Friday, November 30, 2018

சிறைமீட்ட தமிழ்ப்பா -- முனைவர் எஸ். சந்திரா

#பரத்தைவயல் #நாக #முத்தையா என்ற புலவர் இராமநாதபுரத்திலுள்ள #நயினார் #கோயில் நாகநாத சுவாமியிடமும், சவுந்தர்யநாயகி அன்னையிடமும் பேரன்பு கொண்டவர்.

ஒரு சமயம், அவர் முத்துராமலிங்க சேதுபதி அரண்மனைக்குச் செலுத்தவேண்டிய பணத்தில் நூறு பொன் பாக்கி வைத்து விட்டார். அதனால் இரக்கமின்றி தாசில்தார் அவரை சிறையில் அடைத்துவிட்டார்.

சிறையில் வாடிய அவர் #நயினார்கோயில் இறைவனை நினைத்து இந்த பாடலை பாடினார்:

கையிலே ஒருகாசுக்கு இடமோ இல்லை
கடனென்றால் ஐஞ்ஞூறு பொன் மேலாச்சு
நெய்யிலே கைபோட்டுக் கொடுப்போம் என்றால்
நிருவாகம் அரண்மனையார் அறிய மாட்டார்
பையிலே பணமிருக்க நீரும் சும்மா
பார்த்திருக்க நீதியுண்டோ பரனே எம் ஐயா
மையிலே தோய்ந்த விழி உமையாள் பங்கா
மருதூரா என் வரிக்கே வழி செய்வாயே.

அவர் பாடிய பாடலைக் கேட்டு பரமனின் மனம் இளகியது! அன்பனுக்கு உதவ அன்றிரவே இறைவன் சேதுபதியின் கனவில் சென்று, "ஏன் என் மகன் நாகமுத்தனை சிறையில் அடைத்தாய்?" எனக் கேட்டு மறைந்தார்.

திடுக்கிட்டு எழுந்த சேதுபதிக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் யோசித்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்றார்.

ஆனால், சற்று நேரத்தில் அன்னையும் அவர் கனவில் தோன்றி, "மகனே, என் தாலிப்பொட்டை அடகு வைத்து, வரிப் பணத்தை வாங்கிக் கொள்" என்று சொல்லி மறைந்தார்.

நடுக்கத்துடன் விழித்தெழுந்த சேதுபதி விபரமறிய தாசில்தாரை வரவழைத்தார். நடந்ததை அறிந்து, தானே சிறைச்சாலைக்குச் சென்று, அவரை வணங்கி மன்னிப்புக் கேட்டு அவரை விடுவித்தார். அத்தோடு, தன் தவறுக்குப் பரிகாரமாக அவருக்கு இரண்டு கிராமங்களை நன்கொடையாக அளித்தார்.


(இந்தக் கட்டுரை #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம், மார்கழி 2018 இதழில் வெளியாகி உள்ளது. அதன் ஒளியுருவை இங்கே இணைத்துள்ளேன். பின்னரும், எழுத்துருவாக பதிவேற்றக் காரணம், இணையத் தேடலில், இது போன்ற ஆராய்ந்து உறுதி செய்யப்பட்ட நிகழ்வுகள், இடம் பெற வேண்டும் என்பதால் தான்.)

posted from Bloggeroid

Thursday, November 29, 2018

173 வருடங்களில் ரூ. 70,67,500 கோடிகள் கொள்ளையடித்த பரங்கி ஓநாய்கள்!!

1765-1938 வரை பரங்கி ஓநாய்கள் நம்மிடம் கொள்ளையடித்த செல்வத்தின் மதிப்பு இன்றைய சந்தை நிலவரப்படி ரூ. 70,67,500 கோடிகளாம்!! 😡😡

▶173 வருடங்களில் ரூ. 70,67,500 கோடிகள்
▶1 வருடத்தில் ரூ. 40,853 கோடிகள்
▶1 நாளுக்கு ரூ. 112 கோடிகள்

அன்று அந்த ஓநாய் நாட்டின் மக்கள் தொகை சுமார் 1.50 கோடிகள். எனில், தலைக்கு சுமார் 75 ரூபாய்கள் பார்த்திருக்கிறார்கள்! இதனால் தான் மோகன்தாஸ், "நாங்கள் என்றும் ஆங்கிலேயர்களாக ஆக முடியாது. அப்படி ஆக வேண்டுமானால், நாங்கள் கொள்ளையடிக்க இன்னொரு பூமி வேண்டும்." என்று பஞ்ச் டயலாக் பேசினார். (இதுல ஒரு கொறைச்சலும் இல்ல. இந்தப் பக்கம் பஞ்ச் டயலாக் பேசிட்டு, அந்தப் பக்கம் அந்த ஓநாய்களோடயே அக்ரிமெண்ட்டு போட்டுக்க வேண்டியது. "பகத்சிங்க நீ போட்டுக்க. நான் கண்டுக்கல. நான் வெள்ளையனே வெளியேறுன்னு உதார் உடுவேன். நீ ஜகா வாங்குற மாறி கொஞ்சநாள் நடிச்சுக்கணும். டீல் ஓகேயா?" 😠)

இன்றும் கூட அந்நாட்டின் பொது திட்டங்கள் நடப்பது நம் பணத்தில் தான் என்று சில வருடங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. இதற்குப் பிறகும் பற்றாக்குறை மற்றும் பேராசை!! இன்று வரை அவர்களது வீணாய்ப் போன மொழி, கல்வி, உணவு, மருந்து, அ(ழி)வியல், மதம் என்று பல நஞ்சுகளைக் கொண்டு நம்மையும் உலகையும் அழித்துப் பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இங்கிலாந்து, அது செய்த பாவங்களின் பலனால், கடலுக்கடியில் போய்விடுமென்று ஸ்ரீராமசந்திர மகராஜ் என்ற மகான் சொல்லியிருக்கிறார். 👏👌👍😘 மகான்களின் வாக்கு பொய்யாகாது.

(https://www.livemint.com/Companies/HNZA71LNVNNVXQ1eaIKu6M/British-Raj-siphoned-out-45-trillion-from-India-Utsa-Patna.html)

Tuesday, November 27, 2018

ஜி யு போப் தமிழுக்கு தொண்டு செய்தானாம்!!!


எப்பொழுதெல்லாம் அடி, உதை அதிகமாக விழுகின்றதோ அப்பொழுதெல்லாம் மதச்சார்பின்மை, சிக்-குலரிஸம் போன்ற பதாகைகளை தூக்கிப் பிடித்துக் கொள்வர் சர்ச்சியர்கள். அதிலொரு பதாகை தான் இது.

நாவலரை #ஜி #யு #போப் என்ற ஒரு வெள்ளை நரியோடு சமன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கும், இந்த நரி, திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது தனது இனம் தெரிந்து கொள்ளத் தான் என்று வெளிப்படையாகவே ஊளையிட்ட பிறகும், இது ஏதோ தமிழுக்கும் சைவத்திற்கும் நாவலரைப் போன்று அருந்தொண்டு புரிந்தது போன்று இன்று வரை படம் காட்டுகிறார்கள். இது செம்பொருளை (மெய்பொருள் / பரம்பொருள்) வேறு அறிந்ததாம். இதற்குத் தெரிந்ததெல்லாம் எந்த கருவூலத்தில் எவ்வளவு பொருள் இருக்கிறதென்பதும், எந்த அறிஞரிடம் என்ன அறிவு இருக்கிறதென்பதும் தான் (அதுவும் திருடுவதற்கும், பிடுங்கிச் செல்வதற்கும் தான்).

பதாகை தூக்கிப் பிடிக்கும் போதும் கருங்காலித்தனத்தை கைவிடவில்லை. நாவலர் தான் பரலோக சாம்ராஜ்ஜியம், பரிசுத்த ஆவி, கிருபை போன்ற சொற்களை உருவாக்கினாராம். அதாவது, இவர்களது சுவிசேஷம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக காரணம் இந்த சொற்கள் தானாம்! இவற்றை #நாவலர் தான் உருவாக்கியதால், அவர் தான் இவர்களது நிலைக்கு காரணமாம். சோத்துல செங்கல்!!!!

சில காலத்திற்கு முன்பு, மிஷ-நரிகள், "நாவலர் ஒன்றும் மொழி பெயர்க்கவில்லை. அதற்கு முன்னரே ஒரு தேவன் (தேவன் - வெள்ளையன்; பெயர் நினைவில்லை) வேலைகளை ஆரம்பித்துவிட்டான்." என்று பிட் போட்டுப் பார்த்தார்கள். இதற்குக் காரணம் நிற வெறி! சர்ச்சிய மதத்தின் தேவர்களாகிய வெள்ளையர்கள் எப்படி ஒரு கருப்பரிடம் உதவி பெறுவது? வெட்கக்கேடு! ஆகையால், பிட் தயாரித்து வரலாற்றை மாற்ற முற்பட்டார்கள். இன்று கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியதால், நாவலரை முன் நிறுத்திவிட்டார்கள். வெள்ளை தேவர்கள் காப்பாற்றப் படவேண்டும். மதமானாலும் சரி, போபால் விஷவாயு கசிவானாலும் சரி, குரங்கணில்முட்டம் தீ விபத்தானாலும் சரி, வெள்ளையன் காப்பாற்றப்பட வேண்டும்!

நாவலர் ஒன்றும் புதிய மதத்தை உருவாக்கவில்லை. வெள்ளையர்கள் கொடுத்ததை தமிழில் மொழிப்பெயர்த்துக் கொடுத்தார். மூலத்தில் "பிம்பிளிக்கா பிலாபி" என்றிருந்தால் அவர் என்ன செய்யமுடியும்? மொழி பெயர்க்கும் போது, அவருக்குத் தோன்றியிருக்கும் ஐயங்களை வெள்ளையர் தாம் களைந்திருக்க வேண்டும். அந்த மடையர்கள் என்ன உளறி வைத்தார்களோ? இன்று தான் இவர்களது மதம் நமது அடையாளங்களை அடைய, உரிமை கொண்டாட துடிக்கிறது. ஆனால், அன்று தனி அடையாளங்களையே விரும்பியது. ஆகவே, நாவலரும் மற்ற மதங்களில் இல்லாத சில சொற்களைக் கொடுத்து அந்த புண்ணாக்குகளை தேர்ந்தெடுக்கச் சொல்லிப் பயன்படுத்தியிருப்பார். அடுத்து, நாவலர் மொழிப் பெயர்த்துக் கொடுத்ததை இவர்கள் திருத்தக்கூடாது என்று விதி ஒன்றுமில்லையே. இத்தனை வருடங்களில் மாற்றிக் கொண்டிருக்கலாமே. சமீப காலமாக தமிழில் உயர் மற்றும் முனைவர் கல்வி கற்பவர்கள் பெரும்பாலும் இவர்கள் மதத்தினர் தானே.

இறுதியாக, "மதவெறி கொண்ட யானைகள் மனிதனாக மாறட்டும்" என்று பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறார்கள். ஒருவேளை, தங்களுக்குத் தாங்களே அறிவுரை கூறிக் கொண்டிருப்பார்களோ? ஏனெனில், நமது சைவம் சமயம் எனப்படும். மற்ற அனைத்தும் மதம் எனப்படும். சமயம் x மதம். பக்குவம் x வெறி. "பக்குவ வெறி கொண்ட..." என்று வேண்டுமானால் நம்மை அவர்கள் புகழ்ந்து கொள்ளலாம்!

🔷🔶🔷🔶🔷🔶

சமீபத்தில் திரு. அரவிந்தன் நீலகண்டன் முகநூலில் பதிப்பித்த ஒரு இடுகையை சிறிதும் மாற்றாமல் கீழே கொடுத்துள்ளேன். அதில், #அருள் என்னும் புனிதச் சொல்லிற்கு #இஸ்ரேலிய அறிஞர்கள் கொடுத்திருக்கும் துல்லியமான மற்றும் அருமையான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். படித்துப் பயன்பெறுங்கள்.

🔷🔶🔷🔶🔷🔶

ஒவ்வொரு எழுத்திலும் நஞ்சு தோய்த்து வேலை செய்வது என்பதில் கை தேர்ந்தவர்கள் மிசிநரிகள். ஒவ்வொரு முறை நம்மவர்கள் ஜியு போப்பின் திருவாசக மொழி பெயர்ப்பை பாராட்டும் போது எனக்கு உடல் அருவெருப்பால் கூசும். ஜி.யு. போப் மிகத் தெளிவாகவே சைவத்தின் மீது தனக்கு மிகக் கீழ்மையான பரிவே (scanty sympathy) உண்டு என்றும் தான் இந்த மொழி பெயர்ப்பை செய்வதே ஆங்கிலம் படித்த நம்மவர்கள் அவர்களின் மத இலக்கியங்களை படிக்க வகை செய்ய என்று சொன்ன பின்னரும் ஏதோ ஜியு போப் இல்லை என்றால் தமிழும் இல்லை சைவமும் இல்லை என்பது போல போப் சொல்லாதவற்றை எல்லாம் சொல்லி அந்த ஆளைக் குறித்து புளகாங்கிதம் அடையும் அடிமையின் மோகம் என்னை கூசி குறுக வைக்கும் ஒன்று.

நான் மிகவும் மதிக்கும் ஒரு பிரபல சைவ சித்தாந்தி குறித்த ஒரு ஆவணப்படத்தில் அவர் வீட்டில் சைவம் குறித்து ஜி.யு.போப் சிலாகித்து சொன்னது போல ஒரு மேற்கோளை வைத்திருக்கிறார். அதை காட்டிய போது என் மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியது. நம்மவர்கள் ரொம்பவே நல்லவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என நம்பிவிடுகிறார்கள்.

யூதர்களுக்கு கிறிஸ்தவ மதமாற்ற திரிபுகள் குறித்து இரண்டாயிரம் ஆண்டுகள் பரிச்சயம் உண்டு. எனவே அவர்களால் மிகச் சரியாக கிறிஸ்தவ மொழிமாற்ற தகிடுதத்தங்களை கண்டு பிடித்து விட முடியும். நாம் பல நேரங்களில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து போகிற விஷயங்களில் மதமாற்ற விஷம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை அவர்களால் சட்டென கண்டடைந்து விட முடிகிறது.

ஜி.யு.போப் அருள் என்பதை grace என மொழி பெயர்ப்பு செய்கிறார். நமக்கு இது ஒரு விஷயமாக அல்லது ஒரு திட்டமிட்ட திரிபாக தோன்றுவதில்லை. நாமுமே பல நேரங்களில் இதை அடியொற்றி அருளை grace என மொழி பெயர்க்கிறோம். டேவிட் சூல்மனும் டான் காண்டெல்மனும் யூதர்கள். ஜெருசலேம் பல்கலைக்கழகத்தினர். சைவ திருமுறைகளின் மொழி பெயர்ப்புகளில் அருள் என்பது grace என மொழி பெயர்க்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள். இனி அவர்கள் கூறுவதை கேளுங்கள்:

There is an unfortunate tendency to translate this critical term [அருள்], in nearly every context, as ‘grace,’ with its heavy Christian connotations. Arul can, it is true, correspond in Śaiva texts to Sanskrit anugraha, the god’s compassionate giving to his servants. More often, however, it approximates a notion of coming into being or freely becoming present, close, alive…Arul, for the Siddhantins, is śakti - an active and female aspect of Śiva. Not ‘grace’ but ‘emergent presence. It, or she, is dynamic and oriented toward freedom…an experiential process of full, unconstricted potentiality.

என் வருத்தமெல்லாம் நம் ஆதீனங்களிடம்தான். போப் மொழி மாற்றத்தில் மத மாற்ற தகிடுதத்தம் செய்கிறார் என்பதை சொல்ல நமக்கு ஒரு டேவிட் சூல்மன் தேவையில்லை. ஆனால் நேருவிய-திராவிடிய பண்பாட்டு அறிவின்மையின் விளைவாக ஒரு டேவிட் சூல்மன் இதை சொல்ல தேவைப்படுகிறார்.

ஜி.யு. போப் செய்த மொழி பெயர்ப்பு ஒரு மதமாற்ற உக்தி. அது உண்மையில் திருவாசகத்தின் தமிழின் மகோன்னதத்தை ஆன்மிக அனுபவம் சார்ந்த ஒரு மகத்தான இலக்கியத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த ஓரிறை மத கோட்பாட்டுக்குள் குறுக்கும் ஒரு உக்தி எனவே வெறும் கீழ்மையான திரிபு அன்றி வேறில்லை. இந்நிலையில் நம் ஆதீனங்கள் போப்பின் மொழி பெயர்ப்பை சித்தாந்த நிலைபாட்டிலிருந்து அக்கு வேறு ஆணி வேறாக கழற்றிக்காட்டி அதன் பொய்மையையும் சிறுமையையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் நம் நேருவிய தலைமுறைகள் (நம் பெற்றோர், நாம் , நம் இளைஞர்கள்) எந்த பாரம்பரிய உரையையும் பொருளையும் தெரிந்து கொள்ளாமல் ’திருவாசகத்துக்கு நான் ஜி.யு.போப் உரையை வைத்திருக்கிறேன்’ என பெருமை பேசி திரிவதுதான்.

எனவே இதை நம் சைவ ஆதீன கர்த்தர்களிடமும் சித்தாந்த அறிஞர்களிடமும் ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன். போப்பின் மொழி பெயர்ப்பு தமிழை சிறுமைப்படுத்துவது; சைவத்துக்கு புறம்பானது; கீழ்மையான மதமாற்ற நோக்கம் கொண்டது என அவர்கள் அனைவரும் இணைந்து அதிகார பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

🔷🔶🔷🔶🔷🔶

நமது #அருள் என்னும் சொல்லை வடமொழியின் #அனுக்கிரஹம் என்ற சொல்லோடு சமன்படுத்தியிருக்கிறார்கள். இது சரியே. ஆனால், அனுக்கிரஹத்திற்கு பொருள் கூறும் போது "இறைவனின் கருணை கலந்த கொடை" (Compassionate giving) என்று பொருள் கூறியிருக்கிறார்கள். இது தவறு. இது மீண்டும் #Grace என்ற சொல்லிற்கு சமமாக்கியது போலாகும்.

💠 அனு + கிரஹம் = அருகில் + இடம் = அருகிலுள்ள இடம்
💠 அனு + கிர + ஹ = அருகில் + உணர் + இறைவன் = இறையை அருகிலிருந்து உணர்தல்

இப்படி பொருள் கொண்டால் மட்டுமே இரண்டு சொற்களும் சமமாகும்.

அடுத்து, அருளை #சக்தி என்ற வடமொழி சொல்லோடு சமன்படுத்தி, அதற்கு "இறையுணர்வு தோன்றும் / வெளிப்படும் இடம்" (Emergent Presence) என்று பொருள் கூறியிருக்கிறார்கள். அருமை! இதைத் தான் #சந்நிதானம் என்று அழைக்கிறோம். சக்தி என்ற சொல்லின் சரியான பொருள் கலந்திருத்தல். இறை உருவிற்கு போடப்பட்ட மாலையின் நிலை போன்று என்று கூறலாம். மிக மிக மிக மிக அருகில் என்றும் கூறலாம்.

இறுதியாக, அருள் = அ + ரு + ள் = அருகில் + உட்கொண்டு செல்லுதல் + இடத்திலிருந்து = வெளியிலிருந்து என்னை உனதருகே கொண்டு செல்

(அ-வுக்கு பதிலாக இ எனில் மறுத்தல் / மறைத்தல் = இறைவன் மறுத்துவிட்டார் / மறைந்துவிட்டார். அ-வுக்கு பதிலாக ம எனில் நின்று / தங்கிப் போதல் = வெளி உலகிலேயே தங்கிவிடல்.)

ஆக, அருள், அனுக்கிரஹம், சக்தி, சந்நிதானம் எல்லாம் ஒரு பொருளையேத் தருகின்றன - இறைவனுக்கு மிக மிக அருகில். பிறவியெடுக்கும் ஒரு சீவன் அடையக்கூடிய மிக உயர்ந்த நிலையும் இது தான். இதை உணர்ந்த விதத்தில் ஏற்பட்ட தகராறு தான் இன்று பூமியிலுள்ள பல்வேறு மதங்கள்.

அடுத்த முறை, "இறைவா, எனக்கு உன் அருள் தா" என்று வேண்டும் போது, "இறைவா, உனக்கருகில் என்னை வைத்துக் கொள்" அல்லது "இறைவா, உனக்கருகில் நானிருக்க இடம் கொடு" என்று வேண்டுகிறோம் என்பதை உணர வேண்டும். அந்த இடமும் வேறெங்கோ இல்லை. நம்முள் தான் உள்ளது. அந்த இறைவனும் வேறு யாருமல்லர். நாமே தான் (நமது இயல்பு)!

தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும் 
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்

- #அப்பர் #தேவாரம்

🙏 🙏 🙏 🙏 🙏 🙏

posted from Bloggeroid

Monday, November 19, 2018

இணையத்தில் தமிழ் வளர்க்க உதவும் கூகுளின் 4 அருமையான உள்ளீட்டு சாதனங்கள்!!

கடந்த சில வருடங்களில் கூகுள் அதன் #உள்ளீட்டு சாதனங்களை மிகவும் செம்மையாக்கி உள்ளது! 👌 புதிய உள்ளீட்டு முறைகளையும் உருவாக்கியுள்ளது. ஆனால், இவை யாவும் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையவில்லை என்றே கருதுகிறேன். இன்றும் பலர் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை தப்பும் தவறுமாக எழுதுகின்றனர். தமிழில் எழுதுவோரும் பிழைகளை சரி செய்ய முயல்வதில்லை (தமிழில் #உள்ளீடு செய்வது சிரமம் என்று அவர்கள் கருதுவதால்). இத்தகையோருக்கு உதவுவதற்காக இந்த பதிவு.

🔷 தங்களது கைபேசியின் முதன்மை மொழியாக #தமிழ் இருப்பது நல்லது.

🔷 தங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் கீழ்காணும் 2 செயலிகள் தாம்:


இச்செயலிகளை பதிவிறக்கம் செய்த பின், அதன் அமைப்புகளுக்குச் சென்று (Settings - Language & Input) தேவையான மாற்றங்களை செய்து கொள்ளவும்.

இனி, தங்களால் 4 வழிகளில் தமிழை உள்ளிட முடியும். இவற்றைப் பற்றி பார்ப்போம்:

1. தட்டச்சு - இது அனைவரும் அறிந்த முறை. எனவே மற்றவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

2. விரலை நகர்த்தி உள்ளிடுதல் (Swiping) - தட்டச்சை விட சுலபமானது என்றாலும் இம்முறையிலும் தட்டச்சு முறையைப் போன்று நேரம் மற்றும் மிகுந்த பொறுமை தேவைப்படும். மேலும், ஒவ்வொரு சொல்லின் உயிர் & மெய் எழுத்துக்கள் வேகமாக நினைவிலிருந்து வெளிவரவேண்டும் (வேலை - வ+ஏ+ல+ஐ). ஆனால், ஆரம்ப நிலை தமிழ் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கும், பெரியோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும். 👍 (செயல் விளக்கம்)

3. கையெழுத்து உள்ளீடு (Handwriting Input) - இனி வரும் காலங்களில் இம்முறையே அதிகம் பயன்படுத்தப்படும் என்று உறுதியாகக் கூறலாம். அவ்வளவு எளிமையானது. குழந்தைகள் முதல் கை நடுக்கமுள்ள பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எழுத்தாணி (Stylus) இல்லாமல், வெறும் விரலை நகர்த்தியே எழுதலாம். ஆனால், குறியீடுகளை உள்ளிடுவது கடினம். குறியீடுகளுக்கு மேற்சொன்ன விசைப்பலகையை பயன்படுத்தவும். (செயல் விளக்கம்)

4. குரல் உள்ளீடு (Voice Input) - முதன்முதலாக இம்முறையை பயன்படுத்தியவுடன் பெரும்பாலானோருக்கு தோன்றும் உணர்வு - ஆச்சர்யம்!! முகமலர்வு, புன்முறுவல், பெருமிதம் போன்ற உணர்வுகளும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். 😊 இம்முறையினால் சமூக வலைதளங்கள் இன்னமும் பல மடங்கு வளரும். எதிர்காலத்தில் கருவிகள் பெரும்பாலும் இம்முறையில் தான் இயக்கப்பெறும்.

மேற்சொன்ன அனைத்து முறைகளையும் இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தலாம். ஆனால், தமிழ் குரல் உள்ளீட்டிற்கு, தற்போதைக்கு, இணையம் தேவை. அமைதியான சுற்றுபுறச் சூழல் மற்றும் சரியான உச்சரிப்பு இருக்கும் போது 100% சரியாக வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். இம்முறையிலும் அனைத்து குறியீடுகளை உள்ளிடுவது கடினம். (செயல் விளக்கம்)

மேலே பட்டியலிட்ட முறைகளில், கையெழுத்து மற்றும் குரல் உள்ளீட்டு முறைகளுக்காக கூகுள் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். "இனி நம் தமிழன்னை இணையத்தில் வாழ்வார்" என்று சொன்னால் எவ்விதத்திலும் மிகையாகாது. இதை சாத்தியப்படுத்திய கூகுள் நிறுவனத்திற்கு நாம் என்றென்றும் நன்றி கூறவேண்டும். 👏👌👍🙏

கருவிகள் எவ்வளவு மேம்பட்டாலும் அவற்றை பயன்படுத்தும் நாம் மேம்படாவிட்டால், நமது சிந்தனை மேம்படாவிட்டால், எவ்வித மாற்றமும் ஏற்படாது. சூழ்நிலைக்கேற்ற சரியான சொற்களை பயன்படுத்த முயலவேண்டும். வாழ்வில் ஒரு முறையேனும் சொல்லாராய்ச்சியில் ஈடுபடவேண்டும். இதனால் நமது சிந்தனை வளம் பெறும். நமது அன்னையும் நலம் பெறுவார். 🙏

💮💮💮

குறிப்புகள்:

1. இணைப்பு காணொளிகளில் நான் பயன்படுத்தியுள்ள வாசகம் #பகவான் #ஸ்ரீரமணர் அருளியது. உலக வாழ்க்கையிலிருந்து முழுதும் விடுபட முடியாத ஆன்மிக அன்பர்களுக்காக பகவான் அருளிய அருமருந்து. 🌸🙏

2. இந்த இடுகையை பெரும்பாலும் கையெழுத்து உள்ளீட்டு முறையைக் கொண்டும், சிறிதளவு குரல் உள்ளீட்டு முறையைக் கொண்டும், குறியீடுகளை GBoard கொண்டும் உருவாக்கியுள்ளேன்.

🌼🏵🌷🌻🌺🌹🌼

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

நமது தமிழ்தாய் வாழ்த்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல் இது! அந்நிய சக்திகளின் பொரைகளை உண்டு, வளர்ந்து, அப்போது தான் ஆட்சிக்கு வந்திருந்த கருங்காலி போலி திராவிடவியாதிகளின் செஞ்சோற்றுக் கடனால் இப்பாடல் இடம் பெறாமல் போனது!! 😠

ஒரு பொருளிலிருந்து சிறிது எடுத்தால் அப்பொருள் அளவில், எடையில் குறையச் செய்யும். ஆனால், பரம்பொருளிலிருந்து நாம் வாழும் பேரண்டம் தோன்றிய பின்னரும் பரம்பொருள் சிறிதும் குறையவில்லை (இக்கருத்து இடம் பெற்றிருந்து, மக்களின் சிந்தனையைத் தூண்டியிருந்தால், பலருக்கு தொழில் ஓடியிருக்காதே 😛). இது போலத் தான் நம் தமிழன்னையும். அவரிடமிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளுவ மொழிகள் (பிள்ளைகள்) தோன்றிய பின்னரும் அவரின் அழகு சிறிதும் குறையவில்லை என்கிறார் பாடலாசிரியர் பெ. சுந்தரனார். 😊 மேலும், ஆரியம் போல் வழக்கொழிந்து போகாமல் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று வியக்கிறார் ஆசிரியர்.

இப்பாடலில் இடம் பெற்றிருக்க வேண்டிய 2 முக்கிய உண்மைகள்:

💥 "மொழிகளில் பரத்தை" என்னும் பட்டம் பெற்றுள்ள ஆங்கிலமும் 😝 மேம்பட்டது தமிழர்களால் - தமிழால் - தான்!!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இது பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளது. ஆங்கிலத்திலுள்ள சுமார் 13,000 சொற்கள் தமிழிலிருந்து சென்றவை (WW #Skeat, The #Etymological #Dictionary of #English Language).

1706-ல் தரங்கம்பாடியில் டேனிஷ் பரங்கி மதத்தினர் வந்திறங்கினர் (பரங்கி இனம் ஓர் இடத்திற்குச் செல்கிறது என்றால் அது திருடவும், ஏமாற்றவும், கொள்ளையடிக்கவும், ஸ்லீப்பர் செல்களை உருவாக்கவும் தான்). அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களையும், சித்த மருத்துவர்களையும் பணியில் அமர்த்திக் கொண்டனர். ஆயிரக்கணக்கான ஒலைச்சுவடிகளை சேகரித்து, கப்பல் கப்பலாக அவர்களது நாட்டிற்கு அனுப்பிவைத்தனர். இதன் பின்னரே அவர்களது மருத்துவம், அழி(றி)வியல் எல்லாம் வளர ஆரம்பித்தது. (முனைவர். ஆனைவாரி ஆனந்தன், சித்த மருத்துவ வரலாறு)

💥 #ஆரியம் செம்மையானதும் நம்மால் தான்!!

ஆரிய இலக்கண நூலான #பாணிணீயம் அரங்கேற்றப்பட்டது நமது #திருவொற்றியூர் #ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் தான் (முனைவர் மா.கி. ரமணன், ஓங்கு புகழ் ஒற்றியூர்). #சமற்கிருதம் எனில் "சமன் செய்யப்பட்ட / சரி செய்யப்பட்ட மொழி" என்று பொருள். ஆனால், நம் தமிழ் நிறைமொழியும் இறைமொழியுமாகும். 'அ' என்ற உயிரெழுத்திற்கு சிவன் என்றொரு பொருளும் உண்டு. எதிலிருந்து அனைத்தும் தோன்றி நிலைபெறுகிறதோ அதுவே சிவம் எனப்படும். இந்தப் பொருளை அனைத்திற்கும் முதலான 'அ' என்ற உயிரெழுத்திற்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால் தமிழின் அடிப்படையெது? கலாம் என்றால் கலகம் என்று பொருள் கண்டுபிடிக்க உதவும் பகுத்தறிவா? ✊👊👊👊

posted from Bloggeroid

Friday, November 16, 2018

பகவானின் தமிழார்வம்!! 😍

#பகவான் #ஸ்ரீரமண மகரிஷிகளின் பாடல்களுக்கு திருமதி. டி. ஆர். #கனகம்மாள் எழுதிய உரை நூலுக்கு #ஸ்ரீகுஞ்சு #சுவாமிகள் எழுதிய நூன்முகத்தில் பகவானது தமிழார்வத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

🌸🙏


posted from Bloggeroid

Thursday, November 15, 2018

நரகாசுரன் என்பது யார் / என்ன? (தீபாவளி திருநாளின் உண்மை பொருள்)




நரகாசுரன் ஒருவருக்கு பெரும் பாட்டனாராம்! 😛
இன்னொருவருக்கு மாமனிதராம்!! 😜
(1)

அந்நிய & தேசவிரோத சக்திகளின் பொரைகளுக்காக தம் முன்னோர்களின் அரிய செல்வங்களின் மேல் சாணி வீசும் இந்தக் கருங்காலி இனம் இன்னமும் புற்றீசல் போல் பெருகுவது எதனால்?

நமது அறியாமையால் தான்!!

தம்முள் ஆழ்ந்து அரிய பெரும் முத்துக்களை வெளிக்கொணர்ந்த நம் முன்னோர்கள், அவற்றை அப்படியே விட்டுச் சென்றால் தொலைத்து விடுவோம் என்று, கதை என்னும் தங்க உலோகத்தில் அழகுற பதித்து ஆபரணங்களாக விட்டுச் சென்றனர். சுயநலம், பேராசை, உழைப்பின்மை, அநியாயம் போன்ற குணங்களால் அவ்வாபரணங்கள் பொலிவிழந்து, புரூடா என்னும் வகையறாக்களுடன் சேர்க்கப்பட்டுவிட்டன. 😔

🌺🌺🌺

#தீபாவளி என்பது மனிதராயிருந்த கிருஷ்ணர், பகவான் ஸ்ரீகிருஷ்ணராக மாறிய நாள். 🌸🙏 அதாவது. #ஸ்ரீகிருஷ்ணர் மெய்யறிவு பெற்ற (ஞானமடைந்த) நாள். புத்த பகவான் மெய்யறிவு பெற்ற நாளை புத்த பூர்ணிமா என்று கொண்டாடப்படுவது போன்றதுதான் இந்த தீபாவளியும். புத்த பகவானை ஒரு ஞானியாக பார்க்க வைத்தனர். ஆனால், ஸ்ரீகிருஷ்ணரை ஒரு கடவுளாக பார்க்கப் பழக்கிவிட்டனர். மேலும், ஸ்ரீகிருஷ்ணர் பெரும் புகழ் பெற்றவராகத் திகழ்ந்ததால், அவரது வரலாற்றினுள் தத்துவம், ஆன்மிகம், வரலாறு என பலவற்றையும் சேர்த்துவிட்டனர். அவரவர் சொல்ல வந்ததையும் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதாக தள்ளிவிட்டனர். இதனால் தான் இவ்வளவு குழப்பங்களும் & அறியாமையும் நம்மிடம் வேர்விட்டுள்ளன.

சாதாரணமாக, நரகாசூரன் எனில் "நரகம் போன்ற இந்த உடல்" என்று பொருள் கொள்வோம். இது தவறு. நம் உடலோ அல்லது நம் உடலைச் சுற்றி அமைவனவோ நரகமல்ல. அல்லது, "இந்த உடலில் இயங்கும் மனம்" என்று பொருள் கொள்வோம். இதுவும் தவறே. "நானாவித எண்ணங்களின் தொகுப்பே மனம்." என்று அருளியிருக்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர்.

பின்னர், எது நரகாசூரன் எனில் "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணமேயாகும்!! அனைத்து துன்பங்களுக்கும் இதுவே காரணம். மனம் என்கிற எண்ணக் கூட்டத்திற்கு இதுவே அடித்தளம். இவ்வெண்ணம் அழிய - நரகாசூரன் அழிய - மேகங்கள் அகல பகலவன் வெளிப்படுவது போல் மெய்யறிவு (ஞானம்) வெளிப்படும். இச்சமயம் எல்லையில்லா பெருமகிழ்ச்சி (ஆனந்தம்) ஏற்படும். இதுவே தீபாவளி.

இந்த மெய்யறிவைப் போராடிப் பெற்றிருக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதோடு நிற்காமல், "இவ்வளவு தான் மெய்யறிவு" என்று உலகுக்கும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். 👌 ஆகையால் தான் இன்று வரை பெரிதும் புகழப்படுகிறார். அவரது வாழ்வில் நடந்த மற்ற நிகழ்வுகளை விட, அவர் மெய்யறிவு பெற்ற நாளும், அவர் வெளிப்படுத்திய மெய்யறிவின் தன்மையும் இன்று வரை தீபாவளி திருநாள் என்ற வடிவில் நினைவு கூறப்படுகிறது.

🌺🌺🌺

இனி, தீபாவளி கதைக்குள் நுழைவோம் (#காஞ்சி #சங்கராச்சார்யார் #ஸ்ரீசந்திரசேகரேந்திர #சரசுவதி சுவாமிகள் 🙏 சொல்லிய கதையை எடுத்துக் கொண்டுள்ளேன்)

#பன்றி #அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும், பூமித்தாய்க்கும் பிறந்தவர் நரகாசூரன் என்று கதை ஆரம்பிக்கும். பன்றியின் பல் பட்ட இடம் #பிராக்ஜோதிஸ்பூர் - இன்றைய கவுகாத்தி, அஸ்ஸாம். இது ஒரு புவியியல் நிகழ்வைக் குறிக்கும். நம் பாரத துணைக்கண்டம், ஆசிய கண்டத்தோடு மோதியதன் விளைவாக இமயமலை உருவானது. அப்படி முதன்முதலாக மோதி உயர்ந்த பகுதியே இந்த பிராக்ஜோதிஸ்பூர். எத்தனையோ இலட்சம் வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை, நரகாசூரன் கதையில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். (இது நமக்கு பிரமிப்பைத் தராது. 😏 ஏனெனில், யார் தலையிலும் ஆப்பிள் விழவில்லை. 😀 யாரும் பிறந்த மேனியாக குளியல் தொட்டியிலிருந்து எழுந்து "யுரேகா! யுரேகா!!" என்று கத்திக் கொண்டு ஓடவில்லை. 😁)

நம் உடல் உணவிலிருந்து பிறந்தது (ஆரியத்தில் உணவை #ஆகாரம் என்பர். ஆகாரம் - ஆ + காரம். ஆ - பசு - சீவன். காரம் - உடல். ஆகாரம் - சீவனின் உடலாக மாறுவது.). உணவு பூமியிலிருந்து பிறந்தது (தாவரங்கள் அல்லது தாவரங்களை உண்ட விலங்குகள்). ஆக, நம் உடல் பூமியின் அம்சமாகிறது. இந்த உடலை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் உயிர் (சீவன்) பரமனின் (மகாவிஷ்ணுவின்) அம்சமாகிறது. இவ்விரண்டையும் இணைப்பது "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம் (பாலைவன மதங்களில் #முதல் #பாவம் (#First #Sin) என்றழைக்கப்படுவதும் இது தான் (2)). உயிர் உடலுக்குள் குடியேறியவுடன் இந்த எண்ணம் தோன்றிவிடும் (இவ்வெண்ணமே மனதின் ஆணிவேர்). ஆகையால், இவ்வெண்ணம் உயிருக்கும், உடலுக்கும் பிறந்த பிள்ளை என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

உடலின் மூலம் வரும் பல்வேறு இன்பதுன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் சீவன், ஒரு சமயத்தில், அது செய்த நல்வினைகளின் பயனால் தகுந்த மெய்யாசிரியரைப் பெறும் (ஆசிரியர் என்பவர் மனிதராகவோ, சொற்றொடராகவோ, சொல்லாகவோ, குறியீடாகாவோ, நிகழ்வாகவோ, நினைவாகவோ இருக்கலாம்). தான் சிறைபட்டிருப்பதை உணரும். சிறையிலிருந்து விடுபடப் போராடும். போராட ஆற்றல் தேவை. இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சத்தியபாமாவின் துணையோடு நரகாசூரனுடன் போரிட்டார் என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

எவ்வாறு எவ்வளவு துரத்தினாலும் மாலை வெயிலால் ஏற்படும் நம் நிழலை நம்மால் பிடிக்க முடியாதோ, அவ்வாறே எவ்வளவு போரிட்டாலும் சீவனால் "நான் இவ்வுடல்" என்ற எண்ணெத்தை அழிக்க முடியாது. ஒரு சமயத்தில் தன் இயலாமையை உணரவும் செய்யும். அச்சமயம் திருவருள் துணைபுரியும். இதற்கு முன்னர் தான் கேட்டிருந்த / படித்திருந்த தனது மெய்யாசிரியரின் அறிவுரை நினைவுக்கு வரும். மாலை வெயில் நிழலை பிடிக்க தான் செய்ய வேண்டியதெல்லாம் தனது கையை தன் மேல் வைப்பதே என்று உணரும். "நான் இவ்வுடல்" என்ற எண்ணெத்தை அழிக்க தான் செய்ய வேண்டியதெல்லாம் தன் கவன ஆற்றலை தன் மீதே திருப்பி தானாய் இருப்பதே என்பதை உணர்ந்து, அதன் படி செய்து, மெய்யறிவு பெற்று அமைதியுறும் (பாலைவன மதங்கள் இதை #RIP - #Rest #in #Peace என்றழைக்கின்றன (2)). இவ்வாறு ஒரு நினைவால் மனமழிந்து, மெய்யறிவு ஏற்படுவதைத் தான், ஸ்ரீகிருஷ்ணர் (சீவன்) காயமுற்று ஓய்ந்து போக, சத்தியபாமா (நினைவு) நரகாசூரனை வீழ்த்தினார் என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

(இந்த விளக்கம் தீபாவளி கதைக்கு மட்டுமே பொருந்தும். மற்றொரு கதையை இதோடு இணைத்துப் பார்க்கக் கூடாது. (எ.கா.: ஸ்ரீகிருஷ்ணரும், ஸ்ரீபலராமரும் சேர்ந்து கம்சனைக் கொல்லுதல்.) மெய்யறிவு பெறுதல் என்ற நிகழ்வை ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு விதமாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உணர்ந்ததை கதைகளாக, பாடல்களாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும். ஒன்றோடு மற்றொன்றை இணைத்துப் பார்த்துக் குழப்பிக் கொள்ளலாகாது.)

மனமழிந்த பின் நம்மைப் பற்றிய புதிய தெளிவும், உடன் பெரு மகிழ்ச்சியும் வெளிப்படும். இதன் பின்னர் பேரமைதி குடிகொள்ளும். "எல்லாம் எம்பெருமானின் திருநடனம்" என்ற வரியின் உண்மை உணரப்படும். அவ்வளவே. இந்தக் கதையில் வருவது போன்று, நரகாசூரன் தனது தாய் சத்யபாமாவிடம் தனது இறப்பைக் கொண்டாடச் சொல்லி கோரிக்கை விடுத்தது போல எதுவும் நடக்காது. தீயவனும் திருந்துவான்; திருந்தவேண்டும்; அப்படி திருந்த மற்றவர்கள் வாய்ப்பளிக்க வேண்டும்; ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று உலகம் மேம்பட வேண்டி அப்படி எழுதியிருக்கிறார்கள்.

🌺🌺🌺

ஸ்ரீகிருஷ்ணரின் மெய்யறிவு நிகழ்வோடு, நமது #கார்த்திகை தீபத்திருநாளையும் சேர்த்துக் கொண்டனர் வடக்கத்தியர்கள். நமது கார்த்திகை பெருவிழா அவ்வளவு சிறப்பு பெற்றதும், பொருள் பொதிந்ததுமாகும்.

விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக இங்கு வந்து சேர்ந்த நாயக்க மன்னர்களில் புகழ் பெற்றவரான #திருமலை #நாயக்கர் காலத்தில் தான் தமிழகத்தில் தீபாவளி அறிமுகப்படுத்தப்பட்டது.

🌺🌺🌺

தீபாவளியன்று கடைபிடிக்கப்படும் இன்னொரு பாரம்பரியம்: தெரிந்தவரைக் சந்தித்தால், "#கங்கையில் #குளித்துவிட்டீரா?" (#கங்கா #ஸ்நானம் #ஆச்சா ?) என்று கேட்பது.

இதன் பொருள்: மெய்யறிவு பெற்றீரா?

உண்மையான கங்கை நீரில் மூழ்குவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனமழிந்து, மெய்யறிவு பெற்றவுடன், நம்மைப் பற்றிய புதிய தெளிவும், உடன் பெருமகிழ்ச்சியும் வெளிப்படும் என்று பார்த்தோம். இந்த மகிழ்ச்சியின் போது நமது உச்சந்தலையிலுள்ள #பிட்டியூட்டரி #சுரப்பி அபரிமிதமாக சுரக்கும். இந்த நீரே கங்கை நீர். இந்நீர் நம் உடலிலுள்ள மற்ற சுரப்பிகளை நன்றாக இயக்கவைக்கும். அனைத்துச் சுரப்பிகளும் நன்றாக இயங்கினால் உடலியக்கம் சீராகும்; மேம்படும். இதனாலும் ஒரு குதூகலம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். (இவற்றை சிவபெருமான் கண்மூடி தவமிருப்பது போன்ற உருவத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். கண்மூடி தவமிருக்கும் சிவன் - மெய்யறிவில் நிலைபெற்றிருக்கும் மெய்யறிவாளரைக் (ஞானியை) குறிக்கும். எ. கா.: பகவான் ஸ்ரீரமணர். சிவனின் உருவத்தில் இருப்பவை, ஒரு ஞானியிடம் காணப்படும் குணங்களாகும்.)

இவ்வளவு விரிவாக கேட்கவியலாது என்பதாலும், நேரடியாக "மெய்யறிவு பெற்றீரா?" என்று கேட்பது நாகரீகமன்று என்பதாலும், மெய்யறிவு கிடைக்கப் பெற்றவுடன் ஏற்படும் விளைவைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். 👌

🌺🌺🌺

"ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த 
ஞானம் விரைவினில் எய்துவாய்'' - எனத் 
தேனி லினிய குரலிலே - கண்ணன் 
செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை 
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன் 
ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி 
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன் 
ஆட லுலகென நான் கண்டேன்!

மகாகவிஞர் பாரதியார் 🙏

யான் அற்று இயல்வது தேரின் எது அது
தான் நல்தவம் என்றான் உந்தீபற
தானாம் ரமணேசன் உந்தீபற

பகவான் ஸ்ரீரமணர் 🌸🙏

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

🌺🌺🌺

குறிப்புக்கள்:

1. அசுரன் என்றால் மாமனிதன் என்று அரிய பொருள் கண்டுபிடித்த இந்த புண்ணாக்கு கருங்காலிகள், சூரசம்ஹார திருவிழாவோடு தொடர்புடைய சூரனுக்கு என்ன பொருள் சொல்வார்கள்? மகாகுடிகாரன் என்றா? 😂😂

#அசுரன் என்பது அசு (உயிர்) + ர (ஆசை / பற்று) என்று ஆரியத்தில் பிரியும். எனில், உயிரற்ற உலகின் மேல் பற்று வைத்திருக்கின்ற அல்லது மெய்யறிவு பெறாத சீவன்.

#சூரன் என்பது சூ (தந்தை) + ர (ஆசை / பற்று) என்று ஆரியத்தில் பிரியும். எனில், உயிரற்ற உலகின் மேல் பற்று ஏற்படக் காரணமானவை அல்லது பற்றைத் தோற்றுவிப்பவை. எது நம்மை பற்று வைக்கத் தூண்டுகிறது? ஆணவம், கர்வம் என்று பொதுவாக பதில் சொல்வார்கள். சரியான பதில்: "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இந்த ஆணி வேரிலிருந்து தான் அனைத்து மலங்களும் தோன்றி, இதிலேயே நிலை பெற்று, பல்கிப் பெருகுகின்றன.

2. பாலைவன மதங்கள் எல்லாம் நம்மிடம் இருந்துதான் உருவானவை. ஒருவர் வந்து தெரிந்து கொண்டு போனார். இன்னொருவர் இருந்த இடத்தில் பெரிய சிவாலயமே இருந்தது. இவர்களைப் பின்பற்றியவர்கள் மூடர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் அமைந்துவிட்டதால் "சமயங்களாக" (சமயம் - நல்ல வேளை; சமைதல் - பக்குவம் அடைதல்; சமைத்தல் - உண்பதற்கு ஏற்றவாறு மாற்றுதல்) வளராமல் "மதங்களாக" (வெறி) வளர்ந்துவிட்டன. "ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு திருமணத்தை செய்" என்பது "ஆயிரம் பொய்களை சொல்லி ஒரு திருமணத்தை செய்" என்று திரிந்தது போல் நமது பேருண்மைகள் இந்த மதங்களில் உருத்தெரியாமல் கொடூரமாய் திரிந்து போய்விட்டன.

posted from Bloggeroid

Monday, November 12, 2018

சிலைத் திருடர்கள் நிறைத்துள்ள துறையின் கட்டுப்பாட்டில் உள்ள #திருக்கண்ணபுரம் திருக்கோயிலில் பரங்கி மத தேவதைகள் வரையப்பட்டுள்ளன!! 😡



இது யாருடைய ஊழியமாக இருக்கும்? வேறு யாராக இருக்கும்... ஜாதகத்தில் தாலி பாக்கியம் பலமாக இருக்கும் பெண்களாக பார்த்து அடிக்கடி திருமணம் செய்து கொண்டு, தனது ஆயுளை உறுதி செய்துகொண்ட பகுத்தறிவு கருந்துளை காலத்தில் உள்நுழைந்தவைகள் தாம் இந்த சுவிசேஷத்தை செய்திருக்கும்!!! 😠 (இதுவே மாறி நடந்திருந்தால்... இந்து தீவரவாதம், ஆதிக்க சாதி வெறி என்று பலர் கலர்கலராக கூவிக் கொண்டிருப்பர்.)

அடுத்தது என்ன? பெருமாளுக்கு பிணக்குறியீடா? (1)

முதலில் இப்படி வரைவார்கள். பின்னர், இந்த மண்ணில் காலடியே எடுத்து வைக்காத ஒரு பரங்கிப் பன்னாடை இங்கு வந்ததாகக் கதை விடுவார்கள். பின்னர், திருக்கண்ணபுரம் மூலவருக்கு கீழ் சமாதியாகி இருக்கும் மகானுக்கு ஞானம் வழங்கியதே அந்தப் பன்னாடை தான் என்பார்கள்.

இன்று வேண்டுமானால் இந்த தேவதை உருவங்கள் பரங்கியருடையதாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தும் இங்கிருந்து சென்றவை தான். நமது கந்தர்வர்கள், தேவதைகள் தாம் இவ்வாறு உருமாறியுள்ளன. (பரங்கி இனத்திற்கு திருடுவது, ஏமாற்றுவது, ஏய்த்துப் பிழைப்பது, அழிப்பது தவிர வேறு ஏதும் தெரியுமா என்ன?)

காலம் இப்படியே போய்விடாது. பரங்கியன் புகுந்த துறை எதுவானாலும் அது ஆமை புகுந்த வீடு போன்றதுதான். பரங்கியன் கையில் கிடைத்த ஒன்று, குரங்கு கையில் கிடைத்த பூமாலைக்கு சமம். ஆத்மாவை ஆதாம் ஆக்கி, சீவனை ஏவாள் ஆக்கி அவர்கள் நடத்தும் பித்தலாட்டம் ஒரு நாள் முடிவுக்கு வரும்.

#நெற்றி #விழி #கண்மூன்று நித் திரையோ சோணேசா
பற்றுமழு சூலம் பறிபோச்சா-சற்றும்
அபிமான மின்றோ அடியார்கள் எல்லாம்
சபிமாண்டு போவதோ தான்

(#நகித் என்ற காட்டுமிராண்டி மன்னன் செய்த அட்டூழியத்தைக் கேட்டு வெகுண்டு, திரு அண்ணாமலையாரிடம் #குகைநமச்சிவாயர் வைத்த கோரிக்கை பாடல். அன்றிரவே நகித்தின் முதுகில் ராஜபிளவை உண்டாயிற்று. சில நாட்களில் அவனும் அவனது காட்டுமிராண்டிப் படையும் ஊரை விட்டுவிலகின. அவன் விலகியதை ஒரு தீபாவளி விழாவாக திருவண்ணாமலை மக்கள் கொண்டாடியுள்ளனர். நமக்கும் அப்படிப்பட்ட ஒரு தீபாவளியை அந்தக் கேடிலி விரைவில் வழங்குவாராக. 🌸🙏)

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

🏵🌷🌻🌺🌹

1. #குறுக்கை (#சிலுவை) என்பது உயிரற்ற உடலைக் குறிக்கும். இது தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று. குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் ஞானி யேசுவின் உருவம் இறந்த மனதைக் குறிக்கும். இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், நடப்பது எதிர்மாறாக இருக்கும். உயிரற்றதை வணங்குவார்கள். மனதின் அழிவைக் கண்டு அழுவார்கள். எல்லாம் ஞானி யேசுவின் போதாத காலம். தனது இனம் அடிமையாக, முட்டாளாக இருக்கிறதே என்று வருத்தப்பட்டு, அன்று உலகின் உயிர்நாடியாக இருந்த பாரதம் வந்து அத்வைதம், பெளத்தம் கற்றுச் சென்றார். ஆனால், இன்று வரை அவருக்கு அமைந்தது என்னவோ ...

posted from Bloggeroid