Monday, November 6, 2023

திரு மாகறல் பெருமான் - பெயர் விளக்கம்


(மாகறல், காஞ்சிபுரம் - திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருக்கோயில்)

கறல் - விறகு / கட்டை
மாகறல் - பெருங்கட்டை / சிறந்த விறகு

மெய்யறிவாளர்கள் என்பவர்கள் வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, முனைப்பற்று அப்படியேயிருப்பார்கள். அப்படிப்பட்ட மெய்யறிவாளர்களுள் தலைசிறந்தவர் இவ்வுடையவருக்கு கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான் என்பது பொருளாகும்.

இதே பொருளிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் தாணு (ஸ்தாணு) என்ற ஆரியப்பெயருமாகும்.

இவருக்கு அடைக்கலங்காத்தப் பெருமான் என்ற பெயருமிருக்கிறது.

அடைக்கலம் - புகலிடம் - பாதுகாப்பான இடம். எது அப்படிப்பட்ட இடம்? அவர் அடைந்திருக்கும் திருநீற்று நிலையே அப்படிப்பட்ட இடமாகும்! அடைக்கலங்காத்தவர் எனில்...

- தனது நிலையை காத்துக் கொண்டவர்
- தனது நிலையை விடாப்பிடியாக பற்றிக் கொண்டவர்
- தனது நிலையில் உறுதியாக இருந்தவர் 

என பொருள் கொள்ளலாம். இப்பொருளும், மாகறல் பெருமான் என்ற பெயரின் பொருளும் ஒன்றுதான்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment