Showing posts with label மடியிலே கனம். Show all posts
Showing posts with label மடியிலே கனம். Show all posts

Tuesday, November 21, 2023

மடியிலே கனம் வழியிலே பயம்


(இதற்கு முந்தைய இடுகையில், ஒரு சிறு பகுதியாக எழுதியிருந்ததை, சற்று விரித்து, தனி இடுகையாக மாற்றியிருக்கிறேன். 🙏🏽)

இப்பழமொழியின் புறப்பொருள் அனைவரும் அறிந்ததே. இதன் உட்பொருளை பார்ப்போம்.

🔸 மடியில் - மடி+இல் - மடித்து வைக்கக்கூடிய வீடு - கூடாரம் - நமது தலைக்கு சமம்

🔸 கனம் - சுமை - செருக்கு - நான் இவ்வுடலென்ற தவறான எண்ணம். இவ்வெண்ணமே எல்லாவகையான பற்றுகளுக்கும் (சுமைகளுக்கும்) ஆணிவேராகும்.

🔸 வழியில் - வழி+இல்

   - இல் - வீடு - இருப்பிடம் - தற்போதைய நமது வாழ்க்கை
     - எனில், முற்பிறவியின் போது?
       அப்போதும், வழி+இல்-தான்.
     - அடுத்த பிறவியின் போது?
       அப்போதும், வழி+இல்-தான்.
     - இல் என்பது கிடைக்கும் பிறவியை குறித்தால், வழி என்பது... பிறவிகள் மாறினாலும் மாறாமலிருக்கும் நம்மை குறிக்கும்!!
     - இதனால்தான், நம்மில் நாமாக இருக்கும் முயற்சியை வழி+பாடு என்கிறோம். பாடு என்பது ஆரியத்தில் அனுபவமாகும். வழியாகிய அனுபவம்!

🔸 மீண்டும், தற்போதைய வழி+இல்-லுக்கு திரும்புவோம்:

நம்மை நாம் உடலாக காணும்வரை, வாழ்க்கையை கண்டு அச்சமடைந்து கொண்டுதானிருப்போம்:

- இன்று தொழில் நன்றாக நடக்குமா?
- நமது வேலை நிலைக்குமா?
- கடன் கிடைக்குமா?
- கொடுத்த கடன் திரும்பவருமா?
- பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை அமையுமா?
...

அச்சம் நீங்கவேண்டுமெனில், சுமை நீங்கவேண்டும். சுமை நீங்கவேண்டுமெனில் நமதுண்மையை நாம் உணரவேண்டும். அதாவது, வழி+பாடாக (வழி என்ற அனுபவமாக) மட்டும் இருக்கவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, November 17, 2023

இரும்பை மாகாளம் & மடியிலே கனம் வழியிலே பயம்


🌺🙏🏽🙇🏽‍♂️

🌷 திரு இரும்பை மாகாளம் உடையவர்
🌷 தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்
🌷 இத்திருவுருவின் கீழே திருநீற்று நிலையிலிருப்பது திரு கடுவெளி சித்தராவார்.
🌷 இப்பெருமானின் வாழ்வில் நடந்த நிகழ்வொன்றை மேற்கோள் காட்டி பகவான் திரு இரமண மாமுனிவர் பேசியுள்ளார்.

oOo

கருவறைத் திருவுருவின் கீழேயிருப்பது யாரென்று கேட்டால்,

- பெரும்பாலான ஆரியப்பூசாரிகள் குழம்பிப்போவார்கள் ("இவன் என்ன கேட்கிறான்?")

- சிலர் மழுப்பிவிட்டு ("அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே!"), அத்திருக்கோயிலின் புனைவுக்கதையை சொல்லி, "அந்த சுவாமிதான் இவர்" என்று சமாளிப்பார்கள்

- வெகுசிலர் திடுக்கிடுவார்கள் / திருட்டுமுழி முழிப்பார்கள் ("இவன் எப்படி கண்டுபிடித்தான்?", "இச்செய்தி எப்படி வெளியே வந்தது?", "இப்போது என்ன செய்வது?"...)

- ஒரு திருக்கோயிலிலிருந்த 50+ வயதான பூசாரி, "ஓகோ, உனக்கு அவ்வளவு தெரியுமா? எனக்கு எவ்வளவு தெரியுமென்று பார்!" என்ற வகையில், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியே விடத்தொடங்கினார். 😈 ஜாப் செக்கியூரிட்டி கோவிந்தா-ஆவதைக் கண்டு, பதைபதைத்த அருகிலிருந்த இளம் பூசாரி, "மாமா!!" என்று அதட்டி, அவரை தன்னிலைக்கு திருப்பினார். 🤭

- ஆனால், இரும்பை திருக்கோயிலில் இருந்தவர் மட்டும், எவ்வித கலக்கமின்றி, தயக்கமின்றி, தெளிவாக, உள்ளேயிருப்பது திரு கடுவெளி சித்தரென்று சொன்னார். மடியில் கனமில்லாதவரென்று நினைக்கிறேன். 👏🏽👍🏽🙏🏽

oOo

மடியிலே கனம் வழியிலே பயம்

இப்பழமொழியின் புறப்பொருள் அனைவரும் அறிந்ததே. இதன் உட்பொருளை பார்ப்போம்.

🔸 மடி+இல் - மடித்து வைக்கக்கூடிய வீடு - கூடாரம் - நமது தலைக்கு சமம்
🔸 கனம் - செருக்கு - நான் இவ்வுடலென்ற தவறான எண்ணம். இவ்வெண்ணமே எல்லாவகையான பற்றுகளுக்கும் (கனங்களுக்கும்) ஆணிவேராகும்.
🔸 வழி - அன்றாட வாழ்க்கை

நம்மை நாம் உடலாக காணும்வரை, வாழ்க்கையை கண்டு அச்சமிருந்து கொண்டுதானிருக்கும்:

- இன்று தொழில் நன்றாக நடக்குமா?
- நமது வேலை நிலைக்குமா?
- கடன் கிடைக்குமா?
- கொடுத்த கடன் திரும்பவருமா?
- பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை அமையுமா?
...

அச்சம் நீங்கவேண்டுமெனில், கனம் நீங்கவேண்டும். கனம் நீங்கவேண்டுமெனில் நமதுண்மையை நாம் உணரவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻