Sunday, November 21, 2021

இராமநாதபுரத்தில் பெளத்த விகாரமாம்! அடிக்கல் நாட்டுவிழாவில் "மதச்சார்பற்ற" அண்ணன் திருமா கலந்துகொண்டாராம்!!


💥 இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது பௌத்தர்கள் என்பதை அண்ணன் மறந்துவிட்டார் போலிருக்கிறது.

💥 தமிழ்நாட்டிற்குள் ஆரியத்தை கொண்டுவந்ததில் பெளத்தர்களுக்கு பெரும் பங்குள்ளது என்பது அண்ணனுக்கு தெரியாது போலிருக்கிறது.

💥 இறுதிவரை தமிழுக்கு மாறாமல் ஆரியத்தை பிடித்துக் கொண்டிருந்ததால்தான் சமணத்தின் அளவிற்கு பெளத்தத்தால் வெற்றி பெற முடியவில்லை என்பதும் அண்ணனுக்கு தெரியாது போலிருக்கிறது.

💥 பெளத்தர்களின் அடையாளங்களில் ஒன்று மொட்டைத் தலை.

இன்றுவரை ஒருவர் தன்னிடமிருக்கும் அனைத்தையும் ஏமாந்துபோய் பறிகொடுத்தால் என்ன சொல்கிறோம்: உன்ன நல்லா மொட்ட போட்டுட்டாங்க பாேல? 

இதே போன்று, ஒருவர் மற்றொருவரை ஏமாற்றி, அவரிடமிருப்பதை கறந்துவிட்டு வந்தால் என்ன சொல்கிறோம்: அவன நல்லா மொட்ட போட்டுட்ட போலிருக்கு?

வடக்கிலிருந்து வந்த பெளத்தர்கள் நயவஞ்சகர்களாக இருந்து, மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருப்பதை பறித்துக் கொண்டுள்ளனர். எனவே, அவர்களது அடையாளங்களுள் ஒன்றான மொட்டைத் தலைக்கு "ஏமாற்றுதல்" மற்றும் "முழுவதையும் பறிகொடுத்தல்" ஆகிய பொருட்களை கொடுத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

(ஏற்கனவே அண்ணனின் முதலாளிகளில் ஒருவருக்கு "நயவஞ்சகமாகக் கறக்கும்" குணம் இருப்பதினால், பெளத்த மொட்டைகளையும் முதலாளிகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது! 😏)

💥 மொட்டை மதத்தை தமிழ்நாட்டிற்குள் மீண்டும் கொண்டு வருதல் என்பது "இந்து சமயத்திற்கு பல வகைகளில தொல்லைக் கொடுத்தல்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதிதான். இதற்கு பெரும் பொருட்செலவும், காலமும் தேவைப்படும். இதற்கு மாற்றாக, மொட்டை மதத்திலிருந்து தோன்றிய நாம மதத்தை ஊக்குவிக்கலாம். நாம மதம் ஏற்கனவே இங்கு நன்கு நிலை பெற்றுள்ளது. உடனடி பலன் கிடைக்கும். 😁

பல வைணவத் தலங்கள் பெளத்த விகாரங்களாக இருந்தவைதாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலாகும். அவற்றை மீண்டும் விகாரங்களாக மாற்றிவிட்டால் உடனடியாக உள்கட்டமைப்பு கிடைத்துவிடும். 

> நாமம் போட்டுட்டியா? - ஏமாற்றிவிட்டாயா?
> நாமம் போட்டுட்டாங்களா? - ஏமாற்றிவிட்டார்களா?
> நாமம் -> வைணவம் -> ஏமாற்றுவேலை. 

மொட்டைகளானாலும் நாமப்பேர்வழிகளானாலும் தொழில் ஒன்றுதான்.

💥 ஒரு கட்டமைப்பும் இல்லாத பௌத்தர்களை ஊக்குவிப்பதை விட, ஓரளவு கட்டமைப்பும் எண்ணிக்கையும் கொண்ட சமணர்களை ஊக்குவிக்கலாம். ஆனால், அன்று சமணர்களுக்கு பெரும் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த 

> பிறந்தமேனியாக வலம் வருதல் 
> மயிற்பீலியால் பாதையை தூய்மை செய்து கொண்டு செல்லுதல் 

போன்ற விற்பனை உத்திகள் இன்று உதவாது. பொருளை அடிப்படையாகக் கொண்ட தற்காலத்திற்கு ஏற்றவாறு புதிய உத்திகளை உருவாக்கவேண்டும்.

oOOo

தாேன்றிய யாவும் மறைந்தே தீரும். இறுதியாக நம் மண்ணிற்கு வந்துசேர்ந்த கிறித்தவம் முதல், முகம்மதியம், வைணவம், பௌத்தம், சமணம், வைதீகம் என யாவும் தோன்றியவைதாம். ஒரு நாள் இவை மறையும். ஆனால், சமயம் என்ற சொல்லுக்கு தகுதி பெற்ற ஒரே நெறியான சைவம், இன்னாரால் இன்ன நாளன்று தோற்றுவிக்கப்பட்டதன்று. மனிதன், தான் யாரென்று தன்னைப் பற்றி சிந்திக்க தொடங்கிய நாளிலிருந்து அது தொடங்குகிறது. மனிதர்கள் தோன்றிக் கொண்டிருக்கும் வரை அந்த சிந்தனையும் தொடரும். சைவமும் நிலைத்திருக்கும். 

பண்டைய நாகரிகங்கள் செழித்திருந்த பகுதிகளில் தற்போது அகழ்வாராய்ச்சி செய்யும் போது வெளிப்படுவது பெருமாள், புத்தர், தீர்த்தங்கரர் சிலைகளோ, குறுக்கைகளோ, வெள்ளை சுவர்களோ அல்ல. சிவலிங்கங்கள்!! ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சிவ வழிபாடே செழித்திருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும். மேன்மை கொள் சைவநீதி உலகெங்கும் மீண்டும் சிறந்து விளங்கும் காலம் வரும்.

சைவம் என்ற சொல்லின் பொருள் அசைவற்றது / உள்ளும் புறமும் இணைந்தது. எது அசைவற்றது? பரம்பொருள்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment