மிகத்திலும் நிலைபேற்றை அடைய முடியவில்லை." என்று திண்டாடும் அன்பர்களுக்காக பகவான் அருளியது. இரண்டே வரிகளில், புறத்தே எவ்வாறு வாழவேண்டும் என்பதையும், அகத்தே என்ன செய்யவேண்டும் என்பதையும் அவரது பாணியில் இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறார்!! 👌

🌼🏵🌹🌻🌷🌺🌼

நமக்குத் தெரிந்த ஒரு நபரை சந்திக்க நேர்ந்தால், அவர் மீதிருக்கும் மதிப்பு, மரியாதை, அன்பு மற்றும் கலாச்சாரம் போன்ற காரணங்களால் அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறோம். எனில், அனைத்திற்கும் ஆதாரமான கடவுளைக் கண்டால்?

🌿🍁🍀

▶ இந்த அண்டம் சுழல்கிறது. நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ விண்மீன் கூட்டம் சுழல்கிறது. நகரவும் செய்கிறது. நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ நமது விண்மீனமான ஞாயிறு சுழல்கிறது. தனது குடும்பத்துடன் நகரவும் செய்கிறது. நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ நமது பூமித்தாய் சுழலவும், நகரவும் செய்கிறார். நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ மேற்சொன்னவற்றை இயக்கும் அதே ஆற்றல் தான் இந்த இடுகையை எழுதியது. தங்களைப் படிக்கவும் வைக்கிறது. 🤔🤔🤔 இதை மட்டும் ஏற்றுக் கொள்வது கடினம். 😁

நம் வயிற்றில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அங்கே இருக்கும் பொருட்களிலிருந்து பிறந்து, வந்து விழுவதை உண்டு, வாழ்ந்து, மடிந்து போகின்றன. அதனிடம் சென்று, "நீ இப்படிப்பட்ட ஒரு உடம்பில் வாழ்கிறாய்" என்றால் ஏற்றுக் கொள்ளுமா? அவ்வுயிரி போலத் தான் நாமும். இறைவனிடமிருந்து வெளிப்படும் ஆற்றலின் வடிவாகிய இவ்வுலகில் வாழ்ந்தாலும், இவ்வுண்மையை உணர்வதில்லை.

நம்மை பிறவியெடுக்க வைத்து, தினந்தோறும் காலையில் எழுப்பி, பலவித எண்ணங்களை தோன்ற வைத்து, பல காட்சிகளை காண வைத்து, பல செயல்களை செய்ய வைத்து, மீண்டும் உறங்க வைப்பது வரை, பிறவிகளின் இறுதியில் நிலைபேறு வழங்குவது வரை அனைத்தையும் நடத்துவது அந்த இறையாற்றலேயாகும். இவ்வாற்றலும் இறைவனும் வேறுவேறல்லர். (1)

இந்த இறைவனை எவ்வாறு வணங்குவது? நம்மிடம் வரும் பணிகளை, பலன் கருதாமல், செவ்வனே செய்து முடிப்பது தான் அவரை வணங்குவதற்குச் சமம். (2) இதைத் தான், அப்பர் பெருமான், "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று அழகாகப் பாடினார். கடமை என்ற சொல்லிற்கு கடன் என்ற பொருளும் உண்டு. எனில், "என் கடமை பணி செய்து கிடப்பதே" என்று மாற்றிக் கொண்டால், பெருமானும், பகவானும் அறிவுருத்துவது ஒன்றையே!! 👏👌

("செய்து முடிப்பது தான் ..." என்று ஏதோ நம் கையில் இருப்பதைப் போல் எழுதியுள்ளேன். இந்தக் குழப்பமெல்லாம் தெளிவு கிடைக்கும் வரை தொடரும். "ஒரேயொரு முறையேனும் மெய்யறிவை துய்த்தால் மட்டுமே மனமடங்கும்", என்கிறார் பகவான். அதுவரை செய்வினை & செயப்பாட்டு வினை என்று மாறி மாறி பயணிக்க வேண்டியது தான். 😀)

🌿🍁🍀

இறுதியாக, கடவுளிடம் நிற்பது எனில் நமது தனியிருப்புக்கு காரணமான நம் மனதை (கவன ஆற்றலை), நான் எனும் நமது தன்மையுணர்வில் (இறை, சிவம், கடவுள் எல்லாம் இதுவே) கொண்டு போய் திரும்ப திரும்ப நிறுத்தவேண்டும். எதுவரை எனில், நமது தனியிருப்பு அழியும் வரை. நாம் வேறு இறைவன் வேறு அல்ல என்ற தெளிவு ஏற்படும் வரை. இவ்வாறு நிறுத்தி நிலைபெறுவது தான் ஆசனம் - அமருதல் - இளைப்பாருதல் - ஒய்வு - அமைதி - #நிலைபேறு என எல்லாம்.

🌼🏵🌹🌻🌷🌺🌼

எண்ணுரு யாவும் இறையுருவாம் என
எண்ணி வழிபடல் உந்தீபற
ஈச நற் பூசனை இது உந்தீபற

- பகவான் ஸ்ரீரமணர், உபதேச உந்தியார்

(எண்ணுரு - எண் + உரு - மனதில் தோன்றும் எண்ணங்கள் அல்லது புற உலகில் காணும் உருவங்கள் (ஐம்பூதங்கள், பகலவன், திங்கள் மற்றும் உயிர் ஆகிய 8 பொருட்களின் கலவை))

🌸 அருணமாமலை ஈர்த்தணைத்துக் கொண்ட குகேசனடி போற்றி 🌸🙏

(இணைப்புப் படம்: அண்ணாமலையாரின் மேலுள்ள சிவன்காளை போன்ற பாறையமைப்பு)

🌼🏵🌹🌻🌷🌺🌼

குறிப்புகள்:

1. இவ்விடுகையை நான் எழுதினேன் என்று சொல்லலாம். அல்லது, நான் உண்ட உணவு ஆற்றலாக மாறி, மூளையை செயல்பட வைத்து, உருவான சிந்தனையை, கை எழுத்துருவாக்கியது என்றும் சொல்லலாம். 😀 இது போன்றே, "இவ்வண்டமே இறைவன்" என்பதும், "இறைவனிடமிருந்து வெளிப்படும் ஆற்றலால் உருவாகி, இயங்கி வரும் அண்டம்" என்பதும் ஒன்று தான்.

2. "பலன் கருதாமல் செய்தல்", "வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல்" - இவற்றை மிகச் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில், பெரும் இன்னல்களை, அழிவுகளை சந்திக்க நேரிடும்!

தன்னை வைணவத்திற்கு இழுக்க முயன்ற கூட்டத்தை பகவான் திருப்பி அனுப்பியதையும், ஏமாற்ற முயன்ற வேறொருவரை, "உன் கனவில் வந்த அதே கடவுளை எனது கனவிலும் வந்து சொல்லச் சொல். ஏற்றுக் கொள்கிறேன்." என்று முகத்தில் அடித்தாற் போல் பதிலளித்து ஓடவிட்டதையும் நினைவில் கொள்ளவேண்டும். வருவதனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஏற்றுக்கொள்ளச் சொல்லி நமது உள்ளுணர்வு சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில், தவிர்க்கலாம். சாப்பாடும் இறைவனின் படைப்புத்தான். சாக்கடையும் இறைவனின் படைப்புத்தான். இரண்டையும் வேறுபடுத்தி அறியும் அறிவும் இறைவனின் படைப்புத்தான். அறிவை பயன்படுத்தி, ஒதுக்க வேண்டியதை ஒதுக்கி, ஏற்க வேண்டியதை ஏற்றுக் கொள்ளலாம். கடமை என்ற பெயரில் வருவதையெல்லாம் ஒருவன் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தால், பின்னர் எல்லாவற்றையும் கடமை என்ற பெயரில் அவனது தலையில் சுமத்தி விடும் இவ்வுலகம். 😰 எவையெல்லாம் நமது அடிப்படை கடமைகள் என்று உணருகிறோமோ, அவற்றை மட்டும், "நான் செய்கிறேன்" என்ற உணர்வு தோன்றாமல் செய்து கொண்டிருந்தால் போதும்.

நம் சமயத்தின் மிக முக்கியமான தனித்துவமாகிய சகிப்புத்தன்மையும் இங்கிருந்து தான் பிறக்கிறது. இதை வைத்துத் தான் இதுவரையும் நம்மை முட்டாள்களாக்கி வந்துள்ளனர். விடுதலைக்குப் (!?) பின்னர் இந்து-முஸ்லீம் சண்டை உச்சமடைந்திருந்தது. மலபாரில் மாப்ளா என்ற முகம்மதிய காட்டுமிராண்டிப் பிரிவினர், இந்து ஆண்களைக் கொன்று குவித்து விட்டு, இந்துப் பெண்களை ஆடையில்லாமல் ஊர்வலம் போகவைத்தனர்!! 😡😡😡 இதைக் கேள்விப்பட்டு பாரதம் கொதித்த போது, ஒரு நயவஞ்சகன் சொன்னான், "அவர்கள் அவர்களுடைய மத நம்பிக்கையின் பேரில் இதை செய்திருக்கிறார்கள். நாம் நம்முடைய மதம் போதிக்கும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்." (இந்த ரீதியில் இன்னும் மூளைச்சலவை செய்து, காட்டுமிராண்டிகளைக் காப்பாற்றியிருக்கிறான்). 😠 இந்த நயவஞ்சகன் தனது பேத்தி வயதொத்த பெண்பிள்ளைகளுடன் ஆடையில்லாமல் படுத்துக் கொண்டவன். இச்செய்தி வெளிவந்த போது, "தன்னால் தனது ஆண்மையைக் கட்டுப்படுத்த முடிகிறதா என்று தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டதாக" கதை விட்டான்! 😛😜😝

சகிப்புத்தன்மை, (இந்து) மதச்சார்பின்மை போன்றவற்றை நமக்கெதிரான ஆயுதங்களாக உபயோகப் படுத்தப்படுவதை உணர்ந்து கொள்வோம்! நம் சமயம் காப்போம்!! திருவருள் நமக்கு துணைபுரியட்டும்!!! 🙏 (சமயம் என்ற சொல்லிலேயே நமது அடையாளங்கள், திருத்தலங்கள், வாழ்க்கைமுறை என அனைத்தும் அடங்கும்)

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

posted from Bloggeroid

Saturday, October 6, 2018

Favourite Stories of Bhagavaan Shree Ramana Maharshi: King Janakar and Sage Sukar

[Once a questioner asked Bhagavaan, “Can the atyasramis (those beyond all states) own property?” Bhagavaan replied, “There is no restriction for them. They may do what they please. Sukar is said to have married and begotten children.” — #Talk #291, #Talks #with #Maharshi]

Sukar was the only son of #Vyaasar, author of the Brahma Sutras and the Puranaas and master of the Vedas. From his childhood, Sukar had understood through pure intellect and by freedom from distractions that the world is full of delusion. His mind was disturbed when he tried to probe into the source of delusion. He went to his father on Mt. Meru and voiced his doubts. Vyaasar, the very incarnation of Lord Vishnu, addressed Sukar’s misgivings but his son was not satisfied. Understanding his son’s mental state, Vyaasar told him, “Dear son! If you still harbour doubts, go to the king of Videhaa, King Janakar. May you benefit from all that is virtuous!”

Sukar reached the kingdom of Janakar with considerable effort and waited near the king’s private chambers. The servants announced his arrival to the king. Janakar wanted to test the determination of Sukar and thus, the servants did not give him admittance for seven long days. But Sukar maintained his equanimity. Seven days later, the king’s retinue allowed him to have an audience with the king with all the royal courtesies. Beautiful men and women attempted to entertain him with song and dance. Sukar was neither elated by this royal treatment nor was he flustered by the king’s earlier indifference. Janakar was very pleased with Sukar’s immaculate attitude. He offered him the sixteen kinds of hospitality, praised his ancestry and humbly addressed him thus, “It is my great good fortune that you, who are endowed with the knowledge of Brahman, came all the way here, seeking audience with me. Please command me as to what service I can render you”.

Sukar reiterated all that he had told his father and raised the question that was tormenting him, “What is the origin of delusion? How does one overcome it?” Janakar’s response was the same as had been his father’s. So, Sukar explained that he had heard this response before, and it had not resolved his doubts. Janakar then elaborated further, “You are fully detached from all things, are without doubt the very embodiment of Brahman. What your father stated, what I have understood and what you are contemplating, are all the same— the knowledge of the Self. Total detachment is essential for this. You are seeking the source of delusion. And, it has brought you all this way. This very desire is the manifestation of delusion. Attempting to know anything other than the Self is delusion. Such a desire also occurs by the very force of the Self — attempting to know and knowing it. However, in the attempt to quench one’s desire to know, the Self gets lost in the background and one is caught in a vicious whirlpool. Therefore, conquer this desire to know more about delusion and endeavour to attain the state of equanimity once again, for that is your true state.

On hearing this explanation, Sukar became completely silent, was emancipated from all desire and filled with perfect contentment. He now understood the greatness of his father through the renowned Janakar.

கருணாகரமுனி ரமணாரியன் திருவடி போற்றி 🌸🙏

🌺 திருச்சிற்றம்பலம் 🌺


posted from Bloggeroid

Thursday, October 4, 2018

மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் மாறுபட்ட கற்பனைகள்!!

கலையார்வம், மேலான கற்பனைத்திறன், மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கவேண்டும் போன்ற காரணங்களால், பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் எதையாவது செய்து வைக்கிறார்கள். அது "எம்மதமும் சம்மதம்" போன்ற கூமுட்டைத்தனத்தில் போய் முடிந்துவிடுகிறது!! 🙁 (சாப்பாடும் சாக்கடைகளும் எவ்வாறு ஒன்றாகும்? 😠)

இணைப்புப் படத்தில் சிவபெருமானையும் அனுமாரையும் சமமாக்கியிருக்கிறார்கள். சிவபெருமான் மனமழிந்த மெய்ஞானியைக் குறிக்கிறார். அனுமார் மனதைக் குறிக்கிறார். எவ்வாறு மனமும், மனமழிந்து வெளிப்படும் மெய்யறிவும் ஒன்றாகும்? முன்பெல்லாம் இது போன்று மாறுபட்ட படைப்புக்களை உருவாக்குபவர்கள் தங்களது வேலையைத் துவங்கும் முன்னர் அப்பகுதி சமயப் பெரியோர்களை சந்தித்து, அவர்களது கருத்துக்களைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவர்களது படைப்புக்களை மாற்றிக் கொள்வர். இன்று? 😰

சைவத்தில் பெண் தத்துவமாகக் கொள்ளப்படுவது வைணவத்தில் ஆண் தத்துவமாகிவிடும். சைவத்தைச் சார்ந்த மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் பச்சைப்பட்டு உடுத்துவார். வைணவத்தைச் சார்ந்த ஸ்ரீகள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்துவார்.

பச்சை நிறத்தை அனுமாருக்குத் தந்து, அனுமன் சிவாம்சம் உடையவர் என்று கதை விட்டு, சிவதத்துவத்தை அனுமார் அளவிற்கு இறக்க முயற்சி செய்தது எல்லாம் பிற்காலத்தில் தான். சைவர்கள் அறிவை உருவகப்படுத்த பிள்ளையாரை உருவாக்கினார்கள். இம்முயற்சி பெரும் வெற்றி பெறவே, போட்டிக்காக வைணவர்கள் உருவாக்கியது தான் அனுமார். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்துவிட்டார்கள். இதைத் தான், "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற பழமொழி வாயிலாக பதிவு செய்து வைத்தார்கள். 👏👌👍💪

இந்த அடிப்படைச் செய்திகள் எதுவும் தெரிந்து கொள்ளாமல், வெறுமனே இருவரும் சம்மணமிட்டு வடக்கிருக்கிறார்கள் என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இரு தத்துவங்களையும் அருகருகே வைத்துவிட்டார் இந்த படைப்பாளி என்று தோன்றுகிறது. மேலும், பெரும்பாலான மனிதர்களைப் போன்று, இறையுருவங்களை தத்துவங்களாகக் காணாமல் உயிருள்ள உடல்களாகக் காணும் தவற்றையும் செய்திருக்கிறார் என்றும் தோன்றுகிறது. இந்த ஒரு தவறை நாம் செய்யாதிருந்தாலே போதும், உறுதியாக கரையேறி விடுவோம். நமது சமயமும் வலுப்பெற்று விடும். 💪

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

கூகுள்+ பயனர்களுக்கு:

🔥 சிவ உருவத்தைப் பற்றி:

🔥 அனுமார் உருவத்தைப் பற்றி:

முகநூல் பயனர்களுக்கு:

🔥 சிவ உருவத்தைப் பற்றி:

🔥 அனுமார் உருவத்தைப் பற்றி:

🌸🏵🌹🌻🌺🌷🌼

posted from Bloggeroid

Sunday, September 30, 2018

பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் சாத்தான்கள் உள்ளன - போப் பிரான்சிஸ்

"பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் #சாத்தான்கள் உள்ளன. பிஷப்களின் நற்பெயரை கெடுக்க அவர்களுக்குள் இருக்கும் சாத்தான்கள் இப்படி செய்கிறது", என்றார் போப் பிரான்சிஸ்!! (http://m.dinamalar.com/detail.php?id=2102337) 😀

இது போன்றொரு கருத்தை நம் ஆதீனங்கள், ஆச்சார்யார்கள், ஈஷா / ஸ்ரீஸ்ரீ போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியிருந்தால் இந்நேரம் பாரத ஊடகத்துறை, குறிப்பாக சமூக வலைத்தளங்கள், ஓவர்டைம் பார்த்துக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டில் பகுத்தறிவு பகலவன் (1), டார்ச்லைட், தீப்பந்தம், தீக்குச்சி போன்ற உயிரினங்கள் கண்டனம் தெரிவித்திருக்கும். என்ன செய்வது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை! 😛

🌸🏵🌺🌻🌷🌹🌼

நம் சமயத்தில் #மாயை எனப்படுவது தான் ஆப்ரகாமிய மதங்களில் #சாத்தான், #சைத்தான் என்றழைக்கப்படுகிறது. ஆத்மா ஆதாம் ஆனக் கதை போல் தான் இதுவும். "மாயை என்பது இறைவனிடமிருந்து தோன்றும் ஒரு அழகான அருமையான ஆற்றல்" என்று பெண் தத்துவமாக நமது மகான்களால் விளக்கப்பட்டது, மத்திய கிழக்கு ஆசிய பாலைவனப் பகுதியைச் சென்றடைந்த போது "கோரமான, கொடூரமான, இறைவனுக்குச் சமமான ஒரு ஆண் தத்துவமாக" மாறிவிட்டது. 😁 இதற்குக் காரணம் அன்று அங்கிருந்த மக்கள் கூட்டம். ஒரு கூட்டம் தலைமுறை தலைமுறையாக கல்வி அறிவு மறுக்கப்பட்டு அடிமையாக வாழ்ந்து கொண்டிருந்த கூட்டம். இன்னொரு கூட்டம் கலாச்சாரமற்ற காட்டுமிராண்டிக் கூட்டம். இதனால் தான் சாத்தான் என்று பயமுறுத்தியிருக்கிறார்கள். மதுபான ஆறு, மேலாடையற்ற 72 அழகிகள் என்றெல்லாமும் பூ சுற்றி ஆள் சேர்த்திருக்கிறார்கள் (சற்று யோசிக்கத் தெரிந்த காட்டுமிராண்டி கேட்கிறான், "72 அழகிகளை ஒரு ஆண் எப்படி அனுபவிப்பது?". 😀 பதில் சொல்ல வேண்டியவரின் நிலை எப்படி இருந்திருக்கும்? 😲 "எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். எல்லாம் என் போதாதக்காலம்" என்று மனதிற்குள் நொந்து கொண்டிருப்பார். 😂 "ஒவ்வொருவருக்கும் 100 ஆண்களின் பலம் கொடுக்கப்படும்" என்று பதிலளித்திருக்கிறார்.) உடல் தேவைகளுக்கு மேல் சிந்திக்க இயலாதக் கூட்டம். இன்றும் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆகையால் தான் இன்னமும் சாத்தான் scene-ல் இருக்கிறார்.

மேலும், இம்மதங்களின் தோற்றத்திற்கு முன்னர் அப்பகுதியில் மறுபிறவியில் நம்பிக்கை இருந்திருக்கவேண்டும். உடல் தேவைகளை தீர்த்துக் கொள்வதே பெரும் பாடாயிருந்த கூட்டத்திடம், "மனம் திரும்புங்கள்..." என்று சொன்னால் எதிர்விளைவு எப்படி இருந்திருக்கும்? 🤐 இப்படியே விட்டால் ஒரு பயல் தேறமாட்டான் என்று மறுபிறவியை மறுத்து, சாத்தான், சொர்க்கம், நரகம் என்று பயமுறுத்தி இப்பிறவியிலேயே அவர்களைத் தேற்ற முயற்சித்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இங்குள்ள நம் மக்களிடம் இப்பிறவியிலேயே நிலைபேறு பெற்றிடவேண்டும் என்ற வேட்கை வெகுவாக இருந்துள்ளது. 👏 இதன் காரணமாக பலவாறு தங்களை வருத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தேற்றவே நம் மகான்கள் முருக தத்துவத்தை முன்வைத்து, "#யாமிருக்க #பயமேன்" என்று அவர்களைத் தேற்றியிருக்கிறார்கள். (#முருகப் #பெருமான் 🌼🙏 மிக உயர்ந்த மெய்யறிவையும் குறிப்பவர். அடுத்த பிறவியின் ஆரம்பத்தையும் குறிப்பவர். "அடுத்தப் பிறவியிருக்கையில், ஏன் பயப்படுகிறாய்? நம்பிக்கையுடன் முயற்சி செய். இப்போது விட்டதிலிருந்து அடுத்தப் பிறவியில் தொடரலாம்." 👏👏👏👌👍 -- இதில் மன ஆறுதல் மட்டுமில்லை. பிறவிகள் பற்றிய மறைபொருளும் உள்ளது.)

(இது எப்படியுள்ளது எனில்... ஒரு வீட்டில் சிறிதும் படிக்கமாட்டேன் என்கிற குழந்தை. அதைச் சற்றேனும் படிக்கவைக்க அதன் பெற்றோர், "இப்போ படிக்கலன்னா இராத்திரிக்கு சாப்பாடு கிடையாது" என்று பயமுறுத்துகின்றனர். இன்னொரு வீட்டில் அனைத்தையும் இன்றே படித்து முடித்துவிட வேண்டும் என்று உணவு, உறக்கமின்றி தன்னை வருத்திக் கொள்ளும் குழந்தை. இதனைக் காப்பாற்ற இதன் பெற்றோர், "போதும் கண்ணு. ஒடம்பு கெட்டுடும். மீதியை நாளைக்கு பாத்துக்கலாம்" என்று அறிவுருத்துகின்றனர். 💪😍)

கல்வியறிவற்ற மக்களும், காட்டுமிராண்டிகளும் அந்தப் பாலைவனப் பகுதியில் மட்டுமில்லை. நம்மிடமும் இருந்தனர். ஆனால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பெரியோர்கள் இங்கிருந்தனர். எல்லோரையும் ஆட்டுமந்தை போல் ஒரே வழியில் அழைத்துச் செல்ல இயலாது என்பதையும், எல்லோரையும் ஒரே ஆசிரியர் வழிநடத்திச் செல்லவியலாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.

இமயச்சாரல் முழுவதையும் தன் தலையால் கடந்து கைலாய மலை (2) வந்தடைந்த #பேயாரை "அன்னையே" என்றழைத்து மரியாதை செய்த மகானும் (சிவனும்) 🌸🙏, பேயாருக்கு உகந்த ஆசிரியன் தானல்ல என்பதை உணர்ந்து, திருவாலங்காட்டில் இருந்த மகானிடம் (சிவனிடம்) 🌸🙏 அனுப்பி வைத்தார்.

🔯 நுண்ணிய அறிவாற்றலும், நல்ல மனப்பக்குவமும் கொண்டவரை #சும்மா #இரு என்றனர். சும்மா என்பதற்கு "தன்னைக் கொல்லுதல்" என்று விளக்கம் கொடுக்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர். 🌸🙏 எனில், தான் இவ்வுடல் என்னும் தவறான எண்ணத்தைக் கைவிடுதலாகும்.

🔯 எல்லாம் தெரிந்திருந்தும் கருப்பியிடம் சிக்கிக் கொள்பவரை (#கருப்பி - #காளி - எண்ணம், உடல், உலகம்... உணர்வற்ற அனைத்தும்), சித்த நேரம் சிவனேன்னு கெடக்க வேண்டியது தானே என்று கடிந்து கொண்டு வழிக்குக் கொண்டுவந்தனர். 😀  சிவநிலையைப் பற்றியும், அதில் நிலைபெறுவது பற்றியும் தெரிந்திருந்தால் மட்டுமே இவ்வாறு கடிந்து கொண்டிருக்க முடியும். இவ்வழக்கம் அனைத்துக் குடி மக்களிடமும் இருந்த ஒன்று. எனில், தமிழ் சமுதாயம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். 😍 ஆன்மிகமும் அன்றாட வாழ்க்கையும் எவ்வளவு தூரம் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். "தமிழும் சைவமும் ஒன்று", "சைவமே தமிழரின் சமயம்" ஆகிய கூற்றுகளுக்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. 👏👌💪 (3)

🔯 எதுவமே வேண்டாமென்று அனைத்தையும் துறந்தவர்கள் கூட அவரவர் சுற்றுபுறச் சூழலில் சிக்கிக் கொள்வதுண்டு. இவர்களால் வேலை செய்யாமல் இருக்க முடியாது. அதே நேரம் தங்களைத் தவிர வேறு அந்நிய உயிர்களோடு பழக முடியாது. அப்படிப் பழகினால் அது துன்பத்தில், பற்றில் போய் முடியும். இது போன்றவரை ஓரிடத்தில் தங்காமல், பொருள் சேர்க்காமல், எதிலும் பற்று வைக்காமல் கோயில் கோயிலாக சென்று கொண்டே இருக்கச் சொன்னார்கள். அதாவது பரதேசிகளாய் வாழச் சொன்னார்கள்.

அப்படி நடைபயணம் செல்லும் போது, வேறெதிலும் கவனத்தைச் செலுத்தாமல் தன் மீதே (#தன்மையுணர்வு, #இறையுணர்வின், #சிவ #உணர்வு என்பதெல்லாம் இதுவே) கவனத்தை வைத்திருக்கச் சொன்னார்கள். இதை #பயண #நிலைபேறு (#சஞ்சார #சமாதி) என்று அழைத்தார்கள் (#எனது #நினைவுகள், #குஞ்சு #சுவாமிகள், ஸ்ரீரமணாச்ரம வெளியீடு). (நடை பயணமாக திருத்தல உலா செல்லும் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உத்தி இது. இதோடு சென்ற இடுகையில் எழுதப்பட்டிருந்த மலை / நதி வலம் உத்தியையும் படித்துப் பார்க்கவும்.)

🔯 சிலரால் ஊரை விட்டுப் பிரிந்து செல்லவும் முடியாது. சேர்ந்து வாழவும் முடியாது. வேலை செய்யாமலும் இருக்க முடியாது. இப்படிப்பட்டவர்களை குளம் வெட்டச் சொன்னார்கள், ஏரி கட்டச் சொன்னார்கள், மரங்களை வெட்டிப் பாதையைச் சீர் செய்யச் சொன்னார்கள் (இதிலிருந்து தோன்றியது தான் "அவன் அப்படி என்ன #வெட்டி #முறிச்சான்?" என்று கேட்கும் வழக்கம் - காஞ்சி ஆச்சார்யர் #ஸ்ரீசந்திரசேகரேந்திர #சரசுவதி #சுவாமிகள், #தெய்வத்தின் #குரல் - பாகம் 1). இவற்றையெல்லாம் தவமாய்ச் செய்யச் சொன்னார்கள். ("வேலை செய்வது எவ்வாறு தவமியற்றுதலாகும்?" என்ற ஐயம் எழலாம். "வேலைத் தடையல்ல. அதைச் செய்கின்றவன் நான் என்ற எண்ணமே தடை" என்று விளக்கியிருக்கிறார் பகவான் ஸ்ரீரமணர். 👌) சமணர்களும், பெளத்தர்களும் குடைவரைக் கோயில்களை உருவாக்கியதும், சிற்பங்களை செதுக்கியதும், ஓவியங்களை வரைந்ததும் இந்த தவ அடிப்படையில் தான்.

🔯 இறுதியாக, உடல் தேவைகளைத் தாண்டி சிந்திக்கத் தெரியாத மக்களும் ஒரு சமயத்தில் கரையேற வேண்டும் என்ற நோக்கத்தில், உடலை வைத்தே ஒரு வழியைக் காட்டினார்கள்: #கிடா #வெட்டி #பொங்கல் #வை!! 😯 இவர்களிடம் போய், "மனதை அழி. வெளிப்படும் பெருமகிழ்ச்சியில் திளைத்திடு." என்று சொன்னால், "நம்ம சோலிய லவட்டிட்டு போக வந்துருக்கான் டோய்" என்று சொன்னவரை ஐயத்துடன் பார்ப்பார்கள். 😁 எனவே, #கிடா #வெட்டு என்றனர். கிடா முருகப் பெருமானின் வாகனங்களுள் ஒன்று. மனதைக் குறிக்கும். கிடா வெட்டு. மனதை அழி. பொங்கல் வை. வைத்து உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்ச்சியடை. மனம் அழிந்த பின் வெளிப்படும் மெய்யறிவைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி, நீயும் பெரு மகிழ்ச்சியில் திளைத்திரு.

#குங்ஃபு #பாண்டா என்ற ஹாலிவுட் படத்தில் வரும் பாண்டா கதாபாத்திரம் உணவுப்பிரியராக இருக்கும். இதை உணர்ந்த அதன் ஆசிரியர் ஷிஃபு, உணவைக் கொண்டே தற்காப்புக் கலையை பயில வைப்பார். (நம்மூரின் "ஆடுற மாட்ட... பாடுற மாட்ட..." என்ற பழமொழியின் காட்சிவடிவம் தானிது.) இது போன்றது தான் இந்தக் #கிடாவெட்டு வழியும். உடலளவே சிந்தனை உள்ளவர்களுக்கு உடலை வைத்தே மெய்யறிவு. என்றாவது ஒரு நாள் இவர்களில் யாராவது ஒருவரின் உள்ளுணர்வு விழித்தெழும். அவர் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுவார் என்ற நம்பிக்கையில் இப்படி அறிவுருத்தியிருக்கிறார்கள்.

இப்படி எல்லா வகை மனிதர்களும் கரையேற வழி வகுத்திருந்தனர். அவ்வழிகளில் பயணம் செய்வோருக்கு ஏற்ற கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தனர். அவ்வளவும் கடந்த 300 வருடங்களில் அழிந்து போயிற்று. 1000 வருடங்களாக முகம்மதியக் காட்டுமிராண்டிகள் சூறையாடி, கொன்று குவித்து, சிதைத்தப் பின்னரும் அக்கட்டமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தேசக் கொள்ளிகள் (பரங்கியர்கள்) வந்திறங்கின. 😠அனைத்தும் அழியத் தொடங்கின. அவை மிச்சம் வைத்ததை அவைகளின் கால்நக்கிகள் (மாமா வேலை பார்த்தவன் முதல் நவீன மாலிக்காஃபூர் வரை) முடித்துவிட்டன. 😡 அப்படிப்பட்ட கட்டமைப்புக்கள் இருந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. மெய்யறிவை பாட்டிலில் அடைத்து, FSSAI முத்திரைக் குத்தி, "நீலம் குட்டிச் சாத்தானுக்கு. சிவப்பு பெரிய சாத்தானுக்கு." என்று ஒரு 45 வயது வடபாரத 'இளங்கன்னி'யை வைத்து விளம்பரம் வெளியிடுவது தான் பாக்கி!! ✊👊👊👊👊

🌸🏵🌺🌻🌷🌹🌼

குறிப்புகள்:

1. சமீபத்தில் ப்ளக் பிடுங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. உயிர்த்தெழுந்தாலும் எழும். கொள்ளையடிப்பதில் இவனே என்றும் தலைசிறந்தவனாக இருக்க வேண்டும் என்பது இவனது ஆசை. ஆனால், இப்போதிருப்பவன் மிஞ்சிவிட்டான். ஆகையால், அதை முறியடிக்க, மீண்டும் இவனது கொடியை நாட்ட வந்தாலும் வருவான்.

2. #திருக்கைலாயம் 🌸🙏😍 - பல மகான்களின் சமாதித் தலம். எண்ணற்றவர்கள் வடக்கிருந்த (தவமிருந்த) தலம். சமணர்களின் ரிஷபதேவர் சமாதியானத் தலம். நம் சமயப் பேருண்மைகளில் சில உணரப்பட்டத் தலம். அப்பர் பெருமான் கனகத்திரளாய் கண்ட தலம். 🌸🙏

3. இந்த சொற்றொடரை மற்ற மதத்தினர் காப்பியடிக்கக் கூட வாய்ப்பில்லை. அப்படிக் காப்பியடித்தால்...

💥 "சித்த நேரம் பெருமாளேன்னு கெடக்க வேண்டியது தானே" - இப்படிக் கேட்டால் அன்றிருந்தவர்கள் பதில் கேள்வியாக, "எந்த version பெருமாளா கெடக்க சொல்லுற?" என்று திருப்பிக் கேட்டிருப்பர். 😁 எனெனில், பெண் தெய்வ வழிபாட்டை நாமப்பேர்வழிகள் takeover செய்தபோது பெருமாளின் பொருள் "உயிரற்றது". பின்னர், கேலி கிண்டல் கிளம்பியதற்கு ஏற்றவாறு பல versionகள் வெளிவந்தன. (பரங்கியர்கள் மதமும் இவ்வழியில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது) திருவனந்தபுரத்திலுள்ள அகத்திய மாமுனிவர் 🌸🙏 சமாதியின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அடையாளச் சின்னமான திருஅனந்தபத்மநாப உடையார் தான் கடைசி version. இந்த version வெளிவருவதற்குள் பெருமாள் உயிரற்றதிலிருந்து உயிர் என்று upgrade ஆகி, இங்கே "அதற்கும் மேலாகிவிட்டார்". 😛😜😝

💥 "சித்த நேரம் யேசுவேன்னு, பரிசுத்த ஆவியேன்னு, பரமபிதாவேன்னு..." - இந்த வரியை முடிப்பதற்குள்ளாகவே ஐரோப்பிய தலைமையகத்திலேயே சிவப்பு விளக்கு எரிய ஆரம்பித்துவிடும். 😂 ஒவ்வொரு சர்ச்சியனின் கடமை தசமபாகம் செலுத்துவது மட்டும் தான். 🤑 கிறித்துவனாக மாறுவதல்ல. அவனவன் கிறித்துவனாக (ஞானியாக / யேசுவாக) மாறிவிட்டால் 153 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் நிலை என்னாவது? 😱

நமது சமயத்திலும் இதே நிலைதான். நமது சமயம் இப்படிப்பட்டது, அப்படிப்பட்டது என்று பீற்றிக் கொள்வதற்கு மட்டுமே. ஒருவரும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளின் உண்மைப் பொருளை உணர்ந்து சிவமாகி விடக்கூடாது. LICயின் விளம்பர வாசகமான "வாழும் போதும். வாழ்க்கைக்குப் பிறகும்." என்பதைப் போல் நாமிருக்கும் வரை சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், பாரம்பரியம், கடமை, வழக்கு, பொறுப்பு என பல பொருளாதார பூதங்களுக்கு தீனியிட்டுவிட்டு, நாம் சென்ற பிறகு நமது பரம்பரை தொடர்ந்து தீனியிடுகிறதா என்று வேறு மேலிருந்து கண்காணிக்க வேண்டும்!! 😔😠

💥 "சித்த நேரம் வெள்ளை சுவரேன்னு, அல்..." - இதற்குள்ளாகவே குண்டு வெடித்துவிடும்! 💥💥💥 மேட்டர் ஓவர்!! 😂😂😂