Showing posts with label இயேசு. Show all posts
Showing posts with label இயேசு. Show all posts

Sunday, December 26, 2021

பரங்கி மதத்தினரின் "ஐ ஏம் தட் ஐ ஏம்" (I am that I am) சடங்கு!! 😁

என்னப்பா தசமபாக மதத்தின் தேவர்களே & உலகின் தற்போதைய தேவாதிதேவர்களே^, டிசம்பர் 25 முடிஞ்சிடுச்சு! இன்னும் உங்க "ஐ ஏம் தட் ஐ ஏம்" (I am that I am) சடங்கு நடக்கலையே! 🤔

😁

(^ - வேறு யார்? உலகக் கொல்லிகளான வெள்ளையர்கள்தாம். ஆனால், தற்போது இந்த இடத்தைப் பிடிக்க சீனர்கள் பெருமுயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.)

ஒவ்வொரு ஆண்டும், இஸ்ரவேல் மெய்யியலளார் யேசு பிறந்ததாகக் கருதப்படும் டிசம்பர் 25 சமயத்தில், பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ சொற்களை "பயன்படுத்தி" 😉, தங்களது டுபாக்கூர் மதமே மேலானதென்று பிட் தயாரித்து வெளியிடுவார்கள். இந்த முறை அப்படியேதும் தென்படவில்லை. சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக உலகை, குறிப்பாக பாரதத்தை, சுரண்டி, பிழிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ருசி கண்ட பூனைகள். சற்று தாமதமாகக்கூட ஊழியம் நடக்கலாம். பார்ப்போம்.

26/11/1935 அன்று சுவாமி யோகானந்தா பகவானை சந்தித்தார். உடன் வந்த சுவாமியின் பரங்கிச் செயலாளர் சி ஆர் ரைட் (C R Right) பகவானிடம் சில கேள்விகளைக் கேட்டார். பதிலளிக்கும் போது, பகவான், "பைபிளில் வரும் 'ஐ ஏம் தட் ஐ ஏம்' தான் உள்ளபொருளை மிகச்சரியாக சுட்டிக்காட்டுகிறது" என்று கூறிவிட்டார். இது தான் பரங்கியரின் "வருடாந்திர 'ஐ ஏம் தட் ஐ ஏம்' சடங்கிற்கு" அடிப்படை!

எந்த சூழ்நிலையில் இந்த பதிலை பகவான் கூறினார் என்ற குறிப்பில்லை. ரைட் எப்படிப்பட்டவர் என்ற குறிப்புமில்லை. எல்லா சமயங்களிலும் பகவான், தான் கூற விரும்பியதை கூறியதில்லை. சில சமயம், அமைதியாக இருப்பார். சில சமயம், தனது பதிலைக் கூறுவார். சில சமயம், வந்தவர் கேட்க விரும்பிய பதிலைக் கூறி இடத்தை காலி செய்யவைப்பார். ☺️ சில சமயம், "கீதையும் பைபிளும் குர்ரானும் ஒன்றுதான்" என்று நகைச்சுவையும் செய்வார்!! 😂

குர்ரானைப் பொருத்தவரை, புவிப்பந்தை நிலை நிறுத்துவதற்காகத்தான் மலைகளை இறைவன் தோற்றுவித்திருக்கிறார். 🤣 பைபிளை பொருத்தவரை, உலகத்தை தப்பும் தவறுமாக படைத்த இறைவன், பின்னர், அதை சீர் செய்ய அவரது ஒரே மகனை அனுப்பிவைத்தார். 🤦

இந்த குபீர் காமெடிகளை அறியாதவரா பகவான்? வந்தவர், "இவையெல்லாம் கீதைக்கு சமம்" என்று பகவான் வாயால் கேட்க விரும்பியிருப்பார். பகவானும் அவர் விரும்பியதைக் கூறி, இடத்தை காலி செய்ய வைத்திருப்பார். பகவானைத் தேடி வந்த பெரும்பாலான பரங்கியர்கள், தங்களது டுபாக்கூரே பெரிது என்று நிலைநாட்டவும், பகவானை மட்டம் தட்டவும், ஆழம் பார்க்கவும், இதர "ஊழியங்களை" செய்யவும் வந்தவர்களே! வெகு சிலரே பகவானின் வழிகாட்டுதலுக்காக வந்தவர்கள்.

இன்றும் திருவருணைக்கு வரும் பரங்கியர்களில் ஓரிருவர்தாம் பகவானுக்காக வருபவர்கள். மீதமனைத்தும் "ஊழியம்" செய்வதற்குத்தான் வருகின்றன. இதில் ஒரு கூட்டம் பகவானிடம் குறை காண்பதற்காக, நம்மூர் கருங்காலிகளின் துணையுடன், வெகுவாக உழைத்துக் கொண்டிருக்கிறது. எதற்காக? என்றைக்காவது தேவைப்பட்டால் பகவான் மீது கல்லெறிவதற்காக! அவர்களது நிறுவனர்தான் உலகின் தலைசிறந்த மெய்யறிவாளர் என்று காட்டுவதற்காக!! (தேவைப்பட்டால், மெய்யறிவாளர். இல்லையெனில், பரலோகத் தந்தையின் ஒரே மகன். ஆமென்.)

மீண்டும் பகவானிடம் திரும்புவோம்.

"ஐ ஏம் தட் ஐ ஏம்" என்ற சொற்றொடர்தான் பரம்பொருளை மிகச்சரியாக குறிக்கிறதென்று பகவான் நினைத்திருந்தால் தனது பாடல்களில், பேச்சில் இந்த சொற்றொடரையே பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், பகவான் பயன்படுத்தியது: "நான்" & "உள்ளபொருள்"!! இவற்றிலும், "உள்ளபொருள்" எனும் சொல் பகவானது தனி பங்களிப்பாகும். எனவே, "ஐ ஏம் தட் ஐ ஏம்" என்பது கிறித்தவர்களுக்கானது. உலக மக்கள் யாவருக்குமானதல்ல.

இறுதியாக, எல்லாவற்றையும் அரைகுறையாக, தலைகீழாக புரிந்துகொண்டு, புரிந்துகொண்டதை வைத்து நோவாமல் கொள்ளைக் காசு பார்த்து, எந்த இடரிலும் மாட்டிக் கொள்ளாமல், வானவர்களாக வலம் வரவேண்டுமென்று விரும்பும் பரங்கியர்களின் மத நம்பிக்கைகளைப் பற்றி சற்று பார்ப்போம்.

🔸 குறுக்கை: இது அழியும் உடலைக் குறிக்கும். அழியும் பொருளை வணங்கலாமா? ஆனால், இதைக் கண்டால் உள்ளம் உருகுவார்கள்! ☺️

🔸 குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இயேசு: இங்கு இயேசு என்பது மனமாகும். அறையப்பட்ட இயேசு என்பது பல காலம் வடக்கிருந்து சிதைக்கப்பட்ட / ஒடுக்கப்பட்ட / அடக்கப்பட்ட மனமாகும். மொத்தத்தில், ஒரு கிறித்தவன் இவ்வுலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதை சித்தரிக்கும் உருவமாகும். இதைக் கண்டதும் அவர்களுக்கு பெருமகிழ்ச்சி தோன்றவேண்டும். ஆனால், கண்களில் நீர் தளும்புவது முதல் "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா!" என்று ஒப்பாரி வரை பலவித சோக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்!! 🤦

இந்த கேடு கெட்டவர்களைப் பற்றி எழுத வேண்டுமானால் இணையதள சர்வர்கள் சூடாகுமளவிற்கு எழுதலாம். ஆனால், இவர்களின் தரத்தை உணர்வதற்கு இந்த இரு குறிப்புகள் போதுமானதாகும்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Sunday, November 14, 2021

இஸ்ரவேலர் இயேசுதான் கபாலீசுவரர் - திருமா!! 😆😂😂🤣🤣

திருமாவளவன் பேசிய காணொளி: https://youtube.com/shorts/VaVoMfCHNP8?feature=share

ஒரு திரைப்படத்தில் செந்திலைப் பார்த்து கவுண்டமணி சொல்வார், "ஃப்ரீயா கெடச்சா பினாயில கூட குடிப்படா நீ"!! 😄 இது போன்று, "பொர கிடைக்குதுன்னா என்ன வேணும்ன்னாலும் பேசுவடா நீ" என்று யாராவது இவரை பார்த்துச் சொன்னால்தான் அடங்குவார் போலிருக்கிறது. 👊🏽👊🏽

நேற்று அயோத்தியை மீட்டுவிட்டோம். நாளை கபாலீச்சரத்தை நாம் மீட்க முயற்சி செய்தால் என்ன செய்வதென்று யோசித்து இந்த ஊழியத்தில் இறங்கியுள்ளனர்.

இன்று நாம் கபாலீச்சரம் என்று வணங்கும் திருத்தலம் உண்மையான கபாலீச்சரமன்று! தற்போது சாந்தோம் என்றழைக்கப்படும் தசமபாக மதத்தின் தொழிற்கூடம் இருக்குமிடத்தில்தான் அன்று உண்மையான கபாலீச்சரம் ஓங்கி உயர்ந்திருந்தது. அத்திருத்தலத்தை அழித்து, அங்கிருந்த மூலவரை உடைத்தெறிந்தான் பரங்கி கொடூரனான வாஸ்கோட காமா! உடைத்தெறியப்பட்ட அம்மூலவரைக் கொண்டுவந்து இப்போதிருக்குமிடத்தில் வைத்துவிட்டனர் நம் முன்னோர்கள்.

புதையல் வைக்கப்பட்ட இடத்தின் அடையாளத்தை அழித்துவிட்டால் புதையல் அழிந்துபோகுமா? அடையாளத்தை இடமாற்றி வைத்துவிட்டால் புதையல்தான் தானாக இடம் பெயர்ந்துவிடுமா? மூலவரை இடமாற்றிவிட்டால் அதற்கடியில் சமாதியாகியிருக்கும் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ இடம்பெயரமாட்டார். அவ்விடத்து மண்ணை முற்றிலுமாக அகற்றினாலும் அவர் வேறெங்கும் போகமாட்டார். அவரது சமாதியின் மீது இன்று நிற்கும் தொழிற்கூடம் ஒரு நாள் அகற்றப்படும். காழியூர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை" என்று தாெடங்கும் பதிகம் பாடி பூம்பாவை அம்மையாரை உயிர்பித்த அந்த திருத்தலம் மீண்டும் நம் வசமாகும். கபாலீசரை மீண்டும் தொழும் பேறு நமக்கு கிட்டும்.

oOOo

இந்த காணொளியில் சொல்வதுபோல் இஸ்ரவேலர் ஈசன் என்றழைக்கப்படும் தகுதி பெற்றவரா?

தன்னை விட்டு உலகை வேறொன்றாக காணாத நிலையே சிவநிலை. எனில், பரங்கியரின் திரைக்கதையின் படி, இஸ்ரவேலர் குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் போது, உள்ளபொருளை தந்தை எனவும், அவரிடம் மக்களை மன்னிக்கும்படியும் கோரிக்கை வைக்கிறார். இந்த திரைக்கதை உண்மையெனில் தான், மக்கள், இறைவன் என நம்மைப் போன்று உலகைக் காண்பவரை எவ்வாறு ஈசனென்று ஏற்றக் கொள்ளமுடியும்?

அவருடைய இனம் மேம்பட வேண்டுமென அவர் உழைத்திருக்கலாம். போராடியிருக்கலாம். செயற்கரிய சில செயல்களை புரிந்திருக்கலாம். ஆனால், சிவநிலையை அடையவில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 4, 2021

"நான் இயேசுவின் தூதுவர்... 3வது நாள் நானும் உயிர்த்தெழுவேன்... சவக்குழியில்சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி!!"

(https://m.dinamalar.com/detail-amp.php?id=2833095)

ஒருவிதத்தில் கிறித்தவம் பைசா நகர சாய்கோபுரம் போன்றது. கட்டிடத்தைக் கட்டத் தெரியாமல் கட்டி, அது சாயத் தொடங்கியவுடன், உலக அதிசயம் என்று கதை விட்டு இன்று வரை காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பரங்கியர்கள். உண்மையில் அது "கட்டிடக்கலையின் அவமானம்" ஆகும்! 👊🏽

இது போன்றே, இஸ்ரவேலர் இயேசுவின் அறிவுரைகளை வைத்து ஒரு சமயத்தை வளர்த்தெடுக்கத் தெரியாமல், கூட்டம் சேர்த்து காசு பார்க்கும் தொழிலாக, அரசுகளை ஆட்டிப்படைக்கும் கருவியாக வளர்த்துவிட்டார்கள். மக்களை நெறிப்படுத்தும் சமயமாக இல்லாமல், மூளையை மழுங்க வைக்கும் மதமாக ஆக்கிவிட்டார்கள்! இதனால் ஏற்பட்ட பல மோசமான விளைவுகளில் ஒன்று: இணைக்கப்பட்டிருக்கும் படத்திலுள்ள நிகழ்வு - தேவையற்ற உயிர்பலி!!

கதைகளும் குறியீடுகளும் உணர்த்தும் உண்மைகளை உணராமல், அவற்றை உண்மை என்று நம்பி மக்கள் மோசம் போகிறார்கள்.

☀️ குறுக்கை - உயிரற்றதை, குறிப்பாக உடலைக், குறிக்கும். (வரலாற்றின் படி, இது ஒன்றும் மேன்மையான குறியீடு அல்ல. குற்றவாளிகளை தண்டிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கருவியாகும்.)

☀️ குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இயேசு - குறுக்கை என்பது உடல். இயேசு என்பது மனம். பல காலம் பலவித உத்திகளைக் கையாண்டு (வடக்கிருந்து) பலவீனமாக்கப்பட்டு, அடக்கப்பட்ட மனம் என்பதைக் குறிக்கவே இயேசு குற்றுயிராக, தொங்கிக்கொண்டிருப்பது போன்று சித்தரித்துள்ளனர். அதாவது, இவ்வுருவைக் கண்டதும் "எப்பாடுபட்டேனும் மனதை அட(ழி)க்கவேண்டும்" என்ற எண்ணம் ஒரு கிறித்தவனுக்குத் தோன்றவேண்டும்.

(இவ்வுருவை உருவாக்கியவர், பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்றொருவரை சந்தித்திருந்தால் சித்தரிப்பு இப்படி இருந்திருக்காது. "மனதின் உருவை மறவாது உசாவ (ஆராய) மனமென ஒன்றில்லை" என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற் போல் ஓர் உருவை உருவாக்கியிருப்பார்.)

☀️ உயிர்த்தெழுதல் - பல போராட்டங்களுக்குப் பின்னர் கிடைக்கும் சமாதி துய்ப்பின்போது கிடைக்கும் மெய்யறிவு. இதுவரை நம்மைப் பற்றி தவறாக புரிந்துகொண்டிருப்போம். இதன் பிறகே நாம் யாரென்று சரியாக உணர்ந்துகொள்வோம். மெய்யறிவு பெறுவதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி நாம் நாம்தான். வேறுபாடு அறிவு மட்டும்தான். இதனால்தான் குறுக்கையில் அறையப்பட்டிருப்பதும் இயேசுவாகவும், உயிர்த்தெழுவதும் இயேசுவாகவும் சித்தரித்துள்ளனர். வேறுபாடு வெளிப்புறத் தோற்றம் மட்டும்தான்.

உயிர்த்தெழுதல் = மெய்யறிவு பெறுதல்.

(நல்ல வெள்ளிக்கும் உயிர்த்தெழுதல் ஞாயிறுக்கும் ஏன் 3 நாட்கள் இடைவெளி, இச்சடங்குகள் எங்கிருந்து வந்துள்ளன என்று ஆராய்ந்தால் "உயிர்த்தெழுதல்" என்பதன் பொருள் முற்றிலும் மாறுபடும். ஏன் கிறித்தவம் மேற்கண்ட பொருளில் பயன்படுத்துகிறது என்பதும் புரியும். இதை வேறொர் இடுகையில் பார்ப்போம்.)

oOOo

இஸ்ரவேலரின் இனம் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களிடம் அடிமையாக இருந்தது. கல்வி மறுக்கப்பட்டு பண்பாடற்று இருந்தது. இந்த இனத்தை உய்விக்கவே இயேசு பாரதம் வந்து மெய்யறிவியல் கற்றுத் திரும்பினார். பல பாடுகளும் பட்டார். ஆனால், தோல்வியடைந்தார். மீண்டும் பாரதத்திற்கே திரும்பி, காஷ்மீரத்தில் சமாதியடைந்தார். ஆனால், அவரது அறிவுரைகளோ தகுதியற்றவர்களிடம் சிக்கி உருத்தெறியாமல் போய்விட்டன.

தூக்கி எறியப்படவேண்டிய குறுக்கையை மதத்தின் சின்னமாக்கிவிட்டனர் (குறுக்கை = உயிரற்ற உடல் = பிணம் = பிணக்குறியீடு). அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவைக் கண்டதும் "மனதை அழி" என்ற எண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா" என்று ஒப்பாரி வைக்கும்படி செய்துவிட்டனர்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, July 23, 2020

இன்று கண்ணில் பட்ட சுவிசேஷ ஊழியம்: கண்ணாலுயா!! 😝

நாறோடு பூவைச் சேர்த்து பூவையும் நாற வைத்திருக்கிறார்கள்!!

திரு #கண்ணபிரான் 🌺🙏🏽 உணர்த்துவது எல்லையில்லாப் பெருமகிழ்ச்சி: உலகம் மகிழ்ச்சியின் வடிவு. வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது.

#இஸ்ரவேலரை வைத்து பாவாடைப் பரங்கிப் பன்னாடைகள் உணர்த்துவது ஒப்பாரி: 2000 வருசத்துக்கு முன்னாடி
உன்ன கொன்னுட்டாங்களேயா!!

(இந்த ஒப்பாரி உத்தி வருவது கிரேக்க-ரோமானியர்களிடமிருந்து. நமது முன்னோர் விரும்பியது நீதி, நியாயம், தர்மம், வீரக் கதைகளை. கிரேக்க-ரோமானியர் விரும்பியது அழுகையை. ஒரு நாடகம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு அழுகையை வரவழைக்கிறதோ, அவ்வளவு தூரம் அது அவர்களுக்கு பிடித்துப்போகும். இது தான் ஒப்பாரி உத்திக்கு அடிப்படை.)

கண்ணபிரானை இவர்களது இஸ்ரவேலரோடு சேர்த்து, பிரானையும் வருத்தப்பட வைத்திருக்கிறார்கள்! பூவை நாற வைத்திருக்கிறார்கள்!! ("எங்களோடு சேர்ந்தால் உங்களுக்கும் இந்த நிலைமைதான்" என்று சொல்ல வருகிறார்கள் போலிருக்கிறது! 😜)

"#வருத்தப்பட்டு #பாரம் #சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள். இளைப்பாறுதல் தருகிறேன்." என்பது இஸ்ரவேலர் சொன்னது. இஸ்ரவேலர் பாரதம் வந்தது அத்வைதம் & பௌத்தம் கற்க. ஒப்பாரிக்காக அல்ல.

நாம் காணும் உலகம் தோற்ற மாத்திரம்தான். உண்மையல்ல. கனவு போன்றது. கனவு காண்பவனுக்கு, தான் காண்பது கனவு என்ற அறிவு இருந்தால் எவ்வாறு கனவால் பாதிப்படையமாட்டானோ, அவ்வாறே நமது உடல், உலகம் எல்லாம் தோற்ற மாத்திரம் என்ற அறிவு இருந்தால் போதும். எதுவும் நம்மை பாதிக்காது. இவ்வறிவு கிடைக்கும் வரை வாழ்க்கை என்பது வருத்தப்பட்டு பாரம் சுமப்பது போன்றது. அறிவு கிடைத்த பின், வாழ்க்கை என்பது இளைப்பாறுவது போன்றது!!

இஸ்ரவேலரின் இனம் நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த இனம். கல்வியறிவு இல்லாதது. பண்படாதது. இதனால்தான் இஸ்ரவேலரின் அறிவுரைகள் மிகவும் திரிந்துபோயின. இன்றோ... அது ஒரு பன்னாட்டு MLM தொழில்!!!

💥💥💥💥💥

இந்த ஊழியப் படத்தை நான் கண்டெடுத்தது திரு. #ஸ்டான்லி #ராஜனின் முகநூல் பக்கத்தில். இதற்கு அவர் செய்த எதிர்ஊழியத்தை கீழே இணைத்துள்ளேன். படித்துப் பரவசமடையவும். #கண்ணாலுயா... 😜

💥💥💥💥💥

ஆக பகவான் கண்ணன் சிலுவை சுமந்து, சிலுவையில் செத்து உலக மக்களை பாவத்தில் இருந்து மீட்டெடுத்திருக்கின்றார், ஆனால் கிறிஸ்தவ இம்சைகள், சும்மா கூட நடந்து சென்ற இயேசுவினை கடவுளாக்கிவிட்டன‌!

இந்த உண்மையினை உலகுக்கு சொல்லிவிட்ட கிறிஸ்தவர்களுக்கு நன்றி

இனி சிலுவைகளெல்லாம் சங்கு சக்கரமாகட்டும், தேவாலயங்களெல்லாம் விஷ்ணு ஆலயமாகட்டும். பைபிளுக்கு பதில் கீதை முழங்கட்டும்

ஓயினும் அப்பமும் என்பது பொங்கலும் தயிர்சாதமுமாக மாறட்டும்

தேவமாதா என்பவர் யசோதா எனும் உண்மை வெளிவரட்டும், ஏரோது என்பவன் கம்சன் என்பதும், பீட்டர் என்பவர் பலராமன் என்பதும் இனி நிலைபெறட்டும்

பிரைஸ் த கிருஷ்ணா. கண்ணாலூயா..

#இயேசு இரண்டாம் வருகை என்பது இதுதான், ஆம் அவர் இப்போது கிருஷ்ணனாக வந்துவிட்டார் அவ்வளவுதான்..

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽😌

Friday, April 24, 2020

இஸ்ரவேலர் யேசு 100% சுத்தமான அக்மார்க் "நிறைஞானி"!! 😁

👆🏽 இந்த சான்றிதழ் போதுமா பரங்கிகளே? 🤭

எப்படியாவது தங்களது 🤮 மதத்தை நம் சமயத்தை விட உயர்ந்தது எனவும், இறந்த பிறகும் அடி வாங்கும் மாட்டுத் தோல் போல் இறந்து சுமார் 2000 ஆண்டுகளாகியும் இன்னமும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் இஸ்ரவேலர் யேசுவே தலைசிறந்த மெய்யறிவாளர் எனவும் நிரூபிக்க இந்த பரங்கிப் பாவாடைகள் படும் பாடு... 🤧



தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத இவர்களின் மற்றுமொரு தில்லாலங்கடி... மன்னிக்கவும்... முயற்சி தான் இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில இடுகை (இதன் முகநூல் முகவரி: https://www.facebook.com/129262133864798/posts/1697841883673474/). இதை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு முன் வேறு ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

2006-ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்தது. அச்சமயம் கட்டுமரம் எதிர்கட்சி தலைவராக இருந்தது. அப்போது ஒரு திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதியது. அப்படத்தில், ஆட்சியில் இருக்கும் ஒரு பெண் முதலமைச்சர், இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் குத்தாட்டம் ஆடுவது போன்று சித்தரித்திருந்தது. இப்படத்திற்கு குமுதம் வார இதழ் தனது கருத்துரையை இவ்வாறு முடித்திருந்தது: தயவு செய்து, யாராவது உடனடியாக இவருக்கு ஒரு முதலமைச்சர் நாற்காலியை வாங்கிக் கொடுக்கவும். இல்லையெனில், இவர் மீண்டும் கதை-வசனம் எழுத ஆரம்பித்துவிடுவார்!! 😝

இது போன்று பரங்கிப் பாவாடைகள் இன்னொரு தில்லாலங்கடி முயற்சியில் இறங்கி விடக்கூடாது என்பதற்காகத் தான் இவ்விடுகையின் ஆரம்பத்திலேயே, நம் அனைவரின் சார்பாக, அக்மார்க் சான்றிதழ் கொடுத்துவிட்டேன். (ஏன் அக்மார்க்? அவர்கள் தாம் இஸ்ரவேலர் நல்லவர் என்று ருசித்துப் பார்த்தவர்களாயிற்றே! 😆)

இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில இடுகையின் தமிழாக்கம்:

"குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் போது, இயேசு ஏன் 'தந்தையே' என்று அழைத்தார்" என்று பகவானிடம் 🌺 🙏🏽கேட்டேன். அவர் ஒரு நிறைஞானி என்ற பட்சத்தில், எல்லாவற்றையும் கானல்நீர் காட்சியாக (அல்லது திரையில் தோன்றும் காட்சியாக) கண்டிருப்பார். எனில், இருப்பற்ற தோற்ற மாத்திர காட்சிகளுக்காக அவர் வருத்தப்பட்டிருக்க மாட்டார். (தன்னை வேறாகவும், மக்களை வேறாகவும் இறைவனை வேறாகவும் கண்டதினால் தான் மக்களுக்காக இறைவனிடம் வேண்டினார். ஆகையால், இயேசு ஒரு நிறைஞானி அல்ல என்பது முடிவு.) இதற்கு #பகவான் #ரமணர், "மெய்யறிவு பெற்று விடுதலை அடைந்த பின்னரும் சில ஞானியர் துன்பப்படுவது போல் தோன்றும். இது உடலளவு மட்டுமே. மீதமிருக்கும் ஊழ்வினையால் உண்பது, உறங்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் இவற்றால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை." என்று விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வு எந்த நூலில் பதியப்பட்டிருக்கிறது? யார் கேள்வி கேட்டது? எந்த சூழ்நிலையில் பகவான் இந்த விளக்கம் அளித்தார்? போன்ற எந்த குறிப்புகளும் இந்த இடுகையில் இல்லை. இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு பகவானது படம், பெயர், ஆசிரமம் போன்றவற்றை வைத்து முட்டுக் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்!! 😠

பகவான், ஓரிடத்தில், "நீயே எல்லாம்!" என்பார். இன்னோரிடத்தில், "நீ ஒன்றுமே இல்லை!!" என்பார். 😃 என்ன சொல்கிறார் என்பது மட்டும் முக்கியமல்ல; யாருக்கு சொன்னார், எந்த சூழ்நிலையில் சொன்னார் என்பனவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சில பரங்கிப் பாவாடைகள் தங்களது 🤮 மதத்தை பெரிதென நிலை நாட்டவும், தங்களது மத நிறுவனரே உயர்ந்தவர் என நிலை நாட்டவும், பகவானை சோதிக்கவும் வந்திருப்பர். சில சமயம், பகவான் தான் சொல்ல வேண்டியதை சொல்லுவார். சில சமயம் தன்னிடம் கேள்வி கேட்டவர் விரும்பியதைச் சொல்லி இடத்தை காலி செய்ய வைப்பார். 😁 மேற்கண்ட விளக்கம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பகவானிடமிருந்து வெளிப்பட்டது என்று தெரியவில்லை.

ஒரு #மெய்யறிவாளர் (#ஞானி) தான் மட்டுமே மாறாத, அழியாத, சுயஒளி கொண்ட #உள்ளபொருள் என்பதையும், தனது உடல் முதற்கொண்டு தான் காணும் யாவும் மாறக்கூடிய, அழியக்கூடிய, சுயஒளியற்ற, இருப்பற்ற தோற்றக் காட்சிகள் என்பதையும் நன்கு உணர்ந்தவர். சமீபத்தில் கூகுள் நமது திறன்பேசி மூலமாக, நாம் விரும்பும் இடத்தில் புலி, சிங்கம், சிறுத்தை போன்ற மிருகங்களை முப்பரிமாண வடிவில் தோற்றுவிக்கும் வசதி செய்து கொடுத்தது. சிலர் இவற்றை வைத்து சிறு குழந்தைகளை பயமுறுத்தி விளையாடியிருப்பர். இவ்வுருவங்கள் உண்மை என்று அஞ்சிய/நம்பும் குழந்தைகளைப் போன்றவர்கள் அஞ்ஞானிகள். இவை வெறும் உருவங்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் மெய்யறிவாளர்கள். இருவருக்கும் தோன்றும் காட்சி ஒன்றுதான். ஆனால், மெய்யறிவாளர்கள் அதன் உண்மைத்தன்மையை உணர்ந்தவர்கள்!

திறன்பேசியில் தோன்றும் புலி உறுமுவதை வைத்து, அதற்கு பசிக்கிறது போலிருக்கிறது என்று எண்ணி, "கூகுளே, இந்த புலிக்கு உணவிடு!!" என்று கூவுபவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? 🥴

பரங்கிப் பாவாடைகள் கிண்டிய கதாபாத்திரத்தை தான் கிண்டலடிக்கிறேன். உண்மையான #இஸ்ரவேலர் இயேசுவை அல்ல. இன்று அமெரிக்கா, கனடா என்று அனைவரும் ஓடுவது போல், அன்று அனைவரும் அனைத்து வளங்களும் கொண்ட செழிப்பான பாரதத்தாயை நோக்கி வந்தனர். அப்படி வந்தவர்களில் இவரும் ஒருவர். இங்கே வந்து அத்வைதமும் பௌத்தமும் கற்று, தன் நாட்டிற்குத் திரும்பி, அடிமை மனப்பான்மையுடன் வாழ்ந்துவந்த தனது மக்களை உய்விக்க போராடினார். யாரை உய்விக்க போராடினாரோ அவர்களாலேயே துரத்தியடிக்கப்பட்டார். மீண்டும் பாரதம் திரும்பி, பல காலம் வாழ்ந்து, காஷ்மீரத்தில் சமாதியானார்.

இவரது இனம் பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தது. கல்வியறிவற்றது. பண்படாதது. ஆகையால் இவரது அறிவுரைகள் மிகவும் திரிந்து போயின.

💥 #குறுக்கை - உயிரற்ற உடல். தூக்கி எறியவேண்டியது. ஆனால், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!!

💥 குறுக்கையில் சித்ரவதை செய்யப்பட்டு அறையப்பட்டிருக்கும் யேசு - பெரும் போராட்டத்திற்கு பின், நீண்ட கால தவத்திற்கு பின் அழிக்கப்பட்ட மனம். கொண்டாடப்பட வேண்டிய சின்னம்! ஆனால், இதைக் கண்டு அழுகிறார்கள்!!

💥 #உயிர்தெழுந்த #யேசு - மனம் அழிந்த பின் வெளிப்படும் தூய்மையான உள்ளபொருள் (பரம்பொருள் / மெய்பொருள்). மனதையும் உள்ளபொருளையும் குறிக்க #இயேசு என்ற ஒருவரையே பயன்படுத்தியதால் தான் அனைத்து குழப்பமும்!!

பரங்கியரின் மதம், இத்தாலியிலுள்ள பைசா கட்டிடம் போன்றது. அடித்தளம் சரியில்லாதது. சரிந்து கீழே விழும் வரை, "ஐயா வாங்க! அம்மா வாங்க! சரியும் கட்டிடம் பாருங்க!" என்று கூட்டம் சேர்த்து காசு பார்க்கலாம். இது தான் நடந்து கொண்டிருக்கிறது! 👊🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி!! 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Saturday, April 20, 2019

தமிழ்நாடு இந்து கோயில் எரிப்பு துறை உதயம்!! 😁

🔷 கடந்த சனிக்கிழமை அன்று பாரிஸ் நகரில் உள்ள #நோட்ரே #டாம் (Notre Dame) கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மரக்கூரை முழுவதுமாக எரிந்து விழுந்துள்ளது.


இது போன்றொரு நிகழ்வு நம் நாட்டிலுள்ள பழம்பெரும் திருத்தலமொன்றில் நிகழ்ந்திருக்குமேயானால், இந்நேரம் வேசி ஊடகங்களும், ஒழுக்கங்கெட்ட கருங்காலி புளுத்தறிவுவாதிகளும் பொரை  சம்பாதித்துக் கொண்டிருப்பர்! 😏 "இவனுக்குப் பிறந்தேன். இவனோடு வாழ்கிறேன்" என்று கூட சொல்ல முடியாத ஒரு ஜென்மம், "தன் இருப்பிடத்தை கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இந்த பொம்மையா உலகைக் காக்கப் போகிறது?", என்று மூலவரைப் பற்றி செய்தி வெளியிட்டு பெரிய பொரை சம்பாதித்திருக்கும்!! 😁


🔷 நோட்ரே டாம் கட்டிடத்தை சரி செய்ய நிதி திரட்டப்படுகிறது. இரண்டே நாட்களில் சுமார் ரூ. 8,000 கோடி பணம் (1 பில்லியன் யூரோக்கள்) சேர்ந்துள்ளது!!


இங்கு இவ்வளவு பணம் சேராது. அப்படி சேர்வதாக இருந்தால் நம் கருங்காலி அரசியல்வியாதிகள், பழம்பெரும் தலங்களை எரித்து, மீண்டும் அவற்றை சீர் செய்வதை தலைமுறை தொழிலாக, குலத்தொழிலாக ஆக்கிவிடுவர்!! 😜 அல்லது சிலை திருட்டு துறை போன்று கோயில் எரிப்பு துறை ஒன்றை உருவாக்கி விடுவர்!!! 😝


(வெள்ளையர்களை விட நாம் எண்ணிக்கையில் அதிகம் இருந்தும், அதிகம் உழைத்தும் ஏன் நம்மிடம் அதிக பணம் தங்குவதில்லை? இருப்பதையும் ஏன் நாம் கொடுக்க முன் வருவதில்லை? இதைப் பற்றி இன்னொரு இடுகையில் பார்ப்போம்.)

🔷 தீ விபத்தில் நோட்ரே டாம் கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், பல புராதன பொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. அங்கிருந்த ஒரு பெரிய #குறுக்கை (#சிலுவை) குறியீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படாமல் போனது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.


முதலில் குறுக்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவில், குறுக்கை ஐம்பூதங்களால் ஆன உயிரற்ற உடலைக் குறிக்கும். உயிரற்ற உடல் பிணத்திற்கு சமம். இவ்வகையில், குறுக்கை ஒரு பிணக்குறியீடாகும். மேலும், இஸ்ரவேல் மெய்யறிவாளர் இயேசுவிற்கு முன்னரும் பின்னரும் குறுக்கை, குற்றவாளிகளை தண்டிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வகையில், குறுக்கை குற்றவாளிகளை குறிக்கும் குறியீடாகிறது. இப்படிப்பட்ட பொருள்களைத் தரும் ஒரு குறியீட்டையா அவர்களது முன்னோர்கள் வணங்கச் சொல்லி இருப்பார்கள்?


குறுக்கை முழுமையடைவது அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவின் உருவத்தோடு. அறையப்பட்டிருக்கும் இயேசு அழிக்கப்பட்ட மனதைக் குறிப்பார். (உண்மையில் மனது, மாயை இவைதான் சாத்தானாகும். இங்கு அறையப்பட வேண்டியது சாத்தானாகும்.) உடலெனும் குறுக்கையில் மனமெனும் சாத்தானை அறைந்தால் வெளிப்படுவது (உயிர்த்தெழுவது) இறைவனாகும். (மனம், இறைவன் இரண்டிற்கும் இயேசு என்னும் ஒரே உருவத்தை பயன்படுத்தியதால்தான் எல்லாக் குழப்பங்களும்!! ஆனால், மட சாம்பிராணிகளான பரங்கியரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? 🤬 தானும் கெட்டு உலகையும் கெடுக்கத்தான் இவர்களுக்கு தெரியும். 🥴)


மீண்டும் நோட்ரே டாமுக்கு திரும்புவோம். 


இயேசு அறையப்படாத குறுக்கை மேலான பொருளல்ல. பத்தோடு பதினொன்றாக, அழிந்து போகாமல் கிடைத்த பொருட்களில் ஒன்று. அவ்வளவே. வேண்டுமானால், அங்கிருந்த புராதன பொருட்களில் ஒன்று என்று எடுத்துக் கொள்ளலாம்.

🔷 இணைப்பு படங்களில் ஒன்று, நோட்ரே டாமின் நுழைவாயிலைக் காட்டுகின்றது. 

எல்லா வழிபாட்டுத் தலங்களின் கட்டிடங்களும் ஒன்று உயிரற்ற உடலைக் குறிக்கும் அல்லது பெண்மையை குறிக்கும். நோட்ரே டாம், பெண்மையை குறிக்கிறது. இந்த நுழைவாயில் தலைகீழாக்கப்பட்ட பெண்குறிக்கு சமம்!! கட்டிடத்திற்குள் நுழைவது என்பது பெண்ணின் குறிக்குள் நுழைவதற்கு சமம்!!! கட்டிடம் பெண் என்றால், கட்டிடத்திற்குள் இருக்கும் வெளி ஆணாகும். இவையெல்லாம், இவர்களிடம் இருந்த பெண் தெய்வ வழிபாட்டின் மிச்சங்களாகும்.

(நம்மூர் வைணவமும் பெண் தெய்வ வழிபாட்டில் இருந்து தான் வந்தது. அவர்களது நாம சின்னம் பெண்குறியை தான் குறிக்கிறது. வெள்ளைப் பகுதி உயிரற்றதையும், சிகப்புக் கோடு உயிரையும் குறிக்கும். இவர்கள் பெண் தத்துவத்தை ஆணாக எடுத்துக்கொண்டதால், வெள்ளைப் பகுதியை பெருமாளின் பாதம் என்று சொல்லிவிட்டார்கள்!!)