Showing posts with label அத்வைதம். Show all posts
Showing posts with label அத்வைதம். Show all posts

Thursday, October 11, 2018

மஹரிஷி வாய்மொழி: உழைப்பும், தன்னை அறிதலும்



ஒருவன் உழைக்கவேண்டியிருக்கற வரையில் தன்னை அறியும் முயற்சியையும் கைவிடக் கூடாது.

-- பகவான் ஸ்ரீரமணர், #மகரிஷி #வாய்மொழி 🌸🙏

இந்த அறிவுரையும், உலக வாழ்க்கையை விட்டு ஒதுங்க முடியாமலும், ஆன்ம வாழ்க்கையில் முழு மூச்சாக ஈடுபடமுடியாமலும், மெய்யறிவைப் பற்றியத் தெளிவு கிடைக்காமலும் போராடும் அன்பர்களுக்காக பகவான் அருளியது.

🌼🏵🌹🌻🌷🌺🌼

அவர் குறிப்பிடும் "தன்னை அறிதல்" என்பது நான் எனும் நமது தன்மையுணர்வை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதே (நமது கவன ஆற்றலை அத்தன்மையுணர்வில் கொண்டு போய் மீண்டும் மீண்டும் நிறுத்துவது என்றாலும் இதே பொருள் தான்).

"உழைக்கவேண்டியிருக்கற" என்ற சொற்களின் மூலம் பகவான் குறிப்பிடுவது என்னவெனில் "நாம் உழைக்கின்றோம்" என்ற எண்ணம் (தனியிருப்பு) இருக்கும் வரை என்பதையே. (1) தனியிருப்பு அழிந்த பிறகு உழைப்பு என்று எதுவும் கிடையாது. எல்லாம்...

🙏 அரவனின் முடிவில்லாப் பெருமகிழ்ச்சி கூத்துத்தான் (எல்லாம் இறைவனே)

🙏 பிணக்காட்டில் பேயோடு கூத்தன் தெவிட்டாமல் ஆடும் கூத்துத்தான் (இறைவனும் இறைவியும் ஆடும் கூத்து)

🙏 பெருமானின் பேய்த்தொழிலாட்டி நடத்தும் தொழில் தான் (இறைவன் எனும் அரங்கில் இறைவி ஆடும் ஆட்டம்)

(நம் அருளாளர்கள் 🙏 இவ்வண்டத்தின் இயக்கத்தை உணர்ந்த விதங்கள் 😊)

🌸 தானாம் ரமணேசன் அடி போற்றி 🌸

🌼🏵🌹🌻🌷🌺🌼

குறிப்பு:

1. #உழை என்ற சொல் உழு என்ற சொல்லில் இருந்து வருகிறது. உழு எனில் உட்செலுத்து. இன்று, ஏரை நிலத்தினுள் செலுத்துவது என்ற பொருள் கொண்டுள்ளோம். புழு என்பது உட்புகுந்து செல்லும் உயிரியாகும். முழுகு என்பது நீரினுள் உட்புகுதலாகும். நுழை என்பது ஒன்றினுள் செலுத்துவதாகும். மழை என்பது வளிமண்டலம் புகுந்து வரும் நீராகும்.

இவ்வரிசையில், உழை என்பதும் ஒன்றை மற்றொன்றினுள் செலுத்துவதாகவோ, ஒன்று மற்றொன்றினுள் நுழைவதாகவோ இருக்கலாம். ஆனால், சென்னை பல்கலையின் சொல்லகராதி கொடுக்கும் பொருள் "உட்படுத்து". உட்படுத்துதலோ, உட்புகுதலோ, உட்செலுத்துவதோ எதுவாக இருந்தாலும் இரண்டு பொருட்கள் சம்பந்தப்படுகின்றன. ஒன்று நாம். இன்னொன்று உலகம்.

நாம் என்பது நமது மனதை, நமது தனியிருப்பை, குறிக்கும். மனம் முடிவு செய்ததை உடல் செய்வதால், உடலைக் கருவியாக மட்டுமே கருதியுள்ளனர் நம் முன்னோர்கள். அடுத்தது, உலகம். நம் சமயத்தின் சில பிரிவுகளைத் தவிர மற்றவை உலகைக் கொடியது என்றே உருவகப்படுத்துகின்றன. அன்றே இந்நிலை எனில், இன்று? இப்படிப்பட்ட உலகினுள் புகும் போது தகுந்த எச்சரிக்கையுடன் புக வேண்டுமல்லவா? எனவே தான் பகவானின் அறிவுரை முக்கியத்துவம் பெறுகிறது! 👍

உழை எனில் நமது மனதை உலகின் பால் செலுத்துவது அல்லது உலகினுள் புகுத்துவது / நுழைப்பது அல்லது மாய உலகின் விதிகளுக்கு உட்படுத்துவது என்று எடுத்துக் கொள்ளலாம். எனில், உழைப்பு இல்லாத நேரத்தை நம் முன்னோர்கள் என்னவென்று அழைத்தார்கள்? ஓய்வு. ஒய்வு - ஒழிவு - அழிவு - அமைதி. மனமழிந்து கிடைக்கும் அமைதி.

(இவையெல்லாம், நம் அன்னைத் தமிழ் எவ்வளவு தூரம் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் மெய்யறிவு தாகம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதையும் காட்டுகின்றன. 😍)

இப்போது பகவானது அறிவுரையை சற்று மாற்றி வாசிப்போம்: ஒருவன் மனதை உலகின்பால் செலுத்த வேண்டியிருக்கிற வரையில், தனது தன்மையுணர்வை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

posted from Bloggeroid

Sunday, May 1, 2016

🔯 பானக நரசிம்மர் - மடக் மடக் டமக் டமக் 🔯


(தினமலர் - ஆன்மிகமலர் - சென்னை - 23/04/2016)

இது போன்ற அறிவுகெட்ட கதைகளால் தான் நம் சமயம் கேலிக்குள்ளாகிறது! 😠 பெரும்பாலான இந்துக்கள் சமயமூடர்களாகவும், சில சமயம் தாம் சார்ந்த சமயத்தை எள்ளி நகையாடும் கருங்காலிகளாகவும் இருப்பதற்கும் இந்தக் கதைகளும் இதைப் புனைந்த சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட மனிதர்களே காரணம்!!

💥 "பானகால நரசிம்மர்" - தெலுங்கில் பானகாலு என்பதையே தமிழில் பானகால என எழுதியிருக்கிறார்கள். சரியான தமிழ் பெயர் "பானக நரசிம்மர்". பெயர்களை சரியாக தமிழுக்கு மாற்றாமல் வெளியிடுவது என்பது விற்பனை யுக்திகளுள் ஒன்று. கடவுளை விற்பது பரங்கியரின் வேலை. 😝 இந்த ஈன வேலையை நாம் செய்யத் தேவையில்லை.

💥 "தல வரலாறு" என்பது பெரும்பாலும் "தல புருடா"! சில சமயம் ஏதாவது உண்மை அதில் மறைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும், "டுஷ்" (கண்டசாலாவின் இசை - தந்திரக் காட்சிகளுக்கு உபயோகப்படுத்துவது 😂) காட்சிகள் தான் நிறைந்திருக்கும். நம் மக்களை என்றோ சமயமூடர்களாக்கி விட்டனர். மூடர்களை வழிநடத்தவும் கவர்ந்திழுக்கவும் உபயோகப்படுவது டுஷ் விஷயங்களும் பயமுறுத்தல்களும் ("சாமி கண்ணை குத்திடும்") தான்! (மற்ற மதங்களிலும் இதே கதைதான்) 😂😂

💥 "பாதி மாயம். மீதி பிரசாதம்." என்பது திருநெல்வேலி அல்வா. 😛 சிலை "மடக் மடக்" என்று சப்தமிட்டாலும் சரி, "டமக் டமக்" என்று சப்தமிட்டாலும் சரி, இதற்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லை. இது சிலை செய்தவரின் திறமையையும், சிலையை ஸ்தாபித்தவரின் திறமையையும் காட்டுகிறது. சிலைக்கு கீழே பானகத்தை வெளியேற்ற / உறிஞ்ச வழி செய்திருப்பார்கள். மலைப்பகுதி என்பதால் சுலபமாக வெளியேறும் / உறிஞ்சப்படும்.

💥 "நரசிம்மம்" என்ற பெயரை பெரும்பாலும் நரன் + சிம்மம் என்று பிரித்து "பாதி மனிதன் + பாதி மிருகம்" என்று பொருள் கொள்வர். ஆனால், உண்மை அதுவல்ல.

ந + ர + சிம் + ஹ என்பதே சரியாக பிரிக்கும் முறை.

ந - இல்லை
ர - காமம் / பாசம் / பற்று
சிம் - பிளத்தல் / பலி கொள்ளுதல்
ஹ - சிவபெருமான் (பரமன்) (#)

"எல்லா பற்றுகளையும் விட்ட ஜீவனை, பரமன் தானாகவே ஆட்கொள்ளுவான்" என்பதே சரியான பொருள். இதையே தான் நரசிம்ம அவதாரக் கதை உணர்த்துகிறது. (##)

இப்படி ஞானமடைதல் நிகழ்வை ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு விதமாக விளக்கியிருப்பார்கள். உதாரணத்திற்கு சில....

💮 திருவரங்கத்தில் நரசிம்மத்திற்குப் பதிலாக, பெருமாளிடமிருந்து கிளம்பிய ஒரு பெண் சக்தி அசுரன் முரனைக் கொன்றது என்பார்கள். மூலவர் அரங்கநாதரின் சிலைக்கு கீழ் சமாதியாகியிருக்கும் சட்டைநாதரின் விளக்கமாக இது இருக்கலாம்.
💮 சைவத்தில் சிவபெருமானே வெளிப்படுவதாக வரும். திருக்கடவூரில் மார்க்கண்டேயருக்கு அருள, சிவபெருமானே வெளிப்பட்டு எமனை அழித்தார் (எமபயம் / உயிர்பயம் போக்கினார்) என்பார்கள். இந்த விளக்கம் மூலவர் அமிர்தகடேஸ்வரரின் கீழ் சமாதியாகியிருக்கும் மார்கண்டேய மகரிஷியின் விளக்கமாக இருக்கலாம்.
💮 கெளதம புத்தர் விளக்கும் சூன்ய / நிர்வாண நிலையும் இதுவே. 6 வருடங்கள் பல இடங்களில் சுற்றித் திரிந்து ஒன்றும் நடக்காமல், இறுதியில் கயாவில் 6 நாட்கள் தீவிரமாக ஆன்மவிசாரம் (தன்னாட்டம்) மேற்கொண்டு நிர்வாண நிலையை (ஞான நிலையை) அடைந்தார்.
💮 ஜென் பௌத்தத்தின் நிறுவனரான போதிதர்மரின் (இவர் தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்) போதனைகள் யாவும் அத்வைத ஞான நிலையைப் பற்றியே பேசுகின்றன.
💮 மேற்கில், "யேசுநாதர் இறந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தார்" என்பதும் இதுவே. அதாவது, மூன்று நாட்கள் தொடர்ந்த தீவிர சாதனையின் இறுதியில் தனித்துவம் இழந்து பரமனில் கலந்து விடுகிறார். அதாவது, ஜீவன் மரித்து சிவமாக வெளிப்படுகிறார்.

நரசிம்ம அவதாரம் ஆந்திராவில் உள்ள அகோபில மலைக்குகையில் நடந்ததாகக் கூறுவார்கள். அதாவது, அங்கே வசித்த மகான்கள் யாராவது இந்தக் கதையை புனைந்திருப்பார்கள். அல்லது, அங்கே ஞானமடைந்த மகான், தான் ஞானமடைந்த விதத்தை இப்படி விளக்கியிருப்பார். இந்த விளக்கம் / உருவகம் அந்த சுற்று வட்டாரத்தில் பிரபலமாயிருக்கும். அதனால் தான் ஆந்திராவில் நரசிம்மர் கோயில்கள் அதிகம். பின்னர், ஏனைய இடங்களுக்கு பரவியிருக்கும்.

ஒரு கோயிலுக்கு செல்கிறோம் என்றால் அங்கு சமாதியாகியிருக்கும் மகானை வணங்க அல்லது அங்கேயுள்ள இறைவனின் பெயர் / சிலை, கோயிலின் அமைப்பு வழியாக நம் முன்னோர் நமக்கு சொல்ல வந்த உண்மைகளைப் பற்றி சிந்திக்க என்பன போன்ற குறிக்கோள்களுடன் சென்றால் நமக்கு லாபம். அதை விட்டு "மடக் மடக்" சப்தம், சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது, தங்க கோயில், வைர அங்கி, மிளகாய் யாகம் போன்ற விற்பனை யுக்திகளுக்காக செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் இல்லை.

கோயிலுக்குச் செல்வது என்பது நம் உடலேக் கோயில் என்று உணர. இறைவனை வணங்குவது என்பது நம்முள் உறையும் இறைவனை உணர. 👍

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவதே. கடவுளை அறிவது என்பது கடவுளாய் இருத்தலே. கடவுளாய் இருத்தல் என்பது கடவுளாய் ஆதலே." -- பகவான் ஸ்ரீரமணர் 🌞

🌸🌹🍀🍁🌺🌻🌼

# - இங்கே, சிவன் எப்படி வந்தார்? "நரசிம்மர் சிவாம்சம் பொருந்தியவர்", "இவரை வணங்க ஏற்ற நேரம் சிவனுக்குரிய பிரதோஷ காலம்" என்பன போன்ற செய்திகளை நினைவு கூர்ந்து பாருங்கள். இவர் யார் என்று புரியும். எப்படி மவுனராகம் கதையை சுட்டு சில மாற்றங்களை செய்து ராஜா ராணி என்று வெளியிட்டு காசு பார்த்தார்களோ, அப்படியே சைவ / அத்வைத உண்மைகளை எடுத்துக் கொண்டு சில தகிடுதத்தங்களை சேர்த்து வைணம் / விசிஷ்டத்வைதம் என்று காசு பார்த்துவிட்டார்கள். ஞாபகமிருக்கட்டும், நாமம் என்பது ஏமாற்று வேலைக்கு சமம். "பட்ட போட்டுட்டாங்களா?" என்று யாரும் கேட்பதில்லை. "நாமம் போட்டுட்டாங்களா?" அல்லது "நாமம் போட்டுட்டியா?" என்று தான் கேட்பர். 👊

🌸🌹🍀🍁🌺🌻🌼

## - நரசிம்ம அவதார நிகழ்வு - ஜீவன் சிவமாக மாறும் ஞானமடைதல் நிகழ்ச்சியாகும்.

⚡ இரண்யகசிபு - "நான் இவ்வுடல்" என்ற நுண்ணிய அகந்தை.

⚡ பிரஹலாதன் - அகந்தையிலிருந்து பிறந்த ஜீவன். இங்கே, கூர்ந்த அறிவும், தெளிந்த மனதும், பொறுமையும், நம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதாவது, அறிவு முதிர்ந்த ஜீவனைக் குறிக்கும்.

⚡ நரசிம்மம் - தொடர்ந்த முயற்சியில் இருக்கும் ஜீவன், ஒரு நிலையில் தன் இயலாமையை உணர்ந்து முயலாமல் நிற்கும். இப்படி நிற்பதே சரணாகதி எனப்படும். இவ்வாறு நின்ற ஜீவனை, பரமன் - சிங்கம் போல் - பாய்ந்து வந்து, மீதமிருக்கும் அகந்தையை அழித்து ஆட்கொள்ளும். அதாவது, உள்ளிருந்து வெளிவரும் தெளிவினால், அறிவு தெளிவடையும். "நான் இவ்வுடல்" என்ற அகந்தை அழிந்து "நான் நானாக" நிற்கும். இந்நிகழ்வுக்கு ஞானமடைதல் என்று பெயர்!!

இங்கே பகவான் ஸ்ரீரமணரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்:

"ஞானமடையும் போது, ஞானம் சிறிது சிறிதாக கிடைக்குமா அல்லது ஒரேடியாக கிடைக்குமா?" என்று ஒர் அன்பர் கேட்க, அதற்கு பகவான் பதிலாக கேட்ட கேள்வி: "இருட்டறையில் விளக்கேற்றும் போது, இருள் மெல்ல மெல்ல விலகுமா அல்லது ஒரேடியாக விலகுமா?".

வெளிச்சம் கண்ணிமைக்கும் நேரத்தில் அறையெங்கும் பாய்ந்து இருட்டை போக்கும். அங்ஙனமே, உள்ளிருந்து சிங்கம் போல் பாய்ந்து வெளிவரும் தெளிவு, "நான் இவ்வுடல்" என்ற அகந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து, ஞானத்தைக் கொடுக்கும்.

இது விசிஷ்டத்வைதக் கதை என்பதால், ஞானமடைந்த பிறகும், பரமனும் (நரசிம்மம்) ஜீவனும் (பிரஹலாதன்) தனித்தனியாகவே இருக்கின்றன. இதுவே, அத்தைவதக் கதையானால் அகந்தை அழிந்து ஜீவன் சிவனாகியிருக்கும். இதை, பகவான் ஸ்ரீரமணரின் பாடல் வரிகள் விளக்கும்:

இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர் உந்தீபற!
உபாதி உணர்வே வேறு உந்தீபற!!

posted from Bloggeroid