Showing posts with label பிராமணர். Show all posts
Showing posts with label பிராமணர். Show all posts

Tuesday, October 8, 2024

பிராமணர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டுமாம்! 😏


💥 உள்ளபொருளை உள்ளபொருளாய் அறிந்திருந்த மக்களை, மம சொல்லும் மடையர்களாக, கண்டதையும் வணங்கும் முட்டாள்களாக மாற்றி, கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை வீண் செய்ய வைத்திருக்கிறோம்.

💥 கருவறையிலிருந்த திருநெறியத் தமிழை தெருவுக்கு தள்ளி, காரியம் செய்யப்படவேண்டிய ஆரியத்தை கருவறைக்குள் நுழைத்தோம். இவ்வாறே, கருவறையிலிருந்த பண்பட்ட பழமையான குடிகளை வெளியேற்றி, கீழ்நிலைக்கு தள்ளி, கடவுளின் பெயரைக்கூட சொல்லத் தகுதியற்ற நாங்கள், இந்து சமயத்தின் புரவலர்கள் என்று அறியப்படுமளவிற்கு எங்களது "உழைப்பால்" உயர்ந்தோம்.

💥 பழமையான திருக்கோயில்களின் கருவறைகளிலுள்ள உடையவர்களின் கீழே மெய்யறிவாளர்கள் திருநீற்று நிலையில் உள்ளனர் என்ற அறிவை மொத்த இந்துக்களிடமிருந்து நீக்கியுள்ளோம். நாங்கள் கைகாட்டியதை வணங்கும் அறிவிலிகளாக மாற்றியுள்ளோம்.

💥 தமிழர்களைப் பார்த்து, அவர்களிடமிருந்து எல்லாவற்றை கற்றுக்கொண்டு, தமிழ்நாட்டுக்கே வந்து, அவர்களது திருக்கோயில்களில் இன்று வரை நின்று கொண்டு, அவர்களிடமே தட்டேந்திக்கொண்டு, அவர்களையே எங்களது கதைகளிலும், வரைபடங்களிலும் அசுரர்களாக காண்பித்து, அதை அவர்களையே ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறோம்.

💥 இங்கு குடிகொண்டிருக்கும் பெருமான்களுக்கு ஆரியப் பெயர்களை சூட்டி, ஏற்கனவே இருந்த தமிழ்ப் பெயர்களை அழித்தோம். இவ்வாறே காடு, மலை, ஆறு, ஊர் & மனிதர்கள் என அனைத்திற்கும் ஆரியம் கலந்த பெயர்களைச் சூட்டி, மேன்மையான தமிழ்ப் பெயர்களை ஒழித்தோம்.

💥 தற்கால எம்சியு & ஜஸ்டிஸ் லீக் கற்பனைகளை மிஞ்சும் தலபுருடாக்களை அன்றே புனைந்தோம். அவற்றில் துளியளவு கூட உண்மையில்லை என்று தெரிந்தும், இதுவரை, யாரும் கேள்வி கேட்காத வண்ணம் பார்த்துக் கொண்டுள்ளோம்.

💥 வரலாற்றை திரித்திருக்கிறோம். ஒரு காட்டுமிராண்டியை "தி கிரேட்" என்று மக்களை நம்ப வைத்திருக்கிறோம். ஒரு நல்ல மன்னனாக வேண்டியவரை, "ஊருக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டம்" என்ற எங்களது திட்டத்திற்கு இணங்காததால், விருந்துக்கு வர வைத்து, போட்டுத் தள்ளிவிட்டு, "பெண்ணாசையால் இறந்தான்" என்று நம்பவைத்தோம்.

💥 வெள்ளையனின் ஆட்சியின்போது, 200 ஆண்டுகளுக்கு, திருநெறிய தமிழ் எந்த கூடத்திலும் ஒலிக்காதவாறு பார்த்துக்கொண்டோம்.

💥 முடிந்தவரை, தமிழரின் தொன்மை வெளியே வராதவாறு பார்த்துக் கொண்டுள்ளோம்.

💥 சுட்டவடைகளில் (திருமறைகளில்), எங்களுக்கு ஏற்றவாறு இடைச்செருகல் செய்துள்ளோம்; திரித்தும் உள்ளோம்.

💥 முடிந்தவரை தென்தமிழுக்குள் எங்களது ஆரியச் சாக்கடையை கலந்து, தமிழர்களுக்கு கேள்வியறிவு நீங்குமாறு செய்துள்ளோம்.

💥 தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும், இன்றுவரை, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வடக்கிற்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கிறோம்.

💥 சமணம், பௌத்தம், பௌத்தத்திலிருந்து தோன்றிய நாமம் ஆகியோருக்கும் எங்களுக்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் தமிழர்களுக்கு எண்ணற்ற துன்பங்களை விளைவித்தவர்கள் என்றாலும், நாங்கள் அனைவரும் ஒரே பகுதியிலிருந்து தொழில் செய்ய கிளம்பியவர்கள் என்பதால், அவர்களுக்கு ஒரு இன்னல் என்று வரும்போது நாங்கள் தோள் கொடுப்போம்.

💥 இவ்வளவு சிறப்புகளும், "மேன்மையான" வரலாறும் கொண்டுள்ள எங்கள் இனம் Safe-அ, Secured-அ, Comfort-அ & நன்னா இருக்கவும், மேற்சொன்ன கைங்கரியங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கவும் சட்டமியற்றி, வழிவகை செய்யுமாறு "ஆணையிடுகிறோம்"!!

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

என்னவோ இவர்களைப் பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது என்றும், அனைவரும் இவர்களை மேலானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போன்று பேசுவார்கள். ஆனால், மற்றவர்கள் இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி இவர்களுக்கு துளியும் கவலையில்லை என்பதுதான் உண்மை!

💥 வெளிநாடுகளில்: He is a cunning fellow. Be careful.

💥 நமது நகரங்களில்: அவரு ஐயர் / பிராமிண். பார்த்து இருங்க.

💥 நமது கிராமங்களில்: அவன் ஐயரு / பாப்பான். பாத்துக்கோங்க.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

🔸 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அன்றைய ஆந்திராவில் நடந்த ஒரு வழக்கிற்கு பிறகே, "பிராமணன்" என்ற சொல் இவர்களுக்கு உரித்தாயிற்று. அதற்கு முன்னர் பலரும் பயன்படுத்தியுள்ளனர்.

🔸 பிராமணன் என்ற சொல்லின் பொருள்: மெய்ப்பொருளை (பிரம்மத்தை) உணர்ந்தவன் / மெய்ப்பொருளாய் (பிரம்மமாய்) இருப்பவன். இதற்கு சரியான எடுத்துக்காட்டு: பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🔸 பிராமணன் என்று தன்னை அழைத்துக் கொள்வதால் மட்டுமோ, ஆண்குறி-பெண்குறி தோற்றத்தில் சுற்றி வருவதால் மட்டுமோ பிராமணனாகி விடமுடியாது. தான் உடலல்ல என்ற தன்னைப் பற்றிய உண்மையை (மெய்யறிவு) உணர்ந்து, தனது தன்மையுணர்வில் நிலைபெற்று (நிலைபேறு), வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருக்கவேண்டும்.

oOo

நம்மிடமிருந்த மேன்மையான வழக்கங்களை, எவ்வாறு தங்களுக்கு ஏற்றவாறு இவர்கள் மாற்றிக் கொண்டுள்ளனர் என்று பார்ப்போம்.

🔸 ஒரு பகுதியில், பகவான் போன்ற ஒரு மெய்யறிவாளர் இருக்கிறார் எனில், அவரது தேவைகளை அப்பகுதி மக்கள் பார்த்துக் கொண்டு, தகுந்த பாதுகாப்பும் அளிக்கவேண்டும். இங்கு, மெய்யறிவாளர் என்பதை பிராமணன் என்று மாற்றி, அது தங்களை குறிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பாதுகாப்புடன், நிம்மதியாக & வசதியாக வாழ்ந்துள்ளனர்!

🔸 மேற்சொன்னவாறு ஊர்கூடி ஒரு மெய்யறிவாளரை பராமரிக்க முடியாது எனும் போது, ஒரு நபரை அவருக்கு உதவியாளராக அமர்த்தி, அவரை பார்த்துக் கொள்ளவேண்டும். அந்த உதவியாளருக்கு ஆகும் செலவை ஊரிலுள்ள வசதி படைத்த ஒரு சிலரோ, அல்லது, அனைவருமோ பகிர்ந்து கொள்ளவேண்டும். இப்போது,

> மெய்யறிவாளரை, முன்னர் கண்டவாறு, பிராமணன் என்று மாற்றலாம்.

> அடுத்தது, உதவியாளரை பசு என்று மாற்றலாம். ஏனெனில், பசு-பதி-பாசம் என்ற முப்பொருளில், எல்லா உயிர்களும் பசு என்ற கணக்கில் வரும்.

மெய்யறிவாளருக்கு உதவியாளரை கொடு = பிராமணனுக்கு பசுவை கொடு! 😃

இதை வைத்து, எண்ணற்ற பசுக்களை கறந்து, முடிந்த போது தாங்களே வளர்த்துள்ளனர்; முடியாத போது, மாட்டு வணிகனிடம் விற்று, துட்டு பார்த்துள்ளனர்.

🔸 கோயிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்

இன்று, இந்த முதுமொழிக்கு, அரசன் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று பொருள் கொள்கின்றனர். அதாவது, சட்டம்-ஒழுங்கு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற உட்பொருளை கொள்கின்றனர். அன்று?

கோயில் - கோ+இல் - இறைவனின் வீடு - இறை நிலையை அடைந்தவரின் வீடு - திருவிடம் (அசுரத்தில், சமாதி) - மெய்யறிவாளரின் திருவிடம்.

மெய்யறிவாளர்கள் இல்லாத பகுதியில் குடியிருக்க வேண்டாமென்பது சரியான பொருளாகும். இதை, "பிராமணர்கள் இல்லாத பகுதியில் குடியிருக்க வேண்டாம்" என்று திரித்து, மீட்டர் போட்டுள்ளனர். கதையும் எழுதியுள்ளனர்:

4-5 படங்காட்டிகள் ஓர் ஊர் பக்கம் வருகின்றனர். அவர்களை கண்ட குடியானவர்கள், ஓடோடி சென்று, அவர்களது கால்களில் வீழ்ந்து வணங்கி, அவர்களை ஊருக்குள் வரச்சொல்கின்றனர். அப்போது, அவர்கள், "உங்கள் ஊரில் படங்காட்டிகள் இருக்கின்றனரா?" என்று கேட்கின்றனர். அதற்கு, குடியானவர்கள், "இல்லீங்க சாமிகளே!" என்று பதிலளிக்கின்றனர். உடனே படங்காட்டிகள், "அப்படியானால் நாங்கள் ஊருக்குள் வரமுடியாது." என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்புகின்றனர்.

குடியானவர்கள் பதறியடித்துக் கொண்டு அப்பகுதி மன்னனிடம் சென்று, நடந்ததை தெரிவிக்கின்றனர். அவரும் உடனடியாக தனது குதிரையில் புறப்பட்டுச் சென்று, படங்காட்டிகளை அடைந்து, அவர்களது காலில் விழுந்து, "அண்ணாநகரில் வீடு வாங்கிக் கொடுக்கிறேன். கூகுள் பிக்ஸல் 9 புரோ வாங்கிக் கொடுக்கிறேன். டொயோட்டா வெல்ஃபையர் வாங்கிக் கொடுக்கிறேன். அன்பு கூர்ந்து, எங்களது ஊருக்கு வருகை தந்து, நன்றாக படங்காட்டி, எல்லோரையும் மம சொல்லும் மடையர்களாக மாற்றவேண்டும்." என்று கெஞ்ச, படங்காட்டிகள் தங்களது நிலையிலிருந்து இறங்கி வந்து, மன்னனை வாழ்த்திவிட்டு, ஊர் பக்கம் திரும்பினர். மன்னர் தனது தலையை தாழ்த்தி, வாயை பொத்தி, அவர்களை பின் தொடர்ந்து சென்றார்.

(அவர்களது கதையை அறுவெறுப்பாக (அசுரத்தில், விகாரம்) கொடுத்துள்ளேனே தவிர கருவை மாற்றவில்லை.)

கற்பனையென்று ஆன பிறகு, ஏன் மன்னனோடு நிறுத்திக் கொண்டார்கள்? கடவுளே வந்து இவர்களது காலில் விழுவது போன்று காட்டியிருக்கலாமே? அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது இவ்வாறு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

பொழுது இப்படியே போய்விடாது. நஞ்சின் வடிவான இவர்களுக்கும் முடிவு உண்டு.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, February 3, 2022

அனைத்து சாதிப்பெயர்களும் உயர்ந்த பொருள் பொதிந்தவையே!!


பதில் கேள்வி 👌🏽!

ஆனாலும், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்: பிராமணர் எனில் பிரம்மமாய் இருப்பவர் அல்லது பிரம்மத்தை அறிந்தவர். ஆரியப்பூசாரிகள் அல்லர். பகவான் போன்ற மெய்யறிவாளர்களுக்கு உரிய பட்டப்பெயர்.

19ம் நூற்றாண்டின் இறுதிவரை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் தங்களை பிராமணர்கள் என்றழைத்துக் கொண்டுள்ளனர். நூற்றாண்டின் இறுதியில், அன்றைய ஆந்திராவில் நடந்த ஒரு வழக்கின் முடிவில், பிராமணர் என்ற பெயரை பயன்படுத்தும் உரிமையை தங்களுடையதாக்கிக் கொண்டனர் ஆரியப்பூசாரிகள்.

🔸 முதலியார் - முதன்மையானவர்கள்
🔸 தேவர் - வடபுலத்தினர். பசி, மூப்பு, இறப்பு அற்றவர்கள்.
🔸 உடையார் - உடையவர். அனைத்தையும் உடையவர்கள். சுவாமி என்ற ஆரியச் சொல்லிற்கு சமமான தமிழ் சொல்லாகும்.
🔸 நாயக்கர் - சபையின் நாயகன் போன்றவர்கள்
🔸 வேளாளர் - மிகவும் தொன்மையான குலத்தவர். வேள் + ஆள்பவர். வேள் - ஆசை / காமம். எனில், மனதை அடக்கியாளத் தெரிந்தவர்.
🔸 செம்படவர் - சிவன் படையர்

எல்லா சாதிப்பெயர்களும் உயர்ந்த பொருள் பொதிந்தவையே. தன் மறுப்பும் (அகந்தை அழிப்பும்), தனது பணியினை செவ்வனே செய்தலுமே, ஒரு காலத்தில், எல்லா சாதியினரின் நோக்கமாகவிருந்தன! 😍

தாெடர்ந்த அரசியல் & மத படையெடுப்புகள், அந்நிய இனங்களின் ஊடுருவல்... "நாறோடு சேர்ந்த பூக்களும் நாறிப்போயின"!! 😔

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு

-- குறள் #953

Wednesday, October 27, 2021

அந்தணர் & பிராமணர்: ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல!!




பெரும்பாலான தொன்ம வரலாறுகளில், செவிவழிச் செய்திகளில், தல புருடாக்களில் இறைவன் "முதிய அந்தணராக வந்தார்" என்ற வரியைக் காண முடியும். இது பற்றி ஓர் அன்பர் பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️ வருத்தப்பட்டார் (அதாவது, "வேறு சாதியினர் வடிவில் இறைவன் தோன்றமாட்டாரா?" என்பது அந்த அன்பர் கேட்க வந்த கேள்வி). அதற்கு பகவான், ஆறுதலாக, அக்கதைகளில் பதிவாகியிருக்கும் செய்தியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்.

அந்தணர் என்றதும் ஒரு குறிப்பிட்ட ஒப்பனை / இனம் நம் மனதில் தோன்றுவது போல் நமக்கு கொம்பு சீவி வைத்துள்ளனர். இது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த கைங்கர்யமாகும்.

அந்தணன் என்ற சொல்லுக்கு அறவோன், தூயவன், பிராமணன், எவ்வுயிரையும் தன்னுயிர் போல் காண்பவன் என்று பல பொருட்கள் உண்டு. இவையனைத்துமே சிவபெருமானைக் குறிக்கின்றன.

🔹அறவோன் எனில் அற வடிவினன் அல்லது அறத்தினின்று வழுவாதவன். அறம் எனில் நீதி. நீதிக்கு இறைவன் என்றொரு பொருள் உண்டு. காரைக்கால் அம்மையார் 🌺🙏🏽🙇🏽‍♂️ இறைவனை "அறவா" என்றழைக்கிறார்.

🔹தூயவன் எனில் மாசு சிறிதும் அற்றவன் என்று பொருள். மாசு என்பதற்கு மாயை, இருள், கருமை, விபரீதம் என்று பல பொருட்கள் உள்ளன. இவையனைத்துமே உடல் அல்லாத நம்மை, நாம் உடலாகக் கருதும் தன்மையைக் குறிக்கும். இந்த மயக்கம் தீர்ந்தவரே தூயவன். சிவபெருமானின் பெயர்களில் ஒன்று மாசிலாமணி (மாசு இல்லா மணி).

🔹பிராமணன் எனில் பிரம்மமாய் இருப்பவன். பிரம்மம் எனில் என்றும் மாறாதது. சிவதத்துவம் மாறாததை / அசைவற்றதைக் குறிக்கும். சக்தி / பெருமாள் தத்துவம் மாறுவதை / அசைவதைக் குறிக்கும்.

🔹சிவபெருமான் எனில் சிவநிலையில் உள்ள பெருமான். காண்பானிலிருந்து காட்சி வேறுபடாமலிருக்கும் நிலையே சிவநிலை. மொத்த அண்டமும் தானாக தோன்றும் இந்த நிலையில் பிறவுயிர்கள் மட்டும் பிரிந்து தனியாக தோன்றுமா? எவ்வுயிரையும் தன்னுயிராக உணர சிவநிலையில் உள்ள பெருமான்களால் மட்டுமே முடியும். இவர்களே உண்மையான அந்தணர்கள்.

எனில், சிவபெருமான் அந்தணனாகத்தான் தோன்ற முடியும். பிறவுயிர்களை தன்னிலிருந்து வேறாகக் காண்பவர் சிவபெருமான் அல்லர். ஆகையால், சிவபெருமான், அந்தணன் & பிராமணன் ஆகிய சொற்கள் ஒரு பொருட் பன்மொழியாகும். சிவபெருமானை - சிவநிலையில் இருப்போரை - குறிக்கும் சொற்களாகும். ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮