Thursday, September 28, 2017

ЁЯМ╝ *#ро╣ропроХ்ро░ீро╡ро░் - #роХுродிро░ைрод்родро▓ைропро░் / #рокро░ிрооுроХро░் - ро╡ைрогро╡род்родிрой் #роХро▓்ро╡ிроХ்роХроЯро╡ுро│்* ЁЯМ╝

இங்கு குதிரை "தொடர்ந்த விடாமுயற்சியைக்" குறிக்கிறது. ஒரு குதிரை, தான் இறக்கும் தருணம் வரையில் நின்று கொண்டேயிருக்கும். இது போல, ஞானத்தின் இறுதி நிலை (சாயுஜ்ஜியம்) கிட்டும் வரை விடாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

என்ன இது புதுக்கதை என்கிறீர்களா? 🙄 உங்களது கேள்விக்கு காரணம், பரிமுகரைக் கல்விக் கடவுளாக இன்றுவரை முன்னிறுத்துவது தான். பரிமுகர் சொற்கிழத்தி (ஸ்ரீசரஸ்வதி தேவி) போன்று இவ்வுலகக் கல்விக் கடவுளன்று. சைவத்தின் தென்திசைக் கடவுளை (#ஸ்ரீதட்சிணாமூர்த்தி) (#) வைத்து உருவாக்கப்பட்டவர்.

தென்திசைக் கடவுளின் முகம் பேரமைதியையும், அதனால் ஏற்படும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்தும். இப்பேரமைதியை அடையும் வழியை அவரது வலது கை முத்திரைக்காட்டும்: *தேடுபவனே (ஜீவனே) தேடப்படுபவன் (பரமன்).* இது ஜீவ-பிரம்ம ஐக்கியம் எனப்படும். இதில் பல நிலைகள் உண்டு. இறுதி நிலையே *பேரமைதி (சாயுஜ்ஜியம்)*. இதற்கு முந்தைய நிலையிலிருந்து இப்பேரமைதி நிலையை அடைய விடாமுயற்சித் தேவை. *இவ்விடா முயற்சியைத் தான் #பரிமுகர் உணர்த்துகிறார்!* 🙏

🐟 ஒருவர் ஞானமடைய வேண்டும் என்ற வேட்கைத் தோன்றிய ஆரம்ப காலத்தில், சதா தவத்தில் மூழ்கியிருப்பார். இது *மீன் (#மச்சம்) நீரிலிருப்பது போன்றது.*

🐢 பின்னர், திருவருளால் சிறிது தெளிவுப் பெறுவார். சதா தவத்தில் திளைக்காமல், தவத்தில் சிறிது நேரமும், புறஉலகில் கடமைகளையும் செய்ய முயற்சிப்பார். இது *ஆமை (#கூர்மம்), நீரிலும் நிலத்திலும் இருப்பது போன்றது.* அவ்வாறு கடமையாற்றும் போது, ஐம்புலன்களின் மேல் எச்சரிக்கையாக இருப்பார். ஏதும் ஆபத்தை உணர்ந்தால் ஆமை, தலையையும், கால்களையும் தனது ஓட்டிற்குள் இழுத்துக் கொள்வது போன்றது.

🐗 இது வரை மேலோட்டமாக செய்து வந்த பயிற்சியை இனி ஆழ்ந்து செய்ய ஆரம்பிப்பார். தன் தலைவனைத் தேடி உள்ளாழ்ந்து செல்வார். *இது பன்றி (#வராகம்) புதைக்கப்பட்ட கிழங்கை மோப்பம் பிடித்து மண்ணைக் குத்திக் கிளறுவதற்குச் சமம்.* (மோப்பம் பிடிப்பதில் நாய்க்கு அடுத்தப் படியாக உள்ள விலங்கு பன்றி. சைவர்கள் நாயை பைரவ தத்துவத்திற்கு உபயோகப்படுத்திவிட்டதால் வைணவர்கள் பன்றியை எடுத்துக் கொண்டனர். 😀)

🦁 ஒரு நிலை வரை மட்டுமே அவரால் முயன்று செல்லமுடியும். அதற்கு மேல் இயலாமல் நின்றுவிடுவார். *எக்கணம் அவர் தன் இயலாமையை உணர்ந்து சுய முயற்சியைக் கைவிடுகிறாரோ (சரணாகதி என்பது இதுவே), அக்கணம் உள்ளிருந்து இறைசக்தி ஒன்று சிங்கம் (#நரசிம்மம் - நர+சிம்மம் என்று பிரிக்கக் கூடாது. ந+ர+சிம்+ஹ என்று பிரிக்கவேண்டும். பொருள்: பற்றுகளை விட்டால், பற்றற்றவன் பற்றிக்கொள்வான்!! 👏👏🙏) போல் வெளிப்பட்டு அவரை ஆட்கொண்டுவிடும் (அவரது தனித்துவத்தை - ஜீவனை - விழுங்கி விடும்).*

இதுவரை செய்த தவத்தால் அவரது எண்ணப் பதிவுகள் (விஷய வாசனைகள்) முற்றிலும் அழிந்து போயிருந்தால், மேற்கொண்டு எந்தத் தடங்கலும் இல்லாமல் #பேரமைதி (#சாயுஜ்ஜியம்) நிலைக்குச் சென்று விடுவார். இல்லையெனில், அந்நிலையிலிருந்து அவரை மீண்டும் புற உலகிற்குத் தள்ள ஒரு சக்தி தோன்றும். இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

மேற்சொன்ன மனிதர் தீவிர ரமண பக்தர் என்று வைத்துக் கொள்வோம். ஏதேச்சையாக வேறொரு மகானின் அறிவுரையை அவர் படிக்கிறார். அந்த அறிவுரை அவரை மேற்சொன்ன சிம்மத்திற்கு இரையாக்குகிறது. ஆனால், எண்ணப் பதிவுகள், பற்றுகள் இன்னமும் மீதமிருப்பதால், இப்போது அவரது உள்ளுணர்வில், "பகவானது அறிவுரைகளால் அல்லவா இங்கு வந்திருக்க வேண்டும். வேறு மகானின் அறிவுரையால் இங்கு வருவது உனது குருபத்திக்கு இழுக்கல்லவா? வெளியே வந்து விடு." என்று ஒரு எண்ணம் தோன்றும். இது அவரை உவகைக் கொள்ளவைக்கும். பகவானின் மேலிருந்த அதீத பக்தியின் காரணமாக, "ஆம். இது தவறு தான்." என்று அவரும் புன்சிரிப்புடன் வெளியே வந்துவிடுவார்.

👤 *ஞானமடைந்த ஜீவனை அந்நிலையிலிருந்து வெளியே இழுத்த சக்திக்கு வைணவம் இட்ட பெயர்: வெண்ணெய் திருடிக் #கண்ணன் (அ) #மாயக்கண்ணன். (வெண்ணெய் / நவநீதம் - ஞானம்)*

பல பிறவிகளில் பாடுபட்டுப் பெற்ற ஞானத்தை கெடுத்து விட்டதற்காக அச்சக்தியின் மீது நமக்கு கோபமோ வருத்தமோ வரக்கூடாது என்பதற்காகத்தான் அதை மனதைக் கொள்ளை கொள்ளும் ஒரு சிறு குழந்தையாக வடிவமைத்தார்கள். அப்படிப்பட்ட ஒரு குழந்தை, வெண்ணெய்ப் பானையை விளையாட்டாக உடைத்து விட்டு, நம்மைப் பார்த்து சிரித்தால் கோபம் கொள்வோமா? அல்லது, அதை அள்ளி அணைத்து, அதன் சேட்டையை ரசிப்போமா? 🤗

ஏன் இப்படி வடிவமைத்தார்கள்? உலக இயக்கம் செவ்வனே நடைபெறுவதற்காக. இல்லையெனில், உலகின் மேல் (படைப்பின் மேல்) நமக்கு கோபம் வரும்; வெறுப்பு வரும். சைவம் இதை எப்படிக் கையாள்கிறது என்று பார்த்தோமானால், இன்னும் நன்றாக விளங்கும்.

*சைவத்தில், "வெளியே வா" என்று ஞானியை (சிவனை) இழுத்த சக்திக்குப் பெயர் #காளி!* இதனால் தான் காளியை பயங்கரமானவராகக் காண்பித்திருப்பார்கள். சிவனைக் காலால் இவர் மிதித்துக் கொண்டிருப்பது போன்று காட்டியிருப்பதும் இதனால் தான். ஆனால், மிதிபட்ட நிலையிலும் சிவன் ஆனந்தமாக இருப்பார். இது மேற்சொன்ன ஞானி உவகை கொண்டதற்கு சமம். காளியால் ஞானி தனது நிலையை கைவிடவில்லை. மாறாக, உவகை அடைந்திருப்பார். அடுத்து, முகத்தில் புன்சிரிப்பும், மனதில், "சரி. விட்டுக் கொடுப்போம். நம் பகவானின் அறிவுரையைக் கடைபிடித்து மீண்டும் வருவோம்." என்ற எண்ணமும் தோன்றும். பிறகே புறமுகமாவார். *இப்படி அவரைப் புறமுகம் செய்த சக்திக்குப் பெயர் #காமாட்சி - காமக்கண் கொண்டவள்.* இவர் விதைத்த காமமே (ஆசை / எண்ணம்) ஞானியை (சிவனை) கண் திறக்க வைத்தது. பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது. ஒடுங்கிய நிலையிலிருந்து அண்டம் மீண்டும் வெளிப்படக் காரணமானவர். இவரது காமத்தால் நன்மையே விளையும். காளி, காமாட்சி போன்ற சக்திகள் தேவைப்படும் போது மட்டுமே தோன்றுபவன. தோன்றி மறைபவை இறைவனாகாது. மேலும், இவற்றால் பின்விளைவுகளும் உண்டு. ஆகையால், பெண் உரு கொடுத்தார்கள்.

புறமுகமான ஞானி, சில காலம் கழித்து, மேலும் பக்குவம் பெற்று, திருவள் துணையுடன் மீண்டும் முயன்று சிம்மத்துக்கு இரையாகி (நான் என்பது தானாகி) நிற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இம்முறை மாயக்கண்ணனின் லீலைகளும், காளியின் தாண்டவங்களும் அவரை ஒன்றும் செய்யாது. அவருடைய நிலையை விடாது இறுகப்பற்றிக் கொண்டிருப்பார். இவ்விடாமுயற்சி, அவரை பேரமைதியில் (சாயுஜ்ஜியத்தில்) கொண்டு போய் சேர்க்கும். தான் என்பதும் கரைந்து போகும். இறையோடு இரண்டற கலத்தல் என்பது இதுவே.

🐎 *மாயக்கண்ணனிடம் சிக்காமல் அவரைத் தொடர்ந்து முயற்சிக்க வைத்த சக்திக்குத் தான் பரிமுகர் - ஹயக்ரீவர் - என்று பெயர்.* ஆக, பரிமுகரை வணங்குவது பேரமைதி நிலையை அடைவதற்காக. தமிழனை ஒழிக்க வந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக அல்ல! 😝

இப்பேருண்மைகளை #வேதாந்த #தேசிகர் திருவஹீந்திரபுரத்தில் தவத்தில் இருக்கும் போது உணர்ந்திருப்பார். இதைத் தான் இணைப்புக் கட்டுரையில், "தேசிகர் பரிமுகரை நேரில் தரிசித்த தலம்" என்று எழுதியிருக்கிறார்கள். இவற்றை உணர நுண்ணறிவுத் தேவை. இதை, "பரிமுகருடன் கருடாழ்வாரும் காட்சித் தந்தார்" என்று எழுதியிருக்கிறார்கள். (#கருடன் - அறிவு. #அனுமன் - மனம்.)

வைணவத்தைப் பொறுத்த வரையில் எல்லாமே பெருமாள் தான். எனில், எதற்கு அதற்கு முந்தைய நிலைச் சக்திகளை வணங்கவேண்டும்? *ஏன் தேசிகர் பரிமுக வழிபாட்டை உருவாக்கவேண்டும்?* எத்தனையோ காரணிகள் உண்டு. சுருங்கச் சொன்னால், 2 காரணிகள்: *அரசியல் மத படையெடுப்புகளாலும், மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் தாழ்ந்து கொண்டிருந்த மக்களின் தரம் மற்றும் தேசிகர் சார்ந்த வழிபாடு நடத்தி வைப்போர் சமூகத்தின் பெருக்கம்.* 😑

(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழின் கடைசிப் பக்கத்தில் ஹாஸ்ய யோகம் என்ற தலைப்பில் சில சிரிப்புக் கட்டுரைகளை பதிப்பித்திருப்பர். அது போல, இந்த இடுகையின் ஹாஸ்ய யோகப் பகுதி - இணைப்புக் கட்டுரையிலுள்ள தல வரலாறு! 😁)

*கண்ணனே கூறினான். கண்ணனே இயக்கினான். அவனே எல்லாவற்றிற்கும் காரணம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.*
-- பகவான் #ஸ்ரீகிருஷ்ணர் (மேற்சொன்ன மாயக்கண்ணன் ஒரு சக்தி. இவர் பகவத்கீதை வழங்கிய ஞானி. 🌺🔥🙏)

*"இல்லறத்தான் அல்லேன்.*
*இயற்கைத் துறவி அல்லேன்.*
*நல்லறத்து ஞானி அல்லேன். நாயினேன்.*
*சொல்லறத்து ஒன்றேனும் இல்லேன்.*
*உயர்ந்த கண்ணா, என்றே நான் ஈடேறுவேன்?"* 😢

🙏 🙏 🙏 🙏 🙏

# - *#தென்திசைக் #கடவுள் என்று சொல்வது சரியன்று. தென் திசையில் இருந்த கடவுள் / ஞானி என்று சொல்வதே சரி!* 🙏

சனகாதி முனிவர்கள் நால்வரும், ஞானத்தைத் தேடி அலைகிறார்கள். அவர்கள் சந்தித்த எந்த குருவும் அவர்களது கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கவில்லை. காலம் ஓடி விட்டது. வயதாகிவிட்டது. இறுதியாக, நம் பக்கம் வருகின்றனர். இங்கே ஒரு ஆலமரத்தின் கீழ், ஒரு இளைஞர் மிகுந்த ஆனந்தத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அவ்விளைஞரின் தோற்றமும், அவர் முகத்தில் தோன்றிய ஒளியும், அவரைச் சுற்றி நிலவிய அமைதியும், இவரே தாங்கள் தேடி வந்த ஆசிரியர் என்று அவர்கள் உள்ளுணர்வால் உணர்ந்தனர். அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். இளைஞரும் பதில் கூற ஆரம்பித்தார். இரவு பகல் பாராது முனிவர்கள் கேள்விகளைக் கேட்டனர். அவ்விளைஞரும் சளைக்காமல் பதில் கூறினார். இவ்வாறாக 1 வருடம் ஓடியது. முனிவர்களின் ஐயங்கள் தீர்ந்தபாடில்லை. இறுதியில், இளைஞர் பதில் கூறுவதை நிறுத்திக் கொண்டார். உள்முகமானார். அவரிடமிருந்து வெளிப்பட்ட பேரமைதி முனிவர்களையும் தொற்றிக் கொண்டது. கேள்விகள் தேவையற்று காணாமல் போயின. ஆர்பரித்த மனக்கடல் அடங்கியது. *எதை உணர்ந்தால் அனைத்தையும் உணர்ந்ததாகுமோ அதை உணர்ந்தார்கள். தங்களை உணர்ந்தார்கள்.* 👏

*"தேடுபவனே தேடப்படுபவன்" என்னும் உண்மையை, சனகாதி முனிவர்கள் வழியாக உலகிற்கு முதன்முதலில் உணர்த்தியதால், தென் திசையிலிருந்த அந்த இளம் ஞானி தென்திசைக் கடவுள் (#ஸ்ரீதட்சிணாமூர்த்தி) என்றும், ஆதிகுரு என்றும் அழைக்கப்படுகிறார்.* 🌸🔥🙏

(இவரைப் பற்றி #பகவான் #ஸ்ரீரமணர் ஸ்ரீமுருகனாருக்கு கூறியதை வைத்து எழுதியுள்ளேன். பகவான் இவ்வாறு கூறி முடித்ததும், #முருகனார் கேட்கிறார், "பகவானே, எங்குமே இது போல பதிவு செய்யப்படவில்லையே. இது தான் நடந்ததா?". "ஆம். இது தான் நடந்தது.", என்று கூறிவிட்டு பகவான் மெளனமானார். மேற்சொன்ன நிகழ்வு நடந்த போது அவ்விளம் ஞானியும், 4 சனகாதி முனிவர்கள் மட்டுமேயிருந்தனர். இது பகவானுக்குத் தெரிந்திருக்கிறது என்பதால், அந்த ஐவரில் ஒருவர் தான் பகவான் என்று முருகனார் முடிவு செய்துகொண்டார். *பகவானே அந்த தென்திசைக் கடவுள் என்று முருகனாரும், சனகாதி முனிவர்களுள் ஒருவரான #சனற்குமாரர் தான் பகவான் என்று வேறு சிலரும் முடிவு செய்துகொண்டனர்.* இவர்களது கருத்துக்களை பகவான் எதிர்க்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை. ☺)

🌸 ஓம் நமோ பகவதே ஸ்ரீஅருணாச்சலரமணாய 🌸

🔥 திருச்சிற்றம்பலம் 🔥

Monday, September 11, 2017

роЪெрок்роЯроо்рокро░் 11 - рооுрог்роЯாроЪு роХро╡ிроЮро░் роиிройைро╡ு роиாро│் ЁЯМ╕ЁЯЩП

🔥 அறிவே தெய்வம் 🔥

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி 
அலையும் அறிவிலிகள் -- பால்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் 
டாமெனல் கேளீரோ?
  
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் -- எத
னூடும் நின் றோங்கு மறிவொன்றே தெய்வமென் 
றோதி யறியீரோ?
  
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? -- பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?
  
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று 
வேதம் புகன்றிடுமே -- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ் 
வேத மறியாதே.
  
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே -- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந் 
நான்மறை கண்டிலதே.
  
போந்த நிலைகள் பலவும் பராசக்தி 
பூணு நிலையாமே -- உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று 
சான்றவர் கண்டனரே.
  
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று 
காட்டும் மறைகளெலாம் -- நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு 
அவங்கள் புரிவீரோ?
  
உள்ள தனைத்திலு முள்ளொளி யாகி 
யொளிர்ந்திடு மான்மாவே -- இங்கு
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?
  
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து 
வெறுங்க தைகள்சேர்த்துப் -- பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்முறை 
காட்டவும் வல்லீரோ?
  
ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன
உணர்வெனும் வேதமெலாம் -- என்றும்
ஒன்றுபிரம முளதுண்மை யஃது
உணர்வெனக் கொள்வாயே.

-- மகாகவிஞர் பாரதியார்

(இணைப்பு: தினமலர் - சென்னை - 11/09/2017)

Sunday, September 3, 2017

рокாро░родроХ் роХро▓்ро╡ி роОройுроо் роЕро┤роХிроп рооро░роо்

உலகக் கொள்ளையர்களான வெள்ளையர்களால் விளைந்த இன்னொரு நல் விளைவு! 😛

ரிஷி வர்ஷாவிலிருந்து (இன்றைய ரஷ்யா) வந்த ஆரியக் காட்டுமிராண்டிகள், வடக்கிலிருந்து வந்த சமண பெளத்த மொட்டைகள், முகம்மதியக் காட்டுமிராண்டிகள் என இத்தனை படையெடுப்புகளுக்குப் பின்னரும், பரங்கியர்கள் வரும் போது கல்வி இவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது. இதற்கும், இதே பரங்கியர்களே பதிவும் செய்திருக்கிறார்கள், "எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி, பிணியாளர்கள், பிச்சைக்காரர்கள்" என்று! 😑 அன்பு மார்க்கத்தினரின் அன்பானத் தொல்லைகளால் ஏற்பட்டிருந்த விளைவுகள் அவை. 😝 அந்நிலையிலும் நமது கல்வி கட்டமைப்பு பாராட்டத்தக்கதெனில் மேற்சொன்ன படையெடுப்புகளுக்கு முன்னர் அது எவ்வாறு இருந்திருக்கும்? 🤔

இணைப்புக் கட்டுரையின் இறுதியில் கோடிட்டுக் காட்டப்பட்டதைப் போல் இருந்திருக்கும்: "உலகின் எந்தக் கலாச்சாரத்திடமும் எதையும் பெற்றுக் கொள்ளாமல், உலகிற்கு, குறிப்பாக ஆசியாவுக்கு, தன் வளமான சிந்தனைகளை பாரதம் வழங்கிய காலகட்டமே அது."!! 👏👌💪

எனக்கென்னவோ, "கல்வி எனும் அழகிய மரத்தை பரங்கியர்கள் வேரோடு பிடுங்கி எறிந்தனர்" என்ற தரம்பாலின் வாக்கியத்தைத் தான் வரலாறு படைத்த அவதார் திரைப்படத்தில் இயக்குனர் ஜேம்ஸ்  கேமரூண் உருவகப்படுத்தியுள்ளார் என்று தோன்றுகிறது. 😎

(இணைப்புகள்: #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம், புரட்டாசி - செப்டம்பர் 2017)

Sunday, August 27, 2017

роЕрооெро░ிроХ்роХாро╡ிро▒்роХாроХрод் родாрой் роЖродாро░்!!!

https://tamil.gizbot.com/news/wikileaks-claims-that-cia-has-access-aadhaar-database-015093.html

காட்ட வித்து கள்ளக் குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான் -- கவுண்டமணி வசனம்

ஆதார வித்து ரூ.10ல சூட் போட்டுகிட்டாலும் மஸ்தான் மஸ்தான் தான். மஸ்தானை நம்புகிறவனோ செழிப்பான். -- மோடி பக்தாள்

😛😜😝

ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா

கொள்ளையடித்தவனும் நானே விற்றவனும் நானே
ஓட்டுப் போட்ட உன்னை நான் புலம்ப வைத்தேனே
கொள்ளையடித்தவனும் நானே விற்றவனும் நானே
ஓட்டுப் போட்ட உன்னை நான் புலம்ப வைத்தேனே..ஏ..ஏ

நான் சொடுக்கினால் Transmit ஆகும் ஆதார் Dataவே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
கொள்ளைக்காரனிடம் கேள்விகேட்க வந்தவனின் கூகுள் Accountஐ மூட வந்ததொரு

கொள்ளையடித்தவனும் நானே ...

(திருவிளையாடல் படத்தில் வரும் "பாட்டும் நானே பாவமும் நானே" பாடலைத் தழுவி)

👊👊👊

Friday, August 25, 2017

роЕройைро╡ро░ுроХ்роХுроо் роЗройிроп роЖройைрооுроХрой் рокிро▒рои்род родிрой ро╡ாро┤்род்родுроХ்роХро│்!!

ஒளவைப்பாட்டி இல்லாமல் ஐந்துகரத்தான் எங்கே? தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் பிள்ளையார் காணப்படுவதற்கு இவரே காரணம். திருக்கோவிலூர் வீரட்டேசுவரர் திருக்கோயிலே இவர் சமாதியான இடம். 🌹🔥🙏

பாட்டியை நினைவு கூர்வதென்பது அவர் விட்டுச் சென்ற பெருஞ்செல்வங்களை நினைவு கூர்வதாகும் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல்...). பாட்டியையும், அவர் தம் செல்வங்களையும் நினைவு கூர்ந்து விட்டு, அவரைப் போலவே பெரிய வயிற்றுப் பெருமானுடன் ஒப்பந்தமும் போட்டுக் கொள்வோம். 😉😀

*பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை*
*நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்*
*துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்*
*சங்கத் தமிழ்மூன்றுந் தா.*

🌼🌺🔥🔥🙏🙏

சென்ற வருட இடுகைகளிலிருந்து சில செய்திகள்...

🐘 பிள்ளையார் என்று Gene Splicing செய்து கொண்ட மனிதர் யாருமில்லை. *நம்மில் இயங்கும் அறிவுத் தத்துவம்  தான் விநாயகர். இவ்வறிவு தத்துவத்திற்கு ஆனைமுக வடிவம் உருவாக்கப்பட்ட தினம் இன்று!*

🐘 ஆனைமுக வடிவம் உணர்த்தும் கருத்து - சுருக்கமாக:

(கையில் கொழுக்கட்டை வைத்திருப்பின்)

நல்லறிவைப் பெருக்கி, ஆசை (அல்லது எண்ணம்) எனும் எலியைக் கட்டுப்படுத்தி, நான் எனும் அகந்தையை தன்னாட்டம் எனும் மழுவால் துண்டித்தால், மோதகம் எனும் பிறவாநிலையைப் பெறலாம்.

(கையில் சிவலிங்கத்தை வைத்திருப்பின்)

நல்லறிவைப் பெருக்கி, ஆசை (அல்லது எண்ணம்) எனும் எலியைக் கட்டுப்படுத்தி, நான் எனும் அகந்தையை தன்னாட்டம் எனும் மழுவால் துண்டித்தால், இறைவன் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குவான்.

🐘 ஆனைமுக வடிவம் உணர்த்தும் கருத்து - சற்று விரிவாக:

அறிவுக்கு அடிப்படை ஞாபகத்திறன். ஞாபகத்திறனின்றி வாழ்வது மிகக் கடினம். உம்.: Parkinson's உடையவர், விபத்தில் சிக்கி ஞாபகத்  திறனை இழந்தோர், ...

யானை அபரிமிதமான  ஞாபகத்திறன் கொண்ட, சைவ உணவு உண்ணும் சாத்வீக மிருகம். மேலும், பலம் பொருந்தியது. அறிவுடையோன்  பலமுடையோன். எதிரியையும் வீழ்த்திக் காலடியில் வைக்கக் கடவோன். விநாயகரின் காலடியில்  இருக்கும் மூஞ்சுறு போல.

உடலால் உழைப்பவனை விட அறிவு கொண்டு உழைப்பவனுக்கு வருமானம், மரியாதை அதிகம். சுகமாக வாழலாம். விநாயகரின் பருமனான உடல் இதைக் காட்டுகிறது. யானையின்  உடலும் பருமனானதே.

மிதமிஞ்சிய அறிவு, ஞானத்தைத் தரும். ஞானம் அடக்கத்தைத் தரும். விநாயகரின் தும்பிக்கை இதைக்  காட்டும்.

''தெள்ள தெரிந்தார்க்கு சீவன்  சிவலிங்கம்" எனும் திருமந்திர வரிகளுக்கேற்ப ஒரு கையில் சிவிலிங்கம்  வைத்திருப்பார்.

சில உருவங்களில் மோதகம்  வைத்திருப்பார். *மோதகம், வெளிப்புறம்  மாவுப் பொருளாலும் உள்ளே இனிப்புப்  பொருளாளும் ஆனது. வெறும் இனிப்பு தித்திக்கும். வெறும்  மாவுப்பொருள் நெஞ்சையடைக்கும். இரண்டும் கலந்தால் தான் உண்ண முடியும். மாவுப்பொருள் உலக வாழ்க்கை. இனிப்பு பொருள் ஆன்மிகம்.*

இதற்கு வேறு விளக்கமும்  உண்டு. *மாவுப் பொருள் உடல். மோதகத்தின்  உள்ளிருக்கும் இனிப்பு, உடலினுள் இருக்கும் சிவன். சதா சிவமாக இருந்தால் திகட்டி விடும். வெறும் உடலை மட்டும் வளர்த்தால் உருப்பட முடியாது. ''உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே" என்ற திருமந்திர வரிகளே பிள்ளையாரின்  மோதகம்.*

விநாயகர் அறிவைக்  குறிப்பவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தெருக்குத்து வருமிடங்களில்  அவரை வைப்பது. இது, "சிந்தித்து செயல்படு. கவனமாக இரு. முட்டிக்  கொள்ளாதே." என்பதற்கு சமம்.

இவர் உருவான பின் தான், இவரைப்  போன்று மனித உடல் - மிருகத்  தலையோடு இருக்கும்  அனைத்து  உருவங்களும்  உருவாகின. இதற்கு,  வழக்கில்  இருக்கும்  ஒரு சொலவடை உதாரணம்: *பிள்ளையார்  பிடிக்கப்போய்  குரங்காய் மாறிற்று!!*

🐭 ஐந்துகரத்தானை வணங்குவோம்! 🙏
🐁 அவனது உருவம் உணர்த்தும் பேருண்மைகளை சிந்திப்போம்!! 🙏
🐘 அஞ்ஞான இருள் நீக்குவோம்!!! 🙏
🔥 மனிதப் பிறவியின் பயனாகிய பிறவாநிலையைப் பெறுவோம்!!!! 🙏

(இணைப்புப் ஓவியம்: திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரை வணங்கும் நம்பியாண்டார் நம்பி. உடன், பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் அரசவையைச் சேர்ந்தோர். இப்பிள்ளையாரே நம்பிக்கு தேவார ஏடுகள் இருக்குமிடத்தைக் காட்டியவர்.)

🙏🌸🙏🌸🙏

*விக்கிப்பீடியாவை மட்டும் நம்புவர்களுக்கு...*

வரலாற்றில் பல ஒளவைப் பாட்டிகள் இருந்தனர் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால், எந்தப் பாட்டியும் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் காலத்தைச் சேர்ந்தவரல்லர் என்பதை ஏற்க முடியாது. ஒருவர் 10ஆம் நூற்றாண்டாம். இன்னொருவர் 12ஆம் நூற்றாண்டாம். 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் யாருமில்லையாம். கேட்டால், "அதையும் தாண்டியவர்" மட்டும் புரிந்து கொள்ளும்படியாக ஒரு பதிலைக் கொடுப்பார்கள்! 😛

விக்கிப்பீடியாவின் பின்புலத்தில் இருப்பவர்கள் பரங்கியர்கள் என்பதையும், இங்கு பலர் அவர்களின் அடிப்பொடிகள் என்பதையும் எக்கணமும் நினைவில் கொள்ளவேண்டும். ஏன் 10, 12ஆம் நூற்றாண்டு? ஏதாவது பரங்கி அச்சமயம் வந்து போயிருக்கும். முதலில், அதற்கேற்றவாறு இங்கு மாற்றம் செய்வர். பின்னர், அப்படி வந்து போனது தான் பாட்டிக்கு ஞான ஸ்நானம் கொடுத்தது என்ற பிட்டை வெளியிடுவர். பின்னர், சைவமும் எங்களுடையதே என்பர்! 😜

நம்மை மட்டும் அவர்கள் குறி வைக்கிறார்கள் என்று நினைப்பது தவறு. அவர்களை விட உலகிலுள்ள அனைத்து மூத்த குடிகளுக்கும் இதே நிலை தான். உலக சமய வரலாற்றை 2000 வருடங்களுக்குள் கொண்டு வரவேண்டும். மற்ற வரலாறுகளை 4000 முதல் 6000 வருடங்களுக்குள் கொண்டு வரவேண்டும். மீண்டும் உலகை ஆள வேண்டும். அதாவது, நேரடியாக கொள்ளையடிக்க வேண்டும். இப்போது நடைமுறையிலுள்ள மறைமுகக் கொள்ளைப் பற்றவில்லை. 200-300 வருடங்களுக்கு முன்னர், நம்மை கொள்ளையடித்து, ஐரோப்பாவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்று உலுத்துப் போயிருப்பதே இதற்குச் சான்று. அவைகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். "துரை" வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் வளரும் தற்போதைய பரங்கி தலைமுறைக்கு மீண்டும் அவ்வாழ்க்கையை பெற்றுத்தர வேண்டும். எவ்வளவு "நியாயமான" தேவைகள் & கனவுகள்!! 😝😝

👊👊👊👊👊

விக்கிப்பீடியாவை முழுவதுமாக ஒதுக்கத் தேவையில்லை. அதே போல, நமது தல புராணங்களையும், பாரம்பரிய கதைகளையும் அப்படியே எடுத்துக் கொள்ளவும் கூடாது. அவற்றிலும் பல இடைச்செருகல்கள், மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 2000 வருடங்களில் பல அரச, மத படையெடுப்புகள் நடந்துவிட்டன. நடுவில் திருஞானசம்பந்தரால் சைவம் எழுச்சிப் பெற்றாலும், ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி, அதனால் இங்கு ஏற்பட்ட அதிர்வலைகள், வடக்கில் காட்டுமிராண்டி முகம்மதியர்களின் படையெடுப்புகள், அதனால் புலம்பெயர்ந்த வடக்கத்தியர்கள் என பல மாற்றங்கள் சில நூற்றாண்டுகளில் நடந்துவிட்டன. தமிழனின் நேரடி ஆட்சியும் முடிந்து 1000 ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஆகையால், கிடைக்கும் தகவல்களை கவனமாக ஆராய்ந்து உண்மைகளை உணரவேண்டும். எல்லாம் வல்ல பரம்பொருள் நமக்கு துணையிருக்கட்டும்.

🌸 திருச்சிற்றம்பலம் 🔥