Friday, September 30, 2016

அப்பர் பெருமானுக்கும் அவர் கையில் உள்ள உழவாரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

உழவாரத்தினால் செய்யும் பணி உழவாரப்பணி. சமணர்களின் ஆதிக்கத்தால் பல சிவன் கோயில்கள் பாழடைந்து கிடந்தன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும், இறைவன் குடிகொண்ட ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் உலகுக்கு உணர்த்துவதற்காகவே #அப்பர் பெருமான் கோயில்களில் முளைத்திருந்த புல்பூண்டுகளை தம் கரங்களால் களைந்து கோயிலைத் தூய்மையாக்கி திருப்பணியைத் தொடங்கிவைத்தார். அதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் #உழவாரம் என்னும் புல் செதுக்கும் கருவி.

அப்பர் பெருமான் தோளில் சுமந்திருக்கும் இக்கருவி முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. பெருமானின் கையில் இருக்கும் இக்கருவி, விவசாயக் கருவிகளுள் ஒன்றாக இருந்துள்ளது. தென்னாற்க்காடு மாவட்டமான (தற்போது அரியலூர் மாவட்டம்) #திருக்களப்பூர் என்ற ஊரில் விவசாயக் கருவிகளுள் ஒரு கருவியின் பெயர் உழவாரம். இன்றும் அக்கருவிக்கு உழவாரம் என்ற பெயரே இருந்து வருகிறது. இன்று திருக்களப்பூரில் கால்நடைகளுக்கு புல்லை செதுக்க இக்கருவி பயன்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

ஒருமுறை #திருப்புகலூரில் பெருமான் உழவாரப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, குப்பைகளோடு பொன்னையும் ஓட்டையும் கண்டார். ஆனால், ஏற்கனவே தனித்துவத்தை இழந்து சிவமாகி விட்டபடியால் பெருமானுக்கு எல்லாம் கானல் நீர் காட்சியாக (பொய்யாக, அசத்தாக) இருந்தது. பொன்னையும் ஓட்டையும் சமமாகவே பாவித்து, புல்லோடும் கல்லோடும் சேர்த்து தூக்கி எறிந்தார்.

*குளத்தில் படிந்த பாசியின் மீது கல்லை விட்டெறிந்தால், அந்தக் கல் நீரில் விழும்போது மட்டும் பாசி விலகும். பின் மீண்டும் பாசி, தண்ணீரை மூடிக்கொள்ளும். அதுபோல, ஒருவன், தன் மனத்தை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல், எவ்வளவுதான் இறைவன் புகழ் கூறும் நூல்களைக் கற்றாலும், பூஜித்தாலும், மலர் பறித்துக் கொடுத்தல் போன்ற தொண்டுகளைச் செய்தாலும், அப்போதைக்கு வேண்டுமானால் இறைவனிடம் அவனது மனம் குவியும் - ஒருமைப்படும். பின்னர் மீண்டும் மனம் உலகப் பற்றுகளில் - உலக ஆசைகளில் திரும்பிவிடும் என்கிறார் திருமூலர்.*

*ஆக, சித்தமெல்லாம் சிவமாகும் வரை, தனித்துவம் இருக்கும் வரை, மனம் இருக்கும் வரை, சீவன் சிவமாகும் வரை, தன்னாட்டம் (ஆத்மவிசாரம்) என்னும் உழவாரப் பணியில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கவேண்டும்.  வெளிமுகத்தில் வாழ்க்கையை "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற கண்ணோட்டத்தில் வாழ வேண்டும்.*

இதுவே அப்பர் பெருமானின் வாக்கும் தோற்றமும் நமக்கு உணர்த்தும் கருத்துகள். 🙏

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

(அடிப்படை: https://m.facebook.com/story.php?story_fbid=977876058989980&id=100003027847087)

Thursday, September 29, 2016

காய்ச்சல்

*#இயற்கை #மருத்துவம் அங்கீகாரம் பெற்ற ஆலோசகர் #சிவசித்தன் #அருண் : 9094830243*

உடலின் கழிவுகளையும் அவற்றில் பெருகி வளரும் நுண்ணுயிரிகளையும் கட்டுப்படுத்தவும் வெளியேற்றவும் தான் #காய்ச்சல் வருகிறது.

வெப்பநிலையை உயர்த்தி, கழிவு உயிரிகள் வளருவதற்கான சூழலைக் கெடுத்து, அவற்றை வெளியேற்றும் உடலின் செயல்பாடுதான் காய்ச்சல். நிச்சயமாக, காய்ச்சல் என்பது நோய் அல்ல. உடலின் உள்ளே இருக்கும் நோயின் வெளிப்பாடுதான் காய்ச்சல். ஆகவே காய்ச்சலைக் கண்டு அஞ்சாதீர்கள். அது உங்கள் உடலைப் பராமரிக்கவே வந்துள்ளது.

உடலின் கழிவு உயிரிகள் வெளியேற்றுவதற்கு எவ்வளவு வெப்பம் தேவையோ அந்தளவு வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தை அனுமதிக்க வேண்டும். இதுதான் நலமாக வாழ்வதற்கான எளிய வழி. ஆம், காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்க நீங்கள் செய்யும் எந்த நடவடிக்கையும் உடலின் பணியில் குறுக்கிடுவதுதான்.

சிலவகை மாத்திரைகளை விழுங்கியதும் உடல் வியர்க்கிறது என மகிழ்ச்சி அடையாதீர்கள். அது காய்ச்சலுக்கான தீர்வு அல்ல. மாறாக, உடலின் வெப்பத்தைக் குறைத்து கழிவு நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலையை அந்த மாத்திரைகள் உருவாக்கி விடுகின்றன.

இவற்றோடு இணைத்துத் தரப்படும் #உயிர்க்கொல்லி மருந்துகளும் (#ஆண்டிபயாடிக்) வேறுவகை #நுண்ணுயிரிகள் தான். இவை உடலில் பெருகி, உடலின் உள்ளே இருக்கும் உயிரிகளை அழிக்க வேண்டும் என்பது நவீன மருத்துவத்தின் அணுகுமுறை. ஆனால், உயிர்க் கொல்லி மருந்துகளின் வழியாக உடலுக்கு உள்ளே அனுப்பப்படும் நுண்ணுயிரிகள் உடலுக்குப் புதிய சுமைகளாகத் தான் மாறுகின்றன.

இவற்றின் வளர்ச்சியையும், இவற்றின் வருகையால் உடலுக்குள் உருவாகும் நுண்ணுயிர்ப் பெருக்கத்தின் மாற்றங்களையும் கையாள முடியாமல்தான் நவீன சமூகம் தள்ளாடிக் கொண்டுள்ளது.

இதனால்தான், *‘காய்ச்சலுக்கு உடனடியாக ஆண்டிபயாடிக் கொடுக்காதீர்கள்’ என தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.*

உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை வெளியேற்றும் உன்னத செயல்தான் காய்ச்சல். இதில் நாம் தலையிட்டு தவறு செய்யும்போது, அந்த நுண்ணுயிரிகள் உடலில் தங்கி நீண்டகால நோய்களை வரவழைக்கின்றன.

காய்ச்சல் வந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1. காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும்.

2. தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருக வேண்டாம்.

3. காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.

4. காய்ச்சல் உயர்ந்து பின்னர் இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, இரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம். இரசத்தில் புளிக்குப் பதில் தக்காளி சேர்ப்பது நல்லது. இதற்கு பருப்புத் துவையல், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் வகைகள் தொட்டுக்கொள்ளலாம்.

5. காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.

6. காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.

7. மேற்கண்ட உணவுகள் தவிர வேறு எந்தவகை உணவையும் பானத்தையும் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக, பால் பொருட்களை நிறுத்திவிடுவது மிக முக்கியம்.

8. நிலவேம்பு போன்ற கசாயங்களைப் பருகும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் நிலவேம்பு போன்ற மருந்துகளைப் பருகுவது நல்லதல்ல.

இவை தவிர காய்ச்சல், சளி ஆகிய தொல்லைகளின்போது உடலுக்கு உதவி செய்யும் சில உணவு மருந்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவை செம்மை நல மையங்களில் கற்றுத்தரப்படுபவை.

#சளி வெளியேற்றத்திற்கு உதவி செய்யும் உணவு #மருந்துகள்:

🍶 *மிளகு கசாயம்*

சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 7 எண்ணிக்கை
இவ்விரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பின்னர் சட்டியில் இவற்றை ஒன்றாகக் கொட்டி, நன்கு தேக்கரண்டிகள் பனை வெல்லத் தூளைத் தூவ வேண்டும். வெல்லத் தூள் பாகுபோல் உருகும். இப்பாகு சட்டியில் ஒட்டாமல் கிளற வேண்டும். பின்னர், ஒன்றரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். சுண்டக் காய்ச்சிய பின்னர் அடுப்பை நிறுத்தி விட்டு,

இந்த நீரில் பின்வரும் இலைகளைப் போட வேண்டும்:

1. துளசி
2. கற்பூர வல்லி (ஓம வல்லி)
3. வேப்பிலைக் கொழுந்து
இவ்விலைகளைப் போட்ட பின்னர் மூடி வைத்து வெதுவெதுப்பான சூட்டில் பருக வேண்டும். இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. காய்ச்சிய நீரைப் பருகலாம்.

முறை:
உறங்கச் செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பு பருகலாம். தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும்தான் பருக வேண்டும்.

🍶 *தூதுவளை வறுவல்*

#தூதுவளை இலைகளை (நான்கு அல்லது ஐந்து) நெய்யில் வதக்கி, ஒரு பிடிச் சோறுடன் பிசைந்து உண்ண வேண்டும்.

முறை:
மாலை வேளையில் உண்ண வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும்தான் உட்கொள்ள வேண்டும்.

🍶 *சீரகத் தண்ணீர்*

ஒரு சட்டித் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதே சூட்டில், சிறிய தேக்கரண்டி #சீரகம், ஏழு மிளகுகள் போட்டு மூடி வைத்து விட வேண்டும். வெதுவெதுப்பான பதத்தில் பருகலாம். ஒவ்வொரு முறை பருகும்போதும் சன்னமாகச் சூடேற்றிக் கொள்வது நல்ல பலன் தரும்.

சூழல் சரியாகும் வரை, வழக்கமான குடிநீருக்குப் பதில் சீரகநீரை மட்டுமே பருகுவது மிகுந்த நற்பலனைத் தருகிறது. செரிமானம் மேம்படவும், சளி வெளியேறவும், மூச்சுச் சிக்கல்களைச் சீர் செய்யவும் #சீரக #நீர் உதவியாக உள்ளது. *காய்ச்சலில் இருப்போர், சீரக நீர் பருக வேண்டாம். வெந்நீரை ஆறவைத்து மட்டுமே பருக வேண்டும். சளித் தொல்லையில் இருப்போரும், காய்ச்சலுக்குப் பின்னும், செரிமானச் சிக்கல் உள்ளோரும் சீரக நீர் பருகலாம்.*

மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு உங்கள் மற்றும் உங்கள் உற்றார் உடல்நலனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உடலின் வெப்பநிலை மாற்றங்களை நோய் எனப் புரிந்துகொண்டு அஞ்சாதீர்கள். மிக முக்கியமாக, காய்ச்சல்களுக்கு வைக்கப்படும் பெயர்களின் மீது அக்கறை காட்டாதீர்கள்.

மருந்தில்லா வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் இலட்சக் கணக்கான மக்கள் காய்ச்சலைக் கண்டு கலங்காமல் வாழ்கிறார்கள். ஒருவகையில், காய்ச்சல் வந்தால் மகிழ்ச்சி அடையும் மனிதர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

உடலின் உள்ளே இருக்கும் கழிவு உயிரிகளை வெளியேற்றும் வெப்பத்தை வரவேற்பது தானே உண்மையான அறிவியல் ... !!!

(மூலம்: https://m.facebook.com/groups/1597701723887045?view=permalink&id=1706579896332560)

கணக்கதிகாரம்

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?

*சங்க காலத்திலேயே எழுதப்பட்ட #கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும், பூசணிக்காயை உடைக்காமல் அதன் உள்ளிருக்கும் விதைகளின் எண்ணிக்கையையும் அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. இந்நூல் கொறுக்கையூரைச் சேர்ந்த #காரி #நாயனார் என்பவர் எழுதிய ஒரு #தமிழ் #கணித #நூல்.*

🌟 "கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

🌟 "பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.

(தகவல்: பசுமைப்பாதை)
(மூலம்: வாட்ஸ்அப்)

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

எல்லாம் சரி. இப்போது பரங்கியரின் உயிரி / மரபணு மாற்றம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பூசணிக்கும், பலாவுக்கும் இந்த சூத்திரம் பொருந்துமா? 😉

தமிழன் தோற்றுவிட்டான்! என்ன இருந்தாலும் வெள்ளக்காரன் வெள்ளக்காரன் தான்!! 😂😂😂

Wednesday, September 28, 2016

இந்தப் பாரத பூமி மட்டுமா நமக்கு சொந்தம்?

சமயம், மொழி, குடும்ப அமைப்பு, வாழ்க்கை முறை, உணவு, மருத்துவம், கட்டிடம், இசை, கடல், வானம் என அணு முதல் அண்டம் வரை அனைத்து அறிவின் பிறப்பிம் நாமே!!

பதிவு செய்யப்பட்ட வேத காலம் முதல் ராமாயண காலம் வரை பெரும்பாலான மகரிஷிகளும், மகாபாரதத்தில் வரும் சில மகரிஷிகளும் அன்றைய திராவிட தேசத்திற்குள்ளேயே சமாதியாகிருப்பது இதற்குச் தக்கச்சான்று. நாம் அனைத்திலும் சிறந்து விளங்க இந்த மகரிஷிகளே காரணம். 🙏

"பழுத்த மரம் கல்லடி படும்" என்பது போல, நமது சிறப்புகளே நமது அழிவுக்கும் காரணம். அன்று நாம் அனைத்திலும் சிறந்து விளங்கியதால் ஆரியர், முகம்மதியர், பரங்கியர் என அத்தனை படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. 😢

"புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது" என்று பழமொழி கண்ட நாம், இன்று இலவசங்களைத் தேடி ஓடும் பிச்சைக்காரர்களாகவும், அந்நிய சக்திகளின் கைகூலிகளாக, சொந்த மண்ணின் அடையாளங்களை அறிவுச் செல்வங்களை எள்ளி நகையாடும் அழிக்கத்துடிக்கும் கருங்காலிகளாக மாறியுள்ளோம். 😠

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

#அம்பேத்கர் #ஜோதிபாசு