Showing posts with label ருத்ராக்ஷம். Show all posts
Showing posts with label ருத்ராக்ஷம். Show all posts

Tuesday, December 21, 2021

திருநீறு பூசுவதின் மெய்யியல் அடிப்படை - சிறு விளக்கம்


திருநீற்றின் 3 கோடுகள் நனவு, கனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளைக் குறிக்கும். இக்கோடுகளை பூசுவதற்கு எவ்வாறு நம் நெற்றி பற்றுக்கோடாக அமைகிறதோ, இவ்வாறே நனவு முதலான 3 நிலைகள் தோன்றி மறைவதற்கு நாம் (நமது தன்மையுணர்வு - உள்ளபொருள் - சிவம்) பற்றுக்கோடாக அமைகிறோம்.

பூசுப்படும் திருநீறு இருந்தாலும், அழிந்தாலும் நெற்றிக்கு குறையில்லை. இவ்வாறே நனவு முதலான நிலைகள் தோன்றினாலும், மறைந்தாலும் நமக்கு எந்த குறையுமில்லை. இதை உணரவேண்டும்.

🌷 "நீறில்லா நெற்றி பாழ்" - மேற்கண்ட அறிவு இல்லாதவரின் சிந்தனையோட்டம் புறமுகமாகச் சென்று, கிடைத்தற்கரிய மனிதப்பிறவி வீணாகிவிடும்.

🌷  "திருநீற்றை சிந்தாதே / கீழே விடாதே" - அரும்பாடுபட்டு பெற்ற இறையுணர்வை (மெய்யறிவை) இழந்துவிடாதே.

oOo

ஒரு சைவர் தரித்திருக்க வேண்டிய சின்னங்கள் இரண்டு: திருநீறு & உருத்திராக்கம்.

🌷  திருநீறு 3 கோடாக பூசப்படும்போது மேற்சொன்ன பொருளைக் குறிக்கும். நெற்றி முழுதும் பூசும்போது அல்லது சிறு கீற்றாக பூசும்போது அதன் பொருள்: இந்த உலகை "எரிந்து உருக்கலையாத" சாம்பல் போன்று அவர் காண்கிறார் (அல்லது, காணவேண்டும்).

🌷 கழுத்தில் உருத்திராக்கம் அணிவதன் பொருள்: புறமுகமாகவே ஓட எத்தனிக்கும் மனதை, எக்கணமும் தனது தன்மையுணர்வின் மீது நிலைபெறச் செய்திருப்பவர் (அல்லது, செய்யவேண்டும்). (புறமுகமாக பல பொருட்களின் மீது செல்லும் மனம் வலுவில்லாமல் இருக்கும். அதை ஒன்று திரட்டி, அகமுகமாக, தன் மீது நிலைநிறுத்தும் போது உருத்திராக்கம் போன்று திரண்டு, வலுப்பெற்று விடும்.)

oOo

திருநீறு தரிப்பதாலும் & உருத்திராக்கம் அணிவதாலும் விளையும் இதர பயன்கள் யாவும் மிகைப்படி கணக்கில்தான் சேரும்.

காழியூர் பிள்ளை 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடிய புகழ்பெற்ற "மந்திரமாவது நீறு ..." எனும் பதிகத்தில் "உண்மையில் உள்ளது நீறு" என்ற சொற்றொடர் வருகிறது. இதில், அழியும் திடப்பொருளான சாம்பலை பெருமான் குறிக்கவில்லை. காணும் காட்சிகள் நீங்கிய பிறகு - பிறவிநோய் தீர்ந்த பிறகு - மீதமிருக்கும் நமது தன்மையுணர்வையே திருநீறு என்றழைக்கிறார்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, May 17, 2020

திருநீறு பூசுதல், உருத்திராக்கம் அணிதல் - சிறு விளக்கம்



(தினமலர் - ஆன்மீகமலர் - 05/05/20)

சிவனடியார்களின் கடமைகளுள் திருநீறு பூசுதலையும், உருத்திராக்கம் அணிவதையும் மிக முக்கியமானதாக குறிப்பிட்டுள்ளார்கள். எவ்வளவு பொருள் பொதிந்த சொற்கள்!! 👏🏽👌🏽 சிவனடியார்களிடம் மட்டுமல்ல. இவை உலகிலுள்ள எல்லோராலும்  கடைபிடிக்கப்பட வேண்டியவை!!

🏵️ #திருநீறு #பூசுதல் - பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாம்பலை விதவிதமாக உடல் முழுவதும் பூசிக் கொள்வதல்ல. "நமக்குள் தோன்றும் எண்ணங்கள் முதல் நாம் காணும் நமது உடல், நாம் வாழும் இவ்வுலகம் என எல்லாம் இருப்பற்றது, பொய்யானது, முழுதும் எரிந்து உருக்கலையாமலிருக்கும் சாம்பல் போன்றது" என்ற இந்த உண்மை (திருநீறு) எக்கணமும் நம் கவனத்திலிருக்க வேண்டும் (பூசுதல்). ஆரம்பத்தில், இந்த திருநீற்றை (உண்மையை) சதா பூசிக்கொண்டே (கவனத்தில் தக்க வைத்துக்கொண்டே) இருப்பது என்பது கடினமான வேலையாகத் தோன்றும், ஆனால், பழக பழக சுலபமாகி விடும். ஒரு சமயத்தில், இது நமது இயற்கையாகி விடும். மனமும் கட்டுப்பட ஆரம்பித்து, இறுதியில் இறந்தே போகும்.

(இந்த விளக்கத்தை வைத்து சம்பந்த பெருமானின் 🌺🙏🏽 திருநீற்றுப் பதிகத்தை ஆராய்ந்தால் அது எவ்வளவு பொருள் பொதிந்த பதிகம் என்பது விளங்கும்!! 😍)

🏵️ #உருத்திராக்கம் #அணிதல் - மேற்சொன்னபடி திருநீறு பூசுவது பாதி கடமை எனில் மீதி உருத்திராக்கம் அணிதலாகும். தோன்றும் எண்ணங்கள் முதல் காணும் உலகம் வரை அனைத்தும் பொய் - இருப்பற்றது - எனில் எது தான் உண்மை? இவற்றையெல்லாம் காணும் நாம் மட்டுமே உண்மை! நாம் எனில் நமது தன்மையுணர்வு. இது மட்டுமே உள்ளபொருள் - மெய்பொருள் - சிவம். இந்த தன்மையுணர்வை விடாது இறுகப் பிடிப்பது - தன்மையுணர்வில் நிலைத்திருப்பது / அசைவற்றிருப்பது - தான் உருத்திராக்கம் அணிவது என்பது. இந்த உணர்வை விடாது இறுகப் பிடிப்பது எவ்வாறு? அதாவது, உருத்திராக்கத்தை எவ்வாறு தொடர்ந்து அணிவது?

இதற்கு மிக அருமையாக பதிலளிக்கிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽: இராமன் என்பவன் தன்னை இராமனென்று உணர்வதற்கு கண்ணாடி தேவையோ? 👏🏽👏🏽👏🏽👌🏽🙏🏽

(பகவானது பதில் தலையில் ஒரு குட்டு வைத்தது போலிருக்கும்!! 😁 இந்த குட்டுப் பெற்ற உணர்வை அப்படியே இறுகப் பிடியுங்கள். உருத்திராக்கம் அணிந்தவராவீர்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

(தினமலர் - ஆன்மீகமலர் - 05/05/20)

🌸🌼🌻🏵️💮

மோகன்தாஸ் போன்ற நயவஞ்சகர்கள் இந்த விளக்கங்களை வைத்தே நமக்கு கொம்பு சீவும் வாய்ப்புள்ளது!! "காட்டுமிராண்டிகளது மத தர்மம் இந்துக்களைக் கொள்வது, இந்து பெண்களை கற்பழிப்பது, இந்துக்களின் உடமைகளை பறித்துக் கொள்வது. இந்துக்களின் தர்மமோ திருநீறு பூசுவது மற்றும் உருத்திராக்கம் அணிவது. அவர்களது தர்மங்களை அவர்கள் கடைப்பிடிக்கட்டும். உங்களது தர்மங்களை நீங்கள் கடைபிடியுங்கள். பிறவிப் பெருங்கடலில் இருந்து சீக்கிரமே விடுபடுவீர்கள்." என்று மலபார், நவகாளி, பஞ்சாப் இந்து இனப்படுகொலைகளின்போது அவன் உளறியது போல் உளறுவதற்கும் வாய்ப்புள்ளது.

இதற்கான பதிலை அண்ணாமலை சுவாமிகள் 🌺🙏🏽 அளிக்கிறார்: ரமணாச்சிரமத்திற்கு அருகில் சாக்கடை ஓடுகிறது. அதுவும் இறைவனின் படைப்பே என்பதற்காக அதனருகில் சென்று வாழ முடியாது. அந்நீரை குடிக்கவும் முடியாது. அங்கு செல்லக்கூடாது என்ற அறிவையும் படைத்தது இறைவன்தான். ஆகையால், மெய்யறிவு கிடைக்கும்வரை இறைவன் கொடுத்த அறிவை பயன்படுத்துங்கள். மெய்யறிவு கிடைத்தபின் நமது உடலின் இயக்கம் நம்மிடம் இருக்காது. வேறொரு ஆற்றல் அதை வழிநடத்தும்.

மெய்யறிவு கிடைத்தபின் வேண்டுமானால் யாவரும் கேளிர். அதுவரை இந்த உளறுவாயன்களை கைபுள்ளகளாகத் தான் காணவேண்டும். ✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽😂