Sunday, January 19, 2020

ஆன்ம பயிற்சியாளனுக்கு உதவும் பட்டினத்தார் பாடல்!! 🌺🙏🏽

சென்னை திருவொற்றியூர் திரு பட்டினத்தார் உடையாரின் 🌺🙏🏽 (சுவாமிகளின்) திருக்கோயில் வாசலில் கீழ்காணும் அவரது பாடல் எழுதப்பட்டிருக்கும். ஆன்ம பயிற்சியில் ஈடுபட்டிருப்போருக்கு மிகவும் உதவக்கூடிய பாடலாகும்! 👌🏽

☀️ பதம் பிரிக்காமல்:

நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லாவுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே

☀️ பதம் பிரித்து:

நாட்டம் என்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டம் என்றே இரு பொல்லா உடலை அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றே இரு சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ்நீர்
ஓட்டம் என்றே இரு நெஞ்சே உனக்கு உபதேசம் இதே

🌼 நாட்டம் என்றே இரு

நாட்டம் எனில் #தன்னாட்டம். தன்னை நாடுவது. எனில், கவன ஆற்றலை நான் எனும் தன்மையுணர்வின் மேல் வைப்பது. கவன ஆற்றல் எதன் மீது செலுத்தப்படுகிறதோ அதுவாக மாறிவிடுவோம். தன்மையுணர்வின் மீது செலுத்தும் போது அவ்வுணர்வாக, அவ்வுணர்வு மாத்திரமாக நிற்போம். இதைத் தான், "எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்று சொன்னார்கள்!!

(வழக்கம் போலவே, பரங்கியன் நம்மிடமிருந்து இதை தவறாக கற்றுக் கொண்டு போய், "நீ சூப்பர்மேன் ஆக வேண்டும் என்று உறுதியாகவும் தொடர்ந்தும் எண்ணிக் கொண்டிருந்தால் சூப்பர்மேன் ஆகிவிடுவாய்" என்று சுய முன்னேற்ற நூல்கள் எழுதி, உலகத்துக்கே நாமம் போட்டு, காசு பார்த்துவிட்டான். சூப்பர்மேன் ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் சூப்பர்மேன் ஆகிவிடுவோம் - எதாவது ஒரு பிறவியில் - அதற்கான விலையை கொடுத்த பிறகு. சூப்பர்மேன் ஆன பிறகு தான் தோன்றும், "இது நமக்குத் தேவையா?" என்று 😛. இதிலேயும் நிம்மதி கிடைக்கவில்லையே என்று போய் நின்றால், "நீ தேடும் நிம்மதி எங்க ஓனர் தர்றாரு" என்று அடுத்த பிட்டைப் போட்டுக் காசு பார்ப்பான் பரங்கியன்!! 😂)

🌸 சற்குரு பாதத்தை நம்பு

"மெய்ப்பொருளை உணர்ந்த மாமுனிவரின் அறிவுரைகளை / வழிகாட்டுதலை நம்பு", என்று பெரும்பாலும் பொருள் கொள்வோம். இதில் தவறு இல்லையெனினும், இதற்கு வேறொரு அருமையான விளக்கத்தை பகவான் திரு #ரமண #மாமுனிவர் 🌺🙏🏽 தந்தருளியிருக்கிறார்.

தினமும் பகவானிடம் வந்து, சிரமப்பட்டு அவர் முன் விழுந்து வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஒரு நாள் பகவான், "உண்மையான சற்குருவின் பாதம் உனக்குள்ளே தன்மையுணர்வாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதை இறுகப் பற்றிக் கொள். எதற்கு இந்த சர்க்கஸ் வேலையெல்லாம்?" என்று அறிவுறுத்தினார். ☺️

தன்மையுணர்வை இறுகப் பற்றுதல் என்பது நமது கவன ஆற்றலை நம் மீதே திருப்புவதாகும். இத்தன்மையுணர்வே #சற்குரு, #இறைவன், #கடவுள், #பரம்பொருள், #மெய்ப்பொருள் என எல்லாமாகும். இப்பொருள் மட்டுமே என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மை. இப்பொருளை நம்பினால் மட்டுமே கரையேற முடியும்.

🏵️ பொம்மலாட்டம் என்றே இரு

மொத்த உலக வாழ்க்கையும் பொம்மலாட்டம் தான். இன்செப்ஸன் (Inception) என்ற அமெரிக்க திரைப்படத்தில், ஒருவரது கனவுலகை மற்றவருடன் பகிரக் கூடிய கருவியின் உதவியுடன், தானே தோற்றுவித்த தனது கற்பனை-கனவுலகத்தில், தனது ஆழ்மனது தோற்றுவித்த தனது இறந்து போன மனைவியின் உருவத்தைக் கண்டு நாயகன் டாம் காப் (Dom Cobb) அல்லல்படுவது போன்றது தான் இந்த வாழ்க்கை. இன்று நாம் காண்பவை, துய்ப்பவை யாவும் ஏதோ ஒரு பிறவியில் நாம் விரும்பியவையே (கெளதம புத்தர் 🌺🙏🏽). நாம் விரும்பியவை, அதற்காக செய்த செயல்கள், அவற்றின் விளைவுகள் என எல்லாவற்றையும் விரும்பிய கணக்கில் சேர்த்துவிட்டார் புத்தர். "தீதும் நன்றும் பிறர் தர வாரா'' என்ற நம் முன்னோரின் வாக்கும் இதற்கு உரம் சேர்க்கிறது.

பட்டினத்தார் பொம்மலாட்டம் என்று குறிப்பிட்டதை, பகவான், "திரையில் தோன்றும் காட்சிகள்" என்றும், திருவரங்கத்து மூலவரான திரு அரங்கநாத அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருக்கும் சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽, "அரங்கனின் (இறைவனின்) அணிகலன்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளனர். (ஏனெனில், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ விடுதலை (சமாதி) கிடைக்கும் தருணம், தோன்றும் காட்சிகள் நம்மை விட்டு விலகும் விதம் ஒருவர் அணிந்திருக்கும் அணிகலன்களை கழட்டும் விதமாக இருக்கும். இதனால், அணிகலன்கள் என்று  வர்ணித்திருக்கிறார் அரங்கர் (சித்தர்).)

🌻 பொல்லா உடலை அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றே இரு

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்லாயிரம் கோடி நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இவையில்லா விட்டால் நம்மால் வாழவும் இயலாது. இத்தனை கோடி உயிர்கள் வாழும் / கூடும் நம்முடலை சந்தைக் கூட்டமாக பார்த்திருக்கிறார் பட்டினத்தார்! 😊

(இது இருக்கட்டும். 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தாருக்கு, 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராபர்ட் ஹூக் மற்றும் அந்தோனி லீயுவென்ஹோயெக் என்ற பரங்கியன்களால் "கண்டுபிடிக்கப்பட்ட" நுண்ணுயிரிகள் பற்றி எப்படி தெரிந்தது? 🤔 சில பரங்கிப் படங்களில் வருவது போன்று பட்டினத்தார் 17ஆம் நூற்றாண்டிற்கு நேரப்பயணம் செய்து, ராபர்ட்டும் அந்தோணியும் "பாடுபட்டுக் கண்டுபிடித்ததை" தெரிந்து கொண்டு, அவரது காலத்திற்கு திரும்பிச் சென்று, அவரது பாட்டில் பதிவு செய்து விட்டு போயிருக்கிறார் என்று கருதுகிறேன். பரங்கியன்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் பட்டினத்தார் நுண்ணுயிர்கள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை! என்ன ஒரு அநியாயம் செய்திருக்கிறார் பட்டினத்தார்!! 😤😠) 😛😝😆😂😂🤣

💮 சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ்நீர்
ஓட்டம் என்றே இரு

இதைப் பற்றி பேசவே தேவையில்லை. 😏 நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு நிறையவே இருக்கும். மாடு போட்டுவிட்டுச் செல்லும் சாணியில் கூட, பசை இருக்கும் வரை தான் புழுக்கள் இருக்கும். காட்டுமிராண்டிகள், உலக கொல்லிகளான பாவாடைப் பரங்கியர்கள், அவர்களின் அடிப்பொடிகள் என இன்று வரை சுரண்டலையும் பகல் கொள்ளையையும் தவிர வேறெதையும் கண்டிராத நம்மிடம் உயர்ந்த குணங்கள் நலிந்தும், பிச்சைக்காரத்தனம் மிகுந்தும் காணப்படுவதில் வியப்பில்லை. ஆனால், நிலைத்த வலுவான நியாயமான ஆட்சி நடந்து கொண்டிருந்த 11ஆம் நூற்றாண்டிலும் மக்கள் நம்மைப் போலவே குடங்கவிழ்நீர் ஓட்டமாக இருந்துள்ளனர் என்பது மிகுந்த வியப்பைத் தருகிறது!!

🌷 நெஞ்சே உனக்கு உபதேசம் இதே

இந்தப் பாடலில் வரும் இரண்டாவது ஆரியச் சொல்லான உபதேசம் (முதல் சொல் சற்குரு - சத்+குரு), அறிவுரை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடிகளார் தன் நெஞ்சுக்கு கூறிக்கொள்ளும் அறிவுரைகள் இவை என்று எடுத்துக் கொண்டால், அடிகளார் வேறு, அவரது நெஞ்சம் வேறு என்றாகிறது. ஒரு ஆன்ம பயிற்சியாளர் தனது நெஞ்சுக்கு கூறிக்கொள்வது போல அடிகளார் பாடியிருக்கிறார் என்று எடுத்துக் கொண்டால், பயிற்சியாளர் வேறு, அவரது நெஞ்சம் வேறு என்றாகிறது. நாமே அந்த பயிற்சியாளன் என்று எடுத்துக் கொண்டால், நாம் வேறு, நமது நெஞ்சம் வேறு என்றாகிறது. எனில், நாம் யார்? நான் யார்?

(நம்மில் பலர், "நாம் யார்?" என்பதை உணர்ந்து விட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்று தவறான கருத்து கொண்டுள்ளனர். நம்மை உணர்ந்த பிறகு தான் போராட்டம் அதிகமாகும். அப்போது இப்பாடலின் அருமை புரியும்.)

🌷🌷🌷🌷🌷

பாரனைத்தும் பொய்யெனவே
பட்டினத்துப் பிள்ளையைப் போல்
ஆரும் துறக்கை அரிது

-- தாயுமானவர் 🌺🙏🏽, பாடல் #516

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Thursday, January 16, 2020

தை 2 - திருவள்ளுவ நாயனார் நாள் 🌺🙏🏽

(1950களில் கூட புழக்கத்திலிருந்த திருவள்ளுவ நாயனாரின் திருவுருவம்)

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎனஎப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்முப்பால் மொழிந்த மொழி

-- கல்லாடர்

👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

கல்லாடர் குறிப்பிடும் ஆறு சமயங்களில் நம் நாட்டை கொள்ளையடித்த, சீரழித்த, நம் முன்னோர்களைக் கொன்று குவித்த காட்டுமிராண்டித்துவமோ, நயவஞ்சக பரங்கியனின் நரித்துவமோ, இந்து சமய, சமூக, தேச விரோத & துரோக கூட்டங்களின் தாயகமான சிறியாரித்துவமோ இல்லை!! ஆதிசங்கரர் பிரித்து முறைப்படுத்திய சிவம், உமை, கணபதி, முருகன், பெருமாள் மற்றும் பகலவன் வழிபாடுகளையே சமயங்களாகக் குறிக்கிறார்.

Tuesday, January 14, 2020

அனைவருக்கும் எனது உளங்கனிந்த "🌧️☀️🐂🌾👳" வாழ்த்துக்கள்!!! 🙏🏽

"நிறைமொழி மாந்தர்" எனும் பெயர் பெற்ற உலகின் மூத்தக் குடியோனான தமிழனின் இயற்கையைப் பற்றிய பேரறிவின் விளைவே பொங்கல் விழாக்காலமாகும்!! அம்மூத்தோன் காட்டிய வழிச் சென்று, நல்லது - அல்லது என அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் போகியாகி, உள்ளம் எனும் பானையில் ஆனந்தம் எனும் பொங்கல் என்றும் பொங்கிட, வான்புகழ் பெற்ற வள்ளுவம் கூறும் உழவனைப் போல் வாழ்ந்து, மனிதப் பிறவியின் குறிக்கோளாகிய பிறவாமையை அடைந்திடுவோம் என இத்திருவிழாக் காலத்தில் உறுதி ஏற்போம்!!!

பிறப்பறுக்கும் அந்தப் பிஞ்ஞகன் 🌺🙏🏽 நமக்கு திருவருள் புரிந்து துணை நிற்கட்டும்!!!

🎆 🎉 🎊 🌈 ✨