Monday, June 28, 2021

தமிழர்களின் மூத்த தெய்வம் மூதேவியாம்! அவரே நமது வளத்தின் மூல வடிவமாம்!! ☺️

இப்படி ஒரு கட்டுரையை 2017ஆம் ஆண்டு விகடன் வெளியிட்டிருக்கிறது (https://www.vikatan.com/spiritual/temples/104480-glory-of-goddess-moodevi). இக்கட்டுரை தற்போது, மீண்டும், சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. இவை செய்யும் சேதாரம் போதாது என்று, அவ்வப்போது புதிய கற்சிலைகள் கண்டெடுக்கப்படும்போது, தவ்வை பற்றிய தவறான கண்ணோட்டம் மீண்டும் வலம் வருகிறது. (தவ்வை - மூத்ததேவியின் பெயர்களில் ஒன்று)

இந்நேரம், இந்த தவ்வை சிலரின் குலதெய்வமாகி இருப்பார்! சிலரின் விருப்ப தெய்வமாகி இருப்பார்!! சிலருடைய திறன்பேசிகளின் முகப்புத்திரையில் அமர்ந்திருப்பார். சிலர், அடுத்து தமக்கு பெண் குழந்தை பிறந்தால் தவ்வை என்று பெயரிடவேண்டும் என்றுகூட முடிவு செய்திருப்பர்!! 😁

எல்லாம் பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்யாமல் கட்டுரைகளை வெளியிடுவதின் விளைவு!!

oOOo

முதலில் நமது தெய்வப்புலவர் இந்த தெய்வத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

🔹குறள் #167

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

வஞ்சனையும் பொறாமையும் உடையவனை தனது அக்கையாகிய தவ்வையிடம் ஒப்படைத்துவிட்டு திருமகள் நீங்கிவிடுவாள்.

(அவ்வை=அக்கை. தம்+அவ்வை=தவ்வை. தனது அக்காள்.)

🔹குறள் #617

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்

சோம்பேறியிடம் மூத்தவள் குடி கொண்டிருக்கிறார். முயற்சியுள்ளவனிடமோ இளையவள் குடி கொண்டிருக்கிறார்.

(இளையவள் - சின்னவள் - சின்னாயி (சின்ன ஆயி. ஆயி - பெண் தெய்வம்) - பின்னவள் - நப்பின்னை (நல்ல பின்னே) - லட்சுமித் தாயார் - செல்வம் / மெய்யறிவு)

இவ்விரண்டு குறள்களை வைத்து பார்க்கும்போது, தவ்வையின் கடைக்கண் பார்வை ஒருவர் மீது விழவேண்டுமானால் அவரிடம் வஞ்சனை, பொறாமை, சோம்பேறித்தனம் ஆகியவை குடி கொண்டிருக்கவேண்டும்!!

ஒரு மூத்த, பண்பட்ட குடி இப்படிப்பட்ட தெய்வத்தின் அருளுக்காகவா முனைந்திருக்கும்?

oOOo

தொன்மக் கதைகளின்படி, தவ்வை சனி பகவானின் மனைவியாவார். "சனி" என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. இங்கு அழுக்கு/மலம்/தூய்மையின்மை மற்றும் சோம்பேறித்தனத்தைக் குறிக்கும்.

இதற்கு முன்னர், குறள் பகுதியில் நாம் கண்ட விளக்கம் இங்கும் பொருந்தும்: மனதிலும் உடலிலும் தூய்மையற்று, சோம்பிக்கிடப்போரை தவ்வை வந்து பிடித்துக் கொள்வார்.

இவ்விளக்கத்தின்படி, இவரை வணங்கிய நம் முன்னோர்கள் சோம்பேறிகளாகவும் தூய்மையற்றவர்களாகவும் இருந்தனர் என்று பொருள் வரும். இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இவ்விளக்கத்திற்கு முற்றிலும் எதிர்மறையானவர்கள் அல்லவா நம் முன்னோர்கள்!

oOOo

அடுத்தது, தவ்வையின் பிறப்பு, உருவம் மற்றும் இவர் வைத்திருக்கும் பொருட்களைப் பற்றி பார்ப்போம்.

> தொன்ம கதைகளின்படி, பாற்கடலைக் கடைந்தபோது இவர் முதலிலும், திருமகள் பின்னரும் வெளிவந்தனர். இவரது கொடியில் காக்கையும், கையில் துடைப்பமும் இருந்தன. இவரது ஊர்தி கழுதையாகும்.

> பாற்கடல் என்பது நமது உடல்! இதைக் கடைதல் என்பது மனதாலும், உடலாலும் செய்யப்படும் அனைத்து செயல்களுமாகும். இவற்றின் மூலம் கிடைக்கும் அனைத்து துய்ப்புகளும் தவ்வையாகும். இறுதியில் கிடைக்கும் மெய்யறிவு திருமகளாகும்.

(காஞ்சி திரு கைலாசநாதர் திருக்கோயிலில் உள்ள அன்னை தவ்வையின் சிற்பம்)

> இவரது தனங்களும் வயிறும் பெருத்திருக்கும். உடலும் சற்று பூசியிருக்கும். மனதாலும் உடலாலும் ஆற்றப்படும் வினைகளின் விளைவுகள் பல மடங்காகப் பெருகுவதைக் குறிக்கும்.

> இவரது கொடியிலுள்ள காக்கை நல்லதையும் உண்ணும். தீயதையும் உண்ணும். இது போன்று, வாழ்வு நமக்கு நல்லதையும் கொடுக்கும்; தீயதையும் கொடுக்கும். இரண்டையும் சமமாக துய்க்கப் பழகவேண்டும்.

> இவரது கையிலுள்ள துடைப்பம் தூய்மைப்படுத்துவதைக் குறிக்கும். பிறவிகள் அமைவதும், அவற்றின் மூலம் பல விதமான துய்ப்புகள் கிடைப்பதும் நம்மை மேம்படுத்துவதற்காகவே. தூய்மைப்படுத்துவதற்காகவே. வினைப்பயன்கள் தீர்ந்தவுடன் பிறவிகள் ஓய்ந்துவிடும். நாமும் நம்மில் - சிவப்பரம்பொருளில் - நிலை பெற்றுவிடுவோம்.

> இறுதியாக, இவரது ஊர்தியான கழுதை. எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். பொதியை ஏற்றினாலும் சரி, சும்மாவிருந்தாலும் சரி, அப்படியே இருக்கும். இப்படிப்பட்ட மனநிலையில் எப்போதும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும். நல்லது நடந்தால் தலையை விரிகோணத்தில் வைத்துக்கொள்வதும், தீயது நடந்தால் ஓடி ஒளிதலும் கூடாது.

இதுவரை இந்த பகுதியை பொதுவான கண்ணோட்டத்திலிருந்து எழுதியுள்ளேன். அதாவது, "நாம் பார்க்கிறோம்", "நாம் கேட்கிறோம்", "நாம் படிக்கிறோம்" என்ற கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு எழுதியுள்ளேன். ஆனால், இது தவறு!!

உண்மையில் நமக்கு பிறப்பில்லை, இறப்பில்லை. நாம் ஏதும் செய்வதுமில்லை. உடல் பிறக்கிறது. பிறக்க வைப்பது இயற்கை/அன்னை காளி/இறைவனின் ஆற்றல். உடல் இறக்கிறது. இறக்க வைப்பது அன்னை. உடல் இயங்குகிறது (மனமும் சேர்ந்து). இயக்க வைப்பது அன்னை. எல்லாவற்றையும் செய்வது அன்னையெனில், நமக்கிருக்கும் உகப்புகள் (சாய்ஸஸ்) இரண்டு: இருத்தல் & துய்த்தல். இருத்தல் எனில் நமது தன்மையுணர்வில் நிலைபெற்று இருத்தல். இதிலிருந்து விலகினால் ... துய்த்தல் - அதோ கதி - கோவிந்தா!! 😁

"இருத்தல் என்பது எளிய வேலையல்ல. மிக தீவிரமான வேலை!" என்று அருளியிருக்கிறார் #பகவான் திரு #ரமண #மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இதில் சற்று தொய்வு - மடி - ஏற்பட்டாலும், மெய்யறிவு (தாமரையினாள் - திருமகள்) நீங்கி, தவ்வையின் (மாமுகடியின்) வசமாகிவிடுவோம் (குறள் #617). அதாவது, பிறவி ஏற்பட்டுவிடும்.

(ஏழு சொற்களில் எவ்வளவு அழகாக ஆன்மிகத்தைப் பற்றி சொல்லிவிட்டார் திருவள்ளுவர்!! 👌🏽😍 இது போன்று இன்னும் பல குறள்களின் அடிப்படை ஆன்மிகமாகும்.)

oOOo

இவ்வளவு சிறப்புகளிருந்தும் ஏன் தவ்வை வழிபாடு வழக்கொழிந்து போனது? நீண்ட காலமாக இருந்தும் ஏன் பெருவாரியான மக்களின் தெய்வமாக ஆகவில்லை?

கனியிருப்ப காய்கவர்ந்தற்று தான் காரணம்!

"காண்பவனை விட காணப்படுபவை உயர்ந்தது" என்ற கொள்கையை உடையது பெண்தெய்வ வழிபாடு. இதுவே தகராறு. இதனால்தான் இந்த வழிபாடு பண்படாத மக்களிடம் இருந்தது. இதிலும், தவ்வை வழிபாடு காக்கை, துடைப்பம், கழுதை, கிழிந்த/அலங்கோலமான ஆடை என அருவருப்பை அடிப்படையாகக் கொண்டது. இதன் வேறுபாடுகளான,

🌷 மாரியம்மன், காளியம்மன்... - பயத்தையும்
🌷 காமாட்சியம்மன், மீனாட்சியம்மன், பெருமாள்... - அழகையும், புலன்களை கவர்தலையும் அடிப்படையாகக் கொண்டவை.

இவைகளுக்கு முன்னர் அருவருப்பு எப்படி தாக்குப்பிடித்திருக்க முடியும்? என்றும் மாறாத அகத்தை (சிவத்தை) உணர்ந்த இனத்தால் மாறிக் கொண்டேயிருக்கும் புறத்தியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததை காட்டுமிராண்டிகளின் படையெடுப்பு முடிவுக்கு கொண்டுவந்திருக்கும்.

(இங்கு கவனிக்க வேண்டியது, அருவருப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு வழிபாட்டையும் நம் முன்னோர்கள் அனுமதித்துள்ளனர் என்பது! இதுவே பாலைவன மதங்கள் இங்கு பெருவாரியான மதங்களாக இருந்திருப்பின்... 😏)

oOOo

கிடைத்த தவ்வை அன்னையின் சிலைகள் பெரும்பாலும் வயல்வெளிகளில் கிடைத்திருக்கின்றன. ஏன்?

சிவ வழிபாடு என்பது சுருங்குதல், எல்லாவற்றையும் விட்டொழித்தல், அனைத்திலிருந்தும் விலகுதல் என செல்லும். அன்னை வழிபாடு இதற்கு எதிர்மாறானது: விரிதல், பெருகுதல், வளர்தல், சேர்த்தல் என்று செல்லும்.

உழவுத்தொழில் என்பது ஒன்றையிட்டு, அதை பல மடங்காக அறுவடை செய்வதாகும். எனவே உழவர்கள் அன்னையை வணங்கியுள்ளனர். குறிப்பாக தவ்வையை வணங்கக் காரணம் வளத்தையும் பெருக்கத்தையும் குறிக்கும் இவரது உருவ அமைப்பு - பூசிய உடல், பெருத்த வயிறு & தனங்கள்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, June 22, 2021

மாவீரன் அலெக்ஸாண்டர் @ பேட்டை தாதா அலெக்ஸு புராணம்!! 😁

https://www.bbc.com/tamil/india-57500238

ஒரு திரைப்படத்தில், தனது மாமனை ஏமாற்றுவதற்காக, ஜனகராஜ் பெயர்களை மாற்றி மாற்றிப் பேசுவார். சாலையை தண்டவாளம் என்றும், கால்வாயை கடல் என்றும், ஊர் பெரியவர்களை பன்றி என்றும் மாற்றி மாற்றிப் பேசுவார். இது போன்று, பரங்கியரும் உலகை ஏமாற்றுவதற்காக மாற்றி மாற்றிப் பேசுவர்!

> தங்களுக்குள் அடித்துக்கொண்டதை முதல் உலகப் போர் என்றும்,

> பேட்டை தாதாவை உலகை ஆண்டவன் என்றும் (நம்ம அலெக்ஸு தான்),

> மன்னர் புருசோத்தமனையும் அவரது வீரர்களையும் பார்த்தவுடனேயே ஒரு மடக்கு ஆமணக்கு எண்ணெய் குடித்தவனைப் போல வயிறு கலங்கி நின்றவனை மாவீரன் என்றும் (அலெக்ஸேதான்),

> மன்னரிடம் தோற்று நுரையீரல் பங்க்சர் ஆனவனை வெற்றி பெற்றவன் என்றும் (அட, மறுக்காவும் நம்ம அலெக்ஸுதாங்க),

> ஜேப்படி தொழில் செய்வதற்காக ஒரு குஜராத் மாலுமியின் துணைகொண்டு பாரதம் வந்து சேர்ந்தவனை "பாரதத்தைக் கண்டுபிடித்தவன்" என்றும் (பொறுக்கி #வாஸ்கோடகாமா) கதை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

எல்லாம் எதற்காக? மனதளவில் நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்காக! இன்னொரு முறை 3,375 லட்சம் கோடிகள் கொள்ளையடிப்பதற்காக!! குளித்து விட்டு வந்து கால் நீட்டி அமர்ந்து, நியூஸ் ஆஃப் தி வோர்ல்ட் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பாரதியர் (இந்தியர்) கால் நகங்களை வெட்டி விடும் பேரின்ப வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்காக!!!

oOOo

பரங்கியர்களின் பிட்டுகளுக்கு இப்போதெல்லாம் எதிர்வினைகள் நிறையவே வெளிவருகின்றன. இந்நேரம் பரங்கியரது நிலை "உள்ளத்தை அள்ளித்தா" திரைப்படத்தில் வரும் "டெம்போ எல்லாம் வச்சி கடத்திகிட்டு வந்திருக்கோம்ய்யா. கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கய்யா!" நிலையாக இருக்கும் என்று நினைக்கிறேன் 😍:

"முகம்மதியர வச்சி, உருதுல எழுதி, மொழி பெயர்ப்பெல்லாம் செஞ்சிருக்கோம்ய்யா. கொஞ்சம் பாத்து கமெண்ட்டு போடுங்கய்யா. நெறைய லைக்கும் குடுங்கய்யா." 😂😂

✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽💪🏽💪🏽😌

Tuesday, June 15, 2021

விடுதலை (!?) அடைந்து 74 ஆண்டுகளாகியும் நம்மை விட்டகலாத அடிமைத்தனம்!!


இந்த காணொளியைப் பார்த்து முடிக்கும் போது: நம்மில் பலருக்கு வாயெல்லாம் பல்லாகிவிடும்! அடுத்து நம்மவர்கள் செய்யும் செயல்: அந்த காணொளியை தங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்வது!! இதற்கும் அடுத்து சிலர் செய்யும் செயல்: தங்களுக்கு பிடித்தமான நபரை அழைத்து, அந்த காணொளியைப் பற்றி பேசி மகிழ்வது!!! 😏

எல்லாம் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு!! 😔

இது போன்றொரு நிகழ்வு பரங்கி நாட்டில் நிகழுமா? அப்படியே நிகழ்ந்தாலும் அதன் பின்விளைவு மேற்கண்டது போலவா இருக்கும்? 

ஒரு எடுத்துக்காட்டிற்காக, ஒரு பரங்கி தலைமையாசிரியர், "விசுவாமித்திரர் என்பவர் யார்?" என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம். "பூமிக்கும் பகலவனுக்கும் இடையேயுள்ள தூரம் 108 பூமிகள் என்றும், பூமிக்கும் நிலவுக்கும் இடையேயுள்ள தூரம் 108 நிலவுகள் என்றும் முதன்முதலில் கண்டுணர்ந்து தெரிவித்தவர். மேலும், திரிசங்கு என்ற விண்மீனின் நகர்வு இயற்கைக்கு மாறுபட்டதாக உள்ளது என்பதையும் கண்டுணர்ந்து தெரிவித்தவர். திருமறைக்காடு (வேதாரண்யம்) திருக்கோயில் மூலவரின் கீழ் சமாதியாகி உள்ளவர்." என்ற பதிலை எந்த பரங்கி மாணவனிடமிருந்தாவது எதிர்பார்க்க முடியுமா?

பெரும்பாலும், திமிருடன், "காட்டான்களைப் பற்றி எனக்கு எப்படி தெரியும்?" அல்லது "காட்டானகளைப் பற்றி நான் அறிந்துவைத்திருப்பேன் என்று எப்படி நீங்கள் எண்ணலாம்?" என்ற பதில்கேள்வி வரும்!! 

500 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்துடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டிருக்காவிட்டால், இன்னமும், அந்த பன்னாடைகள் "பூமி தட்டையானது", "பூமியைத்தான் பகலவன் சுற்றி வருகிறது" என்று அறிவாளித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும்.

"விடுதலை" என்ற பூ சுற்றப்பட்ட நாளிலிருந்து இன்று வரை கருங்காலிகளும், நயவஞ்சகர்களும், படங்காட்டிகளும், கொள்ளையர்களுமே நமக்கு ஆட்சியாளர்களாக அமைந்ததால், இன்று வரை கெப்ளர், நியூட்டன், கலிலியோ போன்ற திருட்டுப் பயல்களை மேதாவிகளாகவும், திப்பு சுல்தான் என்ற வெறி பிடித்த கொடிய விலங்கை விடுதலைப் போராட்ட வீரனாகவும் "அறிந்து" வைத்திருக்கிறோம். 😠

Monday, June 14, 2021

வைகாசி - பூசம் (14/06/2021) - தெய்வச் சேக்கிழார் திருநாள் 🌺🙏🏽🙇🏽‍♂️



சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூரில் சைவ வேளாளர் மரபில் பிறந்து, தனது திறமையாலும், மதிநுட்பத்தாலும் பேரரசர் இரண்டாம் குலோத்துங்க சோழரின் முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்தவர். வடக்கிலிருந்து வந்த இருள் மதமான சமணத்தின் பக்கம் சாய ஆரம்பித்த பேரரசரை தடுத்து நிறுத்த, தனது பதவியினைத் துறந்து, பெரிய புராணம் என்னும் ஓர் ஒப்பற்ற தமிழ் பொக்கிசத்தை இயற்றி, அன்னைத் தமிழையும், தமிழர் சமயத்தையும் & பண்பாட்டையும் மீண்டும் காப்பாற்றினார். (முதலில் காப்பாற்றியவர் திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️)

🌸🌼🌻🏵️💮


சேக்கிழார் வாழ்ந்த வீடு. தற்போது அவரது திருக்கோயிலாக மாற்றியிருக்கிறார்கள்


திருக்கோயிலின் நுழைவாயில்


நுழைவாயிலுக்கு எதிர்புறமுள்ள திரு கந்தழீசுவரர் திருக்கோயில் 🌺🙏🏽🙇🏽‍♂️. சேக்கிழார் வணங்கிய பெருமான். இவர், குன்றத்தூர் மலைக்கோயில் மூலவருக்கு கீழ் சமாதியாகி இருக்கும் பெருமானின் மெய்யாசிரியர் ஆவார்.


குடந்தை திருநாகேச்சுர திருத்தல இறைவன்பால் சேக்கிழார் கொண்ட அன்பின் காரணமாக குன்றத்தூரில் அவர் கட்டிய திரு நாகநாதர் திருக்கோயில் 🌺🙏🏽🙇🏽‍♂️


மூலவர் திரு நாகநாதர் 🌺🙏🏽🙇🏽‍♂️


இந்த மூலவர் மீது சென்ற நூற்றாண்டில் சிறு சிதைவு ஏற்பட்டது. அவரை நீக்கி விட்டு புதிய மூலவரை நிறுவினர். ஆனால், அதன் பிறகு, ஓர் அன்பரின் கனவில் தோன்றிய இறைவன், பழைய மூலவரே தனக்கு பொருத்தமானது என்று தெரிவித்தார். உடனடியாக, பழைய மூலவரை மீண்டும் நிறுவினர். புதிய மூலவரை கருவறையின் நேர் பின்புறம் "திரு அண்ணாமலையார்" என்ற பெயரில் நிறுவினர். 🌺🙏🏽🙇🏽‍♂️


சேக்கிழாரின் மேற்பார்வையில், பேரரசர் இரண்டாம் ராஜராஜ சோழர் கட்டிய கலைப் பொக்கிசமான தாராசுரம் திரு ஐராவதேசுவரர் திருக்கோயில்


தில்லைக் கூத்தப் பெருமானே (திருமூலர் 🌺🙏🏽🙇🏽‍♂️) சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்த பெரிய புராணத்தின் முதல் பாடல்:

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகுஇல் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்


ஒல்லையவர் புராணக்கதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடிபோற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

🌷 "தமிழைக் கற்க வேண்டுமா? பெரிய புராணத்தை முறையாகப் படி!" என்று ஒரு சைவப் பெரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, June 7, 2021

சிகிரியா - பேரரசர் இராவணேசுவரரின் கோட்டை

https://youtu.be/UGFyi5WHzwA

பேரரசர் இராவணேசுவரரின் சிகிரியா கோட்டை மற்றும் அதிலுள்ள 7 அடுக்கு பாதுகாப்பு வளையங்களில் 2 அடுக்குகளைப் பற்றி விளக்குகிறார்.

பார்த்து முடிக்கும் போது வியப்பும் மலைப்பும் மிஞ்சுவது உறுதி! உடன் பல கேள்விகளும் தோன்றும். குறிப்பாக, "எப்படி இவ்வாறெல்லாம் நம்மால் கட்ட முடிந்தது?" என்ற கேள்வி தோன்றும்.

இதற்கான எனது பதில்:

521 ஆண்டுகளுக்கு முன், வாஸ்கோடகாமா என்னும் "பரங்கிக்கடவுள்" நம்மை கண்டுபிடிக்காவிட்டால் நமக்கும் உலகைப் பற்றி தெரிந்திருக்காது! உலகத்திற்கும் நம்மைப்பற்றி தெரிந்திருக்காது!! நமக்கு நம்மைப் பற்றி கூட தெரிந்திருக்காது!!! 😛 அண்மையில் ஜாக்கி இடாகு (பிராண்ட்) உள்ளாடைகள் நம் நாட்டிற்குள் வந்துசேரும் வரை, நமக்கு உள்ளாடைகள் என்றால் என்னவென்றே தெரியாது!! 😀 ஆகையால், இவற்றையெல்லாம் பரங்கியரின் மேலான வழிகாட்டுதல் இல்லாமல் நம்மால் கட்டியிருக்க முடியாது. பின்னர், எவ்வாறு கட்டியிருப்போம்?

தலையில் ஒர் ஆப்பிள் விழுந்தவுடன் புவியீர்ப்பு விசையைப் பற்றி "உணர்ந்து கொண்ட" (😉) நியூட்டன், குளியல் தொட்டியில் இறங்கியவுடன் நீர் இடப்பெயர்ச்சி கோட்பாட்டைக் "கண்டுபிடித்த" (😏) ஆர்க்கிமிடிஸ் போன்ற மாமேதைகளை (🤭) உலகுக்களித்த வெள்ளையினத்தவர், அவர்களது திரைப்படங்களில் வருவது போன்று, நேரப்பயணம் மேற்கொண்டு, பேரரசர் காலத்திற்கு சென்று, ஐந்திரம் என்ற உலகின் முதல் அறிவியல் நூலை எழுதிய மாமுனி மயன் 🌺🙏🏽 போன்ற முட்டாள்களுக்கு வழிகாட்டிவிட்டு, தங்களது காலத்திற்கு திரும்பியிருப்பர். வேறு வழியேயில்லை! ஆமென்!! 😁

✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽👊🏽💪🏽💪🏽😌

(பி.கு.: ஆமென் எனும் சொல் ஆமாம், ஏற்கிறேன், உடன்படுகிறேன் ஆகிய தமிழ் சொற்களிலிருந்து வந்ததாகும்.)

Saturday, June 5, 2021

"சிரமாறு உடையான்" - இச்சொற்கள் எத்தனை தெய்வங்களைக் குறிக்கின்றன?

1. சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையைக் கொண்ட சிவபெருமானைக் குறிக்கும்.

2. சிரம் ஆறு உடையான் - ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமானைக் குறிக்கும்.

3. சிரம் ஆறு உடையான் - காவிரியாற்றில் தலை வைத்து சயனித்திருக்கும் திருவரங்கப் பெருமானைக் (சட்டைமுனி சித்தரின் சமாதி 🌺🙏🏽) குறிக்கும்.

4. சிரம் மாறு உடையான் - தலையது மாறி - மனித சிரம் அல்லாத - வேழத்தின் சிரம் கொண்ட விநாயகரைக் குறிக்கும்.

5. சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான்முகனைக் குறிக்கும்

தமிழுக்கு நிகர் தமிழே!!

-- பாவலர் செய்கு தம்பி

👏🏽👏🏽👏🏽👌🏽👍🏽🙏🏽😍😍


(சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்தான் 💪🏽💪🏽 என்று ஆணித்தரமாக உறுதிப்படுத்த திரு #ஐராவதம் #மகாதேவன் அவர்களுக்கு உதவிய இலச்சினை)

திருக்குறளே நமக்கு மறைமொழி!! - கிஆபெ



"முத்தமிழ் காவலர்" திரு கிஆபெ விசுவநாதம் அவர்கள் எழுதிய "திருக்குறள் கட்டுரைகள்" எனும் நூலிலிருக்கும் "மறைமொழி" எனும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

மறைமொழி என்பது மறைக்கப்பெற்ற மொழி எனப் பொருள் பெறும். இதை மந்திரம் என்றும், 'வேத பாஷை' என்றும் வடமொழியாளர் கூறுவர். திருக்குறள் தமிழ் மறை ஆதலின், அது கூறும் மொழிகள் யாவும் நமக்கு மறை மொழிகளேயாம்! என்றாலும், நான் இங்கு கூறவந்தது அப்பொருளில் அல்ல. 'மறைமொழி' (பரி பாஷை) என்ற பொருளில் ஆகும்.

நகை வியாபாரிகள், மாட்டு வியாபாரிகள், நகை செய்பவர்கள், தரகுத் தொழில் செய்பவர்கள், தோல் வியாபாரிகள். மார்வாடிகள் ஆகிய பலரிடமும், கேட்போர் அறிய முடியாத மறைமொழிகளை அவர்கள் தங்களுக்குள்ளாகவே வழங்கி வருவதை இன்றும் காணலாம்.

அதுபோலவே, தமிழ் அறிஞர்களுக்குள்ளே - தமிழ் கற்ற மக்களுக்குள்ளே ஒரு மறைமொழி வழங்கவேண்டும் என்பது எனது ஆசை. இது மொழிப் பற்றுக்கும், கல்விப் பெருக்குக்கும், அறிவு வளர்ச்சிக்கும், நாட்டு நலனுக்கும் ஏற்ற துணை செய்யும் என்பது எனது எண்ணம். இந்த மறைமொழியைப் பாருங்கள்:

அ. நண்பரே வரவேண்டும்! வரவேண்டும்! அந்தப் பையன் 13-ல் எப்படி?

ஆ. அதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நிரம்ப உடையவன்.

இ. நேற்று நாம் போய்க் கேட்டுக் கொண்டிருந்தோமே; அவருக்கு 73 எவ்வளவு இருக்கிறது பார்த்தீர்களா?

ஈ. ஆம். 73 இருந்து என்ன செய்ய? 65 சிறிதும் இல்லையே!

உ. பையனுடைய 40 எப்படி?

ஊ. 40 நிறைய உண்டு. என்றாலும் 42 இல்லாமல் 41 மாதிரி இருக்கிறான்.

எ. தாங்கள் ஏன் இப்போது இராமனிடம் 70 வைப்பதில்லை?

ஏ. அவன் இருந்தாற்ப் போலிருந்து 92, 93, 94க்குப் போய்விட்டான். நான் 82 என எண்ணிச் சும்மா இருந்து விட்டேன். இல்லாவிட்டால் நம்முடைய 97 போய் விடாதா?

எப்படி இந்த மறைமொழி? திருக்குறள் படித்திருந்தால் இது உங்களுக்கு விளங்கியிருக்கும். இல்லையானால் அதைப் படியுங்கள். அதிலுள்ள அதிகாரங்கள்தாம் இவை!

13. அடக்கமுடைமை
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
65. சொல்வன்மை
67. அவையஞ்சாமை
70. மன்னரைச் சேர்ந்தொழுதல்
82. தீ நட்பு
92. வரைவின்மகளிர்
93. கள்ளுண்ணாமை
94. சூது
97. மானம்

திருக்குறள் தமிழனுடைய தனிச் சொத்து. அது தமிழ்நாட்டுக் கருவூலமும் ஆகும். திருக்குறளில் கூறப்படாதது எதுவும் இல்லை. அதை ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ்மகளும் படித்துத் தீரவேண்டும். அதன் 1330 குறளையும் படிப்பதற்குக் குறுக்குவழி ஒன்று உண்டு. அது 133 அதிகாரத்தையும் முதலில் மனப்பாடம் பண்ணுவதுதான்.

நாள் ஒன்றுக்கு பத்துப் பத்து அதிகாரங்களாகப் பயில்வது நல்லது. பதின்மூன்றே நாட்களில் உங்கள் உள்ளத்தில் திருக்குறளின் அதிகாரத் தலைப்புகள் முழுவதும் பதிந்து விடும். பிறகு உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் திருவள்ளுவர் எந்தத் தலைப்பில் எது எதைச் சொல்லியிருக்கிறார் என்று ஒவ்வொரு குறளாக அந்தந்த அதிகாரத்தின் கீழ்ப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இது குறளைப் படிக்கும் குறுக்கு வழியாகும்.

தம்பி! உனக்குக் கூறுவது இது ஒன்றுதான். எல்லா உறுப்புக்களும் நன்கு அமைந்ததுதான் உடல். அதுபோல, எல்லாத் துறைகளிலும் ஒளிவீசுவதுதான் அறிவு. முன்னதற்கு முழு உடல் என்றும், பின்னதற்கு முழு அறிவு என்றும் பெயர். முழு உடலைப் பெற்றதனாலேயே ஒருவன் முழு மனிதனாகிவிட முடியாது. அவன் முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவன் முழு மனிதனாகிறான். நீயும் ஒரு முழு மனிதனாக விரும்புகிறாயா? அப்படியானால், திருக்குறளைப் படி! உடனே எடுத்துப் படி!!

Wednesday, June 2, 2021

இன்று கண்ணில் பட்ட விகடனின் ஊழியம் - "இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 11"!!



உண்மையில் தலைப்பு எப்படியிருக்க வேண்டுமெனில்...

👊🏽 பேட்டை தாதா அலெக்சாண்டர் மாவீரனாக்கப்பட்ட கதை
👊🏽 மன்னர் புருசோத்தமனிடம் அலெக்சு தோற்ற கதை
👊🏽 மன்னருடன் நடந்த போரில் அலெக்சின் நுரையீரல் பங்க்சராகி, குணமாகாமல் புட்டுக்கொண்ட கதை
👊🏽 "பிள்ளை பெற்றுக்கொள்ள பெண் மனைவி, சமூகத்திற்காக ஆண் மனைவி" என்று வாழ்ந்த வெள்ளை கழிசடைகள், முறையாக வாழ்வதெப்படி என்று நம்மிடமிருந்து தெரிந்து கொண்ட கதை
👊🏽 நம்மிடமிருந்து அலெக்சு கைரேகை சோதிடம் கற்றுக்கொண்ட கதை
👊🏽 துருப்பிடிக்காத இரும்பைப் பற்றி அலெக்சும், மற்ற வெள்ளை ஓநாய்களும் தெரிந்து கொண்ட கதை
👊🏽 அலெக்சுடன் ஆயுர்வேத மருத்துவர்களையும், துளசியையும் மன்னர் புருசோத்தமன் அனுப்பி வைத்த கதை
👊🏽 இஸ்ரவேலர் யேசு பாரதம் வந்து, அத்வைதமும் பௌத்தமும் கற்ற கதை
👊🏽 கற்றதைக் கொண்டு தம்முடைய முட்டாள் இனத்தை மேம்படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்து, மீண்டும் பாரதம் திரும்பி, காஷ்மீரத்தில் சமாதியான கதை
👊🏽 பாரதத்திற்கே வந்திராத தோமையர் பாரதம் வந்து இறந்து போனதாக அல்வா கிண்டப்பட்ட கதை
👊🏽 நமது மன்னர்களிடம் கிரேக்க, ரோமானிய வெள்ளையர்கள் பணிபுரிந்த கதை
👊🏽 பொறுக்கி வாஸ்கோட காமா, ஒரு குஜராத் மாலுமியின் உதவியுடன் பாரதம் வந்த கதை
👊🏽 அன்னைத்தமிழால் பீட்டர் (ஆங்கிலம்) செம்மையான கதை
👊🏽 நம்மிடமிருந்து கற்றதை, "ஆப்பிள் தலையில் விழுந்தவுடன்", "குளியல் தொட்டியில் இறங்கியவுடன்" என்று விறுவிறுப்பான திரைக்கதைகள் எழுதி, நியூட்டன் முதலான திருட்டுப்பயல்கள் கண்டுபிடித்ததாகக் காட்டிய கதை
👊🏽 மொத்தத்தில், வெள்ளையன் உலகை சீரழித்த கதை

இந்த வெள்ளை ஒட்டுண்ணிகள் இங்கு வந்துசேர்வதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கிழக்கில் ஆஸ்திரேலியாவிற்கும், மேற்கில் அமெரிக்காவிற்கும் ஆமைவழிப் பாதைகள் வழியாக சென்றுவந்தவர்கள் நாம்! 💪🏽💪🏽 உலகிலுள்ள எத்தனையோ மொழிகளில் நமது சொற்கள் கலந்துள்ளன. எத்தனையோ ஊர்களின் பெயர்களில் தமிழ் உள்ளது. மாயன் நாகரிகம் நமது நாகரிகமே. எகிப்திய பிரமிடுகளையும், கிரேக்க கோயில்களையும் கட்டிக் கொடுத்தது நாமே. நாம் வளமுடனும், செழிப்புடனும் இருந்ததாலேயே ஆரியர், சீனர், கிரேக்கர், ரோமானியர், முகம்மதியர், வெள்ளையர் என அத்தனை காட்டுமிராண்டிகளும் படையெடுத்து வந்தனர்.

உண்மை இவ்வாறிருக்க, "இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை" என்று "சோத்துல செங்கல்" வகை ஊழியம் செய்கிறது விகடன்!! ✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽