Saturday, August 31, 2019

மீண்டும் சிவதத்துவத்தை அவமதிக்கும் நாமப் பேர்வழிகள்!! 😠😠



இப்படம் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் புரட்டாசி 2019 இதழில் பின்பக்க அட்டையாக வெளியாகியுள்ளது.

முதலில் விளக்கம். 😎 பின்னர் அர்ச்சனை. 👊🏽

🌸🏵️🌻🌼💮

#மீன் (#மச்ச) அவதாரக் கதை ஆரிய மறைநூல்களில் பல இடங்களில் வருகிறது. பலவிதமாக வருகிறது. ஆரம்ப கதைகளில் மீன் பிரம்மாவாக மாறுகிறது. பின்னர் வரும் கதைகளில் தாம் விஷ்ணுவாக மாறுகிறது. பிரம்மா வரும் கதைகளின் உட்பொருள்: *தர்மத்தை நாம் காப்பாற்றினால், அது பல்கி, பெருகி பின்னர் நம்மைக் காக்கும்!* விஷ்ணு வரும் கதைகளின் உட்பொருள்: *மெய்யறிவு பெறுதல்!!*

பிரம்மா சற்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, குதிரைத்தலை (#பரிமுகம், #ஹயக்ரீவன்) கொண்ட அசுரன் ஒருவன் வந்து, பிரம்மாவிடமிருந்த ஆரிய மறைநூலைத் திருடிக்கொண்டு போய் கடலுக்குள் ஒளித்து வைத்துவிடுகிறான். மறைநூலைப் பறிகொடுத்த பிரம்மா விஷ்ணுவை வேண்ட, விஷ்ணு மீன் உருக்கொண்டு கடலுக்குள் போய், குதிரை தலை அசுரனோடு போரிட்டுக் கொன்று விட்டு, மறைநூலை மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைக்கிறார்.

☀️ *கண்ணயர்ந்த பிரம்மா இங்கு கவனக்குறைவான அறிவைக் குறிக்கும். அவரிடமிருக்கும் ஆரிய மறைநூல் மெய்யறிவைக் குறிக்கும்.* மெய்யறிவு நிலைப்பெறும் வரை வெகு கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுருத்துகிறார் #பகவான் #ஸ்ரீரமணர். வடநாடுகளில் லட்சுமி அம்மனின் வாகனமாக ஆந்தையை வைத்திருப்பதும் "கவனமாக இருக்கவேண்டும்" என்பதை குறிக்கத் தான். சற்று கவனம் குறைந்தாலும் கண்ணபிரானின் தாகம் தீர்க்க நாரதர் ஒரு வீட்டின் கதவைத் தட்டிய கதையாகிவிடும்!! 😛

☀️ *கவனம் குறைவான சமயத்தில், மெய்யறிவை பறித்துக் கொண்டு போகும் குதிரைத்தலை அசுரன் முயற்சியைக் குறிக்கும்.* "முயற்சியே உன் பந்தம்", என்று எச்சரிக்கிறார் பகவான். மேலும், "முயலுதல் இல்லாமல் இருக்க முயலுங்களேன்", என்று அறிவுரை கூறுகிறார். இதையே, #மணிவாசகப் #பெருமான், " 'வேகம் கெடுத்து ஆண்ட' வேந்தனடி வெல்க" என்று திருவாசகத்தில் பாடுகிறார்.

☀️ *கடல் என்பது நமது உடலைக் குறிக்கும்.* கோயில்களில் திருவமுது படைக்கும் போது உணவை நீருக்கு சமமாகக் கருதி படைப்பதைப் பார்த்திருப்பீர்கள். இன்னொரு கணக்கில், நமது உடலில் ஒவ்வொரு கணமும் கோடான கோடி செல்கள் உருவாகியும் அழிந்தும் கொண்டிருக்கின்றன. செல் அளவில் நம் உடலை நாம் காண நேர்ந்தால் (செல்களின் தோற்றம், இயக்கம், அழிவு), இதை ஒரு பெருங்கடல் என்றே அழைப்போம். நிலையில்லாமல் அசைந்து கொண்டேயிருப்பதால்.

☀️ *மெய்யறிவைத் தேடிச் செல்லும் மீன் நமது அகந்தையைக் (சீவத்துவத்தை) குறிக்கும். வடக்கிருத்தலின் போது நம்முள் நாம் ஆழ்வதையே இது குறிக்கிறது. சீவன் எப்போது சிவமாகிறது? மீன் எப்போது பெருமாளாகிறது? குதிரைத்தலை அசுரனைக் கொல்லும் போது. முயற்சியைக் கைவிடும் போது. முயற்சியை கைவிட்டவுடன் தன்மையில் நிலைபெறும் போது. "தானேத் தானே தத்துவம்" என்று உணரும் போது!!*

அறிவு, அகந்தை, முயற்சி என நம் உடலுக்குள் இருக்கும் பொருட்களையும், நடக்கும் நிகழ்வுகளையும் பிரம்மா, விஷ்ணு, அசுரன் என்று உருவகப்படுத்தி கதையாக்கி இருக்கிறார்கள். இக்கதை சொல்லும் கருத்துக்கள்:

✨ நிலைபேறு பெற செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் செய்யாதிருத்தலே - முயற்சியைக் கைவிடுதலே
✨ நிலைபேறு கிட்டியவுடன், அது நிலைக்கும் வரை, வெகு கவனமாக இருக்கவேண்டும்.

🌸🏵️🌻🌼💮

இரு. எண்ணாதே, இதுவே பிரம்மத் தியானம்.

-- பகவான் ஸ்ரீரமணர் 🌺🙏🏼

தேடிக் கண்டுகொண்டேன் – திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்

-- அப்பர் பெருமான் 🌺🙏🏼, திரு அங்கமாலை

🌸🏵️🌻🌼💮

*இந்தக் கதையில் வரும் மீனைப் பன்றியாக மாற்றி, மீன் கொண்டு வரும் மறைநூலை பூமிப்பந்தாக மாற்றி விட்டால் #பன்றி (#வராக) அவதாரம் கிடைத்துவிடும்!* இது போன்ற உருவகக் கதைகள் எல்லாம் அந்தந்த காலக்கட்டங்களில் தோன்றிய மகான்களால் புனையப்பட்டிருக்கும். இவற்றை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, இன்னொன்றை இதோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽

💥 இணைப்பு படத்தில், விஷ்ணுவை சிவதத்துவம் ஒரு மூலையிலிருந்து வணங்குவது போன்று நாமப்பேர்வழிகள் சித்தரித்திருப்பது போல, பாவாடை மதத்தினர் இஸ்ரவேல் அத்வைதி யேசுவை முன்னிலைப் படுத்தி, பெருமாளை சிறுமைபடுத்தி, ஒரு மூலையிலிருந்து யேசுவைப் பெருமாள் வணங்குவது போல் சித்தரித்தால் ஏற்றுக் கொள்வரா? வெகுண்டு எழுவார்கள். இது போன்று தான் நாமும் வெகுண்டு எழ வேண்டும். "ப்ரீத்தி வாங்கு. நான் கியாரண்டி.", என்று விளம்பரம் செய்வது போல், "நாமத்தை போட்டுக்க. வைகுண்டத்துக்கு நான் கியாரண்டி.", என்று விளம்பரபடுத்த இவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. 😝 சிவதத்துவத்தை அவமதிக்க இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவ்வளவு ஏன்? சிவதத்துவத்தை அணுகக்கூட இவர்களுக்கு அருகதை கிடையாது!! மேற்சொன்ன விளக்கம் பகவானின் அறிவுரைகளை வைத்து எழுதப்பட்டது. வைணவத்தை வைத்து விளக்க வேண்டுமென்றால், "பாரத விடுதலையில் நேதாஜியின் பங்கு ஒன்றுமேயில்லை. மோகன்தாஸும் ஜவஹரும் தான் அடிபட்டு, மிதிபட்டு விடுதலைப் பெற்றுத் தந்தனர்" என்ற ரீதியில் பூ சுற்ற வேண்டியிக்கும். 😜

💥 மீன் மீட்டு வரும் நூலின் முன்அட்டையில் வேத் என்று ஆரியத்தில் எழுதியிருக்கிறதாம். வாழ இடம் கொடுத்திருப்பது தமிழ்நாடு! இவர்களது மொழி சீரானது தமிழ்நாட்டில்!! இவர்களது சமய அடையாளங்களுக்கு தாய்மண் தமிழ்நாடு!!! வாழ்வும் அடையாளமும் கொடுத்த இந்த மண்ணோடு, இதன் மைந்தர்களோடு கலக்காமல், ஆயிரமாண்டுகள் மண்ணில் கிடந்தாலும் மக்காத நெகிழி போல், துருத்திக் கொண்டு நிற்கிறார்கள்.  *ஜாங்குசக்கு என்று ஆரியத்தில் சொன்னால் புனிதமென்றும், ஆங்கிலத்தில் சொன்னால் அறிவென்றும், இதர பாரத மொழிகளில் சொன்னால் கேவலமென்றும் கொம்பு சீவி வைத்திருக்கிறார்கள். தமிழுக்குத் தான் நிறைமொழி என்ற பட்டமுள்ளது. ஆரியத்திற்கு அல்ல.*

💥 இக்கதையில் வரும் அசுரனும், 1300களில் உருவாக்கப்பட்ட பரிமுகப் பெருமாளும் குதிரை தலைகளோடு இருப்பதால், குழப்பத்தை தவிர்க்க, பரிமுகரின் புகழுக்கு இழுக்கு ஏற்படாமல் இருக்க, இக்கதை அசுரனை மனிதத்தலையோடு சித்தரித்திருக்கிறார்கள். வழக்கம் போல ஆரிய உடலமைப்புக் கொண்டவர்கள் வானவர்கள் & கடவுளர்கள். திராவிட உடலமைப்புக் கொண்டவர்கள் அசுரர்கள். *உண்மையில், சைபீரியாவிலிருந்து காட்டுமிராண்டிகளாக வந்த இந்த ஆரியர்கள் தாம் அசுரர்கள்.  #அசுரன் எனில் அழியும்/மாறும்/நிலையில்லா பொருட்களிடம் பற்றுக் கொண்டவன் என்று பொருள்.*

💥 சைவத்தில் இறைவன்-இறைவியை (நிலையானது-நிலையற்றது) வலம்-இடம் என்று போட்டால், நாமப்பேர்வழிகள் அதை இடம்-வலம் என்று மாற்றிப் போடுவார்கள். எனில், மேல்-கீழ் (கருப்பு-மஞ்சள் = இறைவன்-இறைவி =  நிலையானது-நிலையற்றது) என்பது இங்கு கீழ்-மேல் என்று மாற வேண்டும். ஆனால், மாற்றாமல் மேல்-கீழ் என்றே வைத்துக் கொண்டுள்ளனர். ஏனெனில், மஞ்சள் உடல் கொண்டு, கருப்பு வேட்டி கட்டிய பெருமாளைக் கற்பனை செய்து பாருங்கள்!! 😆😂

(நாமப்பேர்வழிகளின் பித்தலாட்டங்களை இன்னும் சற்று விரிவாக இந்த இடுகையில் காணலாம்: 

http://samicheenan.blogspot.com/2019/07/blog-post.html

🌸🏵️🌻🌼💮

எனது பல இடுகைகளில் நான் உறுதிபடுத்தியது போல், மீண்டும் இங்கு உறுதிபடுத்துகிறேன். சைவத்தையும், அத்வைதத்தையும் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து, பித்தலாட்ட வேலைகளில் ஈடுபடும் நாமப்பேர்வழிகளைத் தான் எதிர்க்கிறேனே தவிர இவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள்களை அல்ல.

🙏🏼🙏🏼🙏🏼

Monday, August 26, 2019

பேரரசரை தூற்றி செருப்படி வாங்கியவருக்கு ஒரு வேண்டுகோள்!!



அண்ணே, கிடைக்கிற பொரைய நாலு பேருக்குப் பிரிச்சுக் கொடுத்தாத்தான் பாயிண்ட்ஸ் கிடைக்கும். மாட்டிக்காம பேசலாம். இல்லன்னா இதுக்கு முன்னாடி பேரரசர் இராஜராஜ சோழரைப் பத்தி பேசி செருப்படி வாங்குன கதையாகிடும்ண்ணே!


மெக்காலேன்னு ஒரு பரங்கிப் படுபாவி, ஆங்கிலேயப் பாராளுமன்றத்துல பேசுன ஒன்னு போதும்ண்ணே, உங்க சோலிய முடிக்கிறதுக்கு. பரங்கி ஓநாய்ங்க கொண்டு வந்தது ஆட்டு மந்தை சிஸ்டம்ண்ணே. அது கல்வியே கிடையாது. முதல்ல சில செய்திகள தெரிஞ்சுக்கோங்கண்ணே.


இன்னிக்குத் தான் சேவைத் தொழில்கள்ன்னு ஊர ஏமாத்துறானுங்க. அன்னிக்கு உணவு, உடை, வியாபாரம், போர், மருத்துவம்ன்னு ஒரு 12 அத்தியாவசிய தொழில் வகைகள் தான்ணே இருந்துச்சு. பெரியவங்க செஞ்ச வேலைய வழிவழியா செஞ்சுகிட்டு வந்தோம்ண்ணே. அப்பா, அண்ணந்தான் நம்ம மொதல் வாத்தியாருங்க. புறவு, நம்ம சாதிசனத்துல இருந்த பெரியவங்க கிட்ட படிச்சோம்ண்ணே. இதுக்கப்புறமும் படிப்பு தாகம் இருக்குற பசங்கள, பொது பள்ளிக்கூடங்கள்ல படிக்க வெச்சோம்ண்ணே. பாரதம் முழுக்க சில இலட்சம் பள்ளிக்கூடங்கள் இருந்திருக்குண்ணே. அவைகள்ல படிச்ச பசங்கள்ல 50%க்கும் மேல நம்ம பசங்கதாண்ணே. இந்தப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் உள்ளூர் கோயில்கள சார்ந்து இருந்துச்சுண்ணே.  இந்தக் கோயில்கள் எல்லாம் மக்களும் மன்னரும் கொடுத்த நிதியுதவில நடந்துச்சுண்ணே. (ஒர் அழகிய மரம், தரம்பால், அதர் இந்தியா பதிப்பகம்)


அப்புறண்ணே, கல்வின்ற வார்த்தைய பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்கண்ணே. கலின்னா நிலையில்லன்னு பொருள்ண்ணே. கலிகாலம் = நிலையில்லாக் காலம். கல்லுன்னா நிலையானதுன்னு பொருள்ண்ணே. கல்+வி-ன்னு பிரிச்சா, நிலையானத் தன்மையிலிருந்து (மீண்டும்) வெளிப்படாத மாதிரி நம்மள எது காப்பாத்துதோ அது தான் கல்விண்ணே. "கைய கால வெச்சுகிட்டு செத்த நேரம் சிவனேன்னு கெடக்க வேண்டியது தானேன்னு", நம்மள திட்டுனது மெக்காலே படிப்பு படிக்காத நம்ம பெரியவங்கண்ணே. இந்த ஒத்த வரியில பரம்பொருள்ன்னா என்ன, அத எப்படி அடையறதுன்னு சாதாரணமா, போற போக்குல சொல்லிப் போனாங்க நம்ம பெரியவங்க. தமிழனோடது சமயம்ண்ணே. இதிலேர்ந்து வந்தது தான் மத்ததெல்லாம். மொட்டை, நாமம், பாவாடை, குல்லா... எல்லாம் மதம்ன்ற கணக்குல வரும்ண்ணே.


ஆரம்பத்தில் வேலை, திறமை, அறிவுன்னு எந்த அடிப்படையில் சாதிப் பிரிவு இருந்ததோ சரியாத் தெரியலைன்னாலும், பிறவி அடிப்படையில் மாறுனது, வடபாரதத்திலேர்ந்து மொட்டைங்க வந்த போது, "மச்சான், டிரெஸ்ஸே போட வேணாமாம். ஒரே ஜாலி தான்னு" கூவி கிட்டு, அவிங்களோட போய் நாம ஒட்டிகிட்டு மேலே வந்தோமே, அந்த 4ஆம் நூற்றாண்டு தான்னு மரபணு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்குதுன்னு, இன்னிக்கு நம்மாளுங்க கிட்ட மாட்டிகிட்டு முழிச்சுகிட்டு இருக்குற இந்து நாளிதழ் சுமார் 20 வருசங்களுக்கு முன்னாடியே செய்தி வெளியிட்டிருந்ததுண்ணே. அதாவது, பிறவி அடிப்படையில சாதிய மாத்துனது நாமதான்ணே. (நாம யாருண்ணே? நம்ம ஏரியாவுலேயும் நமக்கு தான் மத்தவங்க வழி கொடுக்கணும். மத்தவங்க ஏரியாவுலேயும், மத்தவங்க தான் நமக்கு வழி கொடுக்கணும். நியாயமான இனமாச்சே நாம்ப!! 😜)


நம்ம தெருவுல இருந்துகிட்டு, நாம போடறத சாப்பிட்டுட்டு, பக்கத்து தெருக்காரன பாத்தா வாலாட்றதும், அவன் கைகாட்டுறத பாத்து குலைக்கிறதும்ன்னு இருக்குற நாய், ஒரு நாள் சரியான கல்லடி வாங்கும்ண்ணே. மொட்டைங்க காலத்துக்கு அப்புறம் இப்பதாண்ணே நமக்கு பொற்காலம். வெறும் 35 மார்க்கு எடுத்தா போதும், கொள்ளை சம்பளம்ண்ணே. அத இத பேசி இருக்குறத கெடுத்துடாதீங்கண்ணே. புறவு, திரும்பவும் திருட்டு, வழிப்பறி, கொள்ளைன்னு பழைய நெலமை வந்துடும்ண்ணே. வணக்கம்ண்ணே.

Saturday, August 17, 2019

ஆகஸ்ட் 15 காமெடி டைம்!!! 😄

ஆகஸ்ட் 15 காமெடியே இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்த போது வந்து சேர்ந்தவை தான் இந்த காமெடி பீஸுகள்!! 😛




👊🏽 கர்த்தரால் இந்திய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக

-- Sub Manual 33:13


"யோசேப்பு வாழும் தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக" என்று தான் Sub Manual-ல் இருக்கிறதேயன்றி, "விசய் யோசேப்பு வாழும் தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக" என்றில்லை. 😁


மேலும், இஸ்ரவேல் அத்வைதி யேசுவை ஆசீர்வதித்ததே இந்த பூமி தான். 💪🏽 தனக்கு மெய்யறிவைக் கொடுத்த, அதாவது தனக்கு ஆசிரியர் போன்ற, பூமியை மாணவன் எவ்வாறு ஆசீர்வதிக்கமுடியும்? நன்றி மட்டுமே கூறமுடியும்.


👊🏽 பாரதம் என்றாலே அறிவு மற்றும் கோயில்கள் தாம். இந்தியா கேட், குதுப்மினார், தாஜ்மஹால் என்று மட்டும் காட்டினால் இந்து சமய திருத்தலங்கள் இல்லையென்றாகி விடுமா? குதுப்மினாரும், தாஜ்மஹாலும் இந்துக் கோயில்கள் தாம்!!


👊🏽 "இந்திய தேசமே பயப்படாதே" - அதாவது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை! 😝 இப்படியே போனால் இவ்வளவு வருடங்களும் செய்த தில்லாலங்கடி வேலைகளும் & கருங்காலித்தனமும் வீணாகிவிடுமே என்று இவர்களுக்குத் தான் பயம்.


👊🏽 அது என்ன "களிகூறு"? 🤔 "பெலனில்லை" போல கோலமாவு எஃபக்டுக்காகவா? 🥴 இல்லை, சீரழிப்பது என்பது குறிக்கோளான பின், மனிதர்களோடு மட்டும் ஏன் நிற்கவேண்டும்? அன்னைத் தமிழையும் சேர்த்து சீரழிப்பது என்று முடிவு செய்துவிட்டீர்களா? 😏


👊🏽 "கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்" - அவர் எங்கே பெரிய காரியம் செய்ய முயற்சித்தார்? அவரது சிந்தனை அவரது இனத்தின் அடிமை மனப்பான்மையை ஒழிப்பதில் தான் இருந்தது. வேற்று இனப் பெண் ஒருவர் தனது குழந்தையைக் குணப்படுத்த மன்றாடியும், உடனிருந்த மாணவர்கள் எடுத்துச் சொல்லியும், அத்வைதி யேசு கேட்கவில்லையே. இறுதியில், ஒன்றும் நடக்காமல், காஷ்மீரம் திரும்பி சமாதியாகிவிட்டார்.


பெரிய காரியம் செய்தது எல்லாம் இவர்கள் தாம். உலகின் வரலாறுகளை திரித்து, பண்பட்ட கலாச்சாரங்களை அழித்து, தேசவிரோதிகளை உருவாக்கி... எல்லாம் எதற்காக? அன்று யேசுவுக்கு கிடைத்த ரொட்டியும் & ஒயினும் போன்று, இன்று தேவையான வசதிகள் இவர்களுக்கு கிடைக்கவே!! ✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽

Robin Hood (2018)




Didn't expect this US$100m movie to do so badly. It collected only US$84m worldwide!!! Reviews vehemently branded it as very poor. Within 30 min of watching this movie, I got the first clue. Then, after about 2/3rds, I got the full answer. Please go through these dialogue pieces, discover the main reason and amuse yourself:


Friar Tuck: Sir, it’s been a bit since your last confession. Would you care to unburden yourself to your friar?


Sheriff of Nottingham: My conscience is clear. Is yours?


Friar Tuck: Try as I might, mine’s always a bit of a muddle.


Sheriff of Nottingham: Well, be that as it may, keep your ears open in your little booth. Any talk of the thief, bring it to me.


Friar Tuck: But, sir, with respect, the Seal of the Confessional is sacred.


Sheriff of Nottingham: Nothing’s sacred till I’ve caught that thief and drowned him in a cage.


💥💥💥


Arch Deacon: There’s been whispers of revolt. Unchecked, those whispers will build into a roar. 


Sheriff of Nottingham: It’s treason. It’s punishable by death.


Friar Tuck: Treason’s a very strong word, sir. Isn’t the Christian thing to turn the other cheek?


Sheriff of Nottingham: How do you love a God that gives you that face?


[Deacon and Nottingham laugh]


Arch Deacon: Sheriff! Given our shared interest in the outcome of the war, it’s essential this thief is caught and his rhetoric suffocated. 


Sheriff of Nottingham: I’ll restore the order. You keep the faith, Your Grace.


Arch Deacon: Sheriff, the church can make a man, or break him. For your allegiance, we offer you the world. But in failure, we can also take it away. Remember that. Hm? Let’s make the cardinal feel welcome, sheriff.


💥💥💥


[Sheriff grabs hold of Tuck]


Sheriff of Nottingham: If you ever defy me again in front of the church…


Friar Tuck: I‘m sorry, sir. I was only speaking for the Gospels.


Sheriff of Nottingham: Oh, the Gospels. Well, never, never forget, Tuck, God’s up there. I’m down here.


💥💥💥


A Muslim guides a Christian!

A Darkman guides a Whiteman!!

The Church is evil & manipulates kingdoms!!!


What was Leonardo DiCaprio thinking? 🤔 That he can show the present Lords of The Universe (Whites) in poor light? 😒 That he can the reveal the true face of a US$150+b notorious business conglomerate? 🤨


😜😝😂😂🤣

Thursday, August 15, 2019

ஆகஸ்ட் 15 & மூவர்ணக் கொடி - உலக மகா ஏமாற்றுவேலை!! 😠😠

👊🏽 ஆகஸ்ட் 15 - மோகன்தாஸ், ஜவஹர்லால் காஜி போன்ற உள்ளூர் கருங்காலிகளிடம், துண்டாக்கப் பட்ட நாட்டைக் கொடுத்து விட்டு, உலகக்கொல்லிகளான பரங்கியர்கள் வெளியேறிய நாள்!! 


👊🏽 மூவர்ணக் கொடி - காவி நிறம் இந்து சமயத்தையும், வெள்ளை நிறம் எம்.எல்.எம் மதத்தையும், பச்சை நிறம் காட்டுமிராண்டி மதத்தையும், நீல நிற சக்கிரம் புத்த மதத்தையும் குறிக்கும். அதாவது, பாரதத்தை சீரழித்தவர்களுக்கு 2/3 பங்கு இடம்!! 😡


💪🏽 நம் நாட்டின் தேசத்தந்தை என அழைப்பட வேண்டியவர் - நேதாஜி!! 🙏🏼



💪🏽 நம் நாட்டின் தேசியக் கொடியாக இருக்க வேண்டியது - முழுதும் காவி நிறமும், அதன் நடுவில் திருநெல்லையப்பர் கோவிலுள்ள வெள்ளை நிற மாக்காளையும் தான்!! (கருப்புக்காளையை விட வெள்ளை நிறக் காளை காண்பதற்கு அழகு என்பதால். மற்றபடி, பொருள் ஒன்றே.)



இந்து என்ற சொல்லிற்கு இன்றைய பொருள் இழித்தவாயன். ஆனால், இதன் பழமையான பொருள்: இன்னொரு உயிருக்கு தீங்கு ஏதேனும் ஏற்பட்டால், அது தனக்கு ஏற்பட்டதாகக் கருதி, அதைக் களைய முற்படுபவன்!


இறைத் தத்துவத்தை விளக்க நம் முன்னோர்கள் வடித்த வடிவங்களில் தலைசிறந்தது ஆடல்வல்லான் 🌺🙏🏼 எனில், உடலெடுக்கும் ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் எங்ஙனம் வாழ வேண்டுமென்பதைக் குறிக்க அவர்கள் வடித்த காளை (நந்தி / சிவன்காளை) வடிவம் தான் மற்றனைத்திலும் தலைசிறந்ததாகும்! 👌🏽


எவ்வுயிரையும் தன்னுயிர் போலக் கருதி, எல்லாம் வல்ல இறைவனை தனது தலைவனாகக் கொண்டு, ஒவ்வொரு செயலும் இறைபணி எனக் கருதி வாழும் மக்கள் வாழும் நாடு எப்படிப் பட்டதாக இருக்கும்?


😍🤩😌

Saturday, August 10, 2019

இந்தியர்களில் பெரும்பாலானோர் ஏன் சிறு புத்தியுடையவர்களாகவே இருக்கின்றனர்?

10 நாட்களுக்கு முன்பு, பாலியில் (Bali, Indonesia), ஒரு விடுதியில் தங்கியிருந்த நம் நாட்டுக் குடும்பம் ஒன்று, தங்களது அறையிலிருந்து பல பொருட்களை திருட முயற்சித்ததைப் பற்றி படித்திருப்பீர்கள். இச்செய்தியும், காணொளியும் வைரலானது (வைரலாக்கப்பட்டது)! இதை வைத்து உலகளவில் ("மேற்கத்திய" உலகளவில்) நமக்கு தலைகுனிவு ஏற்படுத்தப்பட்டது!!

பல இடங்களில் தினந்தோறும் நிகழும் ஒரு சராசரி நிகழ்வு தானிது. கேபிள் டிவிக்காரன் சந்தாவை ஏற்றிவிட்டான் என்பதற்காக, பக்கத்து வீட்டிலிருந்து (அவர்களுக்குத் தெரியாமல்) T இணைப்புப் போட்டுக் கொண்ட ஒரு அமெரிக்கனை எனக்குத் தெரியும். திமிர் பிடித்த ஆங்கிலேயர்கள் எப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்கள் என்பதை அக்கால இறக்குமதி-ஏற்றுமதி தொழிலில் இருந்தவர்களைக் கேட்டால் தெரியும். பல நாட்டுப் பணியாளர்களுடன் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த ஒருவர், "உலகளவில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களும், பாரத அளவில் பீகாரிகளும் மோசமானவர்கள்" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஒரு குடும்பம் தப்பு செய்ததை வைத்து மொத்த நாட்டிற்கும் அவப்பெயர் ஏற்படுத்தக் காரணம்?

சந்திராயன் 2 & அடுத்து மனிதர்களைக் கொண்டு செல்லும் நம் ISROவின் திட்டம்!!

சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்ட பின், மீம்ஸ் போர்வையில் நம்மை கிண்டலடித்தனர். எந்தவிதத்திலும் நம்மைப் பற்றி நாம் உயர்வாக நினைத்து விடக்கூடாது என்பதே குறிக்கோள். இந்நிலையில் பாலியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவும், அவர்களது பணி சுலபமாகிவிட்டது.

இந்த சோரம் போன ஊடக ஆராய்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். எவ்வளவு பணமிருந்தாலும், படித்திருந்தாலும், பட்டறிவு இருந்தாலும் நம்மவர்களில் பெரும்பாலானோர் ஏன் குறுகிய / சிறு புத்தியுடையவர்களாகவே இருக்கின்றனர்?

எனக்கு 2 காரணங்கள் தோன்றுகின்றன.

திருவண்ணாமலை மலைவலம் செல்லும் போது கவனித்திருப்பீர்கள். செங்கம் பாதை பிரிவிலிருந்து, சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு, நடைபாதையோரம் சில நூறு பிச்சைக்காரர்கள் அமர்ந்து/வாழ்ந்து கொண்டிருப்பார்கள் (இவர்கள் அனைவரையும் சிவனடியார்கள் என்றழைப்பது சரியல்ல). சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் கூட, யார் எந்த உணவைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வர். அடுத்த வேளை வரை அவ்வுணவு நன்றாக இருக்குமா? தமக்கு தேவைப்படுமா? வேறு யாரும் உணவு தருவரா? போன்ற எந்த சிந்தனையும் இல்லாமல் வருவதை, கிடைப்பதை வாங்கி வைத்துக்கொள்வர். ஏனெனில், அதற்கு முன்னர், பல காலம், விழா நாட்கள் தவிர ஏனைய நாட்களில் யாரும் வரமாட்டார்கள், எதுவும் கிடைக்காது என்ற பட்டறிவு அவர்களிடம் இருந்ததால். இன்று, நிலைமையே வேறு! குறைந்தது மதிய உணவாவது கிடைத்துவிடுகிறது. சில அன்பர்கள், சில முதியவர்களுக்கு வருடம் முழுக்க உணவு கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விளைவு? தள்ளுமுள்ளு இல்லை. தேவையில்லாமல் வாங்கிப் பதுக்குவதில்லை. சிலர், சுமாரான உணவு என்று தெரிந்ததால் பெற்றுக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அதாவது, #பிச்சைக்காரத்தனம் என்ற சொல் எதை வைத்து உருவானதோ அது இவர்களிடம் இன்று இல்லை!!

இதே போன்று, நாளை என்பது உறுதியாக வேண்டும். இதற்கு, நிலையான, வலுவான, நியாயமான & நேர்மையான அரசுகள் தொடர்ந்து அமையவேண்டும். அப்படி அமைந்தால், நம்மவர்களிடமுள்ள பிச்சைக்காரத்தனம் காணாமல் போகும். தேவையில்லாமல் பொருள் சேர்க்கமாட்டார்கள். இருந்தும் இல்லாதவர் போல் வாழமாட்டார்கள். தேவையானதை சம்பாதித்து, தாராளமாக செலவும் செய்வார்கள்.

அடுத்து, #ஒட்டுண்ணிகள்.

உடல் பிடிக்காத சிறு குழந்தைகளை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால். அவர்கள் முதலில் கொடுக்கும் மருந்து வயிற்றிலுள்ள ஒட்டுண்ணி குடற்புழுக்களை அழிப்பதற்காகத் தானிருக்கும். அந்த புழுக்கள் வயிற்றில் இருக்கும் வரை குழந்தை பெருகாது. இது போன்றது தான் நமது நிலையும். சொந்த குடும்பத்திலிருநது ஆரம்பித்து சமூகம், மாநிலம், நாடு, பரங்கியர்கள் என பல நிலைகளில் ஒட்டுண்ணிகள் நம்மால் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நமக்காக மட்டும் சம்பாதிக்காமல் பலருக்கும் சேர்த்து சம்பாதிப்பதால், நமக்கு வருவதும், நம்மிடம் தங்குவதும் குறைந்துவிடுகிறது. அடையாள நாணய (டோக்கன் கரன்சி) முறை, அதிலும் இப்போதுள்ள மின்னனு முறை, உள்ள வரை மற்றும் கல்லெண்ணை (பெட்ரோல்) கிடைக்கும் வரை ஒட்டுண்ணிகள் பெருகிக் கொண்டேதானிருப்பர்!!

இயற்கை சார்ந்த, தற்சார்பு வாழ்க்கை ஒன்று தான் ஒட்டுண்ணிகளை ஒழிக்கும்!! (இந்த வரியை மட்டும் விரித்து ஒரு புத்தகமே எழுதலாம்)

☀️🌧️🌴🌳🌾

ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரறுகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச்
சென்று வரஅணித்தாய்ச் செய்வாரும் சொற்கேட்டால்
என்றும் உழவே இனிது.

-- ஒளவையார் 🌺🙏🏼 (தனிப்பாடல்கள்)

பொருள்: இரண்டு ஏர்களாவது இருக்க வேண்டும். வீட்டிலேயே விதைகள் இருக்க வேண்டும். அருகிலேயே நீர்வளமுள்ள நிலமாக இருக்க வேண்டும். அந்நிலமும், சென்று வருவதற்கு ஏற்றவாறு ஊருக்கருகில் இருக்க வேண்டும். இத்துணையும் அமைந்து, சொற்படி நடக்கும் பண்ணையாட்களும் அமைந்தனரானால், என்றும் உழவே இனிய தொழிலாகும்.

(இன்றுள்ள அனைத்துத் தொல்லைகளும் அன்றும் இருந்தன போலும்!! 😏)

Monday, August 5, 2019

கிரிவலம் தெரியும். அது என்ன மரிவலம், நரிவலம்ன்னுட்டு? 🤔



மெழுகுவர்த்தி மட்டும் தான் புடிச்சுட்டு வரலாமா? இல்ல, மரியாள் விளக்கு, பிணக்குறியீடு விளக்கெல்லாம் கூட புடிச்சிகிட்டு வரலாமா? மெழுகுவர்த்தில கெமிக்கல் அதிகமாயிடுச்சு. அதான். 😁


"2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா"ன்ற ஒப்பாரி ட்ரூப் எல்லாம் உண்டா? போரடிக்கக் கூடாது, இல்லீங்களா? 😜


திருவண்ணாமலையில அடிக்கொரு லிங்கமாம். பர்வதமலையில சாணுக்கொரு லிங்கமாம். இங்க எப்புடி? அடிக்கொரு பாவாடையா? இல்ல, சாணுக்கொரு பாவாடையா? 😝


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


இவர்களை விட, இஸ்ரவேல் அத்வைதி யேசுவைத் தான் சொல்லவேண்டும்!!


பாரதம் வந்தோமா, அத்வைதம், பௌத்தம் கற்றோமா, ஒரு வழியை இறுகப் பிடித்தோமா, மெய்யறிவு பெற்றோமா, உடலை விட்டோமா என்றில்லாமல், தனது இனமக்களை உய்விக்கிறேன் பேர்வழியென்று, குரங்கு கையில் பூமாலையை கொடுத்தது போன்று, மூடர்களிடம் போய் அத்வைதத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் கரடியாய் கத்தியும், சுற்றியிருந்த கூட்டம் கண்டது இவருக்கு கிடைத்த ரொட்டியையும், ஒயினையும் தான்:


இத பாரு மச்சான், இப்புடி புரியாதபடிக்கு பேசுனா, நமக்கு சாப்பாடு, ஒயினு, ஒத்தாசைக்கு 4 தடியனுங்க கெடப்பாங்க. ஜாலியா காலத்த ஓட்டிடலாம். என்ன சொல்ற?


இவர்களது மொத்த சித்தாந்தமும் இவ்வளவு தான்!! 🤑🤑🤑