Monday, May 30, 2022

வேள்வியின் உட்பொருள் என்ன?

https://youtu.be/7fPR-eGr738

"காணக்கிடைக்காத காட்சி" என்ற உரையுடன், அண்மையில், திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற ஒரு வேள்வியின் இறுதிப் பகுதியை காணொளி பிடித்துப் பகிர்ந்திருந்தார்கள். அது பற்றி ...

oOo

எவ்வாறு பொருளுணராது சொல்லப்படும் பாடலால் பயனில்லையோ, அவ்வாறே பொருளுணராது காணும் காட்சியாலும் பயனில்லை!

🌷 இங்கு ஓதப்படுவது திரு ருத்திரத்தின் நமகப் பகுதியிலுள்ள 8வது செய்யுளாகும். சிவபெருமானின் தோற்றத்தை, தன்மையை, அருமை பெருமைகளை ஓதுகின்றனர். ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்த பொருளுள்ளது. "நம" என்ற ஒரு சொல்லைப் பற்றி சிந்தித்தாலே போதும்:

ந - இல்லை
ம - எனது
ந+ம - என்னுடையது இல்லை. எதுவும் என்னுடையது இல்லை. எனில், யாவும் இறைவனுடையதே.

🌷 அடுத்தது, வேள்விக் காட்சி.

🔸 மூன்றடுக்குகள் கொண்ட வேள்விக்குழி (குண்டம்) - தூல, சூக்கும & காரண உடல்கள். மொத்தத்தில், நமதுடல்

🔸 எரியும் நெருப்பு - மூலக்கனல் எனப்படும் நமது தன்மையுணர்வு. இதுவே, உள்ளபொருளுமாகும்.

🔸 குழிக்குள் இடப்படும் பொருள்கள் - நமக்கு தோன்றும் எண்ணங்கள்

🌷 எண்ணங்களை எவ்வாறு தன்மையுணர்வுக்கு இரையாக்குவது?

ஓயாத அலைகள் போன்று ஓயாமல் தோன்றிக் கொண்டிருக்கும் எண்ணங்களைப் பின்பற்றிச் செல்லாமல், நமது தன்மையுணர்வை விடாது இறுகப் பற்றிக்கொண்டிருந்தால், தோன்றிய எண்ணங்கள் தாமாகவே மறைந்துபோகும். இதுவே இரையாக்குவதாகும்.

🌷 நிறைபொருள் (பூர்ணாஹுதி) - "நான் யார்?" என்ற நினைவு. எல்லா எண்ணங்களையும் இரையாக்கிய பின்னர், இறுதியில், இதையும் விட்டுவிடுவோம். இந்த நிறைபொருளான நான் யாரெனும் நினைவிற்கு பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ இட்டுள்ள பெயர்: பிணஞ்சுடு தடி!! 😊 ("பிணஞ்சுடு தடி போல் தானுமழியும்")

🌷 அடுத்து, இறைவனுக்கு காட்டப்படும் ஐஞ்சுடர் விளக்கு.

ஐஞ்சுடர் - ஐம்பொருள்கள் - உலகம்.

"ஐம்பொருள்களின் கலவையாகிய உலகம் நீயே" என்பது பொருள்.

இவ்வாறு, வேள்வியென்ற பெயரில் அரங்கேற்றப்படும் திருக்காட்சியை பிரித்துப் பொருள் காண முற்படாவிட்டால், காணும் காட்சி எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் பயனற்றதாகிவிடும்; ஒரு திரைப்படம் பார்த்த கணக்காகிவிடும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, May 27, 2022

எஞ்சிய இந்து சமயச் சின்னங்களை ஏன் அழிக்கவேண்டும்? இறைவனிடம் கையேந்தலாமே? 😏


நம்மிடமிருந்து பிடுங்கி, உடற்பயிற்சிக்கூடங்களாக மாற்றப்பட்டிருக்கும் இடங்களிலுள்ள நம் சமயக் குறியீடுகளை உடனடியாக அழிக்கச் சொல்லி கட்டளை பிறப்பித்துள்ளார்களாம்!

எவ்வளவு திமிர் இருந்திருந்தால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கவர்ந்துகொண்டு, இடுத்து தள்ளிய நம் திருக்கோவில்களின் இடிபாடுகளை இன்றுவரை அகற்றாமல் வைத்திருப்பார்கள்!! (டில்லியிலுள்ள மன்னர் பிருத்திவிராஜரின் கோவிலில் (குதுப்மினார் வளாகத்தின் பழைய பெயர்) இடிபாடுகளை இன்றும்கூட கண்கூடாகப் பார்க்கலாம்)

"எங்காளு உருவ வழிபாடு கூடாதுன்னு சொன்னாக", "23 வருசமா 0.00001ஜி ஸ்பீடுல டவுண்ட்லோடு ஆன பிடிஎஃப்-ல சொல்லியிருக்கி" என்று கதை விட்டுக்கொண்டு, தங்களை ஆண்குறியாகவும், பெண்குறியாகவும் ஒப்பனை செய்துகொண்டு, எங்கும் எதிலும் பாலுறுப்புகளையும், கலவியையும் காணும் வெட்கங்கெட்ட கூட்டம் பாடுபட்டு, உழைத்து, பொருளீட்டி கட்டியிருந்தால் காட்சி வேறு வகையாக இருந்திருக்கும்! 👊🏽👊🏽

காலில் முள் தைத்துவிட்டதென்று முறையிட்டால், காலணி அணிந்துகொள்ளச் சொல்லி அறிவுருத்தவேண்டும். இதை விடுத்து, "செல்லும் வழியெங்குமுள்ள செடி, கொடி, மரவகைகளை அழித்துவிடு" என்பதோ, அல்லது, "காணுமிடம் எங்கும் காலணி கொண்டு நிரப்பி விட்டு, பின்னர், நடந்து செல்" என்பதோ எப்படி அறிவுரை / வழிகாட்டுதலாகும்?

உருவங்களுக்கு தீர்வு உருவங்களை அழிப்பதல்ல; அல்லது, பாலுறுப்புகளையும், கலவியையும் உருவங்களாகக் காணுவதல்ல. உருவங்களைக் காண்பவனொருவன் இருக்கிறான் என்பதையுணர்ந்து, அந்த காண்பவனாக இருப்பதே சிறந்த தீர்வாகும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, May 23, 2022

சிவலிங்கம்தான் குறி மதத்தின் அடிப்படை!!


"கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு" என்ற செய்தி எங்கே இந்துக்களிடம் பற்றிக் கொள்ளப்போகிறதோ என்று "கிண்டல்" என்ற தண்ணீரை இறைத்துள்ளனர்:

🔸 "ஆட்டுக்கல் சிவலிங்கம் போன்று தோன்றுகிறது"
🔸 "அம்மிக்கல் சிவலிங்கம் போன்று தோன்றுகிறது"
🔸 "அணு உலை சிவலிங்கம் போன்று தோன்றுகிறது"

சிவலிங்கம்தான் இவர்களது குறியீடுகளுக்கு, இவர்களது மதத்திற்கு அடிப்படை என்ற உண்மை தெரிந்திருந்தால் இப்படிச் செய்வார்களா?

oOo

முதலில், சிவலிங்கம் என்றால் என்ன?

🌷 லிங்கம் - அடையாளம்

🌷 சிவன் - மெய்யறிவாளர் - மெய்யறிவில் நிலைபெற்றவர்

🌷 சிவலிங்கம் - மெய்யறிவாளரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைக் குறிக்கும் அடையாளம்.

(மேற்சொன்ன கணக்கில் மட்டுமே தொடக்கத்தில் சிவலிங்கங்களை பயன்படுத்தினர். பின்னர், பேருண்மைகள், அழியாக் கோட்பாடுகள் என எல்லாவற்றையும் குறிப்பதற்கு பயன்படுத்தினர். மேலும், தொடக்கத்தில், பாணம் என்ற நடுப்பகுதி மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. பின்னர், யோனி என்ற அடிப்பகுதியை சேர்த்துக்கொண்டனர்.)

🌷 மெய்யறிவாளர் என்பவர் யார்?

தானே அழியாப் பொருளென்பதை உணர்ந்து, தன்மையுணர்வில் நிலைத்திருப்பவர்கள். இந்நிலை முடிவற்றது & நிலையானது.

🔸 சிவலிங்கத்தின் வளைந்த உச்சிப்பகுதி - முடிவற்ற நிலையைக் குறிக்கும்

🔸 சிவலிங்கத்தின் சீரான தண்டுப்பகுதி - நிலையான நிலையைக் குறிக்கும்

oOo

ஆனால், உலகிலுள்ள எல்லோருக்கும் ஒரே பார்வை கிடையாது. ஒரு நல்ல கத்தி, சமைப்பவருக்கு எப்படித் தோன்றும்? மருத்துவருக்கு எப்படித் தோன்றும்? கொலைகாரனுக்கு எப்படித் தோன்றும்?

இப்படித்தான் சிவலிங்கமும். மேற்சொன்ன விளக்கங்களுக்கேற்ப நம் முன்னோர்கள் சிவலிங்கத்தை வடித்திருந்தாலும், ஒருவருக்கு வேறு வகையாகத் தோன்றியிருக்கிறது! அடிப்பகுதி பெண்ணுறுப்பாகவும், மேற்பகுதி ஆணுறுப்பாகவும், இரண்டும் சேர்ந்து கலவியாகவும் தோன்றியிருக்கிறது!! விளைவு... குறி மதம்!!

(உலகம் முழுக்க, ஒரு காலத்தில், சிவலிங்க வழிபாடு இருந்துள்ளது. தரைவழியாகவும், கடல்வழியாகவும் நம்மோடு இணைந்திருந்த மத்திய கிழக்குப் பகுதிகளில் சிறப்பாகவே இருந்துள்ளது.)

oOo

இதுவரை இவ்விடுகையை யார் வேண்டுமானாலும் படித்திருக்கலாம். ஆனால், இதற்கு மேல் தொடர்வதற்கு மதச்சின்னங்கள் & குறியீடுகளைப் பற்றிய அடிப்படைகள் ஒரளவு தெரிந்திருக்கவேண்டும். இல்லையெனில், அதிர்ச்சி, கோபம், அருவருப்பு போன்ற உணர்வுகளே மிஞ்சும்; உண்டதும் வெளிப்படக்கூடும்!!

oOo

💥 1 தொழுகையிடமும் 1 மினாரும் இருந்தால்: மினார் - ஆணுறுப்பு (லிங்கம்), தொழுகையிடம் - பெண்ணுறுப்பு (யோனி).

💥 1 தொழுகையிடமும் 2 மினாரும் இருந்தால்: கலவியில் ஒரு நிலை

💥 1 தொழுகையிடமும் 4 மினாரும் இருந்தால்: கலவியில் இன்னொரு நிலை

(கலவி நிலைகளை விளக்க முற்பட்டால் வாத்சாயனரின் நூலுக்கு துணை நூல் போலாகிவிடும்! 😊)

💥 தொழுகையிடத்தின் மேலுள்ள கவிழ்ந்த பானை போன்ற அமைப்பு: கருப்பையின் மேற்புறம் (Fundus)

💥 காலப்போக்கில் சிந்தனை மாறியுள்ளது. "தொழுகையிடமும் மினாரும்" (பெண்ணும் ஆணும்) என்பது மாறி "கலவி" (பெண்ணும் ஆணும் இணைந்து) என்றாகியுள்ளது. மினார் என்ற அமைப்பு தனியாக இருந்தாலும், கருப்பைக் கோபுர கட்டிடத்தை பெண்ணாகவும் (யோனியாகவும்), அதன் நுழைவாயிலை ஆணாகவும் (லிங்கமாகவும்) கருதத் தொடங்கியுள்ளனர். தூரத்திலிருந்து பார்க்கும்போது இரு உறுப்புகளும் இணைந்திருப்பது (கலவி) போன்று தோன்றும். (கீழுள்ள படத்தில் சிவப்பு வட்டமிட்ட பகுதிகள்)


💥 ஆண்கள் - ஆணுறுப்புகள் (லிங்கங்கள்). இவர்களது உடைகளை வைத்து இவர்களை 3 வகைகளாக பிரிக்கலாம்: வெறும் உறுப்பு, புணர்ச்சியின் முடிவிலிருக்கும் உறுப்பு & புணர்ச்சி முடிந்த உறுப்பு.

💥 பெண்கள் - பெண்ணுறுப்புகள் (யோனிகள்). இவர்களது உடைகளை வைத்து இவர்களை 2 வகைகளாக பிரிக்கலாம்: புணரப்படவேண்டிய உறுப்பு & புணரப்பட்ட உறுப்பு.

(இரு ஆண்டுகளுக்கு முன், நமது கந்த சஷ்டி கவசத்தைப் பற்றி கருப்பர் கூட்டம் கிண்டலடித்த போது, முகம்மதிய ஆண்கள் & பெண்களின் ஒப்பனைகளைப் பற்றி, வெகு விளக்கமாக, எழுதியிருந்தேன். ஆகையால், இங்கே சுருக்கமாக முடித்துக்கொண்டேன். பழைய இடுகையை படிக்க விரும்புபவர்களுக்கு: https://samicheenan.blogspot.com/2020/07/blog-post_27.html?m=1 ) 

இவ்வாறு, குறிகளையும் & கலவி நிலைகளையுமே இவர்கள் தங்களது உடைகள், கட்டிடங்கள், குறியீடுகள் என எங்கும் எதிலும் பயன்படுத்துகின்றனர். "இந்த கண்ணோக்கம் சரியா?" என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும், இந்த கண்ணோக்கத்திற்கு அடிப்படை ஒரு சிவலிங்கமாகும். எனவே, சிவலிங்கத்தை கிண்டலடிப்பது என்பது இவர்களை இவர்களே கிண்டலடித்துக் கொள்வதற்கு சமம்!

oOo

ஒரு சிவலிங்கம் கிடைத்துத்தான் அவ்விடம் ஓர் இந்துக் கோவில் என்று அறியப்படவேண்டுமா? கட்டிடத்தின் மேற்பகுதியிலுள்ள கருப்பை அமைப்புத் தவிர மீதப் பகுதிகளைப் பார்த்தாலே தெரியாதா?

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, May 18, 2022

திருஞானசம்பந்தர் என்ற ஒரு பெருமான் தோன்றியிருக்காவிட்டால்...

விடை (வைகாசி) - குருகு (மூலம்)

திருஞானசம்பந்தர், திருநீலநக்கர், திருநீலகண்ட யாழ்பாணார் & திரு முருக நாயனார்கள் திருநாள்


எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️


ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️


திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️


முருகனுக்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

திருஞானசம்பந்தர் என்ற ஒரு பெருமான் தோன்றியிருக்காவிட்டால் என்றோ வடக்கத்தான்களுக்கு அடிமையாகி, இன்று, வெட்கங்கெட்ட சமணர்களாகவோ, நயவஞ்சக பெளத்தர்களாகவோ ஆரியத்தில் உவாச்சிக்கொண்டிருப்போம். இன்று, வாந்தித் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கும். வாந்தியர்களை நம்மை ஆளவிட்டு, நமது வளங்களை சுரண்டவிட்டு, நமது நிறுவனங்களில் அமரவிட்டு பாரத இறையாண்மையைக் காப்பாற்றியிருப்போம். 

சைவத்திலும் அத்வைதத்திலும் இருப்பதை உருவி, சற்று உருமாற்றி, லட்டு, வடை, தோசை முதலானவற்றை சேர்த்து, திவ்ய மங்கள விசுவ ரூபமாக்கி தொழில் செய்யவேண்டிய நிலை ஒரு கூட்டத்திற்கு ஏற்பட்டிருக்காது. மொட்டையடித்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்.

விண்டோஸ் 2000 என்ற இயங்குதளத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இங்கு கொண்டுவந்தபோது, அதில் தமிழ், வாந்தி & ஆங்கிலம் ஆகிய மொழிகள் இருந்தன. இதை வாந்தியர்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பதிப்பிலிருந்து தமிழ் இல்லாதபடி பார்த்துக்கொண்டார்கள். ஆனால், இயற்கை அன்னையின் திட்டம் வேறாக இருந்தது. இணையத்தின் வாயிலாக நம் திருநெறிய தமிழுக்கு புத்துணர்வு ஊட்டினார்.

நமது அடையாளங்களை அழிக்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டதல்ல. இமயத்தில் சேரன் கொடி நட்டதிலிருந்து தொடங்குகிறது.

வாழ்வை மேன்மையாக்கும் சமயங்களும், சுவையாக்கும் கலைகளும் பிறந்தது தெற்கில். வடக்கில்... படங்காட்டுதல், பிடுங்கிக் கொள்ளுதல், ஊடுருவல், அத்துமீறுதல்...

oOo

ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு.

அது ஒரு திருவாசகப் பாடல் பெற்ற திருக்கோவில். அங்கு குடிகொண்டிருக்கும் பெருமானுக்கு பூசை செய்யும் உரிமை பெற்ற ஓர் ஆரியப் பூசாரியோடு பேசிக்கொண்டிருந்தபோது "மார்கழி" என்று சொல்லிவிட்டார். "அடடடடா, தவறு செய்துவிட்டோமே!" என்ற உணர்ச்சியை வெளிப்படுத்தி, தன்னைத்தானே சற்று கடிந்துகொண்டு, "தனுர் மாசா" என்று தொடர்ந்தார். 😊

"மார்கழி மாதம்" என்று உச்சரித்தபோது அவரிடம் என்ன குறைந்துபோனது? "தனுர் மாசா" என்று உச்சரித்தபோது அவரிடம் என்ன மிகுந்தது? சிந்தித்தால் மொழித் திணிப்பின் அபாயம் புரியும்.

oOOo

பரந்தெழுந்த சமண் முதலாம் பரசமய இருள் நீக்கிய பெருமான் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, May 17, 2022

திரு அண்ணாமலையார் திருக்கோவிலை மீட்ட சத்ரபதி வீர சிவாஜி மகராஜ் - அறியாத செய்தி!!

தில்லை சிற்றம்பலத்தை, அதன் மூல வடிவிற்கு ஒரு நூல் மாறாமல், மீண்டும் கட்டியெழுப்பினார் சத்ரபதி சிவாஜி மகராஜின் மகனான சாம்பாஜி மகராஜ் என்ற செய்தி சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அது போன்று, திரு அண்ணாமலையார் திருக்கோவிலை சிவாஜி மகராஜ் கட்டிக்கொடுத்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது!

இன்னும் இது போன்று எத்தனை வரலாற்று நிகழ்வுகள் மறைக்கப் / மறக்கப்பட்டுள்ளனவோ! 😔😠

எங்கும் எதிலும் கலவி, ஆண்குறி, பெண்குறி, விந்து வெளியேற்றம் என்று பலானதையேக் காணும் கோணல் புத்திக்காரர்களான காட்டுமிராண்டிகளின் ஆட்டம், இன்னும் சில நூற்றாண்டுகளில், முடிவுக்கு வரும்!

oOOo

🔸 நிகழ்ந்தது: அக்டோபர் 30, 1677ம் ஆண்டு

🔸 பிரெஞ்சு மொழியில்: “Après avoir restauré la forteresse de Gingy et nommé Ram Haja, roi de cette place, le Roi Sivaji se rendit à Tirouvannamalé. 0’était un dévot de Siva. On se rappelle que les Musulmans avaient laissé tomber en ruines puis converti en mosquées, la pagode de Sivan à Tirouvannamalé et celle dédiée à Samouttira Peroumal. Sivaji detruisit ces deux mosquées, restaura la pagode de Sivan et avec les briques provenant de la démolition de la pagode dédiée à Samouttira Peroumal, il íit construira un escalier autour du mandabom aux mille piliers bâti par les Naikers, fit rassembler cent mille vaches dans ce mandabom pour installer le Sivalinam et fit faire la cérémonie de la dédicace. 0’est lui qui institua aussi la fete dite «Kartiguê tipam» sur la colline.”

🔸 கூகுளின் உதவியுடன் ஆங்கில மொழிபெயர்ப்பு: “After having restored the fortress of Gingy and appointing Ram Raja, king of this place, King Sivaji went to Tirouvannamalé. He was a devotee of Siva. We remember that the Muslims had left in ruins then converted into mosques, the pagoda of Sivan in Thiruvannamalai and that dedicated to Samouttira Perumal. Sivaji destroyed these two mosques, restored the Sivan pagoda and with the bricks coming from the demolition, he built a staircase around the thousand-pillared mandabom built by the Naikers, had a hundred thousand cows gathered in this mandabom to install the Sivalingam and had the dedication ceremony performed. It was he who also instituted the festival called “Kartigai Deepam” on the hill."

🔸 இணைப்புத் திரைநகல், 1939ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட "Histoire Detaillee Des Rois Du Carnatic" என்ற பிரெஞ்சு நூலிலிருந்து எடுக்கப்பட்டது. நூலின் PDF வடிவத்தைப் பெற: https://ia601703.us.archive.org/2/items/dli.ernet.535406/535406-Hisoire%20%20Detaillee%20%20Des%20%20Rois%20%20Du%20%20Carnatic.pdf

🔸 இந்த தகவலை பகிர்ந்த திரு ஆனந்த் ரங்கநாதனின் கீச்சு: https://twitter.com/ARanganathan72/status/1526263939780456448/photo/1

நன்றி: திரு ஆனந்த் ரங்கநாதன் & Tamil History (முகநூல்) 🙏🏽🙏🏽

Monday, May 16, 2022

திருக்குறள் #612: செயலுக்கு மாற்று இருத்தல்! அன்னைக்கு மாற்று அப்பன்!!


வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

-- திருக்குறள் #612 (ஆள்வினையுடைமை)

பொருள்: கொண்ட வேலையை முயற்சிகுறை ஏற்படாவண்ணம் முற்றச் செய்யவேண்டும்; செயலை நிறைவேற்றாது அரைகுறையாக விட்டவரை உலகம் மதிக்காது புறக்கணித்துவிடும் (குறள்திறன் உரை - பண்டைய ஆசிரியர்களின் உரைகளை அடிப்படையாகக் கொண்டது).

oOo

வினைப்பயன்கள் மீதமிருப்பதனால்தான் பிறவியே ஏற்படுகிறது. இல்லையெனில், இந்த ஜிஎஸ்டி, பகுத்தறிவு, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் பல பட்டை நாமங்கள்-சூழ் உலகில் நமக்கென்ன வேலை? ☺️

🔸 வினைக்குறை - மீதமிருக்கும் வினைப்பயன்கள்

🔸 வினைக்குறை தீர்ந்தார் - வினைப்பயன்கள் தீர்ந்தவர்கள். மெய்யறிவாளர்கள். 

🔸 தீர்ந்தன்று உலகு - மெய்யறிவில் நிலைப்பெற்றவுடன் பிறவி முடிந்துவிடாது. இதற்கு பெரியோர்கள் கொடுக்கும் எடுத்துக்காட்டு: மிதிவண்டி. விசை கொடுப்பதை நிறுத்திய பிறகும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட விசையினால், மிதிவண்டி சற்று தூரம் சென்றபிறகு நிற்பது போல, நிலைப்பேறு கிட்டியபிறகும், மீதமிருக்கும் வினைப்பயன்களினால் உடல்-உலகக் காட்சிகள் தொடரும்.

இதற்கு, பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவார். 16 வயதில் நிலைப்பேறு கிட்டினாலும், 70 வயதுவரை வாழ்வு தொடர்ந்தது.

🔸 உடல்-உலகக் காட்சிகள் தொடர்ந்தாலென்ன?

எச்சரிக்கையாக இருக்காவிடில், மீண்டும் உலகிற்குள் சிக்கிக்கொள்வர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு விசுவாமித்திர மாமுனிவராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️. மெய்யறிவு பெற்ற பின்னரும், மேனகையிடம் மாட்டிக்கொண்டார்.

🔸 தொடரும் உடல்-உலகக் காட்சிகளுக்குள் சிக்காமலிருக்க என்ன செய்வது?

"வினைக்கண் வினைகெடல் ஓம்பல்" என்று பதிலளிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை 🌺🙏🏽🙇🏽‍♂️.

"முயலுதல் இல்லாமலிருக்க முயலுங்களேன்" என்று சில அன்பர்களுக்கு அறிவுருத்தினார் பகவான். முயலுதல் என்பது ஒரு வினையெனில், முயற்சியற்று 'இருத்தல்' என்பது இன்னொரு வினையாகிறது. ஒன்றுக்கு இன்னொன்று மாற்றாகிறது. வினைக்கண்ணுக்கு மாற்று வினைகெடல்!

> வினைக்கண் - ஒரு வினையில் ஈடுபடுதல் / விருப்பம் கொள்ளுதல்

> வினைகெடல் - அந்த ஈடுபாட்டை / விருப்பத்தை அழித்தல் / அடக்குதல் / தவிர்த்தல்

> அதாவது, செயல் (வினைக்கண்) அற்றிருத்தல் (வினைகெடல்)

> இவ்வாறு செயலற்றிருத்தலே, ஓம்பல் (காத்துக்கொள்ளல்)

இப்போது அனைத்தையும் இணைப்போம்: மெய்யறிவு பெற்றவர்கள் மீண்டும் உலகிற்குள் சிக்கிக் கொள்ளாமலிருக்க செயலற்றிருக்கவேண்டும் என்பது பொருளாகும்.

oOo

இன்றைய சூழ்நிலையில், எந்த செயலையும் செய்யாமலிருக்க முடியுமா?

இதற்கு விடை காண்பதற்கு முன்னர், வேடிக்கையாக ஒரு பொருள் காண்போம்.

செயல், வேலை, வினை, உழை என எல்லாம் மனதின் அசைவை, மனதை வெளிவிடுவதைக் குறிக்கும். மனம், அசைவு என்றாலே அது அன்னைதான். எனில், செயல் = அன்னை.

செயலுக்கு / அசைவுக்கு எதிர்மறை செயலற்று இருத்தல் / அசைவற்று கிடத்தல் = அப்பன் / சிவன். "சித்த நேரம் சிவனேன்னு கிடக்க வேண்டியதுதானே?".

செயலுக்கு மாற்று செயலற்றிருத்தல். அன்னைக்கு மாற்று அப்பன்.

பொருள்: மெய்யறிவு பெற்றவர்கள் மீண்டும் உலகிற்குள் சிக்கிக்கொள்ளாமலிருக்க சிவமாய் கிடந்தால் போதும்! 😊

எனில், சிவமாய் கிடப்பது / இருப்பது எவ்வாறு?

நான் என்னும் தன்மையுணர்வை விடாது நாடி, புறம் நாடாது, தன்னை நாடி நிற்றலே சும்மாவிருத்தல் (சிவமாயிருத்தல்) -- திரு சாது ஓம் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOo

செயலற்றிருத்தல் என்றாலென்ன?

எந்த வேலையும் செய்யாமல் சும்மாவிருத்தல் அல்ல. அப்படி சும்மாவிருக்கும் தலைவிதி அமைந்தால் நல்லதே. இல்லையெனில், சும்மாவிருக்க முயல்வது வீணாகும். இதைவிட, உண்மையில் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொண்டால் செயலற்ற நிலை தானாக அமையும்!

பகவானது விளக்கத்தைப் பார்ப்போம்: "வேலை செய்கிறேன்" என்ற உணர்ச்சியே தடை. "வேலை செய்வது யார்?" என்று ஆராய்ந்து, உனது உண்மையை நினைவிற் கொள். வேலை தானே நடக்கும். உன்னை கட்டுப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயற்சிக்கவேண்டாம். உனது முயற்சியே உனது தளை.

வினைக்கண் வினைகெடுவதற்கு இந்த ஒரு பொன்னான அறிவுரை போதும்! 🙏🏽

oOOo

வாலறிவன் வள்ளுவன் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, May 14, 2022

திரு வாசவி அம்மனின் திருவுருவம் உணர்த்தும் செய்திகள்!!


எனக்கு தெரிந்த நபரொருவர், அவருக்கு கிடைத்த திரு வாசவி அம்மன் படத்தைப் பற்றி உருகிப் பேசினார். அவர் உருகிப் போனதற்கு ஏது: அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளியாலான புடவை! 😏

"அம்மன் வெள்ளிப்புடவை அணிந்திருந்தாலென்ன? நூல் புடவை அணிந்திருந்தாலென்ன? அவரது தோற்றம் உணர்த்தும் உண்மைகளென்ன?" என்று தொடங்கி, அவருக்கு நான் அளித்த விளக்கங்களின் தொகுப்பே இந்த இடுகை. 🙏🏽

oOo

எவ்வாறு பொருளுணர்ந்து சொல்லாத பாட்டினால் பயனில்லையோ, அவ்வாறே பொருளுணராமல் இறையுருவங்களை வணங்குவதாலும், அவைகளுக்கு செய்யப்படும் ஒப்பனைகளை & பூசைகளைக் காண்பதாலும் பயனில்லை!

🔸 இங்கு அன்னையின் உடலமைப்பு நேராக இல்லை: பாதங்களிலிருந்து இடுப்பு வரை ஒரு கோணத்திலும், இடுப்பிலிருந்து தோள்பட்டை வரை எதிர் கோணத்திலும், தோள்பட்டையிலிருந்து கழுத்து & தலை நேராகவும் உள்ளது. (முதல் படத்தில், ஒப்பனையினால் உடலமைப்பு தெளிவாக இல்லை. அடுத்த படத்தில் தெளிவாகத் தெரியும்.)


இது போன்ற கோணலான உடலமைப்பு கொண்ட இறையுருவங்கள் உணர்த்துவது: குறிப்பாக, அசைவு. உடன், மாற்றம், தோற்றம் & மறைவு.

எது அசைந்து கொண்டேயிருக்கிறது?
எது மாறிக் கொண்டேயிருக்கிறது? 
எங்கு தோற்றம் & மறைவு நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது?

காணப்படும் உலகில்!! அன்னை = உலகம்.

உலகில், எல்லாம் அசைகிறது; எதுவும் நிலையாக இல்லை; எல்லாம் மாறிக்கொண்டேயிருக்கிறது; தோற்றமும் மறைவும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

(கோணலமைப்பிற்கு வேறொரு பொருளுமுண்டு. அதை குறிப்பிடுவதற்கான இடுகை இதுவல்ல.)

🔸 அன்னையின் கையிலிருக்கும் மலர் மொட்டு, ஒரு கணக்கில், உயிரைக் குறிக்கும். இன்னொரு கணக்கில், இந்த உலகம் நமக்கு வழங்கும் இன்பம், துன்பம் முதலிய யாவற்றையும் குறிக்கும்.

🔸 அன்னை பெண்ணாவார். அவர் ஏந்தியிருக்கும் மலர் ஆணாகும்.

மொத்தத்தில், அன்னையின் உருவம் உணர்த்துவது:

1. அசைவதிலிருந்து அசைவற்றது தோன்றுகிறது
2. மாறுவதிலிருந்து மாறாதது தோன்றுகிறது
3. நிலையற்றதிலிருந்து நிலையானது தோன்றுகிறது
4. காணப்படுவதிலிருந்து காண்பான் தோன்றுகிறான்
5. உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றுகிறது
6. பெண்ணிலிருந்து ஆண் தோன்றினான்

ஓர் இறையுருவம் உணர்த்தும் கருத்துகள் ஒருவருக்கு ஏற்புடையவையாக இருந்தால் அவ்வுருவத்தை வணங்கலாம்; அக்கருத்துகளைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம். இல்லையெனில், நமக்கு ஏற்புடைய வேறொரு இறையுருவத்தை தேர்ந்தெடுக்கலாம்.

"கடவுளைக் காண்பதென்பது கடவுளை அறிவது. கடவுளை அறிவதென்பது கடவுளாய் ஆவது. கடவுளாய் ஆவதென்பது கடவுளாய் இருப்பது." -- பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ / திரு சாதுஓம் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️.

இதன்படி, இந்த அன்னையாய் இருக்க வேண்டுமெனில் வாழ்நாள் முழுவதும் இயங்கிக் கொண்டேயிருக்கவேண்டும்! மற்றவர்களுக்கு பொருள், சேவை, அறிவு முதலானவற்றை வழங்கிக் கொண்டேயிருக்கவேண்டும்!!

(இந்த இடுகையை இதுவரை படித்தவர்களுடைய மைண்ட்வாய்ஸ், பெரும்பாலும்: இது ஆவறதில்லே! 😁)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, May 9, 2022

பிறை கண்டீரா?

இவ்விடுகையின் முன் பகுதியை யார் வேண்டுமானாலும் படிக்காலும். ஆனால், மதச்சின்னங்கள் & குறியீடுகளைப் பற்றிய அடிப்படைகளை ஒரளவேனும் தெரிந்தவர்களே பின் பகுதியை படிக்கவேண்டும். இல்லையெனில், அதிர்ச்சி, கோபம், அருவருப்பு போன்ற உணர்வுகளே மிஞ்சும்; உண்டதும் வெளிப்படக்கூடும்!!

oOo

ஒரு வெப்பமான, வறண்ட பகுதியில் வாழ்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். கோடைகாலம் வருகிறது. அதிலும், சுட்டெரிக்கும் காலம் வருகிறது. என்ன செய்வோம்? முடிந்தவரை பகலில் வெளியே செல்வதை தவிர்ப்போம்.

இன்னும் சற்று கடினமான சூழ்நிலையை கற்பனை செய்வோம். மின்சாரம் & கருவிகள் ஏதுமில்லாத காலம். பகலில் நீர் பருகினால் கூட வியர்வை வழியுமளவிற்கு வாட்டும் வெயில். என்ன செய்வோம்? பகலில் உட்கொள்வதை தவிர்ப்போம். மாலையில் பகலவனின் மறைவிற்கு பின்னரும், காலையில் பகலவன் தோன்றுவதற்கு முன்னரும், உணவு சமைத்து உண்போம்.

இத்தகைய சூழ்நிலை ஒரு மாத காலம் நீடிக்கும் என்று வைத்துக் கொள்வோம். இன்றிருப்பது போன்று வங்கி அமைப்புகளுமில்லை என்று வைத்துக் கொள்வோம். எத்தனை பேரால் தாக்குப்பிடிக்கமுடியும்? வசதி, வாய்ப்புள்ளவர்கள் தாக்கும் பிடிப்பார்கள்; இதை வாய்ப்பாக பயன்படுத்தி மற்றவர்களது வேலைகளை, தொழில்களை, வணிகத்தை மடை திருப்பவும் செய்வார்கள். இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும்; பொருளாதார ஏற்றதாழ்வுகள் மிகும். இதையெப்படி அப்பகுதி ஆட்சியாளார் சமாளிப்பார்? பகலில் எல்லோரும் வீட்டிலேயே இருக்கும்படி ஆணை பிறப்பிப்பார்.

எல்லோராலும் ஒரு மாத காலம் வீட்டில் சும்மாவிருக்கமுடியுமா? அன்றாடம் பொருளீட்டுவோர் என்ன செய்வார்கள்? வீட்டில் சண்டை, சச்சரவு பெருகும். இனப்பெருக்கம் நடக்கும். மக்கள் தொகை பெருகும். இவற்றையெல்லாம் ஆட்சியாளர் எவ்வாறு சமாளிப்பார்? இவற்றிற்கான தீர்வு: இறைசிந்தனை & பகிர்ந்துண்ணல். (சாமிகுத்தம் என்ற சொல்லுக்கிருக்கும் ஆற்றல் வேறெதற்கும் கிடையாது!)

இவைதாம் நோன்பின் அடிப்படை பின்னணியாகும்.

ஆனால், மேற்கண்ட ஏதுக்கள் எதுவும் இன்றில்லை. மேலும், அவர்கள் வாழும் பகுதிகள் யாவற்றிலும் அவர்களது தாயகப் பகுதியின் தட்பவெப்பம் நிலவவில்லை. அப்பகுதிக்கு அருகிலிருக்கும் நம் நாட்டில்கூட கோடையின் கொடுமையான பகுதி தற்போதுதான் தொடங்குகிறது. ஆனால், நோன்புகாலம் ஏற்கனவே முடிந்துவிட்டது! ஆண்டின் 9வது மாதம் என்று கணக்கிடுவதைவிட, நோன்புப் பெயரின் வேர்ப்பொருளான "வெப்பத்தைக்" கொண்டு அவர்கள் கணக்கிட்டிருந்தால், கொண்டாடும் காலம் அந்தந்த பகுதியில் நிலவும் பருவநிலைக்கேற்ப இருந்திருக்கும்.

oOo

அடுத்து, ஒரு சிறு கதை.

பாலைவனப் பகுதி. இரவு சூழத்தொடங்கிய நேரம். மேகங்களற்ற வானில் பிறைநிலவு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

"நான் இவ்வுடலல்ல" என்ற நூலறிவு மட்டுமுள்ள, திருமணமான, எதையும் சற்று மாற்றிக்காணும் கண்ணோக்கமுள்ள நபரொருவர் ஒரு மலைக்குகையில் வடக்கிருக்கிறார்.

அவரது முன்வினைப்பயன்களின் விளைவாக, ஒரு சமயத்தில், உடலின் கீழ் பகுதியிலிருந்து ஓர் உணர்வு திரண்டு, மேல் நோக்கி, வெகு விரைவாக வந்தது. அதை அவர் தெளிவாக உணர்கிறார். உடன், உடல்-உலக காட்சிகள் மறைவதைக் காண்கிறார். இது நாள்வரை தான் தேடிய தன்னை இப்போது தெளிவாக உணர்கிறார். சில விநாடிகள் கழிந்தன. அன்னை மாயை தனது வேலையைத் தொடங்குகிறார். அந்நிலையிலிருந்து அவரை வெளியே தள்ள முயற்சிக்கிறார். இவரும் வெளிப்பட்டுவிடுகிறார். மீண்டும் உடல்-உலக காட்சிகள் தோன்றின.

இப்போது, அவருக்கு கிடைத்த துய்ப்பைப் பற்றி ஆழமாக சிந்திக்கிறார். குறிப்பாக, உடலின் கீழிருந்து திரண்டு வந்த உணர்வைப் பற்றி வெகுவாக சிந்திக்கிறார். பொறி தட்டுகிறது!

உடலுறவின் இறுதியில் விந்து வெளியேறும்போது இதுபோன்ற உணர்வு தனக்கு கிடைத்தது நினைவுக்கு வந்தது. இப்போது தோன்றிய உணர்வு உடலின் கீழிருந்து மேலாக பயணித்தது. விந்து வெளியேறும்போது தோன்றிய உணர்வு குறிப்பகுதியில் தோன்றியது. ஆனால், அதன் பிறகு தனக்கு கிடைத்த துய்ப்பு, இப்போது கிடைத்திருக்கும் துய்ப்போடு ஒத்துப்போவதைக் கண்டார். "விந்து வெளியேறும்போது கிடைத்தது ஒரிரு விநாடி துய்ப்பு. இப்போது கிடைத்தது பல விநாடி துய்ப்பு. வேறுபாடு நேரத்தில்தான். மற்றபடி துய்ப்பு ஒன்றுதான்." என்ற உண்மையை உணர்ந்துகொண்டார்.

தனது முடிவு சரிதானா என்றொரு ஐயம் அவருள் எழுந்தது. வானைப் பார்த்தார். கருவானில் பிறைநிலவு ஒளிர்ந்து கொண்டிருந்தது. எதையும் மாற்றிக்காணும் கண்ணோக்கமுள்ள அவருக்கு, அந்த பிறைநிலவு ஓர் ஆண்குறித் திறப்புபோன்று தோன்றியது. ஏற்கனவே தனக்கு கிடைத்த துய்ப்பை விந்து வெளியேறுதலோடு ஒப்பிட்டுப்பார்த்தவருக்கு அக்காட்சி, "இறைவன் தனது கூற்றை ஆதரிக்கிறார்" எனத் தோன்றியது.

காட்சிகளை விலக்கி, அன்னை மாயை அவருக்கு உணர்த்திய அவரது உண்மையைப் பற்றி மேன்மேலும் சிந்தித்திருந்தால் விளைவுகள் வேறு வகையாக இருந்திருக்கும். ஆனால், அன்னையிடமிருந்து தப்புவது அவ்வளவு எளிதல்லவே! விந்து வெளியேற்றமே அவரை ஆட்கொண்டது. விளைவு...

ஆண்-பெண் குறிகளையும், கலவியையும் உணர்த்தும் வடிவில் கட்டிடங்களைக் கட்டினார். தன்னை பின்பற்றும் ஆண்களை ஆண்குறிகள் போன்றும், பெண்களை பெண்குறிகள் போன்றும் தோற்றமளிக்கச் செய்தார். ஒரு காட்சிக்கு தீர்வாக இன்னொரு காட்சியைப் பரிந்துரைத்தார்!

உலகில் இதுவரை தோன்றிய வேறெந்த மாமுனிவரின், மெய்யறிவாளரின், அருளாளரின், இறைதூதரின் மறைவு ஏற்படுத்தாத விளைவை இவரது மறைவு ஏற்படுத்தியது: ஆங்காங்கே பலர் தங்களை அடுத்த இறைதூதர்களாக அறிவித்துக் கொண்டனர்!!!

இறைவன் மிகப் பெரியவன்!!

oOo

"பிறை கண்டீரா?" எனில் "மெய்யறிவு பெற்றீரா?" என்று பொருள்.

கலவி -> பிறை போன்ற திறப்பிலிருந்து விந்து வெளியேற்றம் & உடன், உடலுணர்வு மறைதல் -> தன்னையுணர்தல் (மெய்யறிவு).

மிகச்சிறப்பான கலவியாக அமைந்தால், பெண்ணும் தன் உடல் உணர்வையிழந்து, தன்னை முழுமையாக உணரமுடியும்.

oOo

நம்மை நாமுணர செய்யவேண்டியதெல்லாம் எதுவும் செய்யாதிருத்தலே!! காலகாலமாக இருக்கும் இது போன்ற எளிய நுட்பங்களை விட்டுவிட்டு புணருதல், எங்கும் எதிலும் குறிகளை, விந்து வெளியேற்றத்தைக் காணுதல் என்பது...

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, May 2, 2022

திருக்குறள் #901: மனைவிழைவார் & வினைவிழையார் என்போர் யார்?


மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது

-- திருக்குறள் #901 (பெண்வழிச் சேறல்)

பொருள்: மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே. (மு.வ.)

இன்றைய உரையாசிரியர்கள், மனைவிழைவார் என்பதற்கு "சிற்றின்பத்தை பெரிதும் விரும்புவோர்" என்றும், வினைவிழையார் என்பதற்கு "பொருளீட்ட விரும்புவோர்" என்றும் பொருள் கொள்கின்றனர்.

இங்கு நுட்பமாகக் காணவேண்டிய சொற்கள்: விழைவார் & விழையார்.

🔸 விழைவார் - விரும்புவோர்
🔸 விழையார் - விரும்பாதவர் / பகைவர்

மனை என்ற சொல்லுக்கு மனைவி, வெற்றிடம் (காலி மனை), இல்வாழ்க்கை என பல பொருள்கள் உண்டு. மனைவி மூலம் மட்டுமே பெறவேண்டிய சிற்றின்பத்தைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்று எடுத்துக் கொள்ளலாம். (தற்காலத்தில், இல்வாழ்க்கை என்று பொருள் கொண்டாலும் தவறாகாது! 😊)

வினைவிழையார் - வினை + விழையார் - செயலை விரும்பாதவர். யார் அவர்கள்?

செயல் என்பது அசைவு. செயலை விரும்பாதவர் - அசைவை விரும்பாதவர். நேர்மறையாக்கினால், அசைவற்றதை விரும்புபவர். எது அசைவற்றது? உள்ளபொருளே அசைவற்றது. உள்ளபொருளில் நிலைபெற விரும்புபவர். அதாவது, நிலைபேற்றினை விரும்புபவர்!!

இப்போது பொருள் காண்போம்:

நிலைபேற்றினை விரும்புவோர் ஒதுக்கும் சிற்றின்பத்தை விரும்புவோர் மேன்மையடையமாட்டார்கள்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮