Tuesday, July 25, 2023

திருக்கழுக்குன்றக் கழுகுகள் பற்றிய புகழ்பெற்ற புனைவும், அதன் உட்பொருளும்


திருக்கழுக்குன்றக் கழுகுகள் பற்றிய புகழ்பெற்ற புனைவு:

கழுகுகள் இராமேசுவரத்தில் குளித்து, கழுக்குன்றத்தில் உணவு உண்டு, காசியில் அடைக்கலம் ஆவதாக தொன்நம்பிக்கை.

இப்புனைவின் உட்பொருள்:

🌷 இராமேசுவரம்

> இராமேசுவரம் - கடல்.
> கடல் - உடல்.
> இராமேசுவரத்தில் குளித்து - கடலில் குளித்து - உடலில் வாழ்ந்து.

🌷 கழுக்குன்றம்

> கழுக்குன்றம் - தலை / முகம். விழிப்பு நிலையில் நமது கருத்து பெரும்பாலும் தலையில் / முகத்திலிருக்கும். மனம் அங்கிருந்து இயங்குவதாக கணக்கு. மனதில் எண்ணங்கள் ஓயாமல் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

> கழுக்குன்றத்தில் உணவு உண்டு - மனதில் தோன்றும் எண்ணங்களின்படி அலை கழிந்து.

🌷 காசி

> காசி - ஒளிபொருந்திய / இருளற்ற இடம். 
> இருள் - உடல், வையம் ஆகியவற்றை உண்மையென்று நம்பும் அறியாமை.
> ஒளி - நாமே உள்ளபொருளென்ற மெய்யறிவு. நமது தன்மையுணர்வு.
> காசியில் அடைக்கலம் ஆவது - நாம் நாமாக - நமது தன்மையுணர்வாக (சிவமாக) - மட்டுமிருப்பது.

இப்போது, எல்லாவற்றையும் இணைத்துப் பார்ப்போம்:

பிறவியெடுக்கும் உயிர்கள் (கழுகுகள்) உடலின் வழியே வையத்தை நுகர்ந்துகொண்டு, மனதில் தோன்றும் எண்ணங்களின் படி அலைகழிக்கப்பட்டு, இறுதியில், நிலைபேற்றினை அடையும்.

oOo

🌷 கழுக்குன்றம் என்ற சொல்லிற்கு வேறொரு பொருளும் காணலாம்:

> கழு - கூர்மையான
> குன்றம் - மலை - நெடிய - உயர்ந்த
> கழு + குன்றம் - கூர்மையான அறிவு கொண்ட உயர்ந்த மனிதர் - மெய்யறிவாளர்!!

இப்போது மீண்டும் பொருள் காண்போம்:

உடலெனும் [இராமேசுவர] கடலில் மூழ்கியிருக்கும் உயிர்கள், தக்க சமயம் வந்தபின், [கழுக்குன்றமாகிய] மெய்யறிவாளரின் தொடர்பு பெற்று, அவர் கூறும் அறிவுரைகளை கேட்டு [உணவு உண்டு], இறுதியில், [காசியாகிய] நிலைபேற்றினை அடையும்.

(இணைப்புப்படம்: திருக்கழுக்குன்றம் மலைக்கோயில் உடையவர் 🌺🙏🏽🙇🏽‍♂️)

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, July 22, 2023

திருப்பனந்தாள் திருக்கோயிலின் புனைவுக்கதையும் (தலவரலாறு) அதன் உட்பொருளும்!


🔸 புனைவுக் கதை

மகப்பேறு வேண்டி, வழிபாடு செய்து, தனக்கு மாலையணிவிக்க முயன்ற தாடகை என்ற பெண்ணுக்காக, இத்திருக்கோயிலின் உடையவரான திரு செஞ்சடையப்பர் சற்றே சாய்ந்தார். பின்னர், சாய்ந்த நிலையிலேயே இருந்தவரை, மன்னர் மணிமுடி சோழன் (திரு மங்கையர்கரசியாரின் தந்தை) தனது படை கொண்டு நிமிர்த்த முயற்சித்து தோல்வியடைந்தார். இதை கேள்விபட்டு அங்கு வந்த திரு குங்கிலியக்கலய நாயனார், உடையவரின் மீது கட்டப்பட்டிருந்த கயிற்றையெடுத்து தனது கழுத்தில் கட்டிக்கொண்டு, "ஒன்று உடையவர் நிமிரவேண்டும். இல்லையேல், தான் மடியவேண்டும்." என்று உறுதி பூண்டு இழுக்க, அவரது அன்புக்கு கட்டுப்பட்டு உடையவரும் நிமிர்ந்தார்.

🔸 உட்பொருள்

🌷 தாடகை

அன்னை மாயை (ஆணாகயிருப்பின், மாயோன்). மனதை குறிக்கும்.

🌷 தாடகை வேண்டும் மகப்பேறு

எண்ணங்கள் -> செயல்கள் -> விளைவுகள் -> எதிர் விளைவுகள்...

சிவ நிலையிலிருப்போர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே மேற்சொன்னவை நடக்கும். அப்படி விட்டுக் கொடுத்தால் பிறவி ஏற்பட்டுவிடும். இதுவே "திரு செஞ்சடையப்பர் சற்றே சாய்ந்தார்" என்பதின் பொருளாகும்.

🌷 மன்னர் மணிமுடி சோழன்

"நான்", "எனது" தொடங்கி, பல வகையான பற்றுகளை (செல்வங்களை) சேர்த்து வைத்திருக்கும் நபர்.

🌷 மன்னரது முயற்சிகள்

புறமுக முயற்சிகள். எத்தனை நூல்கள் படித்தாலும் இறைநிலை கிட்டாது. அவை வழிகாட்டும். இறைநிலையை கொடுத்துவிடாது. பெரும் பொருள் செலவு செய்து, பல திருக்கோயில்களுக்கு சென்றாலும், பல திருப்பணிகளை செய்தாலும் இறைநிலை கிட்டாது. அவை நல்வினைப் பயன்களை கொடுக்கும். இறைநிலையை கொடுக்காது.

🌷 குங்கிலியக்கலய நாயனார்

எல்லாப் பற்றுகளையும் விட்டொழித்தவர். இறைசிந்தனையை தவிர வேறு சிந்தனையில்லாதவர். குடும்ப வாழ்விலும் இருப்பவர்.

🌷 நாயனார் உடையவரை தன் கழுத்தால் கட்டியிழுத்து நிமிர்த்தியது

> வையகம் என்பதென்ன? சுவை, ஒளி, ஊறு, ஓசை & நாற்றம் (திருக்குறள் #27). இவற்றில் ஊறு என்ற புலன் மட்டும் உடல் முழுவதும் பரவியுள்ளது. மீதமனைத்தும் கழுத்துக்கு மேலேயுள்ளன. கழுத்தில் கயிறு கட்டுவதென்பது இப்புலன்களின் வழியே பெறப்படும் வையகக் காட்சியை நமக்குள் செல்லவிடக்கூடாது என்பதாகும்.

> நாம் அழியும் பொருளல்ல. அசையும் பொருளுமல்ல. நாமே உள்ளபொருள். இவ்வுண்மைகளை உணர்ந்து, நம்மை நாமே நிமிர்த்திக் கொள்ளவேண்டும். நம்மில் (நமது தன்மையுணர்வில்) நாமே உறுதியாக நிற்றல்வேண்டும். இதுவே உடையவரை நாயனார் நிமிர்த்தினார் என்பதின் பொருளாகும்.

oOo

மேற்கண்டவற்றை சுருக்கினால்:

- மனதை சலிக்கவிடக்கூடாது
- சலிக்கவிட்டால் நம் நிலை தாழ்ந்துபோகும்
- இறைநிலையை புறமுகத்தில் தேடக்கூடாது
- அகமுகமாக தேடவேண்டும்
- வையகக் காட்சிகளால் பாதிப்படையக் கூடாது
- நமதுண்மையை உணர்ந்து அதில் நிலைபெறவேண்டும்

இக்கருத்துகள் மக்களிடையே எளிதில் பரவுவதற்கும், என்றும் நிலைத்து நிற்பதற்கும் யாரை வேண்டுமானாலும் வைத்து கதையை புனைந்திருக்க முடியும். ஏன் சோழ மன்னரையும், நாயனாரையும் தேர்ந்தெடுத்து சிறப்பித்தார்கள்? ஏனெனில், அத்திருக்கோயிலுக்கு / அப்பகுதிக்கு அவர்களது பங்களிப்பு அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கும். இதை வையகம் மறவாதிருப்பதற்காக அவர்களை வைத்து கதையை புனைந்துள்ளனர்.

கதைகள், உவமைகள், எடுத்துக்காட்டுகள் என யாவும் இப்படி எழுதப்படவேண்டும். அந்தந்த பகுதிகளின் அடையாளங்களை, அருமை பெருமைகளை பேசவேண்டும். ஆனால், நம் தலையெழுத்து நமக்கு மூன்று 🤬-கூட்டங்கள் வாய்த்துள்ளன:

👊🏽 ஒரு கூட்டம், ரிஷிவர்ஷா ஐட்டங்களின் பின்னால் சென்றவனை வைத்து படங்காட்டும்
👊🏽 இன்னொரு கூட்டம், அரேபியாவில் ஒட்டகச்சாணி அள்ளிக் கொண்டிருந்தவனை வைத்து புருடா விடும்
👊🏽 மற்றுமொரு கூட்டம், ஐரோப்பாவில் பிளேடு போட்டுக் கொண்டிருந்தவனை வைத்து பீலா தள்ளும்

ஓர் இனத்தை அவ்வினமேதான் ஆளவேண்டும். நம்மை நம்மில் பண்பட்டோரே தொடர்ந்து ஆட்சி செய்திருந்தால், பராமரித்திருந்தால்... 😍😍!!

என்றாவதொரு நாள் மீண்டும் நல்லது நடக்கும்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Sunday, July 16, 2023

பூரி ஜெகந்நாதர் திருக்கோயில் இறையுருவங்கள்!


வையகக் காட்சி விலகி, திருநீற்று நிலை (ஆரியத்தில், சமாதி) தொடங்கியதும், சில தெளிவில்லாத காட்சிகளை அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) தோற்றுவித்து, நம்மை மீண்டும் வையகத்திற்குள் தள்ள முயற்சிப்பார். அந்த தெளிவில்லாத காட்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவைதாம் இந்த இறையுருவங்கள்.

இப்போது நாம் காணும் முத்திரட்சிக் (ஆரியத்தில், முப்பரிமாணம்) காட்சிகளை போலல்லாது, திருநீற்று நிலைக் காட்சிகள் இருதிரட்சிக் காட்சிகளாக இருக்கும். பழைய கருப்பு-வெள்ளைத் திரைப்படங்களை காணும்போது, படச்சுருள் முடியும் தருவாயில், சில கீறல்கள் தெளிவில்லாமல் திரையில் ஓடுவதைப் பார்த்திருப்போம். இவ்வண்ணமே திருநீற்று நிலைக் காட்சிகள் இருக்கும். இக்காட்சிகளே பூரி இறையுருவங்களின் அடிப்படையாகும்.

திருநீற்று நிலையின் தொடக்கமே இறுதிநிலை என்று கணக்கிட்டு, அப்போதுள்ள காட்சியை படம்பிடிப்பது போன்று கருவறை இறையுருவங்களை உருவாக்கியுள்ளனர். உடன், அவர்களது வைணவ நம்பிக்கைகளையும் சேர்த்துள்ளனர்:

🔸 இருளே பெரிது. எக்கணமும் இடைவிடாது இருப்பது.

திரு கண்ணபிரான் - கருப்பு நிறம். பெரிய உருவம். வட்டவடிவக் கண்கள். இடைவிடாது எக்கணமும் இருப்பதைக் குறிக்கும்.

🔸 இருளிலிருந்து ஒளி பிறந்தது. ஒளி தோன்றி மறையக்கூடியது.

திரு பலராமர் - வெள்ளை நிறம். கண்ணபிரானை விட சற்று சிறிய உருவம். முட்டைவடிவக் கண்கள். ஒரு புறம் குவிந்தும், மறுபுறம் விரிந்துமிருக்கும். தோன்றி மறைவதைக் குறிக்கும்.

🔸 இறுதியாக காட்சிகள் பிறந்தன. காட்சிகளும் தோன்றி மறையக்கூடியவை.

திரு சுபத்திரை - மஞ்சள் நிறம். விளையாட்டுப் பிள்ளையை நினைவுபடுத்தும் சிறிய உருவம். பலராமரைப் போன்ற முட்டைவடிவக் கண்கள்.

இம்மூன்று உருவங்களையும் சற்று மாற்றி சிந்தித்தால்... இறை-உயிர்-தளை (ஆரியத்தில், பசு-பதி-பாசம்கிடைத்துவிடும்! ☺️

மேலும், பூரி இறையுருவங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையை சிந்தித்தால்... உமைமுருகுஈசர் (ஆரியத்தில், சோமாஸ்கந்தர்) கிடைத்துவிடுவார்! 😏

🌷 உமைமுருகுஈசர்: கணவன் + விளையாட்டுப் பிள்ளை + மனைவி

🌷 பூரி: அண்ணன் + விளையாட்டுத் தங்கை + தம்பி

ஆனால், ஒரு பெரிய வேறுபாடுள்ளது. நம் பெரியவர்கள் இறை-உயிர்-தளை என்று மூன்று முடிவில்லாத பொருட்களை வரையறுத்திருந்தாலும், உமைமுருகுஈசர் என்ற இறையுருவை வடித்திருந்தாலும், கருவறையில் வைத்தது சிவலிங்கமென்ற ஓர் இறையுருவை மட்டுமே! ஏனெனில், இருப்பது ஒரு பொருளேயாகும். திருநீற்று நிலையின் தொடக்கத்தில் வேண்டுமானால் 2 அல்லது 3 பொருட்கள் இருப்பதுபோன்று தோன்றலாம். ஆனால், அந்நிலை தொடரும்போது, இருப்பது ஒரு பொருளே என்பது தெளிவாகும்.

🌷 சிவலிங்கத்தின் வளைந்த மேல்பகுதி - உள்ளபொருள் முடிவற்றது

🌷 சிவலிங்கத்தின் சீரான தண்டுப்பகுதி - உள்ளபொருள் மாற்றமடையாதது

oOo


வைணவத்தின் சின்னமாக பெண்குறியை மட்டும் இராமானுஜர் அறிவித்தார். ஆனால், மற்ற பகுதிகளில் வாழ்ந்த வைணவர்கள், தங்களது தனித்தன்மையை காட்டுவதற்காக அதில் சில மாற்றங்களை செய்துகொண்டனர். பூரி பகுதியில் வாழ்ந்தோர், பெண்ணுறுப்பின் வெளித்தோற்றத்தோடு, பெண்ணுடலின் உட்புறத்தில், இரு பக்கங்களிலுமுள்ள கருமுட்டைப் பைகளையும் சேர்த்துக்கொண்டனர். கருமுட்டைப் பைகளை இறையுருவின் காதணிகளாகவும், பெண்ணுறுப்பின் வெளிப்புறத்தோற்றத்தை கழுத்தணியாகவும் காட்டியுள்ளனர்.

குருவாயூர் பகுதியில் வாழ்ந்தோர், பெண்ணுறுப்பின் உட்புறத்தோற்றத்தை, குறிப்பாக கருப்பையையும், கருமுட்டைப் பைகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். இவற்றை குருவாயூர் உடையவரை சுற்றியுள்ள ஒப்பனையில் காட்டியுள்ளனர்.

oOo

இராமானுஜருக்கு முன்னர் நாமச்சின்னம் கிடையாது. 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் வைணவமே கிடையாது. ஆனால், பூரி திருக்கோயில் வெகு பழமையானதாக கருதப்படுகிறது. எனில், 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கருவறையில் இருந்த இறையுரு எது?

வடக்கிலிருந்து வந்த பெளத்தம் போனியாகாத நிலை ஏற்பட்ட பிறகு, அதிலிருந்து ஒரு பகுதியினர் வைணவத்தை உருவாக்கி, தொழிலைத் தொடர்ந்தனர் என்பது வரலாறு. எனில், 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் பூரி திருக்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்ததா?

ஆனால், அத்திருக்கோயிலின் கருவறை பல்லாயிரமாண்டுகள் பழமையானது என்கிறார்கள். பௌத்தத்தின் வயதோ 2,500 ஆண்டுகள் மட்டுமே. இதிலும், 500-700 ஆண்டுகள் கழித்தே அது தெற்கில் பரவத்தொடங்கியது. எனில், பௌத்தத்திற்கு முன்னர் அக்கருவறையில் இருந்த இறையுரு எது? அக்கருவறையின் கீழ் திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானின் கண்ணோட்டம்தான் யாது?

உடலாக (பூரி) உலகைக் (ஜெகம்) கொண்ட தலைவனாக (நாதன்) வைணவர்கள் போற்றும் அந்த பூரி பெருமானுக்கே வெளிச்சம்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Friday, July 7, 2023

ஆரியப்பெயர் சூட்டப்பட்ட நமது பெருமான்கள்!!



🌺🙏🏽🙇🏽‍♂️

திரு புள்ளிருக்குவேளூரான் (திரு வைத்தியநாதப் பெருமான், வைத்தீசுவரன் கோயில்)

இவ்வுடையவரின் கீழ் திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான்... ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையான திரு தன்வந்திரி பெருமான்!!

🌹 இங்கு திரு தன்வந்திரி பெருமான்.
🌹 திருமறைக்காட்டில் திரு விசுவாமித்திர மாமுனிவர்.
🌹 திட்டக்குடியில் திரு வசிஷ்ட மாமுனிவர்.
🌹 திருவான்மியூரில் திரு வால்மீகி மாமுனிவர்.
🌹 திருச்செங்கோட்டில் திரு பிருங்கி மாமுனிவர்.
...

என்ன, "புகழ்பெற்ற ஆரிய மாமுனிவர்கள் எல்லோரும் இங்கு குடி கொண்டிருக்கிறார்களே!" என்று தோன்றுகிறதா? ☺️

இவர்கள் ஆரியர்களல்லர்! ஆரியப்பெயர் சூட்டப்பட்ட நம்மவர்கள்!!

ஓரினம் இன்னொரு இனத்தை வென்றவுடன் அதன் அடையாளங்களை அழிக்கத் துவங்கும் (எ.கா.: ஹைதராபாத், அலகாபாத், இந்தியாவின் மான்செஸ்டர், இந்தியாவின் ஸ்காட்லாந்து...). வடக்கிலிருந்து வந்த களப்பிரர்கள், பல்லவர்கள் மற்றும் அவர்களுடன் நுழைந்த சமணர்கள் & பௌத்தர்கள் செய்த வேலைகளில் ஒன்று நமது ஊர், காடு, மலை, நதி ஆகியவற்றின் பெயர்களை மாற்றியதாகும். இவர்கள் விட்டுவைத்த இறைவன் & மக்களின் பெயர்களை, பின்னர் வந்த வைதீகர்கள் & பௌத்தத்திலிருந்து தோன்றிய நாம மதத்தினர் மாற்றினர்.

பசுபதீசுவரர் என்றழைப்பதால் கரூர் பெருமானின் புகழ் ஓங்கிவிடாது. ஆநிலையப்பர் என்றழைப்பதால் அவரது புகழ் குறைந்துவிடாது. ஆனால், எளியவரையும் சிந்திக்கவைக்கும்; மேம்படுத்தும்.

oOOo

என்றுமுள திருநெறியத் தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Monday, July 3, 2023

மார்க்கப் பற்றாளராக மாற முடியாமல் தவிக்கும் குறிமதத்தவர்கள்!!


என்ன செய்யறது, ஹாஜி? உங்க முன்னோரப் போல நீர் நிலைகளில நஞ்சு கலக்கமுடியுதா? பயிர்களுக்கு தீ வெக்கமுடியுதா? பால் கொடுக்குற மார்கள அறுத்தெரியமுடியுதா? ஒரே சேலையில அம்மாவையும் குழந்தையையும் தொங்கவிடமுடியுதா? ஆம்பளைங்கள குழி தோண்டி உயிரோட புதைக்கமுடியுதா? பொம்பளைங்கள பிறந்தமேனியா நகர்வலம் வரவைக்கமுடியுதா? நூலகங்கள எரிக்கமுடியுதா? கலைச்செல்வங்கள சிதைக்கமுடியுதா? மொத்தத்துல, மார்க்கப்பற்றாளரா இருக்கமுடியுதா?

உங்க போதாத நேரம், மோகன்தாஸ் மாதிரி சீப்-ஆத்மாக்களும் இப்போ பிறக்கறதில்ல. இல்லேன்னா, அவங்கள வைச்சு, "குறிமதத்தான் அவனோட மதநம்பிக்கையின் படி, கற்பழிக்கத்தான் செய்வான். நீ உன்னோட மதநம்பிக்கையின் படி, உடம்ப கொடுத்துட்டுப் போ"-ன்னு கொம்பு சீவவும் முடியல!

கொஞ்சம் பொறுங்க, ஹாஜி. ஒரு நாள் இல்லனாலும் ஒரு நாள், கான்-கிரஸ் ஆட்சிக்கு வரத்தான் செய்யும். அப்போ, கொஞ்சமா, காஷ்மீர்ல காண்பிச்ச மாதிரி, உங்க மார்க்கப்பற்ற காமிக்கலாம். அப்புறம், பாபர், ஒளரங்கசீப், திப்பு மாதிரி "இறைவனின் திருப்பிள்ளைகள்" ஆட்சிக்கு வரும்போது உங்க மார்க்கப்பற்ற முழுசா காமிக்கலாம். சைத்தான் மிகப்பெரியவன், ஹாஜி. நம்பிக்கை இழந்துடாதீங்க.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Sunday, July 2, 2023

மெக்காலே & பகுத்தறிவு பேய்களுக்கான வேப்பிலைக்கட்டு!! 😃


அண்மையில், மெக்காலே பேய்யடித்த ஒரு நபரை சந்திக்கநேர்ந்தது! 😃 அவரை பிடித்திருந்த பேயை ஓட்டுவதற்காக நான் பயன்படுத்திய வேப்பிலைக்கட்டு பின்வருமாறு: 😛

- கிமு - கிபி
- அலெக்சாண்டர்
- கெப்ளர், நியூட்டன்
- மோனாலிசா
- ஆங்கிலம்
- கஜினியின் 17 படையெடுப்புகள்
- தாஜ்மகால்

இவையெல்லாம் நமது தாழ்வு / அடிமை மனப்பான்மையை நீட்டிப்பதற்காக பயன்படுத்தப்படும் நுட்பங்கள் / குறியீடுகளாகும்!

1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டன் என்ற நகரம் ஒரு சிறு மீனவக் குப்பமாக இருந்தது. ஒரே கிண்ணத்திலுள்ள நீரைக் கொண்டு, குடும்பத்தலைவன் முதல் கடைசிக் குழந்தை வரை பல்துலக்கி, முகம் கழுவியுள்ளனர்! இப்படி செய்வதால் குடும்பம் ஒற்றுமையாக இருக்குமென்று கருதியுள்ளனர். 500 ஆண்டுகளுக்கு முன்னர்கூட நாம் வாழும் புவி தட்டையானது என்று கருதியுள்ளனர். புவியைத்தான், பகலவன் முதல் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்றும் கருதியுள்ளனர்.

oOo

இப்போது, நம் முன்னோர்களைப் பற்றி பார்ப்போம்.

ஞாயிறு என்ற ஒரு சொல் போதும். இச்சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தின் வயது குறைந்தது 5,000 ஆண்டுகளாகும். ஆரியர்களின் இருக்கு (ரிக்) திருமறை தொகுக்கப்படுவதற்கு முன்னரே தொல்காப்பியம் எழுதப்பட்டுவிட்டது என்கிறார் தமிழ் தாத்தா (உவேசா).

ஞாயிறு - ஞா + இறு - நடுவிலிருப்பது & இறுகப்பற்றுவது.

எனில், அன்றே, பகலவன்தான் நடுவில் இருக்கிறது என்ற அறிவும், அனைத்து கோள்களையும், அது, தனது ஈர்ப்பு விசையால் இறுகப்பற்றியுள்ளது என்ற அறிவும் நம் முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

இன்று ஒரு செய்தி சில மணித்துளிகளில் உலகம் முழுவதும் பரவிவிடுகிறது. ஆனால், அன்று இப்படியல்ல. ஒரு செய்தி வையகம் முழுவதும் பரவுவதற்கு சில நூற்றாண்டுகளாவது ஆகும். எனில், மனிதன் தோன்றி, ஒலியோசை முறைபடுத்தப்பட்டு, எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, சொற்கள் உருவாக்கப்பட்டு, பகலவனைத்தான் கோள்கள் சுற்றி வருகின்றன என்ற உண்மை உணரப்பட்டு, இவ்வறிவை வைத்து ஞாயிறு என்ற சொல் உருவாக்கப்படுவதற்கு... எத்தனை ஆயிரமாண்டுகள் ஆகியிருக்குமென்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.

"இயற்கையில், ஓர் அணு எவ்வாறு தோன்றி, நிலை பெற்று & அழிகிறதோ, அவ்வாறு இயங்கும் மொழிதான் தமிழ் மொழி" என்கிறார் மறைந்த திரு கணபதி ஸ்தபதி அவர்கள். நம் மொழி, பண்பாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சமயம் ஆகியவை, காலத்தால், அனைத்தையும் முந்தையதாகும். இவ்வளவு வரலாறோ, செழுமையோ, நம்மை அடிமைபடுத்திய வெள்ளையர்களுக்கோ, முகமதியர்களுக்கோ கிடையாது. எனவே, நம்மை மட்டம் தட்ட, நமது மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைக்க, அவர்கள் கண்டுபிடித்த நுட்பங்கள்தாம் நான் மேலே பட்டியலிட்டவையாகும். இந்த விதைகளை தொடர்ந்து விதைக்க அவர்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகளில் ஒன்றுதான் பகுத்தறிவு!

oOo

👊🏽 அலெக்சாண்டர் மாவீரனல்ல; மா கொடூரன். நமது மன்னர் புருஷோத்தமனிடம் தோற்றுப்போனவன். தோற்றுப்போன வயிற்றெரிச்சலில், திரும்பிச் சென்ற வழியெங்கும் அட்டூழியத்தை கட்டவிழ்த்துவிட்டவன்.

👊🏽 கெப்ளர், நியூட்டன் - எல்லோரும் திருட்டுப்பயல்கள். நமது பெரியோர்களின் கண்டுபிடிப்புகளை, தங்களது கண்டுபிடிப்புகளாக அவர்களது நாட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள்.

👊🏽 ஆவுடையார்கோயிலிலுள்ள கலைச்செல்வங்களின் மேல் படிந்திருக்கும் தூசுக்கு சமமாகாது மோனாலிசா வரைபடம்.

👊🏽 ஆங்கிலம் என்பது "மொழிகளில் பரத்தை" ஆகும்! இந்த மொழியை சீராக்கியதும் நம் தமிழர்கள்தாம் என்று, பல ஆண்டுகளுக்கு முன்னர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

👊🏽 காட்டுமிராண்டி கஜினியை விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக நம் தலையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். 17 முறையும், தரும அடி வாங்கித் திரும்பிச் சென்றவன் என்பதையும், ஒரு முறை, ஒரு குஜராத்திய பெண் படையிடம் துடைப்பக்கட்டையால் அடிவாங்கி, திரும்பி ஓடியவன் என்பதையும், இங்கிருந்து அவனுக்கு கிடைத்த சில்லறைக்காக, தரும அடி வாங்கினாலும், திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தான் என்பதையும் மறைத்திருக்கிறார்கள்.

👊🏽 இவ்வாறே, தைமூரும் ஒரு கூர்ஜர பெண்படையிடம் தோற்று ஓடியவன் என்பதையும் மறைத்திருக்கிறார்கள்.

👊🏽 கலவிநிலைய அமைப்பில் கட்டப்பட்டுள்ள காமக்கொடூரத்தின் சின்னமான தாஜ்மகால் ஒன்றும் வியக்கவைக்கும் கட்டிடமல்ல. எல்லோராவில் இருக்கும் கயிலாசநாதர் குடைவரையே உண்மையில் வியந்து, போற்றவைக்கும் மனித சிந்தனையும், கற்பனையும் & உழைப்பாகும்! 💪🏽

oOo


அடுத்தது, பகுத்தறிவு.

(மெக்காலே பேய் புகுந்தவிடத்தில் பகுத்தறிவு பேயும் உடன் புகுந்துவிடுகிறது! 😁)

இந்த கூட்டத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால், ஒரேயொரு செய்தியுடன் முடித்துக் கொள்கிறேன்.

தான் சம்பாதித்த பொருள் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக தான் வளர்த்த மகளையே திருமணம் செய்து கொண்டார் இராமசாமி. இதனால், இனி பைசா தேறாது என்ற முடிவுக்கு வந்த அண்ணாதுரை, திராவிடர் கழகத்தைவிட்டு வெளியேறினார். அடுத்து வந்த தேர்தலில் நிற்கும் போது, தன்னை முதலியார் என்று குறிப்பிட்டுக் கொண்டார். அப்போது, "தாசிமகனுக்கு முதலியார் என்ற வால் முளைத்துள்ளது" என்று நக்கலாக பேசினார் இராமசாமி. இது உண்மையும் கூட. அண்ணாதுரையின் தாயார், அந்திராவிலிருந்து வந்த ஒரு தெலுங்கு பரத்தையாவார். அண்ணாதுரை பிறக்கும்போது, அவர் ஒரு முதலியாரிடம் சில காலம் இருந்தார். எனவே, அண்ணாதுரை, பிற்காலத்தில் தன்னை முதலியாரென்று அழைத்துக்கொண்டார். அண்ணாதுரையும், சில காலம், தனது உடன் பிறந்த தமக்கையின் மகளை வைத்துக்கொண்டு, அதே தொழிலை செய்து கொண்டிருந்தவர்தான்.

தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பேசி அண்ணாதுரையை அவமானப்படுத்தியதால், பதிலடியாக, திமுகவினர் இராமசாமியை எதிர்த்து 16 கேள்விகளை தங்களது முரசொலி இதழில் வெளியிட்டனர். அந்தக் கேள்விகளில் முதல் கேள்வியை மட்டும் இங்கு பகிர்கிறேன்:

10 வயதில், ஓர் ஆங்கில ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி, செருப்படி பெற்றாராமே. அந்த ஆசிரியையின் பெயரென்ன?

🤢

இவ்வளவுதான் பகுத்தறிவு இயக்கம்.

(மீதமுள்ள 15 கேள்விகளையும் நான் பகிர்ந்தால் உங்களது திறன்பேசி நாறிவிடும்!)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼