Saturday, December 18, 2021

காசி விசுவநாதப் பெருமானை ஏன் & எவ்வாறு வணங்கவேண்டும்?

காசி 

விசுவ நாதனைப், பசுவ தேறியைக்

கசிவி னோதிட, அசைவு தீருமே

-- திரு வ சு செங்கல்வராயப் பிள்ளை

> அசைவு தீருமே - அசைவை தீர்த்தலே மனிதப்பிறவியின் குறிக்கோள். அசைவு என்பது மனதின் அசைவை - நிலையற்ற மனதைக் குறிக்கும்.

> மனதை எப்படி நிலைகொள்ளச் செய்வது?

கசிவினோதிட - கசி + வினோதிட.
கசி - உள்ளம் உருகி (காதலாகி "கசிந்து" கண்ணீர் மல்கி...).
வினோதிட - ஒன்றையே இறுகப்பற்றிட.

> எதை / யாரை உள்ளம் உருகி, இறுகப்பற்றிட வேண்டும்?

பசுவதேறியை - பசு + அது + ஏறியை - பசுவின் மேல் பயணிப்பவரை.
சிவபெருமான் + விடை.
பரம்பொருள் + சீவன் / மனம்.
நான் + இன்னார்.

> நான் எனும் நமது தன்மையுணர்வை விரும்பி, இடைவிடாது இறுகப்பற்றினால் அலைபேறு ஒழிந்து, நிலைபேறு கிட்டும்! 🙏🏽

இப்படி எளிமையாக புரிந்துகொள்ளவேண்டியதை ஞானம், முத்தி, மோட்சம் என்று அயல்மொழியைக் கலந்து, கடினமானதாக தோன்ற செய்து, எட்டாக்கனி போலாக்கிவிட்டனர். 😔

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment