Showing posts with label நம்மாழ்வார். Show all posts
Showing posts with label நம்மாழ்வார். Show all posts

Saturday, November 15, 2025

பெருமாளின் கையிலுள்ள வாள் பேயாழ்வாராக பிறந்ததாம்! 😁


> வாள் - அறிவு.
> வாளோடு பிறந்த மூத்தக்குடி - அறிவோடு பிறந்த மூத்தக்குடி.

சிலர் பொருள் சேர்க்க பிறந்திருப்பர். சிலர் ஊர் சுற்ற பிறந்திருப்பர். சிலர் யாவற்றையும் நுகர பிறந்திருப்பர். இது போன்று, பேயாழ்வார் சிந்திக்கப் பிறந்திருப்பார். அதாவது, அறிவின் வடிவமாகிறார்.

இப்படி எளிமையாக சொல்லாமல், ஏன் "பெருமாளின் கையிலுள்ள வாள்" என்று பிட் போடுகின்றனர்?

ஏனெனில், ஒரு பயலுக்கும் தெளிவு கிடைத்துவிடக்கூடாது. தெளிவு கிடைத்துவிட்டால், படங்காட்டும் தொழில் படுத்துவிடுமே! பிறகு, சேஃபா, கம்ஃபர்ட்டா, செக்யூர்டா, வாழையடி வாழையா நன்னா போஜனம் செய்வதெப்படி?

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

> நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
> நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
> நாமம் = ஏமாற்று வேலை!
> வைணவம் = ஏமாற்று வேலை!!

அறிவின் வடிவாக வாழ்ந்த ஒருவர், எவ்வாறு ஏமாற்று வேலையை பின்பற்றமுடியும்?

அல்லது, அவர் பின்லேடன்-வகை அறிவாளியாக இருக்கலாம். பின்லேடன், அமெரிக்காவை நிலைகுலைய வைத்தான், USD10B செலவு செய்யவைத்தான் & 10 ஆண்டுகள் பாடுபட வைத்தான். பின்னரே சிக்கினான். எனில், அவன் எப்படிப்பட்ட அறிவாளியாக இருந்திருக்க வேண்டுமென்று கற்பனை செய்து கொள்ளலாம். அவனை போன்றொரு சிறந்த அறிவாளியாக பேயாழ்வார் இருந்திருக்கலாம்! 😏

அல்லது, திரு நம்மாழ்வாரை போன்று பேயாழ்வாரும் திருநெறியராக இருந்திருக்கலாம். நம்மாழ்வாருக்கு பெண்குறி (நாமம்) சாத்தி, அவரை தங்களவராக காட்டுவது போன்று, பேயாழ்வாருக்கும் பெண்குறி சாத்தி, காப்புரிமை கொண்டாடுகின்றனர் என்று கொள்ளலாம். இதற்கான குறிப்பையும் அவர்களே கொடுத்துள்ளனர்

"ஐசுவரியம் உண்டாக, எதிரிகள் குறைய இங்கு வேண்டிக் கொள்ளலாம்" என்று எழுதியிருக்கிறார்கள். மெய்யியலில், ஐசுவரியம் எனில் மெய்யறிவாகும்; எதிரிகள் எனில் பற்றுகளாகும். அதாவது, பேயாழ்வரின் அருள் பெற்றால் பற்றுகள் குறைந்து, மெய்யறிவு கிட்டும் என்பது பொருளாகும். ஆனால், நாம மதமோ இரண்டிற்குமே எதிரானதாகும். மெய்யறிவை தூற்றும். பற்றுகளை சேர்த்துக் கொள்ளச் சொல்லும். எனில், எப்படி பேயாழ்வார் நாம மதத்தை சார்ந்தவராக முடியும்?

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணிகளுக்கு பின்னர், வடக்கிலிருந்து வந்த சமணம், பௌத்தம் போன்ற நச்சுக் கூட்டங்களால் தொழில் செய்ய முடியாமல் போனது. அப்போது, மொட்டையரில் ஒரு பிரிவினர், "நம்மாளாண்டதான் கம்ப்ளீட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இருக்கே. கண்டன்ட்ட மாத்தி பிசினஸ் செஞ்சா என்ன?" என்று சிந்தித்து, அப்போது சிறியளவில் இருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கி, இன்றுள்ள நாமத் தொழிலாக வளர்த்தெடுத்தனர்.

💥 பள்ளிகொண்ட பெருமாள் - எகிப்திலிருந்து சுடப்பட்டது.
💥 பெண்குறி (நாமம்) - பாலைவன மதங்களிலிருந்து சுடப்பட்டது. அங்கு பயன்பாட்டிலருந்த 'n' வடிவத்தையெடுத்து, தலைகீழாக்கி ('u'), அதன் நடுவில் சிவப்புக் கோட்டை சேர்த்தது தெலுங்கனனா இராமானுஜர்.
💥 சடாரி - பாலைவன மதங்களிலிருந்து சுடப்பட்டது. அவர்களது குல்லா, இங்கு சடாரியானது.
💥 சக்கிரத்தாழ்வார் - யூதரிடமிருந்து சுடப்பட்டது. அவரது தாவீது விண்மீன் (David's Star), இங்கு சக்கிரத்தாழ்வாரானது.
💥 திரங்கன்முகவன் (குரங்கு) - ஆனைமுகனுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டது
💥 கோளரிப் பெருமாள் கதை - திருக்கடவூர் கதையின் உல்டா.
💥 தெலுங்கனான இராமானுஜர் 7 மலைகளை முழங்கால்களால் கடந்தது - திரு காரைக்கால் அம்மையார் திருக்கயிலாய மலையை தலையால் கடந்த வரலாற்றின் உல்டா.

oOOo

கண்ணனே சொன்னான். கண்ணனே எழுதினான். (இங்கு கண்ணன் என்பது மனமாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல. 🌺🙏🏽🙇🏽‍♂️)

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, December 22, 2023

வைகுண்ட ஏகாதசி



🌷 வைகுண்ட ஏகாதசி - திரு நம்மாழ்வாரின் திருநாள்

🌷 பரமபத வாயில் வழியாக நம்பெருமாள் வெளிவருவது - அவரதுடல் இறக்கும் தருவாயில் மண்டையோடு பிளந்தது. இதை, "மண்டையோடு பிளந்து, அவர் வெளியேறினார்" என்று மாற்றிச் சொல்கிறார்கள். இது தவறாகும். மெய்யறிவு பெற்று, நிலைபேற்றினை அடைந்த அவர், எங்ஙனம் வெளியேறுவார்? எங்கு போவார்? போக்கும் வரவும் அவருக்கில்லை.

🌷 பரமபத வாயில் வழியாக வெளிவரும் நம்பெருமாள் - நம்மாழ்வாரை குறிக்கும். பெருமாளை குறிக்காது. பெருமாள் என்பது மனம், உடல் & வையகம் ஆகிய அசையும் பொருட்களாகும். நம்மாழ்வார் அசையாப் பொருளாவார்.

🌷 பரமபத வாயில் வழியாக வெளிவருவது விடுதலையை (அசுரத்தில், மோட்சம்) கொடுக்கும் - நம்மாழ்வார் அறிவுருத்திய வழியை கடைபிடித்தால், நாமும் நிலைபேற்றினை அடையலாம்.

🌷 பரமபத விளையாட்டு - நமது அன்றாட வாழ்வு.

🌷 விளையாட்டை விளையாடுவது பெருமாளும் & தாயாரும் - வாழ்வென்பது மனமும் & அறிவும் ஆடும் விளையாட்டு.

🌷 இரவு முழுக்க விளையாடவேண்டும் - "காண்பவை யாவும் உண்மை" எனும் அறியாமை (இருள் / இரவு) இருக்கும் வரை, வாழ்க்கை எனும் விளையாட்டை ஆடியாகவேண்டும்.

🌷 நோன்பிருத்தல் (அசுரத்தில், விரதமிருத்தல்) - உண்ணாதிருத்தல். மனதில் தோன்றும் எண்ணங்களையும், காணும் காட்சிகளையும் சட்டை செய்யாதிருத்தல்.

🌷 நோன்பினிடையே தேவைப்பட்டால் துளசி நீர் குடித்தல் - மேற்சொன்னவாறு எண்ணங்களையும் காட்சிகளையும் சட்டை செய்யாதிருக்கும்போது, சில சமயம், "நாம் செய்வது சரியா?" என்ற ஐயம் தோன்றும். அச்சமயம், பகவான் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகளை (துளசி நீர்) சிந்தித்து, தன்னிலையிழக்காமல் இருக்கவேண்டும்.

oOo

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- திரு நம்மாழ்வார்

இப்பாடல் முழுவதிலும் இரண்டன்மை (அசுரத்தில், அத்வைதம்) வெளிபடுகிறது. இது பற்றிய பகவான் திரு இரமண மாமுனிவரின் கருத்தை பின்வரும் திரைநகலில் காணலாம்:


oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, January 4, 2023

வைகுண்ட ஏகாதசி - சில சிந்தனைகள்



🌷 வைகுண்ட ஏகாதசி - திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ உடலிலிருந்து விடுதலை (முக்தி) பெற்ற நாள்.

🌷 மண்டையோட்டின் உச்சிப்பகுதி திறந்து, அதன் வழியாக நம்மாழ்வாரின் உயிர் வெளியேறியதாக தொன்நம்பிக்கை. இதையுணர்த்தவே திருவரங்கத்து நம்பெருமாள் (விழாத்திருமேனி) பரமபதவாயில் வழியாக கொண்டுவரப்படுகிறார். கருவறை தலைக்கு சமம். பரமபதவாயில் தலையுச்சிக்கு சமம்.

🌷 நம்மாழ்வாரின் விடுதலை நிகழ்வு வெகு சிறப்பாக திருவரங்கத்தில் கொண்டாடப்பட்டாலும், அவர் திருநீற்று நிலையை அடைந்தது ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில்தான். எனில், திருவரங்கத்தில் (உடையவருக்கு கீழே) திருநீற்று நிலையிலிருப்பது... 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🌷 முதன்முதலில் திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு விழா எடுத்தது திருமங்கையாழ்வாராவார். ஒரு நாள் விழாவாக தொடங்கப்பட்டது, பின்னர் வந்தவர்களால் 10 நாட்கள், 20 நாட்கள் என விரிவு படுத்தப்பட்டு தற்போதைய நிலையை பிற்காலத்தில் அடைந்தது.

oOo

வைகுண்ட ஏகாதசி என்றதும் "பரமபதவாயில் வழியாக வெளியேறுவது" என்ற படி நம் நினைவுக்கு வரும்படி விழாவை வடிவமைத்திருக்கிறார்கள். இதை இரு வகையாக அணுகலாம்.

🔸 முதலில், நம்மாழ்வாரை வைத்து அணுகுவோம்:

விழாத்திருமேனி பரமபதவாயில் கடக்கும்போது, மண்டையோட்டின் உச்சிப்பகுதி திறந்து, அதன் வழியாக நம்மாழ்வார் வெளியேறினார் என்ற நிகழ்வு நம் நினைவுக்கு வரவேண்டும். நினைவு வருகிறதா?

நம்மாழ்வார் மெய்யறிவு பெற்ற / காட்டிய வழியைப் பற்றி சிந்திப்பது நல்லதா? அல்லது, அவர் வெளியேறிய வகையைப் பற்றி சிந்திப்பது நல்லதா? 

எந்த வகையில் அவர் வெளியேறியிருந்தால் என்ன? 

வேறு வகையில் அவர் வெளியேறியிருந்தால் நிலைபேற்றினை அடைந்திருக்கமாட்டாரா?

வெளியேறும் வகை அவர் கையிலாயிருந்தது? 

உடலைவிட்டு அவர் வெளியேறினாரா? அல்லது, அவரைவிட்டு உடல் விலகியதா?

🔸 அடுத்து, நம்மை வைத்து அணுகுவோம்:

வைகுண்ட ஏகாதசி என்றதும் நம் நினைவுக்கு வருவனவற்றில் ஒன்று, "பரமபதவாயில் வழியாக வெளியேறினால் வைகுண்டம் உறுதியாகக்கிட்டும்" என்ற நம்பிக்கையாகும். அதாவது, நம்மாழ்வாரைப்போன்று நமது மண்டையோட்டின் உச்சி திறந்து, அதன் வழியாக நாம் வெளியேறினால் நிலைபேறு கிட்டும் என்பது பொருளாகும். இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ வரலாற்றில் திரு கணபதி முனி என்றொரு ஆரியக்கவிஞர் இடம்பெறுகிறார். கடுமையாக வடக்கிருந்ததின் விளைவாக மண்டையோடு திறக்கப்பெற்றவர். ஆனால், பிறவி முடியும்போதும் பற்றுகள் மீதமிருந்ததால் அவருக்கு நிலைபேறு கிட்டவில்லை. இது பகவானே சொன்ன செய்தியாகும்.

ஆக, மண்டையோடு திறப்பதினால் பயனில்லை என்பது உறுதியாகிறது. 

oOo

"மண்டையோடு பிளந்து வெளியேறுவது" என்று வடிவமைத்ததைவிட, "உடலெனும் சிறையிலிருந்து வெளியேறுவது" என்று விழாவை வடிவமைத்திருந்தால் சிறப்பாக மட்டுமில்லாமல், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். ஏனெனில், நம்மை பற்றிய மெய்யறிவை பெறுவதென்பது ஒரு படியை கடப்பதற்கு சமமெனில், அதில் நிலைபெறுவதென்பது பத்து படிகளை கடப்பதற்கு சமமாகும்!!

பெருமாளின் திருவிறக்கக் கதைகள் யாவற்றிலும், எதிரியை அவர் தனித்து நின்றே எதிர்கொள்வார் - இரு கதைகளைத் தவிர: நரகாசுரன் & கம்சன். இருவரும் குறிப்பது... "நான் இவ்வுடல்" என்ற எண்ணத்தை! அவ்வளவு கடினமானது இந்த தப்பெண்ணத்தை விடுவதென்பது!

oOOo

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️

(நம்மாழ்வாரின் இப்பாடலில் இரண்டன்மை (அத்துவைதம்) வெளிப்படுவதாக பகவான் அருளியிருக்கிறார்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, October 20, 2021

தில்லை திருத்தலத்திற்குள் கோவிந்தராசர் சிலை நுழைந்த வரலாறு!!



("The Aravidu dynasty" (வரலாற்று ஆய்வு நூல்) மற்றும் திரு கா வெள்ளைவாரணரின் "தில்லை பெருங்கோயில்" ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை.)

இரத்தப்படுக்கை

-- சிவதீபன் (9585756797)

தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங்கூட மின்னிக் கொண்டிருந்தன. இன்று நிகழவிருக்கும் காட்சிகளைக் காண விரும்பாத கதிரவன், தனது கண்களை மூடிகொண்டே கிழக்கே அடி எடுத்து வைத்துள்ளான் போலும்! பொழுது புலராத அந்த வேளையில் தீட்சிதர்கள் யாவரும் கீழசன்னதி வாசலில் கூடிநின்று பரபரப்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அதிகாலை வேளையிலும் விரைவாக அகத்து வேலைகளை நிறைவுசெய்து கொண்டு, ஈரக்கைகளுடன், மடிசார் சரசரக்க, பெண்களும்கூட வந்துசேரத் தொடங்கினர்.

"எப்படியும் இன்று ஒரு பிரச்சனை இருக்கிறது!!" என்று ஊகித்தவர்களாக ஆலயத்தில் பணிபுரியும் சிற்பிகளும் எடுபிடிகளும் மெல்ல ஒதுங்கி கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை பார்க்கப் பார்க்க தீட்சிதர்கள் பலருக்கு மனம் வெகுண்டது. "காலங்காலமாக நமக்கு பாத்தியப்பட்ட கோயில் வாசலில் இன்று நாமே அகதிகள் போல நிற்க வேண்டியிருக்கிறதே!!" என்று சிலர் விம்மினர்!

அதிலொரு தீட்சிதர்,

பொங்கிய திருவில் நீடும்
பொற்புடைப் பணிக ளேந்தி
மங்கலத் தொழில்கள் செய்து
மறைகளால் துதித்து மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பில்
தகும்பணித் தலைநின் றுய்த்தே
அங்கணர் கோயி லுள்ளா
அகம்படித் தொண்டு செய்வார்

என்ற பெரிய புராணப் பாடலை உரக்க கூறியவராய், "நடராஜா! நடராஜா!! உனக்கு அடிமை செய்யவே பிறந்தவர்கள் நாங்கள் என்று திருமுறைகள் போற்றுகிறதே!! இன்று எங்களுக்கே இந்த நிலைமையா?" என்று வாய்விட்டே அழுதார்!!

அதைக் கேட்ட சிலர் வெகுண்டெழுந்து கீழகோபுர வாசல் வழியே உட்செல்ல முயற்சித்தபோது, செஞ்சியிலிருந்து வந்திருந்த சிறப்பு தெலுங்கு வீரர்கள், "எவரு ராக்கூடாதையா!! ஸ்தானிகாலு மாத்ரம்! ஸ்தானிகாலு மாத்ரம்!!" என்று தடுத்தனர்.

"நாங்கள் மூவாயிரம் பேரும் எங்கள் சுவாமிக்கு ஸ்தானிகம்தானடா!! எங்களை தடுக்க நீங்கள் யார்?" என்றார் ஒரு தீட்சிதர்.

இந்த கேள்விக்கு அங்கு யாரும் பதில் அளிக்கவில்லை. மாறாக, நெற்றியில் திருமண் சாற்றிகொண்ட வைணவர்கள் சிலரின் வேதாகம கோஷங்கள் மட்டுமே பதிலாக எழுந்தது. அவர்களுக்கு அருகிலேயே பெரிய பள்ளிகொண்ட திருமாலின் சிற்பம் ஒன்று ஸ்ரீதேவி பூதேவி தயார்களுடன் வடிவமைக்கப்பட்டு தயாராய் கிடந்தது.

அச்சிற்பம், வெறும் கல்லாக இங்கு வந்து இறக்கப்பட்ட காலத்திலிருந்து பூக்கத் தொடங்கிய பிரச்சனை அது! அன்றிலிருந்து தீட்சிதர்களும் எத்தனையோ முறை முயற்சித்தும் பலனில்லாமல், கல்லாய் தொடங்கிய பிரச்சினை இன்று மாலாய் மாறிக் கிடக்கிறது!!

(சற்று பின்னோக்கி செல்வோம்)

தீட்சிதர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். திருமங்கையாழ்வாரின் பேச்சைக் கேட்டு என்றோ நந்திவர்ம பல்லவன் வைத்துச் சென்ற புள்ளியில் இன்று வைணவ மதவெறி பிடித்த தெலுங்கன் செஞ்சி கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கோலம் போடுகிறான்.

நந்திவர்மன் தெற்றியம்பலமாக ஸ்தாபித்த சித்திரக்கூடத்து கோவிந்தராசரை, "தில்லைநகர்த் திருச்சித்திரக் கூடந் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே" என்று குலசேகர ஆழ்வாரும், "மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித் தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக்கூடம் சென்று சேர்மின்களே" என்று திருமங்கையாழ்வாரும் பாடியதனை நாயக்கனிடம் தீட்சிதர்கள் எடுத்துக் கூறினர்.

"நீங்கள் கோயில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், பூசிக்கும் உரிமையை எங்களிடம் விட்டுவிடுங்கள். உங்கள் வைணவ ஆகமப் பூசை முறைகள் உள்ளே வரவேண்டாம். நாங்கள் எங்கள் முறைப்படி உங்கள் கோவிந்தராசரை பூசிக்கிறோம். அதனைத்தானே உங்கள் பாசுரங்களும் குறிப்பிடுகின்றன." என்று இறங்கி கேட்டபோது
முழுதாக தமிழ் புரியாத நாயக்கன் அவனுக்கருகில் அமர்ந்திருந்த அவனது வைணவ குருவினை பார்த்தான்.

அதற்கு அவர், "கூடாது! கூடாது!! பெருமாளை நம் முறையில் நம்மவர்கள் தான் பூசிக்கவேண்டும். முன்னர் இவர்கள் பூசித்தப்போதுதானே சோழ மன்னர் பெருமாளை கோயிலைவிட்டே வெளியேற்றினார். மேலும், அப்போது வெளியே சென்ற பெருமாள், வைணவஸ்ரீபாத நாயக்க மன்னர்கள் வந்தபின்னர்தான் இந்த கோயிலுக்குள்ளே வந்திருக்கார். இப்போது, ராஜா, உங்களது புண்ணியத்தால் பெருமாள் பெரிய கோயிலுக்குள் மீண்டும் பள்ளி கொள்ளப்போகிறார். இவ்வளவு பெரிய சிலையை செய்து வைத்துவிட்டு, பூசையை இவர்களிடம் விட்டுச்செல்வதா?" என்று தெலுங்கில் கிசுகிசுத்தார். கொண்டம நாயக்கனுக்கு சினம் மிகுந்தது. 

அவனது சினத்தையும், தெலுங்கில் வைணவர் கூறிய கிசுகிசுப்பையும் புரிந்து கொண்ட தீட்சிதர்கள், "நாயக்கரே! அது என்றோ பழையகாலத்தில் நடந்தது. தவிர அன்றும் இப்படி சில வைணவர்கள் தாெல்லை கொடுத்ததால்தான், அம்பலத்தை விரிவாக்க எண்ணிய சோழ மன்னருக்கு கோபம் வந்து, அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்றும் தெற்றியம்பலத்தில் சிறியதாக இருந்த கோவிந்தராசரை பெரிதாக்கி, எங்கள் சபாநாயகர் ஆடுமிடத்தில் முக்கால் பங்கு காெள்ளைபோவதற்கும் இப்படிப்பட்ட தீயவர்கள்தான் காரணம்." என்று காேபத்தில் அரசன் முன்பே ஒரு தீட்சிதர் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.

அவ்வளவுதான்! நாயக்கனுக்கு ஆத்திரம் பீறிட்டது. "தீட்சிதர்களே! நீங்கள் அமைதியாக இருந்து எங்கள் சுவாமிக்கு நாங்கள் செய்யும் திருப்பணிக்கு ஒத்துழைத்தால் நல்லது. இல்லையென்றால் விளைவுகளுக்கு நான் ஒன்றும் அஞ்சியவனில்லை. குறித்த நாளில் சித்சபைக்கு எதிரில் புதிதாக கட்டப்பட்ட சித்திரக்கூடத்தில் பெரியபெருமாளை படுக்க வைத்தே தீருவேன்!!" என்று தெலுங்கு கலந்த தமிழில் முழங்கினான். அனுசரித்து பேசப்போன பஞ்சாயத்தும் நாயக்கனிடம் செல்லுபடியாகவில்லை.

அவன் சொன்னபடி சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள திருமுறைக் கைக்கொட்டி மேடையின் மேல்பகுதியை ஆக்கிரமித்து சித்திரக்கூடத்தை கட்டினான். நந்திவர்ம பல்லவன் காலத்தில் நிறுவப்பட்ட தெற்றியம்பலத்து கோவிந்தராசர் சிலை சிறியதாக இருந்ததால் அதற்கு பதில் பெரியதாக சிலைசெய்யக் கல்லை கொண்டுவந்து கீழவாசலில் நிறுத்தினான்.

அதுமுதல் தீட்சிதர்கள் கோயிலுக்குள் சரளமாக சென்றுவர தடைவிதித்தான். நடராசரை பூசிக்கும் முறைக்காரர் மற்றும் கோயில் பணியாளர்களைத் தவிர, மற்ற தீட்சிதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாரும் கோயிலுக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டான்.

அந்த ஆண்டு ஆனித்திருமஞ்சனம் கூட நாயக்கனின் காவல் வீரர்களின் கெடுபிடியால் பெரும் இடைஞ்சலுக்கு உள்ளானது. சுவாமியை யாத்ராதானம் செய்த போது தேருக்கு அழைத்து வரக்கூடாது என்று உத்தரவு போட்டான். தீட்சிதர்கள் தேவசபையிலேயே சுவாமியை எழுந்தருள செய்துவிட்டு, பிறகு, ஒருவழியாக ராஜசபைக்கு அழைத்து வந்து திருமஞ்சனம் செய்து முடித்தனர். அனைவரது மனமும் கனத்து இருந்தது!

இப்படியாக நாயக்கனின் கெடுபிடியில் காலம் சென்றதே தவிர மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. வந்திறங்கிய கல்லும் கோவிந்தராசராக உருமாறிவிட்டது.

(மீண்டும் அன்றைய நிகழ்வுக்கு வருவோம்)

இன்று சிலை கோயிலுக்குள் செல்ல இருக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் குடமுழுக்கும் செய்ய இருக்கிறார்கள். அதற்கான பூசையை வைணவ பட்டர்கள் வந்து தொடங்கிவிட்டனர். "இதனை தடுக்க ஏதேனும் வழி கிடைக்காதா? எங்கள் சுவாமியின் இடமும் கோயிலும் இப்படி பறிபோகிறதே!" என்ற ஆற்றமையால்தான் அந்த அதிகாலையில் தீட்சிதர்கள் கூட்டங்கூட்டமாக கீழசன்னதி வாசலில் கூடியிருந்தனர்.

அதுவரை ஆரவாரத்துடன் நின்றிருந்த அந்தணர்கள் கொண்டம நாயக்கன் வருகிறான் என்ற கட்டியங்கேட்டு அமைதியானார்கள்.

அவனது இரதம் பெரும் இறைச்சலுடன் கீழவாசலில் வந்து நின்றது. தீட்சிதர்களை ஏளனமாக பார்த்துவிட்டு, பட்டர்கள் கொடுத்த பூரணகும்பத்தை தொட்டு வணங்கிய நாயக்கனிடம் தீட்சிதர் ஒருவர் "நாயக்கரே!" என்று அனுசரனையாக பேசத் தொடங்கினார்.

அதனை சட்டைசெய்யாத நாயக்கன், காேவிந்தராசர் சிலை நோக்கி கும்பிட்டபடி நடக்கத் தொடங்கினான்.
அதனை கண்ட இளம்வயது தீட்சிதர்கள் சிலர், "நாயக்கரே! நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எங்கள் சைவக்கோயிலை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். இதனை எங்கள் உயிர் இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம்!!" என்று உரக்கக் கத்தினர்.

அதுசமயம் அங்கு கூடியிருந்த சிவனடியார் பெருமக்களும் தங்களது எதிர்ப்பை உரத்த குரலை பதிவு செய்தனர். அதனை கேட்ட நாயக்கன் மதம் பிடித்த யானையாய் தலையாட்டி, "நீங்கள் இறந்தாலும் ஏதும் நின்றுவிடாது. இன்று எங்கள் பெருமாள் உள்ளே போவது உறுதி!" என்று அலட்சியமாக பதிலளித்தான்.

"பீடையே! உன்னை பிரம்மஹத்தி பிடிக்கப் போகிறதடா!" என்று கத்தியவர்களாய் சில தீட்சிதர்கள் கீழகோபுரத்தின் மீது ஏறத்தொடங்கினர். அவர்களை தடுக்க முயற்சித்த தெலுங்கு வீரர்களை நாயக்கன் தடுத்தான். தீட்சிதர்கள் வரிசையாக மேலே ஏறி நின்று கொண்டனர்.

அவர்களது வீட்டுப் பெண்களும் சிவனடியார்களும் கதறியழுதனர். ஆனாலும், எதனையும் பொருட்படுத்தாத நாயக்கனை மேலிருந்து அழைத்த தீட்சிதர் ஒருவர், "நாயக்கனே! உனது மதவெறிக்கு தண்டனை நிச்சயம் உண்டு. எங்கள் கோயிலை காக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நீ எத்தனை பிறவியெடுத்தாலும் இந்த பிரம்மஹத்தி விடாது. நடராஜா! நடராஜா!! எங்களுக்கு வேறு வழி தெரியலையப்பா!! இனி எந்த பிறவியில் உன்னைப் பார்ப்பேனோ!" என்று உரக்க கத்தியவராய் கோபுரத்தின் உச்சியிலிருந்து தடாலென்று தரையை நோக்கிப் பாய்ந்து உயிரைத் துறந்தார். அதைக் கண்ட ஏனையோரும் அடுத்தடுத்து விழுந்து மாண்டனர். 😭🙏🏽😡

பெண்களும் குழந்தைகளும் சிவனடியார்களும் கதறிக்கதறி அழுதனர். இப்படியாக அடுத்தடுத்து இருபது பேர் தமது இன்னுயிரை தியாகம் செய்த பின்னர், நாயக்கன் வாய்திறந்து, "இனி யாராவது கோபுரத்தில் ஏறினால் சுட்டுத்தள்ளுங்கள்" என்று ஆணையிட்டான். "படீர்!" "படீர்!" என்று வெடித்த துப்பாக்கி குண்டுகளுக்கு இரண்டு தீட்சிதர்கள் பலியாகினர்.

கீழவாசல் முழுக்க சிவப்பானது. இரத்தம் ஆறாகப் பெருகி, அங்கு கிடக்கும் கோவிந்தராசர் சிலைக்கு கீழேயும் சென்றது. அந்த சிலையில் வடிக்கப்பட்டிருக்கும் ஆதிசேசனுக்கு உயிர் இருந்திருப்பின், இந்த அநீதியை பொறுக்காமல் அவனும் சற்று நெளிந்திருப்பான்! எங்கும் எழுந்த அழுகுரல்களுக்கு மத்தியில், தீட்சிதர் வீட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வீரத்துடன், அருகில் நின்ற வீரன் ஒருவனின் குத்துவாளை பிடுங்கிக் கொண்டு நாயக்கனை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார்!

"அடேய்! பிரம்மஹத்தி பிடித்த நாயக்கனே!! உன்னை இப்படியே குத்தி கொல்லவேண்டும் என்றுதான் இந்த வாளை உருவினேன். அதற்கு எனக்கு பலமில்லை. ஆனால், உனது பாவக்கணக்கு இன்னும் பெருகட்டும். பிரம்மஹத்தியோடு ஸ்த்ரீஹத்தியும் சேரட்டும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உனக்கும் உன் கூட்டத்தாருக்கும் விடிவு இல்லையடா, பாவி!!" என்றபடி குத்துவாளால் தன் கழுத்தை கீறிக்கொண்டு, இரத்த வெள்ளத்தில் விழுந்தார் அந்த வீரப்பெண்மணி!

இத்தனை உயிர்கள் சென்றபின்னும் மதம்பிடித்த நாயக்கனுககு மனம் மாறவில்லை. "இவற்றை அப்புறப்படுத்திவிட்டு, விரைவாக பெருமாளை உள்ளே இழுத்துச் செல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அழுகுரல்களுக்கு இடையில் எதிர்த்து வந்த தீட்சிதர்களின் குரல் அடங்கிற்று. இரத்தபெருக்கு கழுவிவிடப்பட்டது. ஆயினும், கோவிந்தராசருக்கு அடியில் புகுந்த இரத்தத்தை வைணவர்கள் மறந்திருந்தனர். பெரிய உருட்டுக் கட்டைகளுக்கு மேலே ஏற்றி, அவற்றை மெல்ல மெல்ல உருட்டி, உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்தராசர் சென்ற வழியெல்லாம் இரத்தக்கறை படிந்து கிடந்தது; காற்றில் இரத்தவாடை அடித்தது.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே ஆடிக் கொண்டிருக்கும் அம்பலக்கூத்தனின் புன்னகை மட்டும் அன்றும் மாறவில்லை. அதற்கான பொருளை யார்தான் விளக்க முடியும்?

- முற்றும் -

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

(மூலம்: https://www.facebook.com/100001999617640/posts/4383196351756975/?app=fbl)

(பி.கு.: மூல இடுகையின் சாரத்தையும் வேகத்தையும் மாற்றாமல், அதிலிருந்த எழுத்து & சொற்பிழைகளை முடிந்தவரை நீக்கி, நடையை சீராக்குவதற்காக சிற்சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளேன். 🙏🏽)

oOOo

👊🏽 பெளத்தத்தின் கதை தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்த பின், அதிலிருந்த ஒரு பிரிவினர், பெண்தெய்வ வழிபாட்டுக்குள் புகுந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக பெண் தத்துவத்தை ஆண் தத்துவமாக்கி விரித்த கடைதான் வைணவம்.

இவர்கள் பௌத்தர்களாக இருந்த போது:

- மொட்ட போட்டுட்டியா? (முழுவதும் கறந்துவிட்டாயா?)
- மொட்ட போட்டுட்டாங்களா? (முழுவதும் கறந்துவிட்டார்களா?)

இவர்கள் வைணவர்களாக மாறிய பின்னர்:

- நாமம் போட்டுட்டியா? (ஏமாற்றிவிட்டாயா?)
- நாமம் போட்டுட்டாங்களா? (ஏமாற்றிவிட்டார்களா?)

ஆக, பௌத்தம் = கொள்ளை; வைணவம் = ஏமாற்றுவேலை!! 👊🏽👊🏽👊🏽

👊🏽 "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற சொலவடை இவர்களது ஆஞ்சநேயர் எப்படி மற்றும் யாரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவர் என்பதைக் காட்டும்.

👊🏽 இவர்களிடம் இருக்கும் பெரும்பாலானவற்றிற்கு அடிப்படை சைவமும் அத்வைதமும்தான். இவையிரண்டும் இல்லையெனில் புருடா விடுவதற்குக்கூட இவர்களிடம் பொருளில்லை.

👊🏽 வைணவம் உருவாக்கப்பட்டது பொ.ஆ. 7ம் நூற்றாண்டின் பிற்பாதியில் என்றாலும், இவர்களது நாமச்சின்னம் உருவாக்கப்பட்டது 12ம் நூற்றாண்டின் இடையில்தான். பெண்குறியைக் குறிக்கும் இச்சின்னத்தை திரு ராமானுஜர் உருவாக்கினார் என்று இவர்கள் கதைவிட்டாலும், இச்சின்னத்திற்கு அடிப்படை பாலைவன மதமான முகம்மதியத்திலுள்ள குறியீடுகளாகும்!

முகம்மதியத்திற்கு அந்த பகுதியில் ஏற்கனவேயிருந்த பல சமயங்களும் & மதங்களும் அடிப்படையாக இருந்தாலும் ஆண் & பெண் குறிகளை வைத்தே அனைத்தையும் விளக்குவதென்பது இதன் தனிச்சிறப்பாகும். இதனை குறி மதம் என்றழைத்தாலும் தகும். அவ்வளவு தூரம் இவர்களது குறியீடுகளில் குறிகள் இடம் பிடித்திருக்கும். இதன் தாக்கம் உலகம் முழுவதுமுள்ளது.

நுழைவாயிலாக இம்மதத்தில் பயன்படுத்தப்படும் பெண்குறியை தலைகீழாக்கி, தனித்துவத்திற்காக, நடுவில் ஒரு கோட்டைப் போட்டு (பெண்குறியின் திறப்பு) தங்களது சின்னமாக அறிவித்துவிட்டார்கள் வைணவர்கள்.

👊🏽 திரு ராமபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்கள் வைணவர்களே அல்லர். அவர்களது காலத்தில் வைணவமே இல்லை. "அவங்க எல்லாம் எங்க ஆளுங்களாக்கும்" என்ற கணக்கில் அவர்களுக்கு பெண்குறியை போட்டுவிட்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

👊🏽 வைணவர்கள் மொட்டைகளாக (பெளத்தர்களாக) இருந்த போது ஆரியத்தைத் தூக்கிப்பிடித்தனர். பெளத்தம் இங்கு சரியாக போனியாகாமல் போனதற்கு முகமையான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இதிலிருந்து பாடம் கற்ற இப்பேர்வழிகள் வைணவம் என்ற பெயரில் மீண்டும் கடையை விரித்த போது தமிழை முன்னிறுத்திக் கொண்டார்கள்.

👊🏽 எத்தனையோ "கைங்கர்யங்கள்" செய்த பின்னரும் "நாமம் = ஏமாற்றுவேலை" என்ற சமன்பாட்டை இவர்களால் மாற்றமுடியவில்லை. ஆகவே, தமது தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக மக்களை முட்டாளாக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவு: பெரிய நாமம், திவ்ய மங்கள ரூபம், விசுவரூபம், பெரிய லட்டு / வடை / தோசை / இட்லி, பக்தி ரசம் / சாம்பார் / காரக்குழம்பு சொட்டும் பாடல்கள்... அதாவது, புலன்களை கவர்ந்து மனதை மயக்கி தொழிலை வளர்த்துக் கொண்டனர்.

👊🏽 வைணவம் உரிமை கொண்டாடும் ஆழ்வார்கள் அனைவரும் வைணவரல்லர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆவார். இவரது பல பாடல்களில் அத்வைதம் மிளிர்கிறது. பகவான் திரு ரமண மாமுனிவரும் 🌺🙏🏽🙇🏽‍♂️ இவரது பாடல்களை மேற்கோளாக பயன்படுத்தியிருக்கிறார். இதனால்தான் இவர்களிடையே "நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்" என்ற சொலவடை இருக்கிறது.

👊🏽 தில்லை கோவிந்தராசர் வரலாற்றிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய முகமையான செய்திகள்: 

- ஆழ்வார்களால் பாடப்பெற்ற இறையுருவங்கள் அனைத்தும் உயிர்ப்புள்ள சமாதிகளை குறிக்கவில்லை.

- ஓர் இனத்தை அந்த இனமேதான் ஆளவேண்டும். களப்பிரர்கள், பல்லவர்கள், முகம்மதியர்கள், தெலுங்கர்கள், கிறித்தவர்கள் (வெள்ளையர்கள்), தற்போது வடக்கத்தியர்கள் போன்ற அயலாரால் நாம் பட்ட துன்பங்கள், இழந்த செல்வங்கள் & அடையாளங்களை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.

👊🏽 வைணவத்திலுள்ள மதவெறி பிடித்த நயவஞ்சக பேர்வழிகளைத்தான் எதிர்க்கிறேனே தவிர இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள பெருமாள்களை அல்ல. நான் வணங்கும் மெய்யறிவாளர்களில் ஒருவர் கொங்கண சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️ (திருமலைப் பெருமாள் எனும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருப்பவர்). இவரின் காலம் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னராகும். அன்று வைணவமுமில்லை. நாமமுமில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, November 30, 2019

"நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்"!!!




வைணவராக கருதப்படும் நம்மாழ்வாரின் 🌺🙏🏽 பாடல்களை பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 பல முறை மேற்கோள் காட்டியதுண்டு. ஒரு சமயம், பகவான் பொன்விழா கொட்டகையில் இருக்கும் போது "#உள்ளது #நாற்பது" எழுதியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது டி கே சுந்தரேசய்யர் "உள்ளது நாற்பதின் முதல் பாட்டில் வரும் 'உள்ளது' என்னும் சொல் பரம்பொருள், மெய்பொருள், இதயம் போன்றவற்றைக் குறிக்கின்றது. இச்சொல்லை இதுவரை இப்பொருள்களைக் குறிக்கும்படி யாராவது தம் பாடல்களில் கையாண்டிருக்கிறார்களா? அல்லது, பகவான் தான் முதன்முதலாக பயன்படுத்தினாரா?", என்று கேட்டார். 

அதற்கு பகவான், “இல்லாதது வராது” என்று கூறிவிட்டு, “ஏன்,  நம்மாழ்வாரின் பாசுரங்களில் கூட இருக்கிறதே!” என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழி கொண்டு வரச்சொல்லி அதிலிருந்து பின்வரும் பாடலை எடுத்துக்காட்டினார்:

உளனெனில் உளன்அவன் உருவம்இவ் வுருவுகள்
உளனலன் எனில்அவன் அருவமிவ் வருவுகள்
உளனென இலனென இவைகுண முடைமையில்
உளன்இரு தகைமையொ டொழிவிலன் பரந்தே

-- திருவாய்மொழி #9


(பரம்பொருளை உளன் - உள்ளவன் - என்று குறிப்பிடும் போது ஆண்பாலாகி விடுகிறது. அனைத்துச் சமயங்களும் இப்படித்தான் குறிப்பிடுகின்றன. ஆனால், பகவான் உள்ளது / உள்ளபொருள் என்று குறிப்பிட்டு பரம்பொருளின் பாலற்ற தன்மையை வெளிப்படுத்துகிறார்.)

மேலும், பகவான் தொடர்ந்தார், "வைணவ மதத்தைப் பற்றிய வாத விவாதங்களுக்கு நம்மாழ்வார் பாசுரங்களை சில வைணவர்கள் மேற்கோளாக பயன்படுத்துவதில்லை. ஏனெனில், அவை பெரும்பாலும் அத்வைதத்தைக் வெளிப்படுத்தும். ஆகையால், அவர்களது வாதத்திற்குச் சரிப்பட்டு வராது. இதனால், இவர்களிடையே, '#நம்மைக் #கெடுத்தான் #நம்மாழ்வான்' என்ற வாசகம் வழக்கிலுள்ளது!! 😛 நம்மாழ்வாரின் பாசுரங்கள் பரம்பொருளைப் பற்றிக் கூறும்போது (சீவனிலிருந்து) வேறுபடுத்துவதில்லை."

🌸🏵️🌼🌻💮

பகவான் புகழ் பெறாத ஆரம்ப காலத்தில் வைணவர்கள் வந்து அவரவர் காப்புரிமையை (U, V நாமங்கள்) பகவானது நெற்றியில் போட்டுவிட்டு செல்வர். 🤭 பகவானும் அமைதியாக இருந்து விட்டு, அவர்கள் சென்ற பின் அழித்து விடுவார். 😃 சற்று புகழ் பெற ஆரம்பித்த பின், வைணவர்கள் வாதம் புரிய வருவர். ஒரே பதிலில் அல்லது ஒரே பதில்-கேள்வியில் அவர்களை தலைதெறிக்க ஓடவிடுவார் 😁 (பரங்கிச் சர்ச்சியர்களுக்கும் இது போன்று அருள் புரிந்திருக்கிறார் 😍). பகவானைப் போன்று நம்மாழ்வார் இருந்திருக்கமாட்டார். மூகாம்பிகையாக"நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்"!!!இருந்திருப்பார். இதனால், காப்புரிமை, திரைக்கதை ("செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்...") என பல கைங்கர்யங்கள் செய்து நம்மாழ்வாரை வைத்து தொழிலில் நிலை பெற்றுவிட்டார்கள். 😒

🌸🏵️🌼🌻💮

நம்மாழ்வார் பரம்பொருளை "அடங்கப் பிடித்தேனே" என்கிறார். மணிவாசகப் பெருமானோ "சிக்கெனப் பிடித்தேன்" என்கிறார். பேயாரோ "உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும்" என்கிறார்.

யார் யாரை அடங்கப் பிடிப்பது / சிக்கெனப் பிடிப்பது / மறவாதிருப்பது? எப்படிப் பிடிப்பது / மறவாதிருப்பது? பல பொருட்களா இருக்கின்றன? ஒன்று மற்றொன்றை பிடிப்பதற்கு / மறவாதிருப்பதற்கு. இருப்பது ஒரு பரம்பொருள் தான். அதுவே யாதுமாகி இருக்கிறது. அது எவ்வாறு தன்னைத் தானே பிடிப்பது / மறவாதிருப்பது? இவற்றிற்கெல்லாம் விடையாக பகவான் அளிப்பது, "உள்ளத்தே உள்ளபடி உள்ளதே உள்ளல் (பிடித்தல், மறவாதிருத்தல்)". இந்த 4 சொற்களை சுருக்கினால், தாயுமான சுவாமிகளின் மெய்யாசிரியர் மெளன குரு சுவாமிகள் அருளிய "சும்மா இரு" கிடைக்கும். இந்த சும்மாவும் வேண்டாம் என்றால் பகவானின் "இரு" என்பது எஞ்சி நிற்கும். இருத்தலே பிடித்தலும், மறவாதிருத்தலும், உள்ளலும் ஆகும்!! 😍

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Friday, July 19, 2019

அத்திவரதர் வரலாறு - ஓர் ஆய்வு & இந்த ஆதி அடையாளத்தை வணங்கலாமா?

"நாளொன்றுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பத்திமர்கள் காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயிலின் ஆதி அடையாளத்தை (ஆதி மூலவரை) வந்து வணங்கிச் செல்கின்றனர்"

(இந்த இடுகை முழுக்க அத்திவரதரை சிலை அல்லது அடையாளம் என்றே குறிப்பிட்டுள்ளேன். சமாதியல்லாத தலங்களில் சிலைகள் உணர்த்தும் பேருண்மைகளை உணராது, சமாதி திருத்தலங்களில் சிலைகள் அடையாளப்படுத்தும் மகான்களை உணராது, வெறும் சிலை வணங்கிகளாகவே நாமிருப்பதை உணரவேண்டும் என்பதற்காகவும், வடிவம், ஒப்பனை, ஆரியம், மணம், சுவை என புலன்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும் நாமிருப்பதை உணரவேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு எழுதியுள்ளேன்.)

-- இச்செய்தியால் ஒரு புறம், தமிழ்நாடு சமூக, இந்து சமய, தேச விரோத சக்திகளின் ஆரம்பமாகிய வளர்ப்பு மகளை மணந்தவனின் மண் இல்லை 💪🏽 என்று பெருமை கொள்கின்றனர். மறு புறம், தங்களது முட்டாள்தனம் வளர்க்கப்படுவதை அறியாமல் எல்லையில்லா பெருமகிழ்ச்சி கிடைத்துவிட்டதைப் போல்  உருகுகின்றனர். 😒

அத்தி மரத்தினாலான ஆதி அடையாளத்தை வைத்து, பலவிதமான பலகாரங்கள் தினம் தினம் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. 😁 அதில் ஒன்றுதான் இந்தக் காணொளி: https://youtu.be/KwaYdmZy_c0. பலகாரத்தை சுவைத்து 😋 விட்டு வாருங்கள். பிறகு, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களைப் பற்றி ஆராய்வோம்.

🍝 பிரம்மதேவர் - இவரின் 4 முகங்கள் 4 திசைகளைக் குறிக்கும். படைப்பாற்றலின் அடிப்படை 4 திசைகளிலிருந்தும் வரும் செய்திகள், காணும் காட்சிகள் மற்றும் இவற்றால் கிடைக்கும் பட்டறிவு. ஒரு காலத்தில் பிரம்மாவிற்கு 5 முகங்கள் இருந்தன என்றும் வானோக்கிய முகத்தை சிவன் கொய்தார் என்றும் கேள்விப்பட்டிருப்போம். இதன் பொருள், முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் வானையும் ஒரு திசையாக தவறாக கணக்கிட்டுள்ளனர். பின்னர், காரைக்கால் அம்மையார் 🌺🙏🏼, நந்தனார் 🌺🙏🏼, ஒளவையார் 🌺🙏🏼 போன்ற ஒரு மெய்யறிவாளர் (சிவன்), இந்த தவற்றை சரி செய்துள்ளார். (இதன் பிறகு சிவபெருமானை பிரம்மஹத்தி பிடித்தது, அன்னபூரணித் தாயாரால் தீர்ந்தது என்பது வேறொரு பேருண்மையைப் பற்றியது)

🍝 வேள்வி - வேள்வி எனில் குண்டம் வைத்து, தீ வளர்த்து, ஆரிய செய்யுள்கள் ஓதி, உணவு தானியங்களை தீக்குள் இடுவது மட்டுமல்ல. வயிறு எனும் குண்டத்தினுள் உணவிடுவது, மனம் எனும் குண்டத்தினுள் எண்ணங்களை வளரவிடுவது, உலகம் எனும் குண்டத்தினுள் செயல்களை புரிவது, மனைவி எனும் குண்டத்தினுள் விந்துநீரை இடுவது என எல்லாமே வேள்வி தான்.

இங்கு, காஞ்சி எனும் நகரை (குண்டத்தை) உருவாக்கி, அரசு எனும் வேள்வியை நடத்துகிறார் அதன் மன்னர் / தலைவர் (பிரம்மா)

🍝 சரசுவதி / வேகவதி - சரஸ்+வதி - நீரில் இருப்பவள். வெண்மை நிறமுடையவர். பொதுவாக, நமது மூளையைக் குறிக்கும். இங்கு வேகவதி நதியாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இந்நதி காஞ்சிக்கு அருகிலுள்ள பிரம்மதேசம் எனும் பகுதியில் சற்று திரும்பி, காஞ்சியை விட்டு விலகிச்செல்கிறது. அப்படி விலகிச் செல்லாமல், தொடர்ந்து பாய்ந்திருந்தால் காஞ்சியைத் தாக்கியிருக்கும். நதியின் போக்கை மாற்றிய நிலப்பரப்பை விஷ்ணுவாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். வைணவம் தோன்றிய போது (சுமார் 7ஆம் நூற்றாண்டின் இறுதி; திருஞானசம்பந்தர் 🌺🙏🏼 மற்றும் ஆதிசங்கரரின் 🌺🙏🏼 மறைவுக்குப் பின்னர்) பெருமாளின் பொருள்: தோன்றி மறைவது / அழிவது / சுய ஒளியற்றது. இதன் படி, அந்நிலபரப்பு விஷ்ணுவாகிறது.

வேள்வி நடத்த மனைவி வேண்டும் என்பது என்னவெனில் எந்த ஒரு செயலையும் செய்ய ஒர் ஆண் தத்துவமும் ஒரு பெண் தத்துவமும் தேவை என்பது தான். அண்டத்தின் இயக்கமே இவ்வடிப்படையில் தான். வேள்வி நடத்த மனைவி ஒத்து வரவில்லையெனில் வேறு துணைவியரை சேர்த்துக் கொண்டு வேள்வி நடத்தலாம் என்பது பாலைவன மதங்களின் அடித்தளங்களில் ஒன்றான ஆணாதிக்கம் மற்றும் பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடு!!

🍝 "அத்திவரதர் ஒரு சித்திரை மாதம் அஸ்தம் நாள்மீனுடன் கூடிய பதினான்மையன்று (சதுர்த்தசி) தோன்றினார்" என்பதின் பொருள்:

🔶 அத்தி மரத்திலான இந்த சிலையை மேற்சொன்ன நாளன்று நிறுவியிருப்பார்கள்
🔶 இப்படி ஒரு சிலையை செதுக்கலாம் என்ற எண்ணம் மேற்சொன்ன நாளன்று தோன்றியிருக்கும்
🔶 வைணவம், பௌத்தத்திலிருந்து பெண் தெய்வ வழிபாடு வழியாக வந்தது. இன்று வேண்டுமானால் திரு வரதராஜப்பெருமாள் கோயில் வைணவத் தலமாக இருக்கலாம். இதற்கு முன்னர் அது பெண் தெய்வ வழிபாட்டுத் தலமாகவோ, பெளத்த தலமாகவோ இருந்திருக்கும். மேற்சொன்ன நாள் அது வைணவத் தலமாக மாறிய நாளாக இருக்கலாம்.
🔶 இன்று தான் வியக்க வைக்கும் கட்டிடங்களும், அழகுச் சிலைகளும், அவற்றிற்கு மனதைக் கொள்ளை கொள்ளும் ஒப்பனைகளும், விரிவான வேள்விகளும், தெளிவான உச்சரிப்புடன் கூடிய ஆரிய செய்யுள்களும் இருந்தால் போதும் அவை புனிதத் தலங்களாகிவிடும். 😏 அன்று இப்படியல்ல. மேற்சொன்ன எதையுமே ஒரு பொருட்டாக மக்கள் கருதவில்லை. அவர்கள் தேடிச் சென்றது உயிர்ப்புள்ள திருத்தலங்களை - அதாவது, திரு தாயுமானவ சுவாமிகள் 🌺🙏🏼 போன்ற மெய்யறிவு பெற்ற மகான்களை அல்லது அவர்களது சமாதிகளை. பழமையான சிவத்தலங்களின் மூலவர்களை (சமாதி அடையாளங்களை) கவனித்தாலே இதை உணரமுடியும். அன்று இருந்தவை சமாதி அடையாளங்கள் மட்டுமே. திரு வரதராஜப்பெருமாள் கோயிலும் இது போன்றொரு சமாதித் தலமாகத்தான் இருக்கும். எனில், மேற்சொன்ன நாளன்று அங்கிருந்த மகான் 🌺🙏🏼 சமாதியாகி இருக்கலாம்.

(இந்த அத்திமர ஆதி அடையாளத்தைப் பற்றிய சில வரலாற்று குறிப்புகள் குறிப்பு #1ல் கொடுத்துள்ளேன்)

🍝 "குளத்தில் இருக்கும் அத்திவரதரை சுற்றி 16 நாகர்கள் காவலிருக்கின்றன" - இச்செய்தி இணைப்புக் காணொளியில் இல்லாவிட்டாலும் இணையத்தில் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கிறது.

பழமையான திருத்தலங்கள் பெரும்பாலும் மகான்களின் சமாதிகள் என்று பார்த்தோம். ஒரு மகான் உடலுடன் இருக்கும் போதும், உடலை விட்ட பிறகும் அவரைத் தேடி பல மெய்யன்பர்கள் வருவர். அவர் காட்டிய வழியில் வடக்கிருப்பர் (தவமியற்றுவர்). அங்கேயே சமாதியும் அடைவர் (மெய்யறிவு பெறுவர் & உடலையும் உகுப்பர்). அவர்களது சமாதிகளை அடையாளங்கள் வைத்து பாதுகாப்பர். இவ்வடையாளங்கள் ஒரு காலத்தில் நீள் உருளைக் கற்களாகவும், பின்னர் 3 அல்லது 5 பின்னல்கள் கொண்ட பாம்புகள் இருக்கும் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்ட பட்டைக் கற்களாகவும் (மேல் பின்னலில் சிவலிங்கம் (2) இருக்கும்), அல்லது 3/5 தலைகள் கொண்ட பாம்புகள் உடலைச் சுருட்டி, ஆசனமிட்டு, சிவலிங்கங்களை படமெடுத்துக் காப்பது போன்றும் வடித்திருப்பார்கள். இந்த அடையாளங்களை விட, அவை நடப்பட்ட இடங்கள் தாம் முக்கியமானவை. ஏனெனில், அவை சமாதிகள் - உயிர்ப்புள்ள இடங்கள். ஆனால், தொடர்ந்த படையெடுப்புகளாலோ அல்லது குறுகிய சிந்தனை கொண்ட சிலராலோ இவ்வறிவை நம் முன்னோர் இழந்துவிட்டனர். திருத்தல வளாகத்தில் ஆங்காங்கே இருந்த சமாதி அடையாளங்களை எல்லாம் திருச்சுற்றில் வைத்துவிட்டனர். பழத்தை தூக்கி எறிந்து விட்டு தோலை உண்ணும் அறிவுஜீவிகளாயினர்!! 😔 இன்றோ நாம் அவர்களையும் மிஞ்சிவிட்டோம். தலமரங்களைச் சுற்றி, ரெடிமேட் நாகர்களை வைத்து, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் பாடல்களை ஒலிக்க விட்டு, நாகர்களுக்கு பாலூற்றி... உவ்வே!! 🤢🤮

திரு வரதராஜப்பெருமாள் கோயில் வளாகத்திலும் பலர் வடக்கிருந்து சமாதியாகி இருப்பார்கள். மேற்சொன்ன அடையாளங்களால் அவர்களது சமாதிகளும் பாதுகாக்கப்பட்டிருக்கும். காலப்போக்கில், பிற தலங்களில் நடந்தது போலவே இங்கும் சமாதியிடங்களை ஒதுக்கிவிட்டு அடையாளங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டிருக்கும். இப்படி பாதுகாக்கப்பட்ட 16 அடையாளங்களைத் தான் அத்திவரதர் சிலை மீது சாத்தி வைத்து, வரதர் சிலை நீரின் மேலெழும்பாமல் பாதுகாக்கிறார்கள். அதாவது, வெறும் எடைகற்களாக பயன்படுத்துகின்றனர்!! 😮

🍝 "அத்திவரதரை ஐராவத யானை தாங்கி நின்றது. பின்னர் மலையாக மாறியது."

ஐராவதம் என்பதே சிறுபிள்ளைத்தனம் தான்!! 😀 பள்ளிக்கூடம் செல்லும் இரண்டு பிள்ளைகள் விடுமுறைக்கு பின் மீண்டும் சந்திக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒரு பிள்ளை, "டே, நேத்து நான் வி.ஆர். மால் போயிருந்தேன்டா. அங்க பெரிய கோயில் மணி தொங்க விட்டிருந்தாங்கடா", என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது இன்னொரு பிள்ளைக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடும். அப்பிள்ளை எங்குமே சென்றுவரவில்லை என்றாலும், "நானும் ஃபீனிக்ஸ் மால் போயிட்டு வந்தேன்டா. அங்க காப்பான் சூட்டிங் நடந்திட்டிருந்ததுடா. நம்ப சூர்யாவ பார்த்தேன்டா." என்று ஒரே போடாக போடும். உண்மையில் மால் சென்று வந்த பிள்ளை அமைதியாகிவிடும். எங்கும் போகாத பிள்ளை காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளும். இது போன்றது தான் ஐராவதம் கதை. 😁

இன்று ரஷ்யா எனப்படும் ரிஷிவர்ஷாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தாம் ஆரியர்கள். ஒரு பிரிவு பாரதத்திற்குள்ளும், இன்னொரு பிரிவு ஈரானுக்கும் சென்றது. அன்றைய பட்டுப்பாதை நெடுகிலும் உள்ள நாடுகளையும் ஆக்ரமித்தது. பாரதத்தில் தான் இக்கூட்டம் முதன் முதலில் யானைகளைப் பார்க்கிறது. யானைகளின் உருவம், உயரம், பலம், நினைவுத்திறன், அவற்றின் பல்வேறு பயன்பாடுகள் போன்றவை இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்துவிட்டது. இதன் விளைவு: உங்க லோகத்துல கருப்பு யான தான். எங்க லோகத்துல வெள்ள யான இருக்குதாக்கும்!!! 😝😂😂🤣

அத்திவரதர் கதையில் வரும் ஐராவதம் என்பது நமது மூளையைக் குறிக்கும்.

நமது திருத்தலங்கள் யாவும் பெரும்பாலும் ஒரு மனிதர் படுத்திருப்பதை போலவும்,  சிறு கோயில்கள் ஒரு மனிதர் அமர்ந்திருப்பதை போன்றும், சில கோயில்கள் தேர் போன்றும் வடிவமைத்திருப்பார்கள். வெகு சில கோயில்கள் சற்று மாறுபடும். தில்லைக் கருவறை மனிதனின் இதயத்திற்கு சமமாகும். கேரள சபரிமலைக் கோயில், ஒரு மனிதர் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் போன்றும் (கட்டுமலை), அவரது சகஸ்ரார சக்கிரத்தில் பரம்பொருள் வீற்றிருப்பது போன்றும் வடிவமைத்திருப்பார்கள். வரதராஜப் பெருமாள் கோயிலும் ஒருவர் அமர்ந்திருப்பது போன்று வடிவமைத்திருக்கிறார்கள். கீழுள்ள குடைவரைக் கருவறை இதயத்தைக் குறிக்கும். நம்முள்ளிருந்து சடாரென வெளிப்பட்டு "நாம் இவ்வுடல் எனும் பொய்யறிவை" அழிக்கும் தெளிவை சிங்கப்பெருமாளாக உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த தெளிவான அறிவு நிலைபெற்று நிற்காது. தொடர் முயற்சியால், சிறிது காலம் கழித்து இது நிலைபெறும். அவ்வாறு நிலைபெற்று நிற்கும் அறிவை வரதராஜப் பெருமாளாகவும், அவர் நிற்கும் சகஸ்ரார சக்கிரத்தை (மூளையை) ஐராவத யானையாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

(இங்கே, வைணவத்தின் டிரேட்மார்க்கைக் மீண்டும் காணலாம்: தோன்றி மறையும் தெளிவும் பெருமாளாம்! என்றுமே இருக்கும் தூய அறிவும் பெருமாளாம்!! 😁)

🍝 "பிரம்மா மறுமுறை செய்த வேள்வியால் அத்திவரதர் பாதிக்கப்பட்டார்"

கருவறையில் எப்போதும் நிலவும் வெப்பத்தாலோ, பல நூறு வருட தொடர் வழிபாட்டின் காரணமாகவோ, வழிபாடு செய்து வைப்போரின் கவனக்குறைவாலோ சிலையில் பழுது ஏற்பட்டிருக்கிறது. மேற்கொண்டு வழிபாட்டில் வைத்திருக்க அவர்களது வழிபாட்டு நூல்கள் இடம் கொடுத்திருக்காது. ஆகையால், குளத்திற்குள் விட்டுவிட்டார்கள். நிலத்தை விட நீருக்குள் மரம் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும். ஐரோப்பிய நகரிங்களில் சில நீரோட்டத்திலேயே, மரத்தால் அடித்தளமிட்டு கட்டப்பட்டவை. 200-300 ஆண்டுகளாகியும் இன்றும் அடித்தள மரங்கள் வலுவாகவுள்ளன.

40+/- ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலையை வெளிக்கொணரக் காரணம் - குளத்து நீர்!! மேற்சொன்ன ஐரோப்பிய நகரங்கள் ஓடும் நீரில் கட்டப்பட்டவை. நீரிலுள்ள உயிர்வளி குறைய வாய்ப்பில்லை. சேறும் சேர வாய்ப்பில்லை. ஆனால், குளத்து நீரில் உயிர்வளி குறைவாகவும், சேறு மிகுதியாகவும் இருக்கும். ஆகையால், இத்தனை வருடங்களுக்கு ஒரு முறை எனக் கணக்கு வைத்து சுத்தம் செய்துவிடுகிறார்கள்.

🍝 "அத்தி வரதரை ஒரு முறை வணங்கினால் மோட்சம் கிடைக்கும். இரண்டாம் முறை வணங்கினால் வைகுண்டம் கிடைக்கும்."

அத்திமர அடையாளத்தின் வரலாறு என சுற்றி வரும் தகவல்களில் இது தான் நெற்றிசுட்டி போன்றது!! 😃 முதல் முறை வணங்கிய சீவர்கள், சீவத்துவத்திலிருந்து விடுதலை பெற்று, பல லோக முனையத்தில் காத்திருப்பார்கள் போலிருக்கிறது. 😄 அடுத்த முறை வணங்கியவுடன், புஷ்பக விமானம் வந்து வைகுண்டம் அழைத்துச் செல்லும் போலிருக்கிறது. 😆 ஒரு வேளை, விமானத்தை தவிர்த்து விட்டு, மூன்றாம் முறையும் வணங்கி விட்டால்... "பெருமாள், உங்க டைம் ஓவர். இப்பத்திலேர்ந்து நான் தான் பெருமாள்."!!! 😂😂🤣

நாம் இவ்வுடல் என்ற பொய்யறிவிலிருந்து விடுதலை பெறுவதே மோட்சம். நாம் நாமே என்ற மெய்யறிவில் நிலைபெறுவதே வைகுண்டம். இந்த அண்டமே பெருமாள்.

அத்திவரதர் மட்டுமல்ல. இமயத்தில் வீற்றிருக்கும் பத்ரிநாத் பெருமாள் 🌺🙏🏼 முதல் பாரதத்தின் தென்னகத்தில் இருக்கும் திரு அனந்தபத்மநாப பெருமாள் (அகத்திய மாமுனிவர்) 🌺🙏🏼 வரை யாரை வணங்கினாலும், எத்தனை முறை வணங்கினாலும், எவ்வளவு மனமுருகி வணங்கினாலும் வைகுண்டவாசம் கிட்டாது. பார்ப்பவனை பார்த்தால் ஒழிய, பார்ப்பவனே வைகுண்டவாசன் என்று தெளிந்தால் ஒழிய வைகுண்டவாசம் (நிலைபேறு) கிட்டாது. அத்தனை பெருமாள்களையும் சென்று வணங்குவதின் பயன் இதுவே!!

அத்திவரதரை ஒரு காட்சி பொருளாக பார்த்து விட்டு, கருவறைக்குச் செல்லுங்கள். அங்கு, அடையாளத்திற்கு பூசை செய்பவர்கள், அவர்களது உழைப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக, "உடையார நல்லா பாத்துக்கோங்கோ" என்பர். 😁 எவ்வளவு நன்றாக பார்த்தாலும், எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஒரு பயனுமில்லை என்பதை உணருங்கள். கருவறையிலுள்ள அடையாளத்தைக் கண்டதும் கண்கள் தானாக மூடும். மூட விடுங்கள். ஒரு கணமாவது, நீங்கள் நீங்களாக இருங்கள். பின்னர், சடாரியை தலையில் வைத்து எடுப்பார்கள். நன்றாக வைத்துவிட்டு எடுக்கும் போது, ஒரு கணம், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மை விட்டு அகலும். (3) இவ்வுணர்வை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள். திருச்சுற்றில் அமர்ந்து இதைப் பற்றி சிந்தியுங்கள், வடக்கிருங்கள்.

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவதே. கடவுளை அறிவது என்பது கடவுளாய் இருத்தலே. கடவுளாய் இருத்தல் என்பது கடவுளாய் ஆதலே." -- பகவான் ஸ்ரீரமணர் 🌺🙏🏼

🏵️🌼🌻💮🏵️

குறிப்புகள்:

1. அத்திமர ஆதி அடையாளத்தைப் பற்றிய சில வரலாற்று குறிப்புகள்:

✳️ 1487 வரை அத்திமர அடையாளம் தான் கருவறையில் இருந்துள்ளது. பின்னர், பழைய சீவரத்திலிருந்து கல் அடையாளம் கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இதன் பின்னர், அத்திமர அடையாளத்தை எங்கு வைத்து பாதுகாத்தனர் என்பது பற்றிய தகவல் ஏதுமில்லை.

✳️ 1688ல் உலக கொல்லிகளுக்கும் (பரங்கியர்களுக்கும்) காட்டுமிராண்டிகளுக்கும் போர் மூண்டுள்ளது. அச்சமயம் இக்கோயிலின் விழாநாதர் (உற்சவ சிலை) திருச்சிக்கு அருகிலுள்ள உடையார்பாளையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அப்போது இந்த அத்திமர அடையாளம் கோயில் குளத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 1710ல் விழாநாதர் சிலை மீண்டும் காஞ்சிக்கு கொண்டு வரப்பட்டது. அது சமயம் அத்திமர அடையாளத்தை குளத்திலிருந்து வெளிக்கொண்டு வந்தனரா என்பது பற்றிய தகவல் ஏதுமில்லை.

✳️ 1781ல் அத்திமர அடையாளம் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது என்பதற்கான தெலுங்கு கல்வெட்டு ஒன்று கோயில் வளாகத்திலேயே உள்ளது. இதன் பின்னர் ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நடந்துள்ளது என்பதற்கான சான்றும் ஏதுமில்லை. மேலும், 40 ஆண்டுகள் என்பது ஒரு தோராய கணக்கு தான். 42 ஆண்டுகளும் அகியிருக்கின்றன. 35 ஆண்டுகளிலும் இவ்விழாவை நடத்தியிருக்கிறார்கள். (40 ஆண்டுகள் என்பது 500 பிறைகளுக்கு சமம். "ஆயிரம் பிறை கண்ட அரசு" எனும் சொற்றொடர் வாயிலாக அப்பர் பெருமான் 80 ஆண்டுகள் பருஉடல் தாங்கியிருந்தார் என்று அறிகிறோம்.)

-- காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 2 வைணவ பேராசிரியர்கள் யு-டியூப் காணொளிகளில் பேசியதிலிருந்து தொகுத்துள்ளேன்

2. சைவத்தில் முதல் பாம்பு பின்னலில் சிவலிங்கம் இருக்கும். வைணவத்தில் நடனமாடும் கண்ணன் இருப்பார். வேகவதி நதியின் போக்கை மாற்றிய "உயிரற்ற" நிலப்பரப்பை விஷ்ணு என்றவர்கள், இங்கு, எல்லாம் அடங்கி மீதமிருக்கும் "நான் எனும் உணர்வை" விஷ்ணு என்கிறார்கள்!! 😏

நம் இந்து சமயத்தின் அடையாளங்கள் அனைத்தையும் வெட்கமேயில்லாமல் ஒவ்வொன்றாக திருடிக் கொண்டிருக்கும் எம்.எல்.எம் மதம், இந்த நாகர்களை எப்படி மாற்றிக்கொள்ளும்? சிவலிங்கத்திற்கு பதில் குறுக்கை? 😁 அல்லது, கண்ணபிரானுக்கு பதில் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடும் இஸ்ரவேல் அத்வைதி யேசு? 😆 குறுக்கை உயிரற்ற பிணம் போன்ற உடலைக் குறிக்கும். பிணக்குறியீடு என்றே அழைக்கலாம்!! யேசு அழியும் மனதைக் குறிக்கும். இவ்விரண்டில் எதை அவர்கள் பயன்படுத்தினாலும் காமெடியில் தான் முடியும். ஏனெனில், பாம்பு பின்னல்கள் ஏற்கனவே அவற்றைத் தான் குறிக்கின்றன:

✳️ 3 பின்னல்கள் - தூல, சூக்கும & காரண உடல்கள்.

✳️ 5 பின்னல்கள் - ஆன்மாவை போர்த்தியுள்ள உணவு, உயிர்வளி, மனம், அறிவு & எல்லையில்லா மகிழ்ச்சி எனும் 5 உறைகள்.

குறுக்கை, யேசு என எம்.எல்.எம். மதம் ஒரு விதமாக சப்பைக்கட்டு கட்டினாலும், இவர்கள் வழியை தற்போது பின்பற்ற ஆரம்பித்திருக்கும் வெடிகுண்டு மதத்தினர் என்ன உருவத்தை வைப்பர்? சுவரை குறிக்க சதுரம் / செவ்வகம்? 😂🤣🤣

(அடையாளங்களைத் தான் இம்மதங்களால் திருட முடியுமே அன்றி ஒரு மெய்யறிவாளரையும் உருவாக்க இயலாது 💪🏽)

3. இந்த சடாரி உத்தியை கண்டுபிடித்தது திரு நம்மாழ்வார் 🌺🙏🏼. இதனால் தான் சடாரிக்கு சடகோபன் என அவரது பெயரையே வைத்திருக்கிறார்கள். இந்த உத்தியால் நமக்கு கிடைப்பதென்னவோ இரண்டற்ற அத்வைத நிலை. ஆனால், அதை மறைத்து, அதற்கு "பெருமாளின் பாதம்" என பெயர் வைத்து, நம்மை த்வைத நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். ஓட்டையில்லா சட்டதிட்டங்கள், செவ்வனே இயங்கும் சட்டம்-ஒழுங்கு, குப்பையில்லா வாழுமிடங்கள், போதுமென்ற மனம் கொண்ட மக்கள்... பொருளாதாரம் என்னாவது? 🤔 தலீவர்கள் சமூக அநீதி காப்பது எவ்வாறு? 😏 சமூகப் போராளிகள் பிழைப்பது எவ்வாறு? 😉 எல்லோரும் பெருமாள் ஆகிவிட்டால் யார் வந்து அத்திவரதரை வணங்குவது? 🤭