Thursday, September 20, 2018

சுவாமியை நன்றாகப் பார்த்தீரா? 👎 நன்றாக தரிசனம் ஆயிற்றா? 👎 இறையுணர்வு பெற்றீரா? 👍

சென்ற இடுகையில், "சுவாமியை நன்றாகப் பார்த்தீரா?", "நன்றாக தரிசனம் ஆயிற்றா?" போன்ற கேள்விகளின் சரியான உட்பொருள், "இறையுணர்வு பெற்றீரா?" என்பது தான் என்று எழுதியிருந்தேன். அதன் விரிவே இந்த இடுகை.

🌸🌻🌷🌺🌼

உடையாரை வணங்கும் போது தானாகவே நமது கண்கள் மூடும். இது இயற்கையானதே. பலர் இன்று செயற்கையாக கண்களை திறந்து வைத்திருக்க முயலுகின்றனர். சில ஆன்மிகவாதிகளும் கண்களைத் திறந்து வைக்கச் சொல்லி அறிவுருத்துகின்றனர். இது தவறு. இத்தவறு இறைவன், ஆன்மா, வணங்குதல் பற்றிய சரியான புரிதல் இல்லாமையால் ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலைக்கென்றே ஒரு ஆன்மிக கதையை நம் பெரியவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அக்கதை...

கம்சனின் அழிவுக்குப் பின்னர், கண்ணபிரான் மதுரா செல்லத் தயாராகிறார். பிரிவுத் துயரம் தாங்காமல் அவரது வளர்ப்பு அன்னை யசோதை கேட்கிறார், "இவ்வளவு காலமும் உன்னோடு வாழ்ந்து விட்டு இனி உன்னை விட்டுப் பிரிந்து வாழ்வது எங்ஙனம் சாத்தியம்?". அன்னையின் நிலையைப் புரிந்து கொண்ட கண்ணபிரான் பதிலளிக்கிறார், "அம்மா, நீ என்னை விட்டுப் பிரிவதென்பது இயலாத காரியம். உங்களது கண்களை மூடிக் கொண்டுப் பாருங்கள். நான் காட்சியளிப்பேன்.". யசோதையும் கண்களை மூடிப் பார்த்து விட்டு, "ஆம் கண்ணா. நீ காட்சியளிக்கிறாய். நீ என்னை விட்டுப் பிரியவில்லை. நான் தான் தவறாக எண்ணிவிட்டேன்.", என்று பதிலளித்தார்.

யசோதை கண்களை மூடியவுடன் கண்ணபிரான் அவரது மனக்கண்ணில் தெரிந்தார் என்று எண்ணிக் கொள்வோம். 😁 சிலர், கண்களை மூடியவுடன் தோன்றும் கருமை நிறமே கண்ணபிரான் என்று நினைத்துக் கொள்வர். இதுவும் தவறே. தோன்றி மறைவது இறையாகாது.

காட்சிகள் மறையும் போது காணும் நாம், நம்மை நாமாக உணர முடியும் என்பதையே இக்கதை காட்டுகிறது. பகவான் ஸ்ரீரமணரும், "காணும் காட்சிகள் யாவும் பொய்யே. காண்பவனே மெய்." என்கிறார். இத்தனை காலமும் காட்சிகளுடன் (மனதில் தோன்றும் எண்ணம் முதல் வெளிப்புறத்தில் காணும் காட்சிகள் வரை அனைத்துமே காட்சிகள் தான்) நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டதால், அவையில்லாமல் இருப்பது கடினம். அவற்றிலிருந்து நம்மை பிரித்தறிவது இன்னும் கடினம். இதற்காகத் தான் வெவ்வேறு தலங்களில் வாழ்ந்த மகான்கள், தங்களை நாடி வந்தவர்கள் ஒரு கணமாவது தங்களை தாங்களாக உணரவேண்டும் (நிலைபேறு, ஞானம், மெய்யறிவு என்பதெல்லாமும் இதுவே) என்பதற்காக சில உத்திகளை உருவாக்கினார்கள். அந்த ஒரு சில கண உணர்வு அவர்களது கண்ணோட்டத்தை மாற்றிவிடும் என்பதால். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:

🔥 கங்கையில் மூழ்குவது

மிக எளிமையான மற்றும் சுலபமான உத்தியிது. பாமரர் முதல் படித்தோர் வரை அனைவருக்கும் ஏற்றது. இதனை பயன்படுத்தி எண்ணில்லா மனிதர்கள் நிலைபேறு பெற்றுள்ளனர். ஆகையால் தான், இத்தலமும் இந்த உத்தியினை வழங்கியருளிய திருநந்திதேவரும் 🌸🙏(காசி ஸ்ரீவிஸ்வநாதர் என்னும் அடையாளத்தின் கீழ் சமாதியில் இருப்பவர்) நமது சமயத்தில் இன்று வரை பெரிதும் புகழப்படுகின்றனர்.

புறஅறிவியல் அடிப்படையில் பார்த்தோமானால், கங்கை நீரில் கரைந்துள்ள அபரிமிதமான உயிர்வளியும், வசிக்கும் கோடான கோடி பாக்டீரியா உண்ணிகளும், அந்நீரில் மூழ்கும் போது உடலுக்கு அளவிலா நன்மையைத் தருகிறது. #அகஅறிவியல் (ஆன்மிகம்) அடிப்படையில் பார்த்தோமானால், கங்கையில் மூழ்கும் போது, அந்நீரின் குளிர்ச்சி ஏற்படுத்தும் அதிர்ச்சியின் விளைவால், மூழ்கிய முதல் சில கணங்களுக்கு நாம் நம்முடலில் இருந்து (நாம் உடல் என்னும் எண்ணத்திலிருந்து) தனிப்படுவோம்.  எவ்வளவு படித்தாலும், எவ்வளவு கேட்டாலும் அவ்வளவு எளிதில் உணர முடியாத மெய்பொருளை (நம்மை), மணிவாசகப் பெருமான் பிடித்தது போல், சிக்கெனப் பிடித்துக் கொள்ளலாம். (1) "ஒரு முறை உணர்ந்தால் கூட போதும். பின்னர், அந்நிலையின் மீது அதீத ஈர்ப்பு உண்டாகி மீண்டும் மீண்டும் அந்நிலைக்குத் திரும்பச் செல்வோம்.", என்று அருளியுள்ளார் பகவான் ஸ்ரீரமணர். 🌸🙏

🔥 சிதம்பர மறைபொருளைக் (ரகசியத்தைக்) காணுதல்

இந்த உத்தியும் மிகவும் புகழ் பெற்றது. இதை உலகுக்கு வழங்கியது திருமூலர். 🌸🙏 இவர் மற்றும் இவரது வழி வந்த சில மகான்களின் சமாதித் தொகுப்பே தில்லை திருச்சிற்றம்பலம். பாரதத்தில் உருவாக்கப்பட்ட இறையுருவங்களில் மிகச்சிறந்ததான ஸ்ரீநடராஜப் பெருமான் இத்தொகுப்பைக் குறிக்கும் அடையாளமாவார். கற்றுத் தெளிய திருமந்திரம் தந்து, சிந்தித்து பெருமகிழ்ச்சி கொள ஆடல்வல்லானை அடையாளமாகக் கொண்ட திருமூலர், சிதம்பர மறைபொருள் வழியாக எவ்வாறு நமக்கு நிலைபேறு அளிக்கிறார் என்று பார்ப்போம்.

சிதம்பர மறைபொருள் என்பது ஆடல்வல்லானின் வலப்புறமுள்ள சுவற்றில், கருமை நிறத்தில் இருக்கும் ஒரு சிறு பகுதி. இப்பகுதிக்கு தங்க வில்வயிலை மாலை அணிவித்திருப்பர். பட்டுத்துணியால் மூடியிருப்பர். ஒவ்வொரு நாளும் நடக்கும் ஆறுகால வழிபாட்டின் போது, இப்பகுதியின் திரை சடாரென விலக்கப்பட்டு, அகல்ஒளி காட்டுவர். பின், திரையை மீண்டும் மூடுவர். உருவங்களைக் கண்டே பழக்கப்பட்ட நம் மனதிற்கு, உருவமற்ற இக்காட்சி தடுமாற்றத்தை / குழப்பத்தை / அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதன் விளைவாக நம் மனம் (நாம் இவ்வுடல் என்னும் தனியிருப்பு) நிலை குலைந்து தனது மூலத்தில் (தான் என்னும் இறையில்) ஒடுங்கும் (நிலை பெறும் - நிலைபேறு). இவ்வாறு ஒடுங்குதலே சிதம்பர மறைபொருளைக் காணுதல் எனப்படும். இவ்வனைத்தும் சில கணங்களுக்குள் நடந்தேறும். கூர்மையான அறிவு மற்றும் சரியான பயிற்சி இல்லையெனில், நமது தனியிருப்பு - மனம் - மீண்டும் வெளிப்பட்டு விடும்.

மேற்சொன்ன பட்டறிவும் (அனுபவமும்) புதிதாக வருபவர்களுக்குத்தான் கிடைக்கும். அடுத்தடுத்து வருபவர்களுக்கு அதிர்ச்சி / தடுமாற்றம் / குழப்பம் என எதுவும் ஏற்படாது. ஏனெனில், அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்து விடுவதால். இது போன்ற சூழ்நிலையில், முதல் முறை நமக்கு கிடைத்தப் பட்டறிவை மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து மன ஒடுக்கத்தைப் பெற முயற்சிக்கலாம். இல்லையெனில், திருமூல நாயனாரின் திருமந்திரம், கூத்தப் பெருமானின் திருவுருவம், மேற்சொன்ன சிதம்பர மறைபொருள் விளக்கம் என நமக்குப் பிடித்த / ஏற்ற ஒன்றைப் பற்றி சிந்திக்கலாம்.

🔥 அண்ணாமலையாரை நினைக்க விடுதலை (முக்தி)

இந்தச் சொற்றொடர் "அண்ணாமலையில் சமாதியான #இடைக்காட்டுச் #சித்தர் 🌸🙏 அருளிய உத்தியை நினைக்க விடுதலை" என்று விரியும். சித்தப் பெருமான் வழங்கிய இந்த உத்தி நிலைபேறு வழங்கவல்ல உத்திகளுள் மிகமிக எளிதும் & மிகமிக உயர்ந்ததும் ஆகும். கங்கையில் மூழ்க கங்கை வேண்டும். சிதம்பர மறைபொருளைக் காண தில்லைக்குச் செல்லவேண்டும். ஆனால், எங்கும் செல்லாமல், யார் உதவியும் இல்லாமல் நம் சொந்த முயற்சியால், இருந்த இடத்திலிருந்து, இருக்கும் நிலையிலேயே நிலைபேறு பெற்றுத் தரவல்லது இந்த உத்தி!! 👌🙏

உடல், உலகம் என வெளிமுகமாகச் செல்லும் போது, மனமானது பெருகும்; மற்றும், தன்னையும் மற்றவற்றையும் தனித்தனியாக உணரும். அதே மனம், தான் எனும் தனது மூலத்தை நோக்கி உள்முகமாக திரும்பும் போது (தான் என்ற தன்மையுணர்வை நாடும் போது) அதில் ஒடுங்கிவிடும். "மூலத்தை நோக்கி திரும்புதல்", "தன்மையுணர்வை நாடுதல்" என்பதெல்லாம் என்னவெனில் மூலத்தை / தன்மையுணர்வை / சிவத்தை நினைத்தலாகும். ஏனெனில், மனதின் அடிப்படைத் தொழில் நினைத்தலாகும். (2) மனம் தனித்து நிற்காது. எதையாவது பற்றிக் கொண்டுத்தான் நிற்கும். எதைப் பற்றுகின்றதோ அதுவாகிவிடும். தனது மூலத்தை தொடர்ந்து பற்றுமானால் அடங்கி, ஒடுங்கி இறுதியில் அழிந்தே போகும். தன்மையுணர்வு மட்டுமே மீதமிருக்கும். (சிவத்தைப் பற்றிய மனம் சிவமாகியது என்றும் வேடிக்கையாக கூறலாம்.)

ஆக, "அண்ணாமலையாரை நினைக்க விடுதலை" என்னும் சொற்றொடரில் அண்ணாமலையார் என்னும் சொல்லுக்கு பரம்பொருள் என்று பொருள் கொண்டால், பரம்பொருளை (தன்மையுணர்வை) நினைத்தாலே போதும் நான் இவ்வுடல் என்கிற நரகாசுரனிடமிருந்து விடுதலை கிட்டிவிடும். 👏👏👏👌 எவ்வளவு எளிமையான உத்தி!!! இதைவிட எளிமையான சுலபமான உத்தி இருக்காது என்பது என் கருத்து. 🙏

அண்ணாமலையார் கவர்ந்திழுத்து அணைத்துக் கொண்ட செல்வங்களுள் ஒருவரான பகவான் ஸ்ரீரமணரும், "உன் சுயஉருவை நினைவில் கொள்" என்று பல முறை அறுவுருத்தியிருக்கிறார். பகவானது "நான் யார்?" என்ற தன்னாட்ட உத்தியும், அவரது அருட்தந்தை அண்ணாமலையாரின் உத்தியும் ஒன்று தான். தன்னாட்டம் எனில் தன்னை நாடுதல். நாடுதல் எனில் நினைத்தல். தன்னை நினைத்தல். 👏👏👌

"தொழிலற்ற பரம்பொருளை நினைப்பது என்பது எவ்வாறு அப்பரம்பொருளாக ஆவதாகும்?", என்ற கேள்வி எழலாம்.  மனம் எதைப் பற்றுகின்றதோ அதுவாக ஆகிவிடும் என்று ஏற்கனவே பார்த்தோம். பகவான் ஸ்ரீரமணரின் விளக்கம்: உள்ளதை (உள் - பரம்பொருள்) உணர உணர்வு வேறு இல்லையாதலால், உள்ளதை உணரும் (நினைக்கும்) உணர்வே (நினைவே) உள்ளதுமாகும்.

கைலாயத்தில் உறையும் மகானால் 🌸🙏 "அம்மையே" என்று அழைக்கப் பெற்ற பேரு பெற்ற காரைக்கால் அம்மையாரும் 🌸🙏 இறைவனிடம் வேண்டுவது, "மீண்டும் பிறக்கின், உன்னை என்றும் மறவாமை வேண்டும்". பேயார் வேண்டும் மறவாமை என்னவெனில் எக்கணமும் தன்மையுணர்வை (சிவத்தை) நினைவில் கொள்வதாகும்!

🔥 மலை / நதி வலம் வருதல்

தன்னாட்ட உத்திக்கு அடுத்ததாக பகவான் ஸ்ரீரமணர் அறிவுருத்தியது அண்ணாமலையை வலம் வருதல். இன்று அண்ணாமலை வலத்தின் பெருமை பற்றி எழுதுபவர்கள் மூலிகைக் காற்று, சித்தர்கள், அடிக்கொரு லிங்கம் போன்ற இரண்டாம் தர தகவல்களைத் தான் பெரிதுபடுத்திக் காட்டுகிறார்களே அன்றி மலைவலம் வருதலின் அடிப்படை நோக்கமாகிய உடல் மரத்தல் என்பதைப் பற்றி எழுதுவதேயில்லை. "ஒரு நிறைமாத பேரரசி நடை பயில்வதைப் போல மலைவலம் வர வேண்டும்", என்று மலை / நதி வலம் வரும் உத்தியை விளக்குகிறார் பகவான் ஸ்ரீரமணர். வெட்டிக் கதைகள் பேசாமல், கவன ஆற்றலைக் கண்டபடி சிதறவிடாமல், பகவான் சொல்வது போல் நடந்து வந்தால், அடி அண்ணாமலை திருக்கோயில் வருவதற்குள் உடல் மரத்திருப்பதை உணரலாம். "உடல் மரத்திருக்கிறது" என்று உணர்வது யார் / எது? நாமே. "நாம் வேறு. நம் உடல் வேறு." என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும். இந்த பட்டறிவை இனி மறக்காமல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நினைவில் நிறுத்தினால் போதும். ஆரம்பத்தில் முயற்சியுடன் அடையப் பெறும் இந்நிலை, ஒரு சமயத்தில் முயலுதல் இல்லாமலேயே அடையப்படும். இதுவே நம் இயல்பு நிலை என்பதை உணருவோம். இத்தனைப் பிறவிகளும், இத்தனைப் பாடுகளும் மறந்த நம் இயல்பை மீண்டும் அடையவே என்பதையும் உணருவோம். பிறகென்ன? தன் மேல் களி நடனம் புரியும் கூத்தப் பெருமானை திரும்பி வணங்கும் முயலகனைப் போல் நாமும், உயிர்களின் மறதியைக் கொண்டே அண்டம் என்ற தனது கூத்தினை நடத்தும் இறைவனின் திறத்தைக் கண்டு வியந்து, அவரது கூத்தைக் (நமது வாழ்வை) கண்டு களித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!! 🌸🙏😍

பகவான் அறிவுருத்திய இந்த அண்ணாமலை வலம் வரும் உத்தி மலைகள், நதிகள், மானசரோவர் போன்ற நீர் நிலைகள், பெரும் சுற்றுப் பாதைகளைக் கொண்ட திருத்தலங்கள் என அனைத்து ஆன்மிக மையங்களுக்கும் பொருந்தும் - திருக்கயிலாய வலம் நீங்கலாக (குறைவான உயிர்வளி & ஆபத்தான பாதை என்பதால்). இந்த உத்தியை சரியாக பயிற்சி செய்து கொண்டு வந்தால், காலப்போக்கில் எல்லா வேலைகளும் மலைவலம் வருவதற்கு சமமாகிவிடும். இறையுணர்வைப் பெற - நமது இயல்பை உணர - தனியாக ஓர் இடமோ, பயிற்சியோ தேவைப்படாது.

🔥 பால்குடம் சுமத்தல்

மேற்சொன்ன மலைவலம் வருதல் நடக்கத் தெரிந்த குழந்தைகளுக்கு எனில், இந்த உத்தி நடை பழகும் குழந்தைகளுக்கானது. ☺ "நிறைமாத பேரரசி போன்று நட", என்று பகவான் அரிச்சுவடிப் பாடம் நடத்தினாலும், சிலர் ஏவுகணை கணக்காக சுற்றி வருவார்கள். 😁 "கவன ஆற்றலை சிதறவிடாமல் உன் மீதே திருப்பு", என்றாலும், அஷ்டாவதானிகள் தசாவதானிகள் தோற்கும் அளவிற்கு எல்லா கதைகளும் பேசிக்கொண்டு வருவர். 😂 இது போன்றவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் பால்குடம் சுமத்தல். தலையில் எடை ஏறியவுடன், தானாகவே வேகம் குறைந்துவிடும். கவனமும் சிதறாது. போதாதற்கு மஞ்சள் உடை, மேளதாளம், இவைகளால் ஏற்படும் கவனஈர்ப்பு என அனைத்தும் சேர்ந்து பொறுப்பும் சிரத்தையும் கூடிவிடும். உடலுணர்வு உறுதியாக இழக்கப்படும். ஆனால், எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே ஈடுபடுவதால், தன்மையுணர்வு என்னும் அரியபொருள் கிடைத்தும், அதை சிக்கென பிடிக்கத் தெரியாததால், பெருமிதம், ஆணவம் என எதிர் விளைவுகளில் முடிந்துவிடுகிறது. இதுவே செய்வதைத் தெரிந்து செய்தால், நீர்குடம் சுமந்தாலே போதும்! அதாவது, தினப்படி செய்யும் தொழிலே தெய்வமாகி விடும்!!

🔥 தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி தூக்குதல், தலையில் தேங்காய் உடைத்தல், தலையில் அரைத்த மிளகாய் பூசுதல், கொதிக்கும் எண்ணெய்யில் அப்பம் சுடுதல் மற்றும் சில உத்திகள்

இவையெல்லாம் தமிழரோடு மட்டுமே, அதிலும் பெரும்பாலும் சிறுதெய்வங்களை (முருகப் பெருமான் சிறுதெய்வமல்ல) வழிபடுவோரோடு மட்டுமே, அடையாளப்படுத்தப்படும் உத்திகளாகும் (3). இந்த உத்திகள் பயம், வலி, அதிர்ச்சி, சூடு, எரிச்சல் போன்றவற்றால் சிதறிக் கிடக்கும் நமது கவன ஆற்றலை குவித்து, நம் மீதே திருப்பி, நம்மை நம் உடலிலிருந்து சில மணித்துளிகள் (தீ மிதித்தல், தேங்காய், மிளகாய், எண்ணெய்) முதல் சில மணி நேரம் (தீச்சட்டி, அலகு, காவடி) வரை விடுபடச் செய்யவல்லவை. ஆனால், பால்குட உத்தியில் பார்த்தது போல் இங்கும், எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே ஈடுபடுவதால் எதிர் விளைவுகள் தான் மிஞ்சுகின்றன. சில சமயம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று வள்ளுவம் கூறுவது போல மேற்சொன்ன எளிதான வழிகள் இருக்க இந்தக் கடினமான மற்றும் கொடிய (தேங்காய், மிளகாய் & எண்ணெய்) வழிகள் தேவையற்றது.

இது போன்று இன்னும் பல உத்திகள் இருந்திருக்கக் கூடும் (எ.கா.: கபாலிகம்). காலப்போக்கில் அவை வழக்கொழிந்து போயிருக்கலாம். அல்லது, வேரறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் உறுதி: அவையும் நமது இயல்பை - தன்மையுணர்வை / சிவ தத்துவத்தை - நாம் உணரச் செய்யக் கூடியதாகத் தான் இருந்திருக்கும். இவ்வாறு வழக்கிலுள்ள மற்றும் வழக்கறுந்த உத்திகளை வைத்தே தமிழரின் சமயம் என்னவென்று உறுதியாகச் சொல்லலாம்: உடலுணர்வை ஒழித்து மீண்டும் சிவமாவதே தமிழரது சமயமாகும்!! 👏👏 இதிலிருந்து தோன்றியவை தாம் இன்று உலகிலுள்ள அனைத்து மதங்களும். "எல்லா வழிகளும் சம்மதம்",  "எல்லா வழிகளும் ஓர் இறையையே அடைய உதவுகின்றன" போன்ற நம் பெரியோர்களின் சொற்கள் குறிப்பிடும் வழிகள் (மதங்கள்) மேற்சொன்ன கங்கை முதலான வழிகளைத் தாம். வட பாரத மொட்டை (சமண & பெளத்த), பரங்கி, மிலேச்ச, நாம வழிகளை அல்ல!! ✊👊👊👊💪

🔥 ஓர்தல்

கனவு காண்பவனிலிருந்து கனவு வேறில்லை. இது போன்றே காணும் உலக காட்சிகளிலிருந்து நாம் வேறல்ல. வேறு போன்று தோன்றுவதற்கு காரணம் நமது தன்மறதியே. நமது சுயத்தை நாம் மறந்துவிடுவதால், நாம் வேறாகவும் காணும் உலகை வேறாகவும் உணர்கிறோம். இறைவனின் இத்திருவிளையாடலை அநேகத்துவம் என்று எடுத்துக் கொண்டால், அனைத்தையும் ஒன்றாக, நாமாக, உணர்வதை ஏகத்துவம் என்று அழைக்கலாம். இந்த ஏகத்துவத்தை அடையும் முயற்சியை ஒர்தல் என்றும் அழைத்திருக்கிறார்கள் நமது மூதாதையர். ஓர்தல் = ஒருவனாகுதல். (சென்னைப் பல்கலையின் தமிழ் அகராதியில் ஓர்தல் என்ற சொல் இல்லை. இணையத்தில் தேடினால், உணர்தல், தெளிதல், அறிதல் என்று பொருள் வருகிறது.)

ஓர் என்பது உரிச்சொல். உயிரெழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் ஒருமைப் பெயர்களுக்கு முன்னர் வரும் (எ.கா.: ஓர் ஊரில் ஒரு ராஜகுமாரி...). ஓர் என்பது உயிரையும், ஒரு என்பது உயிர்மெய்யையும் குறிக்கும். இவ்வுலகு உயிர் + மெய்யால் ஆன கலவை. இக்கலவை தோற்ற மாத்திரமே. இதுவும் உயிரிலிருந்தே வெளிப்படுகிறது. எனவே அனைத்திற்கும் மூலமான உயிர் நிலைக்கு திரும்புதலை ஓர்-தல் என்று அழைத்திருக்கிறார்கள்!! (ஏன் அன்னைத்தமிழ் நிறைமொழி என்றழைக்கப்பட்டது என்பதை உணர இவையெல்லாம் சிறு சான்றுகள். தமிழ் நிறைமொழி மட்டுமல்ல. சமய படையெடுப்புக்களுக்கு முன்னர் அதுவே உலகின் இறைமொழியும் ஆகும்!! 👏👌👍💪)

மேலே நாம் பார்த்த அனைத்து உத்திகளையும் ஓர்தல் என்ற கணக்கில் சேர்க்கலாம். ஆனாலும், இங்கே பேசப்படும் உத்தியை மட்டுமே ஓர்தல் என அழைத்துள்ளனர். உத்தியை பார்க்கும் முன் இச்சொல் இன்று எவ்வாறு மருவியுள்ளது என்று பார்ப்போம்.  பேச்சு வழக்கில் ர் & ற் ஆகியவை த்-ஆக மாறும். காற்று = காத்து, நேற்று = நேத்து. எனில், ஓர்தல்...? 😯

உயரிய ஆன்ம அறிவை வழங்கக் கூடியதாகக் கருதப்பட்ட ஒரு செயல், இன்று எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்த செயலாகிவிட்டது. அதைக் குறிக்கும் சொல்லும் இன்று உச்சரிக்க முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது. 😑 இச்சொல்லும் இன்று கீழ்தட்டு மக்களிடம் மட்டுமே வழக்கில் உள்ளது (கீழ்தட்டு, மேல்தட்டு என்பதற்கு பணம், மெக்காலே / பெண்டிங்க் கல்வி, ஆங்கிலம், உயர் பதவி போன்றவை அளவு கோள்கள் அல்ல).

இந்த உத்தி அன்றிருந்த அனைத்து கலாச்சாரங்களிலும் இடம் பெற்றிருந்தது. எகிப்தில் இந்த சேவையை வழங்குவதற்கென ஆலயங்களில் பெண்கள் இருந்துள்ளனர்! இந்த உத்தியில் பல ஆராய்ச்சிகள் (ஆண்களுக்கு, பெண்களுக்கு எந்த நிலையில் என்ன நடக்கிறது என்பது போன்ற) நடந்துள்ளன. பல உச்சங்களையும் தொட்டுள்ளனர். இவர்களில் எனக்குத் தெரிந்து 2 தமிழ்நாட்டு மகான்களும் உள்ளனர். 🌸🌸🙏🙏 இவர்களது சமாதித் தலங்கள் இன்றும் பெரும் புகழ் பெற்று விளங்குகின்றன (ஊர் பெயர்களை வெளியிட விரும்பவில்லை). வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றில் வாழ்ந்த ஒரு பெளத்த மகானும் இவ்வுத்தியைக் கையாண்டிருக்கிறார். அப்ரகாமிய மதங்களில் ஒன்றில் அதன் நிறுவனர் காலத்திலேயே இந்த உத்தி முக்கியத்துவம் பெற்றிருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

எதற்கும் ஒரு எதிர் விளைவு உறுதியாக உண்டு. அதிலும் இது போன்ற உடலுறவு உத்திகளில் சொல்லவேத் தேவையில்லை. அப்படி ஏற்பட்ட ஒரு தவறான எதிர்விளைவு தான் வைணவர்களின் நாமச்சின்னம். (இது பற்றி பின்னொரு இடுகையில் பார்க்கலாம்).

இப்பொழுது உத்தியை பார்ப்போம். உடலுறவு முடியும் தருவாயில் ஆணிடமிருந்து விந்துநீர் வெளியேறுகிறது. இந்நீர் வெளியேறும் சில வினாடிகளுக்கும், வெளியேறியவுடன் சில வினாடிகளுக்கும் ஆண் தனது உடலுணர்வை இழக்கிறான். உடலுணர்வு நீங்கியதால், "தான்" எனும் இறை (சிவ) தத்துவமாக ஒளிர்கிறான். ஒரு சில வினாடிகளே கிடைக்கும் இவ்வரிய மெய்யறிவை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மீண்டும் பேயோடு சேர்ந்து ஆட வேண்டியது தான்!! (பேய் - காளி - எண்ணங்கள், உலகம், ...) 😂😂

இந்த பட்டறிவெல்லாம் (அனுபவமெல்லாம்) ஆணுக்குத் தான் என்பது பெரும்பாலான மகான்களின் கருத்தாகும். மத்வம் மட்டும் மாறுபடுகிறது என்பது என் கருத்து (அவர்களுக்குள்ளும், உடலுணர்வை பெண் எப்போது இழக்கிறாள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது).

இவ்வாறு அன்றாடம் இல்லற வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வைக் கொண்டே மெய்யறிவு பெற முயற்சித்த பண்டைய உலகம் எங்கே? வெறும் உணர்ச்சி எழுச்சிக்காக இனணயத்தில் அதைப் பற்றி அதிகம் தேடும் இன்றைய உலகம் எங்கே? மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. அதாவது, முன்நடத்திச் செல்பவர்கள் எவ்வாறோ, அவ்வாறே பின் செல்பவர்களும். அன்று உலகின் முன்னே நடந்தது நமது மூதாதையர்கள்! 👏👍💪🙏 இன்று நடப்பது பரங்கியர்கள்!! 👿👹☠✊👊👎

மேலே நாம் பார்த்த உத்திகளில் "நினைக்க விடுதலை தரும் அண்ணாமலை" என்ற உத்தியைத் தவிர மீதமனைத்தும் விருந்து சாப்பாடு போன்றது. நினைக்க... என்ற உத்தியையும் பழக ஒரு பக்குவ நிலையை அடைந்திருக்க வேண்டும். எனில், எல்லோருக்கும், எல்லா காலங்களுக்கும், எல்லா இடங்களுக்கும் ஏற்றது... உடையாரை வணங்கும் போது தன்னிச்சையாக மூடும் கண்களை மூட விடுவது தான்!

🏵 கண்களை மூட விடுங்கள்
🌼 அன்னை யசோதை கண்டவாறு கண்ணபிரானைக் காணுங்கள்
🌺 கண்ணபிரானைக் காணுவது என்பது கண்ணபிரானாக ஆவதே
🌻 நாம் நாமாக இருப்பதே

🌸 கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌸🔥🙏

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

குறிப்புகள்:

1. மூழ்கிய முதல் சில கணங்களுத் தான் இவ்விளக்கம் பொருந்தும். பின்னர், உடல் அக்குளிர்ச்சிக்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளும். அதன் பின்னர், "கங்கையில் வாழும் உயிரினங்களுக்கும் விடுதலை (முக்தி) கிடைக்குமா?", என்ற "அந்நிய சக்திகள் வீசியெறியும் பொரைகளுக்காக தம் மூதாதையரின் அரிய செல்வங்களின் மேலே சாணி வீசும் கருங்காலி போலி திராவிடவியாதிகளின்" கேள்விக்குப் பதில் தான் கிடைக்கும்!! 😁

"குளிர்ந்த நீர் தான் அடிப்படைத் தேவையெனில், குளியல் தொட்டியில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் மூழ்கினால் போதாதா? கங்கைக்குத் தான் செல்லவேண்டுமா?", என்று சில அறிவுஜீவிகள் கேட்கலாம். அவர்களுக்கு எனது பதில் கேள்வி, "எங்கு அமர்ந்து உண்டாலும் உணவு செரிக்கும் என்பதற்காக, கழிவறையில் அமர்ந்து உண்பீர்களா?" 😲😰😎👊

ஒரு வேளை இந்த உத்தி பரங்கியர்களுக்குத் தெரியவந்தால்... ஆத்மா ஆதம் ஆனது போல், ஜீவன் ஏவாள் ஆனது போல் இந்த உத்தி என்னவாகியிருக்கும் என்று சிந்தித்ததன் விளைவே இந்த இடுகை ... https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/4VUC7xTdgWv 😛😜😝

2. நமது கைபேசி, கணினி போன்றவற்றைக் கொண்டு பலத் தகவல்களைப் பெறுகிறோம். நமக்கு வேண்டுமானால் அவை பலவித தகவல்கள். ஆனால், அந்தக் கருவிகளின் இயக்ககங்களுக்கு அவை 0 & 1 என்னும் இரண்டே எண்கள் தாம். இவ்வாறே நம் மனதும் இயங்குகிறது. பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், உணருதல், சிந்தித்தல் என பல தொழில்களை நாம் புரிந்தாலும், நம் மனதின் அடிப்படைத் தரவு நினைவு / எண்ணம் தான்.

3. நமது தீ மிதித்தல் உத்தியை வைத்து சில பரங்கி அமெரிக்கர்கள் பல கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். 🤑🤑🤑 ( https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/QXVH2DvPLJa )

இந்தப் பரங்கி இனத்திற்கு சில இயல்புகள் உண்டு. தனித்து வாழ முடியாது. 😛 மற்றவர்களின், குறிப்பாக கருப்பு மற்றும் மஞ்சள் இனத்தவரின், உழைப்பில் வாழும். 😜 ஒட்டுண்ணியாக வாழ்ந்தாலும், கோலோச்ச வேண்டும் என்று நினைக்கும். 😝 எதையும் அரைகுறையாக புரிந்து கொள்ளும்.🙃  அதுவே சரி என்று உலகின் தலையில் கட்டிப் பணம் பார்க்கும். இவ்வினம் புகுந்த நாடு, தொழில், துறை என அனைத்தும் நாறிப்போகும். 💩 சுருங்கச் சொன்னால், பரங்கிகள் இவ்வுலகை அழிக்க வந்த பீடைகளாகும் 😠😡 (பீடை - ஒட்டுண்ணி). இந்த விளக்கம் பரங்கி மனிதர்களுக்கு மட்டுமல்ல. அவை வாழுமிடத்தில் உள்ள மாடு, புழு, தேனீ போன்ற உயிர்களுக்கும் பொருந்தும். அங்கிருந்து நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மாடுகள், புழுக்கள், தேனீக்களால் என்ன விளைவுகள் இங்கு ஏற்பட்டுள்ளன என்பது, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அனைவரும் அறிந்ததே.

No comments:

Post a Comment