Friday, December 8, 2023

பசு மாட்டின் பின்புறத்தில் மலர்மகள் குடியிருக்கிறாராம்!!

(மேலுள்ள, மாட்டின் பின்புறத்தை தொட முயற்சிப்பது துர்கா இசுடாலினாம்! 🤭)

🤦🏽 கொஞ்சமாவது அறிவு என்று ஒன்றிருந்தால்...

அசுரனோ, உளுத்தறிவனோ, மெக்காலே மண்டையனோ யார் சொன்னாலும், சிந்திக்கவேண்டும்.

பசு மாட்டின் பின்புறம் சிறுநீரும் & சாணியும் வெளிப்படும். அவை நிலத்தில் விழுந்தால், நிலம் வளமாகும். நிலம் வளமானால் விளைச்சல் பெருகும். விளைச்சல் பெருகினால் வருமானம் வளரும். எனில், வருமானம் வளரவேண்டுமானால் பசு மாட்டின் சிறுநீரையும் & சாணியையும் பயன்படுத்தவேண்டும்.

சாணி & சிறுநீர் = வருமானம் = செல்வம் = மலர்மகள்!!

பொருளாதாரத்தில் உழவுத்தொழில் பெரும் பங்கு வகித்த சமயத்தில் உருவான வினைமுறையாகும் (ஆரியத்தில், சடங்காகும்). இன்றைய பொருளாதாரத்திற்கு பொருந்தாது. இன்று, இந்த வினைமுறையை செய்வதாலோ, பார்ப்பதாலோ எந்த பயனும் கிடையாது. மலர்மகள் குறிப்பிடும் செல்வமென்பது எதென்று தெரிந்தால், பலர் இதை மதிக்கக்கூட மாட்டார்கள்! 😏

மலர்மகள் குறிப்பிடும் செல்வமானது மெய்யறிவாகும். காசு, பணம், துட்டு, பிட்காயின்... இல்லை!

இவ்வினைமுறையை உருவாக்கியது ஆரிய->பௌத்த->நாமப்பேர்வழிகளாகும். சைவம் காளையை போற்றுவதால், அதற்கு போட்டியாக, பசுமாட்டை நாமம் போற்றுகிறது. சைவம், கல்லாலான காளையை உடையவருக்கு முன்னே வைத்தால், நாமம், உயிருள்ள பசுமாட்டை பெருமாளுக்கு முன் கொண்டுவந்து, திருப்பி நிறுத்துகிறது.

பெருமாள் சிலைகள் மட்டும் உயிர்பெற்று நகருமானால்... மீண்டும் கோளரி உருவமெடுத்து (ஆரியத்தில், சிங்கம்), "அடேய், என் பொஞ்சாதி குடியிருக்கிற இடமாடா அது?" என்று முழங்கியவாறு (ஆரியத்தில், கர்ஜித்தவாறு), நாமப்பேர்வழிகளின் மீது பாய்வார்!!!

😆😂😂🤣😍

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment