Friday, December 22, 2023

அனல் வாதம் புனல் வாதம்


தலைப்பை கண்டதும், திருஞானசம்பந்த பெருமானும் வடக்கிலிருந்து வந்த சமணப் படங்காட்டிகளும் நம் நினைவுக்கு வருவர்!! (வடக்கிலிருந்து வந்த எதுதான் படங்காட்டவில்லை? 😏)

வாதம் - அசுர பாஷா
வழக்காடல் - திருநெறியத் தமிழ்

🔸 தொன்ம கதை:

அனல் வழக்காடலின்போது, பெருமான் நெருப்பிலிட்ட ஏடு எரிந்து சாம்பலாகவில்லை. சமணர் இட்ட ஏடு சாம்பலாகியது. புனல் வழக்காடலின்போது, பெருமான் ஆற்றிலிட்ட ஏடு, நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது. சமணர் இட்ட ஏடு, நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது.

🔸 உட்பொருள்:

🌷 அனல் - நெருப்பு - தொடர்பு கொண்டதை சாம்பலாக்கும் - மெய்ப்பொருள்

நெருப்பை இறைவனாக காண்பது மரபாகும். "அடி முடி காணா அண்ணாமலையார்" உருவகத்தில், மெய்ப்பொருளை நெருப்பாக காண்பித்திருப்பார்கள்.

🌷 புனல் - நீர் - அசைவது - வையகம்

படைப்பை (வையகத்தை) நீராக கருதுவது மரபாகும். பள்ளி கொண்ட பெருமாள் உருவகத்தில், திருப்பாற்கடல் என்பது படைப்பை குறிக்கும்.

🌷 மெய்ப்பொருளைப் பற்றியும், வையகத்தை / வையக வாழ்வைப் பற்றியும் இருவரும் வழக்காடினர் என்பது உட்பொருளாகும். வேறு வகையாக சொல்லவேண்டுமானால், படைப்பைப் (புனல்) பற்றியும், படைத்தவனைப் (அனல்) பற்றியும் வழக்காடினர் எனலாம்.

🌷 நெருப்பிலிட்ட ஏடு...

🌟 பெருமானின் ஏடு எரிந்து சாம்பலாகவில்லை என்ற சொற்றொடரின் பொருள் என்னவெனில், மெய்ப்பொருளை பற்றிய பெருமானின் விளக்கம் அனைத்து ஆய்வுகளையும் & அனைத்து கேள்விகளையும் கடந்து நின்றது என்பது பொருளாகும். எனில், பெருமான் கடைபிடித்த / அறிவுறுத்திய சமயநெறி அன்பர்களை உய்விக்க வல்லது என்பது கண்கூடாகும்.

🔥 சமணரின் ஏடு எரிந்து சாம்பலானது எனில், மெய்பொருளை பற்றிய அவர்களது விளக்கம் பிழையானது என்பது பொருளாகும். மேலும், அவர்களது நெறியை கடைபிடித்தால்... கோவிந்தா என்பதும் கண்கூடாகும்.

(மெய்ப்பொருளை சரியாக உணர்வதென்பது ஒரு படியெனில், உணர்ந்ததை மற்றவர் புரிந்துகொள்ளும்படியாக விளக்குவதென்பது சில படிகளெனில், தீய எண்ணங்களுடன் சுற்றித் திரிந்த வடவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதென்பது... பல படிகளாகும்!! அன்று, மன்னரிடமும் மக்களிடமும் நீதியிருந்ததால், பெருமானால் வெற்றி கொள்ளமுடிந்தது. இன்றைய சூழல் அன்று நிலவியிருந்தால்...)

🌷 ஆற்றிலிட்ட ஏடு...

👎🏽 சமணரின் ஏடு நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்ற சொற்றொடரின் பொருள் என்னவெனில், சமணர் அறிவறுத்திய வாழ்க்கைமுறையை வாழ்ந்தால் ஈடேற முடியாது என்பது பொருளாகும்.

👍🏽 பெருமானின் ஏடு நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது எனில், பெருமான் அறிவறுத்திய வாழ்க்கைமுறையை வாழ்ந்தால் ஈடேற முடியும் என்பது பொருளாகும்.

அது எப்படிப்பட்ட வாழ்க்கைமுறை?

"நீரோட்டத்தை எதிர்த்து"!!

மனம் போன போக்கில், வையகம் போன போக்கில் செல்லாமல், அதற்கு எதிர்திசையில் செல்லவேண்டும். அதாவது, கண் முன்னே விரியும் வையகத்தை நோக்கி செல்லாமல், அதற்கு எதிரான நமது தன்மையுணர்வில் நிலைத்திருக்க முயற்சிக்கவேண்டும். இவ்வடிப்படையில்தான், நமது அன்றாட வாழ்க்கை முதல், பெரும் திருவிழாக்கள் வரை அனைத்தையும் நம் முன்னோர்கள் வடிவமைத்துள்ளனர். எங்கும் எதிலும் உள்ளபொருளை பற்றிய சிந்தனை நமக்கு தோன்றுமாறு செய்துள்ளனர்.

இங்கு, "இதிலென்ன தனிச்சிறப்பு இருக்கிறது? இப்படித்தானே எல்லா பண்பாடுகளும் இருக்கின்றன." என்று தோன்றலாம். இன்று வேண்டுமானால், எல்லா மதங்களிலும், எல்லா பண்பாடுகளிலும், மெய்யியில் கலந்த வாழ்க்கைமுறை இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை முதன் முதலில் உருவாக்கி, வாழ்ந்து, நிலைபேற்றினை அடைந்தது தமிழினமாகத்தான் இருக்கும்!! 💪🏽💪🏽 நம்மிடமிருந்தே, அசுரர்கள் முதற்கொண்டு, அனைவரும் தெரிந்துகொண்டனர் என உறுதியாகக் கூறலாம்.

oOo

பெரும் புகழ் பெற்ற அனல்-புனல் வழக்காடல் நிகழ்வை, 

பெருமான் x சமணர்
சைவம் x சமணம் 

ஆகிய வகைகளில் மட்டும் பார்க்குமாறு நம்மை பழக்கியிருக்கிறார்கள். இத்துடன்,

தமிழர் x வடவர்
தமிழர் x மற்றவர்

என்ற வகைகளிலும் பார்க்கவேண்டும். இப்படிப் பார்த்தால், தமிழின், தமிழரின் மேன்மையை, அருமையை இன்னும் நன்றாக உணரமுடியும்.

oOo

பெருமான் சமணரோடு மட்டும் வழக்காடினார். அன்று நாம மதம் இல்லை. பெருமானின் மறைவுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. ஒரு வேளை, அம்மதம் அன்றிருந்து, அவர்களும் வழக்காடியிருந்தால்...

நெருப்பிலிட்ட ஏடு எரியவேண்டும். ஆற்றிலிட்ட ஏடு நீரோட்டத்தோடு போகவேண்டும். அதுதான் இயற்கை. நீரோட்டத்தோடு போவதற்குத்தானே பிறந்தீர். பிறகு, ஏன் எதிர்க்கிறீர்?

என்று "அறிவாளித்தனமாக" வழக்காடியிருப்பார்கள். 😁

அதாவது, மனதை அலைபாய விடவேண்டும், ஆசைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும், பல விளைவுகளை உண்டாக்கவேண்டும், மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும்... இவையெல்லாம், "அசைவு" என்பதை அடிப்படையாகக் கொண்ட, அம்மதம் அறிவுறுத்துபவையாகும்.

அக்கார அடிசிலை கவளம் கவளமாக உள்ளே தள்ளும் பிறவி வாய்த்திருக்கும்போது, மேற்கண்டவைதான் சரியென்று அடித்துப் பேசத்தோன்றும். அதே அக்கார அடிசில் கெட்டுப்போன பிறகு, அதில் உருவாகும் புழுவாக பிறக்கும்போது தெரியும், நீரோட்டத்தோடு போவதின் விளைவு!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment