Showing posts with label ஞானி. Show all posts
Showing posts with label ஞானி. Show all posts

Thursday, December 7, 2023

பேமானியாகலாம்! ஞானியாக முடியாது. 😏


இயேசுவே மெய்யானத் தேவன். ஞானியாக முயற்சிக்காதீர்கள். அது சாத்தானின் வேலையாகும்.


😆😆😂🤣🤣


(மேற்கண்ட வரிகளை, சில நாட்களுக்கு முன்னர், ஒரு ஆட்டோவின் பின்புறம் பார்த்தேன். மழை பெய்துகொண்டிருந்ததால் படமெடுக்க இயலவில்லை.)


அவனவன், இயேசு அடைந்த நிலையை அடைந்துவிட்டால், பாவமன்னிப்புத் தொழில் எப்படி நடக்கும்? ஒப்பாரி நிலையங்களை எப்படி தொடர்ந்து நடத்துவது?


குறி மதத்தை பொருத்தவரை, இந்த வம்பே வேண்டாமென்று தொடக்கத்திலிருந்தே கட்டுப்படுத்தியுள்ளனர். இறுதிவரை பஸ்கி, தண்டால்தான்! இம்மதத்தின் நிறுவனர் இறந்தபிறகு, அவனவன் தன்னை இறைத்தூதனாக அறிவித்துக்கொண்டு, தொழில் தொடங்கியுள்ளான். எல்லோரையும் அடக்கி, கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பெரும் பாடுபட்டுள்ளனர். எனவே, ஒருவரும் விழித்துக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்கின்றனர்.


(இங்கு சில கேள்விகள் எழவேண்டும்:


- திருஞானசம்பந்தருக்கு பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த திருஞானசம்பந்தராக அறிவித்துக்கொண்டனர்?

- அப்பர் பெருமானுக்கு பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த அப்பர் பெருமானாக அறிவித்துக்கொண்டனர்?

- பகவான் திரு இரமண மாமுனிவருக்குப் பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த பகவானாக அறிவித்துக்கொண்டனர்?


எனில், ஏன் மெக்காவில் மட்டும் அவனவன் தன்னை இறைத்தூதனாக அறிவித்துக்கொண்டான்? 😉)


அடுத்து, நம் சமயத்திற்கு வருவோம்.


இங்கும் மற்ற மதங்களின் நிலைதான். ஒரு பயலும் விழித்துக்கொள்ளக்கூடாது என்பதில் அசுரக்கூட்டம் தெளிவாக & உறுதியாக இருக்கிறது.


கேட்டதும் சிந்தனையை தூண்டவேண்டுமென்ற கண்ணோக்கத்தில், நம் முன்னோர்கள் வைத்த இறைவனின் திருப்பெயர்களாகட்டும், பார்த்ததும் சிந்தனையை தூண்டவேண்டுமென்ற கண்ணோக்கத்தில், அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இறைதிருவுருவங்களாகட்டும், திருக்கோயில்களின் வடிவமைப்புகளாகட்டும், எதுவும் எவ்வகையிலும் நம் சிந்தனையை தூண்டாதவாறு பார்த்துக்கொண்டுள்ளனர்!


நமது வேலையென்ன? கோயிலுக்கு செல்லவேண்டும். வரிசையில் நிற்கவேண்டும். ஓட்டைப் பானைக்குள் ஈ நுழைந்தது போன்று, அசுரர்கள் ஒப்பிக்கும் கா(ஆ)ரியச் செய்யுள்களை கேட்டுவிட்டு, அவர்கள் தட்டுவிளக்கை சுழற்றும் போது, ஏதோ கிடைத்தது / புரிந்தது போன்று கன்னங்களில் போட்டுக்கொண்டு, தட்டு அருகில் வரும்போது காசை போட்டுவிட்டு, விளக்கொளியை தொட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு, திருநீறு பெற்றுக்கொண்டு, நமக்கு நாமே திருநீறு அடித்துக்கொண்டு வெளியே வந்துவிடவேண்டும். சுபமஸ்து! 🤣


இந்த மாயவலைகளையெல்லாம் தாண்டி, யாராவது விழித்துக்கொண்டால், அவருக்கு கட்டம் கட்டிவிடுவார்கள். (இதுவே 1,000 ஆண்டுகளுக்கு முன்னரெனில், எல்லோருக்கும் ஒரே நீதியென்ற நிலைப்பாட்டை கொண்டிருந்ததற்காக, மன்னர் ஆதித்த கரிகாலச் சோழரை போட்டுத்தள்ளியது போல போட்டுத்தள்ளுவார்கள். இன்று, இம்மியளவு பண்பட்டு, கட்டம் கட்டுகிறார்கள்). ஆனால், அப்படி விழித்துக்கொண்டவர் உடல் உகுத்த பின்னர், அவரது திருவிடம் (கா(ஆ)ரியத்தில், சமாதி) புகழ்பெறத்தொடங்கினால், உரிமையுடன் உள்ளே நுழைந்து, கல்லா கட்டத்தொடங்கிவிடுவார்கள்.


அண்மை காலத்தில், இவர்களது அசுரக் கண்காணிப்பையும் தாண்டி, பெரும் புகழ்பெற்று, பலரது உள்ள விளக்கைத் தூண்டிவிட்ட ஒரே பெருமான் பகவான் திரு இரமண மாமுனிவராவார்! உள்ளபொருளை தெளிவாக காட்டியதற்காக, இன்றும், சில அசுரர்கள் அவரை வெறுத்து ஒதுக்குவதை நானறிவேன்.


எப்படியோ பகவானிடம் கோட்டைவிட்டாலும், இந்நேரம், "இன்னொரு பகவான் உருவானால், எப்படி கட்டம் கட்டுவது?" என்று ஆய்வு செய்து, அவர்களது "எப்படி மக்களை முட்டாளாக்கி, Safe-அ, Comfort-அ, Secured-அ, நன்னா & வாழையடி வாழையாக வாழ்வது?" என்ற கையேட்டுப் புத்தகத்தில் சேர்த்திருப்பார்கள். 👊🏽👊🏽


குறிமதமும், ஒப்பாரி மதமும் வையகத்தை பிடித்த பீடைகளெனில், இவ்வசுரக் கூட்டம் நம்மை பிடித்த பீடையாகும்! 😞


பொழுது இப்படியே போய்விடாது. அல்லவை இல்லாமல் போகும் சமயம் வரும். நல்லது வெளிப்படும். "ஓர்ந்து கண்ணோடாது இறை புரியும்" ஆட்சியாளர்கள் மீண்டும் தோன்றுவார்கள். எல்லாம் நலமாகும்.


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Friday, April 24, 2020

இஸ்ரவேலர் யேசு 100% சுத்தமான அக்மார்க் "நிறைஞானி"!! 😁

👆🏽 இந்த சான்றிதழ் போதுமா பரங்கிகளே? 🤭

எப்படியாவது தங்களது 🤮 மதத்தை நம் சமயத்தை விட உயர்ந்தது எனவும், இறந்த பிறகும் அடி வாங்கும் மாட்டுத் தோல் போல் இறந்து சுமார் 2000 ஆண்டுகளாகியும் இன்னமும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் இஸ்ரவேலர் யேசுவே தலைசிறந்த மெய்யறிவாளர் எனவும் நிரூபிக்க இந்த பரங்கிப் பாவாடைகள் படும் பாடு... 🤧



தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத இவர்களின் மற்றுமொரு தில்லாலங்கடி... மன்னிக்கவும்... முயற்சி தான் இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில இடுகை (இதன் முகநூல் முகவரி: https://www.facebook.com/129262133864798/posts/1697841883673474/). இதை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு முன் வேறு ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

2006-ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்தது. அச்சமயம் கட்டுமரம் எதிர்கட்சி தலைவராக இருந்தது. அப்போது ஒரு திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதியது. அப்படத்தில், ஆட்சியில் இருக்கும் ஒரு பெண் முதலமைச்சர், இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் குத்தாட்டம் ஆடுவது போன்று சித்தரித்திருந்தது. இப்படத்திற்கு குமுதம் வார இதழ் தனது கருத்துரையை இவ்வாறு முடித்திருந்தது: தயவு செய்து, யாராவது உடனடியாக இவருக்கு ஒரு முதலமைச்சர் நாற்காலியை வாங்கிக் கொடுக்கவும். இல்லையெனில், இவர் மீண்டும் கதை-வசனம் எழுத ஆரம்பித்துவிடுவார்!! 😝

இது போன்று பரங்கிப் பாவாடைகள் இன்னொரு தில்லாலங்கடி முயற்சியில் இறங்கி விடக்கூடாது என்பதற்காகத் தான் இவ்விடுகையின் ஆரம்பத்திலேயே, நம் அனைவரின் சார்பாக, அக்மார்க் சான்றிதழ் கொடுத்துவிட்டேன். (ஏன் அக்மார்க்? அவர்கள் தாம் இஸ்ரவேலர் நல்லவர் என்று ருசித்துப் பார்த்தவர்களாயிற்றே! 😆)

இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில இடுகையின் தமிழாக்கம்:

"குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் போது, இயேசு ஏன் 'தந்தையே' என்று அழைத்தார்" என்று பகவானிடம் 🌺 🙏🏽கேட்டேன். அவர் ஒரு நிறைஞானி என்ற பட்சத்தில், எல்லாவற்றையும் கானல்நீர் காட்சியாக (அல்லது திரையில் தோன்றும் காட்சியாக) கண்டிருப்பார். எனில், இருப்பற்ற தோற்ற மாத்திர காட்சிகளுக்காக அவர் வருத்தப்பட்டிருக்க மாட்டார். (தன்னை வேறாகவும், மக்களை வேறாகவும் இறைவனை வேறாகவும் கண்டதினால் தான் மக்களுக்காக இறைவனிடம் வேண்டினார். ஆகையால், இயேசு ஒரு நிறைஞானி அல்ல என்பது முடிவு.) இதற்கு #பகவான் #ரமணர், "மெய்யறிவு பெற்று விடுதலை அடைந்த பின்னரும் சில ஞானியர் துன்பப்படுவது போல் தோன்றும். இது உடலளவு மட்டுமே. மீதமிருக்கும் ஊழ்வினையால் உண்பது, உறங்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் இவற்றால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை." என்று விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வு எந்த நூலில் பதியப்பட்டிருக்கிறது? யார் கேள்வி கேட்டது? எந்த சூழ்நிலையில் பகவான் இந்த விளக்கம் அளித்தார்? போன்ற எந்த குறிப்புகளும் இந்த இடுகையில் இல்லை. இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு பகவானது படம், பெயர், ஆசிரமம் போன்றவற்றை வைத்து முட்டுக் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்!! 😠

பகவான், ஓரிடத்தில், "நீயே எல்லாம்!" என்பார். இன்னோரிடத்தில், "நீ ஒன்றுமே இல்லை!!" என்பார். 😃 என்ன சொல்கிறார் என்பது மட்டும் முக்கியமல்ல; யாருக்கு சொன்னார், எந்த சூழ்நிலையில் சொன்னார் என்பனவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சில பரங்கிப் பாவாடைகள் தங்களது 🤮 மதத்தை பெரிதென நிலை நாட்டவும், தங்களது மத நிறுவனரே உயர்ந்தவர் என நிலை நாட்டவும், பகவானை சோதிக்கவும் வந்திருப்பர். சில சமயம், பகவான் தான் சொல்ல வேண்டியதை சொல்லுவார். சில சமயம் தன்னிடம் கேள்வி கேட்டவர் விரும்பியதைச் சொல்லி இடத்தை காலி செய்ய வைப்பார். 😁 மேற்கண்ட விளக்கம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பகவானிடமிருந்து வெளிப்பட்டது என்று தெரியவில்லை.

ஒரு #மெய்யறிவாளர் (#ஞானி) தான் மட்டுமே மாறாத, அழியாத, சுயஒளி கொண்ட #உள்ளபொருள் என்பதையும், தனது உடல் முதற்கொண்டு தான் காணும் யாவும் மாறக்கூடிய, அழியக்கூடிய, சுயஒளியற்ற, இருப்பற்ற தோற்றக் காட்சிகள் என்பதையும் நன்கு உணர்ந்தவர். சமீபத்தில் கூகுள் நமது திறன்பேசி மூலமாக, நாம் விரும்பும் இடத்தில் புலி, சிங்கம், சிறுத்தை போன்ற மிருகங்களை முப்பரிமாண வடிவில் தோற்றுவிக்கும் வசதி செய்து கொடுத்தது. சிலர் இவற்றை வைத்து சிறு குழந்தைகளை பயமுறுத்தி விளையாடியிருப்பர். இவ்வுருவங்கள் உண்மை என்று அஞ்சிய/நம்பும் குழந்தைகளைப் போன்றவர்கள் அஞ்ஞானிகள். இவை வெறும் உருவங்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் மெய்யறிவாளர்கள். இருவருக்கும் தோன்றும் காட்சி ஒன்றுதான். ஆனால், மெய்யறிவாளர்கள் அதன் உண்மைத்தன்மையை உணர்ந்தவர்கள்!

திறன்பேசியில் தோன்றும் புலி உறுமுவதை வைத்து, அதற்கு பசிக்கிறது போலிருக்கிறது என்று எண்ணி, "கூகுளே, இந்த புலிக்கு உணவிடு!!" என்று கூவுபவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? 🥴

பரங்கிப் பாவாடைகள் கிண்டிய கதாபாத்திரத்தை தான் கிண்டலடிக்கிறேன். உண்மையான #இஸ்ரவேலர் இயேசுவை அல்ல. இன்று அமெரிக்கா, கனடா என்று அனைவரும் ஓடுவது போல், அன்று அனைவரும் அனைத்து வளங்களும் கொண்ட செழிப்பான பாரதத்தாயை நோக்கி வந்தனர். அப்படி வந்தவர்களில் இவரும் ஒருவர். இங்கே வந்து அத்வைதமும் பௌத்தமும் கற்று, தன் நாட்டிற்குத் திரும்பி, அடிமை மனப்பான்மையுடன் வாழ்ந்துவந்த தனது மக்களை உய்விக்க போராடினார். யாரை உய்விக்க போராடினாரோ அவர்களாலேயே துரத்தியடிக்கப்பட்டார். மீண்டும் பாரதம் திரும்பி, பல காலம் வாழ்ந்து, காஷ்மீரத்தில் சமாதியானார்.

இவரது இனம் பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தது. கல்வியறிவற்றது. பண்படாதது. ஆகையால் இவரது அறிவுரைகள் மிகவும் திரிந்து போயின.

💥 #குறுக்கை - உயிரற்ற உடல். தூக்கி எறியவேண்டியது. ஆனால், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!!

💥 குறுக்கையில் சித்ரவதை செய்யப்பட்டு அறையப்பட்டிருக்கும் யேசு - பெரும் போராட்டத்திற்கு பின், நீண்ட கால தவத்திற்கு பின் அழிக்கப்பட்ட மனம். கொண்டாடப்பட வேண்டிய சின்னம்! ஆனால், இதைக் கண்டு அழுகிறார்கள்!!

💥 #உயிர்தெழுந்த #யேசு - மனம் அழிந்த பின் வெளிப்படும் தூய்மையான உள்ளபொருள் (பரம்பொருள் / மெய்பொருள்). மனதையும் உள்ளபொருளையும் குறிக்க #இயேசு என்ற ஒருவரையே பயன்படுத்தியதால் தான் அனைத்து குழப்பமும்!!

பரங்கியரின் மதம், இத்தாலியிலுள்ள பைசா கட்டிடம் போன்றது. அடித்தளம் சரியில்லாதது. சரிந்து கீழே விழும் வரை, "ஐயா வாங்க! அம்மா வாங்க! சரியும் கட்டிடம் பாருங்க!" என்று கூட்டம் சேர்த்து காசு பார்க்கலாம். இது தான் நடந்து கொண்டிருக்கிறது! 👊🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி!! 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽