Sunday, February 11, 2024

திருவீழிமிழலைப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெயர் விளக்கம் & அத்திருக்கோயில் புனைவு கதைகளின் உட்பொருள்


🌷 தொன்மையான நிலப்பகுதியிலுள்ள பழமையான திருக்கோயில்
🌷 மூவர் பெருமக்களாலும் பாடல் பெற்ற திருக்கோயில் (23 பதிகங்கள்!!)
🌷 அப்பர் பெருமானும், காழியூர் பிள்ளையாரும் பெருமானிடமிருந்து படிக்காசு பெற்று, பஞ்சம் போக்கிய திருக்கோயில்
🌷 சுந்தரமூர்த்தி நாயனார் பொன் அணிகலன் பெற்ற திருக்கோயில்
🌷 பெருமிழலைக் குறும்ப நாயனார் பிறந்து, இறைத்தொண்டு புரிந்த ஊர்

oOo

புனைவு #1: கருவறையிலுள்ள இறைச்சின்னத்திற்கு பின்னால் அம்மையப்பர் சிலைகள் உள்ளன. இதற்கு, "அகத்தியப் பெருமானுக்கு இறைவன் திருமணக்காட்சியை காட்டியருளிய இடம்" என்று புனைந்திருப்பார்கள்.


புனைவு #2: திருமால் தனது கண்ணை பறித்து, மலராக கருதி, இறைவனை வழிபட்டு, திகிரியை (அசுரத்தில், சக்கிரம்) பெற்ற இடம்.

oOo

🌷 பெருமானின் திருநெறியத்தமிழ் பெயர்: வீழிமிழலைப் பெருமான்.

> வீழி + மிழலை + பெருமான் = வீழிச்செடிகள் + மழலைச்சொல் + மெய்யறிவாளர்.

அதாவது, இறைச்சின்னத்தின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், வீழிச்செடிகள் நிறைந்த பகுதியிலிருப்பவர்; ஒரு குழந்தை பேசுவதைப்போன்று பேசுபவர். அல்லது, குழந்தைத்தனமாக நடந்துகொள்பவர்.

🌷 பெருமானின் அசுரப்பெயர்: நேத்திரார்ப்பணேசுவரர்.

> நேத்திரம் + அர்ப்பணம் + ஈசுவரர் = கண் + [பிறிதொருவருக்கு] உரியதாகக் கொடுத்தல் + மெய்யறிவாளர்.

புனைவுக்கதை #2-ன் படி, இங்கு, பெருமாள் தனது கண்ணை பறித்து இறைவனுக்கு கொடுத்திருக்கிறார். எனில், "இறைசின்னத்தின் கீழிருப்பது பெருமாளா?" என்ற கேள்வியெழும்!

உண்மை என்னவெனில், மனம் இயங்கும் வரை நாமனைவரும் பெருமாள்களே! மனமழிந்தால் சிவமாவோம். இவ்விதிக்கு ஒருவரும் விலக்கல்ல. கருவறையின் கீழேயிருக்கும் பெருமானும் இதற்கு விலக்கல்ல.

அவர் உடல் தாங்கியிருந்த காலத்தில், மனமும் இயங்கிக் கொண்டிருந்த வேளையில், அவரும் பெருமாளாகிறார். மெய்யறிவில் நிலைபெறுவதற்காக வெகுவாக போராடியிருக்கிறார். எல்லா பற்றுகளையும் விட்டுள்ளார். இதை, "999 மலர்கள் (பற்றுகள்) கொண்டு வழிபாடு நடத்தினார்" என்று பதிவு செய்துள்ளனர்! இறுதியாக, புறமுகப் பார்வையை விட்டுள்ளார். இதை, "கண்ணை பறித்து இறைவனுக்கு படைத்தார்" என்று பதிவு செய்துள்ளனர்!

புறமுகப் பார்வையை விடுதலென்பது அகமுகப் பார்வையை இறுகப் பற்றுதலுக்கு சமம். அகமுகப் பார்வையென்பது தான் எனும் தன்மையுணர்வாய் நிற்றலாகும்.

இங்கு, பகவான் திரு இரமண மாமுனிவரின் 2 பொன்மொழிகளை நினைவு கூர்வது பொருத்தமாகவிருக்கும்:

🌷 தானாயிருத்தலே தன்னையறிதலாம்
🌷 தன்னை விடாதிருத்தல் மெய்யறிவு. அந்நியத்தை நாடாதிருத்தல் பற்றின்மை. இரண்டும் ஒன்றே.

> அந்நியத்தை நாடாதிருத்தல் = புறமுகப் பார்வையை விட்டுவிடுதல் = கண்ணை பறித்துக் கொடுத்தல்!

புறமுகப் பார்வை இருந்தவரை அவர் பெருமாளாகிறார். அகமுகமாய் நிலைபெற்றவுடன் அவர் அகத்தியாராகிறார். (எல்லா மெய்யறிவாளர்களும் அகத்தியர்களே!)

தற்போது, வையகத்தினுள் நாமிருப்பதாக உணர்கிறோம். நிலைபேறு அடைந்த பின், எதுவும் தோன்றாமலிருக்கலாம். அல்லது, ஒரு திரையரங்கிலிருப்பது போன்று, நாம் ஒரு புறமும், வையகக்காட்சி இன்னொரு புறமும் தோன்றிக் கொண்டிருக்கலாம். இத்தகைய காட்சியே மிழலைப் பெருமானுக்கு கிட்டியுள்ளது.

> காண்பான் ஒரு புறம் & காட்சி ஒரு புறம்
> காண்பான் & காட்சி = அப்பன் & அம்மை
> அம்மையப்பர் = திருமணக்காட்சி

மேற்கண்ட நிலையில் மிழலைப் பெருமான் இருக்கிறார் என்பதை நமக்குணர்த்தவே அம்மையப்பர் சிலையை இறைசின்னத்தின் பின்னே வைத்துள்ளனர். மேலும், "அகத்தியருக்கு திருமணக்காட்சி கிட்டிய திருவிடம்" என்றும் பதிவுசெய்து வைத்துள்ளனர்.

இப்போது நாம் காணும் காட்சியில் சூழ்ச்சி நிறைந்துள்ளது. நமதுண்மையை நாம் உணர வெகுவாக போராடவேண்டியுள்ளது. ஆனால், திருமணக்காட்சியில் சூழ்ச்சியே இருக்காது. எனவே, அதை நல்ல காட்சியென்று அழைத்துள்ளனர்.

> திருமணக்காட்சி = நல்ல காட்சி
> நல்ல + காட்சி = அசுரத்தில், சு + தரிசனம் = சுதர்சனம்!

காட்சி என்பது இடைவிடாது மாறிக்கொண்டேயிருக்கும். இதையுணர்த்துவதற்காக, திகிரி (அசுரத்தில், சக்கிரம்) என்று பதிவு செய்துள்ளனர். திகிரி சுழன்று கொண்டேயிருக்கும்.

🌷 சுதர்சன சக்கிரம் = நல்ல காட்சி = திருமணக்காட்சி!!

🌷 அகத்தியர் திருமணக்காட்சியை காணுதல் = பெருமாள் சுதர்சன சக்கிரத்தை பெறுதல்!!!

(எதற்காக ஒரே செய்தியை சொல்லும் இரண்டு புனைவுக் கதைகளை, ஒரு திருக்கோயிலில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்?... விடையை உங்களது சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.)

oOo

திருமணக்காட்சியின் வேறு பெயர்கள்:

🌷 திருக்கயிலாயக் காட்சி
🌷 சூழ்ச்சியில்லாக் காட்சி (இது திரு மணிவாசகப் பெருமானின் படைப்பு)
🌷 கூடம் (அசுரத்தில், சபை - இரத்தின சபை, பொற்சபை...)
🌷 கண்கூடாகக் காணுதல்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, February 6, 2024

இராமக்கிருஷ்ண புருடம்!!


பின்வரும் படக்கதை இராமக்கிருஷ்ண விஜயத்தின் மாசி 2024 இதழில் வெளிவந்துள்ளது:


💥 சோழர்களின் ஆட்சி முழுவதுமாக முடிவுக்கு வந்தது 1,279ல். பாண்டியர்கள் வலுவாக இருந்தது 1,311 வரை. கிருஷ்ணதேவராயர் ஆட்சி தொடங்கியது 1,509ல். எனில், இல்லாத சோழர்கள் எப்படி பாண்டியர்களின் அரியணையை கவர்ந்திருக்கமுடியும்?

(ஒரு வேளை, தற்போது, இராமனின் சிலைக்கு அசுரர்கள் "உயிரூட்டியது" போல, அன்று, பிழைத்திருந்த சோழ வாரிசுகளிடம் "வெயிட்டான" தட்சிணை பெற்றுக்கொண்டு, பெரிய வேள்வித்தீ வளர்த்து, வாயில் போட வேண்டியவற்றை நெருப்பில் போட்டு, "ஓட்டைப் பானைக்குள் நுழைந்த ஈ" எழுப்பும் ஒலியை எழுப்பி, சோழர்களின் சிலைகளுக்கும், வரைபடங்களுக்கும் "உயிரூட்டினார்களா"? 😜)

💥 ஆட்சியிலிருப்பவனை போட்டுத் தள்ளிவிட்டு அரியணை ஏறுவதென்பது குறிமதத்திலும், தேவலோகத்திலும் (வடக்கில்) இருந்த எழுதப்படாத நடைமுறை. அந்தளவுக்கு இல்லையென்றாலும், விஜயநகர மன்னர்களும் அவ்வழியை பல முறை பின்பற்றியவர்கள்தாம். இப்படிப்பட்டவர்களின் ஆட்சியில், நீதியை நிலைநாட்டுவதற்காக மகனே தந்தையை கைது செய்தானாம்! நீதிக்காக கைது செய்தானா? அவன் மேலே வருவதற்காக கைது செய்தானா?

💥 அண்மையில், "பாண்டியர்களை அழித்தொழித்ததே விஜயநகரத்தின் பிரதிநிதிகளான தெலுங்கு நாயக்கர்கள்தாம்" என்ற செய்தி இணையத்தில் சுற்றிவந்தது. இது உண்மையெனில், எப்படி அவர்கள் பாண்டியர்களுக்கு உதவ முன்வந்திருப்பார்கள்? (எனக்கென்னவோ, இப்படக்கதையே அச்செய்திக்கான "டேமேஜ் கண்ட்ரோல்" என்று தோன்றுகிறது!)

💥 சோழர்களின் மீது சேற்றை வாரி வீசும் ஈனர்களுக்கு விஜயம் இடம் கொடுக்கலாமா? அப்படிப்பட்ட பிழைப்பு விஜயத்திற்கு தேவையா?

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, February 5, 2024

திரு நடுக்கந்தீர்த்தப் பெருமான் (திருப்புவனம், தஞ்சை) 🌺🙏🏽🙇🏽‍♂️ - பெயர் விளக்கம்



🌺🙏🏽🙇🏽‍♂️

கடந்த 02/02/24 அன்று குடமுழுக்கு கண்ட திரு நடுக்கந்தீர்த்தப் பெருமான், திருப்புவனம், தஞ்சை மாவட்டம் (அப்பர் பாடல் வைப்புக் கோயில்).

🌷 நடுக்கம் தீர்த்த - அச்சம் போக்கிய.

"மெய்யறிவு கிடைத்தவுடன் என்ன நடந்தது?" என்று கேட்ட ஓர் அன்பருக்கு, பகவான் திரு இரமண மாமுனிவர் கொடுத்த பதில்: அத்தோடு இறப்பை பற்றிய அச்சம் என்னை விட்டு நீங்கியது!!

இதே செய்தியைத்தான் திருக்கடவூர் திருக்கோயிலின் புனைவுக்கதையும் தெரிவிக்கிறது.

கதை: திரு மார்க்கண்டேயரை பற்ற வந்த காலனை, இறைவன் எட்டி உதைத்தார்.

🌷 பற்ற வந்த காலன் - இறப்பை பற்றிய அச்சம்.
🌷 உடையவரிலிருந்து வெளிப்பட்ட இறைவன் - நமக்குள்ளிருந்து வெளிப்படும் மெய்யறிவு.
🌷 காலன் உதை வாங்குதல் - இறப்பை பற்றிய அச்சம் நீங்குதல்.

🔥 இறப்பை பற்றிய அச்சம் / நடுக்கம் நீங்குதல் = மெய்யறிவு பெறுதல்!

🙏🏽 நடுக்கந்தீர்த்தப் பெருமான் = மெய்யறிவு வழங்கிய பெருமான்!

தன்னாட்டம் ("நான் யார்?") என்ற எளிமையான வழியை மீட்டுக் கொடுத்த பகவானும், தம்மை தஞ்சமடைந்த அன்பர்கள் உய்வடைய வழிகாட்டிய அனைத்து பெருமான்களும் நடுக்கந்தீர்த்தப் பெருமான்களாவர்!!

இவ்வாறு, நம் பெருமான்களின் திருநெறியத்தமிழ் பெயர்களை சிந்தித்துக் கொண்டிருந்தாலே பிறவிப்பெருங்கடலை நீந்திவிடலாம். 😍

ஆனால், இப்படி எளிதாக நாம் விளங்கிக்கொண்டு, உய்வடைந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அசுரத்தை உயர்த்திக் காட்டுவதற்காகவும், நமக்கு தாழ்வு மனப்பான்மை தோன்றவேண்டும் என்பதற்காகவும் அசுரக்கூட்டம் அசுரப்பெயர்களை திணித்துள்ளது! சில பழமையான திருக்கோயில்களில், பெயரளவிற்கு மட்டும், தென்தமிழ் பெயர்கள் உள்ளன. "அண்ணாமலையார்" போன்ற ஒரு சில திருப்பெயர்களே, அசுரப்பெயர்களை காட்டிலும் பெரும் புகழ் பெற்று, அன்னைத்தமிழின் மேன்மையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

நடுக்கந்தீர்த்தப் பெருமானின் அசுரப்பெயர் - கம்பகரேசுவரர்.

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, February 2, 2024

யார் நல்லவர்? இராமனா இராவணனா?


திரு இராமேச்சுரத்தை சுற்றியுள்ள பல திருக்கோயில்களில், "[பேரரசர்] இராவணனை கொன்றதினால் தன்னை பிடித்துக்கொண்ட 'பிரம்மஹத்தி' (மனநோய்) விலகுவதற்காக, இராமன், இங்கு சிவலிங்கம் நிறுவி, வழிபட்டார்" என்று எழுதி வைத்திருப்பார்கள்...


> பிரம்மம் - உள்ளபொருள்

> பிரம்மஹத்தி - உள்ளபொருளை உணர்ந்த மெய்யறிவாளரை (பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றோரை) கொல்பவன்.


எனில், இராவணன் ஒரு மெய்யறிவாளராகிறார்! அவரை கொன்றதால் இராமன், பிரம்மஹத்தி ஆகிறார்!!


ஒரு மெய்யறிவாளர் பிறன்மனை நோக்குவாரா? நோக்கமுடியுமா? உண்மையில், யார் நல்லவர்? யார் தூற்றப்படவேண்டியவர்?


வடக்கிலிருந்து வந்த அத்தனையுமே புருடா, பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை, நயவஞ்சகம், நச்சு... இராமன் கதைமட்டும் விதிவிலக்காகிவிடுமா?


மெய்யியல் அடிப்படையில், இராமன் என்பது மனம், இராவணன் என்பது உடல் & இராமாயணம் என்பது மனம் அடங்குதல். வரலாற்று அடிப்படையில்... 😏


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Thursday, February 1, 2024

போச்சு! நம்ம ஜி-க்கு போட்டியாளர் வந்துட்டார்!! 😁


💥 சாப்பிடாமல் இருப்பதற்குப் பெயர் பட்டினி கிடப்பது. நோன்பல்ல (அசுரத்தில், விரதமல்ல).

🌷 நோன்பு எனில் உண்ணாமல் இருப்பதுடன், இறைசிந்தனையும் இருக்கவேண்டும்.

🌷 உண்ணாமல் இருப்பது எனில் உடலுக்கான உணவை உண்ணாமல் இருப்பதல்ல. மனதில் தோன்றும் எண்ணங்களையும், நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சிகளையும் சட்டை செய்யாமல் இருப்பதாகும்.

🌷 இறைசிந்தனை எனில் பொருள் புரியாமல், பாடல்களை, செய்யுள்களை, இறைவனின் திருப்பெயர்களை உருட்டிக் கொண்டிருப்பதல்ல. அல்லது, இறைவனை எங்கோ இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, அவ்விடத்தையும், அவரது வடிவத்தையும் சிந்தித்துக் கொண்டிருப்பதல்ல. நான் எனும் நமது தன்மையுணர்வை (உள்ளபொருளை) இடைவிடாது பற்றிக் கொண்டிருப்பதாகும்!

🌷 கண் எப்படி தன்னையே பார்க்கும்? நாம் எப்படி நம்மையே பற்றிக் கொண்டிருக்க முடியும்?

பகவான் திரு இரமண மாமுனிவரின் பதில்:

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்  
தான் இரண்டற்றதால் உந்தீபற 
தன்மய நிட்டையீது உந்தீபற

🌷 "சும்மா இரு" என்ற பேரறிவுரையின் விளக்கமும் இதுவேயாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼