Friday, December 22, 2023

வைகுண்ட ஏகாதசி



🌷 வைகுண்ட ஏகாதசி - திரு நம்மாழ்வாரின் திருநாள்

🌷 பரமபத வாயில் வழியாக நம்பெருமாள் வெளிவருவது - அவரதுடல் இறக்கும் தருவாயில் மண்டையோடு பிளந்தது. இதை, "மண்டையோடு பிளந்து, அவர் வெளியேறினார்" என்று மாற்றிச் சொல்கிறார்கள். இது தவறாகும். மெய்யறிவு பெற்று, நிலைபேற்றினை அடைந்த அவர், எங்ஙனம் வெளியேறுவார்? எங்கு போவார்? போக்கும் வரவும் அவருக்கில்லை.

🌷 பரமபத வாயில் வழியாக வெளிவரும் நம்பெருமாள் - நம்மாழ்வாரை குறிக்கும். பெருமாளை குறிக்காது. பெருமாள் என்பது மனம், உடல் & வையகம் ஆகிய அசையும் பொருட்களாகும். நம்மாழ்வார் அசையாப் பொருளாவார்.

🌷 பரமபத வாயில் வழியாக வெளிவருவது விடுதலையை (அசுரத்தில், மோட்சம்) கொடுக்கும் - நம்மாழ்வார் அறிவுருத்திய வழியை கடைபிடித்தால், நாமும் நிலைபேற்றினை அடையலாம்.

🌷 பரமபத விளையாட்டு - நமது அன்றாட வாழ்வு.

🌷 விளையாட்டை விளையாடுவது பெருமாளும் & தாயாரும் - வாழ்வென்பது மனமும் & அறிவும் ஆடும் விளையாட்டு.

🌷 இரவு முழுக்க விளையாடவேண்டும் - "காண்பவை யாவும் உண்மை" எனும் அறியாமை (இருள் / இரவு) இருக்கும் வரை, வாழ்க்கை எனும் விளையாட்டை ஆடியாகவேண்டும்.

🌷 நோன்பிருத்தல் (அசுரத்தில், விரதமிருத்தல்) - உண்ணாதிருத்தல். மனதில் தோன்றும் எண்ணங்களையும், காணும் காட்சிகளையும் சட்டை செய்யாதிருத்தல்.

🌷 நோன்பினிடையே தேவைப்பட்டால் துளசி நீர் குடித்தல் - மேற்சொன்னவாறு எண்ணங்களையும் காட்சிகளையும் சட்டை செய்யாதிருக்கும்போது, சில சமயம், "நாம் செய்வது சரியா?" என்ற ஐயம் தோன்றும். அச்சமயம், பகவான் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகளை (துளசி நீர்) சிந்தித்து, தன்னிலையிழக்காமல் இருக்கவேண்டும்.

oOo

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- திரு நம்மாழ்வார்

இப்பாடல் முழுவதிலும் இரண்டன்மை (அசுரத்தில், அத்வைதம்) வெளிபடுகிறது. இது பற்றிய பகவான் திரு இரமண மாமுனிவரின் கருத்தை பின்வரும் திரைநகலில் காணலாம்:


oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

அனல் வாதம் புனல் வாதம்


தலைப்பை கண்டதும், திருஞானசம்பந்த பெருமானும் வடக்கிலிருந்து வந்த சமணப் படங்காட்டிகளும் நம் நினைவுக்கு வருவர்!! (வடக்கிலிருந்து வந்த எதுதான் படங்காட்டவில்லை? 😏)

வாதம் - அசுர பாஷா
வழக்காடல் - திருநெறியத் தமிழ்

🔸 தொன்ம கதை:

அனல் வழக்காடலின்போது, பெருமான் நெருப்பிலிட்ட ஏடு எரிந்து சாம்பலாகவில்லை. சமணர் இட்ட ஏடு சாம்பலாகியது. புனல் வழக்காடலின்போது, பெருமான் ஆற்றிலிட்ட ஏடு, நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது. சமணர் இட்ட ஏடு, நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது.

🔸 உட்பொருள்:

🌷 அனல் - நெருப்பு - தொடர்பு கொண்டதை சாம்பலாக்கும் - மெய்ப்பொருள்

நெருப்பை இறைவனாக காண்பது மரபாகும். "அடி முடி காணா அண்ணாமலையார்" உருவகத்தில், மெய்ப்பொருளை நெருப்பாக காண்பித்திருப்பார்கள்.

🌷 புனல் - நீர் - அசைவது - வையகம்

படைப்பை (வையகத்தை) நீராக கருதுவது மரபாகும். பள்ளி கொண்ட பெருமாள் உருவகத்தில், திருப்பாற்கடல் என்பது படைப்பை குறிக்கும்.

🌷 மெய்ப்பொருளைப் பற்றியும், வையகத்தை / வையக வாழ்வைப் பற்றியும் இருவரும் வழக்காடினர் என்பது உட்பொருளாகும். வேறு வகையாக சொல்லவேண்டுமானால், படைப்பைப் (புனல்) பற்றியும், படைத்தவனைப் (அனல்) பற்றியும் வழக்காடினர் எனலாம்.

🌷 நெருப்பிலிட்ட ஏடு...

🌟 பெருமானின் ஏடு எரிந்து சாம்பலாகவில்லை என்ற சொற்றொடரின் பொருள் என்னவெனில், மெய்ப்பொருளை பற்றிய பெருமானின் விளக்கம் அனைத்து ஆய்வுகளையும் & அனைத்து கேள்விகளையும் கடந்து நின்றது என்பது பொருளாகும். எனில், பெருமான் கடைபிடித்த / அறிவுறுத்திய சமயநெறி அன்பர்களை உய்விக்க வல்லது என்பது கண்கூடாகும்.

🔥 சமணரின் ஏடு எரிந்து சாம்பலானது எனில், மெய்பொருளை பற்றிய அவர்களது விளக்கம் பிழையானது என்பது பொருளாகும். மேலும், அவர்களது நெறியை கடைபிடித்தால்... கோவிந்தா என்பதும் கண்கூடாகும்.

(மெய்ப்பொருளை சரியாக உணர்வதென்பது ஒரு படியெனில், உணர்ந்ததை மற்றவர் புரிந்துகொள்ளும்படியாக விளக்குவதென்பது சில படிகளெனில், தீய எண்ணங்களுடன் சுற்றித் திரிந்த வடவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதென்பது... பல படிகளாகும்!! அன்று, மன்னரிடமும் மக்களிடமும் நீதியிருந்ததால், பெருமானால் வெற்றி கொள்ளமுடிந்தது. இன்றைய சூழல் அன்று நிலவியிருந்தால்...)

🌷 ஆற்றிலிட்ட ஏடு...

👎🏽 சமணரின் ஏடு நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்ற சொற்றொடரின் பொருள் என்னவெனில், சமணர் அறிவறுத்திய வாழ்க்கைமுறையை வாழ்ந்தால் ஈடேற முடியாது என்பது பொருளாகும்.

👍🏽 பெருமானின் ஏடு நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது எனில், பெருமான் அறிவறுத்திய வாழ்க்கைமுறையை வாழ்ந்தால் ஈடேற முடியும் என்பது பொருளாகும்.

அது எப்படிப்பட்ட வாழ்க்கைமுறை?

"நீரோட்டத்தை எதிர்த்து"!!

மனம் போன போக்கில், வையகம் போன போக்கில் செல்லாமல், அதற்கு எதிர்திசையில் செல்லவேண்டும். அதாவது, கண் முன்னே விரியும் வையகத்தை நோக்கி செல்லாமல், அதற்கு எதிரான நமது தன்மையுணர்வில் நிலைத்திருக்க முயற்சிக்கவேண்டும். இவ்வடிப்படையில்தான், நமது அன்றாட வாழ்க்கை முதல், பெரும் திருவிழாக்கள் வரை அனைத்தையும் நம் முன்னோர்கள் வடிவமைத்துள்ளனர். எங்கும் எதிலும் உள்ளபொருளை பற்றிய சிந்தனை நமக்கு தோன்றுமாறு செய்துள்ளனர்.

இங்கு, "இதிலென்ன தனிச்சிறப்பு இருக்கிறது? இப்படித்தானே எல்லா பண்பாடுகளும் இருக்கின்றன." என்று தோன்றலாம். இன்று வேண்டுமானால், எல்லா மதங்களிலும், எல்லா பண்பாடுகளிலும், மெய்யியில் கலந்த வாழ்க்கைமுறை இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை முதன் முதலில் உருவாக்கி, வாழ்ந்து, நிலைபேற்றினை அடைந்தது தமிழினமாகத்தான் இருக்கும்!! 💪🏽💪🏽 நம்மிடமிருந்தே, அசுரர்கள் முதற்கொண்டு, அனைவரும் தெரிந்துகொண்டனர் என உறுதியாகக் கூறலாம்.

oOo

பெரும் புகழ் பெற்ற அனல்-புனல் வழக்காடல் நிகழ்வை, 

பெருமான் x சமணர்
சைவம் x சமணம் 

ஆகிய வகைகளில் மட்டும் பார்க்குமாறு நம்மை பழக்கியிருக்கிறார்கள். இத்துடன்,

தமிழர் x வடவர்
தமிழர் x மற்றவர்

என்ற வகைகளிலும் பார்க்கவேண்டும். இப்படிப் பார்த்தால், தமிழின், தமிழரின் மேன்மையை, அருமையை இன்னும் நன்றாக உணரமுடியும்.

oOo

பெருமான் சமணரோடு மட்டும் வழக்காடினார். அன்று நாம மதம் இல்லை. பெருமானின் மறைவுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. ஒரு வேளை, அம்மதம் அன்றிருந்து, அவர்களும் வழக்காடியிருந்தால்...

நெருப்பிலிட்ட ஏடு எரியவேண்டும். ஆற்றிலிட்ட ஏடு நீரோட்டத்தோடு போகவேண்டும். அதுதான் இயற்கை. நீரோட்டத்தோடு போவதற்குத்தானே பிறந்தீர். பிறகு, ஏன் எதிர்க்கிறீர்?

என்று "அறிவாளித்தனமாக" வழக்காடியிருப்பார்கள். 😁

அதாவது, மனதை அலைபாய விடவேண்டும், ஆசைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும், பல விளைவுகளை உண்டாக்கவேண்டும், மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும்... இவையெல்லாம், "அசைவு" என்பதை அடிப்படையாகக் கொண்ட, அம்மதம் அறிவுறுத்துபவையாகும்.

அக்கார அடிசிலை கவளம் கவளமாக உள்ளே தள்ளும் பிறவி வாய்த்திருக்கும்போது, மேற்கண்டவைதான் சரியென்று அடித்துப் பேசத்தோன்றும். அதே அக்கார அடிசில் கெட்டுப்போன பிறகு, அதில் உருவாகும் புழுவாக பிறக்கும்போது தெரியும், நீரோட்டத்தோடு போவதின் விளைவு!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, December 18, 2023

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது!!


பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது -- அனுமன் என்ற வடிவத்தின் மொத்த வரலாறும் இவ்வளவுதான்!

சைவத்தோடு இணைந்த பிள்ளையார் வடிவம் மக்களிடையே ஹிட் அடித்ததால், அதற்கு போட்டியாக நாம மதத்தினர் கொண்டுவந்ததுதான் அனுமன்.

🔸 குரங்காக முடிந்ததில் என்ன தவறிருக்கிறது?

பதில்: கொரோனாவை உருவாக்கி, பில்கேட்ஸ் கோடான கோடிகள் சம்பாதித்ததில் என்ன தவறிருக்கிறது?

இவ்வையகத்தில் நடக்கும் அத்தனை அநீதிகளுக்கும், அட்டூழியங்களுக்கும் வலுவான மனமே (அனுமன்) மாறலாகும் (அசுர மொழியில், காரணமாகும்). எல்லா மதங்களும் மனதை அழிப்பதையே அறிவுறுத்துகின்றன. போற்றச் சொல்லவில்லை.

🔸 விசுவரூப ஆஞ்சநேயன் - நம் கண் முன்னே விரியும் வையகம்.

🔸 ஐந்துமுக ஆஞ்சநேயன் - நினைத்தல், சிந்தித்தல் போன்ற மனதின் ஐந்தொழில்கள்.

🔸 உளுந்துவடை / வெற்றிலை மாலை - சுண்ணாம்பு சத்து மிகுந்தவை. "உடல் வலுவானால் மனம் வலுவாகும்" என்ற கருத்தை சொல்லும் ஒப்பனை.

ஆனால், நடைமுறையில், இது தவறு என்பது அனைவரும் அறிந்ததே. வலுவான உடலும், கோழையான மனதும் கொண்ட பலரையும், வலுவான மனமும், நோஞ்சானான உடலும் கொண்ட பலரையும், அன்றாட வாழ்வில் காண்கிறோம்.

மேலும், நாம மதத்தினர் அறிவுருத்தும் ஏகாதசி நோன்பு போன்ற நோன்புகள் இதற்கு எதிரானவையாகும். நோன்பின் போது உண்ணாதிருக்கவேண்டும். உண்ணாவிட்டால் உடல் வலுவிழக்கும். உடல் வலுவிழந்தால் மனம் வலுவிழக்கும். மனம் வலுவிழந்தால் உள்ளபொருளை எளிதில் உணரமுடியும்.

💥 நோன்பு = மனதை அழிக்கும் முயற்சி
💥 அனுமன் வழிபாடு = மனதை வளர்க்கும் முயற்சி 😏

மனதிற்கு வலு சேர்ப்பதும், மனதை போற்றுவதும், மனதை வணங்குவதும் மிக மிக தவறானதாகும்!!

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் யாவர்க்கும் இது உந்தீபற

-- பகவான் திரு இரமண மாமுனிவர்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, December 17, 2023

தல புருடா, அல் புருடா, ஹோலி புருடா & உளுத்தறிவு புருடா!! 😄


👊🏽 அசுரர்கள் செய்தால் - அது முறை. திராவிடியாள்கள் செய்தால் - அது முறையற்றது. 😏

👊🏽 அசுரர் கூட்டம் "அவாளுக்கேற்ப" என்ற பூவை சுற்றியது. திராவிடியாள் கூட்டம் "காலத்திற்கேற்ப" என்ற பூவை சுற்றப்போகிறது. 

👊🏽 புராணம் என்பது புருடா. வரலாறல்ல.

👊🏽 காணொளியின் மேல்-இடது புறத்தில், குறி மதம் & எம்எல்எம் மதத்திற்கேற்ற சிலை திருட்டுத்துறையின் புதிய சின்னமுள்ளது. வலது புறத்தில், அசுரமொழி எழுத்துள்ளது. நிறைமொழி மாந்தர்களுக்கேற்ற குறியீடு எங்குள்ளது?

👊🏽 தலபுராணம் - ஸ்தல + புராணா. இதில் தென்தமிழ் எங்குள்ளது? இதையொற்றி, நாளை, குறி மதத்தான் "அல் கப்சா" எழுதுவான். எம்எல்எம் மதத்தான் "ஹோலி கப்சா" எழுதுவான்.

oOo

🔸 திருக்கோயில் குறிப்பேடுகள் எப்படியிருக்கவேண்டும்?

🌷 இறைவன் & இறைவியின் தமிழ்ப்பெயர்கள் (அசுரமொழிப் பெயர்கள் தூக்கி எறியப்படவேண்டும்)
🌷 உறுதியாக தெரிந்தால், உடையவரின் கீழிருக்கும் பெருமானைப் பற்றிய செய்திகள்
🌷 அப்பெயர்களும், இறையுருவங்களும், திருக்கோயிலின் அமைப்பும் உணர்த்தும் பேருண்மைகள்
🌷 வருகை புரிந்த அருளாளர்கள் & அவர்களது பாடல்களில் காணப்படும் குறிப்புகள்
🌷 சங்க & சமய இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள்
🌷 கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் & செவிவழிச் செய்திகள்
🌷 இதர செய்திகள்

🔸 ஆனால், எப்படியிருக்கின்றன?

கங்கை, ஜடாமுடி, பிராமணன், தத்தன், பித்தன், தேவன், அசுரன், அமிர்தம், தேவலோக ஐயிட்டங்கள் மற்றும் பல தரமற்ற பொருட்களுடன், மயிர்கூச்செரியும் / வாயை பிளக்கவைக்கும் சிஜிஐ காட்சிகள் 🤭சேர்த்து கிண்டப்பட்ட பல(பொய்)காரமாக இருக்கின்றன!

🔸 இனி, "காலத்திற்கேற்ப" மாற்றிய பிறகு எப்படி இருக்கப்போகின்றன?

💩 எம்எல்எம் மதத்திற்கேற்றவாறு

அண்டத்தின் தொடக்கத்தில், பகலோனும் இரவோனும் உருவாக்கப்படுவதற்கு முன்னரே, எப்படியோ நாள் கணக்கை உருவாக்கிய பரமபிதா, 7 நாட்களில் எல்லாவற்றையும் படைத்துவிட்டு, வெக்கேசனுக்கு புறப்பட அணியமானார். 

அதற்கு முன்னர், சிவபெருமானை அழைத்து, "எனது மகன் வெக்கேசனில் இருக்கிறான். நான் சென்று, அவனை அனுப்புகிறேன். அதுவரை, நீர் போய் இரட்சிப்பீராக!" என்றார். அதற்கு சிவபெருமான், "பரமபிதாவே, தங்களது மகனுக்கு இன்னும் விவரம் போதாது. முந்திரி மரம் எப்போது காய்க்கும் என்பதைக்கூட அறியாதவர். காய்க்காத நேரத்தில், அதனிடம் போய், காய்க்கச் சொல்லுவார். அது காய்க்காவிட்டால், எரிந்து போகுமாறு சபித்துவிடுவார். இன்னும் சில காலம் போகட்டும். அல்லது, புரோபேசனில் என்னுடன் இருக்கட்டும்." என்றார். 

இதனால் வெகுண்ட பரமபிதா, சிவபெருமானை கல்லாகும்படி சபித்துவிட்டார். இவ்வடிப்படையில், இங்கு சிவபெருமான் கல்லாக, சிவலிங்க வடிவில் உறைகிறார்.

பரமபிதாவுக்கு தோத்திரம்!

💩 குறி மதத்திற்கேற்றவாறு

தொடக்கத்தில், "இறைவன் மிகப்பெரியவன்" புவியை படைத்து, அது உருண்டு போகாமலிருக்க, மலைகளை நட்டுக் காத்தார். பின்னர், சிவபெருமானை தோற்றுவித்து, புவியை பராமரிக்கச் சொன்னார். ஆனால், சிவபெருமான் சென்று, ஓர் ஆலமரத்தின் கீழே அமர்ந்துகொண்டார். அவரை தேடிச்சென்ற உலமாக்கள், அவரிடமிருந்து வெளிப்பட்ட பேரமைதியினால் ஈர்க்கப்பட்டு, அவருகிலேயே அமர்ந்துகொண்டார்கள். இக்காட்சிகள் "இறைவன் மிகப்பெரியவனுக்கு" அல்லு விட்டது: 

- இப்படியே போனால், இனப்பெருக்கம் நடக்காது.
- இனப்பெருக்கம் நடக்காவிட்டால், 2% வரும்படி வராது.
- வரும்படி வராவிட்டால், "ஒயின் ஆறு" ஓடும் சுவர்க்கத்தை கட்டமுடியாது.
- ஜிஹாத் செய்து புட்டுக்கொண்டு, மேலுலகம் வரும் பயல்களுக்கு, 72 "மேலாடையில்லாத" அழகிகளை கொடுக்கமுடியாது.
- அப்பயல்கள் துப்பும் எச்சிலை தாங்கி பிடிக்க, சிறார்களை வேலைக்கு வைக்கமுடியாது.

என்ன செய்வதென்று சிந்தித்த "இறைவன் மிகப்பெரியவன்", சிவபெருமானை கல்லாகும்படி சபித்துவிட்டு, "அருமை நபி" திட்டத்தை கையிலெடுத்தார்.

இவ்வடிப்படையில், இங்கு சிவபெருமான் கல்லாக, சிவலிங்க வடிவில் உறைகிறார்.

சைத்தான் மிகப்பெரியவன்!

💩 உளுத்தறிவுக்கு ஏற்றவாறு

ஆப்பிள் பழம் தலை மீது விழுந்தவுடன், ஈர்ப்பு விசையை உணர்ந்து கொண்ட, மேன்மையான வெள்ளைச் சாத்தான் இனத்தில் தோன்றிய மெக்காலேவின் கல்வித் திட்டத்தால் பயனடைந்து, பகுத்தறிவு பெற்றவர்களில் இறைவனும் ஒருவராவார். அதுவரை, நீதி, நேர்மை, தூய்மை, ஒழுக்கம் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் இருந்தவர், பகுத்தறிவு தாக்கத்தினால், மாறுபட்டும், பரந்த மனப்பான்மையுடனும் சிந்திக்கத் தொடங்கினார். பிளேடு போடும் பயல்கள் தொடங்கி, ஊருக்குள்ளேயே சேர்க்கக்கூடாது என்ற நற்பெயர் பெற்ற பயல்கள் வரை அனைவரையும் தூக்கிவிடத் திருவுள்ளம் கொண்டு, ஈன வெங்காயத்தை படைத்தார். அவ்விறைவன் உறையும் திருக்கோயிலே ஈரோடு கபாலீசுவரர் திருக்கோயிலாகும்.

ஒழுக்கமில்லை. 
ஒழுக்கமில்லை. 
ஒழுக்கம் என்பது இல்லவேயில்லை.

😝😝😄😄😆😆😂😂🤣🤣🥲

ஓர் இனத்தை அவ்வினத்தின் பண்பட்டோரே ஆளவேண்டும் & பராமரிக்கவேண்டும். இல்லையெனில், அவ்வினம் நோய் எதிர்ப்பாற்றலற்ற உடல் போலாகிவிடும். 

தமிழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல் 1,218ல் பெருத்த அடி வாங்கியது. அதன் பிறகு, அண்டையிலிருந்தும், வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும் தீநுண்மிகள் ஊடுருவிய வண்ணமிருக்கின்றன. அவைகளால் உள்ளிருக்கும் கருங்காலித் தீநுண்மிகளும் வெகுவாக வளர்ந்துவிட்டன. 

இவ்வளவு நடந்த பிறகும், திருநெறியத் தமிழும், நமது அடையாளங்களும் ஓரளவேனும் உயிர்ப்புடனுள்ளன என்றால் அதற்கான மாறல்கள் (அசுர மொழியில், காரணங்கள்)

🙏🏽 அசுரர் உட்பட அனைத்து எதிரிகளும் மதித்து, போற்றி & ஏற்றுக்கொண்ட உரமேறிய நம் பண்பாடு
🙏🏽 "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற மேன்மையான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த நம் முன்னோர்கள் செய்த அளப்பரிய நல்வினைப் பயன்கள் 
🙏🏽 எந்நாட்டவர்க்கும் இறைவனானவனின் அருள்

பொழுது இப்படியே போய்விடாது. என்றும் வாய்மையே இறுதியில் வெற்றி பெறும்.

oOOo

என்றுமுள திருநெறியத் தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, December 11, 2023

வருணாசிரமம் - இன்றைய இட ஒதுக்கீட்டிற்கு சமமான சொல்!!


திருமறைகளை பற்றிய அக்காலக் கட்டுப்பாடுகளை, அண்மையில், மீண்டும் கேட்க நேர்ந்தது:

🔸 பிராமணன் - திருமறைகளை பார்க்கலாம், படிக்கலாம் & கேட்கலாம்.

🔸 சத்திரியன் - திருமறைகளை பார்க்கலாம் & கேட்கலாம். படிக்கக்கூடாது.

🔸 வைசியன் - திருமறைகளை கேட்கலாம். பார்க்கவோ, படிக்கவோக் கூடாது.

🔸 சூத்திரன் - திருமறைகளை பார்க்கவோ, கேட்கவோ, படிக்கவோக் கூடாது.

தன்னையுணர்ந்த எந்த மெய்யறிவாளரும், மேற்கண்ட கட்டுப்பாடுகளை வகுத்திருக்கமாட்டார். அப்படி வகுத்திருந்தால் அதன் உட்பொருள் வேறாக இருக்கும்.

திருமறைகள் என்பது பகவான் திரு இரமண மாமுனிவர், திரு ஒளவையார், திருவள்ளுவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து படைப்பை பற்றியும், படைத்தவனை பற்றியும் வெளிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாகும்.

திருமறைகள் = படைத்தவன் & படைப்பு.

படைத்தவன் (அப்பன்) = படைப்பு (அம்மை).

எனில், திருமறைகள் = படைத்தவன் என்று கொள்ளலாம். அல்லது, திருமறைகள் = படைப்பு என்றும் கொள்ளலாம். படைப்பு என்ற பொருளைக் கொண்டு சிந்தித்தால்... மலைக்க வைக்கின்றது!!!

oOo

மேற்கண்ட கட்டுப்பாடுகளிலுள்ள "திருமறைகள்" என்ற சொல்லுக்கு பதிலாக, "படைப்பு" என்ற சொல்லை பொருத்திப் பார்ப்போம்:

🔸 பிராமணன் - படைப்பை பார்க்கலாம். அது பற்றி படிக்கலாம் & கேட்கலாம்.

முதலில், பிராமணர் என்போர் யார்? இன்று, யாரை நாம் பிராமணரென்று கருதுகிறோமோ, அந்த அசுரர்கள் அல்லர். பகவான், வள்ளலார், தாயுமானவர், பட்டிணத்தார், ஒளவையார், திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் போன்ற மெய்யறிவாளர்கள்.

பிரம்மம் = உள்ளபொருள்.
பிராமணர் = உள்ளபொருளை உணர்ந்தவர்கள் / உள்ளபொருளாய் உள்ளவர்கள்.

படைப்பினால் பாதிப்படையமாட்டார்கள். எனவே, இவர்கள் படைப்பை பார்க்கலாம், வரும் செய்திகளை கேட்கலாம். அது பற்றி ஆராயலாம் (படிக்கலாம்). அப்படி இவர்கள் ஆராய்ந்ததினால்தான் ஆத்திச்சூடி, திருக்குறள் போன்ற பொன்னான வழிகாட்டி நூல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

🔸 சத்திரியன் - படைப்பை பார்க்கலாம். அது பற்றி கேட்கலாம். அதை படிக்கக்கூடாது.

சத்திரியர் எனில் அரசர்கள் என்று பொருள் கொள்வதை விட, மறவர்கள் என்று பொருள் கொள்வது சிறப்பாகவிருக்கும்.

இவர்கள் மேற்கண்ட மெய்யறிவாளர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள். "காண்பவை யாவும் பொய். காண்பவனே மெய்." என்ற அறிவை படிப்பறிவாக மட்டும் அறிந்தவர்கள். நிலைபேற்றினை அடைய போராடுபவர்கள் (எனவே, மறவர்கள்). மெய்யறிவாளர்களின் நிலையறிந்து, அவர்களுக்கு உதவுபவர்கள்; அவர்களது நிலையறியாத கூட்டத்திடமிருந்து அவர்களை காப்பவர்கள். (இதுவே, "மெய்யறிவாளரை மறவன் காக்கவேண்டும்" என்ற விதியின் உட்பொருளாகும்.)

இவர்கள் படைப்பைப் பற்றி அறிந்தவர்கள் என்பதாலும், நல்ல மனஉறுதி கொண்டவர்கள் என்பதாலும், இவர்கள் படைப்பை பார்க்கலாம்; வரும் செய்திகளுக்கு காதுகொடுக்கலாம். ஆனால், ஆராயக்கூடாது (படிக்கக்கூடாது). முழுகிணறும் தாண்டிய மெய்யறிவாளர்களே ஆராயவேண்டும். இவர்கள் ஆராய்ந்தால் மீண்டும் பிறவி சுழற்சிக்குள் சிக்கிக்கொள்வார்கள்; தவறுகளும் விளையும் (இவர்கள் திருக்குறள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும்?).

🔸 வைசியன் - படைப்பை பற்றி கேட்கலாம். அதை பார்க்கவோ, அது பற்றி படிக்கவோக் கூடாது.

இங்கு, வைசியன் எனில் "பயிர் செய்பவர்" என்று பொருள் கொள்ளவேண்டும்.

எதை பயிர் செய்பவர்? வினைகளை பயிர் செய்பவர். வினைகளை பயிர் செய்தால் என்ன விளையும்? பற்றுகள், தளைகள், பிறவிகள்... அதாவது, மறவர்களைப் போன்று மனக்கட்டுப்பாடு இவர்களிடமிருக்காது; எளிதில் வினைப்பயன்களை சேர்த்துக்கொண்டு, பிறவி சுழற்சிக்குள் போய்விடுவர். எனவே, மறவர்களை விட கூடுதலான கட்டுப்பாடுகள் இவர்களுக்கு அறிவுருத்தப்பட்டன.

வைசியன் எனில் வணிகன் என்பது எல்லோரும் அறிந்த பொருளாகும். வணிகன் என்பவர் யார்? ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுபவர். தன்னிலையை விட்டுக்கொடுத்து பிறவிகளை பெறுவதால், இவர்களுக்கு வணிகர்கள் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

🔸 சூத்திரன் - படைப்பை பார்க்கவோ, அது பற்றி கேட்கவோ, அதை படிக்கவோக் கூடாது.

சூத்திரன் எனில் "எப்போதும் கவலையில் இருப்பவன்" என்பது பொருளாகும். மனம், உடல் & வையகம் ஆகியவை உண்மையென்று கருதுவதால் இப்பிரிவினருக்கு கவலை ஏற்படுகிறது. இதை போக்க என்ன செய்யவேண்டும்?

"காய்ச்சல் நீங்கும்வரை இன்னின்ன உணவுகளை உட்கொள்ளாதே" என்று மருத்துவர் அறிவுறுத்துவது போன்று, இவர்களுக்கு "காண்பவை யாவும் பொய்" என்ற அறிவு சிறிதளவேணும் தோன்றும்வரை, "படைப்பை பார்க்காதே, அதிலிருந்து வரும் செய்திகளை கேட்காதே மற்றும் அதை ஆராயாதே" என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

சில சமயம், குறைவான மதிப்பெண்கள் பெரும் மாணவர்களை, நல்ல மதிப்பெண்கள் பெரும் மாணவர்களோடு அமர வைத்து, வகுப்பை மேம்படுத்த ஆயர்கள் (ஆசிரியர் - கா(ஆ)ரியம்) முயற்சிப்பதை பார்த்திருக்கலாம். இது போன்று, தன்னை உடலாக மட்டும் கருதும் இப்பிரிவினரை, தெளிந்த அறிவு பெற்ற பிற பிரிவினரோடு சேர்ந்து வாழ்ந்து, மேம்பட அறிவுறுத்தியிருக்கிறார்கள். (இவ்வறிவுரை காலப்போக்கில் திரிந்து, இப்பிரிவினர் மற்றவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றாகிவிட்டது!)

oOo

பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிறவாநிலையை அடையவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பரந்த மனப்பான்மை கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பு, காலப்போக்கில், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் கைகளுக்கு சென்றதால், தலைகீழாக, நேரெதிராக திரிக்கப்பட்டு, இன்றைய இட ஒதுக்கீடு எனும் கேட்டிற்க்கு வித்தாகிவிட்டது!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, December 8, 2023

பசு மாட்டின் பின்புறத்தில் மலர்மகள் குடியிருக்கிறாராம்!!

(மேலுள்ள, மாட்டின் பின்புறத்தை தொட முயற்சிப்பது துர்கா இசுடாலினாம்! 🤭)

🤦🏽 கொஞ்சமாவது அறிவு என்று ஒன்றிருந்தால்...

அசுரனோ, உளுத்தறிவனோ, மெக்காலே மண்டையனோ யார் சொன்னாலும், சிந்திக்கவேண்டும்.

பசு மாட்டின் பின்புறம் சிறுநீரும் & சாணியும் வெளிப்படும். அவை நிலத்தில் விழுந்தால், நிலம் வளமாகும். நிலம் வளமானால் விளைச்சல் பெருகும். விளைச்சல் பெருகினால் வருமானம் வளரும். எனில், வருமானம் வளரவேண்டுமானால் பசு மாட்டின் சிறுநீரையும் & சாணியையும் பயன்படுத்தவேண்டும்.

சாணி & சிறுநீர் = வருமானம் = செல்வம் = மலர்மகள்!!

பொருளாதாரத்தில் உழவுத்தொழில் பெரும் பங்கு வகித்த சமயத்தில் உருவான வினைமுறையாகும் (ஆரியத்தில், சடங்காகும்). இன்றைய பொருளாதாரத்திற்கு பொருந்தாது. இன்று, இந்த வினைமுறையை செய்வதாலோ, பார்ப்பதாலோ எந்த பயனும் கிடையாது. மலர்மகள் குறிப்பிடும் செல்வமென்பது எதென்று தெரிந்தால், பலர் இதை மதிக்கக்கூட மாட்டார்கள்! 😏

மலர்மகள் குறிப்பிடும் செல்வமானது மெய்யறிவாகும். காசு, பணம், துட்டு, பிட்காயின்... இல்லை!

இவ்வினைமுறையை உருவாக்கியது ஆரிய->பௌத்த->நாமப்பேர்வழிகளாகும். சைவம் காளையை போற்றுவதால், அதற்கு போட்டியாக, பசுமாட்டை நாமம் போற்றுகிறது. சைவம், கல்லாலான காளையை உடையவருக்கு முன்னே வைத்தால், நாமம், உயிருள்ள பசுமாட்டை பெருமாளுக்கு முன் கொண்டுவந்து, திருப்பி நிறுத்துகிறது.

பெருமாள் சிலைகள் மட்டும் உயிர்பெற்று நகருமானால்... மீண்டும் கோளரி உருவமெடுத்து (ஆரியத்தில், சிங்கம்), "அடேய், என் பொஞ்சாதி குடியிருக்கிற இடமாடா அது?" என்று முழங்கியவாறு (ஆரியத்தில், கர்ஜித்தவாறு), நாமப்பேர்வழிகளின் மீது பாய்வார்!!!

😆😂😂🤣😍

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, December 7, 2023

பேமானியாகலாம்! ஞானியாக முடியாது. 😏


இயேசுவே மெய்யானத் தேவன். ஞானியாக முயற்சிக்காதீர்கள். அது சாத்தானின் வேலையாகும்.


😆😆😂🤣🤣


(மேற்கண்ட வரிகளை, சில நாட்களுக்கு முன்னர், ஒரு ஆட்டோவின் பின்புறம் பார்த்தேன். மழை பெய்துகொண்டிருந்ததால் படமெடுக்க இயலவில்லை.)


அவனவன், இயேசு அடைந்த நிலையை அடைந்துவிட்டால், பாவமன்னிப்புத் தொழில் எப்படி நடக்கும்? ஒப்பாரி நிலையங்களை எப்படி தொடர்ந்து நடத்துவது?


குறி மதத்தை பொருத்தவரை, இந்த வம்பே வேண்டாமென்று தொடக்கத்திலிருந்தே கட்டுப்படுத்தியுள்ளனர். இறுதிவரை பஸ்கி, தண்டால்தான்! இம்மதத்தின் நிறுவனர் இறந்தபிறகு, அவனவன் தன்னை இறைத்தூதனாக அறிவித்துக்கொண்டு, தொழில் தொடங்கியுள்ளான். எல்லோரையும் அடக்கி, கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பெரும் பாடுபட்டுள்ளனர். எனவே, ஒருவரும் விழித்துக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்கின்றனர்.


(இங்கு சில கேள்விகள் எழவேண்டும்:


- திருஞானசம்பந்தருக்கு பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த திருஞானசம்பந்தராக அறிவித்துக்கொண்டனர்?

- அப்பர் பெருமானுக்கு பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த அப்பர் பெருமானாக அறிவித்துக்கொண்டனர்?

- பகவான் திரு இரமண மாமுனிவருக்குப் பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த பகவானாக அறிவித்துக்கொண்டனர்?


எனில், ஏன் மெக்காவில் மட்டும் அவனவன் தன்னை இறைத்தூதனாக அறிவித்துக்கொண்டான்? 😉)


அடுத்து, நம் சமயத்திற்கு வருவோம்.


இங்கும் மற்ற மதங்களின் நிலைதான். ஒரு பயலும் விழித்துக்கொள்ளக்கூடாது என்பதில் அசுரக்கூட்டம் தெளிவாக & உறுதியாக இருக்கிறது.


கேட்டதும் சிந்தனையை தூண்டவேண்டுமென்ற கண்ணோக்கத்தில், நம் முன்னோர்கள் வைத்த இறைவனின் திருப்பெயர்களாகட்டும், பார்த்ததும் சிந்தனையை தூண்டவேண்டுமென்ற கண்ணோக்கத்தில், அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இறைதிருவுருவங்களாகட்டும், திருக்கோயில்களின் வடிவமைப்புகளாகட்டும், எதுவும் எவ்வகையிலும் நம் சிந்தனையை தூண்டாதவாறு பார்த்துக்கொண்டுள்ளனர்!


நமது வேலையென்ன? கோயிலுக்கு செல்லவேண்டும். வரிசையில் நிற்கவேண்டும். ஓட்டைப் பானைக்குள் ஈ நுழைந்தது போன்று, அசுரர்கள் ஒப்பிக்கும் கா(ஆ)ரியச் செய்யுள்களை கேட்டுவிட்டு, அவர்கள் தட்டுவிளக்கை சுழற்றும் போது, ஏதோ கிடைத்தது / புரிந்தது போன்று கன்னங்களில் போட்டுக்கொண்டு, தட்டு அருகில் வரும்போது காசை போட்டுவிட்டு, விளக்கொளியை தொட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு, திருநீறு பெற்றுக்கொண்டு, நமக்கு நாமே திருநீறு அடித்துக்கொண்டு வெளியே வந்துவிடவேண்டும். சுபமஸ்து! 🤣


இந்த மாயவலைகளையெல்லாம் தாண்டி, யாராவது விழித்துக்கொண்டால், அவருக்கு கட்டம் கட்டிவிடுவார்கள். (இதுவே 1,000 ஆண்டுகளுக்கு முன்னரெனில், எல்லோருக்கும் ஒரே நீதியென்ற நிலைப்பாட்டை கொண்டிருந்ததற்காக, மன்னர் ஆதித்த கரிகாலச் சோழரை போட்டுத்தள்ளியது போல போட்டுத்தள்ளுவார்கள். இன்று, இம்மியளவு பண்பட்டு, கட்டம் கட்டுகிறார்கள்). ஆனால், அப்படி விழித்துக்கொண்டவர் உடல் உகுத்த பின்னர், அவரது திருவிடம் (கா(ஆ)ரியத்தில், சமாதி) புகழ்பெறத்தொடங்கினால், உரிமையுடன் உள்ளே நுழைந்து, கல்லா கட்டத்தொடங்கிவிடுவார்கள்.


அண்மை காலத்தில், இவர்களது அசுரக் கண்காணிப்பையும் தாண்டி, பெரும் புகழ்பெற்று, பலரது உள்ள விளக்கைத் தூண்டிவிட்ட ஒரே பெருமான் பகவான் திரு இரமண மாமுனிவராவார்! உள்ளபொருளை தெளிவாக காட்டியதற்காக, இன்றும், சில அசுரர்கள் அவரை வெறுத்து ஒதுக்குவதை நானறிவேன்.


எப்படியோ பகவானிடம் கோட்டைவிட்டாலும், இந்நேரம், "இன்னொரு பகவான் உருவானால், எப்படி கட்டம் கட்டுவது?" என்று ஆய்வு செய்து, அவர்களது "எப்படி மக்களை முட்டாளாக்கி, Safe-அ, Comfort-அ, Secured-அ, நன்னா & வாழையடி வாழையாக வாழ்வது?" என்ற கையேட்டுப் புத்தகத்தில் சேர்த்திருப்பார்கள். 👊🏽👊🏽


குறிமதமும், ஒப்பாரி மதமும் வையகத்தை பிடித்த பீடைகளெனில், இவ்வசுரக் கூட்டம் நம்மை பிடித்த பீடையாகும்! 😞


பொழுது இப்படியே போய்விடாது. அல்லவை இல்லாமல் போகும் சமயம் வரும். நல்லது வெளிப்படும். "ஓர்ந்து கண்ணோடாது இறை புரியும்" ஆட்சியாளர்கள் மீண்டும் தோன்றுவார்கள். எல்லாம் நலமாகும்.


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Friday, December 1, 2023

கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி - சிறு விளக்கம்


🌺🙏🏽🙇🏽‍♂️
திரு இரத்தினக்கூடம் (ஆரியத்தில், சபை), திருவாலங்காடு

🌷 இம்மதில் சுவருக்குப் பின்னால், திரு காரைக்கால் அம்மையாரும், மற்றுமொரு பெருமானும் திருநீற்று நிலையிலுள்ளனர்.

🌷 அவர்களது நிலையை குறிக்கும் இறையுருவம்தான் படத்தில் காணப்படும் திரு ஆடலரசன் ஆவார்.

🌷 அவர்களது நிலையென்ன? 

இதற்கு பதில்: அவ்விடத்தின் பெயரன்ன?

கூடம் (சபை)!!

கூடம் எப்படியிருக்கும்? பார்வையாளர்கள் ஒரு புறம் அமர்ந்திருக்க, காட்சிகள் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டிருக்கும். இதையொத்த நிலையில் அப்பெருமான்கள் இருக்கிறார்கள் என்பது பொருளாகும். அதாவது, அவர்களுக்கு இன்னமும் காட்சிகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

🌷 இதனால் அவர்களுக்கென்ன பயன்?

அவர்களுக்கு ஒரு பயனுமில்லை. நமக்குத்தான் கொள்ளைப் பயன்கள்!

கருவறை அமைப்பிலிருக்கும் திரு ஆலங்காட்டு அப்பர் தெருமுனையிலிருக்கும் நண்பரெனில், கூடத்திலிருக்கும் திரு காரைக்கால் அம்மையார் பக்கத்து வீட்டிலிருக்கும் நண்பராவார்!!

🌷 கூடத்தின் உள்ளிருக்கும் பெருமான்களின் நிலையை குறிப்பது மட்டுமில்லாது, எந்த நுட்பத்தை (Technique) கடைபிடித்தால் அவர்களது நிலையை நாமும் அடையலாமென்பதையும் ஆடலரசன் திருவுருவம் குறிப்பிடுகிறது!

🌷 அதென்ன நுட்பம்?

அம்மையுடன் நடக்கும் ஆடல் போட்டியில், பல வகையான நுட்பங்களை பயன்படுத்திய பின்னர், இறுதியில், பெருமான் தனது இடதுகாலைத் தூக்கி, தனது இடது காதில் மாட்டப்பட்டிருக்கும் அணிகலனை கழட்டுவார். இதை செய்யமுடியாமல் அன்னை தோற்றுப்போவார். 

அம்மை - மனம், உடல் & வையகக் காட்சிகள்.

பெருமான் - நாமே.

தூக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் நமது கண்ணோக்கத்தை (ஆரியத்தில், கவனத்தை) நம் மீது - நமது தன்மையுணர்வின் மீது - திருப்புதல்.

காதணி - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இதிலிருந்தே அனைத்து பற்றுகளும் தோன்றுகின்றன.

இந்நுட்பத்திற்கு பகவான் திரு இரமண மாமுனிவரிட்ட பெயர்: தன்னாட்டம்!!

oOo

இரத்தினம், பொன், வெள்ளி, தாமிரம் & சித்திரம் ஆகிய கூடங்களிலுள்ள பெருமான்கள் எந்நிலையில் உள்ளனரோ, அதே நிலையில்தான் பின்வரும் பெருமான்களும் உள்ளனர்:

🌷 சென்னை திருவொற்றியூரிலுள்ள திரு படம்பக்கப் பெருமான் என்ற உடையவரின் கீழுள்ள பெருமான்

🌷 மதுரையிலுள்ள, பெரும் புகழ்பெற்ற, திரு சொக்கநாதர் என்ற உடையவரின் கீழுள்ள திரு சுந்தரானந்த சித்தர்

🌷 அகத்தியர் திருமணக்காட்சி கண்ட திருவிடமென்று சொல்லப்படும் அனைத்து திருக்கோயில்களிலுள்ள உடையவர்களின் கீழுள்ள பெருமான்கள்

🌷 திருக்கயிலாயக் காட்சி கண்ட திரு அப்பர் பெருமான்

🌷 சூழ்ச்சியில்லாக் காட்சி கண்ட திரு மணிவாசகப் பெருமான்

🌷 நடக்கும் சில நிகழ்வுகளைக் கண்டால் பகவானும் இந்நிலையில் இருக்கலாமென்று தோன்றுகிறது.

ஆக, கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி என அழைக்கப்படும் யாவும் ஒரே காட்சிதான்: அம்மையப்பர் காட்சி!!

காண்பவர் - அப்பன்
காட்சி - அம்மை

oOo

இவ்வாறு, இறையுருவின் பெயர், திருக்கோயிலின் பெயர், ஊரின் பெயர், இறையுருவம், கோயிலின் அமைப்பு, புனைவுக்கதைகள் என வாய்ப்பு கிடைத்த அனைத்திலும் பேருண்மைகளை பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால், கேடுகெட்ட, நன்றிகெட்ட, தன்னலமே வடிவான, பித்தலாட்ட, நயவஞ்சக, நச்சு அசுர இனம் உள்நுழைந்ததால், அனைத்தும் வீணாகிவிட்டன. குருடர்களாக, செவிடர்களாக, "மம" சொல்லும் மரமண்டைகளாக ஆக்கப்பட்டுவிட்டோம்!! 🤬😡

இதுவும் அம்மையின் கூத்துத்தான். இதையும் தென்னாடுடைய தமிழீசன் வெற்றிக்கொள்வான்.

oOOo

செயற்கரிய செயல் செய்த பேயார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻