Showing posts with label இரணிய சம்ஹாரம். Show all posts
Showing posts with label இரணிய சம்ஹாரம். Show all posts

Tuesday, May 28, 2019

சிங்கப்பெருமாள் பிறந்த தினம் - ஆதிசங்கரரின் கராவலம்ப தோத்திரம்

சென்ற வைகாசி வளர்பிறை பதினான்மையன்று (சதுர்த்தசி) சிங்கப்பெருமாளின் பிறந்த தினம் வைணவர்களால் கொண்டாடப்பட்டது. (பெரும்பாலும் சுவாதி நாள்மீனும் உடன் வரும்). அச்சமயம் சில இடுகைகளும், சில காணொளிகளும் எனக்கு வந்து சேர்ந்தன. அதிலொரு இடுகையில் சிங்கப்பெருமாளைப் புகழ்ந்து (அல்லது வேண்டி) #ஆதிசங்கரர் பாடிய #கராவலம்ப #தோத்திரம் (கை தூக்கி விடு / கை கொடு என்று வேண்டுதல்) பிறந்த வரலாற்றை எழுதியிருந்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி:

... ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த  காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு #கபாலிகன் அவரைக் காளிக்கு நரபலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நரபலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை). அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார். தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த கபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார். அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது வரலாறு. ...

👊🏼 தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் -  இவர்களாகவே ஆதிசங்கரரை சிங்கப்பெருமாளின் பத்திமன் என்று எழுதிக்கொண்டுவிட்டார்கள்!! 😃 பத்திமையும் மெய்யறிவும் வேறுவேறல்ல என்று இலக்கணம் எழுதியவர், வாழ்நாள் முழுவதும் "உருவமற்ற, செயலற்ற, குணங்களற்ற பரம்பொருள் ஒன்றே" என்ற பேருண்மையை நிலைநாட்டப் போராடியவர் ஒர் உருவத்திடம் பத்திமை கொண்டாராம்! விட்டால், அடுத்த பதிப்பில், சங்கரர் நாமத்தை போட்டுக் கொண்டுப் பாடினார் என்றும் எழுதுவார்கள்!! 😂

👊🏼 நரசிம்மர் பத்மபாதருக்குள் ஆவேசித்து, அந்த கபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார் - அவென்ஜர்ஸ் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவரை வைத்து எழுதியிருப்பார்கள் போலிருக்கிறது!! 😁 ஏற்கனவே ஒவ்வொரு சீவனுள்ளும் பரம்பொருள் உள்ளது (இந்த கண்ணோட்டம், மெய்யறிவு கிடைத்த பின், பரம்பொருளினுள் தான் அனைத்தும் உள்ளது என்ற மாறும்). இன்னொரு முறை பரம்பொருள் எப்படி நுழையும்? இப்படி நுழைய முடியும் என்று எடுத்துக் கொண்டால், ஏன் பத்மபாதருக்குள் நுழையவேண்டும்? கபாலிகனுக்குள் நுழைந்து அவனை சரி செய்திருக்கலாமே! 😎

(ஆவேசித்தல் - ஆ+வேசம் - ஆ+வேடம் - ஒரு சீவனின் உரு கொள்ளுதல்)

நாம் உயிரினும் மேலாக கருதும் ஒரு நபருக்கு கடுந்துன்பம் நேரப்போவதை உணர்ந்தால் / கண்டால், பாய்ந்தோடிச் சென்று எப்பாடுபட்டாவது அவரைக் காப்போம். துன்பத்தை போக்கிய பின்னரும், நாம் நமதியல்பு நிலைக்கு திரும்ப சற்று நேரமாகும். அச்சமயம், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை இளைப்பாற வைக்க முயற்சிப்பார்கள். இது போன்றொரு நிகழ்வு தான் பத்மபாதருக்கு நடந்திருக்கும். தனது மெய்யாசிரியருக்கு நேரவிருக்கும் இன்னலை உணர்ந்தவுடன் / கண்டவுடன் பாய்ந்தோடிச் சென்று கபாலிகனைக் கொன்றிருக்க வேண்டும். கொன்ற பின்னரும், தனதியல்பு நிலைக்குத் திரும்பாமல் இருந்தவரை, தவம் கலைந்து எழுந்த ஆதிசங்கரரும், மற்ற மாணவர்களும் இளைப்பாற செய்திருக்க வேண்டும்.

ஆதிசங்கரர் செயற்கரிய செயல்களை செய்தவர் என்பதாலும், அவர் காலம் முடிந்து பல நூற்றாண்டுகள் கடந்து விட்டபடியாலும் நிகழ்வுகள் கற்பனைகளோடு கலந்துவிட்டன. "பத்மபாதர் சிங்கமாக உருமாறினார்" என்ற ஆரம்ப நிலை 🤒 முதல், "பரம்பொருள் நரசிம்மமாக பத்மபாதருக்குள் நுழைந்து" என்று அவென்ஜர்ஸ் நிலை 🥴 வரை பல படிகளைத் தாண்டி விட்டது.  இவற்றுடன், ஒரு கூட்டத்தின் "தனது பத்திமனான" என்ற கைங்கர்யம் வேறு சேர்ந்துவிட்டது. 🤪

💥💥💥💥💥

ஆன்மாவின் போதமருளும் ஆசானாம் சங்கரன்
அவ்வான்மாவுக்கு அன்னியனாவனோ - அவ்வான்மாவாக
என்னகத்தே இருந்து இன்று தமிழ் சொல்வானும்
அன்னவனன்றி மற்றார்

ஆதிசங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய #ஆத்மபோதம் என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை பகவான் ஸ்ரீரமணருக்கு அனுப்பியிருந்தார் ஒரு முகம்மதிய பத்திமர். அதைக் கண்ணுற்ற பகவான், ஓர் இரவு முழுவதும் கண் விழித்திருந்து, ஒரு புதிய தமிழ் மொழிபெயர்ப்பை எழுதினார். அந்த மொழி பெயர்ப்பின் மங்கல செய்யுளே மேலுள்ள பாடல்.

(இந்தச் செய்யுளில் ஆதிசங்கரர் யார் என்பதை மிகத்தெளிவாக காண்பிக்கிறார் பகவான்)

🌸🏵️🌹🌻🌷🌼💮

#சிங்கப்பெருமாள் என்பவர் யார் அல்லது எது என்று தெரிந்து கொண்டால் எல்லா குழப்பங்களும் தீரும்:

சீவனாகிய நம்மால் ஓரளவிற்கு மேல் நமக்குள் ஆழ முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் வெளிமுகமாகவே செல்ல எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை, திரும்ப திரும்ப நான் என்னும் நமது தன்மையுணர்வின் மேல் கொண்டு வந்து வைப்பது மட்டுமே. ஒரு சமயத்தில் நமது இயலாமையை நாம் உணர்ந்து நமது முயற்சியை கைவிடுவோம் (இதுவே #சரணாகதி எனப்படும்). அச்சமயம் உள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நமக்கு ஒரு புதிய தெளிவைக் (அறிவு என்றும் கொள்ளலாம்) கொடுக்கும். இந்த ஆற்றலே #காலசம்ஹார #மூர்த்தி ஆவார் (இந்த காலசம்ஹாரம் வைணவத்தில் #ஆணவ #சம்ஹாரம் - #இரணிய #வதம் -  என்றும், காலசம்ஹார மூர்த்தி #நரசிம்மர் என்றும் மாறிவிட்டது.) கிடைத்த புதிய தெளிவே #தகப்பன் #சுவாமி (#சுப்ரமணியர்) எனப்படும் (சாக்தத்தில் #அன்னபூரணி என்று அழைக்கப்படுவதும் இதே தெளிவு தான்). இந்த தெளிவால், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு (மாயை) அழிந்துவிடும். #காலசம்ஹாரம் - காலனை உதைப்பது என்பது இதுவே!! 

(உள், வெளி, ஆழ்ந்து, வெளிப்பட்டு என்பதெல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்தியுள்ள சொற்கள். உண்மையில் இருப்பது ஒரு பரம்பொருளே. காணப்படும் அனைத்து அதன் வெளிப்பாடே. நாம் இறைவனை தேடுவதென்பது: "ராமன் என்பவன் தன்னை ராமன் என்று உணர கண்ணாடி வேண்டுமோ?", #பகவான் #ஸ்ரீரமணர் 😀)

Monday, May 6, 2019

திருக்கடவூர் - எமபயம் போக்கும் தலம்!! 🌺🙏🏼

#திருக்கடவூர் - மார்க்கண்டேயருக்கு அருளிய தலம் - எமபயம் போக்கும் தலம் - #காலசம்ஹாரமூர்த்தி வெளிப்பட்ட தலம்

🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺


🔆 யம (Yama) என்பதை மாற்றிப் படித்தால் மாய (Maya) என்று வரும். அதாவது, மாயை - இல்லாதது (#பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼 அருளியது). யமனின் வாகனம் எருமை மாடு - சோம்பலைக் குறிக்கும். நம்முள் இருக்கும் இமைப்பொழுதும் நீங்காதான் தாள்களை இமைப்பொழுதும் நீங்காமல் பற்ற வேண்டும். ஒரு கணம் தவறினாலும் மாயையின் பிடிக்குள் போய்விடுவோம். ஆக, இறப்பு என்பது மெய்யிலிருந்து பொய்க்குள் போய் விழுவது! மற்றும், பிறப்பு என்பது பொய்யிலிருந்து மெய்க்கு வந்து சேருவது!!


"#மெய்யறிவு (#ஞானம்) கிடைத்த பிறகு என்னவாயிற்று?", என்று அன்பர் ஒருவர் கேட்டதற்கு, "அத்தோடு உயிர் பயம் போயிற்று", என்று பதிலளித்தார் பகவான் ஸ்ரீ ரமணர். ஆக, "எம பயம் போயிற்று" என்பதன் பொருள் "மெய்ஞானம் கிடைத்தது" என்பதாகும்! "எமபயம் போக்கும் தலம்" எனில் "மெய்ஞானம் அருளும் தலம்" என்பதாகும்!!


🔆 "#யமன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறைவனைப் பணிந்து நின்றார்" என்பதன் பொருள் - மெய்யறிவு தோன்றும் கணம் மாயக் காட்சிகள் மறைந்து போகும். பின்னர், மீண்டும் தோன்றும். மெய்யறிவு பெறுவதற்கு முன் மாயை என்பது அரைகுறை வெளிச்சத்தில் தெரியும் பாம்பு போன்றது; பெற்ற பின்  நல்ல வெளிச்சத்தில் தெரியும் கயிறு போன்றது (மெய்யறிவே வெளிச்சம்). மெய்யறிவு பெற்ற பின்னரும் மாயக் காட்சிகள் தொடரும். ஆனால், மெய்யறிவாளரை ஒன்றும் செய்யாது. யமன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறைவனைப் பணிந்து நிற்பதன் பொருள் இதுவே!!


🔆 மூலவரின் பெயர் திரு #அமிர்தகடேச்சுவரர். கடம் என்றால் குடம். இங்கு குடம் உடல் என பொருள்படும்.. அமிர்தம் என்பது இங்கு அழிவற்றது / இறப்பற்றது என பொருள்படும். இணைத்துப் பார்க்கும் போது "அழிவற்ற உடலை உடையவர்" என பொருள் வரும். "பிறப்பிலியான சிவப்பரம்பொருளுக்கு உடலா?", என்ற கேள்வி எழலாம். பொருள் நிலையைத் தாண்டிய இறையை (பரம்), பொருள் என்ற சொல்லோடு இணைத்து பரம்பொருள் என்றழைப்பது போல, தோன்றி மறையும் நுண்ணுயிரியின் உடல் முதல் விண்மீன் வரை அனைத்திற்கும் இடம் அருளும் அண்டத்தை இறைவனின் உடலாகக் கருதி இவ்வாறு பெயரிட்டிருக்கிறார்கள்.


🔆 #காலசம்ஹார #மூர்த்தி - தன்னை வணங்கிய மார்க்கண்டேயனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காலனை (யமனை) உதைத்து தள்ளியவர் என்று சுவைபட ஒரு பேருண்மையை பதிவு செய்திருக்கிறார்கள்.


சீவனாகிய நம்மால் ஓரளவிற்கு மேல் நமக்குள் ஆழ முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் வெளிமுகமாகவே செல்ல எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை, திரும்ப திரும்ப நான் என்னும் நமது தன்மையுணர்வின் மேல் கொண்டு வந்து வைப்பது மட்டுமே. ஒரு சமயத்தில் நமது இயலாமையை நாம் உணர்ந்து நமது முயற்சியை கைவிடுவோம் (இதுவே #சரணாகதி எனப்படும்). அச்சமயம் உள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நமக்கு ஒரு புதிய தெளிவைக் (அறிவு என்றும் கொள்ளலாம்) கொடுக்கும். இந்த ஆற்றலே காலசம்ஹார மூர்த்தி ஆவார் (இந்த காலசம்ஹாரம் வைணவத்தில் #ஆணவ #சம்ஹாரம் - #இரணிய #வதம் -  என்றும், காலசம்ஹார மூர்த்தி #நரசிம்மர் என்றும் மாறிவிட்டது.) கிடைத்த புதிய தெளிவே #தகப்பன் #சுவாமி (#சுப்ரமணியர்) எனப்படும் (சாக்தத்தில் #அன்னபூரணி என்று அழைக்கப்படுவதும் இதே தெளிவு தான்). இந்த தெளிவால், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு (மாயை) அழிந்துவிடும். காலசம்ஹாரம் - காலனை உதைப்பது என்பது இதுவே!! (உள், வெளி, ஆழ்ந்து, வெளிப்பட்டு என்பதெல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்தியுள்ள சொற்கள். உண்மையில் இருப்பது ஒரு பரம்பொருளே. காணப்படும் அனைத்து அதன் வெளிப்பாடே. நாம் இறைவனை தேடுவதென்பது: "ராமன் என்பவன் தன்னை ராமன் என்று உணர கண்ணாடி வேண்டுமோ?", பகவான் ஸ்ரீ ரமணர் 😀)


🔆 என்றும் 16 பெற்ற #மார்க்கண்டேயர் - இதை படித்ததும், மார்க்கண்டேயர் வரம் பெற்ற பிறகு 16 வயது இளைஞனாகவே வாழ்ந்தார் என்று நினைத்துக் கொள்வோம்!! இது தவறு. 😁


பகவான் ஸ்ரீரமணர் தனது 16 வயதில், மதுரையில் அவரது சிறிய தந்தையின் வீட்டில் தங்கியிருந்த போது மெய்யறிவு பெற்றார். பிற்காலத்தில் அவரது ஆசிரமத்திற்கு வந்த ஒர் அன்பர், "இத்தனை வருடங்களில் தங்களது (மெய்யறிவு) நிலையில் ஏதேனும் மாற்றமுண்டா?" என்று கேட்டதற்கு, பகவான், "இல்லை. அதே நிலைதான் இன்றும். சிறிதும் மாற்றமில்லை." என்று பதிலளித்தார்.


இது தான் "என்றும் 16" என்பதின் பொருள்!! மார்க்கண்டேயர் தனது 16 வயதில் மெய்யறிவு பெற்று மார்க்கண்டேய மகரிஷியாக 🌺🙏🏼 உயர்ந்திருக்கிறார். பின்னர், அந்த நிலையிலேயே வாழ்ந்து, இறுதியில் திருக்கடவூரில் திரு அமிர்தகடேச்சுவர அடையாளத்தின் கீழ்  சமாதியாகியிருக்கிறார். மெய்யறிவு பற்றிய அவரது அறிவுரைகளை அல்லது மெய்யறிவுப் பாதையில் அவருக்கு கிடைத்த பட்டறிவை தல வரலாறு, திருவிழாக்கள், இறை உருவங்கள் மற்றும் இறை பெயர்கள் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!! 🙏🏼


🌸🏵️🌻🌷🌼🌹💮


தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி

விலக்குவா ரிலாமை யாலே விளக்கத்திற் கோழி போன்றேன்

மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்து

கலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னீரே


-- அப்பர் 🌺🙏🏼 தேவாரம் 4.31.5


பொருள்: கடவூர் வீரட்டனீரே! நாணத்தக்க செயல்களையே செய்து வாழ்நாளைக் கடத்தி, ஏற்ற செயல் எதுவும் செய்யாமல், தவறு செய்வதைத் தடுத்து நல்வழிப்படுத்துவாரும் ஒருவரும் இல்லாமையால், செஞ்சுடர் விளக்கத்தில் தானே கூவித் தானே அடங்கும் கோழியைப் போல உள்ளேன். என் மனத்தினுள்ளே ஐம்பொறிகளும் கலக்கத்தைத் தருகின்றன. யமனுடைய ஏவலர்கள் வந்து கலக்குதலால் யான் யம பயத்தாற் கலங்குகின்றேன்.


🌸🏵️🌻🌷🌼🌹💮


குறிப்புகள்:


1. இணைப்பு படம்:  சென்ற 13/04/19 சனிக்கிழமையன்று திருக்கடவூரில் நடந்த யம சம்ஹார விழாவின் போது எடுக்கப்பட்ட படம். திரு சிவ ஏ விஜய் பெரியசுவாமி அவர்களின் முகநூலில் பக்கத்திலிருந்து எடுத்தேன்.


2. திருக்கடவூர் பழம்பெரும் தலமாக இருந்தாலும், எண்ணற்ற அருளாளர்களை ஈர்த்த தலமாக இருந்தாலும், மக்கள் வரவு அதிமாக இருப்பதால், அமைதியும் தனிமையும் வேண்டுவோர் அருகிலுள்ள இன்னொரு தேவாரப் பாடல் பெற்ற தலமான #திருக்கடவூர் #மயானம் செல்லலாம். என்ன ஓர் அமைதி!! 😍 நம் தனித்துவத்தை இழக்க - நான் என்னும் வடிவில் ஒளிரும் இறைவனின் திருப்பாதத்தை பற்றிக் கொள்ள _ தவமியற்ற சிறந்த தலம்!! 😌