Tuesday, January 30, 2024

சாத்தான்களையும் சைத்தான்களையும் மிஞ்சிய அசுரர்கள்!! 😡😡


வெள்ளைச்சாத்தான்களும் & காட்டுமிராண்டி குறிமதத்தான்களும் செய்த அட்டூழியங்களையும், அவர்களால் நாம் இழந்தவைகளையும் அறிவோம். ஆனால், இவ்விருவரையும் மிஞ்சும் அசுரர்களை பற்றி... மறந்துவிட்டோம்! மறக்கடிக்கப்பட்டுள்ளோம்!!

(அசுரர்கள் - சமணர்கள், பெளத்தர்கள், பௌத்தத்திலிருந்து தோன்றிய நாமப்பேர்வழிகள், வைதீகர்கள் - மொத்தத்தில், வடக்கிலிருந்து வந்த அத்தனை கழிசடைகளும்!)

நம்மால் வளர்ந்து, நம்மை அழித்து, இன்றுவரை நம்மிடம் தட்டேந்திக் கொண்டு, நம்மையே அசுரர்களாக அவர்களது கதைகளிலும், வரைபடங்களிலும் காண்பித்து, அந்த நயவஞ்சகத்தையும் நம்மை ஏற்றுக்கொள்ளும்படி செய்திருக்கிறார்கள்!!

உள்ளபொருளை மிகச்சரியாக உணர்ந்து, மனிதப்பிறவியின் நோக்கமறிந்து, சரியாக இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்த நம்மை வெற்றுச் சிலைவணங்கிகளாக, கண்டதையும் வணங்கும் முட்டாள்களாக, மம சொல்லும் மடையர்களாக, நம்மை அழித்த அவர்களையும், அவர்களது "ஓட்டைப்பானைக்குள் ஈ"-ஐயும் (அசுரத்தையும்) மேன்மையானதாகக் கருதும் அறிவிலிகளாக மாற்றியுள்ளனர்! கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை வீண் செய்ய வைத்துள்ளனர்!! இவ்வகைகளில் நாமும், வையகமும் இழந்தவற்றை மதிப்பிட்டால்... சாத்தான்களும், சைத்தான்களும், வையகத்தில் இன்றுவரை தோன்றிய கொடுங்கோலர்களும் செய்தவை ஒன்றுமேயில்லை என்றாகிவிடும்!! 👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

💥 சாத்தான்களின் கொட்டம் - 350 ஆண்டுகளாக.
💥 சைத்தான்களின் கொட்டம் - தெற்கில், 700+ ஆண்டுகளாக. வடக்கில், 1,300- ஆண்டுகளாக.
💥 அசுரர்களின் கொட்டம் - வரலாறு பதிவு செய்யப்படத் தொடங்கியப் பொழுதிற்கும் முன்பிருந்து!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, January 28, 2024

திரு இரமண நிலையத்தில் இராமன் வழிபாடு நடந்துள்ளது!! 😔


மெய்பொருளுக்கு உள்ளபொருள் என்று பெயரிட்ட மாமுனிவரின் நிலையத்தில், அல்லாத பொருளுக்கு வழிபாடு!! 😔

💥 பகவான், தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியது - அசைவற்ற நிலை (நிலைபேறு).

இராமனின் வடிவம் உணர்த்துவது - அசைவு (அலைபேறு).

பகவானின் நிலைப்பாட்டிற்கு நேரெதிர் நிலைப்பாட்டினை உணர்த்தும் ஒரு வடிவத்தை, அவரது நிலையத்தில் வைத்து, வழிபடலாமா?

💥 பௌத்தம் போற்றும் சூன்ய நிலையை பற்றிய உரையாடலின் போது, "அது இருளல்ல. அவ்விருளை காண்பவன் ஒருவன் இருக்கிறான். அதுவே ஒளி." என்று அருளினார். எனில், இருளை போற்றும் / முன்வைக்கும் வைணவத்தின் இறைவடிவத்தை, ஒளியை மட்டும் போற்றியவரின் திருக்கோயிலில் வைத்து, வழிபடலாமா? (வைணவத்தின் வேர் அம்மன் வழிபாடாகும். வைணவர்களின் வேர் பௌத்தமாகும்.)

💥 இராமனின் வடிவத்தை 2 வகையாக ஆராயலாம்:

🔸 கறுப்பு உடல் & அவ்வுடலை போர்த்திய காவி / மஞ்சள் / வெள்ளை ஆடை

பொருள்: இருளிலிருந்து ஒளி பிறந்தது. அல்லது, இருளுக்குள் ஒளி அடக்கம்.

🔸 மேல் பாதி கறுப்பு நிறம் & கீழ் பாதி காவி / மஞ்சள் / வெள்ளை நிறம்

பொருள்: இருள் மேலானது. ஒளி கீழானது.

அறிவிலிருந்து அறிவற்றது பிறந்ததா? அறிவற்றதிலிருந்து அறிவு பிறந்ததா? அறிவு மேலானதா? அறிவற்றது மேலானதா?

"நாமுலங் காண்டலால்..." என்ற செய்யுளை அருளியவரின் நிலையத்தில் வைப்பதற்கே ஏற்புடைய வடிவமில்லாத போது, எப்படி அதற்கு வழிபாடு நடத்தலாம்?

💥 இராமன் என்ற வடிவத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் யாவற்றையும் (பெருமாளின் திருவிறக்கம், இன்னாரின் மகன், இன்னார் உடன்பிறந்தோர், இராமன் என்ற பெயர்....) நீக்கிவிட்டுப் பார்த்தால், அது அன்னை மாயையின் ஆண் வடிவமென்பது புலப்படும். எதை காமாட்சி, வெண்ணெய் திருடிக் கண்ணன் என்றழைக்கிறோமோ, அதுவே இங்கு வில்லேந்திய இராமனாகிறது. இராமனின் அம்பு... பற்றுகளை தோற்றுவிக்கும் கணையாகிறது!

பற்றுகளை அறுத்தெறிவதற்கு வழிகாட்டிய பெருமானின் நிலையத்தில், பற்றுகளை தோற்றுவிக்கும் வடிவங்களை வைத்து, வழிபாடு செய்யலாமா?

oOo

இராமனும் கண்ணனும் அவர்களுடைய இனமாக இருக்கலாம். அல்லது, அவர்கள் படைத்த கதாபாத்திரங்களாக இருக்கலாம். அல்லது, இம்மண்ணின் மைந்தர்கள் படைத்ததை, அவர்கள் தங்களுடையதாக்கி இருக்கலாம். எப்படியானாலும், இன்று வரை, இராமனும் கண்ணனும் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். எனில், அவரவர் இல்லங்களில், அல்லது, வேறு ஏதாவதொரு இடத்தில் வைத்து, வழிபாடு செய்து கொள்ளலாம். திரு இரமண நிலையத்தில் வைத்து, வழிபாடு செய்வது தவறாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, January 26, 2024

இராமாயணம் = மனம் அடங்குதல்!!


🌷 படத்தின் மேல் பகுதி:

> மனதின் (பெருமாளின்) அடிப்படைத் தன்மை அசைவாகும். அத்தன்மையை மனதிற்கு வழங்குவது இறைவனாகும்!

> உள்ளபொருள் (நமது தன்மையுணர்வு) தன்னொளி கொண்டது. சிவந்த நிறத்தில் காண்பித்திருக்கிறார்கள். மனம் தன்னொளியற்றது. கருமை நிறத்தில் காண்பித்திருக்கிறார்கள்.

🌷 படத்தின் நடுப்பகுதி:

> நீரோட்டம் - வையகம்.

> இலங்கை - நீரோட்டத்திலுள்ள திட்டு (அசுரத்தில், தீவு). "நான் இன்னார்" என்ற எண்ணமுள்ள மனிதன்.

மெய்யறிவில் நிலைபெற்றிருப்போர் (மெய்யறிவாளர்கள்) தங்களை படைப்பிலிருந்து வேறாக உணரமாட்டார்கள். ஏனையோர் தம்மை வேறாக, தனிமனிதர்களாக உணர்கிறாரகள். இப்படிப்பட்டவர்களையே இலங்கை என்ற சொல் குறிக்கிறது.

> குரங்குப்படை - எண்ணங்கள்.

மேற்கண்ட "இலங்கை" நிலையிலிருப்போரையே - அதாவது, தன்னை தனிமனிதனாக உணர்பவரையே - எண்ணங்கள் தாக்குகின்றன. மெய்யறிவாளர்களை குரங்குப்படை தாக்காது.

🌷 படத்தின் கீழ் பகுதி:

> இராவணனின் 10 தலைகள் - ஐம்புலன்கள் & ஐந்து உறுப்புகள் - உடல்.

> இராமன் - மனம்.

> உடலின் தொடர்பு ஏற்பட்டவுடனேயே, மனம் தனது குளுமையை / நிம்மதியை (சீதை) இழந்துவிடுகிறது. பின்னர், பல போராட்டங்களுக்குப் பிறகு, இறையருளால் மெய்யறிவாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, தன்னைப் பற்றியும், உடல் & வையகத்தைப் பற்றியும் புரிந்துகொண்டு அமைதியடைகிறது (சீதையை மீண்டும் பெறுதல்).

oOo

இராமாயணம் போன்ற உவமைகள் மிகுந்த கதையை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். ஓரிடத்தில் இராமன் மனதை குறிப்பார். இன்னொரு இடத்தில் தசரதன் மனதை குறிப்பார். வேறோரிடத்தில் இராவணன் மனதைக் குறிப்பார். இன்னுமொரு இடத்தில் சீதை மனதை குறிப்பார். ஒவ்வொரு காட்சியையும் / நிகழ்வையும் தனித்தனியாக சிந்திக்கவேண்டும்.

ஓர் எடுத்துக்காட்டிற்காக, வாலியின் கதையை பார்ப்போம்.

> வாலி - மனம்
> வாலி பறித்துக்கொண்ட ருமா (சுக்கிரீவனின் மனைவி) - உடல் 
> சுக்கிரீவன் - நல்லறிவு
> மறைந்திருந்து கொல்லும் இராமன் - உள்ளபொருள்
> இராமன் எய்தும் அம்பு - மெய்யறிவு

வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் நடக்கும் சண்டையென்பது மனதிற்கும் அறிவுக்கும் நடக்கும் போராட்டமாகும். இதே சண்டையை, திருவானைக்கா திருக்கோயிலில் சிலந்தி-யானை சண்டையாக காண்பித்திருப்பார்கள்!

மொத்த இராமாயணத்தை பொருத்தவரை இராமன் மனமெனில், இவ்விடத்தில் உள்ளபொருளாகிறார்!

இராமாயணத்தை ஒரு MCU-வாக (Marvel Cinematic Universe) வைத்துக்கொண்டால், அதில் வரும் தசரதன், இராமன், குரங்குகள் கதைகளை MCUவில் வரும் Iron Man, Thor, Dr Strange போன்ற கதைகளாக கொள்ளலாம். ஒவ்வொன்றிலும் கதாபாத்திரங்கள் & சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், ஒரே கரு தானிருக்கும். MCUவில், தீயது அழிதல்; இராமாயணத்தில், மனம் அழிதல் / மனம் அமைதியடைதல்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, January 16, 2024

கொல்லிமலை திரு அறப்பளிக்கும் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ - பெயர் விளக்கம்


🌷 கொல்லிமலையில் குடிகொண்டிருக்கும் திரு அறப்பளிக்கும் பெருமான். இவரை, இன்று, அறப்பளீசுவரர் என்று அசுரம் கலந்து அழைக்கிறோம்.

🌷 அறப்பளிக்கும் பெருமான் - அறப்பு + அளிக்கும் + பெருமை வாய்ந்தவர்.

🌷 அறப்பு - இறையிலி நிலம் / பகுதி. அதாவது, இப்பகுதியில் குடியிருப்போர் வரி கட்டத்தேவையில்லை.

🌷 இவரது அருளுக்கு பாத்திரமானால், வரியில்லாத பகுதியில் நம்மை குடியமர்த்துவார் என்பது இவரது திருப்பெயருக்கான விளக்கமாகும்.

🌷 எனில், தற்போது, நாம் வரி கட்டி, வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது. நீர், உணவு, எரிபொருள், உடை, இருப்பிடம்... என பல வரிகளை செலுத்தி, உடலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

🌷 உடலுடன் வாழ்வதென்பது வரி கட்டி வாழும் பகுதியெனில், உடலற்று வாழ்வதே வரி கட்டாமல் வாமும் பகுதியாகும். அதாவது, திருநீற்று நிலையாகும் (அசுரத்தில், சமாதியாகும்)!

அறப்பளிக்கும் பெருமான் = திருநீற்று நிலையை வழங்கும் பெருமான்!!

oOo

இவ்வாறு, நமது பெருமான்களின் திருநெறிய தமிழ்ப்பெயர்களை சிந்தித்துக் கொண்டிருந்தாலே நிலைபேற்றினை அடைந்துவிடலாம்! 🙏🏽

அசுரப்பெயர்களும் இத்தகையதே. ஏனெனில், அவர்கள் கற்றுக்கொண்டதும் நம்மிடமிருந்தே!

நமது முன்னோர்கள், இறைநிலையை அடைந்தவர்களுக்கு ஒரு வகையான பெயர்களும், ஏனையோருக்கு வேறு வகையான பெயர்களும் வைத்தனர். அசுரர்கள், எல்லோருக்கும் இறைநிலையை குறிக்கும் பெயர்களையே வைத்தனர். நம்மிடமிருந்து கற்றுக்கொண்டு, சில மாற்றங்களை செய்து, "நாங்க ஒசத்தியாக்கும்" என்று படங்காட்டுவது அவர்களது இன-நுட்பமாகும்! 👊🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

விடையை உணவுப்பொருட்களால் ஒப்பனை செய்யலாமா?


விடையென்பது மனமாகும். விடையை அழகு செய்யும் உணவுப் பொருட்கள்: 

- "நான் இன்னார்" என்ற எண்ணம் முதற்கொண்டு, நாம் சேர்த்து வைத்திருக்கும் பற்றுகள்
- நம் மீது மாட்டப்பட்டிருக்கும் உடல்
- நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சிகள்

இப்படி ஒப்பனை செய்யப்பட்ட விடையும், "ஒப்பனை விரும்பி" (அசுரத்தில், அலங்காரப்பிரியர்) என்ற பெயர் பெற்ற பெருமாளும் ஒன்றுதான்!

வருவிருளின் (அசுரத்தில், பிரதோஷம்) போது அனைத்தையும் நீக்குபவர்கள், மாட்டுப்பொங்கலின் போது அனைத்தையும் மாட்டிவிடுகிறார்கள்!! எது சரி?

"பெயர்களும் வடிவங்களும் தொல்லைக்கே" என்பது பகவானது வாக்காகும்!

(இணைப்பு படங்கள்: திருவண்ணாமலை, திரு இரமண நிலையம் & தஞ்சை விடைகள்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

மாட்டுப்பொங்கல் திருநாள்!


மாடு - விடை - மனம்.

மாட்டுப்பொங்கல் - மனதிற்கான பொங்கல்.

மாட்டை குளிப்பாட்டி, ஒப்பனை செய்து பொங்கல் கொடுப்பார்கள். இதுபோன்று, மனதை சீர் செய்து, பண்படுத்தி, பகவான் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட பொங்கலை ("நான் யார்?") கொடுக்கவேண்டும்.

மாட்டிற்கு கொடுக்கப்படும் பொங்கல், அதற்கு மகிழ்ச்சியளிக்கும். மனதிற்கு கொடுக்கப்படும் பொங்கல், அதை நிலைபெறச் செய்யும்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த மாட்டுப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Sunday, January 14, 2024

இனிய போகி, பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽


🔥 போகி - பற்றுகளை விட்டொழித்தல்

🍚 பொங்கல் - மெய்யறிவு பெறுதல். நமக்கே தோன்றும் அறிவாக கொள்ளலாம். பகவான் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்படும் (பொங்கி வழியும்) அறிவுரையாகவும் கொள்ளலாம்.

🎪 வாடி வாசல் - வாடிய வாசல் - மனம் வாடினால்தான் எண்ணங்கள் தோன்றும் - காளைகள் வெளிப்படும்.

🐂 ஜல்லிக்கட்டு - மனதை அடக்குதல்

🐮 மாட்டுப்பொங்கல் - மெய்யறிவில் நிலைபெறும் முயற்சிகள் / நிலைபெறுதல்.

🎪 காணும் பொங்கல் - நிலைபேறு அடைந்து, திரு மணிவாசகப் பெருமான் குறிப்பிடும் "சூழ்ச்சியில்லா காட்சியை" கண்டு, களித்து & இருத்தல்.

அனைவருக்கும் எனது உளங்கனிந்த, இனிய போகி, பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, January 12, 2024

மார்கழி-மூலம்: திரங்கன்முகவன் என்ற வடிவம் வெளியிடப்பட்ட நாள்!


திரங்கன்முகவனின் (அசுரத்தில், ஆஞ்சநேயர், அனுமான்) மொத்த வரலாறு: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது!

💥 சைவத்துடன் இணைந்துவிட்ட பிள்ளையார் வழிபாடு, மக்களிடையே ஹிட் அடித்ததால், அதற்கு போட்டியாக நாமப்பேர்வழிகள் வடிவமைத்ததுதான் இந்த திரங்கன்முகவன். இப்படியொரு வடிவத்தை வடிக்கலாமென்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிய நாளை, அல்லது, இப்படியொரு வடிவத்தை வடித்து, அவர்கள் வெளியிட்ட நாளை, இவ்வடிவத்தின் பிறந்தநாளாக கொண்டாடுகிறார்கள்.

💥 மாயையை பெண்ணாக பார்த்தால் அன்னை; ஆணாக பார்த்தால் பெருமாள். அதாவது, பெருமாள் அசையும் யாவற்றையும் (மனம், உடல், வையகம், படைப்பு) குறிக்கிறார். ஏற்கனவே மனதை குறிக்க பெருமாள் என்ற வடிவம் இருக்கும்போது, திரங்கன்முகவன் என்ற இன்னொரு வடிவம் எதற்கு தேவைப்படுகிறது?

💥 அத்தனை அநீதிகளுக்கும் அட்டூழியங்களுக்கும் அடிப்படை மனமாகும். எப்பாடுபட்டாவது மனதை அழிக்க வேண்டுமென்று அனைத்து மதங்களும் வலியுறுத்தும்போது, மனதை போற்றலாமா? வணங்கலாமா? வலுப்படுத்தலாமா (உளுந்துவடை, வெற்றிலை, ஜிலேபி மாலைகள்)?

💥 ஒழுங்காக போய்க்கொண்டிருந்த அயோத்தி இராமர் கோயில் நிகழ்ச்சி ஏற்பாடுகள், ஒருவரது மனம், "தான் சிலையை நிறுவவேண்டும்" என்று நினைத்ததால், என்னவாயிற்று என்பது அனைவருக்கும் கண்கூடாகும்.

👊🏽 உள்ளபொருளை உள்ளபொருளாக அறிந்திருந்த மக்கள்திரளை வெற்றுச் சிலைவணங்கிகளாக, கண்டதையும் வணங்கும் முட்டாள்களாக, கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை வீண் செய்யும் ஏமாளிகளாக மாற்றியது... ஒரு கூட்டத்தின் மனமேயாகும்!

🌷 திரு கௌதம புத்தரை திருநீற்று நிலையிலிருந்து வெளித் தள்ளுவதற்காக, அவரது திரங்கன்முகவன் (மனம்), "வையகத்தையே ஆளும் அளவிற்கு உன்னை உயர்த்துகிறேன்" என்று தூண்டில் போட்டதாம். தூண்டிலில் மாட்டியிருந்தால் அவரது நிலை என்னவாகியிருக்கும்?

🌷 திரங்கன்முகவனே அனைத்து தொல்லைகளுக்கும் மாறலாகும் (அசுரத்தில், காரணமாகும்). அதை வணங்கக்கூடாது. அழிக்கவேண்டும்.

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் ஆர்க்கும் இது உந்தீபற

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻