Saturday, October 30, 2021

விளம்பரத்துறையிலும் கோலோச்சும் அந்நிய மதத்தினர்!!

அண்மைக்காலத்தில் என் கண்ணில் பட்ட சில விளம்பரங்கள்:

1. டாடா பஞ்ச்


சிற்றுந்தின் பின்புறம் மூன்று இன, மத & சமயச் சின்னங்களை வைத்துள்ளனர்.

முதலில், டெல்லியிலுள்ள "பாரதத்தின் வாயில்". முதல் உலகப்போரில் இறந்த பாரத வீரர்களை இச்சின்னம் குறித்தாலும், மறைமுகமாக, உலகக் கொல்லிகளான பரங்கியரையும், அவர்களது மதத்தையும் குறிக்கும்.

அடுத்து, டெல்லியிலுள்ள குதுப்மினாரும், ஜாமா தொழுகையில்லத்தின் முகப்பும். இவை, நம் மீது படையெடுத்து வந்து, நம்மை நாசம் செய்த முகம்மதியரையும், அவர்களது மதத்தையும் குறிக்கும்.

இறுதியாக, வட பாரத முறைப்படி கட்டப்பட்ட ஒரு இந்துசமயக் கோயில்.

நம்மை சீரழித்தவர்களுக்கு, கொன்று குவித்தவர்களுக்கு முதலிடங்கள்! நமக்கு கடைசியிடம்!! எண்ணிக்கையில், நமக்கு ஒன்று அவர்களுக்கு மூன்று!!! 

நமக்கென்று வரும்போது தனித்துவமில்லாத, புகழ் பெறாத அடையாளம். அவர்களுக்கென்று வரும்போது புகழ் பெற்ற, எல்லோரும் அறிந்த, தனித்துவமான அடையாளங்கள்.

2. டிவிஎஸ் ஜூபிடர் 125


இந்த காணொளி முமுக்க, எந்தவித மத & சமயச் சின்னங்களும் தரிக்காத மனிதர்களைக் காட்டியவாறு வந்து, இடையில் ஒரு விநாடி மட்டும் ஒரு முகம்மதியப் பெண் குழந்தையைக் காட்டுவார்கள்.

ஒன்று அனைத்தையும் காட்டியிருக்கவேண்டும். அல்லது, எதையும் காட்டியிருக்கக்கூடாது.

(முகம்மதியத்தைப் பொறுத்தவரை இரண்டே குறியீடுகள்தான்: ஆண்குறி & பெண்குறி. முழுவதும் கருப்பு ஆடை அணிந்த பெண் பெண்குறிக்கு சமம். உடலை கருப்பு ஆடையாலும், தலையை மட்டும் வெள்ளை / வண்ண ஆடையால் மறைத்திருக்கும் பெண் "புணரப்பட்ட பெண்குறிக்கு" சமம்.)

3. ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் - தயாரிப்பு


இந்த காணொளியின் முகப்பில் பெளத்த, கிறித்தவ, முகம்மதிய அடையாளங்களைக் காட்டிவிட்டு, பின்னர், யோகம் & இந்து சமய அடையாளத்தைக் காட்டுவர்.

டாடா பஞ்ச் காணொளியில் பயன்படுத்திய உத்தியை இங்கேயும் பயன்படுத்தியிருப்பர்: அழுக்கான, மனதில் சட்டென்று பதியாத இந்து சமய அடையாளம்! புகழ் பெற்ற, தூய்மையாகவுள்ள, மனதில் சட்டென்று பதியக்கூடிய இருள் மத அடையாளங்கள்!!


இவற்றுடன், அண்மையில், வெளிவந்த ஃவேப் இந்தியா & டாபர் நிறுவனங்களின் விளம்பரங்களையும், சென்ற ஆண்டு வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தனிஷ்க் விளம்பரத்தையும் (முகம்மதிய வீட்டிற்குள் ஓர் இந்துப்பெண் மருமகளாக உள்நுழைவார்) நினைவில் கொள்ளவேண்டும்.

கல்வி, ஊடகம், சின்ன & பெரிய திரைத்துறைகளை அடுத்து விளம்பரத்துறையையும் நயவஞ்சக & நாசகார மதத்தினர் கைப்பற்றியுள்ளனர் என்பதை மேற்கண்ட விளம்பரங்கள் காட்டுகின்றன.

இதற்கு என்ன பதிலடி கொடுக்கப் போகிறோம்? அவர்களது கட்டமைப்பை எவ்வாறு தகர்க்கப் போகிறோம்? அவர்கள் கைப்பற்றியிருக்கும் துறைகளை எப்போது மீட்கப் போகிறோம்? ... இந்த வகையில் இந்து சமயத்தின் அடையாளமாக தங்களை முன்னிறுத்திக் கொள்வோர் சிந்திப்பதாகத் தெரியவில்லை. 

நியூயார்க் டைம்ஸ், இந்திரலோக டைம்ஸ், வைகுண்டம் டைம்ஸ் என எல்லா டைம்ஸிலும் தவரிஷியைப் புகழ்ந்தாக ஃபோட்டோஷாப் செய்வது, வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்நாப்சாட் போன்ற செயலிகள் வழியாக செயல்படும் இந்து குழுக்களில் தவரிஷியின் திருப்புகழைப் பரப்பி, சற்று மறை கழன்ற கேசுகளை தற்கொலைப் படையினராக மாற்றுவது போன்ற கைங்கரியங்களில்தான் முனைப்பாக இருப்பது போல் தெரிகிறது.

பகவான் திரு ரமணர் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு முருகனார் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு ராமச்சந்திர மகராஜ் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட சொற்கள் மெய்யாகும் காலம் வரும். கோன்முறை அரசுகள் தோன்றும். இருள் விலகும். ஒளி வெளிப்படும். என்றும் வாய்மையே நிலைத்து நிற்கும். 💪🏽

வில்லர் வாழ்வு குன்றி ஓய
வீர வாளும் மாயவே
வெல்லுஞானம் விஞ்சி யோர்செய்
மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் வனைத்தும் வேறு
சூழ நன்மை யுந்தர
வல்ல நூல் கெடாது காப்பள்
வாழி அன்னை வாழியே!

-- மகாகவிஞர் 🌷🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, October 27, 2021

அந்தணர் & பிராமணர்: ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல!!




பெரும்பாலான தொன்ம வரலாறுகளில், செவிவழிச் செய்திகளில், தல புருடாக்களில் இறைவன் "முதிய அந்தணராக வந்தார்" என்ற வரியைக் காண முடியும். இது பற்றி ஓர் அன்பர் பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️ வருத்தப்பட்டார் (அதாவது, "வேறு சாதியினர் வடிவில் இறைவன் தோன்றமாட்டாரா?" என்பது அந்த அன்பர் கேட்க வந்த கேள்வி). அதற்கு பகவான், ஆறுதலாக, அக்கதைகளில் பதிவாகியிருக்கும் செய்தியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்.

அந்தணர் என்றதும் ஒரு குறிப்பிட்ட ஒப்பனை / இனம் நம் மனதில் தோன்றுவது போல் நமக்கு கொம்பு சீவி வைத்துள்ளனர். இது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த கைங்கர்யமாகும்.

அந்தணன் என்ற சொல்லுக்கு அறவோன், தூயவன், பிராமணன், எவ்வுயிரையும் தன்னுயிர் போல் காண்பவன் என்று பல பொருட்கள் உண்டு. இவையனைத்துமே சிவபெருமானைக் குறிக்கின்றன.

🔹அறவோன் எனில் அற வடிவினன் அல்லது அறத்தினின்று வழுவாதவன். அறம் எனில் நீதி. நீதிக்கு இறைவன் என்றொரு பொருள் உண்டு. காரைக்கால் அம்மையார் 🌺🙏🏽🙇🏽‍♂️ இறைவனை "அறவா" என்றழைக்கிறார்.

🔹தூயவன் எனில் மாசு சிறிதும் அற்றவன் என்று பொருள். மாசு என்பதற்கு மாயை, இருள், கருமை, விபரீதம் என்று பல பொருட்கள் உள்ளன. இவையனைத்துமே உடல் அல்லாத நம்மை, நாம் உடலாகக் கருதும் தன்மையைக் குறிக்கும். இந்த மயக்கம் தீர்ந்தவரே தூயவன். சிவபெருமானின் பெயர்களில் ஒன்று மாசிலாமணி (மாசு இல்லா மணி).

🔹பிராமணன் எனில் பிரம்மமாய் இருப்பவன். பிரம்மம் எனில் என்றும் மாறாதது. சிவதத்துவம் மாறாததை / அசைவற்றதைக் குறிக்கும். சக்தி / பெருமாள் தத்துவம் மாறுவதை / அசைவதைக் குறிக்கும்.

🔹சிவபெருமான் எனில் சிவநிலையில் உள்ள பெருமான். காண்பானிலிருந்து காட்சி வேறுபடாமலிருக்கும் நிலையே சிவநிலை. மொத்த அண்டமும் தானாக தோன்றும் இந்த நிலையில் பிறவுயிர்கள் மட்டும் பிரிந்து தனியாக தோன்றுமா? எவ்வுயிரையும் தன்னுயிராக உணர சிவநிலையில் உள்ள பெருமான்களால் மட்டுமே முடியும். இவர்களே உண்மையான அந்தணர்கள்.

எனில், சிவபெருமான் அந்தணனாகத்தான் தோன்ற முடியும். பிறவுயிர்களை தன்னிலிருந்து வேறாகக் காண்பவர் சிவபெருமான் அல்லர். ஆகையால், சிவபெருமான், அந்தணன் & பிராமணன் ஆகிய சொற்கள் ஒரு பொருட் பன்மொழியாகும். சிவபெருமானை - சிவநிலையில் இருப்போரை - குறிக்கும் சொற்களாகும். ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, October 26, 2021

சோற்று முழுக்கு / ஒப்பனை & சோறு கண்ட இடம் சொர்க்கம்


காலகாலமாக "சோற்று முழுக்கு" (அன்னாபிஷேகம்) என்றிருந்த விழா கடந்த 25+ ஆண்டுகளாக "சோற்று ஒப்பனை"-ஆக (அன்ன அலங்காரம்) மாறிவிட்டது!

சோற்று முழுக்கின் பொருள்: மொத்த உலகமும் உணவுமயம்!!

இந்த ஒப்பனையைக் கண்டால் மேலுலகம் கிட்டும் (சோறு கண்ட இடம் சொர்க்கம்) என்று எழுதுகிறார்கள். இது தவறு. இதை கண்டால் - அதாவது, மொத்த உலகமும் உணவுமயம் என்பதை உணர்ந்தால் - நமது ஆணவமடங்கும்!!

எனில், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற சொற்றொடரின் உண்மையான பொருளென்ன?

🔹 சோறு என்ற தமிழ் சொல்லுக்கு விடுதலை (ஆரியத்தில், முத்தி) என்றொரு பொருளுண்டு. நம்மை பற்றிய சரியான அறிவைப் பெறுதலே விடுதலையாகும்.

🔹 கண்ட - காணுதல் - உணர்தல்.

🔹 இடம் - நிலை

🔹 சொர்க்கம் - மேலுலகம் - தேவைகளற்ற கவலைகளற்ற மகிழ்ச்சியான நிலை.

நம்மை அழியும் உடலெனத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நாம் அழிவற்ற பரம்பொருள் என்பதை உணர்ந்து, அந்த மெய்யறிவில் நிலைபெறுதலே சொர்க்கமாகும்.

oOOo

மேலும் விரிவாக தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்காணும் இணையப் பக்கங்களைக் காணவும்:

1. சோற்று முழுக்கு: http://samicheenan.blogspot.com/2018/10/blog-post_23.html?m=1

2. சோற்று முழுக்கு & சோறு கண்ட இடம் சொர்க்கம்: http://samicheenan.blogspot.com/2020/11/blog-post.html?m=1

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்!!

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, October 20, 2021

தில்லை திருத்தலத்திற்குள் கோவிந்தராசர் சிலை நுழைந்த வரலாறு!!



("The Aravidu dynasty" (வரலாற்று ஆய்வு நூல்) மற்றும் திரு கா வெள்ளைவாரணரின் "தில்லை பெருங்கோயில்" ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை.)

இரத்தப்படுக்கை

-- சிவதீபன் (9585756797)

தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங்கூட மின்னிக் கொண்டிருந்தன. இன்று நிகழவிருக்கும் காட்சிகளைக் காண விரும்பாத கதிரவன், தனது கண்களை மூடிகொண்டே கிழக்கே அடி எடுத்து வைத்துள்ளான் போலும்! பொழுது புலராத அந்த வேளையில் தீட்சிதர்கள் யாவரும் கீழசன்னதி வாசலில் கூடிநின்று பரபரப்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அதிகாலை வேளையிலும் விரைவாக அகத்து வேலைகளை நிறைவுசெய்து கொண்டு, ஈரக்கைகளுடன், மடிசார் சரசரக்க, பெண்களும்கூட வந்துசேரத் தொடங்கினர்.

"எப்படியும் இன்று ஒரு பிரச்சனை இருக்கிறது!!" என்று ஊகித்தவர்களாக ஆலயத்தில் பணிபுரியும் சிற்பிகளும் எடுபிடிகளும் மெல்ல ஒதுங்கி கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை பார்க்கப் பார்க்க தீட்சிதர்கள் பலருக்கு மனம் வெகுண்டது. "காலங்காலமாக நமக்கு பாத்தியப்பட்ட கோயில் வாசலில் இன்று நாமே அகதிகள் போல நிற்க வேண்டியிருக்கிறதே!!" என்று சிலர் விம்மினர்!

அதிலொரு தீட்சிதர்,

பொங்கிய திருவில் நீடும்
பொற்புடைப் பணிக ளேந்தி
மங்கலத் தொழில்கள் செய்து
மறைகளால் துதித்து மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பில்
தகும்பணித் தலைநின் றுய்த்தே
அங்கணர் கோயி லுள்ளா
அகம்படித் தொண்டு செய்வார்

என்ற பெரிய புராணப் பாடலை உரக்க கூறியவராய், "நடராஜா! நடராஜா!! உனக்கு அடிமை செய்யவே பிறந்தவர்கள் நாங்கள் என்று திருமுறைகள் போற்றுகிறதே!! இன்று எங்களுக்கே இந்த நிலைமையா?" என்று வாய்விட்டே அழுதார்!!

அதைக் கேட்ட சிலர் வெகுண்டெழுந்து கீழகோபுர வாசல் வழியே உட்செல்ல முயற்சித்தபோது, செஞ்சியிலிருந்து வந்திருந்த சிறப்பு தெலுங்கு வீரர்கள், "எவரு ராக்கூடாதையா!! ஸ்தானிகாலு மாத்ரம்! ஸ்தானிகாலு மாத்ரம்!!" என்று தடுத்தனர்.

"நாங்கள் மூவாயிரம் பேரும் எங்கள் சுவாமிக்கு ஸ்தானிகம்தானடா!! எங்களை தடுக்க நீங்கள் யார்?" என்றார் ஒரு தீட்சிதர்.

இந்த கேள்விக்கு அங்கு யாரும் பதில் அளிக்கவில்லை. மாறாக, நெற்றியில் திருமண் சாற்றிகொண்ட வைணவர்கள் சிலரின் வேதாகம கோஷங்கள் மட்டுமே பதிலாக எழுந்தது. அவர்களுக்கு அருகிலேயே பெரிய பள்ளிகொண்ட திருமாலின் சிற்பம் ஒன்று ஸ்ரீதேவி பூதேவி தயார்களுடன் வடிவமைக்கப்பட்டு தயாராய் கிடந்தது.

அச்சிற்பம், வெறும் கல்லாக இங்கு வந்து இறக்கப்பட்ட காலத்திலிருந்து பூக்கத் தொடங்கிய பிரச்சனை அது! அன்றிலிருந்து தீட்சிதர்களும் எத்தனையோ முறை முயற்சித்தும் பலனில்லாமல், கல்லாய் தொடங்கிய பிரச்சினை இன்று மாலாய் மாறிக் கிடக்கிறது!!

(சற்று பின்னோக்கி செல்வோம்)

தீட்சிதர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். திருமங்கையாழ்வாரின் பேச்சைக் கேட்டு என்றோ நந்திவர்ம பல்லவன் வைத்துச் சென்ற புள்ளியில் இன்று வைணவ மதவெறி பிடித்த தெலுங்கன் செஞ்சி கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கோலம் போடுகிறான்.

நந்திவர்மன் தெற்றியம்பலமாக ஸ்தாபித்த சித்திரக்கூடத்து கோவிந்தராசரை, "தில்லைநகர்த் திருச்சித்திரக் கூடந் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே" என்று குலசேகர ஆழ்வாரும், "மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித் தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக்கூடம் சென்று சேர்மின்களே" என்று திருமங்கையாழ்வாரும் பாடியதனை நாயக்கனிடம் தீட்சிதர்கள் எடுத்துக் கூறினர்.

"நீங்கள் கோயில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், பூசிக்கும் உரிமையை எங்களிடம் விட்டுவிடுங்கள். உங்கள் வைணவ ஆகமப் பூசை முறைகள் உள்ளே வரவேண்டாம். நாங்கள் எங்கள் முறைப்படி உங்கள் கோவிந்தராசரை பூசிக்கிறோம். அதனைத்தானே உங்கள் பாசுரங்களும் குறிப்பிடுகின்றன." என்று இறங்கி கேட்டபோது
முழுதாக தமிழ் புரியாத நாயக்கன் அவனுக்கருகில் அமர்ந்திருந்த அவனது வைணவ குருவினை பார்த்தான்.

அதற்கு அவர், "கூடாது! கூடாது!! பெருமாளை நம் முறையில் நம்மவர்கள் தான் பூசிக்கவேண்டும். முன்னர் இவர்கள் பூசித்தப்போதுதானே சோழ மன்னர் பெருமாளை கோயிலைவிட்டே வெளியேற்றினார். மேலும், அப்போது வெளியே சென்ற பெருமாள், வைணவஸ்ரீபாத நாயக்க மன்னர்கள் வந்தபின்னர்தான் இந்த கோயிலுக்குள்ளே வந்திருக்கார். இப்போது, ராஜா, உங்களது புண்ணியத்தால் பெருமாள் பெரிய கோயிலுக்குள் மீண்டும் பள்ளி கொள்ளப்போகிறார். இவ்வளவு பெரிய சிலையை செய்து வைத்துவிட்டு, பூசையை இவர்களிடம் விட்டுச்செல்வதா?" என்று தெலுங்கில் கிசுகிசுத்தார். கொண்டம நாயக்கனுக்கு சினம் மிகுந்தது. 

அவனது சினத்தையும், தெலுங்கில் வைணவர் கூறிய கிசுகிசுப்பையும் புரிந்து கொண்ட தீட்சிதர்கள், "நாயக்கரே! அது என்றோ பழையகாலத்தில் நடந்தது. தவிர அன்றும் இப்படி சில வைணவர்கள் தாெல்லை கொடுத்ததால்தான், அம்பலத்தை விரிவாக்க எண்ணிய சோழ மன்னருக்கு கோபம் வந்து, அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்றும் தெற்றியம்பலத்தில் சிறியதாக இருந்த கோவிந்தராசரை பெரிதாக்கி, எங்கள் சபாநாயகர் ஆடுமிடத்தில் முக்கால் பங்கு காெள்ளைபோவதற்கும் இப்படிப்பட்ட தீயவர்கள்தான் காரணம்." என்று காேபத்தில் அரசன் முன்பே ஒரு தீட்சிதர் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.

அவ்வளவுதான்! நாயக்கனுக்கு ஆத்திரம் பீறிட்டது. "தீட்சிதர்களே! நீங்கள் அமைதியாக இருந்து எங்கள் சுவாமிக்கு நாங்கள் செய்யும் திருப்பணிக்கு ஒத்துழைத்தால் நல்லது. இல்லையென்றால் விளைவுகளுக்கு நான் ஒன்றும் அஞ்சியவனில்லை. குறித்த நாளில் சித்சபைக்கு எதிரில் புதிதாக கட்டப்பட்ட சித்திரக்கூடத்தில் பெரியபெருமாளை படுக்க வைத்தே தீருவேன்!!" என்று தெலுங்கு கலந்த தமிழில் முழங்கினான். அனுசரித்து பேசப்போன பஞ்சாயத்தும் நாயக்கனிடம் செல்லுபடியாகவில்லை.

அவன் சொன்னபடி சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள திருமுறைக் கைக்கொட்டி மேடையின் மேல்பகுதியை ஆக்கிரமித்து சித்திரக்கூடத்தை கட்டினான். நந்திவர்ம பல்லவன் காலத்தில் நிறுவப்பட்ட தெற்றியம்பலத்து கோவிந்தராசர் சிலை சிறியதாக இருந்ததால் அதற்கு பதில் பெரியதாக சிலைசெய்யக் கல்லை கொண்டுவந்து கீழவாசலில் நிறுத்தினான்.

அதுமுதல் தீட்சிதர்கள் கோயிலுக்குள் சரளமாக சென்றுவர தடைவிதித்தான். நடராசரை பூசிக்கும் முறைக்காரர் மற்றும் கோயில் பணியாளர்களைத் தவிர, மற்ற தீட்சிதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாரும் கோயிலுக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டான்.

அந்த ஆண்டு ஆனித்திருமஞ்சனம் கூட நாயக்கனின் காவல் வீரர்களின் கெடுபிடியால் பெரும் இடைஞ்சலுக்கு உள்ளானது. சுவாமியை யாத்ராதானம் செய்த போது தேருக்கு அழைத்து வரக்கூடாது என்று உத்தரவு போட்டான். தீட்சிதர்கள் தேவசபையிலேயே சுவாமியை எழுந்தருள செய்துவிட்டு, பிறகு, ஒருவழியாக ராஜசபைக்கு அழைத்து வந்து திருமஞ்சனம் செய்து முடித்தனர். அனைவரது மனமும் கனத்து இருந்தது!

இப்படியாக நாயக்கனின் கெடுபிடியில் காலம் சென்றதே தவிர மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. வந்திறங்கிய கல்லும் கோவிந்தராசராக உருமாறிவிட்டது.

(மீண்டும் அன்றைய நிகழ்வுக்கு வருவோம்)

இன்று சிலை கோயிலுக்குள் செல்ல இருக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் குடமுழுக்கும் செய்ய இருக்கிறார்கள். அதற்கான பூசையை வைணவ பட்டர்கள் வந்து தொடங்கிவிட்டனர். "இதனை தடுக்க ஏதேனும் வழி கிடைக்காதா? எங்கள் சுவாமியின் இடமும் கோயிலும் இப்படி பறிபோகிறதே!" என்ற ஆற்றமையால்தான் அந்த அதிகாலையில் தீட்சிதர்கள் கூட்டங்கூட்டமாக கீழசன்னதி வாசலில் கூடியிருந்தனர்.

அதுவரை ஆரவாரத்துடன் நின்றிருந்த அந்தணர்கள் கொண்டம நாயக்கன் வருகிறான் என்ற கட்டியங்கேட்டு அமைதியானார்கள்.

அவனது இரதம் பெரும் இறைச்சலுடன் கீழவாசலில் வந்து நின்றது. தீட்சிதர்களை ஏளனமாக பார்த்துவிட்டு, பட்டர்கள் கொடுத்த பூரணகும்பத்தை தொட்டு வணங்கிய நாயக்கனிடம் தீட்சிதர் ஒருவர் "நாயக்கரே!" என்று அனுசரனையாக பேசத் தொடங்கினார்.

அதனை சட்டைசெய்யாத நாயக்கன், காேவிந்தராசர் சிலை நோக்கி கும்பிட்டபடி நடக்கத் தொடங்கினான்.
அதனை கண்ட இளம்வயது தீட்சிதர்கள் சிலர், "நாயக்கரே! நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எங்கள் சைவக்கோயிலை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். இதனை எங்கள் உயிர் இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம்!!" என்று உரக்கக் கத்தினர்.

அதுசமயம் அங்கு கூடியிருந்த சிவனடியார் பெருமக்களும் தங்களது எதிர்ப்பை உரத்த குரலை பதிவு செய்தனர். அதனை கேட்ட நாயக்கன் மதம் பிடித்த யானையாய் தலையாட்டி, "நீங்கள் இறந்தாலும் ஏதும் நின்றுவிடாது. இன்று எங்கள் பெருமாள் உள்ளே போவது உறுதி!" என்று அலட்சியமாக பதிலளித்தான்.

"பீடையே! உன்னை பிரம்மஹத்தி பிடிக்கப் போகிறதடா!" என்று கத்தியவர்களாய் சில தீட்சிதர்கள் கீழகோபுரத்தின் மீது ஏறத்தொடங்கினர். அவர்களை தடுக்க முயற்சித்த தெலுங்கு வீரர்களை நாயக்கன் தடுத்தான். தீட்சிதர்கள் வரிசையாக மேலே ஏறி நின்று கொண்டனர்.

அவர்களது வீட்டுப் பெண்களும் சிவனடியார்களும் கதறியழுதனர். ஆனாலும், எதனையும் பொருட்படுத்தாத நாயக்கனை மேலிருந்து அழைத்த தீட்சிதர் ஒருவர், "நாயக்கனே! உனது மதவெறிக்கு தண்டனை நிச்சயம் உண்டு. எங்கள் கோயிலை காக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நீ எத்தனை பிறவியெடுத்தாலும் இந்த பிரம்மஹத்தி விடாது. நடராஜா! நடராஜா!! எங்களுக்கு வேறு வழி தெரியலையப்பா!! இனி எந்த பிறவியில் உன்னைப் பார்ப்பேனோ!" என்று உரக்க கத்தியவராய் கோபுரத்தின் உச்சியிலிருந்து தடாலென்று தரையை நோக்கிப் பாய்ந்து உயிரைத் துறந்தார். அதைக் கண்ட ஏனையோரும் அடுத்தடுத்து விழுந்து மாண்டனர். 😭🙏🏽😡

பெண்களும் குழந்தைகளும் சிவனடியார்களும் கதறிக்கதறி அழுதனர். இப்படியாக அடுத்தடுத்து இருபது பேர் தமது இன்னுயிரை தியாகம் செய்த பின்னர், நாயக்கன் வாய்திறந்து, "இனி யாராவது கோபுரத்தில் ஏறினால் சுட்டுத்தள்ளுங்கள்" என்று ஆணையிட்டான். "படீர்!" "படீர்!" என்று வெடித்த துப்பாக்கி குண்டுகளுக்கு இரண்டு தீட்சிதர்கள் பலியாகினர்.

கீழவாசல் முழுக்க சிவப்பானது. இரத்தம் ஆறாகப் பெருகி, அங்கு கிடக்கும் கோவிந்தராசர் சிலைக்கு கீழேயும் சென்றது. அந்த சிலையில் வடிக்கப்பட்டிருக்கும் ஆதிசேசனுக்கு உயிர் இருந்திருப்பின், இந்த அநீதியை பொறுக்காமல் அவனும் சற்று நெளிந்திருப்பான்! எங்கும் எழுந்த அழுகுரல்களுக்கு மத்தியில், தீட்சிதர் வீட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வீரத்துடன், அருகில் நின்ற வீரன் ஒருவனின் குத்துவாளை பிடுங்கிக் கொண்டு நாயக்கனை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார்!

"அடேய்! பிரம்மஹத்தி பிடித்த நாயக்கனே!! உன்னை இப்படியே குத்தி கொல்லவேண்டும் என்றுதான் இந்த வாளை உருவினேன். அதற்கு எனக்கு பலமில்லை. ஆனால், உனது பாவக்கணக்கு இன்னும் பெருகட்டும். பிரம்மஹத்தியோடு ஸ்த்ரீஹத்தியும் சேரட்டும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உனக்கும் உன் கூட்டத்தாருக்கும் விடிவு இல்லையடா, பாவி!!" என்றபடி குத்துவாளால் தன் கழுத்தை கீறிக்கொண்டு, இரத்த வெள்ளத்தில் விழுந்தார் அந்த வீரப்பெண்மணி!

இத்தனை உயிர்கள் சென்றபின்னும் மதம்பிடித்த நாயக்கனுககு மனம் மாறவில்லை. "இவற்றை அப்புறப்படுத்திவிட்டு, விரைவாக பெருமாளை உள்ளே இழுத்துச் செல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அழுகுரல்களுக்கு இடையில் எதிர்த்து வந்த தீட்சிதர்களின் குரல் அடங்கிற்று. இரத்தபெருக்கு கழுவிவிடப்பட்டது. ஆயினும், கோவிந்தராசருக்கு அடியில் புகுந்த இரத்தத்தை வைணவர்கள் மறந்திருந்தனர். பெரிய உருட்டுக் கட்டைகளுக்கு மேலே ஏற்றி, அவற்றை மெல்ல மெல்ல உருட்டி, உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்தராசர் சென்ற வழியெல்லாம் இரத்தக்கறை படிந்து கிடந்தது; காற்றில் இரத்தவாடை அடித்தது.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே ஆடிக் கொண்டிருக்கும் அம்பலக்கூத்தனின் புன்னகை மட்டும் அன்றும் மாறவில்லை. அதற்கான பொருளை யார்தான் விளக்க முடியும்?

- முற்றும் -

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

(மூலம்: https://www.facebook.com/100001999617640/posts/4383196351756975/?app=fbl)

(பி.கு.: மூல இடுகையின் சாரத்தையும் வேகத்தையும் மாற்றாமல், அதிலிருந்த எழுத்து & சொற்பிழைகளை முடிந்தவரை நீக்கி, நடையை சீராக்குவதற்காக சிற்சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளேன். 🙏🏽)

oOOo

👊🏽 பெளத்தத்தின் கதை தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்த பின், அதிலிருந்த ஒரு பிரிவினர், பெண்தெய்வ வழிபாட்டுக்குள் புகுந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக பெண் தத்துவத்தை ஆண் தத்துவமாக்கி விரித்த கடைதான் வைணவம்.

இவர்கள் பௌத்தர்களாக இருந்த போது:

- மொட்ட போட்டுட்டியா? (முழுவதும் கறந்துவிட்டாயா?)
- மொட்ட போட்டுட்டாங்களா? (முழுவதும் கறந்துவிட்டார்களா?)

இவர்கள் வைணவர்களாக மாறிய பின்னர்:

- நாமம் போட்டுட்டியா? (ஏமாற்றிவிட்டாயா?)
- நாமம் போட்டுட்டாங்களா? (ஏமாற்றிவிட்டார்களா?)

ஆக, பௌத்தம் = கொள்ளை; வைணவம் = ஏமாற்றுவேலை!! 👊🏽👊🏽👊🏽

👊🏽 "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற சொலவடை இவர்களது ஆஞ்சநேயர் எப்படி மற்றும் யாரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவர் என்பதைக் காட்டும்.

👊🏽 இவர்களிடம் இருக்கும் பெரும்பாலானவற்றிற்கு அடிப்படை சைவமும் அத்வைதமும்தான். இவையிரண்டும் இல்லையெனில் புருடா விடுவதற்குக்கூட இவர்களிடம் பொருளில்லை.

👊🏽 வைணவம் உருவாக்கப்பட்டது பொ.ஆ. 7ம் நூற்றாண்டின் பிற்பாதியில் என்றாலும், இவர்களது நாமச்சின்னம் உருவாக்கப்பட்டது 12ம் நூற்றாண்டின் இடையில்தான். பெண்குறியைக் குறிக்கும் இச்சின்னத்தை திரு ராமானுஜர் உருவாக்கினார் என்று இவர்கள் கதைவிட்டாலும், இச்சின்னத்திற்கு அடிப்படை பாலைவன மதமான முகம்மதியத்திலுள்ள குறியீடுகளாகும்!

முகம்மதியத்திற்கு அந்த பகுதியில் ஏற்கனவேயிருந்த பல சமயங்களும் & மதங்களும் அடிப்படையாக இருந்தாலும் ஆண் & பெண் குறிகளை வைத்தே அனைத்தையும் விளக்குவதென்பது இதன் தனிச்சிறப்பாகும். இதனை குறி மதம் என்றழைத்தாலும் தகும். அவ்வளவு தூரம் இவர்களது குறியீடுகளில் குறிகள் இடம் பிடித்திருக்கும். இதன் தாக்கம் உலகம் முழுவதுமுள்ளது.

நுழைவாயிலாக இம்மதத்தில் பயன்படுத்தப்படும் பெண்குறியை தலைகீழாக்கி, தனித்துவத்திற்காக, நடுவில் ஒரு கோட்டைப் போட்டு (பெண்குறியின் திறப்பு) தங்களது சின்னமாக அறிவித்துவிட்டார்கள் வைணவர்கள்.

👊🏽 திரு ராமபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்கள் வைணவர்களே அல்லர். அவர்களது காலத்தில் வைணவமே இல்லை. "அவங்க எல்லாம் எங்க ஆளுங்களாக்கும்" என்ற கணக்கில் அவர்களுக்கு பெண்குறியை போட்டுவிட்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

👊🏽 வைணவர்கள் மொட்டைகளாக (பெளத்தர்களாக) இருந்த போது ஆரியத்தைத் தூக்கிப்பிடித்தனர். பெளத்தம் இங்கு சரியாக போனியாகாமல் போனதற்கு முகமையான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இதிலிருந்து பாடம் கற்ற இப்பேர்வழிகள் வைணவம் என்ற பெயரில் மீண்டும் கடையை விரித்த போது தமிழை முன்னிறுத்திக் கொண்டார்கள்.

👊🏽 எத்தனையோ "கைங்கர்யங்கள்" செய்த பின்னரும் "நாமம் = ஏமாற்றுவேலை" என்ற சமன்பாட்டை இவர்களால் மாற்றமுடியவில்லை. ஆகவே, தமது தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக மக்களை முட்டாளாக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவு: பெரிய நாமம், திவ்ய மங்கள ரூபம், விசுவரூபம், பெரிய லட்டு / வடை / தோசை / இட்லி, பக்தி ரசம் / சாம்பார் / காரக்குழம்பு சொட்டும் பாடல்கள்... அதாவது, புலன்களை கவர்ந்து மனதை மயக்கி தொழிலை வளர்த்துக் கொண்டனர்.

👊🏽 வைணவம் உரிமை கொண்டாடும் ஆழ்வார்கள் அனைவரும் வைணவரல்லர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆவார். இவரது பல பாடல்களில் அத்வைதம் மிளிர்கிறது. பகவான் திரு ரமண மாமுனிவரும் 🌺🙏🏽🙇🏽‍♂️ இவரது பாடல்களை மேற்கோளாக பயன்படுத்தியிருக்கிறார். இதனால்தான் இவர்களிடையே "நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்" என்ற சொலவடை இருக்கிறது.

👊🏽 தில்லை கோவிந்தராசர் வரலாற்றிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய முகமையான செய்திகள்: 

- ஆழ்வார்களால் பாடப்பெற்ற இறையுருவங்கள் அனைத்தும் உயிர்ப்புள்ள சமாதிகளை குறிக்கவில்லை.

- ஓர் இனத்தை அந்த இனமேதான் ஆளவேண்டும். களப்பிரர்கள், பல்லவர்கள், முகம்மதியர்கள், தெலுங்கர்கள், கிறித்தவர்கள் (வெள்ளையர்கள்), தற்போது வடக்கத்தியர்கள் போன்ற அயலாரால் நாம் பட்ட துன்பங்கள், இழந்த செல்வங்கள் & அடையாளங்களை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.

👊🏽 வைணவத்திலுள்ள மதவெறி பிடித்த நயவஞ்சக பேர்வழிகளைத்தான் எதிர்க்கிறேனே தவிர இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள பெருமாள்களை அல்ல. நான் வணங்கும் மெய்யறிவாளர்களில் ஒருவர் கொங்கண சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️ (திருமலைப் பெருமாள் எனும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருப்பவர்). இவரின் காலம் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னராகும். அன்று வைணவமுமில்லை. நாமமுமில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, October 3, 2021

இராமேச்சுர திருத்தலத்தில் அதிகாலையில் நடக்கும் பளிங்கு சிவலிங்க பூசையின் உட்பொருள்


கண்ணாடியின் வழியாக ஒளி ஊடுருவும். விரிவடையாது. ஆனால், பளிங்கின் வழியே ஊடுருவும் ஒளிக் கற்றையானது விரிவடையும். அந்த பளிங்குப் பொருள் முழுவதும் பரவிவிடும். சற்று தூரத்திலிருந்து பார்த்தால், நிறமற்ற பளிங்குப் பொருள் ஊடுருவும் ஒளியின் நிறத்தினதாய் தெரியும். ஒரு வெள்ளைப் பொருளை அருகில் வைத்தால் வெள்ளையாய் தெரியும். நீலப் பொருளை வைத்தால் நீலமாய் தெரியும். எந்த பொருளும் இல்லாவிட்டால் தெளிவான பளிங்காகத் தெரியும். வைக்கப்படும் பொருளால் பளிங்கு பாதிப்படையாது. பொருளே இல்லாவிட்டாலும் பளிங்கில் ஏதும் குறைவிருக்காது.

இராமேச்சுர திருத்தலத்தில் நடக்கும் பளிங்கு சிவலிங்க பூசையின் போது, சிவலிங்கத்தை நீர், பால் முதலியவற்றால் தூய்மைபடுத்திவிட்டு, வில்வ இலைகள் மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு துதிப்பார்கள். சிவலிங்கத்தின் அருகில் வில்வ இலை விழும்போது லிங்கம் பச்சையாக தெரியும். சாமந்தி பூ விழும்போது மஞ்சளாக தெரியும்.

பளிங்கு சிவலிங்கம் உள்ளபொருளுக்கு சமம். அதனருகில் விழும் பூக்களும் இலைகளும் தோன்றும் உயிர்களுக்கு, உயிர்களுக்கு ஏற்படும் பிறவிகளுக்கு சமம். பகவான் திரு ரமணர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது சிவலிங்கம் ரமணராகிறது. திரு மெய்கண்டார் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது அதே சிவலிங்கம் மெய்கண்டாராகிறது. திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது அது ஞானசம்பந்தராகிறது.

நம்மிடம் இயற்கையாக அமைந்துள்ள நான் எனும் தன்மையுணர்வு பளிங்கு சிவலிங்கத்திற்கு சமம். தன்மையுணர்வுடன் இணைந்திருக்கும் "இன்னார்" (மனிதன், ஆண்/பெண், படிப்பு, பதவி...) பூவுக்கு சமம். எத்தனை பூக்கள் வந்து விழுந்தாலும் சிவலிங்கம் அப்படியேதானிருக்கும். எத்தனை பிறவிகள் நமக்கு ஏற்பட்டாலும் நமது தன்மையுணர்வு சிறிதும் மாறாது. (பகவான் இறுதியாக பேசிய சொற்றொடர்களில் ஒன்று: ஜென்மா (பிறவி) வரும். போகும். அதனாலென்ன?)

இவ்வாறே எத்தனை வகையான பூக்கள் வந்து விழுந்தாலும் சிவலிங்கம் மாற்றமடைவதில்லை. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என கோடான கோடி உயிர்கள் பிறந்தாலும் எல்லோருக்குள்ளும் இருக்கும் தன்மையுணர்வு ஒன்றுதான்!! "சிவபெருமானேயானாலும் அவரும் தன்னை நான் என்றுதான் உணர்கிறார்" என்று அருளியிருக்கிறார் பகவான்.

நம் மீது விழுந்திருக்கும் பூவை (பிறவியை) கவனியாது, நான் எனும் நமது தன்மையுணர்வில் (சிவலிங்கத்தில்) நிலைத்து நிற்றலே பிறவியறுத்தலாகும். இதை உணர்தலே பளிங்கு சிவலிங்க பூசையை காண்பதின் பயனாகும். 🙏🏽

ஏதேது வந்தாலும் ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்று இருந்தாலும் - ஏதேதும் 
தானாகா வண்ணம் தனித்திருக்கும் 
ஞானாகாரம் தானே நாம்

-- திரு நடனானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

சில சமூகங்களில் ஆயிரம் பிறை கண்டோர் (80 ஆண்டுகள் மற்றும் சில மாதங்களை கடந்தோர்) பளிங்கு மாலையை அணிந்து கொள்வர். அவர்கள், முனைப்பற்று, வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு, கரியாக (பார்ப்பானாக / அறிபவனாக / சாட்சியாக (ஆரியம்)) மட்டுமிருப்பவர்கள் என்பது பொருள்.

(நம் அன்னைத்தமிழ் மெய்யியலை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு "கரி" என்ற சொல் மேலும் ஒரு சான்றாகும். இதை விளக்குவதற்கு தனி இடுகையே தேவைப்படும்!!

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

-- திருக்குறள் #25)

oOOo

ஸ்படிகா என்ற ஆரியச் சொல்லை தமிழில் படிகம் என்று எழுதுகிறார்கள். இது தேவையற்றது. தமிழில் பளிங்கு என்ற சொல் ஏற்கனவேயுள்ளது.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

-- திருக்குறள் #706

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮